Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 147
- Thread Author
- #1
வணக்கம் நட்புகளே!
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும், SS25 - 'பிரியமுடன்' சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிக்க வந்துவிட்டேன்.
போட்டி முடிவுகளை அறிவுக்கும் முன், சில விசயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
காதல் கதைகள் என்று தலைப்புக் கொடுத்திருந்தோம்.
காதலின் ஆழத்தை உணர்வுபூர்வமா, இன்னும் மெருகேற்றி சொல்லி இருக்கலாம். ஒரு சில கதைகளைத் தவிர, பெரும்பாலான கதைகளில், இது இல்லை என்பது நடுவரின் கருத்து. அதை இங்கே சொல்லவேண்டியது என்னுடைய கடமை.
கதை என்று பார்த்தால், எல்லாக் கதைகளும் அழகானதுதான். போட்டிக்கதை என்றால், எல்லாக் கதைகளையும் தேர்ந்தெடுக்க முடியாது அல்லவா!
இதோ போட்டியின் முடிவுகள்.
SS25 - 'பிரியமுடன்' சிறுகதைப் போட்டியின் ஐந்து வெற்றியாளர்கள்.
1. நீ போகும் பாதையில் மனசு போகுதே - ஜீனத் சபிஹா
2. இதயத்தில் ஏதோ ஒன்று - பா.ஹேமமாலினி
3. என் ஆருயிர் நீதானடி - காஞ்சனா அன்பு செல்வம்
4. என் ராமனே உனைக் காதல் சிறையெடுத்தேன் - கலை நாவல்ஸ்
5. ரகசியா(ய) காதல் - லீலா சந்திரன்
ஆறுதல் பரிசு பெறுபவர்கள்.
1. வருணமேகமே - நிலானி தாஸ்
2. சாலிகா அலி - நீயும் நானும் அன்பே
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள் பல



தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு சிறுகதைகளும், ஒன்றாக தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளியிடப்படும்.
வெற்றி பெற்ற முதல் ஐந்து எழுத்தாளர்களுக்கு, புத்தகமும், சிறப்புப் பரிசும் கொடுக்கப்படும். ஆறுதல் பரிசு பெற்ற இரு எழுத்தாளர்களுக்கும், புத்தகம் பரிசாக அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
சிறுகதைகளை வாசித்து, ஆதரவு கொடுத்த, வாசகப் பெருமக்களுக்கும் என் நன்றிகள்.
வெற்றி பெற்ற சிறுகதைகள், விரைவில் புத்தகமாக வெளிவரும்.
நட்புடன்,
சொர்ணா சந்தனகுமார்.
Last edited: