Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 147
- Thread Author
- #1
வணக்கம் நட்புகளே!
நீங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்கும் SS24 - சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிக்க வந்துவிட்டேன். சிறுகதைகளில் நிறைய கதைகள் சமூக அக்கறையில் எழுதப்பட்டவை. போட்டியில் பங்கெடுத்த எழுத்தாளர்களுக்கு என் நன்றிகள். எல்லா சிறுகதைகளையும் தேர்ந்தெடுக்க முடியாததற்கு வருந்துகிறேன்.
முதல் ஐந்து இடங்களுக்குத் தேர்வானவர்கள்:
1. ஹீரா நிலவன் - அன்பின் ஆழம்
2. மோனிகா - தனக்கென்ற வாழ்வு
3. கிர்த்திகா விக்னேஷ்வரன் - சிறைக்கூடம்
4. கவிசௌமி - கௌரவ திருமணம்
5. சரண்யா சதீஷ் - அரிச்சுவடி
இந்த ஐந்து சிறுகதைகளைத் தவிர, இன்னும் ஐந்து சிறுகதைகள் ஆறுதல் பரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
1. ஜீனத் சபிஹா - அவரவர் நியாயம்
2. நர்மதா சுப்ரமணியம் - பிரியமுடன் பிரியன்
3. காஞ்சனமாலா - முதல் தரிசனம்
4. அனுசுயா ராஜேஷ் - மகிழ்ந்திரு
5. மஹாலக்ஷ்மி "மஹி" - ஐயம்
தேர்வான முதல் ஐந்து கதைகளுக்குப் புத்தகமும் சிறப்புப் பரிசு கொடுக்கப்படும். மற்ற ஐந்து சிறுகதைகளுக்குப் புத்தகம் மட்டும் விரைவில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டிக்கு ஜட்ஜாக வந்தவர், பல வருடங்களாக வாசகராக இருப்பவர். நான் கேட்டதும் மறுப்பேதும் கூறாமல் உடனே சம்மதித்து, பொறுமையாகப் படித்துக் கதைகளைத் தேர்ந்தெடுத்து கொடுத்தமைக்கு ஜட்ஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்பு எழுத்தாளர்கள் (Guest Writers)
எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. நான் கேட்டதும் முடியாது என்ற வார்த்தை யாரிடமிருந்தும் வரவில்லை. உண்மையைச் சொல்லனும் என்றால் இதில் சுதாக்கா, எஸ்.பர்வீன் பானு, ரேவதி அசோக், அகிலா வைகுண்டம் தவிர யாரிடமும் நான் பேசியதில்லை. ஆனாலும், நான் கேட்டதும் மறுக்காது சம்மதித்தார்கள்.
எழுத்தாளர் எஸ்.பர்வீன் பானு! இவர்களிடம் கடைசி நேரத்தில்தான் கேட்டேன், "ஆன்லைனில் கதைகள் எழுதியதில்லை சொர்ணா. உங்களுக்காகப் பண்றேன்னு" சொன்னதும் அவ்வளவு சந்தோஷம். சுதாக்கா, ரேவதி அசோக் இருவரும் அவ்வளவு பிஸியா இருந்தும் சிறுகதை கொடுத்தாங்க. உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேதா விஷால், கௌரி முத்துகிருஷ்ணன், தூரிகா சரவணன், மேகவாணி இவங்ககிட்ட நான் பேசினதே கிடையாது. ஆனால், நான் கேட்டதும் மறுக்காமல் கதை எழுதிக் கொடுத்தாங்க. அன்புடன் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன். செழிலி நான் போட்டியாளரா வரலை. ஆனால், சிறப்பு எழுத்தாளரா வர்றேன் என்று வந்து கதை எழுதியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்மா.
அகிலா வைகுண்டம், "அக்கா நீங்க கூப்பிடுறீங்க. நான் கண்டிப்பா வர்றேன்னு" உற்சாகமா பேசிக் கதை எழுதி அனுப்பியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் அகிலா.
