• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Feb 16, 2025
Messages
8
உன்னை விட மாட்டேன்.


விழிகளை அங்கும் இங்கும் சூழல விட்டவள் அருகினில் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்தியவள் கரங்களில் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் கவிகா.

அங்கே சென்றவள் குழாயை லேசாக திறந்து விட்டு கைப்பேசியில் இருந்த அருணா என்ற பெயரில் இருந்த எண்ணிற்கு வீடியோ அழைப்பை போட்டவள் ஒரு காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டாள்.

மறுமுனையில் அழைப்பை உடனே எடுத்தவன் “ஹலோ என் ஜில்லு என்னடி பண்றே?” என்று கிறக்கமாகக் கேட்டான்.அவன் கேட்டதைப் பார்த்து இவளோ வெட்கப்பட்டப்படி “ப்ச் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் வீட்ல இருக்கும் போது கால் பண்ணாதீங்கன்னு யாராவது பார்த்திட்டா அவ்வளவுதான்” என்றாள் மெதுவாக…

அவனோ அவள் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் “என்ன ஜில்லு பண்ணச் சொல்லுறே? உன்னை நினைச்சிட்டே இருக்கிற எனக்குத் தான் தெரியும் உன்னைப் பார்க்காமல் நான் கடத்துற ஒவ்வொரு நொடியும் என் மனசு தவிக்கிற தவிப்பு” என்றான் ஏக்கமாய்…

அவளோ அவன் சொன்னதில் மொத்தமாய் கரைந்தவள் முகம் முழுக்க புன்னகை வெட்கத்தோடு “இப்போத் தானே நேர்ல பார்த்து பேசிட்டு வந்தேன்” என்று பொய்யாக கோபம் கொண்டாள்.

உடனே அவனோ “எனக்கு உன்னை எவ்வளவு கண்ணு நிறைய பார்த்தாலும் பத்தலையே என்னச் செய்ய?’’ என்றான் ஏக்கமாய்…

“ம்ம்… சரி சரி அதான் பார்த்தாச்சுல்ல இப்போ நான் போனை கட் பண்றேன் ரொம்ப நேரமா பாத்ரூம்ல இருக்க முடியாது அப்பா வந்திடுவாரு”

அவனோ “இது பத்தாது ஜில்லு இன்னும் வேணும்” என்றான் குறுகுறு பார்வையோடு….

அவளோ “இன்னுமா?” கேள்வியோடு கேட்க…

அவனோ “ஜில்லு ஜில்லுனு” என்று உதட்டை கடித்திட அவளோ தலையை குனிந்தபடி “அருண் இது எல்லாம் சரியில்லை எத்தனை தடவை சொல்லுறது” என்றாள் சிணுங்கலாய்…

அவனோ “ஜில்லு ப்ளீஸ் நேர்லயா கேட்டேன் வீடியோலத் தானே ” என்று அவன் கெஞ்சவும் இவள் தான் போட்டிருந்த துப்பட்டாவை லேசாக விலக்கவும் அதுவரை எரிந்துக் கொண்டிருந்த மின்விளக்கு படபடவென ஒளிர்ந்து அணைந்து மிளிர பின்னால் இருந்த சோப்பு டப்பா டமால் என்று கீழே விழுந்தது.இவள் அதிர்ச்சியில் திரும்பிப் பார்க்க… அந்த சத்தத்தைக் கேட்டு வெளியில் இருந்த குமரன் “அக்கா என்னாச்சு?” என்று பதற்றமாக கேட்டான்.

ஒரு காதில் ஹெட்போனை மாட்டாமல் இருந்ததால் அவன் பேசியது செவியில் விழ இவளோ “என்னன்னு தெரியலை பாத்ரூம்ல லைட் சரியா எரிய மாட்டேங்குது” என்று பதில் கொடுத்தாள்.

உடனே அவனோ “ரெண்டு நாளா அப்படித் தான் இருக்குது நீ பார்த்து வெளியே வா அக்கா நான் அப்பாட்ட புது லைட் மாத்த சொல்லி இருக்கேன்” என்றான்.

இவளோ உருகிக் கொண்டிருந்த தன் காதலனிடம் வீடியோ அழைப்பில் “அருண் நான் அப்புறமா பேசுறேன் பாய்” என்று பதில் கேட்காமல் அழைப்பை துண்டித்தாள்.

வேகமாக குழாயை மூடி விட்டு பேருக்காக முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தாள்.அங்கே படித்துக் கொண்டிருந்த குமரன் “அக்கா கீழே விழுந்திட்டியா? டமால்னு சத்தம் கேட்டுச்சு”
“இல்லை சோப்பு டப்பாத் தான் கீழே விழுந்திடுச்சு” என்று சமையலறையில் போய் சமைக்க ஆரம்பித்தாள் கவிகா.

சமையலை முடிக்கவும் அவர்களின் அப்பா குணசேகரன் வீட்டிற்குள் வந்தார்.

வந்தவர் “கவி கவிகா” என்று அழைக்கவும் சமையலறையில் வெளியே வந்தவள் அவர் வாங்கி வந்த பொருட்கள் அடங்கிய பையை கொண்டு போய் மேசையின் மீது வைத்தவள் “குமரன் எல்லா பொருளையும் எடுத்து வைச்சிடு” என்று சொல்லிக் கொண்டே அப்பாவிற்கு குடிக்க தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.

அதற்குள் குணசேகரன் முகத்தை கழுவி விட்டு தண்ணீரை குடித்தவர் பால்கனியில் போட்டிருந்த துணியை எடுத்துக் கொண்டு வந்தார்.

மூவருமாக அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கவும் குணசேகரன் “கவிகா இந்த வருஷத்தோட உன் படிப்பு முடியுதுல்ல சீக்கிரம் வரன் பார்க்கலாம்னு நினைக்கிறேன்” என்றார்.

கவிகா எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டாள்.அதைப் பார்த்த குணசேகரன் “கவி உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டுமா? நீயே சொல்லு” என்றார் ஆவலாக…

கண்களில் கண்ணீரோடு அப்பாவை பார்த்தவள் “அப்பா ஏன் என்னையும் வெளியே அனுப்பிட்டு நீங்களும் தம்பியும் மட்டும் தனியா இருந்து கஷ்டப்பட போறீங்களா? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அப்பா இப்பவே அம்மா இல்லாததுனால ஆளுக்கொரு வேலைப் பார்க்கவே சிரமமா இருக்கு இதுல என்னையும் அனுப்பிட்டா ரொம்ப சிரமப்படுவீங்க” என்றாள்.

உடனே குணசேகரன் “அதுக்காக எப்பவும் உன்னை எங்க சுயநலத்துக்காக கூடவே வைச்சிருக்க முடியாதும்மா” என்றார் கவலையாய்…

“அப்பா நான் அப்படி சொல்லலை அம்மாவை இல்லாமல் நாம இப்போத் தான் வாழப் பழகி இருக்கோம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே!” என்றாள்.

குணசேகரன் நீண்ட பெருமூச்சை விட்டவர் “உன் அம்மா இருக்கும் போது நமக்கு தெரியலை கவிகா ஒரு வீட்ல இவ்வளவு வேலை இருக்கும்னு அவளை பார்க்கும் போதெல்லாம் விளையாட்டாகவும் சில நேரங்களில் கோபமாகவும் சும்மாத் தானே இருக்கே இதைச் செஞ்சால் என்னன்னு கேட்டிருக்கிறேன் அப்போ எல்லாம் சின்னதா சிரிப்பை மட்டும் பதிலா தந்துட்டு போவாள் இப்போ அதுக்கான அர்த்தம் என்னன்னு புரிய வைச்சுட்டா உன் அம்மா எப்பவும் யாரும் இருக்கும் போது அவங்க அருமை தெரியாதுன்னு நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன்” என்று சொல்லும் போது சாப்பிட்ட உணவு உள்ளே செல்ல மறுக்க தண்ணீரைக் குடித்து உள்ளே தள்ளினார் குணசேகரன்.

குணசேகரனின் மனைவி பவானி இறந்து இன்றோடு ஆறு மாதமாகிறது.முதலில் குடும்பத்தை தனியாக சமாளிக்க திணறியவர் பின்பு கவிகாவின் உதவியோடு வீட்டையும் பார்த்து வேலைக்கும் போய் வருகிறார்.

