• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
24


“புதுசா மேரேஜானா, அப்படி இப்படித்தான் பேசிக்கணும். இப்படிப் பேசலன்னா அவங்க அப்நார்மல் பெர்சன்ஸ்ல சேர்ந்திருவாங்க. புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேரும், அவங்க என்ன நினைப்பாங்களோன்னு பொண்ணும், அவ என்ன நினைப்பான்னு ஆணும், ஒருத்தருக்கொருத்தர் டீசன்டா நடக்கணும்னு நினைச்சி, தங்களோட உள்ளத்து உணர்வுகளை துணைகள்கிட்ட மறைச்சிப் பொய்யா வாழ்றதுக்குப் பெயர் டீசன்டானவங்க இல்ல. அப்நார்மல் பெர்சன்ஸ். கொஞ்ச நாள்ல யாருக்கும் உண்மையா இருக்க முடியாம, அந்த நடிப்பெல்லாம் வெறுத்துப்போய் சண்டையில ஆரம்பிச்சி, கடைசியில டைவர்ஸ்ல வந்து நிற்பாங்க. கல்வியை எப்படி புரிஞ்சி உணர்ந்து படிக்கணுமோ, அதுபோலத்தான் கலவியும். எப்படி என்னோட தத்துவம்? நீயும் எதுவும் சொல்றதா இருந்தா வெளிப்படையா சொல்லிரு அம்மு!” என்று கண்சிமிட்டினான்.

கணவனின் கன்னம் பிடித்து, “ஏய் முறைப்பையா! சும்மா கலக்குற போ. ஆனாலும், ஓவரா பேசுறப்பா நீ. உன்னளவுக்கு எனக்கு விவரம் பத்தாது.”

“விவரம்லாம் மச்சான் சொல்லித் தர்றேன்டா முறைப்பொண்ணு.”

“உங்களுக்கெப்படித் தெரியும்?”

“சொல்லித் தெரிவதில்லையடி மன்மதக்கலை!” என்று விளக்கமளிக்க,

“ம்... மன்மதன்தான். நான் கட்டிக்கிட்ட மன்மதன், மயக்கிவிட்டான் என்னை எனையறியாமல்.”

‘வாவ்! வாவ்! வாவ்! பாக்ஸ் செம டயலாக். கருத்தெல்லாம் களைகட்டுது’ என்று துள்ளிக்குதித்தது மனசாட்சி.

“ஸ்ஸ்... நாங்க பெர்சனலா பேசும்பொழுது வெளிய உனக்கென்ன வேலை? கெட் இன்” என்று சத்தமில்லாமல் தன் மனதைத் திட்டினாள்.

‘ஹேய் பாக்ஸ்! இந்தச் சீனுவ எனக்குள்ள முதல்ல நான்தான் கேட்டேன். எனக்கே கெட் இன்னா. எதுக்காவது என்கிட்ட ஹெல்ப்கு வருவல்ல, அப்ப இருக்குடி உனக்கு.’

“போ! போ வரும்போது பார்த்துக்கலாம்.”

“என்ன ரதி?” என்ற கணவனின் குரலில் கலைந்தவள், ‘ஹான்’ என விழிக்க, “அந்தக் கலையை நாம சேர்ந்து கத்துக்கலாம் சொன்னேன் ரதிமா. இப்ப ஒத்துக்கறேன் உனக்கு காது டமால்னு” என்றான் கேலியாய்.

“என்னது!!”

“அதான்மா. டமாலு டமாலு டும்மீலு டுமீலு. டுமீலு டுமீலு டம்மாலு டமாலு” என்றான் பாடியபடி கண்ணடித்து.

“வாவ்! டைமிங் சாங் சூப்பரா பாடுறீங்க. எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்?”

“பாடுறேன் நம்ம பர்ஸ்ட் நைட் அப்ப.”

“நோ நோ. எனக்கு இப்பவே வேணும். சும்மா ராக் மியூசிக்ல ஒரு சாங்.”

