Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சோழனூர்
விதி நம்மள பொண்ணா பொறக்க வச்சிடுச்சிங்களேண்ணி.என்ன பண்றது சொல்லுங்கள்?. மண்ணுக்குள் போற வரைக்கும் யாரோ ஒருத்தவங்களுக்காக நம்ம எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு போக வேண்டியதாக தான் இருக்கு
இதில் நீயும் நானும் மட்டும் என்ன விதிவிலக்கா?.உலகத்தில் இருக்கிற எல்லா பொம்பளைங்களின் நிலைமையும் இப்படித்தானே என்று தனது நாத்தனாரை ராணி தேற்றினார்.
நாளைக்கு ஷமீராவுக்கு பிறந்தநாள்னு உங்க அண்ணன் டிரஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கிறாரென்று ராணி சொல்ல நானும் அவளுக்காக துணியும் அவள் ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்ட டாலரும் வாங்கி வச்சிருக்கேன்.அதை எடுத்துட்டு வரேன்.உங்கள் மருமகளிடம் கொடுத்துவிடுறீங்களா அண்ணி என்கும் எஸ்தரை பார்த்தவர் இதை என்கிட்ட கேட்கணுமா?
நீங்க எடுத்துட்டு வாங்கண்ணி நான் கொடுக்கிறேன் என்க...தனது கண்ணை துடைத்துக் கொண்டு எழுந்த எஸ்தரும் கதவை திறந்து உள்ளே போனவர், கணவருக்கு தெரியாமல் பீரோவை திறந்து அதில் மகளுக்காக வாங்கி வைத்த பொருள்களை எடுத்துட்டு வந்து ராணியிடம் கொடுக்க அவரும் அதை வாங்கிக் கொண்டு சரிங்கண்ணி போயிட்டு வரேன்.நாங்க காலையில சீக்கிரமா கிளம்பிடுவோமென்று சொல்லிக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.
மனைவி பேகோடு வருவதை பார்த்த அந்தோணி என்ன ராணி அது என்க உங்க தங்கச்சி தான் கொடுத்துச்சு மாமா...
நாளைக்கு உன் மருமகளுக்கு பிறந்தநாள் இல்லையா என்கவும் உன் அண்ணன் உர்ரென்று தான் இருக்கிறானா என்க,அண்ணனை பார்க்கவில்லை.அண்ணியை ரொம்ப சத்தம் போட்டுருக்கும் போல அழுதுகிட்டு இருந்துச்சுங்க...
ம்ம் என்ன பண்றது யார் வாழ்க்கை எப்படி போகுமென்பதை நம்மளால சொல்ல முடியாது.ஆண்டவரோடு தீர்மானம் எதுவோ அதன் போல நடந்து போயிருச்சு.
அதிலிருந்து கடந்து வருது தான் புத்திசாலித்தனம்.அப்படியே பாபுக்கும் ஒரு பொண்ணை பாத்து கல்யாணத்த முடிச்சா சரியாகிடும் ராணியென்று அந்தோணி சொல்ல,திடீர்னு பொண்ணுக்கு நாம எங்க மாமா போகிறது?.
அதுதான் எனக்கும் யோசனையா இருக்கு ராணி.ஆண்டவர் என்ன புதுசாவா இனிமேல் பொண்ணை பொறக்க வைக்க போறாரு.
நமக்கென்று வரப் போகும் மருமகள் இங்குதான் எங்கையோ இருக்கும் என்றவர் சரி மா நான் போய் காருக்கு பெட்ரோல் ஃபில் பண்ணிட்டு வந்துடுறேன்.காலையிலே நம்ம கிளம்ப,பாதி வழியில் பெட்ரோல் இல்லாமல் போனால் சரிப்பட்டு வராது.இன்னும் வேற ஏதாவது வாங்கிட்டு வரணுமா என்க...ஆமாங்க பழம்லாம் எதுவும் வாங்கவில்லையே என்கவும்,அதை மதுரை கிட்ட போய் வாங்கிகிட்டா என்ன ராணி?
