• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 22, 2024
Messages
6
"ஏ யா! செந்தில் கெளம்பு ஒரு எட்டு இந்த ஒரே ஒரு முறை மட்டும் போயிட்டு வந்துருவோம்" என்று தன் மகனின் தோளில் கை வைக்க,

விருட்டென நிமிர்ந்த செந்தில் தன் தாயை சிவந்த விழிகளுடன் பார்த்தவன்.

"ஏன் ம்மா என்னை இப்படி ஒவ்வொரு முறையும் வேதனை பட வைக்கிறீங்க?".

"என்ன ய்யா! நாங்க பண்ணிட்டோம் அப்படி".

" போதும் மா. இதோட இத விடுங்க.எத்தனை முறை நீங்களும் இந்த ஏழு வருஷமா ஒவ்வொரு வீடா ஏறி இறங்குவீங்க.அதான் எனக்கு யாரும் பொண்ணு தரல இல்ல விட்டுருங்க. நான் இப்படியே இருந்துட்டு போறேன். இப்ப கல்யாணம் ஆகலைன்னா என்ன கேட்டுடப் போகுது".

" ஏன்! யா இப்படி எல்லாம் பேசுற. இப்படி எல்லாம் சொல்லாத யா"

" மா ப்ளீஸ் விட்ருங்க" என்றவன். எதுவும் பேசாமல் எழுந்து செல்ல,

அவனது தாயும்,தந்தையும் கத்த கத்த காதில் வாங்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் செந்தில் 35 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் அவனுக்கு பின்னாடி பிறந்தவன் குமரன்.

அவன் ஏழு வருடங்களுக்கு முன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே,அவனுடன் படிக்கும் பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லி ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள, ஆகையால் குமரனின் அண்ணன் செந்திலின் திருமணம் தடைப்பட்டது.

அப்பொழுதுதான், அவனுக்கு பெண் பார்க்கும் படலமும் ஆரம்பமாகியது. அந்த நேரத்தில் அண்ணனுக்கு முன்பாகவே தம்பி திருமணம் செய்து கொண்டு வந்து நிற்க,

அப்பொழுது அண்ணனுக்கு ஏதோ குறை இருக்க போய் தான் தம்பி திருமணம் செய்து இருக்கிறான் என்ற பேச்சு அப்போதிலிருந்து இப்பொழுது வரை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக அவனை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.

அவனது அப்பா ,அம்மாவும் ஆரம்பத்தில் குமரனை வீட்டில் கூட சேர்த்துக் கொள்ளாமல் துரத்தி விட்டார்கள்.

செந்திலின் பேச்சுக்கு இணங்க, குமரனை அவனது காதல் மனைவியுடன் இந்த வீட்டில் தான் குடி வைத்திருந்தார்கள்.

ஆனால், மூத்த மகனின் திருமணம் இவர்களின் திருமணத்தால் தடையாக இருக்க, இருவரிடமும் பேச்சு வார்த்தை இருந்தாலும், தனி குடித்தனம் வைத்து விட்டார்கள்.

கிட்டத்தட்ட இப்பொழுது ஏழு வருடங்களாக அவனது அப்பா அம்மாவும் செந்திலுக்கு திருமணம் செய்ய பெண் வீடு அடிக்கடி ஏறி இறங்க , அனைவரும் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஓரளவிற்கு நிச்சயம் செய்யும் அளவிற்கு வந்தாலும், ஏதோ குறை இருக்க போய் தான் அண்ணனுக்கு முன்பாகவே தம்பிக்கு திருமணமாகி இருக்கிறது. எங்களிடம் எதையோ மறைத்து உங்கள் மகனை எங்கள் வீட்டு பிள்ளையின் தலையில் கட்டி வைக்க பார்க்கிறீர்கள் என்று சொல்லி அனைத்தையும் நிறுத்தி விடுவார்கள்.

அவனும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கியதில் சளிப்படைந்து, இறுதியில் தனக்கு திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

தன் அப்பா ,அம்மாவிடம் சண்டை இட்டவாறு வயல்வெளிக்கு சென்று கொண்டிருக்க ,அங்கு அவனது தென்னந்தோப்பில் தேங்காய் மேலே ஏறி ஆட்கள் பறித்து போட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது அந்த வழியாக ஒரு பெண் வந்தாள்.

