• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சி:

உங்க இடத்துல தான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நானும் இருந்தேன்.அன்னைக்கு என் பையன் வேற ஜாதி பொண்ணை காதலிக்கிறேன்னு சொல்லும்போது நான் சம்மதிக்கல...

ஒருவேளை மதத்தையும் ஜாதியையும் பார்க்காம இருந்தா,இன்னைக்கு என் பையன் உயிரோட இருந்திருப்பானே சார் என்கும் நாதனின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

அழாதீங்க நாதன் நடந்தது நடந்து போயிடுச்சி இனி வருத்தப்பட்டு ஒன்னும் புண்ணியமில்லை என்கவும்,சொந்த பந்தங்களையும் ஊர்ல இருக்குறவங்கள் வரட்டு கவுரவத்தை பற்றி தான் யோசித்தனே தவிர,என்னுடைய பையனினா ஆசையை பற்றி நான் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை.

இதோ அஞ்சு வருஷமா என் பொண்டாட்டி என்கிட்ட பேசறதே கிடையாது.

ஜாதியும் மதத்தையும் கட்டிக்கிட்டு அழுவு என் புள்ளையை கொன்ன போல என்னையும் கொன்னு காரியம் பண்ணிடுன்னு கடைசியா சொன்னவள்தான் அதிலிருந்து அமைதியாகிட்டாள்.

கால்ல கூட விழுந்து கெஞ்சி பாத்துட்டேன் சார் இதுவரைக்கும் அவ மனசு இறங்கவில்லை என்னோட தவறு அதுக்கு அப்புறம் மேல தான் புரிஞ்சுது.

ஒருவேளை என் பையன் ஆசைப்பட்ட போல அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் சம்மதம் சொல்லிருந்தால் இன்னைக்கு அவன் குடும்பமா எங்கேயோ ஒரு இடத்துல உயிரோட இருந்திருப்பான்.

நம்மளோட குடும்பம் நம்மளோட கௌரவம் மத்தவங்க என்ன நினைப்பாங்க என்பது தான் கவலை..ஆனால் நமது பிள்ளைகளோட விருப்பத்தை பற்றி யோசிக்கிறதே இல்லைங்க சார்.

அவர்களுடைய நியாயமான ஆசையை நம்மளே நிறைவேற்றி இருந்தால் இப்படி நடந்து கொள்ள மாட்டாங்கன்னு அனுபவத்துல நான் புரிஞ்சுகிட்டேன் சார்.உங்களுக்கு நான் அட்வைஸ் பண்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.

உங்களுக்கு பிடிக்கலையா நீங்க தாராளமா ஒதுங்கி இருங்க,எங்கேயோ கண் காணாத இடத்துல பாப்பா வாழ்ந்துட்டு போகட்டும்.

உங்களுக்கு ஒன்னும் அடுத்தடுத்து குழந்தைகள் இல்லையே என்கும் நாதனின் வார்த்தைகளை கேட்க மகிக்கு சுருக்கென்று நெஞ்சுக்குள் முற்கள் தைத்தது போலிருந்தது.

என்னடா இவன் இப்படி பேசுறானேனு நினைக்காதீங்க நிதர்சனத்தை சொல்றேன் சார்.என் இரண்டாவது பொண்ணுக்கு ஜாதகம் மதம் ஜாதி எதுவுமே பார்க்கல மாப்பிள்ளை டாக்டரா இருக்குறாரு. ஆசிரமத்தில் வளர்ந்தவர் தான், தெரிஞ்சவங்க மூலமா கேள்விப்பட்டேன் கல்யாணம் பண்ணி வச்சேன் இதோ சொந்த வீடு வாசல் குடும்பமா சென்னையில சந்தோஷமா இருக்காங்க.

நீங்களும் யோசிச்சு பாருங்க சார்.அப்புறம் மேடத்தை தேடுவதற்கு கண்டிப்பா உதவி செய்கிறேன்.எனக்கு தெரிஞ்ச டிடெக்டிவ் ஏஜென்சி திருச்சியில் இருக்கிறது.

