• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

உளவியல்

Member
Joined
Sep 12, 2024
Messages
35
பெண்ணின் மனம் சம்பந்தப்பட்டது. முகநூலில் படித்ததை பகிர்கிறேன்.

இப்பொழுது கள்ள காதல் பெருகி வருகிறதே ஏன்?
கள்ள காதல் பெருகி வருவதற்கு முக்கிய காரணம் ஆண் தான்…
திருமணம் ஆன ஒரு ஆண் வேறு ஒரு பெண்ணிடம் ஏன் செல்கிறான் என்றால் அதுக்கு 99% காரணம் பாலியல் ஆசையில் தான்…
ஆனால் ஒரு பெண் வேறு ஒருவனை நாடுகிறார் என்றால் அது முழுக்க முழுக்க பாலியல் தேவைக்கு அன்று…பெண்கள் (90%) பாலியல் ஆசை களுக்காக வேறு ஒரு ஆணிடம் செல்வதில்லை..
ஒவ்வொரு பெண்ணின் உலகம் வேறு. அந்த உலகத்தை அவன் கணவன் தான் புரிந்து கொள்ள வேண்டும்…
பெண்ணின் உலகத்தை புரிந்து கொ்ள்ளாத ஆண்களால் தான் பெரும்பாலான பெண்கள், தம்மை புரிந்து கொள்ளும் அல்லது புரிந்து கொண்டதாக நடிக்கும் ஆணின் பக்கம் சாய்கிறார்கள்.
சமீபத்தில் நான் ஒரு குறும்படம் பார்த்தேன்
ஆண்விபச்சாரம் செய்யும் ஒரு ஆண் ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டுக்கு சென்கிறான். அது ஒரு ஆடம்பரமான வீடு. அற்புதமான வசதி. விலையுயர்ந்த பட்டு புடவை மற்றும் நகைகளை அணிந்த அந்த பெண்மணி அவனை புன்னகையுடன் வரவேற்கிறார். வேறு எதும் அவனிடம் பேசவில்லை. சாப்பிட வாங்க என்று சொல்லி பெரிய வாழை இலையில் அவள் கைகளால் சமைத்த விதவிதமான உணவுகளை பரிமாறி சிறு குழந்தை போல் ரசித்து ஒவ்வொரு உணவும் எப்படி இருக்கு என்று சாப்பிட்டு முடிக்கும் வரை அவனை கேட்டுகொண்டே இருக்கிறாள். அவன் சாப்பிட்டு முடித்த உடன் அவனிடம் பணத்தை கொடுத்து நீ உடனே சென்று விடு என்று கூறினாள். அவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அவன் ஆச்சரியத்துடன் கேட்கிறான்… அதற்கு அவள் கூறிய பதில்.. "எனக்கு எல்லாம் இருக்கிறது. ஆனால் என் கணவருக்கு என் கையால் சமைத்து அவர் ரசித்து பரிமாறும் பாக்கியம் எனக்கு இதுவரை அமைய வில்லை.. பாதி நா‌ள் வெளியூர். மீதி நாள் எதாவது ஒரு நிகழ்ச்சி. அப்படியே வீட்டில் சாப்பிட்டாலும் ஏனோ ஒரு அவசரத்தில் பாதி தின்றும் திங்காமல் கிளம்பி விடுவார். அதனால் தான் உன்னை அழைத்தேன். உன் வடிவில் என் கணவர் சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்த திருப்தி எனக்கு என்று அவள் கூறினாள்.
ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் பெரும் காதலும், தன்னை பாராட்ட மாட்டாரா என்ற எதிர்பார்ப்பும், தன் அழகை ரசிக்க மாட்டாரா என்ற ஆவலும் மனதில் கனன்று கொண்டிருக்கிறது.
தீப்பிழம்பாய் இருக்கும் மனதிற்கு யாராவது ஆறுதல் என்ற நீர் ஊற்றி……. "அணைக்கும்" போது அப்பெண் சூரியனை கண்ட அல்லி போல் தடம் மாறுகிறாள்.
எல்ல கள்ள காதலுக்கு பின்னே அலட்சியமான ஆண்களின் கோப வார்த்தைகள், அன்பே இல்லாத கடமைக்கு தொடுதல், பாராட்டாத மனம், சிரிப்பு இழந்து இறுகி போன முகம் என பலது இருக்கிறது.
அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும்
ஒ(இ)ரு இதயத்திற்கு
உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான உணர்விற்க்கு
காதல் என்று பெயர்..
20 வயதில் வந்தால் காதல் என்றும்
40 வயதிற்க்கு மேல் வந்தால் கள்ள காதல் என்றும் பெயர்......!!!
அம்புட்டுதான்😏😏😏
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top