• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சோழனூர்-திருச்சி:

வீட்டிற்கு வந்த மகி வேகமாக குளித்து தயாரானவர் எதிர் வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்து அந்தோணி வந்தால் கொடுக்குமாறு சொல்ல,அவர்களோ எங்கே எஸ்தரை காணும் என்கவும்,அவளுடைய சின்னம்மா பொண்ணுக்கு உடம்பு சரி இல்லையென்று காரைக்கால் வரைக்கும் போயிருக்கிறாளென்று சமாளித்தவர் அங்கிருந்து திருச்சியை நோக்கி கிளம்பினார்...போகும் வழியெல்லாம் தனது மனைவியை எப்படி தேடுவதென்று கவலையானது.

வேலை டென்ஷன் ஒரு பக்கம் மனைவியை தேடுவது ஒரு பக்கமென்று மனதிற்குள்ளே கோபமும், கவலையாகவும் இருந்தது.

எவ்வளவு திமிரு இவளுக்கு?ஏன் எனக்கு திட்ட உரிமையில்லையா? மூணு வேளை சோறு போட்டு இருக்க இடமும் நல்ல ராஜ வாழ்க்கை தானே கொடுத்திருக்கிறேன்.

நான் என்ன இவளை மரத்து நிழலிலையா குடும்பம் பண்ண வச்சேன்?எல்லாம் உட்கார்ந்து சாப்பிட்ட திமிரு இவளையெல்லாம் வயல் வேலைக்கு அனுப்பியிருந்தால் அப்போ புருஷனோட அருமை தெரிந்திருக்குமென்று மனைவியை திட்டிக் கொண்டே திருச்சிக்கு வந்து சேர்ந்தார்.

நேராக ஆபீஸ்க்கு போய் தனது சிஸ்டம்மை ஆன் பண்ணி ஈமெயிலை ஓபன் பண்ண அதில் மறுநாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு போவதற்காக அவருக்கு பர்மிஷன் லெட்டர் அனுப்பி இருந்ததை படித்தவர் தனது பி. ஏ கிட்ட அதை பிரிண்ட் அவுட் எடுக்க சொல்லியவர் ஸ்டாப் எல்லாரையும் மீட்டிங் ஹாலுக்கு வரச்சொன்னார்.

சிறிது நிமிடத்தில் அந்த ஆபீஸிலிருந்த ஆபீஸர்களும் மீட்டிங் ஹாலுக்கு வர,அங்கு வந்த மகியும் மறுநாள் எம்எல்ஏ வீட்டுக்கு ரைடு போகும் விஷயத்தை பற்றி சொல்லியவர் இந்த விஷயம் எக்காரணத்தை கொண்டும் வெளியே தெரியக்கூடாதென்று கண்டிப்பாக சொல்லிவிட்டு அவர்களை போக சொன்னவர் தனது கேபினுக்கு வந்து பெண்டிங் வேலையை முடித்து கிளம்பவே இரவானது...

வரும் போது பெயருக்கு சாப்பிட்டு வீட்டுக்கு வந்தவருக்கு மனைவியின் நினைவுகள் வர இனி அந்த ஓடுகாளியை நினைக்கவே கூடாது என்று சொன்னாலும் அவ எங்கதான் போயிருப்பாள்?டிடெக்டிவ் கிட்ட கொடுத்து தேடலாமாயென்ற எண்ணம் வராமலில்லை.

நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் கடந்து சென்றது.விடியலும் ஆரம்பமாக மகியோ மற்ற ஆபீஸர்களோடு திருச்சி எம்எல்ஏவாக இருக்கும் காத்தவராயன் வீட்டை நோக்கி சென்றார்...

அரை மணி நேரத்தில் அந்த பெரிய வீட்டின் கேட் முன்பு போய் நின்று ஹாரனை அழுத்த அங்கிருந்த வாட்ச்மேனோ கவர்மெண்ட் முத்திரை உள்ள காரை பார்த்துவிட்டு கதவை திறந்து விட மூன்று கார்களும் உள்ளே போய் நின்றது.