“ஏன்டி குத்து சாங் கேட்கிற நேரமா இது? இப்ப ஏழுமணி மாலை மயங்கி இருட்டு தழுவியிருக்கு. மனம் மயக்கும் பாட்டு கேட்காம குத்து சாங் கேட்கிற?”

“ப்ச்... எனக்கு தோணுறதைத்தான் கேட்க முடியும். நேரத்துக்குத் தக்க மாதிரியெல்லாம் பேசமுடியாது. ம்... பாடுங்க” என்றாள்.

சில நொடிகள் யோசித்தவன்,

1 2 3 4 கெட் ஆன் த டான்ஸ் ப்ளோர்


பூட்டிஷேக் பூட்டிஷேக் டப்பான் கூத்து கார்டு கோர்

ஷோல்டர் ஹிசக் மிசக், பாடி ஹிசக் மிசக்

ஜிம்மி ஜிம்மி ஜிம்மி ஜிம்மி ஜிம்மி ஜிம்மி சம் மோர்!”

ஒவ்வொரு வரிக்கும் அவளை இடித்தபடி கையைப் பிடித்து சுற்றுவதுபோல் செய்து பாடியபடி ஆட, அதை ரசித்தவள் நேரமாவதை உணர்ந்து, “போதும்ங்க போதும் கிளம்பலாம். நவீன் வெய்ட் பண்ணிட்டிருக்கான்.”

“அவன் வெய்ட் பண்றது இருக்கட்டும். நான் வெய்ட் பண்றேன் ரதிமா உன்னோட பதிலுக்காக?”

“எந்தப் பதில்?” என்றாள் புரியாதவளாய்.

“திரும்பவும் முதல்லயிருந்தா. நோ பேபி. நம்ம பர்ஸ்ட் நைட் சீன் இன்னும் கம்ப்ளீட்டாகல?”

“கம்ப்ளீட்டாகாததை ஏன்ங்க கட்டி இழுக்குறீங்க?”

“கேள்வி கேட்டா, பதில் பதில்னு ஒண்ணு இருக்கே அதைச் சொல்லணும். அதை விட்டுட்டு என்ன பதில் கேள்வி?”

சற்று அமைதியானவள், “அது இந்த பிரச்சனையை சால்வ் பண்ணிட்டு. அப்புறமா...” என இழுக்க,

“ஹேய்! இது செல்லாது செல்லாது. என்ன நீ ஏற்கனவே ரெ...ண்...டு... மா...ச...ம் மேலாகிருச்சி. அப்புறமும் அந்தா இந்தான்னு ஆட்டம் காட்டுற.”

‘ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோங்களேன்’ என்பதுபோல் மனைவியின் பார்வையிருக்க,

‘ம்கூம் இந்த பார்வைக்கு மயங்காதடா ஸ்ரீ. அப்புறம் உன்னை ஒரேடியா ஓரம் கட்டிருவா. மாத்தி யோசி’ என மூளை அறிவுறுத்த, “சரி நீ சொன்னதை அக்ரீ பண்ணிக்கிறேன். அதுக்கு முன்னாடி ஒரு குட்டி ஹனிமூன் பக்கத்துல இருக்கிற குற்றாலத்துல. இந்த டீல் ஓகேவா?”

“வாட்? ஹனிமூனா? இப்ப நான் தமிழ்லதான வேண்டாம்னு சொன்னேன்.”

“வாட் ஹனிமூன் இல்லமா ஹ...னி...மூ...ன். அதாவது தேன்நிலவு” என நிறுத்தி நிதானமாக சொன்னான்.

“அந்த பேச்சை விடுங்க சொன்னேன். அப்புறம் இப்படியே இறங்கி கிளம்பிடுவேன்” என மிரட்டினாள்.

“ஹ்ம்... பேசுறதுக்கு கூட தடாவா?”

