Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 207
- Thread Author
- #1
உன் விழியோடு நானாகிறேன் -14
சட்டென்று அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.அவனது இந்தச் செய்கையினில் அதிர்ச்சியாகி இருந்தவளைப் பார்த்து சிரித்த தர்ஷன் “ப்ச் விடுங்க ஆதி ஏன் இப்படி ஒரு ரியாக்ஷன்”
அவளோ அவனை முறைத்தப்படி “திடீர்னு இப்படி” தயங்கியபடி சொன்னாள்.
அவனோ “நீங்க அழுறீங்க எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை அதான் சாரி” என்றான்.
அவளோ இதற்கு மேல் அந்த பேச்சை வளர்க்காமல் அமைதியாகிப் போனாள்.
அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் “இனிமேல் அரவிந்த் பார்த்தால் இப்படி ரியாக்ட் பண்ணக் கூடாது”
அவளோ “ம்ம்..” என்றாள்.
அவனோ “என்னைப் பார்த்து பதில் சொல்லுங்க”
அவளுக்கு ஏனோ ஒருவித தயக்கமாக இருந்தது.அதற்கு மேல் அவளை கட்டாயப்படுத்தாமல் அமைதியாக இருந்தான்.
“எங்கே போகலாம்?”
“வீட்டுக்கு போகலாம்”
“எதுவும் சாப்பிடலையே ஆதி எதாவது சாப்பிட்டுட்டு போகலாம்”
“எனக்கு எதுவும் வேண்டாம் நான் வீட்டுக்கு போகனும்”
“ரெண்டு பேரும் போறோம்னு நினைச்சேன்” என்றான்.
அவனைப் பார்த்து முறைத்தவள் திரும்பவும் திருப்பிக் கொண்டவள் தனது கைப்பேசியில் தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு தான் அங்கிருந்து அவசர வேலையாக சென்று விட்டதாக குறுஞ்செய்தி அனுப்பினாள்.
இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் சிரித்தப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் அவளை.அவளோ அவனை நிமிர்ந்தே பார்க்க மாட்டேன் என்று தலையை தொங்கப் போட்டு அமர்ந்திருந்தாள்.
அவனோ “என் மேல கோபமா?”
அவளிடம் பதிலில்லை.ஆமாம் என்று புரிந்துக் கொண்டான்.அவளது கரங்களைப் பிடித்துக் கொள்ள இப்பொழுது அவளால் தடுக்க முடியவில்லை.
சிறிது நேரத்திற்கு முன்னால் இதே கரங்கள் தானே அவளுக்கு ஆதரவு அளித்தது.அவளது விரல்களை தன் கரங்களுக்குள் அடக்கிக் கொண்டவன் “நான் இந்த மாதிரி இப்போ செய்யலைன்னா ஆதி நீ அழுதுட்டே இருப்பே அன்றைக்கு இப்படித் தானே பெங்களூர்ல தனியாக இருந்தே” என்று அவன் சொல்லவும் இவளோ அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.
அவனோ அதே புன்னகை மாறா பாவனையோடு நிமிர்ந்து அவள் முகத்திற்கு அருகே வந்தவன் “எப்போ மதனோட கல்யாணத்துல நீயும் சிந்தியாவும் பேசிட்டு இருந்தீங்கல்ல அப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு ஆதி.பேசி பழகி பிடித்தக் காதலை விட இன்னொருத்தர் மேல நீ காட்டுன அன்பும் அக்கறையும் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
அதனால் அன்னையிலிருந்தே உன்னைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.என்னைப் பற்றியும் உன்னை தெரிந்துக் கொள்ள பேச வைச்சேன் இது ஒருவிதமான சுயநலமா இருக்கலாம் ஆனால் உண்மையான அன்பு கிடைக்க நான் செய்த சின்ன முயற்சி என்னைப் பற்றி முழுசா தெரிந்தால் என்னை அவாய்ட் பண்ணுடுவியோன்னு பயந்தேன் அதான் உன்னைச் சுற்றியே என்னையும் சேர்த்துக் கொண்டேன் அன்றைக்கே நீ நொருங்கிப் போன பொழுது ஆதரவாக இருக்க முயற்சித்தேன் முடிந்தததை செய்தேன் இப்போ என் கரங்களுக்குள்ளே பொத்தி வைச்சுக்கிட்டேன் இப்போ உன்னுடைய வீட்டுக்கு போக வேண்டாம் என்னுடைய வீட்டுக்கு போகலாம் என்னைப் பத்தி முழுசா சொல்லுறேன்” என்றான்.