எப்படியும் காலை 10 இல்லை 11 மணிக்கு எல்லாம் நம்ப அங்க போயிட மாட்டோமா என்கவும்,ஆமா நீங்க சொல்றதும் சரிதான் என்றார்.
சரி சாப்பாடு எடுத்து வை நான் சாப்பிட்டுட்டு கிளம்புறேனென்று டைனிங் டேபிளில் போய் உட்கார, ராணியும் கணவருக்கு உணவை பரிமாற இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
ஏங்க சின்னவன் வருவான
சொல்லிருக்கிறேன் மச்சான் வருவாறான்னு எனக்கு தெரியாது.
அவனுக்கு ஷமீராவை ரொம்ப பிடிக்கும்.விஷயத்தை கேள்விப்பட்டதும் அப்படியா மாமா என்று சொன்னானே தவிர புள்ளை மேல கோபப்படல...
அண்ணியை தான் காச்மூச்சென்று கத்துமேன்னு சொன்னான்.அவன் அண்ணன் குணம் தெரியாமலா இருக்கும் என்க அதுவும் சரிதான் மாமா.
பின்னர் சாப்பிட்டு முடித்தவர் ஹேங்கரில் இருந்த சாவியை எடுத்து கொண்டவர் சரி நீ போய் கேட்ட திற நான் கார் எடுக்குறேன்னு சொல்லிட்டு கார் நிற்கும் இடத்திற்கு போனார்..
ராணியும் அந்த பெரிய இரும்பு கேட்டை திறந்து விட அந்தோணியும் காரை எடுத்துக்கொண்டு வெளியே போனார்.
அப்பொழுது தெரிந்த பெண்மணியோ அந்த வழியாக வந்தவர் என்ன ராணி எப்படி இருக்கிற?என்க,நல்லா இருக்கேன் கா.நீங்க நல்லா இருக்கீங்களா என்று பொதுவாக பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது நான் கேள்விப்பட்ட விஷயம் உண்மையா?.
உன்ணன் மவள் ஷமீரா ஓடிப்போயிட்டாமே அப்படியா ராணி?.
ஐயோ அக்கா அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லை.நாளைக்கு அவளுக்கு கல்யாணம் கா.தூரத்து சொந்தம் தான்.பாபுக்கும் ஷமீராவுக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருந்தது.ஆனா பாபு கடைசி நேரத்தில் தங்கச்சி போல நினைக்கிறேன் வேண்டான்னு சொல்லிட்டான்.
அவங்களும் பொண்ணு கேட்டாங்களா சரி வேற வழி இல்லாம நம்மளும் சொன்ன தேதியில் கல்யாணம் பண்ணனுமே அதுக்காக தான் சம்மதிச்சிட்டோம்...
மருமகளுக்கு சீர் செய்வதற்காக தான் உங்க கொழுந்தன் சாமாம் வாங்க போயிருக்காரு கா.நம்ம கிறிஸ்டியன் முறையில அப்படி கிடையாது.அவங்க இந்து குடும்பம் தான்.பையன் நல்ல வேலையில இருக்கிறான் ஊருக்குள்ள பெரிய தலைக்கட்டு.
சாகும் போது சாதியையும் மதத்தையும் தூக்கிட்டா போக போறோம்?கண்ணை மூடிட்டா எவன் நம்பல தூற்றுவான் எவள் நம்ப நினைத்து அழுவுறான்னு நம்ப என்ன பாத்துகிட்டா இருக்கப் போகிறோம்?.
ஒத்த பொண்ணா பொறந்தா,இப்போ பெரிய குடும்பத்தில் வாக்கப்பட வாய்ப்பு கிடைச்சிருக்கு எதுக்கு அத விடணும் சொல்லுங்கக்கா என்று அவரிடமே கேட்டார்.
அப்படியா ராணி சங்கதி...ஆனால் மக்களெல்லாம் வேற போல பேசிக்குதே என்றார்... வெறும் வாய்க்கு ஏதாச்சும் விஷயம் கிடைச்சா இப்படித்தான் அக்கா இல்லாத பொல்லாததெல்லாம் மென்னு தூப்புவாங்க.
