• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
19

ராமுவுக்கு சரியாகும் முன், அந்த ஏற்றுமதி ஆர்டருக்கான ஆடையில் எம்ப்ராய்டரி பூவிற்கு நடுவில் சின்னதாக குழந்தை பொம்மை வைத்து அயனிங் செய்ய, ஏற்கனவே கொடுத்த மாடலை விட இது அற்புதமாக வர, ஆர்டர் கொடுத்த நிறுவனத்துக்கு கூட்டுத் தொலைபேசி அழைப்பு (கான்பரன்ஸ் கால்) மூலம் புது மாடல் ஆடைக்குச் சம்மதிக்க வைத்து, அதை அனுப்பி சேர்ந்த பின்னரே ஆசுவாசமூச்சி விட்டார்கள்.

அந்தத் தவறு எப்படி நடந்ததென்று தெரிய வேண்டியிருந்தது. அப்பொழுதுதான் தன் தந்தையின் தனிப்பட்ட மடிக்கணிணி நினைவு வந்து அதைச் சோதித்துப் பார்க்க, மை ஃபைல் என்ற பகுதி திறக்க முடியாதிருக்க, ஸ்ரீனிவாசன் சொன்ன, ‘அம்மு, ரதி, இல்லன்னா அம்முரதின்னு போடுங்க” என்றதும், “அம்முரதி” அழகாய் மலர்ந்து வழிவிட, அதில் அசல் ஆவணம் (ஒரிஜினல் டாக்குமென்ட்) இருந்தது. அதன்பின் கார்மெண்ட்ஸ் மேலாளர் எல்லாவற்றையும் திட்டமிட்டே அழித்திருப்பது தெரிய, சிலபல உருட்டல், மிரட்டல், அடிகளுக்குப் பிறகு தன்னுடைய தவறை மறைக்க, அனைத்தையும் அழித்து மாற்றியதை ஒத்துக்கொள்ளவும், அபராதத்துடன் வேலை நிறுத்தமும் செய்தார்கள்.

ராம் முழுமையாக கண்திறந்து பேச, முழுமையாக பனிரெண்டு நாள்களானது.

அதற்குள் அந்த வெளிநாட்டு ஏற்றுமதிக்கான ஆடையில், எம்ப்ராய்டரி பூவிற்கு நடுவில் சின்னதாக பேபி டால் வைத்து அயனிங் செய்ய, ஏற்கனவே கொடுத்த கொட்டேஷன் மாடலை விட இது அற்புதமாக வர, ஆர்டர் கொடுத்த நிறுவனம் கான்பரன்ஸ் ஹால் போட்டு புது மாடலுக்கு சம்மதிக்கவைத்து அதை அனுப்பி, சரியாக சேர்ந்த பின்னரே ஆசுவாசமூச்சி விட்டார்கள்.

அந்த தவறு எப்படி நடந்ததென்று தெரிய வேண்டியிருந்தது. அப்பொழுதுதான் தன் தந்தையின் ப்ரைவேட் லேப்டாப் நினைவு வந்து அதை சோதனை செய்தார்கள். அதில் மை ஃபைல் திறக்காமலிருக்க, ஸ்ரீனிவாசனின் அறிவுரையில், “அம்மு, ரதி இல்லன்னா, அம்முரதின்னு போடுங்க” என்றதும் “அம்முரதி” அழகாய் மலர்ந்து வழிவிட, அதில், அசல் ஆவணங்கள் (ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸ்) இருந்தது. அதன்பின் மேனேஜர் எல்லாவற்றையும் திட்டம் போட்டே அழித்திருப்பது தெரிய, சில பல உருட்டல், மிரட்டல், அடிகளுக்குப் பிறகு தன்னுடைய தவறை மறைக்க அனைத்தையும் அழித்து மாற்றியதை ஒத்துக்கொள்ள அபராதத்துடன் வேலை நிறுத்தம் செய்தார்கள்.

கண்விழித்த ராமச்சந்திரன் கண்திறந்து பார்த்த முதல் உறவே தன் மகளாயிருக்க, அவளை கைநீட்டி அழைத்ததும், ஓடி வந்து கைகளுக்குள் சரணடைந்தவள், “ஐம் சாரிப்பா. நான் உங்களைப் புரிஞ்சிக்கவே இல்லைல்ல. ஐ லவ் யூப்பா” என்றாள் கண்களில் நீரோடு.