“ம்... தடாதான்” என்று மனைவி சொன்னபோது, ஏனோ அவனுக்கு ஆந்திராவில் உள்ள தடா நினைவில் வந்தது. அதைக்கேட்டு அவளை நோகடிக்க மனமில்லாமல் அவளையே பார்த்திருந்தான்.

“ஏங்க குற்றாலம் இங்க இருந்து எவ்வளவு தூரம்?”

“ஃபைவ் கிலோமீட்டர்.”

“வாவ்! ஜஸ்ட் ஃபைவ் கிலோமீட்டர். ஓ மை காட்! நான் ரொம்ப தொலைவு இருக்கும்னு நினைச்சேன். அங்க நாம போகலாம்ங்க. ப்ளீஸ் ப்ளீஸ். எப்ப கூட்டிட்டுப் போறீங்க?”

மனைவியின் மகிழ்ச்சி பார்த்து, “நாளைக்கே போகலாம்” என்றான்.

திடீரென்று கணவனின் கன்னத்தில் முத்தமிட்டு, “தேங்க்யூ தேங்க்யூ. நான் இதுவரை குற்றாலம் பார்த்ததில்ல. நாளைக்கு செமயா என்ஜாய் பண்ணுவேன்” என்று குற்றாலக் கனவில் இருந்தவள் கணவன்புறம் திரும்ப, அவனின் பார்வை மாற்றம் மனதுக்குள் எதையோ உணர்த்த, அதுவரை இருந்த குதூகலம் போய், ஒருவித வெட்கம் ஆட்கொள்ள, “எ...என்ன பார்க்குறீங்க?” என தயங்கியபடி கேட்டாள்.

சட்டென்று அவளின் முகத்தை அருகே இழுத்து இதழில் முத்தமிட, முதலில் புரியாது விழித்தவள், பின் தானும் அதில் ஐக்கியமாக, உடலில் புதுவித அலைவரிசைகள் அனலடித்தது சற்று நேரத்தில் பிரித்தவன், “இன்னும் இங்க இருந்தோம். ம்கூம்... சரிவராது” என தலை உலுக்கி “போகலாம்” என்று காரை எடுத்தான் கவரை விலக்கியபடி.

மாயப்புன்னைகை ஒன்று உதடோடு நிரந்தரமாக நின்றுவிட, கணவனின் தோள் சாய்ந்தவாறு அணைத்தபடி இருக்க, அவளின் நெற்றி முடியை விரல்களால் விலக்கி மென்மையாக முத்தமிட்டு காரைக் கிளப்பினான்.

அவர்கள் அணைத்தபடி இருந்ததையும், அவன் முத்தமிட்டதையும் பார்த்திருந்த இரு விழிகள் யோசனையில் ஆழ்ந்தது.

எட்டரை மணிக்கெல்லாம் வீட்டினுள் நுழைய, அங்கே இருந்தவர்களைப் பார்த்து, “ஹேய்! என்ன இது இப்படி எல்லாரும் இங்க? பெரியவங்க மூணு பேரைத் தவிர எல்லாரும் இருக்கீங்க. மை காட்! நாங்க எதிர்பார்க்கவேயில்ல!” என்று இருவருமாக கோரஸ் குரல்களில் கேட்க,

மொத்த கூட்டமும் திரும்பியது, “யாரது?” என கேட்டபடி.

“ம்... எல்லாருக்கும் கொழுப்பு. நவீன் போன் பண்ணினப்ப கூட இதை எதிர்பார்க்கல. எங்ககிட்ட யாருமே எதுவுமே சொல்லல?” என்று குறைபட்டாள்.

“வாங்க! வாங்க! மும்பை போன பாக்கி மேடம். திருநெல்வேலி ஆலங்குளம் தான் மும்பைன்னு இதுவரை எங்களுக்குத் தெரியாம போச்சே. தெரிஞ்சிருந்தா எப்பவோ வந்திருப்போமே. அதுவுமில்லாம பெருசுங்களோட சேர்த்து, சின்ன ஜோடி ஒண்ணு இன்னும் வரல. என் கணிப்பு சரின்னா, அவங்களையும் கூடிய சீக்கிரம் இந்த மும்பையில எதிர்பார்க்கலாம்.”