ஆட்டுக்கறி குழம்பில் இட்லி பிசைந்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் எம்எல்ஏ...திடீரென்று இத்தனை ஆபிஸர்கள் உள்ளே வருவதை பார்த்தவர் வாங்க வாங்க சாப்பாடு நேரத்துல வந்துருக்கீங்க..வாங்க சாப்பிடலாமென்க,பரவாயில்லையென்அங்கிருந்த ஹாலில் உட்கார்ந்து கொண்டனர்.

நிதானமாகவே மனைவியின் கை பக்குவத்தை ரசித்து சாப்பிட்டு பெரிய ஏப்பத்தோடு வந்தவர் சொல்லுங்க சார்..என்ன காலையிலேயே இவ்வளவு தூரம்?.

பின்னர் தங்களிடமிருக்கும் சர்ச் வாரண்டை மகியின் அசிஸ்டன்ட் காட்ட தாராளமான சோதிச்சுக்குங்க. சட்டத்தை மதிக்கும் சாதாரண குடிமகன் நானென்று சிரித்தார்.

அதற்குள் இந்த விஷயம் கட்சிக்காரர்களுக்கு தெரிய எம்எல்ஏ வீட்டிற்கு வந்தவர்கள் வெளி கேட் பூட்டியிருப்பதை பார்த்து வன்மையாக கண்டிக்கிறோம் என்று வாசலில் நின்று கத்தினர்.

கட்சிக்காரர்களின் சத்தம் அதிகமாக கேட்க,சார் நாங்கள் எங்களுடைய கடமையை தான் செய்கிறோம்.இவங்க இப்படி போராட்டம் பண்ணிட்டு இருந்தாக்க பின்னர் சட்டப்படி நடவடிக்கைதான் எடுப்போமென்று மகி சொல்ல தனது பி.ஏவை அழைத்தவர் எல்லாரையும் கலைந்து போகுமாறு சொல்ல சொன்னார்...

செல்வி வந்தவங்களுக்கு காபி ஜூஸ் கொண்டு வந்து குடு என்க, சார் அதெல்லாம் ஒன்றும் வேண்டாமென்று சொல்லிவிட்டார்.கடமையில் எப்போதும் மகி கடுமையாக நடந்து கொள்வார் என்பது அரசியலில் இருப்பவர்களுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

லஞ்சம் கொடுப்பதற்காக எத்தனையோ பேர் அவரை அணுகியிருக்க தனது ஒரு பார்வையாலே முறைத்து வெளியே துரத்தி விடுவார்.நேரமும் கடந்து சென்றது ஆனால் அந்த வீட்டில் அப்படி சட்டவிரோதமாக எதுவும் இருப்பது போல் தெரியவில்லை.

என்ன சார் எல்லாம் சரியா இருக்காயென்று டாக்குமெண்ஸை படித்துக் கொண்டிருந்த மகியிடம் கேட்க ஆமாம் சார் அதுதான் எனக்கு சந்தேகமாயிருக்கென்று சிரித்தார்.

தம்பி என்று கூப்பிடலாமா என்க, நிச்சயமாக சார்.வயதில் பெரியவர் தாராளமாக கூப்பிடலாம்.

ஹம்..என்னை பற்றி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.இப்போ என்கிட்ட இருக்கிறது எல்லாம் நான் சம்பாதிச்சு சேர்த்தது ஒரு துளி தான்.எங்களோட குடும்பம் விவசாயத்தை நம்பி வாழ்வது.

இந்த ஊரிலேயே பெரிய நிலக்கிழார் யார் என்றால் எங்களோட குடும்பம் தான்.அதில் வரும் வருமானத்தை வச்சு சுற்றி இருக்கிற கிராம மக்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டு வாழ்ந்துகிட்டு இருக்கும் போது ஊர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக ஏதோ ஒரு பதிவியில் இருக்கணும்னு எங்க அப்பாவுக்கு புரிஞ்சது.