அது என்னமோ உண்மைதான்.ஆனால் உன் நாத்தனார் தான் ரொம்ப பாவம் டி யம்மா.உன் அண்ணன் கிட்ட பிடுங்கள் பட்டுக்கிட்டு இருக்கிறா.இன்னும் உன் அண்ணன் குணம் மாறலை பாரு.
அது பிறவி குணம் அதெல்லாம் மாற்ற முடியாதுக்கா என்றார்.
சரித்தா நான் வரேனென்று அவர் செல்ல,ஊரான் வீட்டு கதைக்கு மட்டும் மூக்கை தூக்கிட்டு முதல்ல வந்துருவாங்க.இவங்க பேத்தி அப்படியே முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட போல தான் விசாரிக்க வந்துட்டாங்களென்று திட்டிக்கொண்டே ராணியும் வீட்டிற்குள் வந்தார்.
வனிச்சூர்:
ரஞ்சனி ரஞ்சனி என்று குரல் கொடுக்க, அத்தை வீடு வரைக்கும் போயிருக்குப்பா என்கும் கண்மணியிடம் டீ எடுத்துட்டு வா என்க...
இதோ பா என்று சொல்லிக் கொண்டு உள்ளே போனவள் அடுப்பில் சூடா இருந்த டீயை வடிகட்டி ஊற்றி எடுத்து வந்து தந்தையிடம் குடுக்க,நீங்களாம் குடிச்சீங்களா?
ஹம் நாங்கள் குடிச்சிட்டோம் பா.
ரெண்டு நாள் லீவுல தானே இருக்கீங்க ஷமீராவை நம்ம தோட்டத்து பக்கம் கூட்டிட்டு போய் காட்ட வேண்டியது தானே?.வீட்டுக்குள்ளார இருக்கே என்கவும் நாளைக்கு கூட்டிட்டு போறேன் பா என்றாள்.
ஏன் இன்னிக்கு நாள் நல்லா இல்லையா என்று கனலரசன் கேட்க,அவர் கேட்ட தொணியில் மூவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.சோம்பேறித்தனம் என்று சிரித்தபடியே டீ குடித்துவிட்டு தனது ரூமிற்கு சென்று விட்டார்.
அப்பா கோபமாக பேசுற போல இருக்கும் கா.ஆனா செம்மையா காமெடி பண்ணுவாரு தெரியுமா என்று கவிதா சொல்ல பார்த்தாலே தெரியுது என்று சிரித்த ஷமீராவிற்கு நம்மளுடைய அப்பா இப்படி எல்லாம் நம்மகிட்ட விளையாட்டாக கூட பேசியது இல்லையே என்ற எண்ணம் வராமலும் இல்லை.
மச்சி ஊறுனது போதும்யா இன்னொரு நாளைக்கு வரலாம்.பொழுது போயிடுச்சு பாருங்களென்று கண்ணன் சொல்ல..இரு மாப்பு இன்னும் கொஞ்ச நேரம் குளிச்சிட்டு வரோம் என்றவாறு பாபு நீச்சல் அடித்துக் கொண்டிருந்தான்..
ஏன் டா துபாய்ல தண்ணி கிண்ணிலாம் கிடையாதா?தண்ணிய பார்க்காத போல ரெண்டு பேரும் இப்படி எருமை மாட்ட விட கேவலமா ஊறுரீங்களேயென்று செழியன் கேட்க,ஹா ஹா என்று சிரித்தவர்கள் ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஊர்ல குளிக்கிற போல வராது சகல.
அது என்னவோ வாஸ்தவம் தான் பங்கு...துபாயாக இருந்தாலும் நம்ம சொந்த ஊரு போல வராது..
ஏன் பங்கு ரெண்டு பேரும் துபாய்க்கு போய் எத்தனை வருஷம் ஆகுது என்றபடியே செழியன் ஈரத் துணியை மாற்றிக் கொண்டிருந்தான்.
அஞ்சு வருஷம் இருக்குமாடா என்று பரத்திடம் கேட்க,அவனோ இருக்கும்டா...படிச்சு முடிச்ச உடனே எங்களுக்கு ஜாப் கிடைத்தது.ரெண்டு பேரும் போயிட்டோம் மச்சி.
