Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 360
- Thread Author
- #1
சோழனூர்:
எதிர் வீட்டில் இருந்த சாரதா பாட்டி கார் சத்தத்தை கேட்டு வந்தவர் எங்கப்பா போயிருந்தீங்க?வந்து பார்த்தேன் வீடு பூட்டி இருந்தது.அதுதான் நம்ம சந்திரா கிட்ட விசாரிக்கலாம்னு அங்க போனேன்,கார் சத்தம் கேட்டுச்சு வந்துட்டேன்.
உள்ள வா சித்தி சொல்லுறேன் என்கவும்,அக்கா மகனின் குரல் சுரத்தே இல்லாமல் இருப்பதை கவனித்தவர் யோசனையோடு அவர்களோடு வீட்டிற்குள் வந்தார்.
எய்யா உன் தங்கச்சிகாரியையும் காணும்,வீடு பூட்டியிருக்கு அவ எங்க போனான்னு தெரியல?ஒருவேளை மகி ஏதாச்சு சண்டை போட்டுட்டு கூப்பிட்டு போயிட்டானா?
அதைக் கேட்ட அந்தோணியோ சித்தி என்றவர் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் அழுதார்.
ஐயா என்னய்யா ஆச்சு?
அந்தோணி எதுக்குப்பா அழுவுற சொல்லுயா எனக்கு வேற படபடப்பா வருது என்கவும்,நாம மோசம் போயிட்டோம் சித்தி என்க,தம்பி கொஞ்சம் புரிகிற போல சொல்லுயா என்று அவரும் பதறினார்.
அழுது கொண்டே தனது சட்டை பாக்கெட்டிலிருந்த லெட்டரை எடுத்து சித்தியின் முன்னால் அந்தோணி நீட்ட,என்ன யா இதுவென பாட்டி கேட்க,படிச்சு பாரு என்கவும்,அய்யோ ஏசப்பா இதுல என்ன குண்டு இருக்குன்னு தெரியலையே?
ஏம்பா எங்களை இப்படி சோதிக்கிறனு மனதிற்குள் நினைத்தபடியே மகனிடமிருந்து வாங்கி படித்து பார்த்தவர் ஐயோ என் பொண்ணு எங்கடா போனாளென்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுத்தார்.
எங்க போய் தேடுவேன் சித்தி?
தங்கச்சி காணாமல் போய் ஒரு வாரம் ஆகுதென்று தலையிலே அடித்துக் கொண்டு அந்தோணி அழ,நம்ம தேடி பார்க்கலாம் யா அழாத ராசா என்றவர் ஆண்டவரே எதுக்குப்பா இவ்வளவு சோதனை?
எஸ்தர் வாழ்க்கை இப்படி சீரழிஞ்சிடுச்சே...கோவத்துல எதுவும் தப்பான முடிவை தங்கச்சி எடுத்திருந்தால் நான் என்ன பண்ணுவேன் சித்தி?
மூச்சுக்கு 300 முறை என் அம்மாவை பாத்துக்கோங்க மாமானு உன் பேத்தி சொன்னாளேனு அந்தோணி கதற,எப்பா ஏன் இவ்வளவு பெரிய வார்த்தை பேசுறனு அக்கா மகனை சமாதானப்படுத்த,என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சா நீ இப்படி சொல்ல மாட்ட சித்தியென அழுதவர்,உன் மருமவனுக்கு இன்னொரு குடும்பம் திருச்சில இருக்கு தெரியுமா?.
என்னய்யா சொல்றனு அதிர்ந்து போய் சாரதா பாட்டி கேட்க,ஆமாம் என்றவர் இங்கிருந்து போனதிலிருந்து நடந்ததை எல்லாம் சொல்ல,கேட்ட பாட்டியோ ராணியை தீ பார்வை பார்த்தார்.
தனது அத்தையின் முகத்தை பார்க்க முடியாமல் ராணி கீழே குனிந்து கொள்ள,எப்படி இவ்வளவு பெரிய பாவத்தை உங்களால செய்ய முடிஞ்சது சொல்லு ராணி?
அப்படியே உங்க ஆத்தா புத்தி தானா உங்களுக்கும்?
படிச்சு படிச்சு என் அக்கா சொன்னாளே இந்த குடும்ப வேண்டாம் வேண்டாம்னு.பாவி மவள் கேக்கலையேனு நெஞ்சிலே அடித்துக் கொண்டு அழுதார்.
