• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
டெல்லி:

அம்மா இவங்க உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்க வந்திருக்கிறார்களென்று ஜூலி சொல்லவும்,அப்படியா சொல்லுங்க என்று எஸ்தர் கேட்க,பின்னர் விஷயத்தை சொல்லவும் எஸ்தருக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

நாம செய்யும் செயலுக்கு ஒரு பாராட்டு கிடைப்பது எவ்வளவு பெரிய அங்கீகாரம் என்பதை உணராதவர் இல்லையே...

இத்தனை வருஷமாக விளையாட்டுக்கு கூட அவரின் செயலை மகி பாராட்டியதில்லை.இன்று யாரோ ஒருவர் பாராட்டுவதை கேட்டு பூரித்து போயிருந்தார்.

அவர் அமைதியாக இருப்பதை பார்த்த அந்த பெண்மணியோ தப்பா எடுத்துகிட்டாங்க போலனு ஜூலியிடம் சொல்லவும்,அதைக் கேட்டு சுதாரித்தவர் அப்படி ஏதும் இல்லை...

"தாராளமா ரெடி பண்ணி தரேன்"

மெட்டீரியல் நீங்க வாங்கி தறீங்களா இல்ல நானே வாங்கட்டுமா என்கவும்,நீங்களே வாங்கிடுங்க. ஜூலிக்கும் ரூபாவுக்கும் அந்த அவுட் பிட் நல்லா இருந்தது.. சரிங்க என்றவர் பின்னர் தனது ஃபோனிலிருந்து கூகுள் பே பண்ணி விடுவேன் என்கவும்,முதல்ல டிரஸை ரெடி பண்ணி தரேன்.புடிச்சிருக்கான்னு பாருங்க,மற்றதை பிறகு பேசிக்கலாமென்று எஸ்தர் சொல்லிவிட,அந்த பெண்மணியும் சரிங்களென்றார்.

ஒரு நிமிஷம் இருங்க டீ எடுத்துட்டு வரேன் என்று உள்ளே போனவர் அவருக்கு டீ கொண்டு வந்து கொடுக்க அவரும் குடித்துவிட்டு சந்தோஷமாக அங்கிருந்து சென்றார்.

அம்மா எனக்கு ஒரு விஷயம் தோணுது ஆனா அது சரி வருமா என்னன்னு தெரியல என்கவும்,சொல்லு ஜூலி என்ன விஷயம் என்க,நீங்க ஏன் இதை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க கூடாது?

அந்த திதிக்கு பிடிச்ச போல, அவங்க பொண்ணு போட்டுட்டு போனால் அவள் மூலமா இன்னும் நாலு அஞ்சு பேரு கிட்ட இந்த விஷயம் போகும்போது உங்களை பற்றி தெரியும்மா.

எனக்கு கோச்சிங் கொடுக்கிறதுக்கெல்லாம் சரிப்பட்டு வராது.என்னோட மனதிருப்திக்காக இதனை செய்கிறேன் டா என்கவும் சரிங்கம்மா இது உங்களோட விருப்பம்..

அப்படி ஒவ்வொரு வாய்ப்பு கிடைச்சா அதை பயன்படுத்திக் கொள்ளலாமே என்கவும் சரிமா பார்க்கலாமென்றார்.நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக ஓடிக்கொண்டே இருந்தது.

இவர்கள் இருவருக்கும் தைத்ததை விட இன்னும் கொஞ்சம் வேற டிசைனில் கரினாவுக்கும் ரெடி பண்ணியவர் அவங்களை வந்து வாங்கிட்டு போக சொல்லுமானு ஜூலியிடம் சொல்ல,அவளும் அதே போல் போன் பண்ணி திதி டிரஸ் ரெடியா இருக்கு வாங்களென்றாள்.

சிறிது நிமிடத்தில் தனது மகளோடு அங்கு வந்தவர்,டிரஸை பார்த்து அசந்து போனார்.

எவ்வளவு என்க துணி வாங்கிய பில்லை அவரிடம் கொடுத்தவர் உங்களோட விருப்பம் என்கவும், வெளியில வாங்கினால் இந்த டிரஸ் எவ்வளவு ரேட் ஆகும் என்பது எங்களுக்கு தெரியுமென்று அவர் மனசாட்சிப்படி எஸ்தருக்கு பணத்தை கொடுத்தார்.

முதன் முதலாக தனக்கு தெரிந்த கைத்தொழில் மூலமாக சம்பாதித்த பணத்தை கை நீட்டி வாங்கிய எஸ்தருக்கு கண்கள் கலங்கியது.

"உன்னால பத்து பைசாக்கு புண்ணியம் இருக்கா தண்டசோறு என்ற வார்த்தைகள் காதில் ஒலித்தது".

எஸ்தரை பார்த்தவர்கள் ஏதோ ஒரு சங்கடத்தில் இருக்கிறார் என்பது புரிந்து கொண்டு இருவரிடமும் தலையசைத்து விட்டு அவர்களும் செல்ல,அதேப்போல் ஜூலியும் ரூபாவும் எதுவும் கேட்காமல் அமைதியாக ரூமிற்குள் சென்று விட்டனர்.

சிறிது நிமிடங்கள் சென்று கண்ணை துடைத்தவருக்கு தனது அண்ணனிடம் பேச வேண்டுமென தோணியது.

ஒரு வாரத்திற்கு முன்பு தூங்கிக் கொண்டிருக்கும் போது அந்தோணிக்கு ஏதோ ஆபத்து போல் பதறி அடித்து எழுந்து உட்கார்ந்தவரின் முகத்தில் வேர்வை துளிகள் முத்து முத்தாய் பூத்திருந்தது.நேரம் என்னவென்று பார்க்க நள்ளிரவு மூன்று மணி என்று காட்டியது.

என்ன இப்படி ஒரு கனவென்று யோசித்தவர் அண்ணன் கிட்ட பேசணுமென்று நினைக்க,எங்கே தான் இருக்கும் இடம் தெரிந்து விட்டால் அவர்கள் தங்களை தேடி வந்து விடுவார்களோ என்று இன்னொரு பக்கம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

ஒரு வாரமாக இதே சிந்தனையிலே இருந்தவர் இன்று ஒரு முடிவோடு எப்படியாவது அண்ணனின் குரலையாவது கேட்டு விட வேண்டும் என்று நினைத்தவர் ஜூலி ஜூலி என்று கூப்பிட அவர் சத்தத்தை கேட்டு வெளியே வந்தவள் சொல்லுங்கம்மா என்றாள்.

உன்னுடைய ஃபோனை கொஞ்சம் குடுக்குறியாம்மா என்கவும் அதுக்கு ஏன் மா இவ்வளவு பாவமாக கேட்கிறீங்க? நாங்களே உங்களுக்கு ஒரு போன் வாங்கி கொடுக்கணுமென நினைச்சிட்டு இருந்தோமேன்றாள்.

"அய்யோ எனக்கு எதுக்கு போன்"

அதான் நீங்க எல்லாம் வீட்ல இருக்கீங்களே என்கவும்,நாங்க வேலைக்கு போயிட்டாக்க ஒரு அவசரத்துக்கு உங்களுக்கு வேணுமே மா.

அது நீங்க வேலைக்கு போன பிறகு பார்த்துக் கொள்ளலாம் இப்போதைக்கு எனக்கு பேசுற அளவுக்கு அப்படி யாரும் இல்லை.

தெரிஞ்சவங்க ஒருத்தவங்களுக்கு ஏதோ உடம்பு சரியில்லாத போல கனவு கண்டேன்.மனசு ஒரு மாதிரியாக இருக்குது டா.

அவர்களை மட்டும் நலம் விசாரிச்சுக்கிறேனென்று பாவமாக சொல்ல,மா அதுக்கு ஏன் இப்படி கெஞ்சுறீங்க என்று முறைத்தவள் நீங்க எதா இருந்தாலும் உரிமையா கேளுங்களென்று தான் உங்க கிட்ட சொல்றேன்.

அப்போ எங்களை உங்க புள்ளையாவே ஏற்றுக்கொள்ளலை இல்லையா என்று ஜூலி வருத்தமாக கேட்க..அய்யய்யோ அப்படியெல்லாம் சொல்லாதம்மா.

நான் பெத்த புள்ளையா தான் உங்களை நினைக்கிறேன் என்று பதறிப் போய் சொல்ல அவரின் பதட்டத்தை பார்த்தவள் அப்புறம் எதுக்கு இப்படி அனுமதி எல்லாம் கேக்குறீங்க என்று முறைத்தாள்.

