Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 237
- Thread Author
- #1
வணக்கம் நட்புகளே!
நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும்,
SS25 - "மன்னவன் பேரைச் சொல்லி" குறுநாவல் போட்டி முடிவுகள்.
காதல் கதைகள் மட்டுமில்லாமல், மாறுபட்ட கதைக்கருக்கள் கொண்ட பல கதைகள் இப்போட்டியில் இடம் பெற்றிருந்தது. ஒவ்வொரு கதைகளும் அந்தந்த கதைக்கருவுக்கு ஏற்றாற்போல் நன்றாக எழுதியிருந்தீர்கள்.
போட்டித் தலைப்பான 'மன்னவன் பேரைச் சொல்லி' தலைப்புக்கு ஏற்றார்போல் நாயகனை மையப்படுத்தி சுழலும், காதல் கதைகள் வரும் என எதிர்பார்த்தேன். அவை மிகக் குறைவே. மேலும் கதைக்கரு நன்றாக இருந்தும், சில கதைகளில் நிறுத்தற்குறிகள் இல்லை. இருப்பினும் கதைக்கருவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கீழ்கண்ட கதைகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து வரும் போட்டிகளில் எழுத்துப்பிழை, நிறுத்தற்குறிகளை சரியாக பயன்படுத்தவும்.
போட்டிக்கதைகளில் மொத்தம் பதினான்கு கதைகள் முடிவுற்றிருக்கிறது.
முதல் மூன்று பரிசுகளை வெல்பவர்கள்:
முதல் பரிசு - அவன் பெயர் அக்பர் - பா.ஹேமமாலினி (ரூ.3,000)
இரண்டாம் பரிசு - ஒரு முறை சொல்லடி - சீமா (ரூ.2000)
மூன்றாம் பரிசு - நிழலாக இருந்த ஒளி - உஷாராணி (ரூ.1,000)
மூவருக்கும் பரிசுத் தொகை, ட்ராபி, சான்றிதழுடன், அவர்களின் கதைகள் புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.
ஆறுதல் பரிசாக - காஞ்சனா அன்புச் செல்வம் அவர்களின், விடியும்வரை கதைப்போமா குறுநாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இவருக்கும் ட்ராபி, சான்றிதழோடு அவரின் கதை புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.
அடுத்து வாசகருக்கான பரிசைக் கொடுக்க எழுத்தாளர் திரு. பாரதிப்பிரியன் அவர்கள் முன் வந்துள்ளது, எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்தாளர் திரு. பாரதிப்பிரியன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
வரலாற்று நாவல் மூவருக்கு அளிப்பதாக அறிவித்திருந்தோம். ஆனால், ஒருவர்தான் அனைத்து கதைகளையும் பொறுமையாகப் படித்து விமர்சனம் கொடுத்தார்.
வரலாற்று நாவல் பரிசினை வென்ற வாசகர் - கௌரி கார்த்திகேயன் அவர்களுக்கு எனது நன்றிகள்.
எங்கள் தளத்தில் படித்த அனைத்து வாசகர்களுக்கும், மற்றும் எழுத்தாளர்களுக்கும் எனது நன்றிகள். தொடர்ந்து தங்கள் ஆதரவைக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்னடா நான்கு கதைகள் மட்டும் தேர்வாச்சின்னா, என்னோடது நல்ல கதை இல்லையான்னு யாரும் மறந்தும் நினைச்சிராதீங்க.
கதைகள் எல்லாமே நன்றாக இருந்தது. அதில் குறை சொல்ல ஏதுமில்லை. எல்லா கதைகளையும் தேர்ந்தெடுக்க முடியாதது வருத்தம்தான்.
அடுத்த முயற்சியில் வெற்றியைத் தட்டிச்செல்ல வாய்ப்புள்ளது. தொடர்ந்து முயலுங்க வெற்றி தங்களோடதாகட்டும்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் நன்றிகள் பல.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும்,
SS25 - "மன்னவன் பேரைச் சொல்லி" குறுநாவல் போட்டி முடிவுகள்.
காதல் கதைகள் மட்டுமில்லாமல், மாறுபட்ட கதைக்கருக்கள் கொண்ட பல கதைகள் இப்போட்டியில் இடம் பெற்றிருந்தது. ஒவ்வொரு கதைகளும் அந்தந்த கதைக்கருவுக்கு ஏற்றாற்போல் நன்றாக எழுதியிருந்தீர்கள்.
போட்டித் தலைப்பான 'மன்னவன் பேரைச் சொல்லி' தலைப்புக்கு ஏற்றார்போல் நாயகனை மையப்படுத்தி சுழலும், காதல் கதைகள் வரும் என எதிர்பார்த்தேன். அவை மிகக் குறைவே. மேலும் கதைக்கரு நன்றாக இருந்தும், சில கதைகளில் நிறுத்தற்குறிகள் இல்லை. இருப்பினும் கதைக்கருவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கீழ்கண்ட கதைகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து வரும் போட்டிகளில் எழுத்துப்பிழை, நிறுத்தற்குறிகளை சரியாக பயன்படுத்தவும்.
போட்டிக்கதைகளில் மொத்தம் பதினான்கு கதைகள் முடிவுற்றிருக்கிறது.
முதல் மூன்று பரிசுகளை வெல்பவர்கள்:
முதல் பரிசு - அவன் பெயர் அக்பர் - பா.ஹேமமாலினி (ரூ.3,000)
இரண்டாம் பரிசு - ஒரு முறை சொல்லடி - சீமா (ரூ.2000)
மூன்றாம் பரிசு - நிழலாக இருந்த ஒளி - உஷாராணி (ரூ.1,000)
மூவருக்கும் பரிசுத் தொகை, ட்ராபி, சான்றிதழுடன், அவர்களின் கதைகள் புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.
ஆறுதல் பரிசாக - காஞ்சனா அன்புச் செல்வம் அவர்களின், விடியும்வரை கதைப்போமா குறுநாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இவருக்கும் ட்ராபி, சான்றிதழோடு அவரின் கதை புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.
அடுத்து வாசகருக்கான பரிசைக் கொடுக்க எழுத்தாளர் திரு. பாரதிப்பிரியன் அவர்கள் முன் வந்துள்ளது, எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்தாளர் திரு. பாரதிப்பிரியன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
வரலாற்று நாவல் மூவருக்கு அளிப்பதாக அறிவித்திருந்தோம். ஆனால், ஒருவர்தான் அனைத்து கதைகளையும் பொறுமையாகப் படித்து விமர்சனம் கொடுத்தார்.
வரலாற்று நாவல் பரிசினை வென்ற வாசகர் - கௌரி கார்த்திகேயன் அவர்களுக்கு எனது நன்றிகள்.
எங்கள் தளத்தில் படித்த அனைத்து வாசகர்களுக்கும், மற்றும் எழுத்தாளர்களுக்கும் எனது நன்றிகள். தொடர்ந்து தங்கள் ஆதரவைக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்னடா நான்கு கதைகள் மட்டும் தேர்வாச்சின்னா, என்னோடது நல்ல கதை இல்லையான்னு யாரும் மறந்தும் நினைச்சிராதீங்க.
கதைகள் எல்லாமே நன்றாக இருந்தது. அதில் குறை சொல்ல ஏதுமில்லை. எல்லா கதைகளையும் தேர்ந்தெடுக்க முடியாதது வருத்தம்தான்.
அடுத்த முயற்சியில் வெற்றியைத் தட்டிச்செல்ல வாய்ப்புள்ளது. தொடர்ந்து முயலுங்க வெற்றி தங்களோடதாகட்டும்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் நன்றிகள் பல.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்