சாப்பிட்டு முடித்து விட்டு எல்லோரும் அவரவர் அறையில் போய் படுத்தனர்.நள்ளிரவு நேரம் ஒரு மணியை தாண்டியிருந்தது.இவள் கைப்பேசியை எடுத்து தன் காதலனிடம் குறுஞ்செய்தியில் பேசிக் கொண்டிருந்தாள்.

இவளின் அறைக் கதவை முழுவதுமாக மூடாமல் சிறிது இடைவெளி விட்டு திறந்து இருந்தது.யாரோ இவளின் அறைக் கதவின் வழியாக கடந்துச் செல்வது போல் நிழலாகத் தெரிந்தது.அப்பாவாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டவள் அருணுக்கு பதிலளிக்க அவனோ அவளிடம் முத்தம் கேட்டுக் கொண்டிருந்தான்.


திரும்பவும் அதே போல் யாரோ கதவோரமாக கடந்துச் செல்வது போல் தெரிய எழுந்து வரவேற்பறையில் போய் பார்த்தாள்.அங்கே யாருமில்லை.அப்பாவின் அறையை போய் திறந்துப் பார்க்க குமரனும் அப்பாவும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.


இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.யாரோ நடந்தது போல் தெரிந்ததா? என்று ஒருமுறை நினைவுப் படுத்திக் கொண்டிருக்கும் போது சமையலறையில் இருந்த கதவை திறந்தது போல் சத்தம் கேட்டு வேகமாக போய் பார்த்தாள்.

சாத்தியிருந்த கதவை திறந்திருந்தது.ஜன்னல் கதவு மூடாமல் இருந்ததால் காற்றினால் திறந்திருக்கும் என்று எண்ணியவள் ஜன்னல் கதவை சாத்திவிட்டு சமையலறைக் கதவையையும் மூடினாள்.

இருந்தாலும் மனதிற்கு ஏதோ நெருடலாக இருக்க தன் அம்மாவின் புகைப்படத்தின் அருகினில் போய் விளக்கு ஏற்றியவள் கண்களை மூடி கும்பிட்டு விட்டு அருணிடம் நாளை நேரில் பேசுகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு படுத்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.

மறுநாள் கல்லூரிக்குச் சென்றாள் கவிகா.அங்கே அவளுக்காக வாசலில் காத்திருந்தான் அருண்.அவனருகில் இருந்த அவனுடைய நண்பன் “டேய் மச்சான் எப்படிடா இவ்வளவு அழகான பிகரை கரெக்ட் பண்ணே? எனக்கும் கொஞ்சம் ஐடியா சொல்லேன்” என்றான் ஆதாங்கமாய்…


உடனே அவனோ “ப்ச் இவ்வளவு அழகான பிகரை கரெக்ட் பண்ணி என்ன செய்ய? இதுவரைக்கும் ஒரு சின்ன ஹக்கிங் கிஸ்ஸிங் ஒன்னும் இல்லை எதாவது ஒன்னு பண்ணனும்டா” என்றான் விஷமமாக…

உடனே பக்கத்தில் இருந்த இன்னொருவன் “அந்தப் பொண்ணை சாரு பரிதாபத்தை வைச்சு கரெக்ட் பண்ணா அவ அம்மா இறந்து போனதை வைச்சு தன்னோட அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்கன்னு கதை சொல்லி காதலை வளர்த்தான்” என்று சொல்லி சிரித்தான்.

அதைக்கேட்ட அருண் “ப்ச் அமைதியா இருடா என் ஜில்லு வருது” என்றதும் அவனோ “இது எத்தனையாவது ஜில்லுடா” என்ற போது இன்னொருவன் கவலையாக “கருமம் இவனுக்கெல்லாம் அமையுது நமக்கு தான் எதுவும் சிக்க மாட்டேங்குது” என்ற போது அருண் பேசிக் கொண்டிருந்தவனின் தலையில் ஒரு அடிப் போட்டு விட்டு “ப்ச் வாயை மூடு” என்று சொல்லி விட்டு கவிகாவைப் பார்த்து “ஹாய்” என்று கைக்காட்ட அவளோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வேகமாக அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

கல்லூரி வளாகத்தில் இருந்த பெரிய கட்டிடத்தின் பின்னால் அவர்கள் எப்போதும் சந்திக்கும் இடத்திற்கு வரச் சொன்னாள்.

