New member
- Joined
- Dec 22, 2024
- Messages
- 6
- Thread Author
- #1
"ஏ யா! செந்தில் கெளம்பு ஒரு எட்டு இந்த ஒரே ஒரு முறை மட்டும் போயிட்டு வந்துருவோம்" என்று தன் மகனின் தோளில் கை வைக்க,
விருட்டென நிமிர்ந்த செந்தில் தன் தாயை சிவந்த விழிகளுடன் பார்த்தவன்.
"ஏன் ம்மா என்னை இப்படி ஒவ்வொரு முறையும் வேதனை பட வைக்கிறீங்க?".
"என்ன ய்யா! நாங்க பண்ணிட்டோம் அப்படி".
" போதும் மா. இதோட இத விடுங்க.எத்தனை முறை நீங்களும் இந்த ஏழு வருஷமா ஒவ்வொரு வீடா ஏறி இறங்குவீங்க.அதான் எனக்கு யாரும் பொண்ணு தரல இல்ல விட்டுருங்க. நான் இப்படியே இருந்துட்டு போறேன். இப்ப கல்யாணம் ஆகலைன்னா என்ன கேட்டுடப் போகுது".
" ஏன்! யா இப்படி எல்லாம் பேசுற. இப்படி எல்லாம் சொல்லாத யா"
" மா ப்ளீஸ் விட்ருங்க" என்றவன். எதுவும் பேசாமல் எழுந்து செல்ல,
அவனது தாயும்,தந்தையும் கத்த கத்த காதில் வாங்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் செந்தில் 35 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் அவனுக்கு பின்னாடி பிறந்தவன் குமரன்.
அவன் ஏழு வருடங்களுக்கு முன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே,அவனுடன் படிக்கும் பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லி ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள, ஆகையால் குமரனின் அண்ணன் செந்திலின் திருமணம் தடைப்பட்டது.
அப்பொழுதுதான், அவனுக்கு பெண் பார்க்கும் படலமும் ஆரம்பமாகியது. அந்த நேரத்தில் அண்ணனுக்கு முன்பாகவே தம்பி திருமணம் செய்து கொண்டு வந்து நிற்க,
அப்பொழுது அண்ணனுக்கு ஏதோ குறை இருக்க போய் தான் தம்பி திருமணம் செய்து இருக்கிறான் என்ற பேச்சு அப்போதிலிருந்து இப்பொழுது வரை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக அவனை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.
அவனது அப்பா ,அம்மாவும் ஆரம்பத்தில் குமரனை வீட்டில் கூட சேர்த்துக் கொள்ளாமல் துரத்தி விட்டார்கள்.
செந்திலின் பேச்சுக்கு இணங்க, குமரனை அவனது காதல் மனைவியுடன் இந்த வீட்டில் தான் குடி வைத்திருந்தார்கள்.
ஆனால், மூத்த மகனின் திருமணம் இவர்களின் திருமணத்தால் தடையாக இருக்க, இருவரிடமும் பேச்சு வார்த்தை இருந்தாலும், தனி குடித்தனம் வைத்து விட்டார்கள்.
கிட்டத்தட்ட இப்பொழுது ஏழு வருடங்களாக அவனது அப்பா அம்மாவும் செந்திலுக்கு திருமணம் செய்ய பெண் வீடு அடிக்கடி ஏறி இறங்க , அனைவரும் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஓரளவிற்கு நிச்சயம் செய்யும் அளவிற்கு வந்தாலும், ஏதோ குறை இருக்க போய் தான் அண்ணனுக்கு முன்பாகவே தம்பிக்கு திருமணமாகி இருக்கிறது. எங்களிடம் எதையோ மறைத்து உங்கள் மகனை எங்கள் வீட்டு பிள்ளையின் தலையில் கட்டி வைக்க பார்க்கிறீர்கள் என்று சொல்லி அனைத்தையும் நிறுத்தி விடுவார்கள்.