‘அடிப்பாவி! கட்டின புருஷனுக்கு ஐ லைக் யூவைக் கூட காணோம். அப்பாவுக்கு ஐ லவ் யூவா!’ காதில் புகை வந்தது ஸ்ரீனிவாசனுக்கு.

“அதெல்லாம் கிடைக்கும் சீனு. யூ டோண்ட் ஒர்ரி” என்றார் ராம் அவனைப் புரிந்தவராய்.

“எங்க மாமா ரொம்ப கஷ்டம்போல தோணுதே!” என்று பரிதாபமாகச் சொல்ல,

“ஏன்மா அவனுக்கும்தான் சொல்லிறேன்” என்றார் ராம்.

இருவரும் என்ன பேசுகிறார்கள் என புரியாமல் விழித்தவள், “என்னத்தப்பா சொல்லணும்?” என்றாள்.

“என்கிட்ட சொன்ன ஐ லவ் யூவைத் தான்மா.”

“அப்பா” என்று பல்லைக்கடித்து, கணவன் முகம் காண, அவனோ அதே அப்பாவி பாவனையில் நின்றிருக்க, சட்டென்று முகம் திருப்பி, “அந்த வார்த்தை உங்களுக்கு மட்டும்தான்ப்பா” என்றாள் அழுத்தமாக.

“மாமாஆஆ...” என்று ஸ்ரீனிவாசன் நெஞ்சில் கைவைத்து அலற...

“என்னாச்சி? ஏன் நெஞ்சைப் பிடிக்கிறீங்க? டாக்டர்...” என்று சத்தமாக அழைத்து, படபடப்புடன் கேட்ட மனைவியை அள்ளிக்கலாம் போலிருந்த எண்ணத்தை உதறினான்.

மாமனாரின் ‘நீ நடத்துடா மருமகனே!’ பார்வையில் தைரியம் வர, “ஆஆஆ மா...மா...” என சத்தம் குறையாமல் வர, கணவனின் நெஞ்சை நீவி விட்டபடி, “என்னங்க செய்யுது? கொஞ்சம் பொறுத்துக்கோங்க. டாக்டர் கூட்டிட்டு வர்றேன்” என நகரப்போனவள் கைபிடித்து நிறுத்தி, “என் பக்கத்திலேயே இரு ரதி” என திக்கித்திக்கிப் பேசினான்.

“நெஞ்சுவலின்றீங்க. பக்கத்துல இருந்தா சரியாகிருமாங்க. நான் டாக்டர் கூட்டிட்டு வர்றேனே” என்றவாறு கணவனது மார்பை கையால் தேய்த்துவிட்டாள்.

“சரியாகிரும் ரதிமா. எனக்காக ஒரு டைம் நீ ஐ லவ் யூன்னு சொன்னேனா எல்லாமே சரியாகிரும்” என்று காதலாக வந்த வார்த்தையில், உணர்வு வந்தவள் தன்னிடமிருந்து அவனைத் தள்ளிவிட்டு, “யூ சீட்டர். உங்களை... ட்ராமாவா பண்றீங்க?” என்று விரட்ட,

“மாமா காப்பாத்துங்க. அப்படியே அந்த வார்த்தையையும் சொல்லச் சொல்லுங்க” என்றான் சத்தமாக.

“சீனு அது உன் சாமர்த்தியம். இதுல என்னை இழுக்காத” என்று சிரித்தபடி வந்த பதிலில், “கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும், ட்ரை பண்ணுடா” என தனக்குத்தானே சொல்ல, அதற்குள் மற்றவர்களும் வர, நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த இடமே கலகலப்பானது.

தம்பியின் உடல்நிலையில் தேறுதல் தெரியவுமே, மேனகா தன் குடும்பத்தினருடன் கிளம்ப, தன் அத்தையை தனியாக அழைத்த பாகீரதி, தனக்குத் தேவையான ஒருசில விஷயங்களைத் தெரிந்துகொள்ள முயற்சிக்க, முழுமையான தகவல் இல்லாவிட்டாலும் அதைத் தீர்த்து, இன்னும் ஒரு சிலரையும் பழி தீர்க்க எண்ணி ஒருசில முடிவுகள் எடுத்தாள். அதன் காரணமாக கணவனிடம் தொடர்ந்து தன் ஒதுக்கத்தைப் பலவகையிலும் காட்டவும் செய்தாள்.

மருத்துவமனையில் இருந்து வீடு வர, நீண்ட வருடங்களுக்குப் பின் சேர்ந்த ராம், பாரதி ஜோடிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள் பாகீரதி, தாரிணி தோழிகள்.

அப்பாவின் உடல்நிலையை காரணம் காண்பித்து பாகீரதி திருப்பூரிலேயே இருக்க, ஸ்ரீனிவாசன்தான் மனைவியின் பாராமுகம் பார்த்து ஒன்றும் புரியாமல் அவளைவிட்டு சென்னைக்குச் சென்றான்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து தந்தையிடம் வந்தவள், தான் மும்பைக்கு பிரபல மாடலிங் டிசைனரிடம் ட்ரைனிங் செல்வதாக சொல்ல, ராமகிருஷ்ணனின் அத்தனை மறுப்புகளுக்கும் அதற்கேற்ப பதிலைச் சொல்லி, மற்றவர்களை சமாளிக்க வேண்டிய பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தாள். மகள் பேச்சு மீறாத ராம் மற்றவர்களிடம் அவள் போய்வரட்டும் என்றும் சொல்லிவிட்டார்.

மீறி கேட்ட தாயிடம், “நீங்கதான மேரேஜ் பண்ணிட்டு எங்க வேணா போ சொன்னீங்க. இப்ப என்னாச்சி?” என்று பதில் கேள்வி கேட்டாள்.

“என் பொண்ணுமேல உள்ள நம்பிக்கையில, எந்த தப்பான முடிவும் எடுக்கமாட்டன்னு சொன்னேன். அதுவுமில்லாம சீனுவையும் புரிஞ்சிப்பன்னு நினைச்சேன்” என்றார்.

“நான் யாரையும் புரிஞ்சிக்க வேண்டியதில்லம்மா. கல்யாணம் பண்ணிக்கச் சொன்னீங்க பண்ணிக்கிட்டேன். அதுவும் ப்ளாக்மெய்ல் பண்ணி ஒத்துக்க வச்சீங்க. என்னோட வேலை முடிஞ்சதும் நான் கிளம்பிட்டேன். ஆக்சுவலா நான் ரொம்ப லேட் தெரியுமா? சோ, என்னைத் தடுக்க நினைக்காதீங்க சொல்லிட்டேன்” என்று சற்றும் இளகாமல் பேசினாள்.

“அம்மு! இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கல” என்றவரின் குரலில் வேதனை நிரம்பியிருந்தது.

“எதிர்பார்த்திருக்கணும்மா. எதிர்பார்க்காதது உங்களோட தப்பு. எனக்கு ஃப்ளைட் டைமாகிருச்சி, நான் பேக் பண்ணனும் கிளம்புறீங்களா?” என்று எடுத்தெறிந்து பேசி ஆடை எடுத்துவைக்க ஆரம்பித்தாள்.

“என்னை வாயை மூடிட்டு போகச்சொல்றியா அம்மு?” தாயின் கண்ணீர்க் குரலில், “ம்மா... ப்ளீஸ் என்னைப் புரிஞ்சிக்கோங்க. என்னால இங்க இருக்க முடியாது. இதுல எனக்கான எதிர்கால வாழ்க்கை அடங்கியிருக்கு. இன்னும் சிக்ஸ் மன்த் தான்ம்மா. என் மனசுக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும். இந்த ஆறு மாசத்துல எல்லாத்தையும் சரி பண்ணிட்டு வர்றேன்” என முகத்திற்கு நேரே சொல்ல தைரியமில்லாமல் குனிந்தபடியே பேசினாள்.

“சரி பண்ணப்போறியா?” என்ற தாயின் கேள்வியில், சட்டென்று நாக்கு கடித்தவள், “ஸ்..அது ட்ரெயினிங்க சரியா முடிச்சிட்டு வர்றேன்னு சொல்ல வந்தேன். டங்க் ஸ்லிப்பாகிருச்சி.”

“என்னவோ பண்ணித்தொலை. டங்க் ஸ்லிப்பான பரவாயில்ல. வாழ்க்கையை ஸ்லிப்பாக விட்டுராம இருந்தா போதும். அநியாயமா சீனுவோட வாழ்க்கையை கெடுத்துட்டேனோன்னு நினைக்கத் தோணுது” என புலம்பியபடியே செல்லும் தாயை, சற்று வேதனையுடனேயே பார்த்திருந்தாள் பாகீரதி.