ஹாஸ்பிடல்:

சார் வர சொன்னீங்களே என்றவாறு ருத்ரனும் தீபனும் டாக்டர் கர்ணாவிடம் கேட்க ஆமாம் ஒரு முக்கியமான விஷயத்திற்காக தான் உங்க ரெண்டு பேரையும் வரச் சொன்னேன்.

அதாவது ஒவ்வொரு ஸ்டேட்லையும் கவர்மென்ட் மெடிக்கல் காலேஜ் இருப்பது உங்களுக்கு தெரியும் தானே என்கவும்,எஸ் சார் என்றனர்.

இன்னும் இரண்டு மாதத்திற்கு மதுரையில் இருக்கும் மெடிக்கல் காலேஜுக்கு கெஸ்ட் லக்சராக நீங்கள் ரெண்டு பேரும் போகணும் என்னாயென்று இருவரும் அதிர்ந்தானுங்கள்.

உங்கள் ரெண்டு பேர் மேல உள்ள நம்பிக்கையில் தான் இதுக்கு நான் ஒத்துக்கிட்டேன் டா.உங்களுக்கு தெரிந்ததை ஸ்டூடண்ஸிற்கு சொல்லி கொடுங்கள்.இதால் உங்கள் மூளையும் கொஞ்சம் வேலை செய்யுமே என்றபடி தட்டில் இருந்த பர்கரை எடுத்து சாப்பிட்டார்.

இருவரும் அவரைப் பார்த்து முறைக்க , வேண்டுமா என்று அவர்களிடம் நீட்ட, வேணாம் நீங்களே சாப்பிடுங்கள் என்றனர்.சார் நாங்க தான் இங்கு வேலை பார்த்துட்டு இருக்கோமே பிறகு எப்படி அந்த காலேஜுக்கு போக முடியும் என்று யோசனையோடு ருத்ரன் கேட்க....

ஹா ஹா என்று சிரித்தவர் ஏன்டா நான் இண்டியன் மெடிக்கல் கவுன்சிலிங்கோட ஹெட்.அப்ப என்கிட்ட கேக்க மாட்டாங்களா என்கவும்,ஓஓஓ நீங்க பண்ணிய வேலை தானானு தீபன் பல்லை கடிக்க...எஸ்... மீ தான்.

கொஞ்ச நாள் உங்களுக்குக்கும் ரிலாக்ஸேசன் கிடைக்கும் டா.புதுசா பொண்ணுங்களை பாக்கலாம் நல்லா சைட் அடிச்சிட்டு என்ஜாய் பண்ணலாம் என்கவும் சார்...

என்ன சார் இப்படி பேசுறீங்களென்று தீபன் குஷியாக கேட்க,ருத்ரனோ அவரை முறைக்க....எஸ் பாய்ஸ்...

லைப்ல ஒரு சேஞ்சஸ் வேண்டும்... எப்ப பாத்தாலும் ஹாஸ்பிடல் ஆபரேஷன்னு சுத்திட்டு இருக்க கூடாதென்றார்.

இதைக் கேட்ட தீபன்,மச்சி சார் சொல்றது நல்ல ஐடியா டா.உன் தங்கச்சியை வருஷ கணக்கா பார்த்து போர் அடிக்குதுடா.நாம போகலாம் டா என்க,வெளியில வாடா முகரையை பேத்துடறேனென்று தீபன் காதில் விழும் போல ருத்ரன் முணுமுணுத்தான்.

வனிச்சூர்:

இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம் சொல்லுடி?பெரியவங்க தானே, நீ இறங்கி போ.ஆனா உங்க அப்பா கிட்ட பேசுனு நான் சொல்ல மாட்டேன்.

என்னமோ தெரியல ஆரம்பத்திலிருந்து உங்க அப்பாவ எனக்கு பிடிக்கவே இல்லைனு செழியன் சொல்ல,அதற்கும் அமைதியாகவே இருந்தாள்.

மேலும் மனைவியை சங்கடப்படுத்த விரும்பாமல் சரி செல்லம் இன்னும் இங்கிருந்தால் மாமா மூடு மாறிடுவேன் அப்புறம் என்ன வேணாலும் நடக்கலாம்.