அவனும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கியதில் சளிப்படைந்து, இறுதியில் தனக்கு திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
தன் அப்பா ,அம்மாவிடம் சண்டை இட்டவாறு வயல்வெளிக்கு சென்று கொண்டிருக்க ,அங்கு அவனது தென்னந்தோப்பில் தேங்காய் மேலே ஏறி ஆட்கள் பறித்து போட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது அந்த வழியாக ஒரு பெண் வந்தாள்.
தனது அப்பாவிற்கு சாப்பாடு கொடுத்து விட்டு செல்ல, அப்பொழுது அவள் மீது ஒரு தேங்காய் விழ போக,அப்போதுதான் அந்த இடத்தை வந்தடைந்த செந்தில்.
" ஏய் !இந்தாருமா தேங்காய் உன் மேல விழப்போகுது" என்ற கத்தலுடனே அவளது அருகில் வந்து நிற்க..
அவள் பதறியவாறு விலகுவதற்கு முன்பே செந்தில் அவ்விடம் வந்தவன் வேகமாக அவளை பிடித்து இழுத்து இருந்தான். அவன் இழுத்த வேகத்தில் அவனது நெஞ்சில் மோதி நிற்க,
அவனது கத்தலில் சுற்றி இருந்தவர்களும் ,'எங்கு அவள் மீது தேங்காய் விழுந்து ஏதாவது ஆகி விடுமோ ?'என்ற பயத்துடன் அனைவரும் அவளை பார்க்க,
அவளுடைய அப்பா மரத்திலிருந்து வேகமாக கீழே இறங்கியவர்." நீ ஏன்?புள்ள இங்க வந்து நிக்கிற .நான் தேங்காய் பறிக்க சொல்லிட்டு தானே வந்தேன்"என்றால் பதப்பதைப்புடன்.. தன் மகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ற படபடப்பு அவரிடம் வெளிப்படையாகவே தென்பட்டது.
" நீ காலையிலேயே கஞ்சி குடிக்கலையேப்பா. அதான், உனக்கு சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வந்தேன். பொழுதனைக்கும் இங்க வேலை இருக்கு . பொழுது சாய்ஞ்ச பிறகு தான வருவேன்னு சொல்லிட்டு வந்த அதான்" என்றாள் லேசான திணறலுடன்.. உள்ளுக்குள் எழுந்த பயத்துடன்..
"சரி அங்கன வச்சிட்டு போக வேண்டியது தான. நம்ம வீட்டு தூக்கு வாலி எனக்கு தெரியாதா?" என்றார் லேசான கோபத்துடன்.
"இல்லை யா அது காலையிலேயே நீங்க கஞ்சி குடிக்காம வந்துட்டீங்க இல்ல. அதான் "என்றாள் மிரட்சியான பார்வையுடன் ..
"அதுக்குன்னு உனக்கு தான் மேலுக்கு முடியல இல்ல. அதனால தானே இங்க வந்து ஏதாவது பாத்துக்கலாம்னு வந்தேன்" என்றார் தன் மகளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது இருப்பதும் ஒரே ஒரு மகள்.
தனக்கு துணை அவள் தான் அவளுக்கு துணையும் தான் மட்டும் தானே என்ற பயத்திலும் , ஆதங்கத்திலும் தன் மகளின் தலையை வாஞ்சனையாக கோத ,
"சாரிங்க புள்ள தெரியாம வந்துருச்சு. உங்க வேலையும் கெட்டு போச்சு" என்று சுற்றி இருப்பவர்களை பார்த்து விட்டு, செந்திலிடம் மன்னிப்பு வேண்டிவிட்டு, சுற்றி இருப்பவர்களை "நீங்க உங்க வேலைய பாருங்கப்பா எல்லாரும் மன்னிச்சிடுங்க" என்று சொல்ல,
செந்தில் தான் லேசான கோபத்துடன்,
"ஏன் அண்ணா உங்க பிள்ளைக்கு மேலுக்கு கூட முடியலன்னு சொல்றீங்க ?ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் காமிக்காம இங்க என்ன வேலைக்கு வந்து இருக்கீங்க ?"என்றான்.