அங்கே அவளைக் கண்டவன் “ஹாய் என் ஜில்லு” என்று அருகில் வந்து நின்றவன் “ஏன் எப்போ பார்த்து நான் ஹாய் சொன்னாலும் பதிலே சொல்லாமல் போறே?” என்றதும்
“அருண் யாராவது பார்த்து எங்க அப்பாகிட்ட சொல்லிட்டா அப்புறம் பெரிய பிரச்சினையாகிடும் நாம இந்த மாதிரி தனியா பார்த்தே பேசிக்கலாமே” என்றாள் பயத்தோடு…

உடனே அவன் “நேத்து ஏன் போனை கட் பண்ணிட்டே?”

அவளோ பதற்றமாய் “அதெல்லாம் விடு அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறேன்னு சொல்றாங்க” என்றதும் அவனோ “அப்போ நான் யாரு?” என்றான் கோபமாக…

உடனே கவி “நான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன் அருண் எப்படியாவது நீ ஒரு வேலை செட் பண்ணிட்டு வந்து பேசு சரியா? நானும் அப்பாக்கு உதவியா இருக்கிறேன்னு சொல்லி இருக்கேன் பாவம் அப்பா எவ்வளவு சுமை தான் தாங்கிப் பாங்க உங்க வீட்டில நம்ம காதலைப் பத்தி பேசிட்டு வந்து பேசு” என்று அவள் ஆர்வமாய் சொல்லிக் கொண்டிருக்கும் போது சட்டென்று அவளே எதிர்பாரா நேரத்தில் அவளின் உதடுகளின் மேல் தன் முத்தத்தை பதிக்க வரும் நேரம் அவனே கவனிக்காத நேரத்தில் பிடித்து தள்ளினாள் கவிகா.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
157

அவன் இரண்டு அடி பின்னால் விழவும் நடந்தது எதுவும் அவனுக்கு நினைவுக்கு வரவில்லை.கவிகா இங்கே வெட்கப்பட்டவாறே நின்றுக் கொண்டிருந்தாள்.அவளோ நிமிர்ந்து பார்க்க அருண் கீழே கிடப்பதைப் பார்த்து அவனைப் பார்த்து பதறியவள் “என்னாச்சு அருண்?” என்ற போது “ஒன்னுமில்லை கால் ஸ்லிப் ஆயிடுச்சு” என்றவனுக்கு ஏனோ நெஞ்சை பிடித்து தள்ளியதும் அவளின் நினைவு வந்தது.



அந்த எண்ணத்தை தூற எறிந்தவன் “வா போகலாம் ஜில்லு” என்று அவள் கையில் அழுந்த முத்தமிட்டு தன்னோடு அழைத்துச் சென்றான்.


மறுநாளும் அதே போல் யாரோ கடந்து செல்வது போல் தெரிய இவள் சென்று பார்க்கும் போது யாருமில்லை.கொஞ்சம் நெஞ்சினில் பயம் வரத் தொடங்கியது.வீட்டில் இதைப் பற்றி பேசினால் தேவையில்லாத பிரச்சினை வரும் என்று அமைதியாக இருந்தாள்.நாட்கள் நகர்ந்துக் கொண்டிருக்க கவிகாவிற்கு தனியாக இருந்தால் எப்போது பார்த்தாலும் யாராவது தன்னை பார்த்துக் கொண்டு போலவும் அவளை கடந்துச் செல்வது போலவும் இருந்தது.


ஒருநாள் குணசேகரன் தன் வேலை விஷயமாக இரண்டு நாட்களுக்கு வெளியூருக்கு செல்ல இருப்பதால் கவிகாவையும் குமரனையும் வீட்டில் தனியாக இருக்க வைத்து விட்டு சென்றிருந்தார்.வேறு எங்காவது சொந்தக்கார வீட்டிற்கு அனுப்பலாம் என்றால் குமரனுக்கு தேர்வு இருந்ததால் அனுப்பாமல் வீட்டில் தனியாக இருவரையும் விட்டுச் சென்றார்.