அதால் இன்னைக்கு நான் வேலைக்கு லீவு போடற போல வந்தாலும் வரலாமென்கவும்,கணவன் சொன்னதை கேட்டு பதறியடித்து எழுந்தவள் ஒழுங்கு மரியாதையா வேலைக்கு கிளம்புங்க.

நான் போய் டிபன் செய்கிறேனென்று வேக வேகமாக கதவை திறந்து வெளியேறினாள்.மனைவியின் பதட்டத்தை ரசித்தவன் நைட் இந்த ரூமுக்கு வந்து தாண்டி ஆகணும் என்றவாறு குளிக்க சென்றான்.

குளித்து தயாராகி கீழே வர அங்கே ஷமீராவும் காலை டிபனை தயார் பண்ணி முடித்திருந்தாள்.

அம்மா என்றவாறு டைனிங் டேபிள் முன்னால் வந்து செழியன் உட்கார,
அம்மாடி உன் புருஷன் சாப்பிட வந்துட்டான் கொண்டு வந்து வை மா என்ற வானதியோ தோட்டத்திலிருந்து பறித்து எடுத்துட்டு வந்திருந்த பூவை தொடுத்துக் கொண்டிருந்தார்

ஹாட் பாக்ஸை எடுத்துட்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தவள் கணவனுக்கு பரிமாற,சாப்பிட்டவனோ சரி நான் போயிட்டு வரேன் பாய் என்று மனைவிக்கு முத்தங்களை பரிசாக கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றான்.

தம்புசாமி வீடு:

அம்மா இன்னும் என்ன தான்மா பண்ற மனுஷனுக்கு பசி உயிரே போகுதென்று கவிதாவும் கண்மணியும் கத்திக் கொண்டிருக்க,இதோ வந்துட்டேன் டி என்றவாறு அங்கு வந்து புவனாவோ இருவருக்கும் சிகப்பரிசி புட்டையையும் பால் கொழுக்கட்டையும் கொடுக்க,பசியில் வேகவேகமாக சாப்பிட்டனர்.

இதில் மலருக்கு வச்சிருக்கேன் மறக்காமல் போகும் போது எடுத்துட்டு போ கண்மணியென்று சொல்லியவாறு தூக்குவாளியை டேபிளின் மேலே வைத்தார்.

அதை பார்த்தவள் என்னம்மா மருமகளை ஓவரா காக்கா புடிக்கிற போல,இன்னைக்கு அவளுக்கு புடிச்சதாவே செஞ்சிருக்கியே என்கவும் ஏண்டி ஏன் அப்படி கேக்குற.என்னைக்கா இருந்தாலும் அவள் என் மருமகள் தாண்டி.இதுல என்ன சந்தேகம்...

ம்கும் வாயால தான் சொல்றியே தவிர உன் மவனுங்களுக்கு கட்ட வேண்டியதுதானேனு உள் அர்த்தத்தோடு கண்மணியும் கேட்க, மூணு பேர்ல யாருக்காச்சும் கட்டலாம்னு,எனக்கும் ஆசையா தான் இருந்துச்சு..

உன் பெரிய அண்ணனுங்கள் தான் அவனுங்களுக்கு பிடித்த போல கட்டிகிட்டானுங்க.கண்ணாவுக்காவது மலரை கட்டி வைக்கலாம்னு ஒரு எண்ணம் இருக்குடியென்கும் போது தம்புசாமி தாத்தாவும் மருமகள் பேசியதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டுதான் உள்ளே வந்தார்.

ஏன் நீ வாயை திறந்து சொன்னாக்க உன் வாயில இருக்க முத்து எல்லாம் கொட்டிடுமா மா என்று கண்மணி கேட்க, அப்படி இல்ல டி.அவனுங்க ரெண்டு பேரும் போல இவனும் எந்த பொண்ணையாவது விரும்பினால் என்ன பண்றது அந்த எண்ணம் தான் என்று புவனா சொல்ல,யம்மா சின்னண்ணன் அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வராதும்மா என்று சிரிக்க,

அம்மா சாப்பாடு எடுத்து வை நேரம் ஆயிடுச்சு என்றவாறு கண்ணனும் வேலைக்கு போக தயாராகி வந்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
ரெண்டு நாளா மூக்கு முட்ட தின்னுட்டு தூங்குவது தான் வேலையானு கண்ணன் உட்கார,அவனுக்கும் சூடான புட்டையும் கடலைகரியையும் புவனா பரிமாறினார்.