தனது அப்பாவிற்கு சாப்பாடு கொடுத்து விட்டு செல்ல, அப்பொழுது அவள் மீது ஒரு தேங்காய் விழ போக,அப்போதுதான் அந்த இடத்தை வந்தடைந்த செந்தில்.

" ஏய் !இந்தாருமா தேங்காய் உன் மேல விழப்போகுது" என்ற கத்தலுடனே அவளது அருகில் வந்து நிற்க..

அவள் பதறியவாறு விலகுவதற்கு முன்பே செந்தில் அவ்விடம் வந்தவன் வேகமாக அவளை பிடித்து இழுத்து இருந்தான். அவன் இழுத்த வேகத்தில் அவனது நெஞ்சில் மோதி நிற்க,

அவனது கத்தலில் சுற்றி இருந்தவர்களும் ,'எங்கு அவள் மீது தேங்காய் விழுந்து ஏதாவது ஆகி விடுமோ ?'என்ற பயத்துடன் அனைவரும் அவளை பார்க்க,

அவளுடைய அப்பா மரத்திலிருந்து வேகமாக கீழே இறங்கியவர்." நீ ஏன்?புள்ள இங்க வந்து நிக்கிற .நான் தேங்காய் பறிக்க சொல்லிட்டு தானே வந்தேன்"என்றால் பதப்பதைப்புடன்.. தன் மகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ற படபடப்பு அவரிடம் வெளிப்படையாகவே தென்பட்டது.

" நீ காலையிலேயே கஞ்சி குடிக்கலையேப்பா. அதான், உனக்கு சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வந்தேன். பொழுதனைக்கும் இங்க வேலை இருக்கு . பொழுது சாய்ஞ்ச பிறகு தான வருவேன்னு சொல்லிட்டு வந்த அதான்" என்றாள் லேசான திணறலுடன்.. உள்ளுக்குள் எழுந்த பயத்துடன்..

"சரி அங்கன வச்சிட்டு போக வேண்டியது தான. நம்ம வீட்டு தூக்கு வாலி எனக்கு தெரியாதா?" என்றார் லேசான கோபத்துடன்.

"இல்லை யா அது காலையிலேயே நீங்க கஞ்சி குடிக்காம வந்துட்டீங்க இல்ல. அதான் "என்றாள் மிரட்சியான பார்வையுடன் ..

"அதுக்குன்னு உனக்கு தான் மேலுக்கு முடியல இல்ல. அதனால தானே இங்க வந்து ஏதாவது பாத்துக்கலாம்னு வந்தேன்" என்றார் தன் மகளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது இருப்பதும் ஒரே ஒரு மகள்.

தனக்கு துணை அவள் தான் அவளுக்கு துணையும் தான் மட்டும் தானே என்ற பயத்திலும் , ஆதங்கத்திலும் தன் மகளின் தலையை வாஞ்சனையாக கோத ,

"சாரிங்க புள்ள தெரியாம வந்துருச்சு. உங்க வேலையும் கெட்டு போச்சு" என்று சுற்றி இருப்பவர்களை பார்த்து விட்டு, செந்திலிடம் மன்னிப்பு வேண்டிவிட்டு, சுற்றி இருப்பவர்களை "நீங்க உங்க வேலைய பாருங்கப்பா எல்லாரும் மன்னிச்சிடுங்க" என்று சொல்ல,

செந்தில் தான் லேசான கோபத்துடன்,
"ஏன் அண்ணா உங்க பிள்ளைக்கு மேலுக்கு கூட முடியலன்னு சொல்றீங்க ?ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் காமிக்காம இங்க என்ன வேலைக்கு வந்து இருக்கீங்க ?"என்றான்.