அவங்கள வேண்டுமென்றால் போய் பார்க்கலாமென்க, மகிக்கும் அது சரி என்று பட்டது.இன்னைக்கு ஈவினிங் போகலாமா என்கவும் சரிங்க சார் என்றார்.

பின்னர் சாப்பிட்ட கைகளை கழுவி விட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் நாதன் பேசிய வார்த்தைகளே மகியின் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

நேரமும் கடந்திருக்க மற்றவர்கள் எல்லாரும் ஆபீஸ் டைம் முடிந்து வீட்டிற்கு சென்றனர்.நாதனும் மகியும் எப்பொழுதும் கொஞ்சம் லேட்டாக தான் செல்வார்கள்.

ஆனால் இன்று அவர்கள் டிடெக்டிவ் ஆபீஸ்க்கு போக வேண்டுமென்று சரியான நேரத்திற்கு தனது வேலையை முடித்துவிட்டு வந்து கதவைத் தட்ட எஸ் கம்மின் என்றார்.

சார் போகலாமா என்க ஹம் போகலாம் நாதன் என்றவர் சிஸ்டமை ஆஃப் பண்ணிவிட்டு கீழே வந்தவர்கள் வண்டியை எடுத்துக் கொண்டு நேராக நாதன் சொல்லியே டிடெக்டிவ் ஆபீஸிற்கு அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர்.

ரிசப்ஷனில் இருந்த சோபாவை காட்டி சார் நீங்க உக்காருங்க நான் பாத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே போனார்..

நாதனை பார்த்த அங்கிருந்த டிடெக்டிவ் சங்கர், வாங்க மாமா என்க...மதியம் உன்னிடம் சொன்னேனே என்கவும் சரி மாமா வர சொல்லுங்க என்றான்.

இது என்னுடைய அக்கா பையன் சார் என்று நாதன் சொல்ல அப்படியா என்று வியப்பாய் கேட்க,அதனாலதான் சார் நம்பி கூப்பிட்டு வந்தேனென்று சிரித்தார்.

ஓகே நாதன் என்ற மகி பின்னர் சுருக்கமாக சங்கரிடம் விஷயத்தை சொல்ல அனைத்தையும் கேட்டவனுக்கு மகியின் மேல் தான் ஆத்திரம் வந்தது.

இருந்தாலும் உதவி தேடி வந்தவர்களை முகம் காட்ட முடியாது என்பதால் அவங்க போட்டோ இருந்தா குடுங்க சார் என்க, தனது போனிலிருந்த எஸ்தரின் போட்டோவை சங்கரின் வாட்ஸப்பிற்கு அனுப்பினார்.

மேலும் பல விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டவன் கண்டிப்பாக அவங்களை கண்டு பிடித்திடலாம் என்று சொல்ல எவ்வளவு அட்வான்ஸ் என்று மகி கேட்க அது கேஸ் முடிந்த பிறகு நான் சொல்றேன் சார் என்றான்.

சரி சங்கர் நாங்கள் வருவோமென்று இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

வனிச்சூர்:

ஷமிராவோ இருவரும் சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கிச்சனுக்கு போனவள் அதையெல்லாம் சிங்கிள் போட்டு கழுவிக் கொண்டிருக்கும்போது ஓய் பொண்டாட்டி,மனுஷன் குடிக்கிற போல ஸ்ட்ராங்கா ஒரு டீ எடுத்துட்டு வா டி என்று கிச்சனில் இருப்பவளுக்கு குரல் கொடுத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்த செழியனோ பேப்பரை எடுத்து படிக்கலானான்.

மனுஷன் குடிக்கிற போலயாடா டீ கேக்குற இப்ப பாரு என்னோட கைவண்ணத்தை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்,துலக்கிய பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு கையை கழுவியவள் அடுப்பை பற்ற வைத்து டிகாஷனை கொதிக்க வைத்துட்டு,மீதமிருந்த பாத்திரத்தை துலக்கி முடிக்கவும் டிக்காஷனும் கொதித்து தயாரானது.