அத்தை ..அழாதீங்கனு அவரின் கையை ராணி பிடிக்க வர,ச்சீ எட்ட போ என்று உதறிவிட்டவர் அப்போ உனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா டி என்கவும்,தெரியுங்கத்தை என்றார்.
தெரிஞ்சும் சொல்லவே இல்லை...எதுக்கு என் பொண்ணு வாழ்க்கையை இப்படி கெடுத்தீங்கள் இவ்வளவு சுயநலமா இருந்திருக்கிறீர்களே நீங்க எல்லாம் மனுச ஜென்மமா?
அந்த கம்மனாட்டி பயலுக்கு ஒரு போனை போடு அந்தோணியென பாட்டி கத்த,அவன் கிட்ட பேசுறதுக்கு இனிமே என்ன சித்தி இருக்கு?
ஆமா யா நீ சொல்வதும் சரிதான்.இந்த நாயை விட்டு தள்ளு முதல்ல நம்ம புள்ளையை தேடுவோம்.தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் போய் விசாரிக்கலாமே என்கவும் சரி சித்தி...
நீ இரு நான் விசாரிக்கிறேன் என்க, இல்ல என் மகளை பத்தி தெரியாம நான் இருக்க மாட்டேனென்று அழுதவர் புடவை முந்தானையால் முகத்தை துடைத்தபடி எழுந்தவர்,வா யா போகலாம் என்க,ராணியோ நானும் வரேங்கத்தை என்கவும்,,மரியாதை கெட்டுப் போயிடும் வீட்ல இருடி.
எங்கள் குடியை கெடுத்த வரைக்கும் போதுமென்று திட்டிய அந்தோணி தனது சித்தியை அழைத்துக் கொண்டு தெரிந்தவர்கள் வீட்டில் எல்லாம் தங்கையை தேட போனார்.
அதோ இதோ இன்று ஒரு வாரம் கடந்து சென்றது.ஆனால் எஸ்தரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.சாரதா பாட்டிக்கு அக்கா மகளின் கவலையில் உடல்நிலை சரியில்லாமல் போனது...
அவரின் மகன் அவன் மனைவியோடு அண்ணன் வீட்டில் வந்து அம்மாவை பார்த்துட்டு வீட்டிற்கு கூப்பிட,என் பொண்ண பத்தி தெரியாம நான் வீட்டுக்கு வர மாட்டேனென்று கறாராக சொல்லிவிட்டார்.
அந்தோணியோ இந்த ஒரு வாரத்திலேயே பத்து வயது அதிகரித்தது போல நொந்து விட்டார். நாம முடங்கி விட்டால் தங்கையை தேட முடியாதென்ற நிதர்சனத்தை புரிந்து தனது சித்தியை தேற்றியவர் தெரிந்த போலீஸ்காரர்களிடம் உதவி கேட்கலாமா என்றார்.
குடும்ப மானம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போக வேண்டாம்யா.
வேற எப்படி தான் சித்தி தங்கச்சியை தேடுவதென்று அந்தோணி கவலையாக,ஆண்டவர் ஏதாச்சும் ஒரு வழி கொடுப்பார்யா.நம்ம நம்புன ஆண்டவர் நம்மள கைவிட மாட்டார் என்கும் போது அந்தோணியின் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.
டேபிள் மேலிருந்த போனை எடுத்து பார்க்க புது நம்பராக வந்தது.யார் என்று யோசனையோடு அட்டென்ட் பண்ணி ஹலோ என்கவும் அந்த பக்கம் அமைதியாக இருக்க,ஹலோ யாருங்க என்க,கால் கட்டானது
யாருப்பா என்று சாரதா பாட்டி கேட்க தெரியல சித்தி யாரோ கால் பண்ணிருக்காங்க ஹலோ ஹலோ சொன்னா அந்த பக்கம் எந்த பேச்சுமில்லை என்றார்.
அத்தை சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் சாப்பிட வாங்கள் என்று ராணி கூப்பிட கொஞ்சம் விஷம் இருந்தா குடு டி
குடிச்சிட்டு நிம்மதியா போறோம்.பிறகு நீயும் உன் அண்ணனும் சந்தோஷமா இருக்கலாமே என்கவும்,அய்யோ ஏங்க இப்படி வார்த்தையால என்ன கொல்லுறீங்க என்று ராணி அழ,அதற்கு அந்தோணியோ எந்த பதிலும் சொல்லவில்லை.