" என்னப்பா பண்றது வச்சிருக்கறது ஒரு புள்ள ,பொட்ட புள்ள அதுவும், வயசுக்கு வந்த புள்ள ,காலகாலத்துல நல்ல இடமாக பார்த்து கட்டிக் கொடுக்க வேண்டாமா? அவளை பெத்த ஆத்தாவும் இவளை பெத்து போட்ட உடனே போய் சேர்ந்துட்டா, இம்புட்டு நாளா எனக்கும் ,இவளுக்கும் துணைக்கு இருந்து வளர்த்த என்னோட ஆத்தாவும் இப்போ அஞ்சு ஆறு மாசத்துக்கு முன்னாடி போய் சேர்ந்திருச்சு. இப்போ எனக்கு அவ,அவளுக்கு நான் தான் அப்படி இருக்கப்ப எங்கள நாங்க தானே பார்த்துக்கணும்,நானும் கிடைக்கிற கூலி வேலைக்கு போய் தான் எங்க வயித்த கழுவனும். ரெண்டு நாளா நான் வீட்ல இருந்த வரைக்கும் சமைச்சு போட்டு பாத்துக்கிட்டேன்.இன்னைக்கு இங்க வந்துட்டு பொழுது சாய போனா, எனக்கு ஒரு ஆயிரம் ரூபா கிடைக்கும். அத வச்சு தான் புள்ளைய நாளைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்னு இருந்தேன். அதனாலதான் இங்கன வந்தேன் தம்பி வேலைக்கு "என்றார் தலையில் இருந்த துண்டை அவிழ்த்தவாறு,

"ஏன் அண்ணா உங்க மகளுக்கு மேலுக்கு முடியலனு காசு கேட்ட தராமலா போயிடுவேன். அதுக்குன்னு இப்படி மேலுக்கு முடியாத பிள்ளையை அலைய வச்சு வேடிக்கை பாக்குறீங்க ?போய் ஃபர்ஸ்ட் உங்க பிள்ளையை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் காமிங்க "என்று தனது சட்டை பாக்கெட்டில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்ட,


" தம்பி வேணாம். நான் வேலைய முடிச்சுட்டு வாங்கிக்கிறேன்".

" இத நான் கூலியா தரல.உங்களால முடியிற அப்போ குடுங்க.இப்ப போயிட்டு புள்ளைய பாருங்க. இன்னும் அஞ்சு ஆறு நாளைக்கு நம்ம தோப்பில் வேலை இருக்கு. நாளை மறுநாள் நீங்க வந்து வேலை செஞ்சுட்டு கூலி வாங்கின பிறகு, கூட நீங்க காசு குடுங்க ஒன்னும் பிரச்சனை இல்ல".

அவளுமே நிற்க முடியாமல் நின்று கொண்டிருப்பதை பார்த்த அவளின் அப்பா "சரி தம்பி ரொம்ப நன்றி" என்று விட்டு தன் மகளை அழைத்துக் கொண்டு செல்ல,

கண்களில் கண்ணீர் தன்னையும் மீறி வழிந்தாலும், உடம்பு சுட்டாலும் ,தந்தையின் நிலையை எண்ணி வேதனையுடன் கண்கள் கலங்க செந்திலை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள் "கனகா".

"ஏன்? புள்ள இவ்வளவு தூரம் வந்த "என்று தன் மகளை லேசாக தோளில் சாய்த்து கொண்டு செல்ல ,

"இல்ல நீ காலையிலேயே சாப்பிடலையா ?அதனால தான் பா".


"அதுக்குன்னு" என்றவர் சைக்கிள் எடுக்க ,

வேகமாக "அண்ணா ஒரு நிமிஷம் நில்லுங்க" என்று அவரின் அருகில் செந்தில் வந்து நிற்க .

"என்ன தம்பி" என்றார்.

"சைக்கிள்ல உங்க பொண்ணால உட்கார முடியுமா? இப்போ இருக்க நிலையில.வாங்க என் வண்டியில் கூட்டிட்டு போறேன்".

"இ..இல்லப்பா அ..அது" என்று தயங்க..

"ஒன்னும் இல்ல வாங்க" என்று அவரை உட்கார வைத்துக்கொண்டு, பின்னாடி அவரது மகள் கனகாவை உட்கார வைத்து தனது புல்லட்டிலே அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றான்.