பிறகு அவரும் முதல்ல பஞ்சாயத்து போர்ட் தேர்தலில் நின்னவர் படிப்படியாக உயர்ந்து எம்.பி ஆனார்..

அவருக்குப் பிறகு அரசியல் வாரிசா நான் வந்தேன்.என்னோட 45 வருஷம் அரசியல் வாழ்க்கையில இதுவரை என்னோட சம்பளத்தை தவிர பத்து பைசா என் வீட்டுக்கு நான் எடுத்துட்டு வந்தது கிடையாது.

ஏன்னா என்கிட்ட இருக்கும் சொத்தே இன்னும் எட்டு தலைமுறைக்கு வரும் அடுத்தவங்க சொத்தை வச்சுக்கிட்டு ஒரு போதும் வாழ முடியாதுப்பா. ..

எத்தனையோ பேரு என்னையும் மிரட்டினாங்க பணத்தைக் கொடுத்து வளைக்க பார்த்தாங்க எதுக்கும் அசரலையே நான்.என்கிட்ட நேர்மை இருக்கு.என்னோட பிள்ளைகள் படிச்சு இன்னைக்கு உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள்...

அடுத்த மாசம் எலக்சன் வரப்போகுது இந்த முறையும் நான் தான் ஜெயிப்பேனென்று தெரியும்.அதற்காக தான் இந்த வருமானவரி சோதனையை எதிர்க்கட்சிகர்கள் எனக்கு ஏவி விட்ட சதி என்று பேசிக் கொண்டிருந்தார்.

மகிக்கும் ஓரளவுக்கு காத்தவராயனைப் பற்றி தெரியும் என்பதால் அவருக்கும் இந்த ரெய்டில் விருப்பமில்லை ஆனால் மேலிடம் செல்வதை கேட்டுதானே ஆகணுமென்று வந்திருந்தார்.

வனிச்சூர்:

அம்மாவ ரொம்ப திட்டிகிட்டு தான் இருப்பாங்க இல்லையா பாட்டியென்று ஷமீரா கேட்க உன் அப்பனோட குணம்தான் தெரியுமே. அப்படியே அவன் ஆத்தாவைப் போலயென்றார். .

ஏண்டி மா எங்கிருந்துடி உனக்கு இவ்வளவு துணிச்சல் வந்துச்சு? பக்கத்துல இருக்க எங்கள பாக்க வர்றதுக்கு கூட உன் அம்மா கைய புடிச்சுகிட்டு தான் வருவ...இவ்வளவு தூரத்திலிருந்த பையனை நம்பி வந்திருக்கியே எப்படி இதெல்லாமென்க, ஷமீராவோ அமைதியா இருந்தாள்.

பார்க்க நல்ல குடும்பமாக தெரியுது நல்ல பையனாக தான் இருக்கிறான். போனது போகட்டும் இவங்களுக்கு ஏற்றபடி நல்ல மருமகளாக வாழ்ந்து காட்டு.இங்கு இருக்கிற சடங்கு சம்பிரதாயமெல்லாம் உனக்கு புதுசாக இருக்கும் அதை எல்லாம் பழகிக்க..

எந்த வேலையும் தெரியாதுன்னு சொல்லாதே,உனக்கு எல்லா வேலையும் உன் அம்மா கத்து கொடுத்துருக்காதான்.உன் அப்பனோட கோவம் உனக்கு ஒரு குழந்தை பிறந்ததும் மாறி போயிடும் அதுவரைக்கும் எஸ்தர் உன் அப்பன் கிட்ட பிடுங்கள் பட்டு தான் ஆகணும் வேற வழி இல்ல..

நீ அதெல்லாம் நினைச்சு உன் வாழ்க்கையை கெடுத்துக்காத புரியுதா. நாங்க எல்லாம் வாழ்ந்து முடிச்சிட்டோம். நீங்கள் இப்பதான் வாழ்க்கையை தொடங்க போற...

