New member
- Joined
- Feb 16, 2025
- Messages
- 8
- Thread Author
- #1
உன்னை விட மாட்டேன்.
விழிகளை அங்கும் இங்கும் சூழல விட்டவள் அருகினில் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்தியவள் கரங்களில் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் கவிகா.
அங்கே சென்றவள் குழாயை லேசாக திறந்து விட்டு கைப்பேசியில் இருந்த அருணா என்ற பெயரில் இருந்த எண்ணிற்கு வீடியோ அழைப்பை போட்டவள் ஒரு காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டாள்.
மறுமுனையில் அழைப்பை உடனே எடுத்தவன் “ஹலோ என் ஜில்லு என்னடி பண்றே?” என்று கிறக்கமாகக் கேட்டான்.அவன் கேட்டதைப் பார்த்து இவளோ வெட்கப்பட்டப்படி “ப்ச் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் வீட்ல இருக்கும் போது கால் பண்ணாதீங்கன்னு யாராவது பார்த்திட்டா அவ்வளவுதான்” என்றாள் மெதுவாக…
அவனோ அவள் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் “என்ன ஜில்லு பண்ணச் சொல்லுறே? உன்னை நினைச்சிட்டே இருக்கிற எனக்குத் தான் தெரியும் உன்னைப் பார்க்காமல் நான் கடத்துற ஒவ்வொரு நொடியும் என் மனசு தவிக்கிற தவிப்பு” என்றான் ஏக்கமாய்…
அவளோ அவன் சொன்னதில் மொத்தமாய் கரைந்தவள் முகம் முழுக்க புன்னகை வெட்கத்தோடு “இப்போத் தானே நேர்ல பார்த்து பேசிட்டு வந்தேன்” என்று பொய்யாக கோபம் கொண்டாள்.
உடனே அவனோ “எனக்கு உன்னை எவ்வளவு கண்ணு நிறைய பார்த்தாலும் பத்தலையே என்னச் செய்ய?’’ என்றான் ஏக்கமாய்…
“ம்ம்… சரி சரி அதான் பார்த்தாச்சுல்ல இப்போ நான் போனை கட் பண்றேன் ரொம்ப நேரமா பாத்ரூம்ல இருக்க முடியாது அப்பா வந்திடுவாரு”
அவனோ “இது பத்தாது ஜில்லு இன்னும் வேணும்” என்றான் குறுகுறு பார்வையோடு….
அவளோ “இன்னுமா?” கேள்வியோடு கேட்க…
அவனோ “ஜில்லு ஜில்லுனு” என்று உதட்டை கடித்திட அவளோ தலையை குனிந்தபடி “அருண் இது எல்லாம் சரியில்லை எத்தனை தடவை சொல்லுறது” என்றாள் சிணுங்கலாய்…
அவனோ “ஜில்லு ப்ளீஸ் நேர்லயா கேட்டேன் வீடியோலத் தானே ” என்று அவன் கெஞ்சவும் இவள் தான் போட்டிருந்த துப்பட்டாவை லேசாக விலக்கவும் அதுவரை எரிந்துக் கொண்டிருந்த மின்விளக்கு படபடவென ஒளிர்ந்து அணைந்து மிளிர பின்னால் இருந்த சோப்பு டப்பா டமால் என்று கீழே விழுந்தது.இவள் அதிர்ச்சியில் திரும்பிப் பார்க்க… அந்த சத்தத்தைக் கேட்டு வெளியில் இருந்த குமரன் “அக்கா என்னாச்சு?” என்று பதற்றமாக கேட்டான்.
ஒரு காதில் ஹெட்போனை மாட்டாமல் இருந்ததால் அவன் பேசியது செவியில் விழ இவளோ “என்னன்னு தெரியலை பாத்ரூம்ல லைட் சரியா எரிய மாட்டேங்குது” என்று பதில் கொடுத்தாள்.
உடனே அவனோ “ரெண்டு நாளா அப்படித் தான் இருக்குது நீ பார்த்து வெளியே வா அக்கா நான் அப்பாட்ட புது லைட் மாத்த சொல்லி இருக்கேன்” என்றான்.