நாங்க ரெண்டு பேரும் காலேஜ்ல ஒன்னா தான் படிச்சோம் என்க...அப்படியா எந்த காலேஜில் படித்தீர்கள் என்க, சென்னையில் இருக்கும் காலேஜ் பெயரை பரத்தும் சொன்னான்...
ஏன் மச்சி மதுரையில் கொத்தனார் வேலை இல்லைனா சென்னைக்கு போனீர்களென்று செழியன் சிரிக்க, எதேஏஏஏ...நேரம் தான் டா என்றான்.
ஆமா மாப்பி யாரு எப்போ எப்படி ஜோடி சேருவோம்னு தெரியாது இல்லையா இப்ப நீயும் தங்கச்சியும் வாழ்க்கையில் ஒன்று சேரவில்லையா என்று கண்ணன் கேட்க...ஏன்டா லூசு பயலே எல்லாத்துக்கும் என்னை தானடா எக்ஸாம்பிலா சொல்லுறதென்று முறைத்தான்...
அது அப்படி இல்லை மாப்பி...சிறந்த எடுத்துக்காட்டுக்கு உதாரணமாக உன்னை காட்டுறோம்.இது பெருமைப்பட வேண்டிய விஷயம் தானே என்று கண்ணன் சொல்ல எட்டி மிதிச்சேன்னு வச்சுக்க மூஞ்சி மொகரைலாம் பேந்திட்டு போயிடும் என்று சொல்லிக்கொண்டு செழியன் அங்கிருந்த பாறையில் ஏறி மேலே வந்தான்.
மற்ற மூவரும் கரைக்கு வந்து உடையை மாற்றிக் கொண்டவர்கள்,மாலை நேர சூரியன் மலையின் அந்தப் பக்கம் மறைவதை பார்த்து ரசித்துக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
எப்பாடி,எப்ப போன நீங்க பொழுது போய் வீட்டுக்கு வரீங்களே?.டீ எடுத்துட்டு வரட்டுமாயென்று வானதி கேட்க,கொடுமா என்றபடியே அங்கிருந்து சோபாவில் உட்கார்ந்தானுங்கள்.
மூன்று பேருக்கும் சுக்கு மல்லி வர காப்பியை கொண்டு வந்து கொடுக்க என்னம்மா இதுவென்று பாபு கேட்க,மல்லி டீ கண்ணு என்றார்.
அதைக் கேட்டவனோ எஸ்தர் அத்தையும் இதுபோல வீட்ல பொடி அரைச்சு வச்சுக்கிட்டு தான் டீ போடுவார்கள் என்றான்.
இருடா நான் வீட்டுக்கு போன் பண்ணி பேசிட்டேன் வரேனென்ற பரத் தனது போனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு பேச போக...ஏய்யா ராவுக்கு என்ன ஆக்குறதென்று வானதி கேட்கவும், நீங்க இருங்கமா நாங்க சமைக்கிறோம் என்று பாபு சொல்ல,இருக்கட்டும் பா அது என்ன ஆம்பள புள்ள அடுப்பு புகுந்து ஆக்குறது என்றார்.
அப்படியெல்லாம் இல்லைங்கம்மா ஆண் பெண் இருவருக்கும் சமையல் தெரிந்து கொள்வது ரொம்ப நல்லதுங்கம்மா...சமையல் தெரிஞ்சதால் தான் எங்களுக்கு செலவு குறையுது.இல்லன்னா ஹோட்டல்ல சாப்பிட்டே வாங்குற சம்பளத்தில் பாதி போயிடும் என்றான்.
ஆமா யா...ஆனால் உங்க ஐயா அடுப்படி வந்து எட்டிப் பார்க்க மாட்டாரு என்க, என்ன என் தலை உருளுது என்றபடியே வீட்டுக்குள் வந்த செல்லதுரை அங்கே இருக்கும் பாபுவை யார் என்று கண்களை சுருக்கி பார்க்க,ஷமீராவின் அத்தை பையன் என்று வானதி அறிமுகப்படுத்த வாப்பா நல்லா இருக்கியா என்று நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தார்.