அம்மாவும் அப்பாயியும் வயலுக்கு போயிட்டாங்களாம்மா என்க,ஆமாம்பா என்றவர் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கும் மகள்களை பார்த்து எதுக்கு அவன் மூஞ்சிய பாத்துட்டு இருக்கீங்க?உங்க தட்டில் தான் வச்சிருக்கேனே சாப்பிட வேண்டியதுதானே என்றார்.

சாப்பிட்டுக் கொண்டே தங்கைகளை பார்த்தவன் தின்னிமூட்டைகளா என்னதான் வேணும் சொல்லுங்க.அத விட்டுட்டு உம்முன்னு இருந்தா என்ன அர்த்தம் என்கவும்,அண்ணா என்று கவிதாவும் கண்மணியும் முறைக்க அண்ணன்தான் இப்ப யாரு இல்லை என்றால் என்கும் போது தான் தங்கைகள் இருவரும் முதல் நாள் வாங்கிட்டு வர சொன்ன பொருளின் ஞாபகம் வந்தது..

இருவரையும் பார்த்து ஹிஹி என்று சிரித்தவன் அண்ணா மறந்துட்டேன் டா. இன்னைக்கு கண்டிப்பா வாங்கிட்டு வரேனென்க,சரி என்று சாப்பிடவும்,அங்கு வந்த செழியனோ தனது வண்டியின் ஹாரனை அழுத்த,இதோ வந்துட்டான் என்றவாறு வேகமாக சாப்பிட்டு கையை கழுவியவன் அம்மா போயிட்டு வரேன் என்று சொல்லிக்கொண்டு வெளியே சென்றான்.

தம்புசாமியும் மனதிற்கு சில கணக்குகளை போட்டபடி விட்டத்தை பார்த்து உட்கார்ந்திருக்க,அவளுங்கள் இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்தவர்கள்,நீ எப்ப வந்த என்று கவிதா கேட்க,அது ஆச்சி எழுபது வருசமென்றார்...

ஐயோ தாத்தா என்று கவிதா முறைக்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என்றவர்,சின்னகுட்டி நீ வயலுக்கு போகும் போது உன் அப்பாயி வெத்தலை எடுத்துட்டு வர சொன்னாள் மறந்துடாத என்றார்.

சரி தாத்தா என்று கவிதாவும் கிச்சனுக்கு போக,அம்மா நான் மலர் வீட்டுக்கு போயிட்டு வரேனென்று தூக்கு வாளியை எடுத்துக்கொண்டு கண்மணியும் அங்கிருந்து சென்றாள்.

செழியன் வீடு:

அத்தை,மணி ஆகிட்டு நீங்களும் சாப்பிட்டுங்களேனு ஷமீரா கேட்க எனக்கு இப்ப வேண்டாம் மா.டீ குடிச்சதே ஒரு மாதிரியா இருக்கு நீ சாப்பிடு மா.
உங்க மாமா எப்படியும் பத்து மணிக்கு மேல தான் கழனியிலிருந்து வருவாரு அவர் கூட சாப்பிடுறேனேன்றார்.

ஹம் என்றவள் அவளுக்கான டிபன் எடுத்து வைத்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இன்னைக்கு கவிதாவுக்கும் கண்மணிக்கும் ஸ்கூல் லீவு என்று தான் நினைக்கிறேன்.

நீ வேணா போயி அவங்க கூட இருந்துட்டு சாயந்திரம் வரியானு வானதி கேட்க நிஜமாவா என்று ஷமீராவும் ஆர்வமா கேட்கவும் ஆமாத்தா.எவ்ளோ நேரம் தான் வீட்டுக்குள்ளே உக்காந்திருப்ப சொல்லு?.

சரிங்கத்தை...ஆனா உங்க பையன் கிட்ட சொல்லலையே அங்க போனால் எதாச்சும் சொல்லுவாரா?,அதெல்லாம் செழியன் ஒன்னும் சொல்ல மாட்டான்.