இவளோ உருகிக் கொண்டிருந்த தன் காதலனிடம் வீடியோ அழைப்பில் “அருண் நான் அப்புறமா பேசுறேன் பாய்” என்று பதில் கேட்காமல் அழைப்பை துண்டித்தாள்.
வேகமாக குழாயை மூடி விட்டு பேருக்காக முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தாள்.அங்கே படித்துக் கொண்டிருந்த குமரன் “அக்கா கீழே விழுந்திட்டியா? டமால்னு சத்தம் கேட்டுச்சு”
“இல்லை சோப்பு டப்பாத் தான் கீழே விழுந்திடுச்சு” என்று சமையலறையில் போய் சமைக்க ஆரம்பித்தாள் கவிகா.
சமையலை முடிக்கவும் அவர்களின் அப்பா குணசேகரன் வீட்டிற்குள் வந்தார்.
வந்தவர் “கவி கவிகா” என்று அழைக்கவும் சமையலறையில் வெளியே வந்தவள் அவர் வாங்கி வந்த பொருட்கள் அடங்கிய பையை கொண்டு போய் மேசையின் மீது வைத்தவள் “குமரன் எல்லா பொருளையும் எடுத்து வைச்சிடு” என்று சொல்லிக் கொண்டே அப்பாவிற்கு குடிக்க தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
அதற்குள் குணசேகரன் முகத்தை கழுவி விட்டு தண்ணீரை குடித்தவர் பால்கனியில் போட்டிருந்த துணியை எடுத்துக் கொண்டு வந்தார்.
மூவருமாக அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கவும் குணசேகரன் “கவிகா இந்த வருஷத்தோட உன் படிப்பு முடியுதுல்ல சீக்கிரம் வரன் பார்க்கலாம்னு நினைக்கிறேன்” என்றார்.
கவிகா எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டாள்.அதைப் பார்த்த குணசேகரன் “கவி உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டுமா? நீயே சொல்லு” என்றார் ஆவலாக…
கண்களில் கண்ணீரோடு அப்பாவை பார்த்தவள் “அப்பா ஏன் என்னையும் வெளியே அனுப்பிட்டு நீங்களும் தம்பியும் மட்டும் தனியா இருந்து கஷ்டப்பட போறீங்களா? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அப்பா இப்பவே அம்மா இல்லாததுனால ஆளுக்கொரு வேலைப் பார்க்கவே சிரமமா இருக்கு இதுல என்னையும் அனுப்பிட்டா ரொம்ப சிரமப்படுவீங்க” என்றாள்.
உடனே குணசேகரன் “அதுக்காக எப்பவும் உன்னை எங்க சுயநலத்துக்காக கூடவே வைச்சிருக்க முடியாதும்மா” என்றார் கவலையாய்…
“அப்பா நான் அப்படி சொல்லலை அம்மாவை இல்லாமல் நாம இப்போத் தான் வாழப் பழகி இருக்கோம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே!” என்றாள்.
குணசேகரன் நீண்ட பெருமூச்சை விட்டவர் “உன் அம்மா இருக்கும் போது நமக்கு தெரியலை கவிகா ஒரு வீட்ல இவ்வளவு வேலை இருக்கும்னு அவளை பார்க்கும் போதெல்லாம் விளையாட்டாகவும் சில நேரங்களில் கோபமாகவும் சும்மாத் தானே இருக்கே இதைச் செஞ்சால் என்னன்னு கேட்டிருக்கிறேன் அப்போ எல்லாம் சின்னதா சிரிப்பை மட்டும் பதிலா தந்துட்டு போவாள் இப்போ அதுக்கான அர்த்தம் என்னன்னு புரிய வைச்சுட்டா உன் அம்மா எப்பவும் யாரும் இருக்கும் போது அவங்க அருமை தெரியாதுன்னு நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன்” என்று சொல்லும் போது சாப்பிட்ட உணவு உள்ளே செல்ல மறுக்க தண்ணீரைக் குடித்து உள்ளே தள்ளினார் குணசேகரன்.