நள்ளிரவு நேரம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அதுவரை குறுஞ்செய்தியில் பேசிக் கொண்டிருந்த அருண் கவிகாவை வீடியோ அழைப்பில் அழைத்தான்.



மெதுவாக குமரனின் அறையை எட்டிப் பார்க்க அவனின் அறையில் மின்விளக்கு அணைந்து இருந்தது.உடனே அழைப்பை எடுத்தவள் “ஹலோ” என்ற போது அவனோ அவளின் வீட்டின் வெளிக் கதவோரம் நின்றுக் கொண்டிருந்தான்.


அதைப் பார்த்து பதறிய கவிகா “அருண் இங்கே என்னப் பண்ணுறே?”


“உன்னைப் பார்க்கத் தான் வந்தேன் கதவைத் திற” என்றான்.


அவளோ “அருண் விளையாடுறியா? குமரன் இருக்கான்”


“அப்பா இல்லைத் தானே நீ மெதுவா வந்து கதவைத் திற இன்னைக்கு நான் உன்னை பார்க்கலை ப்ராஜெக்ட் விஷயமா வெளியே போய்ட்டேன் உன்னைப் பார்க்கலாம்னு ஆசையா வந்தால் என்னை ஏமாற்றாதே ஜில்லு ப்ளீஸ் ஒரே ஒரு தரிசனம் கொடு” என்று அவன் உருகவும் இவளும் சரியென்று கதவை திறக்கலாம் என்று எழுந்து மெதுவாக சத்தமில்லாமல் முதலில் குமரனின் அறைக் கதவை திறந்துப் பார்க்க அவனோ தூங்கிக் கொண்டிருந்தான்.


கொஞ்சம் தைரியம் வரவும் “இதோ வரேன்” என்று அழைப்பை துண்டித்தவள் இருட்டில் நடந்து வரவும் இவளுக்கு முகத்திற்கு அருகில் ஏதோ தட்டுப்பட்டது.



என்னவென்று யோசனையாக கையில் இருந்த கைப்பேசியின் விளக்கை எரிய வைத்துப் பார்க்க அங்கே யாரோ ஒரு பெண் முகத்தின் முன்னால் நீளமான முடியை தொங்க விட்டவாறு தூக்கில் தொங்கியபடி உடல் ஆடிக் கொண்டிருந்தது.


அதைப் பார்த்து நடுங்கியவள் “அம்மாஆஆஆஆ” என்று கத்தியபடி பின்னால் சென்று விழுந்தாள்.கையில் இருந்த கைப்பேசி கீழே விழுந்தது.அந்த உருவமோ இப்போது விழிகளை விரித்து கோரமான தன் முகத்தை அவளுக்கு காட்டியது.


அதைப் பார்த்து “அ…அம்மா பே… பேய் காப்பாத்து” என்று பயந்து கண்களை மூடினாள்.


தலையில் முக்காடு போட்டப்படி வீட்டின் வாயிற்கதவை வந்து திறந்து விட்டாள்.உள்ளே வந்த அருண் அவளருகில் வரவும் “இப்படி வா” என்று அவனை வீட்டின் பின்பக்கமாக சமையலறையின் ஜன்னல் பக்கமாக அழைத்துச் சென்றாள்.


இவனும் சிரித்துக் கொண்டே பின்னால் சென்றவன் அவளின் கையைப் பிடித்தபடியே “ஜில்லு இன்னைக்கு உன்னை நான் ஆசைத்தீர கொஞ்சட்டுமா?”என்றதும்


அவளோ திரும்பிப் பார்க்காமல் “ம்ம்…” என்றாள்.


அவனோ “எப்படினாலும் ஓகே தானே” என்ற போது “ம்ம்ம்….. நானே வேணாம்னு சொன்னாலும் நீ விடக்கூடாது சரியா?” என்ற போது அவளின் குரலின் ஒரு மாதிரி கரகரப்பாக மாறி இருந்தது.


அவனோ “என்னாச்சு ஜில்லு?” என்று அருண் திரும்பி நின்றுக் கொண்டு இருந்தவளை தன் பக்கமாக திரும்பவும் காற்றினில் போட்டிருந்த முக்காடு விலகவும் அதைப் பார்த்து அருண் அதிர்ச்சியானான்.