அழைத்துச் சென்று ,காட்டிவிட்டு வீட்டிலும் கொண்டு வந்து விட,

" ஐயா ரொம்ப நன்றி ஐயா. எங்களுக்கு இந்த அளவுக்கு உதவி செய்ததுக்கு, அப்பாவை உங்க கூடவே கூட்டிட்டு போங்க. நான் என்ன பாத்துக்குறேன் அப்பா வேலைக்கு வரட்டும்.கால் வயிறு கஞ்சியா இருந்தாலும் உழைச்சு தான் குடிக்கணும். உங்க கிட்ட வாங்கின காச சீக்கிரம் கொடுத்தா தான் எனக்கும் சரி, எங்க அப்பாவுக்கும் சரி தூக்கம் வரும்" என்று உடல் நடுங்க ,போர்வையை போர்த்திக் கொண்டே சொல்ல,

அவளை லேசான முறைப்புடன் பார்த்தவன்." இந்த காசு எனக்கு இப்பவே வேணும்னு நான் உங்க ரெண்டு பேர் கிட்டையும் சொல்லல மா சரியா ?"என்றவன். எதுவும் பேசாமல் செல்ல,

" சாரி தம்பி. புள்ள ஏதோ "...என்று சொல்லும் போதே,

"ஒன்னும் இல்ல "என்று எதுவும் பேசாமல் தன் வண்டியில் ஏறி உட்கார்ந்த படி வெளியில் இருந்து பார்த்தாலே தெரியும் படியாக தான் ஹாலில் உட்கார்ந்து இருந்தாள் கனகா. அவளை குறுகுறு பார்வையோடு பார்த்தவன். எதுவும் பேசாமல் சென்று விட்டான்.

மேலும் இரண்டு நாட்கள் சென்று இருந்தது. அவனது தோப்பில் ஒரு வாரத்திற்கு தேங்காய் அருப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, கனகா தன் அப்பாவிற்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து இருக்க,

கணக்கு வழக்குகளை கீழே
நின்று பார்த்துக் கொண்டிருந்தவன். அவள் தன்னை கடந்து செல்வதை பார்த்தவன். "ஏ! பொண்ணே !"என்று அழைக்க,
 
New member
Joined
Dec 22, 2024
Messages
6
திரும்பி பார்த்தவள். எதுவும் பேசாமல் கடந்து செல்ல,


" எம்மா மஞ்ச தாவணி உன்ன தான் மா கூப்பிடுறேன்".

" என்னைய வா. எனக்கு பேரு இருக்கே,நீங்க பொண்ணுன்னு தான கூப்பீட்டீங்க, அப்போ, நீங்க வேற யாரையோ கூப்பிடுறீங்கன்னு தான எனக்கு தோணும் "என்றாள் .



அவளை புன்னகையுடன் பார்த்தவன். "இங்க உன்னை தவிர வேற எதுவும் பொண்ணு இருக்காங்களோ ?"என்றான் கண்களை சுழல விட்டவாறு ,

அவளும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு, "இல்லை "என்பது போல் உதட்டைப் பிதுக்க,

" அப்புறம் என்ன ?உன்ன தான அப்போ கூப்பிட்டு இருப்பேன்".

"அதுக்குன்னு பேர் சொல்லி கூப்பிட மாட்டீங்களா ?"என்றாள் அவளும் வாய்க்கு வாய் வாதாடிய படி..

"நல்லா தான் பேசுற.அன்னைக்கு ஏதோ ஊமை மாதிரி இருந்த".

" நானா" என்று சண்டைக்கு வர,

" சரிம்மா. உன்கிட்ட சண்டைக்கு எல்லாம் வரல, உடம்பு எப்படி இருக்கு இப்போ?"

" அதெல்லாம் பரவாயில்லை. நல்லா இருக்கா போய் தானே இவ்வளவு தூரம் வந்து இருக்கேன்"

"அது சரி "என்க ,

அவள் எதுவும் பேசாமல் நகர,

" ஹே !"என்றான்.

" இன்னொரு முறை இப்படி கூப்பிட்டாதீங்க சார். பேர் சொல்லி கூப்பிடுங்க ".

"சரி.உன் பேர் என்ன? நீ சொன்னா தான நான் பேர் சொல்லி கூப்பிட"என்றான் நக்கல் தோணியில்,


வாயை கோணித்து காண்பித்து விட்டு நகர, அவளது முடியை பிடித்து இழுத்தான். முடி நீளமாகவே இருக்க,

"என்ன சார் நினைச்சுட்டு இருக்கீங்க? யார் ?என்னன்னு தெரியாது பொண்ணு கிட்ட இப்படித்தான் வம்பு இழுப்பீங்களா ?ஏதோ முறை புள்ளையை உரிமையா புடிச்சி இழுக்கிற மாதிரி முடியை புடிச்சி இழுக்கறீங்க ?"என்று கோவமாகவே அவள் கேட்க,

அவளது கோபம் கூட கொஞ்சல் போல அவனுக்கு கேட்டது. 35 வயது அடங்கிய இவனுக்கு அந்த சிறிய பெண்ணின் பேச்சு ஏதோ உள்ளுக்குள் செய்ய, அவளை அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றான்.