அவன் சொல்லச் சொல்ல அவளால் எதையும் முழுதாக நம்ப முடியவில்லை.எல்லாம் எதிர்பாராமல் நடந்தது என்று மனம் சொன்னாலும் ஏதோ ஒரு நெருடல் அவள் செல்லும் இடங்களில் எல்லாம் அவனும் ஆதரவாக இருந்தான்.
அவளோ எதுவும் பேசாமல் அவன் சொன்னதைக் கேட்டு அப்படியே அதிர்ச்சியில் இருந்தாள்.
ஒரு பெரிய வாயிலைக் கொண்ட அந்த வாசலை திறக்கவும் வீட்டின் முன்னால் இருந்த பாதையே அவ்வளவு நீண்டதாக இருக்க இவர்கள் போய் இறங்கவும் காரின் கதவை திறக்க ஒருவர் வந்தார்.
அவளின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.அந்தப் பெரிய கட்டிடத்தின் உள்ளே எல்லா வசதிகளும் நிரம்பிய பெரிய நீண்ட வரவேற்பறை அங்கே விலையுயர்ந்த இருக்கைகள் அழகு சார்ந்த பொருட்கள் பெரிய அளவிலான படுக்கைககள் என்று எல்லாவற்றையும் சுத்திக் காட்டினான்.
அவன் வாழும் வாழ்க்கை முறையும் இவள் வாழும் வாழ்க்கை முறைக்கு வானத்திற்கும் பூமிக்குமான இடைவெளியாக இருந்தது.
அவனுடைய நிறுவனத்தைப் பற்றி எல்லாம் சொன்னான்.இவன் எல்லாத் துறைகளிலும் கணிசமான தொகையை முதலீடாக போட்டு அதில் வரும் லாபத்தை இன்னொரு தொழிலில் முதலீடாக்குவான்.
இப்பொழுது எந்த தொழிலில் நல்ல வளர்ச்சி என்பதை புள்ளி விவரங்களுடன் அவனுக்கு அதைப் பற்றிய விவரங்களை தயார் செய்து அனுப்பும் பணிக்கான நிறுவனத்தை தான் தர்ஷன் பெங்களூரில் வைத்திருந்தான்.அதில் தான் நேஹாவும் முக்கியமான பொறுப்பில் இருக்கிறாள்.
இவர்கள் அனுப்பும் எல்லாவற்றிருக்கும் இவன் மூதலீடு செய்வதில்லை.
அதில் ஒன்று தேர்வு செய்வதே பெரிய விஷயம். சில நேரங்களில் எந்த துறையும் தேர்ந்தெடுக்காமல் சம்பந்தமே இல்லாத இன்னொரு தொழிலில் தன் முதலீடுகளை போடுவான்.இப்படி எல்லாவற்றிலும் இவன் ஒரு பங்குதாரனாக இருப்பதால் வெளியே தெரியாத வளர்ச்சியும் செல்வாக்கும் அவனுள் இருந்தது.
காண்பது எல்லாம் கனவா? இல்லை நினைவா? என்ற நிலைமையில் இருந்தாள் ஆதிரை.எந்தவொரு பணத்திற்காக அரவிந்த் அவளை விட்டுப் பிரிந்தானோ? இன்று எல்லாம் இங்கே கொட்டி கிடந்தது தர்ஷனிடம்.
முதலில் எல்லாவற்றையும் வியப்பாக பார்த்தவள் பிறகு யோசிக்கத் தொடங்கினாள்.
கடைசியாக அவனிடம்
“இதைப் பத்தி எல்லாம் இப்போ என்கிட்ட சொல்லுறீங்க தர்ஷன்? இதை நாம விரும்ப ஆரம்பித்த போதே நீங்க சொல்லி இருக்கலாம் எல்லாம் மலைப்பாகவும் இருக்கு ஏதோ ஏமாற்றமாகவும் இருக்கு எப்படி நமக்குள்ளே ஒத்துப் போகும்னு எனக்குத் தெரியலை ஏற்கனவே ஒரு வாழ்க்கையில் தோல்வி கண்டவள் திரும்பவும் அதே தவறை செய்ய நான் விரும்பலை தர்ஷன் வியன்காவிற்கு இதுல எந்த உரிமையும் இருக்காதே! என்ன இருந்தாலும் அவள் இன்னொருவனின் குழந்தை தானே” என்று அவள் மனதில் உள்ளதை அப்படியே அப்பட்டமாகச் சொன்னாள் ஆதிரை.