பின்னர் அதில் பால் ஊற்றியவள் இஞ்சி துண்டை தனது நடுவிரல் நீட்டத்துக்கு நசுக்கி போட்டு டீ தூளையும் அள்ளி போட்டு கொதிக்க வைத்து இறக்கியவளோ கணவனுக்கு எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் இந்தாங்க என்க, கொடுங்க பொண்டாட்டி என்று வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.

அவளோ அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ ரசித்துக் குடுத்தான்.என்னடா இது?அவ்வளவு டிக்காஷன் போட்டோம் இஞ்சி வேற நிறைய போட்டோமே காரமும் கசப்பும் இருக்கணுமே?

இவர் என்னடா என்றால் ரசித்து குடுக்கிறாரே என்ற யோசனையில் இருக்க டீ கப்பையும் பேப்பரையும் கீழே வைத்துவிட்டு எழுந்தவனோ அங்கு யோசனையோடு நிற்கும் மனைவியை இழுத்தவனோ அவள் வாயை தனது வாயால் மூடி வாய்க்குள் இருந்த டீயை அவளுக்குள் செலுத்தினான்.

அவளுக்கோ டீத்தூளின் கசப்பும் இஞ்சியின் காரணமும் தாங்கவில்லை..
ம்ம் என விலக பார்க்க முழுவதையும் அவளை விழுங்க வைத்திட்டே அவளிடமிருந்து விலகியவன்,கொய்யால யாருகிட்ட டி உன் வேலையை காட்டுகிற?

எப்படி உன் புருஷனோட டீ என்கவும் இருடா முதல்ல வாயை கொப்பளிச்சிட்டு வந்து உன்னை பார்த்துக்கிறேனென்று மனதிற்கு நினைத்தவள் வேகமாக போய் வாஷ்பேஷனில் தண்ணீர் திறந்து வாயை கொப்பளித்துக் கொண்டிருந்தாள்...

மனைவியின் செயலை பார்த்து ஹாஹா என்று சிரித்துக் கொண்டே அவளிடம் வந்தவன் எதையும் செய்வதற்கு முன்னாடி பலமுறை யோசிக்கணும் செல்லம்...

பிளானிங் இல்லாம எதையும் பண்ண கூடாது ஓகே என்று அவளின் தோளின் மீது கையை போட,கணவனின் கையை தட்டிவிட்டு நிமிர்ந்தவள் எதுக்கு இப்படி பண்ணீங்க?.எனக்கு தான் டீ பிடிக்காதுன்னு தெரியுமே என்கவும்,சரி உனக்கு பிடிக்காது பட் எனக்கு ரொம்ப பிடிக்குமே டி.

முதல் முதல்ல உன்கிட்ட ஆசையா டீ கொண்டு வா என்று கேட்டேன் நீ என்ன வேலை பண்ணிருக்கணும் மாமன் ரசிச்சு குடிக்கிற போல டீ போட்டு வந்திருக்கனுமா இல்லையா?

அத விட்டுட்டு இஞ்சியையும் டீ தூளையும் எனக்கென்னவென்று அள்ளி போட்டஇருக்கிறியே இது நல்லதா சொல்லு?.

அதுக்குன்னு இப்படியா பண்ணுவாங்க என்று மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டாள்..

"இதுதான் எதிர் வினை செல்லம்"

நீ என்ன செய்கிறாயோ அதுக்கு பதில்...

ஓஓஓஓ அப்ப நான் என்ன பண்ணினாலும் நீங்க திருப்பி பண்ணுவீங்களானு அவள் முறைக்க அப் கோர்ஸ் நீ பண்ணினதையும் பண்ணுவேன் நீ பண்ணாததையும் பண்ணுவேனென்று மனைவியை தூக்கிக்கொண்டு படியில் ஏற எதுக்கு இப்போது மேல போறிங்க?