" என்னப்பா பண்றது வச்சிருக்கறது ஒரு புள்ள ,பொட்ட புள்ள அதுவும், வயசுக்கு வந்த புள்ள ,காலகாலத்துல நல்ல இடமாக பார்த்து கட்டிக் கொடுக்க வேண்டாமா? அவளை பெத்த ஆத்தாவும் இவளை பெத்து போட்ட உடனே போய் சேர்ந்துட்டா, இம்புட்டு நாளா எனக்கும் ,இவளுக்கும் துணைக்கு இருந்து வளர்த்த என்னோட ஆத்தாவும் இப்போ அஞ்சு ஆறு மாசத்துக்கு முன்னாடி போய் சேர்ந்திருச்சு. இப்போ எனக்கு அவ,அவளுக்கு நான் தான் அப்படி இருக்கப்ப எங்கள நாங்க தானே பார்த்துக்கணும்,நானும் கிடைக்கிற கூலி வேலைக்கு போய் தான் எங்க வயித்த கழுவனும். ரெண்டு நாளா நான் வீட்ல இருந்த வரைக்கும் சமைச்சு போட்டு பாத்துக்கிட்டேன்.இன்னைக்கு இங்க வந்துட்டு பொழுது சாய போனா, எனக்கு ஒரு ஆயிரம் ரூபா கிடைக்கும். அத வச்சு தான் புள்ளைய நாளைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்னு இருந்தேன். அதனாலதான் இங்கன வந்தேன் தம்பி வேலைக்கு "என்றார் தலையில் இருந்த துண்டை அவிழ்த்தவாறு,
"ஏன் அண்ணா உங்க மகளுக்கு மேலுக்கு முடியலனு காசு கேட்ட தராமலா போயிடுவேன். அதுக்குன்னு இப்படி மேலுக்கு முடியாத பிள்ளையை அலைய வச்சு வேடிக்கை பாக்குறீங்க ?போய் ஃபர்ஸ்ட் உங்க பிள்ளையை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் காமிங்க "என்று தனது சட்டை பாக்கெட்டில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்ட,
" தம்பி வேணாம். நான் வேலைய முடிச்சுட்டு வாங்கிக்கிறேன்".
" இத நான் கூலியா தரல.உங்களால முடியிற அப்போ குடுங்க.இப்ப போயிட்டு புள்ளைய பாருங்க. இன்னும் அஞ்சு ஆறு நாளைக்கு நம்ம தோப்பில் வேலை இருக்கு. நாளை மறுநாள் நீங்க வந்து வேலை செஞ்சுட்டு கூலி வாங்கின பிறகு, கூட நீங்க காசு குடுங்க ஒன்னும் பிரச்சனை இல்ல".
அவளுமே நிற்க முடியாமல் நின்று கொண்டிருப்பதை பார்த்த அவளின் அப்பா "சரி தம்பி ரொம்ப நன்றி" என்று விட்டு தன் மகளை அழைத்துக் கொண்டு செல்ல,
கண்களில் கண்ணீர் தன்னையும் மீறி வழிந்தாலும், உடம்பு சுட்டாலும் ,தந்தையின் நிலையை எண்ணி வேதனையுடன் கண்கள் கலங்க செந்திலை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள் "கனகா".
"ஏன்? புள்ள இவ்வளவு தூரம் வந்த "என்று தன் மகளை லேசாக தோளில் சாய்த்து கொண்டு செல்ல ,
"இல்ல நீ காலையிலேயே சாப்பிடலையா ?அதனால தான் பா".
"அதுக்குன்னு" என்றவர் சைக்கிள் எடுக்க ,
வேகமாக "அண்ணா ஒரு நிமிஷம் நில்லுங்க" என்று அவரின் அருகில் செந்தில் வந்து நிற்க .
"என்ன தம்பி" என்றார்.
"சைக்கிள்ல உங்க பொண்ணால உட்கார முடியுமா? இப்போ இருக்க நிலையில.வாங்க என் வண்டியில் கூட்டிட்டு போறேன்".
"இ..இல்லப்பா அ..அது" என்று தயங்க..
"ஒன்னும் இல்ல வாங்க" என்று அவரை உட்கார வைத்துக்கொண்டு, பின்னாடி அவரது மகள் கனகாவை உட்கார வைத்து தனது புல்லட்டிலே அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றான்.