விதி நம்மள பொண்ணா பொறக்க வச்சிடுச்சிங்களேண்ணி.என்ன பண்றது சொல்லுங்கள்?. மண்ணுக்குள் போற வரைக்கும் யாரோ ஒருத்தவங்களுக்காக நம்ம எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு போக வேண்டியதாக தான் இருக்கு
இதில் நீயும் நானும் மட்டும் என்ன விதிவிலக்கா?.உலகத்தில் இருக்கிற எல்லா பொம்பளைங்களின் நிலைமையும் இப்படித்தானே என்று தனது நாத்தனாரை ராணி தேற்றினார்.
நாளைக்கு ஷமீராவுக்கு பிறந்தநாள்னு உங்க அண்ணன் டிரஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கிறாரென்று ராணி சொல்ல நானும் அவளுக்காக துணியும் அவள் ரொம்ப நாளா ஆசைப்பட்டு கேட்ட டாலரும் வாங்கி வச்சிருக்கேன்.அதை எடுத்துட்டு வரேன்.உங்கள் மருமகளிடம் கொடுத்துவிடுறீங்களா அண்ணி என்கும் எஸ்தரை பார்த்தவர் இதை என்கிட்ட கேட்கணுமா?
நீங்க எடுத்துட்டு வாங்கண்ணி நான் கொடுக்கிறேன் என்க...தனது கண்ணை துடைத்துக் கொண்டு எழுந்த எஸ்தரும் கதவை திறந்து உள்ளே போனவர், கணவருக்கு தெரியாமல் பீரோவை திறந்து அதில் மகளுக்காக வாங்கி வைத்த பொருள்களை எடுத்துட்டு வந்து ராணியிடம் கொடுக்க அவரும் அதை வாங்கிக் கொண்டு சரிங்கண்ணி போயிட்டு வரேன்.நாங்க காலையில சீக்கிரமா கிளம்பிடுவோமென்று சொல்லிக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.
மனைவி பேகோடு வருவதை பார்த்த அந்தோணி என்ன ராணி அது என்க உங்க தங்கச்சி தான் கொடுத்துச்சு மாமா...
நாளைக்கு உன் மருமகளுக்கு பிறந்தநாள் இல்லையா என்கவும் உன் அண்ணன் உர்ரென்று தான் இருக்கிறானா என்க,அண்ணனை பார்க்கவில்லை.அண்ணியை ரொம்ப சத்தம் போட்டுருக்கும் போல அழுதுகிட்டு இருந்துச்சுங்க...
ம்ம் என்ன பண்றது யார் வாழ்க்கை எப்படி போகுமென்பதை நம்மளால சொல்ல முடியாது.ஆண்டவரோடு தீர்மானம் எதுவோ அதன் போல நடந்து போயிருச்சு.
அதிலிருந்து கடந்து வருது தான் புத்திசாலித்தனம்.அப்படியே பாபுக்கும் ஒரு பொண்ணை பாத்து கல்யாணத்த முடிச்சா சரியாகிடும் ராணியென்று அந்தோணி சொல்ல,திடீர்னு பொண்ணுக்கு நாம எங்க மாமா போகிறது?.
அதுதான் எனக்கும் யோசனையா இருக்கு ராணி.ஆண்டவர் என்ன புதுசாவா இனிமேல் பொண்ணை பொறக்க வைக்க போறாரு.
நமக்கென்று வரப் போகும் மருமகள் இங்குதான் எங்கையோ இருக்கும் என்றவர் சரி மா நான் போய் காருக்கு பெட்ரோல் ஃபில் பண்ணிட்டு வந்துடுறேன்.காலையிலே நம்ம கிளம்ப,பாதி வழியில் பெட்ரோல் இல்லாமல் போனால் சரிப்பட்டு வராது.இன்னும் வேற ஏதாவது வாங்கிட்டு வரணுமா என்க...ஆமாங்க பழம்லாம் எதுவும் வாங்கவில்லையே என்கவும்,அதை மதுரை கிட்ட போய் வாங்கிகிட்டா என்ன ராணி?