வனிச்சூர்:கே.கே பேக்டரி:
செழியனும் கண்ணனும் வண்டியை நிறுத்தியவர்கள் அவரவர் செக்ஷனுக்கு சென்றனர்.கண்ணனோ அரிசி பருப்பு உளுந்து பிரிவுக்கு சூப்பர்வைசராக இருந்தான்.
செழியனோ மசாலா பொருட்கள் தயாராகும் பிரிவுக்கு சூப்பர்வைசராக இருந்தான்.உள்ளே போன இருவரும் அவர்கள் வருகையை பதிவு செய்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
இன்று எவ்வளவு கொள்முதல் ஆகியிருக்கென்ற கணக்கை செழியன் செக் பண்ணிக் கொண்டிருக்கும்போது இண்டர்காம் ஒலிக்கும் சத்தம் கேட்கவும் எடுத்து ஹலோ சொன்னவன் இதோ சார் என்று போனை வைத்தவிட்டு எழுந்தவன் மேனேஜரின் அறைக்கு சென்றான்.
கதவை தட்டி உள்ளே போனவன் குட் மார்னிங் சார்.வர சொன்னிங்களே என்க,ஆமா செழியன் உக்காருப்பா என்றார்.
ஹம் என்று அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டு சொல்லுங்க சார் என்க, நம்மளோட புது பிரான்ச் ராஜ்கோட்ல ஓபன் பண்ணலாம்னு இருக்காங்க அது உனக்கு தெரியும் தானே என்கவும் ஆமாம் சார் தெரியும்.
அது விஷயமாக தான் உன்கிட்ட பேசணுமென்றவரை பார்த்தவன் சொல்லுங்க சார் என்ன விஷயம்.
அதாவது அங்கு தேவையான மொத்த லோடையும் அனுப்பும் போது அவங்க கூட நீங்களும் போகணும்.யாரையும் நம்பி அவ்வளவு தூரம் அனுப்ப முடியாது இல்லையா...
நீங்க மசாலா செக்ஷனுக்கு சூப்பர்வைசராக இருப்பதால் அது உங்களோட வேலை என்கவும், கண்டிப்பாக சார்.எப்ப போகணும் சொல்லுங்க என்கவும்,பிப்ரவரி பத்தாம் தேதி இங்கிருந்து லோடு அனுப்பணும்.14 ஆம் தேதி அங்கு ஷோரூம் ஓபன் பண்ணுறாங்க என்க சரிங்க சார் கண்டிப்பா நான் போறேன்.
என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்குறீங்கள் நிச்சயமாக அதனை சிறப்பாக செய்வேன் என்க,அந்த நம்பிக்கைல தான் உங்களை அனுப்புறேன்.
நம்மளோட மசாலா பொருளுக்கு மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருக்கிறது.அதை நம்ப சரியா காப்பாத்தனும் இல்லையா என்கவும் கண்டிப்பாக சார் என்பவனை பார்த்தவர்,உங்க கூட இன்னொருவரும் வராங்களென்றார்.
ஓஓஓ யாருங்க சார் என்க,நம்ம சாரோட அம்மா எங்கவும்,எதேஏஐஐ அந்த மேடம்ஆஆஆ என்று செழியன் அதிர ஹா ஹா ஹா என்று சிரித்தவர் உனக்கும் அவங்களுக்கும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கும்.
வேற வழி இல்லையே என்று மேனேஜர் சிரிக்க,சார் அந்த அம்மா சும்மா நொய்யி நொய்யின்னு எதாவது சொல்லிட்டே இருப்பாங்க எனக்கு கடுப்பு வருமேயென்றான்.
இன்னைக்கு இவ்வளவு பெரிய பேக்டிரியா உருவானதற்கு மூல காரணமே அந்த அம்மா தான்.பின்ன அவங்க இல்லாம அவங்க பேரன் புது பிரான்ச் ஓபன் பண்ணிடுவாறா என்கவும்,அதுவும் வாஸ்தவம் தானென்றான்.
மலர் வீடு:
காலிங் பெல் சத்தம் கேட்கவும் மலரு யாரோ பெல் அடிக்கிறாங்க போய் கதவை திற என்று சொல்லிக்கொண்டு கிச்சனில் பத்மா வேலையை பார்க்க, சனி ஞாயிறு வீட்டில் இருந்தாலே முழுநேர வேலைக்காரியா என்னை ஆகிடுங்கள் என்று புலம்பி கொண்டு கதவை திறக்கவும் அங்கே கண்மணி நிற்பதை பார்த்தவள்,இந்த மகாராணி தானா என்றாள்.
ஆமாடி அதில் என்ன சந்தேகம் என்றவாறு வீட்டிற்குள் வந்தவள் அத்தையென்று பத்மாவை கூப்பிட,சமையல் கட்டில் தான் இருக்கேன் கண்ணுனு அவரும் குரல் கொடுத்தார்.
தூக்கு வாளியோடு கிச்சனிற்குள் போக தோழியை முறைத்துக் கொண்டே மலரும் பின்னாடியே வந்தாள்.
அம்மா பால் கொழுக்கட்டையும் புட்டும் செஞ்சது.இந்தாங்களென்று வாளியை நீட்ட,அடியேய் என் அத்தை எனக்கு தான் டி கொடுத்திருப்பாங்க என்றவாறு அவளின் கையிலிருந்த வாளியை பிடுங்கிய மலரோ மூடியை திறந்து பார்க்க,மேலே பால் கொழுக்கட்டை இருக்கும் டிபன் பாக்ஸும் அதற்கு கீழே சிகப்பு அரிசி புட்டும் இருந்தது.
பாத்திரம் இருக்கும் ஸ்டாண்டிலிருந்து ஸ்பூனை எடுத்தவள் பால் கொழுக்கட்டை இருக்கும் டிபன் பாக்ஸை திறந்து வேக வேகமாக சாப்பிட புரையேறியது.
ஏய் பொறுமையாக தான் சாப்பிடேன் டி என்று பத்மா மகளை திட்ட அத்தையோட கை பக்குவமே பக்குவம்.வாம்மா நீயும் கொஞ்சம் சாப்பிட்டு பாரு என்று மலர் கூப்பிட,நீ மிச்சம் மீதி வச்சாக்க அப்ப நான் சாப்பிடுறேன் என்றார்.
எதிர் வீட்டில் இருந்த சாரதா பாட்டி கார் சத்தத்தை கேட்டு வந்தவர் எங்கப்பா போயிருந்தீங்க?வந்து பார்த்தேன் வீடு பூட்டி இருந்தது.அதுதான் நம்ம சந்திரா கிட்ட விசாரிக்கலாம்னு அங்க போனேன்,கார் சத்தம் கேட்டுச்சு வந்துட்டேன்.
உள்ள வா சித்தி சொல்லுறேன் என்கவும்,அக்கா மகனின் குரல் சுரத்தே இல்லாமல் இருப்பதை கவனித்தவர் யோசனையோடு அவர்களோடு வீட்டிற்குள் வந்தார்.
எய்யா உன் தங்கச்சிகாரியையும் காணும்,வீடு பூட்டியிருக்கு அவ எங்க போனான்னு தெரியல?ஒருவேளை மகி ஏதாச்சு சண்டை போட்டுட்டு கூப்பிட்டு போயிட்டானா?
அதைக் கேட்ட அந்தோணியோ சித்தி என்றவர் அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் அழுதார்.
ஐயா என்னய்யா ஆச்சு?
அந்தோணி எதுக்குப்பா அழுவுற சொல்லுயா எனக்கு வேற படபடப்பா வருது என்கவும்,நாம மோசம் போயிட்டோம் சித்தி என்க,தம்பி கொஞ்சம் புரிகிற போல சொல்லுயா என்று அவரும் பதறினார்.
அழுது கொண்டே தனது சட்டை பாக்கெட்டிலிருந்த லெட்டரை எடுத்து சித்தியின் முன்னால் அந்தோணி நீட்ட,என்ன யா இதுவென பாட்டி கேட்க,படிச்சு பாரு என்கவும்,அய்யோ ஏசப்பா இதுல என்ன குண்டு இருக்குன்னு தெரியலையே?
ஏம்பா எங்களை இப்படி சோதிக்கிறனு மனதிற்குள் நினைத்தபடியே மகனிடமிருந்து வாங்கி படித்து பார்த்தவர் ஐயோ என் பொண்ணு எங்கடா போனாளென்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுத்தார்.
எங்க போய் தேடுவேன் சித்தி?
தங்கச்சி காணாமல் போய் ஒரு வாரம் ஆகுதென்று தலையிலே அடித்துக் கொண்டு அந்தோணி அழ,நம்ம தேடி பார்க்கலாம் யா அழாத ராசா என்றவர் ஆண்டவரே எதுக்குப்பா இவ்வளவு சோதனை?
எஸ்தர் வாழ்க்கை இப்படி சீரழிஞ்சிடுச்சே...கோவத்துல எதுவும் தப்பான முடிவை தங்கச்சி எடுத்திருந்தால் நான் என்ன பண்ணுவேன் சித்தி?
மூச்சுக்கு 300 முறை என் அம்மாவை பாத்துக்கோங்க மாமானு உன் பேத்தி சொன்னாளேனு அந்தோணி கதற,எப்பா ஏன் இவ்வளவு பெரிய வார்த்தை பேசுறனு அக்கா மகனை சமாதானப்படுத்த,என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சா நீ இப்படி சொல்ல மாட்ட சித்தியென அழுதவர்,உன் மருமவனுக்கு இன்னொரு குடும்பம் திருச்சில இருக்கு தெரியுமா?.
என்னய்யா சொல்றனு அதிர்ந்து போய் சாரதா பாட்டி கேட்க,ஆமாம் என்றவர் இங்கிருந்து போனதிலிருந்து நடந்ததை எல்லாம் சொல்ல,கேட்ட பாட்டியோ ராணியை தீ பார்வை பார்த்தார்.
தனது அத்தையின் முகத்தை பார்க்க முடியாமல் ராணி கீழே குனிந்து கொள்ள,எப்படி இவ்வளவு பெரிய பாவத்தை உங்களால செய்ய முடிஞ்சது சொல்லு ராணி?
அப்படியே உங்க ஆத்தா புத்தி தானா உங்களுக்கும்?
படிச்சு படிச்சு என் அக்கா சொன்னாளே இந்த குடும்ப வேண்டாம் வேண்டாம்னு.பாவி மவள் கேக்கலையேனு நெஞ்சிலே அடித்துக் கொண்டு அழுதார்.
அத்தை ..அழாதீங்கனு அவரின் கையை ராணி பிடிக்க வர,ச்சீ எட்ட போ என்று உதறிவிட்டவர் அப்போ உனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா டி என்கவும்,தெரியுங்கத்தை என்றார்.
தெரிஞ்சும் சொல்லவே இல்லை...எதுக்கு என் பொண்ணு வாழ்க்கையை இப்படி கெடுத்தீங்கள் இவ்வளவு சுயநலமா இருந்திருக்கிறீர்களே நீங்க எல்லாம் மனுச ஜென்மமா?
அந்த கம்மனாட்டி பயலுக்கு ஒரு போனை போடு அந்தோணியென பாட்டி கத்த,அவன் கிட்ட பேசுறதுக்கு இனிமே என்ன சித்தி இருக்கு?
ஆமா யா நீ சொல்வதும் சரிதான்.இந்த நாயை விட்டு தள்ளு முதல்ல நம்ம புள்ளையை தேடுவோம்.தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் போய் விசாரிக்கலாமே என்கவும் சரி சித்தி...
நீ இரு நான் விசாரிக்கிறேன் என்க, இல்ல என் மகளை பத்தி தெரியாம நான் இருக்க மாட்டேனென்று அழுதவர் புடவை முந்தானையால் முகத்தை துடைத்தபடி எழுந்தவர்,வா யா போகலாம் என்க,ராணியோ நானும் வரேங்கத்தை என்கவும்,,மரியாதை கெட்டுப் போயிடும் வீட்ல இருடி.
எங்கள் குடியை கெடுத்த வரைக்கும் போதுமென்று திட்டிய அந்தோணி தனது சித்தியை அழைத்துக் கொண்டு தெரிந்தவர்கள் வீட்டில் எல்லாம் தங்கையை தேட போனார்.
அதோ இதோ இன்று ஒரு வாரம் கடந்து சென்றது.ஆனால் எஸ்தரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.சாரதா பாட்டிக்கு அக்கா மகளின் கவலையில் உடல்நிலை சரியில்லாமல் போனது...