“தர்ணி யூ டூ!”

“எஸ் டியர். மீ தான். அடிங்க… உன்னை” என துரத்திப் பிடித்து இரண்டு அடிகள் போட்டு, “ஏன்டி என்ன தைரியமிருந்தா, என்கிட்ட கூட சொல்லாம அப்பாவும், பொண்ணும் மட்டும் ப்ளான் பண்ணி காயை நகர்த்தியிருப்பீங்க” என்று கத்தினாள் இல்லை மொத்தினாள்.

“ஹேய் தர்ணி! எங்க ப்ளான் உனக்கெப்படித் தெரியும்?”

“ஆமா. ஊர்ல இல்லாத ப்ளான். மாமாவாலதான் கண்டுபிடிச்சதே. நீ போன பின்னாடி, அச்சோ! என் பொண்ணு மும்பை போயிட்டாளே. எப்படி இருக்காளோ தெரியலையேன்னு, உலகத்து நடிப்பெல்லாம் ஒண்ணா சேர்க்கிற மாதிரி என்ன ஆக்ட்டுன்ற. ஒரு வகையில உங்கப்பாவோட ஓவர் நடிப்புதான் காட்டிக்கொடுத்துச்சி. பாரதி அத்தைகிட்டக் கூட அவர் சொல்லல பாரேன். உன்கிட்டப் பேசவே இல்லன்னு சொல்லி, ரகசியமா பேசினதை அத்தை கண்டுபிடிச்சி கேட்ட பின்னாடி, அவங்ககிட்ட மறைக்க மனசில்லாம எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. இந்த ஸ்ரீ அண்ணா வந்தப்பவாவது எங்களுக்கு சொல்லியிருக்கலாம்ல. அவரும் சைலண்டா வந்து பொண்டாட்டியோட டூயட் பாடிட்டிருக்காரு” என்றாள்.

“ஹேய்! அது டூயட் இல்ல குத்து சாங். சூப்பரா பாடுனாங்க தெரியுமா?” என்றாள் வேகமாக.

“ஓஹ்ஹோ...” என்ற கோரஸ் குரல்களில் தான் சொன்னது புரிய, ‘அச்சோ நம்மளை கிண்டலடிச்சே காலி பண்ணிருவாங்களே!’ என்று கணவன் பின் ஒழிய,

“ஹேய் பாகீ! என்ன பாட்டு படிச்சான் என் தம்பி?” என சுகந்தியும், “அத்தை சொல்லுங்க என்ன பாட்டு?” என சுகந்தியின் பிள்ளைகள் ஒருபுறம்... “மாப்ள என்ன சாங் பாடின? நாங்களும் கேட்போம்ல” என்று ப்ரவீணும் கேட்கவும், ஸ்ரீனிவாசன் வேகமாக கைபேசியை எடுத்து யூ ட்யூப்பில் பாடலைத் தேடி போட்டுவிட்டான்.

“ஹேய்” என உற்சாகமாக குதூகலித்தாலும், “இதெல்லாம் செல்லாது மச்சான். உங்க ஒரிஜினல் வாய்ஸ்ல பாடுங்க” என்றான் நவீன்.

“இங்க என்ன காம்பெடிஷனா நடக்குது. என்னால முடியாதுப்பா. அது என் முறைப்பொண்ணுக்கான ஸ்பெஷல்” என்றான் மனைவியை பார்வையால் விழுங்கியபடி.

“டேய் மாப்ள! உன்னோட ரொமான்ஸ் ஜொள்ளுல நடுக்கூடம் நனைஞ்சிரப்போகுது” என்று தங்களின் கேலியைத் தொடர,

“அண்ணி பாருங்கண்ணி அண்ணா கிண்டலடிக்கிறாங்க.” பாகீரதி சுகந்தியிடம் புகாரளித்தாள்.