இதற்கு மேலும் மறைத்து பயனில்லை என்ற நிலைமையில் அவள் இருந்தாள்.அவள் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்டவன் நீண்ட பெருமூச்சு விட்டவன் அவளை பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர வைத்தவன் அவளுக்கு அருகில் உட்கார்ந்து “ஆதி ஏன் எல்லாத்தையும் தப்பாவே நினைக்கிறே நல்ல விஷயங்களும் இருக்கு வியன்காவை நான் முறைப்படி தத்து எடுத்துக்கிறேன் அப்போ அவ என்னோட முதல் பொண்ணாக மாறிடுவா அப்புறம் அவளுக்கும் எல்லாவற்றிலும் உரிமையாகிடும் நமக்கான வித்தியாசம் பொருளாதாரத்தில் பெரிதாக இருக்கலாம் ஆனால் மனது ரெண்டும் ஒத்துப் போகுதுல்ல இந்த உலக வாழ்க்கையில் எல்லாமே சரியா இருக்கிற பொருத்தத்தை நம்மாள பார்க்கவும் முடியாது அப்படியே இருந்தாலும் அது கலைந்து போற மேகங்களாகத் தான் இருக்கும் நான் அப்படி இருக்க விரும்பலை மண்ணுக்குள்ளே ஊடுருவி போற வேராக மரமாக நிலைச்சு இருக்கனும் தான் விரும்புறேன் உன்னுடைய வாழ்க்கையை மொத்தமா விட்டுட்டு என்னோடு வரச் சொல்லலை என் வாழ்க்கை முறையில நீயும் உன் வாழ்க்கை முறையில நானும் பாதி பாதியாக வாழலாம்.அப்போ ரெண்டுபேரையும் புரிந்துக் கொள்ளுற வாழ்க்கை சரியாகும் ஏற்கனவே நாம ஆரம்பிக்க போற இந்த வாழ்க்கை ரொம்ப தாமதம் இன்னும் தாமதப்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன் பிறகு உன் முடிவை யோசிச்சு சொல்லு இப்பவும் சொல்றேன் நீ முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி என்னைப் பத்தியும் வியன்காவையும் நல்லா யோசி” என்று அவள் கரங்களில் சின்னதாக முத்தம் கொடுத்து அனுப்பினான்.
எல்லாவற்றையும் கேட்டு விட்டு அமைதியாக இருந்தாள்.
இந்த முறை அவளுடன் அவன் செல்லவில்லை.தனியாகவே தனது காரில் அவளை அனுப்பி வைத்தான்.அவளுக்கான நேரத்தை இன்னும் கொடுத்தான்.
வீட்டின் வாசலில் போய் இறங்கியவள் தனது வீட்டிற்கு செல்லவும் பின்னால் ஒருவன் அவளுடைய கையில் சாப்பாடு பையை ஒன்றை கொடுத்தான்.இவளோ என்னவென்று கேட்பதற்குள் அவளுடைய கைப்பேசி அழைத்தது.
தர்ஷன் தான் அழைத்திருந்தான்.அழைப்பினை எடுத்து “ஹலோ” என்றதும்
“நீ இன்னும் எதுவும் சாப்பிடலை அதான் ஆர்டர் போட்டேன் சாப்பிட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் யோசி வியன்காவுக்கு பிடிச்சதும் சேர்த்து ஆர்டர் செய்து இருக்கேன் மறக்காமல் கொடுத்துரு” என்றான்.
சரியென்று அழைப்பை துண்டித்தாள் ஆதிரை.அவன் அனுப்பி வைத்த பையை கையில் ஏந்தியபடி உள்ளே சென்றாள்.அப்படியே போய் யோசனையோடு மெத்தையில் சரிந்தவளுக்கு பசி எடுத்தது.
ஓரமாக வைத்திருந்த அந்த சாப்பாட்டு பையிலிருந்து தனக்கான சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டவள் திரும்பவும் தன் மெத்தையில் படுத்தவள் யோசனையில் இருந்தவளுக்கு எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கிப் போனாள் ஆதிரை.