“நீ…நீநீ… தாமரை எப்படி வந்தே? செத்துட்டியே?” என்றான் பயமும் பதற்றதோடு…


அவளோ பெருங்குரலோடு “ஹ்ஹாஹா…நானா செத்துட்டேனா? இல்லையே உன் இதயத்துல தானே குடியிருக்கேன் உன்னோட முதல் ஜில்லு இப்போ அடுத்த ஜில்லை தேடி வர்றதுக்குள்ளே நானே உன்னைத் தேடி வந்துட்டேன்” என்று அவன் சட்டையைப் பிடித்து இழுத்து நெஞ்சினில் கீறினாள்.



அவனோ அவளைப் பிடித்து தள்ளி விட முயற்சிக்க அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவள் “நீ தானே சொன்னே நான் செத்தாலும் உன்னை நினைச்சிட்டே இருப்பேன்னு அதான் நீ என்னை ஏமாத்தி அனுபவிச்சு விட்டுப் போன பின்னாடியும் நான் தற்கொலைப் பண்ணி செத்துப்போயும் உன் கூடவே இருப்பேன்னு திரும்ப வந்து இருக்கேன்” என்று பெருங்குரல் எடுத்து கோரமாக கத்தியவள் அவளின் முகமும் அகோரமாகியது.அங்கே இருந்த மரத்தில் அவன் தலையை இழுத்துப் போய் முட்டினாள்.


இதை எல்லாம் சமையலறையின் ஓரமாய் வரவேற்பறையில் நடந்த நிகழ்வினில் பயத்தில் ஓடி வந்து ஒளிந்துக் கொண்ட கவிகா வெளியே நடந்தவற்றைக் கண்டு அப்படியே அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்து போய் நின்றாள்.


அருணிண் கழுத்தில் ஏறி அமர்ந்துக் கொண்டாள் தாமரை.அவனோ வலியில் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட கவிகா வேகமாக குமரனை உதவிக்கு அழைக்கலாம் என்று அறைக்கதவை திறந்துப் பார்த்தாள் கவிகா.


அந்த அறையில் யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியானவள் திரும்ப சமையலறையில் உள்ள ஜன்னலின் வழியே பார்த்தாள்.இப்போது கொடூரமான முகம் லேசாக குமரனின் முகமும் மாறி மாறி தெரிந்தது.


அதைப் பார்த்து இன்னும் அதிர்ச்சியிலும் பயத்தின் உச்சியிலும் சென்றவள் செய்வதறியாது “அ…அம்மா அம்மா நான் இப்போ என்ன செய்வேன்? குமரனை பார்த்துக்க சொன்னியேம்மா கடவுளே எனக்கு என்னச் செய்றதுன்னே தெரியலை” என்று புலம்பியவள் பின்பக்கமாக இருந்த கதவை திறக்கவும் அங்கே அருணின் கழுத்தில் அமர்ந்திருந்த குமரனின் கையை யாரோ அழுத்திப் பிடிப்பதைப் பார்த்தாள் கவிகா.



அங்கே குமரனின் உடலில் இருந்து தாமரை வெளியே வராமல் பிடிவாதம் பிடித்தப்படி இருக்க அங்கே அரூபமாய் இருந்த உருவம் கவிகாவின் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது.


முகம் முழுக்க வெளிச்சத்தோடு தன் மகனின் கையைப் பிடித்தப்படி நின்றிருந்த பவானி “என் பொண்ணை காப்பாற்ற நினைச்ச நேரத்துல என் பையனை நான் இழந்திட்டேன் ஆனால் மொத்தமா விட்டுத் தர மாட்டேன்” என்று பவானி வேகமாக இழுக்க குமரன் அருணிண் கழுத்திலிருந்து கீழே விழ தாமரை அவனின் கழுத்தில் அப்படியே தங்கினாள்.



விழிகள் இரண்டும் கண்ட காட்சியினை நம்ப முடியாமல் கண்ணீரை பொழிய தன் தம்பியைப் பிடித்துக் கொண்டவளுக்கு அப்பொழுது தான் நடந்து முடிந்த சில காட்சிகள் கண்முன்னே சில நொடிகள் வந்து போனது.