எப்படியும் காலை 10 இல்லை 11 மணிக்கு எல்லாம் நம்ப அங்க போயிட மாட்டோமா என்கவும்,ஆமா நீங்க சொல்றதும் சரிதான் என்றார்.
சரி சாப்பாடு எடுத்து வை நான் சாப்பிட்டுட்டு கிளம்புறேனென்று டைனிங் டேபிளில் போய் உட்கார, ராணியும் கணவருக்கு உணவை பரிமாற இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
ஏங்க சின்னவன் வருவான
சொல்லிருக்கிறேன் மச்சான் வருவாறான்னு எனக்கு தெரியாது.
அவனுக்கு ஷமீராவை ரொம்ப பிடிக்கும்.விஷயத்தை கேள்விப்பட்டதும் அப்படியா மாமா என்று சொன்னானே தவிர புள்ளை மேல கோபப்படல...
அண்ணியை தான் காச்மூச்சென்று கத்துமேன்னு சொன்னான்.அவன் அண்ணன் குணம் தெரியாமலா இருக்கும் என்க அதுவும் சரிதான் மாமா.
பின்னர் சாப்பிட்டு முடித்தவர் ஹேங்கரில் இருந்த சாவியை எடுத்து கொண்டவர் சரி நீ போய் கேட்ட திற நான் கார் எடுக்குறேன்னு சொல்லிட்டு கார் நிற்கும் இடத்திற்கு போனார்..
ராணியும் அந்த பெரிய இரும்பு கேட்டை திறந்து விட அந்தோணியும் காரை எடுத்துக்கொண்டு வெளியே போனார்.
அப்பொழுது தெரிந்த பெண்மணியோ அந்த வழியாக வந்தவர் என்ன ராணி எப்படி இருக்கிற?என்க,நல்லா இருக்கேன் கா.நீங்க நல்லா இருக்கீங்களா என்று பொதுவாக பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது நான் கேள்விப்பட்ட விஷயம் உண்மையா?.
உன்ணன் மவள் ஷமீரா ஓடிப்போயிட்டாமே அப்படியா ராணி?.
ஐயோ அக்கா அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லை.நாளைக்கு அவளுக்கு கல்யாணம் கா.தூரத்து சொந்தம் தான்.பாபுக்கும் ஷமீராவுக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருந்தது.ஆனா பாபு கடைசி நேரத்தில் தங்கச்சி போல நினைக்கிறேன் வேண்டான்னு சொல்லிட்டான்.
அவங்களும் பொண்ணு கேட்டாங்களா சரி வேற வழி இல்லாம நம்மளும் சொன்ன தேதியில் கல்யாணம் பண்ணனுமே அதுக்காக தான் சம்மதிச்சிட்டோம்...
மருமகளுக்கு சீர் செய்வதற்காக தான் உங்க கொழுந்தன் சாமாம் வாங்க போயிருக்காரு கா.நம்ம கிறிஸ்டியன் முறையில அப்படி கிடையாது.அவங்க இந்து குடும்பம் தான்.பையன் நல்ல வேலையில இருக்கிறான் ஊருக்குள்ள பெரிய தலைக்கட்டு.
சாகும் போது சாதியையும் மதத்தையும் தூக்கிட்டா போக போறோம்?கண்ணை மூடிட்டா எவன் நம்பல தூற்றுவான் எவள் நம்ப நினைத்து அழுவுறான்னு நம்ப என்ன பாத்துகிட்டா இருக்கப் போகிறோம்?.
ஒத்த பொண்ணா பொறந்தா,இப்போ பெரிய குடும்பத்தில் வாக்கப்பட வாய்ப்பு கிடைச்சிருக்கு எதுக்கு அத விடணும் சொல்லுங்கக்கா என்று அவரிடமே கேட்டார்.
அப்படியா ராணி சங்கதி...ஆனால் மக்களெல்லாம் வேற போல பேசிக்குதே என்றார்... வெறும் வாய்க்கு ஏதாச்சும் விஷயம் கிடைச்சா இப்படித்தான் அக்கா இல்லாத பொல்லாததெல்லாம் மென்னு தூப்புவாங்க.