அழைத்துச் சென்று ,காட்டிவிட்டு வீட்டிலும் கொண்டு வந்து விட,
" ஐயா ரொம்ப நன்றி ஐயா. எங்களுக்கு இந்த அளவுக்கு உதவி செய்ததுக்கு, அப்பாவை உங்க கூடவே கூட்டிட்டு போங்க. நான் என்ன பாத்துக்குறேன் அப்பா வேலைக்கு வரட்டும்.கால் வயிறு கஞ்சியா இருந்தாலும் உழைச்சு தான் குடிக்கணும். உங்க கிட்ட வாங்கின காச சீக்கிரம் கொடுத்தா தான் எனக்கும் சரி, எங்க அப்பாவுக்கும் சரி தூக்கம் வரும்" என்று உடல் நடுங்க ,போர்வையை போர்த்திக் கொண்டே சொல்ல,
அவளை லேசான முறைப்புடன் பார்த்தவன்." இந்த காசு எனக்கு இப்பவே வேணும்னு நான் உங்க ரெண்டு பேர் கிட்டையும் சொல்லல மா சரியா ?"என்றவன். எதுவும் பேசாமல் செல்ல,
" சாரி தம்பி. புள்ள ஏதோ "...என்று சொல்லும் போதே,
"ஒன்னும் இல்ல "என்று எதுவும் பேசாமல் தன் வண்டியில் ஏறி உட்கார்ந்த படி வெளியில் இருந்து பார்த்தாலே தெரியும் படியாக தான் ஹாலில் உட்கார்ந்து இருந்தாள் கனகா. அவளை குறுகுறு பார்வையோடு பார்த்தவன். எதுவும் பேசாமல் சென்று விட்டான்.
மேலும் இரண்டு நாட்கள் சென்று இருந்தது. அவனது தோப்பில் ஒரு வாரத்திற்கு தேங்காய் அருப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, கனகா தன் அப்பாவிற்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து இருக்க,
கணக்கு வழக்குகளை கீழே
நின்று பார்த்துக் கொண்டிருந்தவன். அவள் தன்னை கடந்து செல்வதை பார்த்தவன். "ஏ! பொண்ணே !"என்று அழைக்க,
விருட்டென நிமிர்ந்த செந்தில் தன் தாயை சிவந்த விழிகளுடன் பார்த்தவன்.
"ஏன் ம்மா என்னை இப்படி ஒவ்வொரு முறையும் வேதனை பட வைக்கிறீங்க?".
"என்ன ய்யா! நாங்க பண்ணிட்டோம் அப்படி".
" போதும் மா. இதோட இத விடுங்க.எத்தனை முறை நீங்களும் இந்த ஏழு வருஷமா ஒவ்வொரு வீடா ஏறி இறங்குவீங்க.அதான் எனக்கு யாரும் பொண்ணு தரல இல்ல விட்டுருங்க. நான் இப்படியே இருந்துட்டு போறேன். இப்ப கல்யாணம் ஆகலைன்னா என்ன கேட்டுடப் போகுது".
" ஏன்! யா இப்படி எல்லாம் பேசுற. இப்படி எல்லாம் சொல்லாத யா"
" மா ப்ளீஸ் விட்ருங்க" என்றவன். எதுவும் பேசாமல் எழுந்து செல்ல,
அவனது தாயும்,தந்தையும் கத்த கத்த காதில் வாங்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் செந்தில் 35 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் அவனுக்கு பின்னாடி பிறந்தவன் குமரன்.
அவன் ஏழு வருடங்களுக்கு முன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே,அவனுடன் படிக்கும் பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லி ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள, ஆகையால் குமரனின் அண்ணன் செந்திலின் திருமணம் தடைப்பட்டது.
அப்பொழுதுதான், அவனுக்கு பெண் பார்க்கும் படலமும் ஆரம்பமாகியது. அந்த நேரத்தில் அண்ணனுக்கு முன்பாகவே தம்பி திருமணம் செய்து கொண்டு வந்து நிற்க,
அப்பொழுது அண்ணனுக்கு ஏதோ குறை இருக்க போய் தான் தம்பி திருமணம் செய்து இருக்கிறான் என்ற பேச்சு அப்போதிலிருந்து இப்பொழுது வரை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக அவனை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.
அவனது அப்பா ,அம்மாவும் ஆரம்பத்தில் குமரனை வீட்டில் கூட சேர்த்துக் கொள்ளாமல் துரத்தி விட்டார்கள்.
செந்திலின் பேச்சுக்கு இணங்க, குமரனை அவனது காதல் மனைவியுடன் இந்த வீட்டில் தான் குடி வைத்திருந்தார்கள்.
ஆனால், மூத்த மகனின் திருமணம் இவர்களின் திருமணத்தால் தடையாக இருக்க, இருவரிடமும் பேச்சு வார்த்தை இருந்தாலும், தனி குடித்தனம் வைத்து விட்டார்கள்.
கிட்டத்தட்ட இப்பொழுது ஏழு வருடங்களாக அவனது அப்பா அம்மாவும் செந்திலுக்கு திருமணம் செய்ய பெண் வீடு அடிக்கடி ஏறி இறங்க , அனைவரும் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஓரளவிற்கு நிச்சயம் செய்யும் அளவிற்கு வந்தாலும், ஏதோ குறை இருக்க போய் தான் அண்ணனுக்கு முன்பாகவே தம்பிக்கு திருமணமாகி இருக்கிறது. எங்களிடம் எதையோ மறைத்து உங்கள் மகனை எங்கள் வீட்டு பிள்ளையின் தலையில் கட்டி வைக்க பார்க்கிறீர்கள் என்று சொல்லி அனைத்தையும் நிறுத்தி விடுவார்கள்.
அவனும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கியதில் சளிப்படைந்து, இறுதியில் தனக்கு திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
தன் அப்பா ,அம்மாவிடம் சண்டை இட்டவாறு வயல்வெளிக்கு சென்று கொண்டிருக்க ,அங்கு அவனது தென்னந்தோப்பில் தேங்காய் மேலே ஏறி ஆட்கள் பறித்து போட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது அந்த வழியாக ஒரு பெண் வந்தாள்.
தனது அப்பாவிற்கு சாப்பாடு கொடுத்து விட்டு செல்ல, அப்பொழுது அவள் மீது ஒரு தேங்காய் விழ போக,அப்போதுதான் அந்த இடத்தை வந்தடைந்த செந்தில்.
" ஏய் !இந்தாருமா தேங்காய் உன் மேல விழப்போகுது" என்ற கத்தலுடனே அவளது அருகில் வந்து நிற்க..
அவள் பதறியவாறு விலகுவதற்கு முன்பே செந்தில் அவ்விடம் வந்தவன் வேகமாக அவளை பிடித்து இழுத்து இருந்தான். அவன் இழுத்த வேகத்தில் அவனது நெஞ்சில் மோதி நிற்க,
அவனது கத்தலில் சுற்றி இருந்தவர்களும் ,'எங்கு அவள் மீது தேங்காய் விழுந்து ஏதாவது ஆகி விடுமோ ?'என்ற பயத்துடன் அனைவரும் அவளை பார்க்க,
அவளுடைய அப்பா மரத்திலிருந்து வேகமாக கீழே இறங்கியவர்." நீ ஏன்?புள்ள இங்க வந்து நிக்கிற .நான் தேங்காய் பறிக்க சொல்லிட்டு தானே வந்தேன்"என்றால் பதப்பதைப்புடன்.. தன் மகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ற படபடப்பு அவரிடம் வெளிப்படையாகவே தென்பட்டது.
" நீ காலையிலேயே கஞ்சி குடிக்கலையேப்பா. அதான், உனக்கு சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வந்தேன். பொழுதனைக்கும் இங்க வேலை இருக்கு . பொழுது சாய்ஞ்ச பிறகு தான வருவேன்னு சொல்லிட்டு வந்த அதான்" என்றாள் லேசான திணறலுடன்.. உள்ளுக்குள் எழுந்த பயத்துடன்..
"சரி அங்கன வச்சிட்டு போக வேண்டியது தான. நம்ம வீட்டு தூக்கு வாலி எனக்கு தெரியாதா?" என்றார் லேசான கோபத்துடன்.
"இல்லை யா அது காலையிலேயே நீங்க கஞ்சி குடிக்காம வந்துட்டீங்க இல்ல. அதான் "என்றாள் மிரட்சியான பார்வையுடன் ..
"அதுக்குன்னு உனக்கு தான் மேலுக்கு முடியல இல்ல. அதனால தானே இங்க வந்து ஏதாவது பாத்துக்கலாம்னு வந்தேன்" என்றார் தன் மகளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது இருப்பதும் ஒரே ஒரு மகள்.
தனக்கு துணை அவள் தான் அவளுக்கு துணையும் தான் மட்டும் தானே என்ற பயத்திலும் , ஆதங்கத்திலும் தன் மகளின் தலையை வாஞ்சனையாக கோத ,
"சாரிங்க புள்ள தெரியாம வந்துருச்சு. உங்க வேலையும் கெட்டு போச்சு" என்று சுற்றி இருப்பவர்களை பார்த்து விட்டு, செந்திலிடம் மன்னிப்பு வேண்டிவிட்டு, சுற்றி இருப்பவர்களை "நீங்க உங்க வேலைய பாருங்கப்பா எல்லாரும் மன்னிச்சிடுங்க" என்று சொல்ல,
செந்தில் தான் லேசான கோபத்துடன்,
"ஏன் அண்ணா உங்க பிள்ளைக்கு மேலுக்கு கூட முடியலன்னு சொல்றீங்க ?ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் காமிக்காம இங்க என்ன வேலைக்கு வந்து இருக்கீங்க ?"என்றான்.
" என்னப்பா பண்றது வச்சிருக்கறது ஒரு புள்ள ,பொட்ட புள்ள அதுவும், வயசுக்கு வந்த புள்ள ,காலகாலத்துல நல்ல இடமாக பார்த்து கட்டிக் கொடுக்க வேண்டாமா? அவளை பெத்த ஆத்தாவும் இவளை பெத்து போட்ட உடனே போய் சேர்ந்துட்டா, இம்புட்டு நாளா எனக்கும் ,இவளுக்கும் துணைக்கு இருந்து வளர்த்த என்னோட ஆத்தாவும் இப்போ அஞ்சு ஆறு மாசத்துக்கு முன்னாடி போய் சேர்ந்திருச்சு. இப்போ எனக்கு அவ,அவளுக்கு நான் தான் அப்படி இருக்கப்ப எங்கள நாங்க தானே பார்த்துக்கணும்,நானும் கிடைக்கிற கூலி வேலைக்கு போய் தான் எங்க வயித்த கழுவனும். ரெண்டு நாளா நான் வீட்ல இருந்த வரைக்கும் சமைச்சு போட்டு பாத்துக்கிட்டேன்.இன்னைக்கு இங்க வந்துட்டு பொழுது சாய போனா, எனக்கு ஒரு ஆயிரம் ரூபா கிடைக்கும். அத வச்சு தான் புள்ளைய நாளைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்னு இருந்தேன். அதனாலதான் இங்கன வந்தேன் தம்பி வேலைக்கு "என்றார் தலையில் இருந்த துண்டை அவிழ்த்தவாறு,
"ஏன் அண்ணா உங்க மகளுக்கு மேலுக்கு முடியலனு காசு கேட்ட தராமலா போயிடுவேன். அதுக்குன்னு இப்படி மேலுக்கு முடியாத பிள்ளையை அலைய வச்சு வேடிக்கை பாக்குறீங்க ?போய் ஃபர்ஸ்ட் உங்க பிள்ளையை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் காமிங்க "என்று தனது சட்டை பாக்கெட்டில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்ட,
" தம்பி வேணாம். நான் வேலைய முடிச்சுட்டு வாங்கிக்கிறேன்".