கவிகாவை தன் நண்பர்களிடம் அருண் தேவைக்காக வைத்திருப்பதாக சொன்னதும் அதற்கு முன்னால் அருணின் பக்கத்து வீட்டுப் பெண்ணான தாமரையை காதலிப்பது போல் ஏமாற்றி அவளை அனுபவித்து தற்கொலைக்கு தூண்டியதும் வந்து இறந்து போனதும் தெரிந்தது.



இவளை துரத்திக் கொண்ட வந்த தாமரையின் ஆன்மா நேரம் பார்த்து கவிகாவின் உடலில் சென்று அருணை பழிவாங்க காத்திருந்தது.



ஆனால் கவிகாவின் வீட்டின் தன் பிள்ளைகளுக்கு காவல் காத்துக் கொண்டிருந்த பவானியை மீறி உள்ளே வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் தாமரை.


அமாவாசையான அன்றைய இரவு கவிகா யாரோ தன்னை கவனிப்பது போல் இருப்பதை கவனித்து தன் அம்மாவின் புகைப்படத்தில் விளக்கை ஏற்றி கண்களை மூடி இருக்கும் நேரம் குமரன் ஏதேச்சையாக அறையிலிருந்து வெளியே வர அப்பொழுது கவிகாவின் உடம்பில் செல்ல முடியாமல் அவனின் உடம்பில் புகுந்தாள்.



தினமும் அருணை தொடர்ந்தவள் கல்லூரியில் கவிகாவை அவன் தொட வரும் நேரம் தன் அரூப ஆத்மாவினால் அவனையும் தள்ளியும் விட்டதும் கவிகாவிற்கு தெரிய வந்தது.


கோரமான முகத்தோடு அருணின் தோளின் மேல் அமர்ந்தபடியே கவிகாவை தாமரை முறைத்தாள்.


கவிகா அருணைப் பார்க்க அவனோ முகம் முழுக்க இரத்தத்தோடு தன் கைகளை கழுத்தில் வைத்து “வலிக்குது வலிக்குது” என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு சொன்னான்.


உடனே அருணை இரண்டு கைகள் வேகமாக வெளியே தள்ளின.அவன் கழுத்தில் அமர்ந்திருந்த தாமரையோடு எதுவும் சொல்லாமல் தனக்குள்ளே புலம்பியபடி அவன் செல்ல… வெளிச்சம் இருந்த இடத்தில் தன் இரு கரங்களையும் எடுத்து மேலே கும்பிட்டவள் “அம்மா என்னை மன்னிச்சிடுங்க நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் நம்ம குடும்பத்தை இனிமேல் நான் கவனமா பார்த்துக்கிறேன்” என்று கதறி அழுதாள்.


தன் பிள்ளைகளுக்கு எந்த பிரச்சினையும் வராதவாறு அவனை பவானி துரத்தி விட்டாள்.அந்த வெளிச்சத்தோடு பவானியின் புன்னகை முகத்தை காட்டியபடி காற்றோடு கரைந்து போனாள் அவளின் தெய்வமான அம்மா.


குமரனை மெதுவாக கைந்தாங்கலாக பிடித்து அவனின் அறையில் படுக்க வைத்தவள் அம்மாவின் புகைப்படத்திற்கு அருகில் இருந்த விளக்கில் எண்ணெய் தீர்ந்துப் போக அதில் எண்ணெய் விட்டு விளக்கை ஏற்றியவள் மனமுருகி மன்னிப்பும் கேட்டு வேண்டிக் கொண்டவள் அருணைப் பற்றிய எல்லா விவரங்களையும் கைப்பேசியில் அழித்ததோடு தன் மனதில் இருந்தும் நீக்கினாள் கவிகா.


இரண்டு நாட்கள் கழித்து கல்லூரி முழுவதும் சீனியரான அருணைப் பற்றிய பேச்சாக இருந்தது.எங்கேயோ வண்டியில் போய் விபத்து ஏற்பட்டத்தில் தலையில் அடிப்பட்டு எல்லாம் மறந்து புத்தி கலங்கிப் போய் மருத்துவமனையில் இருப்பதாக கவிகாவின் தோழி சொன்னாள்.


அதை எதுவும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் வேலையைப் பார்த்தாள் கவிகா.அருணின் கழுத்தினில் நிரந்தரமாய் இருந்தாள் தாமரை.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top