யாருமே வீட்ல இல்லை கதவுலாம் திறந்து கிடக்கு என்க ஒன்னும் பண்ணலடி பைத்தியம்.மேல வா உனக்கு ஒரு வேலை இருக்கு என்றபடியே தனது ரூமிற்கு போனவன் செல்லம் இங்கு சொந்தக்காரங்க பங்க்ஷனுக்குலாம் புடவை தான் கட்டிட்டு போற போல இருக்கும்.உன்கிட்ட அந்த அளவுக்கு புடவை இல்லைனு நினைக்கிறேன் என்க...

கணவனை முறைத்தவள் நீங்களே எப்படி முடிவு பண்ணலாம் என்கவும்,ஏய் உன்னை கூப்பிட்டு வரும்போது நீ வெறும் கையோடு தானடி வந்த..

கல்யாணத்துக்கு கூட அங்கு ஒன்றுதான் வாங்குனேன் இங்கு நடந்த பங்ஷனுக்கு அப்புறம் அதுக்கு ஒன்னு என்று சிரிக்க எதுக்காக என்று பல்லை கடித்தாள்.

"அதான் டி ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு"...அதுக்கு தான் டி என்று பாட ஐயோ ஏன் இப்படி பண்றீங்க என்று வெட்கப்பட்டுக் கொண்டு வேறு பக்கம் திரும்பி கொண்டாள்...

நீ தானடி எதுக்குன்னு கேட்ட உன் டவுட்டை கிளியர் பண்றதுக்கு தானே நான் இருக்கேனென்று பின்பக்கமாக மனைவியை அணைத்து கொண்டு சொல்ல...

ஆமாம் பொல்லாத புடலங்காய் டவுட் என்றவள் பாபு மாமா துபாயில் இருந்து வரும் போது ஒரு பெட்டி நிறைய டிரஸ் வாங்கிட்டு தான் வந்திருக்கிறார் என்க...என்னடி சொல்ற என் பங்காளிக்கு அந்த அளவுக்கு அறிவு இருக்கா என்கவும் உங்களை விட என் மாமாவுக்கு அறிவு அதிகம் தான் என்றாள்...

அப்படியா சரி பரவாயில்ல உன் அறிவுக்கு தகுந்த போல தானே புருஷன் கிடைப்பான் என்று சிரித்தவன் சரி அதுக்கெல்லாம் பிளவுஸ் எல்லாம் வேணுமேடி...

இல்லை முதல் மரியாதை ராதாவை போல நிக்க போறியா என்றவன் மனைவியை அந்த கோலத்தில் நினைத்து பார்த்து வாவ் செமையா இருப்படி என்க...வாய் வாய் என்று கணவனின் வாயிலே இரண்டு அடி வைத்தாள்...

வாயுள்ள பிள்ளைதான் பிழைத்துக் கொள்ளும் என்று சொல்லுவாங்களே அது உனக்கு தெரியாதா?

சரிடி,எல்லாம் ஒரு பேக்ல எடுத்து வச்சுக்க அதுக்கெல்லாம் பிளவுஸ் வாங்கணும் இல்லையா,அப்படியே தைக்க கொடுத்துட்டு வந்துடலாம் என்றான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

புவனாமா, கல்யாண பிளவுஸை பக்கத்து தெருவுல போய் கொடுத்துட்டு வந்தாங்க நல்லா தான் தைச்சிருக்காங்க அவங்க கிட்ட கொடுத்து விடலாம்.

ஆமா ஆமா நல்லாதான் இருந்ததென மனைவியை பார்த்து ஒரு மார்க்கமாக செழியன் சிரிக்க என்னவாம் என்றாள்.

பிளவுஸ் நல்லா தைச்சுருக்காங்கன்னு சொன்னேன் டி வேறு ஒன்றுமில்லை நீ ரெடியா இரு அப்பா அம்மா வந்த பிறகு சொல்லிட்டு டவுனுக்கு போகலாம் என்க...இந்த நேரத்தில் வேண்டாம்..