குணசேகரனின் மனைவி பவானி இறந்து இன்றோடு ஆறு மாதமாகிறது.முதலில் குடும்பத்தை தனியாக சமாளிக்க திணறியவர் பின்பு கவிகாவின் உதவியோடு வீட்டையும் பார்த்து வேலைக்கும் போய் வருகிறார்.
சாப்பிட்டு முடித்து விட்டு எல்லோரும் அவரவர் அறையில் போய் படுத்தனர்.நள்ளிரவு நேரம் ஒரு மணியை தாண்டியிருந்தது.இவள் கைப்பேசியை எடுத்து தன் காதலனிடம் குறுஞ்செய்தியில் பேசிக் கொண்டிருந்தாள்.
இவளின் அறைக் கதவை முழுவதுமாக மூடாமல் சிறிது இடைவெளி விட்டு திறந்து இருந்தது.யாரோ இவளின் அறைக் கதவின் வழியாக கடந்துச் செல்வது போல் நிழலாகத் தெரிந்தது.அப்பாவாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டவள் அருணுக்கு பதிலளிக்க அவனோ அவளிடம் முத்தம் கேட்டுக் கொண்டிருந்தான்.
திரும்பவும் அதே போல் யாரோ கதவோரமாக கடந்துச் செல்வது போல் தெரிய எழுந்து வரவேற்பறையில் போய் பார்த்தாள்.அங்கே யாருமில்லை.அப்பாவின் அறையை போய் திறந்துப் பார்க்க குமரனும் அப்பாவும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.யாரோ நடந்தது போல் தெரிந்ததா? என்று ஒருமுறை நினைவுப் படுத்திக் கொண்டிருக்கும் போது சமையலறையில் இருந்த கதவை திறந்தது போல் சத்தம் கேட்டு வேகமாக போய் பார்த்தாள்.
சாத்தியிருந்த கதவை திறந்திருந்தது.ஜன்னல் கதவு மூடாமல் இருந்ததால் காற்றினால் திறந்திருக்கும் என்று எண்ணியவள் ஜன்னல் கதவை சாத்திவிட்டு சமையலறைக் கதவையையும் மூடினாள்.
இருந்தாலும் மனதிற்கு ஏதோ நெருடலாக இருக்க தன் அம்மாவின் புகைப்படத்தின் அருகினில் போய் விளக்கு ஏற்றியவள் கண்களை மூடி கும்பிட்டு விட்டு அருணிடம் நாளை நேரில் பேசுகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு படுத்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.
மறுநாள் கல்லூரிக்குச் சென்றாள் கவிகா.அங்கே அவளுக்காக வாசலில் காத்திருந்தான் அருண்.அவனருகில் இருந்த அவனுடைய நண்பன் “டேய் மச்சான் எப்படிடா இவ்வளவு அழகான பிகரை கரெக்ட் பண்ணே? எனக்கும் கொஞ்சம் ஐடியா சொல்லேன்” என்றான் ஆதாங்கமாய்…
உடனே அவனோ “ப்ச் இவ்வளவு அழகான பிகரை கரெக்ட் பண்ணி என்ன செய்ய? இதுவரைக்கும் ஒரு சின்ன ஹக்கிங் கிஸ்ஸிங் ஒன்னும் இல்லை எதாவது ஒன்னு பண்ணனும்டா” என்றான் விஷமமாக…
உடனே பக்கத்தில் இருந்த இன்னொருவன் “அந்தப் பொண்ணை சாரு பரிதாபத்தை வைச்சு கரெக்ட் பண்ணா அவ அம்மா இறந்து போனதை வைச்சு தன்னோட அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்கன்னு கதை சொல்லி காதலை வளர்த்தான்” என்று சொல்லி சிரித்தான்.
அதைக்கேட்ட அருண் “ப்ச் அமைதியா இருடா என் ஜில்லு வருது” என்றதும் அவனோ “இது எத்தனையாவது ஜில்லுடா” என்ற போது இன்னொருவன் கவலையாக “கருமம் இவனுக்கெல்லாம் அமையுது நமக்கு தான் எதுவும் சிக்க மாட்டேங்குது” என்ற போது அருண் பேசிக் கொண்டிருந்தவனின் தலையில் ஒரு அடிப் போட்டு விட்டு “ப்ச் வாயை மூடு” என்று சொல்லி விட்டு கவிகாவைப் பார்த்து “ஹாய்” என்று கைக்காட்ட அவளோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வேகமாக அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
கல்லூரி வளாகத்தில் இருந்த பெரிய கட்டிடத்தின் பின்னால் அவர்கள் எப்போதும் சந்திக்கும் இடத்திற்கு வரச் சொன்னாள்.