அவரின் மகன் அவன் மனைவியோடு அண்ணன் வீட்டில் வந்து அம்மாவை பார்த்துட்டு வீட்டிற்கு கூப்பிட,என் பொண்ண பத்தி தெரியாம நான் வீட்டுக்கு வர மாட்டேனென்று கறாராக சொல்லிவிட்டார்.
அந்தோணியோ இந்த ஒரு வாரத்திலேயே பத்து வயது அதிகரித்தது போல நொந்து விட்டார். நாம முடங்கி விட்டால் தங்கையை தேட முடியாதென்ற நிதர்சனத்தை புரிந்து தனது சித்தியை தேற்றியவர் தெரிந்த போலீஸ்காரர்களிடம் உதவி கேட்கலாமா என்றார்.
குடும்ப மானம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போக வேண்டாம்யா.
வேற எப்படி தான் சித்தி தங்கச்சியை தேடுவதென்று அந்தோணி கவலையாக,ஆண்டவர் ஏதாச்சும் ஒரு வழி கொடுப்பார்யா.நம்ம நம்புன ஆண்டவர் நம்மள கைவிட மாட்டார் என்கும் போது அந்தோணியின் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.
டேபிள் மேலிருந்த போனை எடுத்து பார்க்க புது நம்பராக வந்தது.யார் என்று யோசனையோடு அட்டென்ட் பண்ணி ஹலோ என்கவும் அந்த பக்கம் அமைதியாக இருக்க,ஹலோ யாருங்க என்க,கால் கட்டானது
யாருப்பா என்று சாரதா பாட்டி கேட்க தெரியல சித்தி யாரோ கால் பண்ணிருக்காங்க ஹலோ ஹலோ சொன்னா அந்த பக்கம் எந்த பேச்சுமில்லை என்றார்.
அத்தை சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் சாப்பிட வாங்கள் என்று ராணி கூப்பிட கொஞ்சம் விஷம் இருந்தா குடு டி
குடிச்சிட்டு நிம்மதியா போறோம்.பிறகு நீயும் உன் அண்ணனும் சந்தோஷமா இருக்கலாமே என்கவும்,அய்யோ ஏங்க இப்படி வார்த்தையால என்ன கொல்லுறீங்க என்று ராணி அழ,அதற்கு அந்தோணியோ எந்த பதிலும் சொல்லவில்லை.
வனிச்சூர்:கே.கே பேக்டரி:
செழியனும் கண்ணனும் வண்டியை நிறுத்தியவர்கள் அவரவர் செக்ஷனுக்கு சென்றனர்.கண்ணனோ அரிசி பருப்பு உளுந்து பிரிவுக்கு சூப்பர்வைசராக இருந்தான்.
செழியனோ மசாலா பொருட்கள் தயாராகும் பிரிவுக்கு சூப்பர்வைசராக இருந்தான்.உள்ளே போன இருவரும் அவர்கள் வருகையை பதிவு செய்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
இன்று எவ்வளவு கொள்முதல் ஆகியிருக்கென்ற கணக்கை செழியன் செக் பண்ணிக் கொண்டிருக்கும்போது இண்டர்காம் ஒலிக்கும் சத்தம் கேட்கவும் எடுத்து ஹலோ சொன்னவன் இதோ சார் என்று போனை வைத்தவிட்டு எழுந்தவன் மேனேஜரின் அறைக்கு சென்றான்.
கதவை தட்டி உள்ளே போனவன் குட் மார்னிங் சார்.வர சொன்னிங்களே என்க,ஆமா செழியன் உக்காருப்பா என்றார்.
ஹம் என்று அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டு சொல்லுங்க சார் என்க, நம்மளோட புது பிரான்ச் ராஜ்கோட்ல ஓபன் பண்ணலாம்னு இருக்காங்க அது உனக்கு தெரியும் தானே என்கவும் ஆமாம் சார் தெரியும்.
அது விஷயமாக தான் உன்கிட்ட பேசணுமென்றவரை பார்த்தவன் சொல்லுங்க சார் என்ன விஷயம்.
அதாவது அங்கு தேவையான மொத்த லோடையும் அனுப்பும் போது அவங்க கூட நீங்களும் போகணும்.யாரையும் நம்பி அவ்வளவு தூரம் அனுப்ப முடியாது இல்லையா...