படிச்ச படிப்புக்கு ஏதாச்சு வேலைக்கு போகணும்னு நினைத்தால் தாராளமா போ இல்லையா புருஷனுக்கு ஏத்த பொண்டாட்டியா வீட்டுக்கு நல்ல மருமகளா குடும்பத்தை பார்த்துகிட்டு இரு..

நாங்கள் ஒன்னும் அக்கம் பக்கத்தில் இல்லை ஓடிவந்து பார்க்கிறதுக்கு கஷ்டமோ நஷ்டமோ நீ தான் முண்டியடிச்சு வாழ்க்கையில் முன்னேறி வரணும்.

இன்னைக்கி உன் அப்பா அம்மா இப்படிப்பட்ட குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டிருக்க என்று கோவப்படுறவங்க அதே வாய் என் பொண்ணு நல்ல குடும்பத்துல நல்ல கணவனோடு வாழ்கிறாள்னு நம்ம சொந்தக்காரர்களுக்கு முன்னாடி பெருமையா சொல்லணும்.

அது உன்னோட கையில் தான் இருக்கென்று தனது அனுபவத்தை பேத்திக்கு பாடமாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்..

மேலும் சில விஷயங்கள் பேசிக் கொண்டிருக்க கதவைத் தட்டி உள்ளே வந்த பாபு நால்வரையும் சாப்பிட அழைத்துப் போனான்.அங்கே பொண்ணு மாப்பிள்ளை இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து தலை வாழை இலையில் உணவை பரிமாறினர்.
எல்லாரும் சாப்பிட்டு முடித்து எழுந்தனர்.

சிலர் காலையில் அங்கு கோயிலில் நடந்த விசேஷத்திற்கு வர முடியலை என்பதால் வீட்டிற்கு வந்து தங்கள் கையில் கிடைத்த பரிசுகளை கொடுத்து சென்றனர்.

தெரிந்தவர்கள் எல்லாம் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதால் ஷமீராவை வேறு புடவை மாற்றிக் கொண்டு இருக்க சொன்னார்.

மாமியார் தன்னிடம் பேசியதை பார்த்த ஷமீரா அத்தை என்னோட டிரஸ் எல்லாம் அங்கு இருக்கேயென்க, எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தாச்சி.
அந்த ரூம்ல தான் இருக்கு பாருத்தானு சிரித்துக் கொண்டே வானதியும் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, சரிங்கத்தை என்றவள் அவர் காட்டிய ரூமிற்குள் சென்று கதவை சாற்றி விட்டு திரும்ப அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

தனது மாமியாரோ இல்லை அத்தை தான் வந்திருக்காங்களென்று நினைத்துக் கொண்டு கதவை திறக்க புயல் போல் உள்ளே வந்து கதவை சாத்தியவனை பார்த்தவள் என்ன பண்றீங்க?.

உங்களை யார் இங்கே வர சொன்னா?

வெளியே போங்க யாராவது தப்பா நினைக்க போறாங்களென்று பதற்றமாக சொல்லவும் இனிமே என்னை யாருடி தப்பா நினைக்க போறா என்று மனைவியை இழுத்து தன்னோடு இருக்கியவன் அவள் இதழில் புதைந்தான்.

ஒரு கட்டத்தில் அவள் மூச்சிற்காக ஏங்குவது தெரிந்து தனது மூச்சை கொடுத்து மனைவி ஆசுவாசப்படுத்தியவன் பின்னர் மனமின்றி விலகியவன்,ரொம்ப அழகா இருக்கடி என்றபடியே புடவை இடைவெளியில் தெரியும் வெறுமையான இடுப்பில் கையை கொடுத்து தனது நெஞ்சோடு அணைக்க ஷமீராவுக்கு கணவனின் செயல்கள் வெட்கம் வந்தது.

அப்புறம் பொண்டாட்டி நல்லா தெம்பா சாப்பிடுங்க அப்பதான் உன் புருஷனை சமாளிக்க முடியும் என்றான்.ஆஹான் நீங்க என்ன அடங்காத காளையா உங்களை சமாளிக்கிறதுக்கு புதுசா தெம்பு வேணும்.