நீ சாப்பிட்டு தைக்க வேண்டியதை எடுத்துட்டு வா.துணியை கொடுத்துட்டு வரும்போது உன்னை அங்க விட்டுட்டு வரேன்னு சொல்லவும் சரிங்கத்தை என்றவள் வேக வேகமாக சாப்பிட்டு மாடிக்கு போனவள் சிறிது நிமிடத்தில் ஒரு டிராவல் பேக்கோடு வந்தாள்.

பின்னர் அங்கிருந்த மாமியாரின் முன்னால் வந்தவள் அத்தை என்க, சொல்லுமா என்கவும் இதுல பாபு மாமாவும்,என் மாமாவும் வாங்கி கொடுத்த நகைகள் இருக்கு.

இன்னும் உங்க பையன் கிட்ட கூட இதை காட்டல அதான் உங்ககிட்ட கொடுக்கலான்னு வந்தேனென்றாள். அப்படியா என்றவரிடம் ஆமாங்கத்தை மாமா துபாயில் இருந்து வரும்போது வாங்கிட்டு வந்திருக்கிறார்கள்.

இங்கு எனக்கு தாய் மாமா சீராக மாமாவும் கொடுத்தார்களென்று நகைகளை எடுத்துக்காட்ட நல்லா இருக்குமா வச்சுக்க..

உன் புருஷன் கிட்ட நேத்து நானும் உன் மாமனாரும் சொன்னோம் போய் புள்ளைக்கு கொஞ்சம் நகையெல்லாம் வாங்கி கொடுடான்னு,அவன் தான் ஏதாச்சும் நல்ல நாள் வந்தால் வாங்கி கொடுங்கன்னு சொல்லிட்டானென்று அவரும் சொல்ல...

ஐயோஓஓஓ....அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.எனக்கு நிறைய நகை போடலாம் பிடிக்காதுங்கத்தைனு ஷமீரா சொல்ல,அப்படியா என்று ஆச்சரியமாக கேட்டவர் பொண்ணுங்களுக்கு நகைகள் ரொம்ப பிடிக்கும்.

நீ என்ன வித்தியாசமாக இருக்க என்கவும்,ஆமாம் நான் சின்ன வயசுல இருந்து சின்னதா தோடும் ஒரே ஒரு செயின் கழுத்துல போட்டுருப்பேன் அவ்வளவுதான்...

பெருசா நகையெல்லாம் போட மாட்டேன் இப்போ இதெல்லாம் போட்டிருக்கிறதே எனக்கு ஏதோ நிறைய போட்டுருக்க போல இருக்கென்று கூச்சமாக சொல்லவும் மருமகளை பார்த்து சிரித்தவர்,பொண்ணுங்கன்னா அதை வாங்கி கொடு இதை வாங்கி கொடுன்னு இருப்பாங்க....நீ வித்தியாசமா இருக்கிறியே,வேறு வழியில்லை போட்டுக்க மா..

வீட்டுக்கு வரவங்க பார்ப்பாங்க" அப்போது வெறுமையாக இருந்தால் நல்லாருக்காது"

என்னடா அந்த பெரிய வீட்டு மருமக இப்படி இருக்குனு விளையாட்டு கூட ஒரு வார்த்தை யாரும் சொல்லிட கூடாது என்கவும்,சரிங்கத்தை என்றாள்.

அதற்குள் வானதியும் பூக்களை தொடுத்து முடித்தவர் அதை ஒரு கவரில் போட்டு கட்டி பிரிட்ஜில் வைத்து விட்டு கணவர் வருகைக்காக காத்திருக்க, செல்லதுரையும் கழனியிலிருந்து வீட்டிற்கு வந்தார்.

தம்பி போயிட்டானா வானதி என்கவும் ஆமாங்க வேலைக்கு போயிட்டான். உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா,ம்ம் எடுத்து வை என்றவாறு தரையில் உட்கார,அவருக்கு பழைய சாதத்தையும் தொட்டுக்கொள்ள சுண்ட வைத்த குழம்போடு வறுத்த பச்சை மிளகாயையும் கொடுத்தார்.

காலையில் எப்போதும் இட்லி தோசையெல்லாம் செல்லதுரை விரும்பி சாப்பிட மாட்டார் என்பதால் அவருக்கு சேர்த்து சமைக்க வேண்டாமென்று மருமகளிடம் சொல்லி இருந்தார்.