வெயிலாக இருக்கு..ஈவினிங் போகலாமா?.அதுவும் சரிதான் என்றவன் சரி டி அங்கு என்ன நடக்குது நான் போய் ஒரு அட்டனன்ஸ் போட்டு வரேன்.

நீ வீட்ல பத்திரமா இரு என்று மனைவியோடு கீழே வந்தவன் அங்கிருந்த பைக்ல ஏறி பக்கத்து தெருவிலிருக்கும் தனது தாத்தா வீட்டை நோக்கி சென்றான்.

வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்த செழியன் அங்கு எல்லாரும் இருப்பதை பார்த்து என்ன இங்க பெரிய வட்ட மாநாடு நடந்து கொண்டிருக்கு என்றபடியே கண்ணனின் பக்கத்தில் உட்கார,வா அப்பு...

உன் பொண்டாட்டியோட மாமா பையனுக்கு கண்மணியை பொண்ணு கேக்குறாங்கனு தம்புசாமி தாத்தா சொல்ல...எதேஏஏஏ பங்காளிக்கா என்று செழியன் அதிர...

ஏன்டா எனக்கு என்னடா குறைச்சல்? அழகு இல்லையா கை நிறைய சம்பாதிக்கலையா சொல்லு எனக்கு என்னடா குறைச்ச எதுக்குடா இப்படி ஷாக் ஆகுற என்று அங்கே இருக்கும் கூட்டத்தையும் மறந்து பாபு கேட்க, மற்றவர்களோ அவன் ஆர்வத்தை பார்த்து சிரித்து விட்டனர்.

பிறகு தான் தன்னுடைய செயல் புரிந்து சிரித்து சமாளிக்க மாப்பு ரொம்ப பொங்காதடா மூஞ்சிலேயே ஆசிட் ஊற்றிட போறாங்க,மூடிட்டு உட்காருடா என்ற பரத் தனது பல்லை கடித்தான்.

ஹா ஹா என்று சிரித்த செழியனோ என் பங்காளிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை தாராளமா கண்மணியை கட்டி கொடுக்கலாம்.அதெல்லாம் வைக்கோலும் தீவனம் போலவும் தவிடும் புண்ணாக்கு போல நல்லா பார்த்துப்பான்.

"அட மானங்கெட்டவனே"

எடுத்துக்காட்டுக்கு வேற ஒண்ணுமே உனக்கு கிடைக்கலையா என்று அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கண்ணன் கேட்க,உன் பங்குக்கு இதெல்லாம் போதும் புரியுதா...நீ மூடிகிட்டு இரு என்க,நேரம்தான் டா நேரம்.உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது இல்லையா அப்படி தான்டா நீ பேசுவ.

சரிங்க,எங்களுக்கெல்லாம் சம்மதம் எதுக்கும் கண்மணியை முறைப்படி நீங்க பொண்ணு பார்த்துடுங்க.எங்க பேச்சை மீறி பாப்பா எந்த முடிவும் எடுக்காதென்ற கனலரசன் அண்ணி பெரிய புள்ளைய கூப்பிட்டு வாங்கயென்கவும், சரிங்க தம்பியென்று வேகமாக படியிலேறி மாடிக்கு போன புவனா கண்மணியின் ரூம் கதவை தட்டினார்.

அவளோ காதில் ஹெட்செட் போட்டுக்கொண்டு படுத்திருந்ததால் சத்தம் கேட்கவில்லை.மீண்டும் வேகமாக கதவைத் தட்டிவிட்டு தாழ்ப்பாளை திருக கதவு திறந்தது.

உள்ளே போனவர் அங்கிருந்த மகளின் தோளில் தட்டவும் திரும்பி பார்த்தவள் காதிலிருந்ததை எடுத்து சொல்லுங்கம்மா என்க,சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா உன்ன பொண்ணு பாக்க வந்திருக்காங்க டா.எல்லாரும் கீழ தான் இருக்காங்க என்பதை கேட்டவளுக்கோ சட்டென்று பாபு நினைவு வந்தது.