அங்கே அவளைக் கண்டவன் “ஹாய் என் ஜில்லு” என்று அருகில் வந்து நின்றவன் “ஏன் எப்போ பார்த்து நான் ஹாய் சொன்னாலும் பதிலே சொல்லாமல் போறே?” என்றதும்
“அருண் யாராவது பார்த்து எங்க அப்பாகிட்ட சொல்லிட்டா அப்புறம் பெரிய பிரச்சினையாகிடும் நாம இந்த மாதிரி தனியா பார்த்தே பேசிக்கலாமே” என்றாள் பயத்தோடு…
உடனே அவன் “நேத்து ஏன் போனை கட் பண்ணிட்டே?”
அவளோ பதற்றமாய் “அதெல்லாம் விடு அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறேன்னு சொல்றாங்க” என்றதும் அவனோ “அப்போ நான் யாரு?” என்றான் கோபமாக…
உடனே கவி “நான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன் அருண் எப்படியாவது நீ ஒரு வேலை செட் பண்ணிட்டு வந்து பேசு சரியா? நானும் அப்பாக்கு உதவியா இருக்கிறேன்னு சொல்லி இருக்கேன் பாவம் அப்பா எவ்வளவு சுமை தான் தாங்கிப் பாங்க உங்க வீட்டில நம்ம காதலைப் பத்தி பேசிட்டு வந்து பேசு” என்று அவள் ஆர்வமாய் சொல்லிக் கொண்டிருக்கும் போது சட்டென்று அவளே எதிர்பாரா நேரத்தில் அவளின் உதடுகளின் மேல் தன் முத்தத்தை பதிக்க வரும் நேரம் அவனே கவனிக்காத நேரத்தில் பிடித்து தள்ளினாள் கவிகா.
விழிகளை அங்கும் இங்கும் சூழல விட்டவள் அருகினில் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்தியவள் கரங்களில் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் கவிகா.
அங்கே சென்றவள் குழாயை லேசாக திறந்து விட்டு கைப்பேசியில் இருந்த அருணா என்ற பெயரில் இருந்த எண்ணிற்கு வீடியோ அழைப்பை போட்டவள் ஒரு காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டாள்.
மறுமுனையில் அழைப்பை உடனே எடுத்தவன் “ஹலோ என் ஜில்லு என்னடி பண்றே?” என்று கிறக்கமாகக் கேட்டான்.அவன் கேட்டதைப் பார்த்து இவளோ வெட்கப்பட்டப்படி “ப்ச் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் வீட்ல இருக்கும் போது கால் பண்ணாதீங்கன்னு யாராவது பார்த்திட்டா அவ்வளவுதான்” என்றாள் மெதுவாக…
அவனோ அவள் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் “என்ன ஜில்லு பண்ணச் சொல்லுறே? உன்னை நினைச்சிட்டே இருக்கிற எனக்குத் தான் தெரியும் உன்னைப் பார்க்காமல் நான் கடத்துற ஒவ்வொரு நொடியும் என் மனசு தவிக்கிற தவிப்பு” என்றான் ஏக்கமாய்…
அவளோ அவன் சொன்னதில் மொத்தமாய் கரைந்தவள் முகம் முழுக்க புன்னகை வெட்கத்தோடு “இப்போத் தானே நேர்ல பார்த்து பேசிட்டு வந்தேன்” என்று பொய்யாக கோபம் கொண்டாள்.
உடனே அவனோ “எனக்கு உன்னை எவ்வளவு கண்ணு நிறைய பார்த்தாலும் பத்தலையே என்னச் செய்ய?’’ என்றான் ஏக்கமாய்…
“ம்ம்… சரி சரி அதான் பார்த்தாச்சுல்ல இப்போ நான் போனை கட் பண்றேன் ரொம்ப நேரமா பாத்ரூம்ல இருக்க முடியாது அப்பா வந்திடுவாரு”
அவனோ “இது பத்தாது ஜில்லு இன்னும் வேணும்” என்றான் குறுகுறு பார்வையோடு….