அப்பொழுது ,அனைவரும் மேலிருந்து கீழே இறங்கி வர ,

கனகாவின் அப்பாவும் அருகில் வந்து நிற்க .

"என்னம்மா தம்பி கிட்ட வம்பு இழுத்துட்டு இருக்க. அமைதியா இரு "என்றார்


"நான் எங்க வம்பு இழுத்தேன்.உங்க தம்பி தான் வம்பு இழுக்குறாரு "என்று வாயைக் கோணித்து காண்பித்து விட்டு முகத்தை திருப்ப,

" நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ?"என்று கனகாவின் அப்பாவிடம் கேட்க,

அவரும் "என்ன தம்பி "என்க ,

"உங்க பொண்ணுக்கு வயசு என்ன ?"என்றான்.

அவர் ஒன்றும் புரியாமல் திருத்திருவென முழிக்க,

" உங்கள தான் ஐயா கேட்கிறேன்" என்றான்.

இவ்வளவு நாள "அண்ணா "என்று அழைத்தவன் . இப்பொழுது "ஐயா" என்று அழைக்கவும் ஒன்றும் புரியாமல் "23 வயசு தொடங்க போகுது யா" என்றார்.

" நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ?"என்றான் திரும்பவும்,

இதுவரை ஏதோ பேசி விட்டான். ஆனால், இப்பொழுது ஏதோ ஒன்று கேட்க தடுக்க, லேசான தடுமாற்றத்துடன் அவரை பார்த்தான்.

அவருக்குமே ஒன்றும் புரியாமல் ,"என்னப்பா என்ன ஆச்சு".

"இ..இ..இல்ல அ...அது "என்று திக்கி திணறியவன்.

" உங்க பொண்ணு கனகாவை எனக்கு கட்டிக் கொடுக்கிறீங்களா ?"என்று பட்டென்று கேட்டு விட்டான்.

அவன் கேட்டதில் சுற்றியுள்ள அனைவருமே அவனை தான் பார்த்தார்கள்.

கனகா, கோபம் கொப்பளிக்க "என்னையா பெரிய இடம்னா என்ன வேனா பேசுவீங்களா ? ஏதோ தெரியாத்தனமா வாய விட்டேன். அதுக்காக ?"என்று முறைத்தவள்.

" ப்பா வா இவர் கிட்ட வாங்குன காச முதல்ல குடுங்க. எனக்கு ஏதோ உடம்பெல்லாம் கூசுது" என்று சொல்ல,

அவளை அடிக்க கை வாங்கிக் கொண்டு வந்தான் செந்தில். தன் செயலை உணர்ந்தவன்.வேகமாக கையை இறக்கிவிட்டு "என்ன புள்ள நினைச்சிட்டு இருக்க என்ன? ஏதோ உன்ன கட்டிக்கிட்டா, நீ என் வாழ்க்கைக்குள்ள வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு .பாத்த பத்து நிமிஷத்துல.அதான் நேரா உங்க அப்பா கிட்ட கேட்டுட்டுட்டேன். அதுக்காக ஏதோ நான் கொடுத்த காசு.அது இதுன்னு என்ன பேச்சு பேசுற "என்று விட்டு ஆதங்கமாக இப்போது கனகாவின் அப்பா முத்தையாவின் முகத்தை பார்க்க,

அவர் கைகள் பிசைந்து கொண்டு நின்றார் .