சரிங்க... நம்ப கலா வீடு வரைக்கும் நானும் ஷமீராவும் போயிட்டு வருவோம் என்க,சாப்பிட்டு கொண்டே சரிமா என்றார்.

பின்னர் மருமகளோடு மூன்றாவது தெருவில் இருக்கும் டெய்லர் வீட்டிற்கு செல்ல வழியில் தெரிந்தவர்களோ இருவரையும் நலம் விசாரிக்கவும் அவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே சென்றார்.

கலா கலா என்று கூப்பிட்டுக்கொண்டே கதவை திறந்து உள்ளே போக வாங்க சித்தி உள்ளதான் இருக்கிறேன் என்றவாறு கலாவும் உள்ளிருந்து வந்தார்..

ஷமீராவை பார்த்தவர் வாம்மா என்ன சித்தி தம்பி பொண்டாட்டியை கூட்டிட்டு வந்திருக்க என்கவும்,உன் நாத்தனாருக்கு சட்டை தைக்கணுமா. கல்யாணத்துக்கு நீ தான் தச்சு கொடுத்தியாமே...

அது ரொம்ப பிடிச்சிடுச்சாமென்று வானதி சிரிக்க அப்படியா என்றவர், அளவு சரியா இருக்காமா என்று ஷமீராவிடம் கேட்க,அவங்களை எப்படி கூப்பிடுவது என்று தெரியாமல் முழிக்க, செழியனுக்கு அக்கா முறை..

அண்ணின்னு சொல்லு இல்லை சித்தியின் கூட சொல்லலாமென்று மருமகளிடம் வானதி சொல்ல, அண்ணினு கூப்பிடுறேனென்றாள்.

அவளை பார்த்து சிரித்த கலாவோ உன்னோடு விருப்பம் மா.எப்படி வேணாலும் கூப்பிடுமா என்றவர்,டீ எடுத்துட்டு வரேன் சித்தியென்க, அதெல்லாம் ஒன்னும் வேணாம் இப்பதான் உன் அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு நான் டீ குடிச்சிட்டு வரேனென்று வானதி சொல்ல..

முதன் முதலில் தம்பி பொண்டாட்டி கூட்டிட்டு வந்திருக்கிற வெறும் கையோட அனுப்புறது?செத்த நேரம் இரு சித்தி என்று உள்ளே போனவர் வேக வேகமாக டீயை போட்டு கொண்டு வந்து கொடுக்க,அவளோ டீ குடிக்கமாட்டாள் என்பதால் அவரை சங்கடமாக பார்க்க, அவளின் பார்வையை வைத்து புரிந்து கொண்ட கலாவோ பால் சூடா இருக்கு அதுல நாட்டு சர்க்கரை போட்டு எடுத்துட்டு வரட்டுமா மா என்க,சரிங்கண்ணி என்றாள்.

திருச்சி-மகி வீடு:

ஐயோ மானசா..ஏற்கனவே எஸ்தர் எங்கே போனாளென்று தெரியாமல் வேதனையில் இருக்கேன்.நீ வேற என்ன மேலும் கஷ்டப்படுத்தாதே என்க, யார் நீங்களா?எல்லார் நிம்மதியையும் நீங்கள் கெடுப்பீர்கள்.உங்க நிம்மதிக்கு என்ன கேடு என்கும் போது காலிங் பெல் சத்தம் கேட்டது..

நமது சண்டையை பிறகு வச்சுக்கலாம். முதல்ல யாருன்னு போய் பாரு என்று சொல்ல கணவனை ஒரு முறை முறைத்து விட்டு மானசா போய் கதவை திறக்க,அங்கே நாதனும் அவரோடு இன்னொரு இளைஞனும் நின்றனர்.

வணக்கம் மேடம்,சாரை பார்க்கணுமென்று நாதன் சொல்ல உள்ள தான் இருக்காங்க வாங்க என்றார்.

நாதனின் குரலைக் கேட்ட மகியோ எஸ்தரை பற்றி தான் ஏதோ விஷயம் தெரிந்து விட்டது என்று ஆர்வமாக இருக்க,உள்ளே வந்த இருவரையும் பார்த்தவர் வாங்க வாங்க உட்காருங்களென்று அங்கிருந்த சோபாவை காட்டி சொன்னார்

டீ எடுத்துட்டு வா என்று மானசாவிடம் சொல்ல,வேண்டாம் என்றனர்.ஓஓஓ என்ற மகி சொல்லுங்க நாதன் என்க,சங்கர் தான் உங்களை பாக்கணும்னு சொன்னான் அதுக்கு தான் கூப்பிட்டு வந்தேன் என்கவும், அப்படியா,சொல்லுங்கள் தம்பி எஸ்தரை பத்தி ஏதாவது தெரிந்ததா?