நீங்க மசாலா செக்ஷனுக்கு சூப்பர்வைசராக இருப்பதால் அது உங்களோட வேலை என்கவும், கண்டிப்பாக சார்.எப்ப போகணும் சொல்லுங்க என்கவும்,பிப்ரவரி பத்தாம் தேதி இங்கிருந்து லோடு அனுப்பணும்.14 ஆம் தேதி அங்கு ஷோரூம் ஓபன் பண்ணுறாங்க என்க சரிங்க சார் கண்டிப்பா நான் போறேன்.
என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்குறீங்கள் நிச்சயமாக அதனை சிறப்பாக செய்வேன் என்க,அந்த நம்பிக்கைல தான் உங்களை அனுப்புறேன்.
நம்மளோட மசாலா பொருளுக்கு மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருக்கிறது.அதை நம்ப சரியா காப்பாத்தனும் இல்லையா என்கவும் கண்டிப்பாக சார் என்பவனை பார்த்தவர்,உங்க கூட இன்னொருவரும் வராங்களென்றார்.
ஓஓஓ யாருங்க சார் என்க,நம்ம சாரோட அம்மா எங்கவும்,எதேஏஐஐ அந்த மேடம்ஆஆஆ என்று செழியன் அதிர ஹா ஹா ஹா என்று சிரித்தவர் உனக்கும் அவங்களுக்கும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கும்.
வேற வழி இல்லையே என்று மேனேஜர் சிரிக்க,சார் அந்த அம்மா சும்மா நொய்யி நொய்யின்னு எதாவது சொல்லிட்டே இருப்பாங்க எனக்கு கடுப்பு வருமேயென்றான்.
இன்னைக்கு இவ்வளவு பெரிய பேக்டிரியா உருவானதற்கு மூல காரணமே அந்த அம்மா தான்.பின்ன அவங்க இல்லாம அவங்க பேரன் புது பிரான்ச் ஓபன் பண்ணிடுவாறா என்கவும்,அதுவும் வாஸ்தவம் தானென்றான்.
மலர் வீடு:
காலிங் பெல் சத்தம் கேட்கவும் மலரு யாரோ பெல் அடிக்கிறாங்க போய் கதவை திற என்று சொல்லிக்கொண்டு கிச்சனில் பத்மா வேலையை பார்க்க, சனி ஞாயிறு வீட்டில் இருந்தாலே முழுநேர வேலைக்காரியா என்னை ஆகிடுங்கள் என்று புலம்பி கொண்டு கதவை திறக்கவும் அங்கே கண்மணி நிற்பதை பார்த்தவள்,இந்த மகாராணி தானா என்றாள்.
ஆமாடி அதில் என்ன சந்தேகம் என்றவாறு வீட்டிற்குள் வந்தவள் அத்தையென்று பத்மாவை கூப்பிட,சமையல் கட்டில் தான் இருக்கேன் கண்ணுனு அவரும் குரல் கொடுத்தார்.
தூக்கு வாளியோடு கிச்சனிற்குள் போக தோழியை முறைத்துக் கொண்டே மலரும் பின்னாடியே வந்தாள்.
அம்மா பால் கொழுக்கட்டையும் புட்டும் செஞ்சது.இந்தாங்களென்று வாளியை நீட்ட,அடியேய் என் அத்தை எனக்கு தான் டி கொடுத்திருப்பாங்க என்றவாறு அவளின் கையிலிருந்த வாளியை பிடுங்கிய மலரோ மூடியை திறந்து பார்க்க,மேலே பால் கொழுக்கட்டை இருக்கும் டிபன் பாக்ஸும் அதற்கு கீழே சிகப்பு அரிசி புட்டும் இருந்தது.
பாத்திரம் இருக்கும் ஸ்டாண்டிலிருந்து ஸ்பூனை எடுத்தவள் பால் கொழுக்கட்டை இருக்கும் டிபன் பாக்ஸை திறந்து வேக வேகமாக சாப்பிட புரையேறியது.
ஏய் பொறுமையாக தான் சாப்பிடேன் டி என்று பத்மா மகளை திட்ட அத்தையோட கை பக்குவமே பக்குவம்.வாம்மா நீயும் கொஞ்சம் சாப்பிட்டு பாரு என்று மலர் கூப்பிட,நீ மிச்சம் மீதி வச்சாக்க அப்ப நான் சாப்பிடுறேன் என்றார்.