அவளோ “இன்னுமா?” கேள்வியோடு கேட்க…
அவனோ “ஜில்லு ஜில்லுனு” என்று உதட்டை கடித்திட அவளோ தலையை குனிந்தபடி “அருண் இது எல்லாம் சரியில்லை எத்தனை தடவை சொல்லுறது” என்றாள் சிணுங்கலாய்…
அவனோ “ஜில்லு ப்ளீஸ் நேர்லயா கேட்டேன் வீடியோலத் தானே ” என்று அவன் கெஞ்சவும் இவள் தான் போட்டிருந்த துப்பட்டாவை லேசாக விலக்கவும் அதுவரை எரிந்துக் கொண்டிருந்த மின்விளக்கு படபடவென ஒளிர்ந்து அணைந்து மிளிர பின்னால் இருந்த சோப்பு டப்பா டமால் என்று கீழே விழுந்தது.இவள் அதிர்ச்சியில் திரும்பிப் பார்க்க… அந்த சத்தத்தைக் கேட்டு வெளியில் இருந்த குமரன் “அக்கா என்னாச்சு?” என்று பதற்றமாக கேட்டான்.
ஒரு காதில் ஹெட்போனை மாட்டாமல் இருந்ததால் அவன் பேசியது செவியில் விழ இவளோ “என்னன்னு தெரியலை பாத்ரூம்ல லைட் சரியா எரிய மாட்டேங்குது” என்று பதில் கொடுத்தாள்.
உடனே அவனோ “ரெண்டு நாளா அப்படித் தான் இருக்குது நீ பார்த்து வெளியே வா அக்கா நான் அப்பாட்ட புது லைட் மாத்த சொல்லி இருக்கேன்” என்றான்.
இவளோ உருகிக் கொண்டிருந்த தன் காதலனிடம் வீடியோ அழைப்பில் “அருண் நான் அப்புறமா பேசுறேன் பாய்” என்று பதில் கேட்காமல் அழைப்பை துண்டித்தாள்.
வேகமாக குழாயை மூடி விட்டு பேருக்காக முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தாள்.அங்கே படித்துக் கொண்டிருந்த குமரன் “அக்கா கீழே விழுந்திட்டியா? டமால்னு சத்தம் கேட்டுச்சு”
“இல்லை சோப்பு டப்பாத் தான் கீழே விழுந்திடுச்சு” என்று சமையலறையில் போய் சமைக்க ஆரம்பித்தாள் கவிகா.
சமையலை முடிக்கவும் அவர்களின் அப்பா குணசேகரன் வீட்டிற்குள் வந்தார்.
வந்தவர் “கவி கவிகா” என்று அழைக்கவும் சமையலறையில் வெளியே வந்தவள் அவர் வாங்கி வந்த பொருட்கள் அடங்கிய பையை கொண்டு போய் மேசையின் மீது வைத்தவள் “குமரன் எல்லா பொருளையும் எடுத்து வைச்சிடு” என்று சொல்லிக் கொண்டே அப்பாவிற்கு குடிக்க தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
அதற்குள் குணசேகரன் முகத்தை கழுவி விட்டு தண்ணீரை குடித்தவர் பால்கனியில் போட்டிருந்த துணியை எடுத்துக் கொண்டு வந்தார்.
மூவருமாக அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கவும் குணசேகரன் “கவிகா இந்த வருஷத்தோட உன் படிப்பு முடியுதுல்ல சீக்கிரம் வரன் பார்க்கலாம்னு நினைக்கிறேன்” என்றார்.
கவிகா எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டாள்.அதைப் பார்த்த குணசேகரன் “கவி உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டுமா? நீயே சொல்லு” என்றார் ஆவலாக…
கண்களில் கண்ணீரோடு அப்பாவை பார்த்தவள் “அப்பா ஏன் என்னையும் வெளியே அனுப்பிட்டு நீங்களும் தம்பியும் மட்டும் தனியா இருந்து கஷ்டப்பட போறீங்களா? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அப்பா இப்பவே அம்மா இல்லாததுனால ஆளுக்கொரு வேலைப் பார்க்கவே சிரமமா இருக்கு இதுல என்னையும் அனுப்பிட்டா ரொம்ப சிரமப்படுவீங்க” என்றாள்.