"யோசிச்சு பதில் சொல்லுங்க ஐயா. ஒன்னும் அவசரம் இல்ல. நான் வீட்ல பெரியவங்க கிட்ட சொல்லி வீட்ல வந்து பேச சொல்றேன். இப்பவும் உங்க பொண்ண ஏன்னு தெரியாம புடிச்சிருக்கு போய் தான் கேட்கிறேன். உங்க பொண்ணு நினைக்கிற மாதிரி நீங்க நினைக்க மாட்டீங்க நினைக்கிறேன். அதே மாதிரி அந்த காசுக்காக உங்க பொண்ண" என்றவன் பாதியில் வார்த்தையை நிறுத்து விட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் நகர,


"ஒரு நிமிஷம் தம்பி" என்றார்.

அவனும் நிற்க.

" என் பொண்ணு நினைச்ச மாதிரி நான் நினைக்கல. ஆனா ஊருல இருக்கவங்க அப்படித்தான் தம்பி பேசுவாங்க.நான் எதுவும் உங்களுக்கு சொல்லணும்னு அவசியம் இல்லை" என்று துண்டை வாயில் பொத்தியவாறு சொல்ல,

"ஒரு அப்பனா என்னுடைய சூழ்நிலையும் புரிஞ்சிப்பீங்க நினைக்கிறேன்" என்க,

அவரது அருகில் நெருங்கி வந்தவன். அவரது வாயிலிருந்து கையை எடுத்து விட்டு,"ஊர்ல ஆயிரம் பேசுவாங்க ஐயா. எனக்கு கூடத்தான் 35 வயசு ஆகுது. இன்னும் கல்யாணம் ஆகலைன்னு ஏதோ சொல்றாங்க .அதை நீங்க நம்ப போறீங்களா ?"என்றான் அவரது கண்களை ஊடுருவி,

"இல்லப்பா" என்பது போல் தலையசைக்க,

" அப்புறம் என்ன? ஊர்ல இருக்கிறவங்க இன்னைக்கு ஒன்னு பேசுவாங்க. நாளைக்கு வேற கதை கிடைச்சா அத பேசிகிட்டு போயிடுவாங்க.இது என் வாழ்க்கை எனக்கு உங்க பொண்ண புடிச்சிருக்கு கேட்கிறேன். இனி விருப்பத்தை நீங்களும், உங்க பொண்ணும் தான் சொல்லணும். பொறுமையா யோசிச்சே சொல்லுங்க.ஒன்னும் அவசரம் இல்ல,ஆனா உங்களுக்கும் இல்ல ,உங்க பொண்ணுக்கும் விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது "என்றவன். ஒருமுறை கனகாவை திரும்பிப் பார்த்துவிட்டு ஒற்றை புருவத்தை உயர்த்தி "என்ன ?"என்று கேட்க,

அவள் திருத்திருவென முழித்து விட்டு, "எதுவும் இல்லை" என்று தலையாட்ட,

எதுவும் பேசாமல் புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் .

மேலும் இரண்டு தினங்கள் சென்று இருந்தது. இரண்டு தினங்களாக முத்தையா தேங்காய் பறிக்கும் வேலைக்கு வரவில்லை.

இன்று தான் வந்தவர். நேராக அங்கு கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்கும் செந்திலிடம் போய் நின்றார்.

நிழல் தெரிய நிமிர்ந்தவன்.
"சொல்லுங்க ஐயா !ரெண்டு நாளா வேலைக்கு வரல".

" தம்பி கொஞ்சம் நகர்ந்து போய் பேசலாமா?" என்றவுடன்..

'அவர் நான் கேட்டதற்கு பதில் சொல்ல வருகிறார் 'என்று உணர்ந்தவன். சுற்றி இருக்கும் ஆட்களை பார்த்துவிட்டு, கீழே இருப்பவரிடம் "அண்ணா நீங்க கொஞ்சம் என்னன்னு பாத்துட்டு இருங்க. நான் வந்துடறேன் "என்று விட்டு அவரை அருகில் இருக்கும் மோட்டார் ரூமுக்கு அழைத்து செல்ல,

"சொல்லுங்க ஐயா "என்றான்.