“ஏங்க புள்ளைய கிண்டலடிக்கீங்க. பாருங்க ரொம்ப வெக்கப்பட்டு ஏற்கனவே சிவந்த முகம், இன்னும் சிவக்குது” என்று அவளுக்கு ஆதரவளிப்பது போல் கால்வாரினாள்.

“அண்ணீஈஈ” என பல்லைக்கடித்து, “போங்க” என்று வேகமாக தங்கள் அறைக்குள் சென்று மறைந்தாள்.

அதைப் பார்த்திருந்த பெரியவர்களுக்கு தங்களறியாமல் சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது. மற்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்த, “இப்பத்தான் புள்ளைகளா வீடு வீடு மாதிரியிருக்கு. இத்தன காலமா யாருமில்லாம தனியா அனாதை மாதிரி இருந்துட்டோம். எங்க காலத்துக்குள்ள உங்க எல்லாரையும் இப்படிப் பாக்கமாட்டோமான்னு ஏங்கிப் போயிட்டோம். இப்ப இந்த நிமிஷத்துல எங்களுக்கு எது நடந்தாலும் நிம்மதியா போவோம்” என்றபடி கண்கலங்கினர்.

சிறியவர்களோ அவர்களின் கண்கள் துடைத்து, “இனி இது நிரந்தரம்” என்று அவர்களை சரி செய்தார்கள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
அந்நேரம் அங்கு ஜெகன் வர, “வாயா. என்ன வெளிய நின்னுட்டா? எல்லாம் நம்ம புள்ளயதேன். உள்ள வா.”

“இருமலுக்கு மருந்து வாங்கிட்டு வந்தேன் தாத்தா” என்று மருந்தை நீட்டினான்.

ஜெகன் அருகில் வந்த ஸ்ரீனிவாசன் யாருமறியாமல் நன்றி சொல்ல, புரியாமல் முழித்தவனிடம், “நான் பாகீரதி ஹஸ்பண்ட் ஸ்ரீனிவாசன்” என்று தன்னை அறிமுகப்படுத்தினான்.

புரிந்ததும், “நன்றில்லாம் எதுக்குங்க? அது எங்களுக்கே தெரியாம நடந்தது. இதுக்கெல்லாமா நன்றி சொல்வாங்க. போங்க சார்” என்றான் ஜெகன்.

மனைவி சொல்லும் பொழுதே ஒருசில முடிவு செய்திருந்தான் தான். இப்பொழுது ஜெகனை நேரில் பார்த்ததும் அதை முடிவே செய்தான். பின், “ப்ரவீண் மச்சான் இவர் என்னோட இரண்டாவது மச்சான். அதாவது உங்க தங்கச்சிக்கு தற்போதைய உடன்பிறந்த சகோதரன்” என்று புரியாதவர்களுக்கு திருப்பதி விஷயத்தை தவிர்த்து, மற்றதை புரியும்படி சொன்னான்.

“என்ன சார் நீங்க? சின்ன விஷயத்தைப் போயி பெருசு பண்ணிட்டு இருக்கீங்க.”

“நீங்க பண்ணினது பெரிய விஷயம்ங்க” என்றான். தக்க சமயத்தில் கிடைத்த அவன் அறிவுரையை மனதில் வைத்து.

“சே...சே... நான் அப்படியெல்லாம் நினைக்கல. அதுவுமில்லாம நான் உங்களைவிட சின்னவன்தான். பெயர் சொல்லியே கூப்பிடுங்க. மரியாதை வேண்டாம்” என்று சொன்னான் ஜெகன்.

“அப்படின்ற? ஓகேடா தம்பி” என்று அவனைப் பார்க்க, ஜெகனின் புன்னகையே அவனின் சம்மதத்தைச் சொன்னது. புன்னகையுடன் அவனைக் கட்டிக்கொண்டான் ஸ்ரீனிவாசன்.