உடனே குணசேகரன் “அதுக்காக எப்பவும் உன்னை எங்க சுயநலத்துக்காக கூடவே வைச்சிருக்க முடியாதும்மா” என்றார் கவலையாய்…
“அப்பா நான் அப்படி சொல்லலை அம்மாவை இல்லாமல் நாம இப்போத் தான் வாழப் பழகி இருக்கோம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே!” என்றாள்.
குணசேகரன் நீண்ட பெருமூச்சை விட்டவர் “உன் அம்மா இருக்கும் போது நமக்கு தெரியலை கவிகா ஒரு வீட்ல இவ்வளவு வேலை இருக்கும்னு அவளை பார்க்கும் போதெல்லாம் விளையாட்டாகவும் சில நேரங்களில் கோபமாகவும் சும்மாத் தானே இருக்கே இதைச் செஞ்சால் என்னன்னு கேட்டிருக்கிறேன் அப்போ எல்லாம் சின்னதா சிரிப்பை மட்டும் பதிலா தந்துட்டு போவாள் இப்போ அதுக்கான அர்த்தம் என்னன்னு புரிய வைச்சுட்டா உன் அம்மா எப்பவும் யாரும் இருக்கும் போது அவங்க அருமை தெரியாதுன்னு நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன்” என்று சொல்லும் போது சாப்பிட்ட உணவு உள்ளே செல்ல மறுக்க தண்ணீரைக் குடித்து உள்ளே தள்ளினார் குணசேகரன்.
குணசேகரனின் மனைவி பவானி இறந்து இன்றோடு ஆறு மாதமாகிறது.முதலில் குடும்பத்தை தனியாக சமாளிக்க திணறியவர் பின்பு கவிகாவின் உதவியோடு வீட்டையும் பார்த்து வேலைக்கும் போய் வருகிறார்.
சாப்பிட்டு முடித்து விட்டு எல்லோரும் அவரவர் அறையில் போய் படுத்தனர்.நள்ளிரவு நேரம் ஒரு மணியை தாண்டியிருந்தது.இவள் கைப்பேசியை எடுத்து தன் காதலனிடம் குறுஞ்செய்தியில் பேசிக் கொண்டிருந்தாள்.
இவளின் அறைக் கதவை முழுவதுமாக மூடாமல் சிறிது இடைவெளி விட்டு திறந்து இருந்தது.யாரோ இவளின் அறைக் கதவின் வழியாக கடந்துச் செல்வது போல் நிழலாகத் தெரிந்தது.அப்பாவாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டவள் அருணுக்கு பதிலளிக்க அவனோ அவளிடம் முத்தம் கேட்டுக் கொண்டிருந்தான்.
திரும்பவும் அதே போல் யாரோ கதவோரமாக கடந்துச் செல்வது போல் தெரிய எழுந்து வரவேற்பறையில் போய் பார்த்தாள்.அங்கே யாருமில்லை.அப்பாவின் அறையை போய் திறந்துப் பார்க்க குமரனும் அப்பாவும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.யாரோ நடந்தது போல் தெரிந்ததா? என்று ஒருமுறை நினைவுப் படுத்திக் கொண்டிருக்கும் போது சமையலறையில் இருந்த கதவை திறந்தது போல் சத்தம் கேட்டு வேகமாக போய் பார்த்தாள்.
சாத்தியிருந்த கதவை திறந்திருந்தது.ஜன்னல் கதவு மூடாமல் இருந்ததால் காற்றினால் திறந்திருக்கும் என்று எண்ணியவள் ஜன்னல் கதவை சாத்திவிட்டு சமையலறைக் கதவையையும் மூடினாள்.