" தம்பி நீங்க சொன்னத யோசிச்சேன்" என்று விட்டு அவர் தயங்க,

அவர் கையில் அழுத்தம் கொடுத்தவன். "உங்களுக்கு என்ன தோணுதோ அதை சொல்லுங்க.நான் பீல் பண்ணுவேன்னு நினைக்க வேண்டாம்.இல்ல உங்களுக்கு விருப்பமானாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், நீங்களும், உங்க பொண்ணும் மனசு வந்து ஒத்துக்கிட்டா மட்டும் மேற்கொண்டு பேசலாம். எங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க. ஊர் உலகத்துல பேசுவாங்கன்னு எதுவும் யோசிக்க வேண்டாம். என்னோட அப்பா, அம்மாவுக்கு என் கல்யாணம் எப்ப நடக்கும் என்ற எண்ணம் மட்டும்தான். நீங்க சரின்னு சொன்னா கல்யாணத்தை நாளைக்கு கூட வச்சுக்கலாம் இது காசு பணம் வச்சு உருவாகுற உறவு கிடையாது. எனக்கு உங்க பொண்ண புடிச்சிருக்கு, உங்க பொண்ணுக்கு என்ன புடிச்சிருந்தா? மட்டும் மேற்கொண்டு பேசலாம்" என்றான்.

அவரும் லேசாக தலையசைக்க,

" நீங்க மட்டும் சொன்னா போதாது. உங்க பொண்ணு "என்றான் இவ்வளவு நேரம் தெளிவாக பேசியவன். இப்போது தயங்க,

சிரித்து முகமாகவே "என் பொண்ணுக்கு புடிச்சிருக்க போய் தான் தம்பி உங்க கிட்ட பேச வந்து இருக்கேன். அவளுக்கு அன்னைக்கு நீங்க அவள வீட்ல விட்டுட்டு போனா அன்னைக்கே உங்கள புடிச்சு போய் இருக்கு போல" என்று விட்டு நிறுத்தினார் .தந்தையாக அதற்கு மேல் அவருக்கு சொல்ல தோன்றவில்லை.

அவரது நிலையை உணர்ந்தவன் லேசான புன் சிரிப்புடன் தலையாட்டிவிட்டு,

"சரி மாமா. நான் வீட்ல அப்பா, அம்மா கிட்ட பேசுறேன் . நீங்க வேலைய பாருங்க"என்றான்.

அவரும் சிரித்த முகத்துடன் எதுவும் பேசாமல் தன்னுடைய வேலையில் இறங்கி இருந்தார்.

அன்று மாலையே, தனது பெற்றோருடன் கனகா வீட்டிற்குச் சென்று பெண் கேட்டான்.

தன்னிடம் இருப்பதிலேயே நல்ல ஒரு புடவையை உடுத்திக் கொண்டவள், நேர்த்தியாக அதை கட்டிக் கொண்டு தன் வீட்டில் இருக்கும் ஒற்றை அறையில் இருந்து வெளியில் வர, அவளை முதல் முறையாக புடவையில் பார்த்தவனின் அதரங்களில் புன்னகை.

புன் சிரிப்புடன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளும் அவனை பார்த்து புருவத்தை உயர்த்த, இங்கே இவனுக்கு தான் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. ஜில்லென்ற உணர்வு தோன்ற சந்தோஷத்தில் மிதந்தான்.

கிடைக்க வேண்டிய வயதில் கிடைக்க விட்டாலும் ,தனக்கானது கிடைக்கும் பொழுது வரும் சந்தோஷமே தனி சுகம் தான்.

' தனக்கானவள் இவள்தான் 'என்பதை உணர்ந்து நொடி அவனுக்குள் ஏற்பட்ட மாறுதலை அவளிடமும், அவளின் முன்பே அவளது பெற்றவரிடம் சொல்லி இருவரது சம்மதத்தையும் பெற்று தன் வீட்டு பெரியவர்களிடம் பேசி தன் மனதிற்கு பிடித்தவளை கரம் பிடிக்க ஆசைப்படும் செந்தில்.

இவனை போன்றோர் ஒரு சிலரும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அன்றே அவளை பேசி முடித்து செந்தில் அம்மா பேச்சி கனகாவின் தலையில் பூ வைத்து , அவளை தன் வீட்டு மூத்த மருமகளாக பேசி முடிவு செய்தா
ர்கள்.

புன்னகையுடன் அனைவரும் விடைபெற்றார்கள். இவர்களின் இந்த மகிழ்ச்சி எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிராத்திப்போம்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
கதை நல்லாயிருக்கு.‌தென்னங்கீற்றின்தென்னங்காற்றாய் ஒரு அழகிய காதல்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் கனி💐💐💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top