அம்மா..இப்படி திடீரென பொண்ணு பாக்க வந்திருக்காங்கன்னு சொன்னால் என்ன அர்த்தம் என்கவும், பையன் சைடில் எந்த பிக்கல் புடுங்கலும் கிடையாது...

ரொம்ப தங்கமான மனுஷங்களா இருக்கிறாங்க இன்னும் வேற என்ன வேணும் சொல்லு?..அதுக்குள்ள அவங்க குடும்பத்துல நீ போய் பார்த்துட்டியா என்று கோவமாக கேட்டாள்.

அட பைத்தியம் இத்தனை நாளும் இங்க தானே இருக்காங்க என்கவும் எதே இத்தனை நாள் இங்க இருக்காங்களா?.

அய்யோ அம்மா நீ யாரைத்தான் சொல்லிட்டிருக்க என்று குழப்பத்தோடு கண்மணி கேட்க நம்ம செழியன் பொண்டாட்டியோட தாய் மாமா வீட்ல இருந்து தாண்டி பொண்ணு கேட்டு வந்திருக்காங்கள்.பையன் நல்லா கண்ணுக்கு லட்சணமா ராசா போல இருக்கிறான்.உனக்கும் அந்த பையனுக்கும் ஜோடி பொருத்தம் நல்லாருக்கும்.

எல்லாருக்கும் சம்மதம் சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா.நான் கவிதா கிட்ட நகை எல்லாம் கொடுத்து அனுப்புகிறேன்.பாபு வீட்டிலிருந்து பொண்ணு பார்க்க வந்திருக்காங்கள் என்பதே சாரல் வீசுவது போலிருந்தது.

டெல்லி:

காலை உணவை பேசிக்கொண்டே சாப்பிடும் போது வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கணுமென்று சொல்ல மாம் போய்ட்டு வரலாமே என்றானுங்கள்.

பின்னர் ஐவரும் காரில் ஏறி பக்கத்திலிருக்கும் மாலுக்கு போனவர்கள் வீட்டுக்கு என்னென்ன பொருள் வேண்டுமென்று எஸ்தர் சொல்லிக் கொண்டிருக்க ஜூலியும் ரூபாவும் அதையெல்லாம் எடுத்து டிராலியில் போட்டுக் கொண்டே வந்தனர்.

ருத்ரனும் தீபனும் வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கும் போது,அம்மாவை பார்த்தால் நல்லவங்களா தான் தெரியுறாங்கடா மச்சி.ஏதோ ஒரு பிரச்சனையில் வந்திருக்கிறாங்கனு நினைக்கிறேன்னு தீபன் சொல்ல,நானும் அப்படித்தான் நினைக்கிறேன் டா.

அந்த நடு ரோட்டில் இவங்க மயங்கி விழுறதை பார்த்து ஒரு நிமிஷம் நானே பதறிட்டேன் டா.அது ஹைவேஸ் டா... திடீர்னு வேற ஏதாச்சு வண்டி வந்திருந்தால் கண்டிப்பா என்ன நடந்திருக்குமென்று சொல்ல முடியாது.

இவர்களை பற்றி ஏதாச்சும் நியூஸ் வந்திருக்கானு தமிழ் பேப்பர்ல பார்க்கலாமா?,ருத்ரனோ ஹேய் சூப்பர் டா..மூணு நாள் பேப்பர் அந்த லைப்ரில கிடைக்கும் அங்க போய் பார்க்கலாமென்று உள்ளே போனானுங்கள்.

பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு மூவரையும் வீட்டில் விட்டவர்கள் நாங்க கொஞ்சம் வெளியில போயிட்டு வரோமென்று பக்கத்திலிருக்கும் லைப்ரரிக்கு போய் அங்கிருந்த தமிழ் பேப்பரில் தேட அப்படி எந்த ஒரு விளம்பரமும் வரவில்லை.