ஜெகன் சென்றதும் அக்காவின் அருகில் வந்து அமர்ந்தவன், தகப்பனார் பேசியதைச் சொல்லி, “நம்ம அப்பாவா இதுன்னு தோணிச்சிக்கா. அப்படி ஒரு ஆச்சர்யம். அத்தையைச் சொன்னதும் வந்தது பாருங்க கோவம். சும்மா சித்தியை வாயால விளாசிட்டாரு.”

“நிஜமாவா? நம்பவே முடியலையேல?”

“எனக்கு இந்தச் சந்தேகம் ரொம்ப வருஷமா இருக்கு மாப்ள. உங்கப்பா மனசுல எதோ இருக்கு? அடிக்கடி டெக்ஸ்டைல்ஸ் விஷயமா வெளியூர் போறேன்னு உன்னைத் தேடித்தான் போறாரோன்னு. வெளிப்படையா சொல்லாட்டியும் சம்திங் எதோயிருக்கு புரியுது. சீக்கிரம் அந்த வெளியூர் பயண ரகச்சியத்தையும் கண்டுபிடிக்கணும்” என்றான் சுகந்தியின் கணவன்.

அதன்பின் அனைவரும் உணவு முடித்து அரட்டையடித்து படுக்க இரவு ஒரு மணியானது.

மகன் சென்றதிலிருந்து கணவனையே ஆராய்ச்சியாய்ப் பார்த்திருந்தார் மேனகா. மனைவியின் ஆராய்ச்சியை உணர்ந்த அண்ணாமலையுமே ஒன்றும் அறியாததுபோல் நடக்க, ‘எதுவரைதான் போகுது என்று பார்ப்போமே’ என்று தன் வேலையைப் பார்த்தார் மேனகா.

அதேநேரம் உள்ளே தங்கள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த ஐயப்பனிடம், “அப்பலயிருந்து பாக்கேன். எதுக்கு இப்படி குட்டிபோட்ட பூன மாதிரி நடக்குறீய?”

ஐயப்பனுக்கும் நாகலட்சுமிக்கும் எப்பொழுதுமே ஒத்துப்போனதில்லை. ஒத்துப்போனதில்லையா? அல்லது ஒத்துப்போக மனம் வைக்கவில்லையா தெரியாது. ஐயப்பன் தண்ணீருக்கு இழுத்தால், நாகு தரைக்கு இழுப்பது தான் அவர்கள் வாழ்க்கையில் அதிகம் கண்டது. ஐயப்பனுக்கு அண்ணனின் வாக்கே வேதம். படிப்பில் இருந்து திருமணம் வரை. தாய், தந்தையை விட அண்ணனே அதிகம் வளர்த்ததால் வந்த பாசமே. அவர் எதாவது செய்தால் அதற்கு தகுந்த காரணம் இருக்கும் என உறுதியாக நினைப்பவர். அதனாலேயே தன் அக்காவைவிட்டு வந்த பொழுதும் சரி, பையனை வெளியேற்றிய போதும் சரி, எதுவும் கேட்டு எதிர்த்து பேசியதில்லை.

தற்செயலாக வீட்டுக்கு வந்தவர் கண்ணில் அவர்கள் வீட்டுத் தெருவின் மூலையில் இருந்த கார் கண்ணில்பட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் வந்தார். காரின் அருகில் வரும் நேரம் கார் முன்பகுதியின் கவர் எடுக்கப்பட்டு விளக்கு போடப்பட, அது அவரின் கண்ணில்பட்டது. உள்ளே இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தில் தெரிய, முந்தைய தினம் தன் மனைவியைக் காப்பாற்றிய பெண் இருப்பதைக் கண்டார்.

‘இந்த நேரத்தில் இங்கே, அதுவும் காருக்குள் எப்படி?’ என யோசித்தாலும், அவளைக் காணும் மகிழ்ச்சியில் நடையை வேகப்படுத்தினார்.