ஏதோ ஒரு உணர்வின் உந்துதலில் திரும்பியவள் பார்வை பார்த்தபடியே இருக்க, கதவினோரம் சாய்ந்தபடி அவளை குறுகுறுவென்று பார்த்திருந்தவனின் தோற்றமும், பிடித்திழுக்கும் அந்தப் பார்வையும் ஜில்லென்ற சாரலாய் மனதிற்குள் விழ, சட்டென்று தன் இதயத்துடிப்பு அதிகரித்தது. என்னவென்று கண்மூடியவளுக்கு, மனம் நன்றி சொன்னது. ‘என்னிடம் அனுப்பமாட்டேன் என்றவனை எனக்குள் தந்தாயே’ என்று. ‘ஹையோ! அவசரப்பட்டுட்டேனே!’ என்றெண்ணி வேகமாக கண்திறக்க கண்முன் அவள் மனக்கள்வன்.

முதன்முதலில் அவளிடம் பேசிய, ‘உன்கிட்ட நான் எதிர்பார்க்கலை’ என்ற அதே குற்றச்சாட்டும் பாவனையில் நின்றிருந்தான். “மத்தவங்ககிட்ட நீ என்ன வேணும்னா பொய்க்காரணம் சொல்லலாம் ரதி. ஆனா, என்கிட்ட முடியாது. நீ பயப்படுற ரதி. எங்க உன்னையறியாம உன் மனதை கொட்டிருவியோன்னு” என்றான்.

“அ...அப்படில்லாம் எதுவுமில்லை” என்றாள் வேகமாக.

“எப்படில்லாம் எதுவுமில்லன்ற? உன் கேரக்டருக்கு இந்த நடிப்பு செட்டாகலமா. உன்னோட இந்த பயம் அர்த்தம் இல்லாதது கூட. கொஞ்சம் டைம் எடுத்துக்கோ. ஆனா, எங்கேயும் போகக்கூடாது. ட்ரெய்னிங் எடுக்கணும்னா நம்ம கம்பெனி இருக்கு. இல்லையா, உனக்குப் பிடிச்ச ப்ரொபஷன்ல சென்னையிலயே சேர்த்துவிடுறேன். இங்கேயே இருந்துறேன். எனக்காக இல்லைன்னாலும் அத்தைக்காக” என்ற கணவனின் கெஞ்சல்கள் மனதைத் தொட்டு நேசச்சாரலில் நனைந்த போதும்,

“இல்லங்க. பலம் தெரிஞ்சவங்களோட இருக்கிறது ப்ராப்ளமில்லை. என்னோட பலகீனம் சாரி, பலகீனம்ன்றதோட நான் செஞ்ச தப்பை நேர்ல பார்த்தவங்க நீங்க. ஒருடைம் இல்ல ஒருடைம் எதாவது சொல்லிட்டா?” என்றாள் வேறுபுறம் பார்த்தபடி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“செஞ்ச தப்பில்லமா, செய்யவிருந்தது. தப்புக்கும் தவறுக்கும் வித்தியாசம் இருக்கு ரதி. குத்திக்காட்டிப் பேசுற சேடிஸ்ட்னு நினைச்சியா என்னை? கோவில்ல நான் பார்த்தது நிஜம்தான். அந்தத்தப்பை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்திருப்பேன்னு நினைச்சியா? எனக்குச் சொந்தமானவளை அடுத்தவனுக்கு விட்டுக்கொடுக்கிற அளவுக்கு நான் நல்லவனில்ல ரதி. சப்போஸ் உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் மாலைபோடப் போயிருந்தா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எனக்கு மனைவியான நீ! ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி திருமலையிலேயே என்னோட திருமதி ஆகியிருப்ப” என்றவனின் முகபாவம் அதிதீவிரத்தில் இருந்தது பழையதை நினைத்து.

‘ஆ’ என விழிவிரித்துப் பார்த்தவளிடம்,

“இதான் நிஜம். நம்புறதோ நம்பாததோ உன்னிஷ்டம்தான். இந்த ட்ரிப்பை கேன்சல் பண்ணிருறியா?” திரும்பவும் குரலிறங்க கேட்டான்.