ஓஓஓஓ என்றபடி அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவன் இந்த வாய் ராவுக்கு என்ன சொல்லுதுன்னு பார்க்கலாமென்று ஒரு மார்க்கமாக சிரிக்க,எதுக்கு சம்பந்தமே இல்லாம சிரிக்குறீங்களென்றாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
உலகத்தை நினைச்சேன் சிரித்தேனென்ற செழியனோ தனது மீசையை முறுக்கி விட,முதல்ல நம்மளை நினைக்கலாம் பிறகு உலகத்தை நினைக்கலாம்..

இப்போதைக்கு நீங்க என்ன பண்றீங்க என்றால் கதவை திறந்துவிட்டு நல்லபடியா போவீங்களாம்.நான் புடவை மாற்ற வேண்டுமென்க, அதுக்கு தான் மாமா இருக்கேனே டி. நீ ஏன் கஷ்டப்படுறனு மனைவியின் முந்தானையில் கையை வைக்க அய்யோ என்ன பண்றீங்களென்று பதறினாள்...

அடியே எதுக்குடி இப்படி கத்துற?.

நீயே கத்தி நான் இங்கு தான் இருக்கிறேனென்று காட்டி கொடுத்துவிடுவ போல என்கும்போது செழியனின் செல்போனிற்கு கால் வரும் சத்தம் கேட்டது.

அநேகமா உன் அண்ணங்கார பயலுங்களில் இரண்டு பேர்ல ஒருத்தனா தானிருக்குமென்று போனை பார்க்க அதேபோல் பரத் தான் கால் பண்ணினான்.

என்னடா மாப்பு?

யோவ் மாப்பி சீக்கிரம் வாய்யா.உங்க கம்பெனியிலிருந்து வந்திருக்காங்க தங்கச்சி ரூமுக்கு போய் நீ என்ன களி கிண்டிக் கொண்டு இருக்கியா என்கவும் அதானே கொஞ்சம் என் பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்க விட மாட்டீங்களே கரடி பயலுங்களா...

இதோ வரேனென்று போனை வைத்தவன் சரி சரி சீக்கிரம் புடவை மாத்திட்டு வா.எங்க கம்பெனியிலிருந்து வந்திருக்காங்களாமென்று அங்கிருந்த கண்ணாடியில் பார்த்து தனது தலை முடியை கோதிக்கொள்ள ஷமீராவோ இப்பொழுது தான் கணவனின் உடைய ரசித்து பார்த்தாள்.

பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக கட்டிளம் காளையாக நிற்பவனை இமைக்க மறந்து ரசித்துப் பார்க்க மனைவியின் பார்வை தன் மேல் தான் இருக்கிறது என்பதை கண்ணாடியின் வழியே செழியனும் உணர்ந்து கொண்டான்.

சிறிது நொடிகள் சென்று என்னடி பாஸ்மார்க் தானா என்கவும் அதில் கலைந்தவள் அது நீங்க பரீட்சை எழுதின பேப்பரோட லட்சணத்தை பொறுத்து இருக்கு...என்னை கேட்டால் எனக்கு எப்படி தெரியும்.

ஓஓஓஓ..."அப்படியா சங்கதி"

இவ்வளவு நேரம் என்னை கடிச்சி திங்கிர போல பார்த்துகிட்டு இருந்தியே என்கவும் ஆமா இந்த அய்யா ஆப்பிள் அப்படியே கடிச்சு திங்கிறாங்க.சீக்கிரம் வெளியே போங்களென்று திரும்பிக் கொண்ட ஷமீராவிற்கு சிரிப்பு வந்தது.

அதானே இந்த பெண்கள் மனசுக்குள்ள என்ன நினைக்கிறீங்கனு உங்களுக்கு தாண்டி தெரியும்.இன்னும் பொண்ணுங்க மனசு கண்டுபிடிக்கிற வித்தையை எவனும் கண்டுபிடிக்கவில்லை.