" இத நான் கூலியா தரல.உங்களால முடியிற அப்போ குடுங்க.இப்ப போயிட்டு புள்ளைய பாருங்க. இன்னும் அஞ்சு ஆறு நாளைக்கு நம்ம தோப்பில் வேலை இருக்கு. நாளை மறுநாள் நீங்க வந்து வேலை செஞ்சுட்டு கூலி வாங்கின பிறகு, கூட நீங்க காசு குடுங்க ஒன்னும் பிரச்சனை இல்ல".
அவளுமே நிற்க முடியாமல் நின்று கொண்டிருப்பதை பார்த்த அவளின் அப்பா "சரி தம்பி ரொம்ப நன்றி" என்று விட்டு தன் மகளை அழைத்துக் கொண்டு செல்ல,
கண்களில் கண்ணீர் தன்னையும் மீறி வழிந்தாலும், உடம்பு சுட்டாலும் ,தந்தையின் நிலையை எண்ணி வேதனையுடன் கண்கள் கலங்க செந்திலை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள் "கனகா".
"ஏன்? புள்ள இவ்வளவு தூரம் வந்த "என்று தன் மகளை லேசாக தோளில் சாய்த்து கொண்டு செல்ல ,
"இல்ல நீ காலையிலேயே சாப்பிடலையா ?அதனால தான் பா".
"அதுக்குன்னு" என்றவர் சைக்கிள் எடுக்க ,
வேகமாக "அண்ணா ஒரு நிமிஷம் நில்லுங்க" என்று அவரின் அருகில் செந்தில் வந்து நிற்க .
"என்ன தம்பி" என்றார்.
"சைக்கிள்ல உங்க பொண்ணால உட்கார முடியுமா? இப்போ இருக்க நிலையில.வாங்க என் வண்டியில் கூட்டிட்டு போறேன்".
"இ..இல்லப்பா அ..அது" என்று தயங்க..
"ஒன்னும் இல்ல வாங்க" என்று அவரை உட்கார வைத்துக்கொண்டு, பின்னாடி அவரது மகள் கனகாவை உட்கார வைத்து தனது புல்லட்டிலே அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றான்.
அழைத்துச் சென்று ,காட்டிவிட்டு வீட்டிலும் கொண்டு வந்து விட,
" ஐயா ரொம்ப நன்றி ஐயா. எங்களுக்கு இந்த அளவுக்கு உதவி செய்ததுக்கு, அப்பாவை உங்க கூடவே கூட்டிட்டு போங்க. நான் என்ன பாத்துக்குறேன் அப்பா வேலைக்கு வரட்டும்.கால் வயிறு கஞ்சியா இருந்தாலும் உழைச்சு தான் குடிக்கணும். உங்க கிட்ட வாங்கின காச சீக்கிரம் கொடுத்தா தான் எனக்கும் சரி, எங்க அப்பாவுக்கும் சரி தூக்கம் வரும்" என்று உடல் நடுங்க ,போர்வையை போர்த்திக் கொண்டே சொல்ல,
அவளை லேசான முறைப்புடன் பார்த்தவன்." இந்த காசு எனக்கு இப்பவே வேணும்னு நான் உங்க ரெண்டு பேர் கிட்டையும் சொல்லல மா சரியா ?"என்றவன். எதுவும் பேசாமல் செல்ல,
" சாரி தம்பி. புள்ள ஏதோ "...என்று சொல்லும் போதே,
"ஒன்னும் இல்ல "என்று எதுவும் பேசாமல் தன் வண்டியில் ஏறி உட்கார்ந்த படி வெளியில் இருந்து பார்த்தாலே தெரியும் படியாக தான் ஹாலில் உட்கார்ந்து இருந்தாள் கனகா. அவளை குறுகுறு பார்வையோடு பார்த்தவன். எதுவும் பேசாமல் சென்று விட்டான்.
மேலும் இரண்டு நாட்கள் சென்று இருந்தது. அவனது தோப்பில் ஒரு வாரத்திற்கு தேங்காய் அருப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, கனகா தன் அப்பாவிற்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து இருக்க,
கணக்கு வழக்குகளை கீழே
நின்று பார்த்துக் கொண்டிருந்தவன். அவள் தன்னை கடந்து செல்வதை பார்த்தவன். "ஏ! பொண்ணே !"என்று அழைக்க,