இருந்தாலும் மனதிற்கு ஏதோ நெருடலாக இருக்க தன் அம்மாவின் புகைப்படத்தின் அருகினில் போய் விளக்கு ஏற்றியவள் கண்களை மூடி கும்பிட்டு விட்டு அருணிடம் நாளை நேரில் பேசுகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு படுத்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.
மறுநாள் கல்லூரிக்குச் சென்றாள் கவிகா.அங்கே அவளுக்காக வாசலில் காத்திருந்தான் அருண்.அவனருகில் இருந்த அவனுடைய நண்பன் “டேய் மச்சான் எப்படிடா இவ்வளவு அழகான பிகரை கரெக்ட் பண்ணே? எனக்கும் கொஞ்சம் ஐடியா சொல்லேன்” என்றான் ஆதாங்கமாய்…
உடனே அவனோ “ப்ச் இவ்வளவு அழகான பிகரை கரெக்ட் பண்ணி என்ன செய்ய? இதுவரைக்கும் ஒரு சின்ன ஹக்கிங் கிஸ்ஸிங் ஒன்னும் இல்லை எதாவது ஒன்னு பண்ணனும்டா” என்றான் விஷமமாக…
உடனே பக்கத்தில் இருந்த இன்னொருவன் “அந்தப் பொண்ணை சாரு பரிதாபத்தை வைச்சு கரெக்ட் பண்ணா அவ அம்மா இறந்து போனதை வைச்சு தன்னோட அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்கன்னு கதை சொல்லி காதலை வளர்த்தான்” என்று சொல்லி சிரித்தான்.
அதைக்கேட்ட அருண் “ப்ச் அமைதியா இருடா என் ஜில்லு வருது” என்றதும் அவனோ “இது எத்தனையாவது ஜில்லுடா” என்ற போது இன்னொருவன் கவலையாக “கருமம் இவனுக்கெல்லாம் அமையுது நமக்கு தான் எதுவும் சிக்க மாட்டேங்குது” என்ற போது அருண் பேசிக் கொண்டிருந்தவனின் தலையில் ஒரு அடிப் போட்டு விட்டு “ப்ச் வாயை மூடு” என்று சொல்லி விட்டு கவிகாவைப் பார்த்து “ஹாய்” என்று கைக்காட்ட அவளோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வேகமாக அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
கல்லூரி வளாகத்தில் இருந்த பெரிய கட்டிடத்தின் பின்னால் அவர்கள் எப்போதும் சந்திக்கும் இடத்திற்கு வரச் சொன்னாள்.
அங்கே அவளைக் கண்டவன் “ஹாய் என் ஜில்லு” என்று அருகில் வந்து நின்றவன் “ஏன் எப்போ பார்த்து நான் ஹாய் சொன்னாலும் பதிலே சொல்லாமல் போறே?” என்றதும்
“அருண் யாராவது பார்த்து எங்க அப்பாகிட்ட சொல்லிட்டா அப்புறம் பெரிய பிரச்சினையாகிடும் நாம இந்த மாதிரி தனியா பார்த்தே பேசிக்கலாமே” என்றாள் பயத்தோடு…
உடனே அவன் “நேத்து ஏன் போனை கட் பண்ணிட்டே?”
அவளோ பதற்றமாய் “அதெல்லாம் விடு அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறேன்னு சொல்றாங்க” என்றதும் அவனோ “அப்போ நான் யாரு?” என்றான் கோபமாக…
உடனே கவி “நான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன் அருண் எப்படியாவது நீ ஒரு வேலை செட் பண்ணிட்டு வந்து பேசு சரியா? நானும் அப்பாக்கு உதவியா இருக்கிறேன்னு சொல்லி இருக்கேன் பாவம் அப்பா எவ்வளவு சுமை தான் தாங்கிப் பாங்க உங்க வீட்டில நம்ம காதலைப் பத்தி பேசிட்டு வந்து பேசு” என்று அவள் ஆர்வமாய் சொல்லிக் கொண்டிருக்கும் போது சட்டென்று அவளே எதிர்பாரா நேரத்தில் அவளின் உதடுகளின் மேல் தன் முத்தத்தை பதிக்க வரும் நேரம் அவனே கவனிக்காத நேரத்தில் பிடித்து தள்ளினாள் கவிகா.