தைரியமா சொல்றி..உன் புருஷன் எப்படி இருக்கானென்று ஒரு கையால் வேஷ்டியின் நுனியை தூக்கி பிடித்துக் கொண்டு கொஞ்சம் ஸ்டைலாக நின்று கொண்டு கேட்கவும் உண்மையிலேயே கணவனை பார்க்க ஷமீராவுக்கு திகட்ட வில்லை. ..

என்னடி மரம் போல பாத்துட்டு இருக்க?.

உனக்கு என்ன நொள்ள கண்ணா? அதுதான் லேசர் பார்வையாச்சே, 50 அடி தூரத்தில் இருந்தாலும் அசால்ட்டா கண்டு பிடித்து விடுவியே என்றவாறு மனைவியிடம் வந்தவன் அவள் தோளில் கையை வைத்து கேட்க,உண்மையை சொல்லணுமா பொய் சொல்லனுமா என்றாள்.

ம்ம் பரவாயில்லை நீ உண்மையை சொல்லு என்க...நூற்றுக்கு ஒரு 35 மார்க் போடலாம் என்றாள்...அதுவும் ஜெஸ்ட் பாஸ் தானா?.

ஜஸ்ட் பாஸ் மார்க்கிற்கா அத்தனை பேர் சுத்தி சுத்தி வராளுங்களா...அதும் இல்லாமல் கம்பெனியில வேற அந்த நாலு பொண்ணுங்க சும்மா சும்மா என்ன பாத்து சைட் அடிக்குதேடி என்று மனைவிக்கு வெறி ஏற்றினான். ..

என்ன சொன்னீங்க என்ற கோபம் வந்து எட்டி கணவனின் சட்டையை கொத்தாக பிடிக்க அடியேய் சண்டிராணி உண்மையை சொன்னேன் டி.

உன் புருஷன் அவளுங்க கண்ணுக்கு ஹேண்ட்சம் பாய் போல தெரியுறேன். அதனால சைட் அடிக்கிறாங்க பட் என் கண்ணு ரெண்டும் இந்த சண்டிராணி மேல தானே இருக்கு.அதிலிருந்து மாறுமா என்றான்.

யாருக்கு தெரியும்?

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கோ எனக்கு தெரியாதே என்றாள்.நல்லா பேச கத்துக்கிட்டடி நீ என்கவும் ஏன் இதுக்கு முன்னாடி நான் என்ன ஊமையாக இருந்தேனா?.

இல்ல எனக்கு திக்கு வாயா இல்ல நான் என்ன மௌன விரதம் இருந்தேனா இல்ல எனக்கு பேசவே தெரியாதுன்னு உங்களுக்கு யாராச்சும் சர்டிபிகேட் கொடுத்தாங்களா என்று பொங்கி எழுந்தாள்...

ஐயோ ஆத்தாஆஆஆஆ உனக்கா பேச தெரியாது 7 ஊர் வாய்டி உனக்கு. ஆனாலும் இந்த செழியனுக்கேத்த சீம சித்திராங்கி இந்த ஷமீரா தானென்று மனைவியை தன்னோடு இறுக்கி அணைத்தவன் அவள் கன்னத்தில் பற்கள் பதிய நன்கு கடித்து விட்டு அங்கிருந்து கதவை திறந்து வேகமாக சென்றான்.

வலியில் ஆஆஆ என்று கத்தியவள் ஒரு கையால் தனது வாயை மூடிக்கொண்டு அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க கன்னத்தில் பற்களின் தடயமோ அப்பட்டமாய் தெரிந்தது.

இந்த மனுஷனுக்கு கிட்ட வந்தாவே வெறி புடிச்சிருமா என்னன்னு தெரியல? எப்ப பாத்தாலும் கடிச்சு வச்சுட்டே இருக்கிறாரென்கும்போது சிரிப்பு வர,சிறிது நிமிடத்தில் வேறு புடவையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.

நேரமும் கடந்து சென்றது இன்று இரவு இருவருக்கும் சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம் குறித்து இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.