அது என்னமோ உண்மைதான்.ஆனால் உன் நாத்தனார் தான் ரொம்ப பாவம் டி யம்மா.உன் அண்ணன் கிட்ட பிடுங்கள் பட்டுக்கிட்டு இருக்கிறா.இன்னும் உன் அண்ணன் குணம் மாறலை பாரு.
அது பிறவி குணம் அதெல்லாம் மாற்ற முடியாதுக்கா என்றார்.
சரித்தா நான் வரேனென்று அவர் செல்ல,ஊரான் வீட்டு கதைக்கு மட்டும் மூக்கை தூக்கிட்டு முதல்ல வந்துருவாங்க.இவங்க பேத்தி அப்படியே முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட போல தான் விசாரிக்க வந்துட்டாங்களென்று திட்டிக்கொண்டே ராணியும் வீட்டிற்குள் வந்தார்.
வனிச்சூர்:
ரஞ்சனி ரஞ்சனி என்று குரல் கொடுக்க, அத்தை வீடு வரைக்கும் போயிருக்குப்பா என்கும் கண்மணியிடம் டீ எடுத்துட்டு வா என்க...
இதோ பா என்று சொல்லிக் கொண்டு உள்ளே போனவள் அடுப்பில் சூடா இருந்த டீயை வடிகட்டி ஊற்றி எடுத்து வந்து தந்தையிடம் குடுக்க,நீங்களாம் குடிச்சீங்களா?
ஹம் நாங்கள் குடிச்சிட்டோம் பா.
ரெண்டு நாள் லீவுல தானே இருக்கீங்க ஷமீராவை நம்ம தோட்டத்து பக்கம் கூட்டிட்டு போய் காட்ட வேண்டியது தானே?.வீட்டுக்குள்ளார இருக்கே என்கவும் நாளைக்கு கூட்டிட்டு போறேன் பா என்றாள்.
ஏன் இன்னிக்கு நாள் நல்லா இல்லையா என்று கனலரசன் கேட்க,அவர் கேட்ட தொணியில் மூவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.சோம்பேறித்தனம் என்று சிரித்தபடியே டீ குடித்துவிட்டு தனது ரூமிற்கு சென்று விட்டார்.
அப்பா கோபமாக பேசுற போல இருக்கும் கா.ஆனா செம்மையா காமெடி பண்ணுவாரு தெரியுமா என்று கவிதா சொல்ல பார்த்தாலே தெரியுது என்று சிரித்த ஷமீராவிற்கு நம்மளுடைய அப்பா இப்படி எல்லாம் நம்மகிட்ட விளையாட்டாக கூட பேசியது இல்லையே என்ற எண்ணம் வராமலும் இல்லை.
மச்சி ஊறுனது போதும்யா இன்னொரு நாளைக்கு வரலாம்.பொழுது போயிடுச்சு பாருங்களென்று கண்ணன் சொல்ல..இரு மாப்பு இன்னும் கொஞ்ச நேரம் குளிச்சிட்டு வரோம் என்றவாறு பாபு நீச்சல் அடித்துக் கொண்டிருந்தான்..
ஏன் டா துபாய்ல தண்ணி கிண்ணிலாம் கிடையாதா?தண்ணிய பார்க்காத போல ரெண்டு பேரும் இப்படி எருமை மாட்ட விட கேவலமா ஊறுரீங்களேயென்று செழியன் கேட்க,ஹா ஹா என்று சிரித்தவர்கள் ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஊர்ல குளிக்கிற போல வராது சகல.
அது என்னவோ வாஸ்தவம் தான் பங்கு...துபாயாக இருந்தாலும் நம்ம சொந்த ஊரு போல வராது..
ஏன் பங்கு ரெண்டு பேரும் துபாய்க்கு போய் எத்தனை வருஷம் ஆகுது என்றபடியே செழியன் ஈரத் துணியை மாற்றிக் கொண்டிருந்தான்.
அஞ்சு வருஷம் இருக்குமாடா என்று பரத்திடம் கேட்க,அவனோ இருக்கும்டா...படிச்சு முடிச்ச உடனே எங்களுக்கு ஜாப் கிடைத்தது.ரெண்டு பேரும் போயிட்டோம் மச்சி.