‘பண்ணிரலாமா?’ மனதில் தோன்றியதுமே தன்னுடைய கடமை நினைவு வந்து, “இ...இல்ல முடியாது” என்று சொல்லியபடி நகர,

“ரதி! நீ நான் பார்த்ததை எப்பவோ மறந்திட்டன்னு தெரியும்” என்றதும் நகர்ந்தவள் சட்டென நிற்க, “எதோ ஒரு காரணத்துக்காக அதைப்பிடிச்சி தொங்கிட்டிருக்கன்னும் தெரியுது. எனிவே, உனக்காக காத்திருப்பேன். உன்னைத்தேடி எப்ப வரணும்னு தோணுதோ, அடுத்த செகண்ட் நீ எங்க இருந்தாலும் அங்க நானிருப்பேன்.”

“இல்ல என்னைத் தேடாதீங்க?” என்று அவன் கண் பார்க்காமல் செல்ல, அவளின் கைபிடித்தவன் பாகீரதி என்னவென்று உணருமுன் தன்னுடன் சேர்த்து அணைத்திருந்தான்.

“ஹேய் விடுங்க” என முரண்டியவளை தன் முரட்டுப் பிடியால் அடக்கி, “சத்தம் போடாத. அப்புறம் மத்தவங்க நான் உன்கிட்ட தப்பா நடந்துக்குறேன்னு நினைச்சிக்கப் போறாங்க” என்றான் மென்னகையுடன்.

“ஐயோ!” என அவள் அலற,

“ப்ச்... இப்பத்தான சொன்னேன் சத்தம் வரக்கூடாதுன்னு.”

“இப்படில்லாம் பேசினா சத்தம் போடமாட்டாங்களா? ப்ளீஸ் என்னை விடுங்களேன். எனக்கு என்னவோ மாதிரியா இருக்கு” என்றாள் கெஞ்சல் பார்வையில்.

‘இதானே எனக்கும் வேணும்’ என மனதில் நினைத்து, மனைவியின் முகத்தில் விரலால் கோடிழுத்து, “உனக்கு மட்டும் எப்படி கன்னம் ஷாப்டா இருக்கு. ஒரு பரு கூட இல்லை?” என்றான் தன் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்க்க.

‘இது ரொம்ப முக்கியம்’ என நினைத்தாலும், “அது என்னோட ஸ்கின் அப்படி” என்ற பதில் அவளறிய வந்தது.

“ஓ... இந்த ஸ்கின்ன கொஞ்சம் தொட்டுக்கவா?” என்று கேட்ட கணவனின் ஆர்வத்தைக் கண்டு, ‘என்ன உளறல் இது. கை கன்னத்துலதான இருக்கு.’ பாவையவள் பார்வையை யோசனையாய் கணவனிடம் செலுத்தினாள்.

அதைப் புரிந்தவன் சின்னச் சிரிப்புடன், “இது... அது இல்ல” என்று அவள் உணருமுன், மென்மையான கன்னத்தில் அதைவிட மென்மையாக முத்தமிட்டு, புரியாத மொழி பேசி நின்றவளின் மறுபுறம் அழுந்த முத்தமிட, பூமியே தன்னைச் சுற்றுவதுபோல் பிரமை அவளுள்.

“ம்.. இப்பக் கிளம்பு நான் காத்திருக்கிறேன்” என்று கீழே சென்றான்.

கணவன் கொடுத்த முத்தத்தால் முகமெல்லாம் பூரித்து கன்னம் தொட்டவள், உதட்டில் சன்னமான சிரிப்புடன் கிளம்பத் தயாரானாள்.

“அடிக்கடி போன் பண்ணு?” மனைவியின் முறைப்பான பார்வையில், “ஓகே அடிக்கடி இல்லாட்டியும் எப்பவாவது பண்ணு. எதுவும் ப்ராப்ளம்னா கொஞ்சம் கூட யோசிக்காத கிளம்பி வந்துட்டேயிரு. நல்லா சாப்பிடு. எப்பவும் என்னையே நினைச்சிட்டிருக்காம நல்லா தூங்கு” என்று பேசிக்கொண்டே இருந்தவன் மனைவியின் முறைப்பினைக் கவனிக்காது காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

“உங்களை யாரு நினைச்சிட்டிருக்கிறதா பெருமை தட்டிக்கிறீங்க?” என்ற வார்த்தையில் பேச்சை நிறுத்தியவன், “ஏன் என்னை நினைக்கமாட்டியா? அந்தளவுக்கு நமக்குள்ள என்ன பிரச்சனை? வாய்க்கா வரப்பு சண்டையிட பங்காளிகளும் இல்லை. முடிபிடி சண்டையிட சகோதரிகளும் இல்லை. அட்வைஸ் பண்ணி அறுக்கிறதுக்கு அப்பா அம்மாவும் இல்லை! அடியேய் இதைச்செய் அதைச்செய்னு மிரட்டுற மாமனார், மாமியாரும் இல்லை. டேய் அடிச்சிருவேன், கொன்னுருவேன்னு சொல்ல நண்பர்களும் இல்லையே!”