அதைப் பற்றி தான் சொல்ல வந்தேன் சார் என்றவன் உங்க ஊர்ல போய் சிலர் கிட்ட விசாரிக்கும் போது அவங்க எங்க போனாங்கன்னு யாருக்குமே தெரியலை.

அவங்கள் எல்லாரும் கொடுத்த ஸ்டேட்மெண்ட் பார்த்தாக்க 95% உங்களை தான் குற்றவாளியாக காட்டுகிறார்கள் என்கவும் என்னப்பா சொல்ற என்று மகி அதிர,நீங்க தப்பா எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நான் உண்மையை உடைத்து பேசட்டுமா என்கவும்,சொல்லுங்க தம்பி என்று கொஞ்சம் சங்கடத்தோடு மகியும் கேட்க...

நான் விசாரிச்சு வரைக்கும் உங்களை பற்றி யாருமே நல்லவிதமா சொல்லவே இல்லைங்க சார்.யாரைக் கேட்டாலும் மூர்க்க குணம் நீங்க ஜாதி மதம் வெறி பிடிச்சவர்,அது இல்லாம உங்களுக்கு ரொம்ப சந்தேக புத்தி இருப்பதால் பல முறை வீட்டில் சண்டை நடந்ததை காதில் வாங்கியிருப்பதாக சொல்லிருக்காங்க என்கவும்,மகியோ அதிர்ந்து போய் எல்லாரையும் பார்த்தார்.

உங்க பொண்ணு விஷயத்தால் நீங்க தான் உங்க மனைவியை ஏதோ பண்ணியிருக்கணும்னு சொல்றாங்களென்று சங்கர் முடிக்க,ஐயோ தம்பி நான் அப்படியெல்லாம் எதுவும் செய்யலப்பா என்று மகி பதறினார்.

அவர்கள் சொன்னதை தான் உங்ககிட்ட சொல்றேன் மத்தபடி எனக்கு எப்படி உங்களோட குணம் தெரியும் சொல்லுங்க என்றான்..

இந்த கேஸ்ல பைனலா நான் ரிப்போர்ட் கொடுக்கிறது என்னவென்றால் உங்களுடைய வைஃப் அவங்களே திரும்பி வந்தால் தான் தவிர,மற்றபடி எங்களால அவங்க எங்க போனாங்கன்னு கண்டுபிடிக்க முடியலை.

அது சம்பந்தமாக எந்த குளுவும் கிடைக்கவில்லை என்றவன் சரிங்க மாமா எனக்கு டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன் என்று நாதனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

சரிங்க சார் நானும் ஆஃபீஸ்க்கு கிளம்புறேன் என்கவும் சரிங்க நாதன் போயிட்டு வாங்க என்றார்.

சிறிது நிமிடங்கள் வரைக்கும் அமைதியாக இருந்த மானசா, நீங்களெல்லாம் மனுசனா?

உங்களுக்கு இவ்வளவு கேவலமான புத்தி இருக்குன்னு இத்தனை வருஷம் பொண்டிட்டியாக வாழ்ந்த எனக்கு தெரியாம போயிடுச்சே...

எஸ்தர் கிட்ட ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சினு சொல்லி தான் கல்யாணம் பண்றேன்னு என்கிட்ட சொன்னீங்களே அப்போ எஸ்தருக்கு உங்களுக்கு கல்யாணம் ஆன விஷயம் இதுவரைக்கும் தெரியலை அப்படித்தானே என்கவும் ஆமாம் என்றார். ..

உங்க யோக்கியதையே சரியில்லை நீங்க மத்தவங்களை சந்தேகப்படுறீங்களா??உங்க கூட வாழ்ந்ததை நினைச்சா வெட்க்கமாக இருக்கென்று சொல்லிவிட்டு அங்கிருந்து உள்ளே போய் கதவை பூட்டிக் கொண்டார்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top