அதற்குள் அருகில் இருந்த இளைஞனுடன் குழைந்தபடி அவன் தோள்சாய, அவனோ இவளின் முடி ஒதுக்கி நெற்றியில் முத்தமிடவும், சில வினாடிகள் குழம்பித்தான் போனார். அவர்கள் அநாகரீகமாக நடக்கவில்லை என்றாலும், அவர்களிடம் இருந்த உரிமையான அந்த நெருக்கம், ‘யார் அந்தப் பையன்?’ என்ற கேள்வியை மனம் கேட்கவும், அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தவர் சிலநொடிகள் அதிர்ந்தே போனார் ‘சீனு’ என்றபடி. அந்தக் குழப்பத்தில்தான் வீட்டினுள் நடந்து கொண்டிருக்கிறார்.

“இந்தக் கொடுமையைக் கேட்டீங்களா? உங்க அண்ணன் என்னை திட்டிட்டாரு. அதுவும் அந்த ****** உங்க அக்காவுக்கு சப்போர்ட் செஞ்சி” என நாத்தனாரை தகாத வார்தை சொல்ல,

“ஏய்! வாயை மூடு. எங்கிட்டயே இவ்வளவு பேசுறவ, வேற என்னன்ன பேசிருப்பன்னு தெரியும். அவனும் எத்தனை நாள் தான் கூடப்பிறந்தவளப் பேசுறதக் கண்டு பொறுத்திருப்பான். அதான் திருப்பி கொடுத்திருப்பான்.”

“உங்க அண்ணனுக்குன்னா சப்போட்டுக்கு வந்திருவீயளே. என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு அப்படி ஒரு சத்தம். அதுவும் வெளிய தெரியாதளவுக்கு. ஒரு செகண்ட் நானே பயந்துட்டேன்.”

“ஓ... நீயே பயப்படுற அளவு இருந்ததா?” ‘இப்படி தெரிஞ்சிருந்தா ஆரம்பத்திலேயே அடக்கி வச்சிருப்பேனே!’ என்றது அவரின் உட்குரல்.

“ம்... ஆமாங்க. சொத்து பத்தி பேசினப்ப கூட வரல. உங்க அக்காவை சும்மா கிண்டலடிச்சேன். அதுக்கு அந்த அலப்பறை” என்றாள் பாதிக்குமேல் உண்மையை மறைத்து. “அவர் திட்டும்போது அந்த வளர்மதி பொண்ணும் இருந்தா.”

‘உன்னுடைய கிண்டலின் அளவு என்னன்னு எனக்குத் தெரியாதா?’ மனதில் நினைத்ததை வெளியிடாமல், “ஓ... தனியாவா வந்தா. அவளோட அண்ணன் வரலையா?” என்றார் கேள்வியாய்.

“அவ அண்ணன் வேலைக்கு போயிட்டான் போல. இவ பஸ்ஸ்டாண்ட் வந்து வீடு தெரியாம அலைஞ்சப்ப, உங்கண்ணன் பெத்த மகராசன் வந்திருக்கான். ஏதோ லிப்ட் கேட்டு வந்தேன்னு சொன்னா. இவனோட ஏன் வந்தன்னு கேட்டு இனிமேல் அவனோட வரக்கூடாது சொல்லிட்டேன்” என்று அனைத்தையும் நீட்டி முழக்கினார்.

ஏற்கனவே அங்கு நடந்ததை தெரிந்துகொள்ள உள்ளே நுழைந்ததும், தகப்பனைப் பார்த்து, “சீனு வந்திருக்கானாப்பா?” எனக் கேட்டார். அவரும் அனைத்தையும் சொல்லியிருந்ததால், ஐயப்பன் யோசனையில் ஆழ்ந்து, ஒருசிலவற்றைப் பிரித்துக் கோர்த்து, கணக்குப் போட்டுக் கூட்டிக் கழித்து கணக்கைச் சரிபார்க்க, கணக்கு அட்சரம் பிசகாமல் சரியாக வந்தது அவள் தன் அக்கா பெண்தானென்று!