டேய் மானங்கெட்டவனே நில்லுடா என்று பாபுவை கூப்பிட ஏன் மச்சி இவ்வளவு பாசமாக கூப்பிடுற என்றான்.
பரத்தோ அவனை முறைத்துக் கொண்டு என்னடா நினைச்சுட்டு இருக்க என்கவும் ஒண்ணுமே இல்லையேடா...

டேய் இங்கு வந்ததுல இருந்து ஒரு மார்க்கமா தான் இருக்கிற..என்ன என் தங்கச்சிக்கு ரூட்டு விடுகிறாயோ என்கவும் அதான் சொல்லிட்டியே உன் தங்கச்சி என்று...

உனக்கு தங்கச்சி என்றால் எனக்கு பொண்டாட்டிடானு பாபு சிரிக்க அடப்பாவி...நாம எதுக்கு வந்தோம் நீ என்னடா வேலை பார்க்கிறனு பரத் அதிர்ந்து போய் சொல்ல,ஏன்னு தெரியலடா அவள் என் வாழ்க்கையில் வேண்டும்...ஆமா அவளை தான் பார்த்தேன்.

உண்மையாவே எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு.அப்பா அம்மா கிட்ட சொல்லப் போறேனென்ற பாபுவோ பரத்தின் தலையில் பெரிய குண்டை தூக்கிப்போட்டு விட்டு அங்கிருந்து சென்றான்...

ஆத்தாடி இவன் கூட வந்ததுக்கு பஞ்சாயத்துல நம்மளையும் கட்டி வச்சு உதை வாங்காமல் விடமாட்டான் போலயே...

பத்து நண்பனை வச்சிக்கிட்டு நல்லா இருக்கிறானுங்கள்.ஒரே ஒரு நாதாரி பயலை நண்பனா வச்சுக்கிட்டு நான் பாடுற பாடிருக்கே ஆண்டவனுக்கே பொறுக்காதென்ற பரத்தும் நண்பனின் பின்னே சென்றான்

டெல்லி ஹாஸ்பிடல்:

ஏழாவது மாடியில் லிப்ட் வந்து நிற்க இருவரும் வெளியே வந்தவர்கள் அங்கிருந்து ஆப்ரேஷன் தியேட்டரை நோக்கி போகும் போது அங்கு கூட்டமாக இருந்தது.

என்னடா இவ்வளவு கூட்டமா இருக்கென்று ருத்ரன் கேட்க நீ ஏன் அதெல்லாம் பாக்குற நம்முடைய வேலை அந்த குழந்தைக்கு ஆபரேஷன் பண்றது தானே மத்ததெல்லாம் எதுக்கு கவனம் செலுத்துற என்றவாறு நண்பனின் கவனத்தை திசை திருப்பினான்.

அது இல்லடா எதோ பெரிய இடத்து குழந்தையா?.அங்கு பார் செக்யூரிட்டி கார்ட்ஸ் எல்லாம் நிக்கிறாங்களே அந்த பக்கம் போலீஸும் இருக்கிறது பார் என்கவும் யாராயிருந்தா என்னடா?.

என்ன புதுசா பேசண்டோடு வந்தவங்களை பத்தி எல்லாம் இவ்வளவு யோசனை பண்ணுர என்க,அப்படி இல்லை இதுவரைக்கும் அவங்க வீட்ல உள்ளவங்க தான் அழுதுட்டு இருப்பாங்க...

இங்க அப்படி இல்லையே சூழ்நிலையோ ஏதோ சினிமா சூட்டிங் போலிருக்கு பாரென்று சொல்லிக்கொண்டே வந்தவனின் பார்வையில் அங்கிருந்து உருவம் பட டக்கென்று தீபனை திரும்பி பார்த்தான்.

அந்தப் பார்வை என்ன சொல்லுச்சோ தெரியவில்லை எதுவும் பேசாமல் நண்பனை அணைத்துக் கொண்டு ஆபரேஷன் தியேட்டரின் கதவை திறந்து உள்ளே போனான்.

தன்னை பிடித்திருக்கும் தீபனின் கையை உதறியவன் ஏன் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று கோபமாக கேட்க,இதுக்கும் எனக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது..