என்னடா இது?எந்த விளம்பரமும் வரலையே என்க...சரிடா நம்ம எதுக்கு தேவையில்லாம இதெல்லாம் யோசிக்கிறோம்.

அப்படி ஏதாவது இருந்தா அவங்களே ஒரு நாளைக்கு சொல்லுவாங்க இப்ப வா நம்ம வீட்டுக்கு போகலாம் நாளைக்கு அந்த ஆபரேஷன் இருக்கு இல்லையா என்று ருத்ரன் சொல்ல ம்ம் நீ சொல்வதும் சரிதானென்றான்.

பின்னர் இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

அப்பொழுது அவர்களுக்கு தெரிந்த நண்பர் வீட்டில் பர்த்டே பார்ட்டி இருப்பதாக இன்வைட் பண்ணவும் எஸ்தரோ நான் வரவில்லை பா நீங்கள் போய்ட்டு வாங்களென்று சொல்லிவிட்டதால் நால்வரும் கிளம்பி டின்னருக்கு அங்கு சென்று விட்டனர்.

தான் ஒருவளுக்காக எதுக்கு புதுசா சமைக்கணுமென்று நினைத்த எஸ்தர் மதியம் சமைத்ததில் மீதமிருந்த உணவுகளை சூடு பண்ணி சாப்பிட்டு விட்டு படுத்து விட்டார்.

அவர்களிடம் ஒரு சாவி இருந்ததால் டின்னர் முடிந்து நள்ளிரவுக்கு மேல் வந்தவர்கள் கதவை திறந்து அவர்கள் ரூமில் படுத்து விட்டனர்.

மறுநாள் காலை ஆபரேஷன் இருப்பதால் வர லேட்டாகும் என்று சொல்லிக்கொண்டு ருத்ரன்-தீபன் இருவரும் ஹாஸ்பிடலுக்கு சென்று அரை மணி நேரம் கழித்து அந்த அப்பார்ட்மென்டிற்குள் போலீஸ் வாகனம் சூழ அமர்நாத்தின் கார் உள்ளே வந்தது.

எதுக்கு மினிஸ்டர் கார் வருதென்று அங்கிருந்தவர்களோ பரபரப்பாக பார்க்க ருத்ரன் இருக்கும் பிளாக் முன்னால் வந்து காரை நிறுத்த, முதலில் இறங்கி போலீஸோ மாடியில் போய் சோதித்து விட்டு பின்னரே அமர்நாத்தை வரச் சொன்னார்கள்.

லிப்டில் ஏறி ருத்ரன் பிளாட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்த சிறிது நொடியில் கதவை திறந்த ஜூலியோ அங்கிருந்த போலீஸ்காரை பார்த்து சொல்லுங்க என்ன விஷயமென்று ஹிந்தியில் கேட்க,அவனோ டாக்டரை பார்க்க சார் வந்திருக்காங்க என்றார்.

எந்த சார் என்றவளுக்கு நமஸ்காரம் பேட்டி என்று பின்னாடியிருந்து குரல் கேட்க யாரென்று பார்க்க,அங்கு இருந்தவனை கண்டு கொல வெறி வந்தது.

இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள் எதுக்கு இந்த ஆளு நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறானென்று யோசனையோடு இருக்க,யாருகிட்ட பேசிட்டு இருக்க ஜூலி என்றவாறு அங்கு வந்த ரூபாவும் அங்கிருப்பவனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த தோற்றம் காட்டிக் கொடுத்தது.

ஏதாவது பொருள் இருந்தால் இங்கேயே அவனை அடிச்சு கொல்லனும் போல் ஆத்திரம் வர,திடிரென்று சுதாரித்து திரும்பிய ஜூலியோ தனது நாத்தனாரின் கண்ணில் இருக்கும் வெறியை பார்த்து விட்டு வேகமாய் போய் ரூபாவின் கையை பிடித்தவள், உள்ளே வாங்களென்று சொல்லிவிட்டு அமைதியாக இருடி போலீஸ்காரர்கள் இருக்கிறாங்க என்றாள்.