ஆனால், வெளியே சொல்லவில்லை. திரும்பவும் தனக்குள்ளே கணக்கிட்டு, இதான் சரியென்று மனைவியிடம் நல்ல பிள்ளையாக மாறி பேச, பேசிய விஷயங்கள் முதலில் தோல்வியிலும், பின் ஜெயத்திலும் முடிந்தது.

காலையில் சீக்கிரமே விழித்து எழுந்து வந்த பாகீரதி அடுப்படியில் காப்பி போட்டுக் கொண்டிருக்க, தன் பின்னிருந்து அணைத்த கரங்கள் யாரென்று சொல்லாமல் சொல்லியது. கணவனின், “அம்மு சூப்பராயிருக்க” என்ற கொஞ்சலில்.

“உங்களைவிடலாம் இல்ல. நீங்கதான் சூப்பர். என்ன இவ்வளவு காலையிலேயே எழுந்துட்டீங்க? நேத்து லேட்டாதான தூங்குனீங்க. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம்ல?”

“தூங்கியிருக்கலாம்தான். ஆனா, இதை மிஸ் பண்ணியிருப்பேனே” என்றவன் கன்னத்தோடு கன்னம் சேர்த்து உரசி, அவளின் இடுப்பைத் தன்னுடன் சேர்த்தணைத்தபடி நின்றிருந்தான்.

“ம்ம்... தள்ளிப்போங்க. இப்படி நின்னா காஃபியை நான் போட முடியாது. அதையே அது போட்டுக்கிட்டாத்தான் உண்டு. ப்ச்... விடுங்க யாராவது நம்மள இப்படிப் பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்றவள் குரல் ஒருவித லயத்தில் ஒலித்தது.

“ஹேய்! ஓவரா பண்ணாதடி. இப்போதைக்கு யாரும் வரல. அதுவும் இல்லாம உன்கிட்ட ஒரு குட் நியூஸ் சொல்லத்தான் வந்தேன். ம்... இதை இப்படி மென்மையா சொல்லக்கூடாது. ஒரு நிமிஷம்” என்று சட்டையே இல்லாமல், அணிந்திருந்த பனியனின் காலரை இருகைகளிலும் ஏற்றி விடுவதுபோல் செய்து, “ஹேய்! முறைப்பொண்ணு. நாம... சாரி நீ ஜெயிச்சிட்ட” என்று அவளைத் தூக்கிச் சுற்றினான்.

“என்ன ஜெயிச்சோம்? ஹையோ தலை சுத்துதுங்க. எதுவா இருந்தாலும் இறக்கிவிட்டுப் பேசுங்க” என்று கொஞ்சலாக கேட்க, அவளை இறக்கிவிட்டுத் தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு நின்று கொண்டான். “ஷப்பா! என்ன மிஸ்டர்.முறைப்பையா? செம ஜாலி மூட்ல இருக்கீங்க போல. இப்படியா கிச்சன்ல வச்சி அராஜகம் பண்ணுவாங்க” என்றாலும் கணவனின் அணைப்பிலிருந்து விலகவில்லை. விலகவில்லை என்பதைவிட விலகத் தோன்றவில்லை அவளுக்கு.

“நம்ம மேரேஜ் முடிஞ்ச புதுசுல ஒரு இன்டர்நேஷனல் ஆர்டருக்காக உன்கிட்ட சொல்லி, கொட்டேஷன் அனுப்பினோம். உனக்கு நியாபகம் இருக்கா? அதுக்கு மாடல் கூட நீதான் ரெடி செஞ்ச.”

“ஓஹ்... ஆமாங்க நியாபகம் இருக்கு” என்றவள் நினைவுகள் அன்றைய நாளுக்குச் சென்றது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top