கணவனின் வர்ணனையில் அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பு அளவில்லாமல் கொட்டியது.

காரை ஓரம் கட்டியவன் சிரித்துக் கொண்டிருந்த மனைவியின் முகத்தை தன்னிரு கைகளால் ஏந்தி, “நீ இந்த உறவுகளுக்கெல்லாம் மேல ரதிமா. முதல்ல என் காதலி! அப்புறம் என் முறைப்பொண்ணு! இப்ப என் மனைவி! சொல்லு? நீ என்னை மட்டும் நினைச்சிட்டிருக்கணும்னா, நான் என்ன செய்யணும்?” என கிறக்கமாய்க் கேட்ட கணவனின் முகம் பார்க்க முடியாமல் தலைகவிழ, வாய் பேசாமடந்தையானதுதான் விந்தையிலும் விந்தையோ!

மனைவியின் முகம் நிமிர்த்தி அவளின் கண்பார்த்து, “ஐ லவ் யூ அப்படின்னு சொல்லி உன் கன்னத்துல கிஸ் பண்ணனுமா?” என்று கன்னத்தில் முத்தமிட்டு, “இல்ல நான் உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லி...” நிறுத்தியவன் அவளின் உதட்டில் மெல்லிய முத்தமிட்டு, “இப்படிச் சொன்னா பிடிக்குமா?” என்றபடி அவளின் பதிலுக்காய் காத்திருந்தான்.

கண்களில் ஒருவித மயக்கம் இருக்க, அதிலிருந்து வெளிவராமல், வெளிவரப் பிடிக்காமல் இருந்தவளுக்கு, சில நிமிடங்கள் கழித்தே நிதர்சனம் நினைவில் அடிக்க, உணர்ச்சியின் கிளர்ச்சியில் கணவனை கிறக்கப்பார்வை பார்த்தவளின், கண்களிலுள்ள மயக்கம் தெளியாமல் இருப்பதைக் கண்டவனுக்கு, மனைவியின் மனதை ஜெயித்துவிட்ட திருப்தியே வந்தது. தன்னுடைய இத்தனை வருட காத்திருப்புக்கு கிடைத்த அங்கீகாரத்தைச் சொல்லி அவளை ஒரேடியாக கலங்கடிக்காமல், “ம்... சொல்லு?” என ஊக்க,

சட்டென்று தலை உதறி அவனிடமிருந்து விலகியது மட்டுமில்லாமல், தன் மயக்கத்திலிருந்தும் விலகி ஜன்னலோரம் வேடிக்கை பார்த்தபடி, தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

“என் கேள்விக்கு பதிலே இல்லையா?” என புலம்பியபடி காரை எடுத்தவன், “இன்னொரு டைம் கேட்கிறேன். டெய்லி ஒரு டைமாவது கால் பண்ணவா?” என்றான்.

“நோ. நான் கூப்பிடாம நீங்க கால் பண்ணாதீங்க?”

“நீயா பண்ணமாட்டியே ரதிமா? உன்னை எப்படி நம்புறது?”

கணவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தவள், “பண்ணுவேன். நம்பணும்!” என்று முடிக்க, விமான நிலையம் வந்து சோதனை முடித்து அவள் உள்ளே செல்ல, எதையோ பிரிந்த உணர்வில் மனமேயில்லாமல் வெளியேறினான் ஸ்ரீனிவாசன்.

அவனையே பார்த்திருந்த அந்த விழிகளோ சந்தோஷத்தில் துள்ளியது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
Love romance super ah erruku but why this piridhal now..?
காரண காரியம் இல்லாமல் எதுவுமே நடக்காது சொல்வாங்கள்ல. அது மாதிரி முக்கிய காரணமா இருக்கலாம்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
Author neengha vilyadungha appa dhan story extended aghum 🤪🤪🤪

Author neengha vilyadungha appa dhan story extended aghum 🤪🤪🤪
கதையில் திருப்பம்னு ஒண்ணு வேணும். அப்பத்தான் மூவிங் சரியா இருக்கும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top