நாங்க ரெண்டு பேரும் காலேஜ்ல ஒன்னா தான் படிச்சோம் என்க...அப்படியா எந்த காலேஜில் படித்தீர்கள் என்க, சென்னையில் இருக்கும் காலேஜ் பெயரை பரத்தும் சொன்னான்...
ஏன் மச்சி மதுரையில் கொத்தனார் வேலை இல்லைனா சென்னைக்கு போனீர்களென்று செழியன் சிரிக்க, எதேஏஏஏ...நேரம் தான் டா என்றான்.
ஆமா மாப்பி யாரு எப்போ எப்படி ஜோடி சேருவோம்னு தெரியாது இல்லையா இப்ப நீயும் தங்கச்சியும் வாழ்க்கையில் ஒன்று சேரவில்லையா என்று கண்ணன் கேட்க...ஏன்டா லூசு பயலே எல்லாத்துக்கும் என்னை தானடா எக்ஸாம்பிலா சொல்லுறதென்று முறைத்தான்...
அது அப்படி இல்லை மாப்பி...சிறந்த எடுத்துக்காட்டுக்கு உதாரணமாக உன்னை காட்டுறோம்.இது பெருமைப்பட வேண்டிய விஷயம் தானே என்று கண்ணன் சொல்ல எட்டி மிதிச்சேன்னு வச்சுக்க மூஞ்சி மொகரைலாம் பேந்திட்டு போயிடும் என்று சொல்லிக்கொண்டு செழியன் அங்கிருந்த பாறையில் ஏறி மேலே வந்தான்.
மற்ற மூவரும் கரைக்கு வந்து உடையை மாற்றிக் கொண்டவர்கள்,மாலை நேர சூரியன் மலையின் அந்தப் பக்கம் மறைவதை பார்த்து ரசித்துக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
எப்பாடி,எப்ப போன நீங்க பொழுது போய் வீட்டுக்கு வரீங்களே?.டீ எடுத்துட்டு வரட்டுமாயென்று வானதி கேட்க,கொடுமா என்றபடியே அங்கிருந்து சோபாவில் உட்கார்ந்தானுங்கள்.
மூன்று பேருக்கும் சுக்கு மல்லி வர காப்பியை கொண்டு வந்து கொடுக்க என்னம்மா இதுவென்று பாபு கேட்க,மல்லி டீ கண்ணு என்றார்.
அதைக் கேட்டவனோ எஸ்தர் அத்தையும் இதுபோல வீட்ல பொடி அரைச்சு வச்சுக்கிட்டு தான் டீ போடுவார்கள் என்றான்.
இருடா நான் வீட்டுக்கு போன் பண்ணி பேசிட்டேன் வரேனென்ற பரத் தனது போனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு பேச போக...ஏய்யா ராவுக்கு என்ன ஆக்குறதென்று வானதி கேட்கவும், நீங்க இருங்கமா நாங்க சமைக்கிறோம் என்று பாபு சொல்ல,இருக்கட்டும் பா அது என்ன ஆம்பள புள்ள அடுப்பு புகுந்து ஆக்குறது என்றார்.
அப்படியெல்லாம் இல்லைங்கம்மா ஆண் பெண் இருவருக்கும் சமையல் தெரிந்து கொள்வது ரொம்ப நல்லதுங்கம்மா...சமையல் தெரிஞ்சதால் தான் எங்களுக்கு செலவு குறையுது.இல்லன்னா ஹோட்டல்ல சாப்பிட்டே வாங்குற சம்பளத்தில் பாதி போயிடும் என்றான்.
ஆமா யா...ஆனால் உங்க ஐயா அடுப்படி வந்து எட்டிப் பார்க்க மாட்டாரு என்க, என்ன என் தலை உருளுது என்றபடியே வீட்டுக்குள் வந்த செல்லதுரை அங்கே இருக்கும் பாபுவை யார் என்று கண்களை சுருக்கி பார்க்க,ஷமீராவின் அத்தை பையன் என்று வானதி அறிமுகப்படுத்த வாப்பா நல்லா இருக்கியா என்று நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தார்.