என்னால் முடியாது,நீயும் தமிழ்நாட்டுல இருக்கன்னு நான் எம் டி கிட்ட சொல்லிட்டேன்.சிங் கொஞ்சம் கூட கேட்கவே இல்லைடா.நம் தொழிலுக்கு முன்னாடி சொந்த விருப்பு வெறுப்புக்கு ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது ருத்ரா.இது நான் சொல்லித்தான் உனக்கு தெரியனுமானு தீபனும் கோபமாக கேட்டான்.

நண்பனின் கேள்வியோ உண்மையை ருத்ரனுக்கு உரைத்தது.ஆமாம் மருத்துவத் தொழிலென்று வரும்போது இங்கே சொந்த பந்தம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் நல்லவன் கெட்டவன் என்று எதுவுமில்லை.

எல்லாரையும் குணப்படுத்தி அனுப்புவது தானே தங்களின் வேலை என்று தனது கடமையை உணர்ந்து கொண்டவன் உள்ளத்தில் வெடிக்கும் எரிமலையை மறைத்துக் கொண்டு சரி போகலாமென்றான்.

தனது நண்பனின் மனம் தற்போது என்ன நிலையில் இருக்கும் என்பதை தீபனால் உணர முடிந்தது.

உள்ளே போய் பெட்டில் படுத்திருந்த குழந்தையை பார்த்தவன் பின்னர் அங்கே இருந்த பேஷண்டின் கேஸ் டீட்டையல்ஸை எடுத்து படித்துப் பார்க்க கண் முன்னால் தெரிந்த பெயரை பார்த்தவனுக்கு கொலை வெறி வந்தது.

ஆனாலும் தான் கற்றுக்கொண்ட நிதானம் அவனுக்கு கை கொடுக்க மற்ற டீடைல்ஸ் எல்லாம் படித்துப் பார்த்தவன் எல்லாம் தயாராக இருக்கானு ஒரு முறை அங்கிருந்த மருத்துவ பொருட்களையும் சரி பார்த்துக் கொண்டனர்.

கர்ணா சார் வந்துட்டு இருக்காங்க என்றவாறு நர்ஸ் உள்ளே வர சிறிது நிமிடத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஃபேமஸ் கார்டியாலஜிஸ்டும் தீபன் ருத்ரன் இவர்களின் குருவான கர்ணாவும் உள்ளே வந்தவர் ரெடி என்க எஸ் சார் என்றனர் .

ருத்ரன் ஆல் த பெஸ்ட் என்று சொல்லவும் தேங்க்யூ டாக்டர் என்றவன் ஆபரேஷன் பண்ண தொடங்கினான். நேரமும் கடந்து செல்ல குழந்தையின் தாயோ வெளியே அழுது அழுது மயங்கி விழுந்தாள்.

அவளது கணவனோ மனைவியை தூக்கிக் கொண்டு பக்கத்து ரூமில் படுக்க வைத்து அவள் கூட வேலைக்காரர்களை பாதுகாப்பாக இருக்க சொல்லிவிட்டு ஆப்ரேஷன் தியேட்டருக்கு முன்னால் தனது தாயோடு வந்து நின்று கொண்டான்...

செய்த பாவம் இப்படித்தான் வாரிசுகளை தாங்குமென்று அங்கிருந்த அமைச்சரின் பி.ஏ தனது மனதிற்குள் நினைத்துக் கொண்டவர் உடனே அதை அழித்துவிட்டார்.

தன் மனதில் நினைப்பதை தன்னுடைய முதலாளி கண்டு கொண்டான் என்றால் தனது குடும்பமே இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவான் என்கும் உண்மையை புரிய இயல்பாக இருப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டான். ..

நேரமும் கடந்து சென்றது...

ஏழு மணி நேரம் கடந்திருக்க ஆப்ரேஷன் தியேட்டரின் முன்பு எரிந்து கொண்டிருந்த லைட் ஆப் ஆனது...

வீழ்ந்தேனடி.....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top