எப்படி என்னால அமைதியாக இருக்க முடியும்?கண்ணு முன்னாடி குடும்பத்தை அழிச்சவன் வந்திருக்கிறானே அவனை கண்டந்துண்டமா வெட்டி போடணும் போல ஆத்திரம் வருது ஜூலி என்று ரூபா பல்லை கடிப்பது அவளுக்கு மட்டும் காதில் விழுந்தது.

எஸ்தரோ ரூமில் துணி தைத்துக் கொண்டிருந்ததால் ஹாலில் நடக்கும் விஷயம் எதுவுமே அவருக்கு தெரியவில்லை.

அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்த அமர்நாத் டாக்டர் தம்பியால் தான் இன்னைக்கு என் குடும்பம் நல்லா இருக்கு பேட்டி. என்னுடைய பேத்திக்கு டாக்டர் தம்பி தான் ஆபரேஷன் பண்ணாரு அதுதான் நேரில் பார்த்து நன்றி சொல்லிட்டு போகலாமென்று வந்தேனென்றவர் பக்கத்திலிருந்தவனிடம் திரும்பி சேது என்க, அவன் கிப்டை கொடுக்கவும் இந்தா பேட்டி...

தம்பிகிட்ட கொடுங்களென்று சொல்ல தப்பா எடுத்துக்காதீங்க,எங்களுக்கு கிப்ட் வாங்குற பழக்கம் கிடையாது என்று ஜூலி கராராக சொல்ல அவள் குரலே இது எனக்கு தேவையில்லை என்பதை அமர்நாத்திற்கு உணர்த்தியது.

உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்..சரி மா தம்பி வந்தால் என்னை வந்து பார்க்க சொல்லுங்க என்க,அதுற்கு ஏதும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க அமர்நாத்தும் அங்கிருந்து கிளம்பி விட்டான்..

என்ன சார் நீங்க கேக்குறீங்க அந்த பொண்ணுங்க எந்த பதிலும் சொல்லாமல் ஊமை போல இருக்காங்களென்று சேது கேட்க, திடீர்னு நான் போனால் ஒரு பதட்டம் இருக்காதா சேது.

நீ ஒன்னும் அவ்வளவு நல்லவன் இல்லையேடா என்று மனதிற்குள் நினைத்து சேது அமைதியாக அவர் பின்னாடியே வந்தான்.

முதல்ல இந்த வீட்டை ஆசிட் ஊற்றி கழுவு என்று கத்திய ரூபா தனது கோபத்தை போக்க அங்கிருந்த சோபாவின் மேல் கைகளை ஓங்கி குத்த தொடங்கினாள்..

தோழியின் கண்ணில் இருக்கும் வெறியை பார்த்த ஜூலிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.அந்த நேரம் பார்த்து கதவை திறந்து கொண்டு வெளியே வந்த எஸ்தர்,சோபாவில் குத்திக் கொண்டிருப்பதை பார்த்தவர் என்னடா எக்ஸர்சைஸ் பண்றியா என்கவும் அவர் குரலில் இயல்புக்கு வந்தவள் ஆமாங்கத்தை...

நல்ல பிராக்டீஸ் பண்ணினால் தானே உங்க பையனை அடிச்சு வெளுக்க முடியும் அதுக்காக தானென்று சிரித்தாள்..

ஐயோ என் பையன் ரொம்ப அப்பாவி மா அவனை ஒன்னும் பண்ணிடாதம்மா என்று பயந்த போல எஸ்தரும் சொல்ல அவளுங்கள் இருவரும் சிரித்து விட்டனர்.

வீழ்ந்தேனடி...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
There’s a big fb in their life. Madhi unnakku Esthar vendaam meet her be peaceful
😁😁😁என்ன நடக்குமென்று பார்க்கலாம் 😁🥰
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top