சிலரால் முடியாத சூழ்நிலை. இன்னும் சிலர் சிறுகதை எழுதிப் பழக்கமே இல்லாதவர்கள். இருந்தும் முயற்சிப்பதாகச் சொன்னவர்கள்.
மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். போட்டியில் பங்கெடுத்த போட்டியாளர்களுக்கும், சிறப்பு எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும், போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாசகப் பெருமக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நீங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்கும் SS24 - சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிக்க வந்துவிட்டேன். சிறுகதைகளில் நிறைய கதைகள் சமூக அக்கறையில் எழுதப்பட்டவை. போட்டியில் பங்கெடுத்த எழுத்தாளர்களுக்கு என் நன்றிகள். எல்லா சிறுகதைகளையும் தேர்ந்தெடுக்க முடியாததற்கு வருந்துகிறேன்.
முதல் ஐந்து இடங்களுக்குத் தேர்வானவர்கள்:
1. ஹீரா நிலவன் - அன்பின் ஆழம்
2. மோனிகா - தனக்கென்ற வாழ்வு
3. கிர்த்திகா விக்னேஷ்வரன் - சிறைக்கூடம்
4. கவிசௌமி - கௌரவ திருமணம்
5. சரண்யா சதீஷ் - அரிச்சுவடி
இந்த ஐந்து சிறுகதைகளைத் தவிர, இன்னும் ஐந்து சிறுகதைகள் ஆறுதல் பரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
1. ஜீனத் சபிஹா - அவரவர் நியாயம்
2. நர்மதா சுப்ரமணியம் - பிரியமுடன் பிரியன்
3. காஞ்சனமாலா - முதல் தரிசனம்
4. அனுசுயா ராஜேஷ் - மகிழ்ந்திரு
5. மஹாலக்ஷ்மி "மஹி" - ஐயம்
தேர்வான முதல் ஐந்து கதைகளுக்குப் புத்தகமும் சிறப்புப் பரிசு கொடுக்கப்படும். மற்ற ஐந்து சிறுகதைகளுக்குப் புத்தகம் மட்டும் விரைவில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டிக்கு ஜட்ஜாக வந்தவர், பல வருடங்களாக வாசகராக இருப்பவர். நான் கேட்டதும் மறுப்பேதும் கூறாமல் உடனே சம்மதித்து, பொறுமையாகப் படித்துக் கதைகளைத் தேர்ந்தெடுத்து கொடுத்தமைக்கு ஜட்ஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்பு எழுத்தாளர்கள் (Guest Writers)
எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. நான் கேட்டதும் முடியாது என்ற வார்த்தை யாரிடமிருந்தும் வரவில்லை. உண்மையைச் சொல்லனும் என்றால் இதில் சுதாக்கா, எஸ்.பர்வீன் பானு, ரேவதி அசோக், அகிலா வைகுண்டம் தவிர யாரிடமும் நான் பேசியதில்லை. ஆனாலும், நான் கேட்டதும் மறுக்காது சம்மதித்தார்கள்.
எழுத்தாளர் எஸ்.பர்வீன் பானு! இவர்களிடம் கடைசி நேரத்தில்தான் கேட்டேன், "ஆன்லைனில் கதைகள் எழுதியதில்லை சொர்ணா. உங்களுக்காகப் பண்றேன்னு" சொன்னதும் அவ்வளவு சந்தோஷம். சுதாக்கா, ரேவதி அசோக் இருவரும் அவ்வளவு பிஸியா இருந்தும் சிறுகதை கொடுத்தாங்க. உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேதா விஷால், கௌரி முத்துகிருஷ்ணன், தூரிகா சரவணன், மேகவாணி இவங்ககிட்ட நான் பேசினதே கிடையாது. ஆனால், நான் கேட்டதும் மறுக்காமல் கதை எழுதிக் கொடுத்தாங்க. அன்புடன் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன். செழிலி நான் போட்டியாளரா வரலை. ஆனால், சிறப்பு எழுத்தாளரா வர்றேன் என்று வந்து கதை எழுதியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்மா.
அகிலா வைகுண்டம், "அக்கா நீங்க கூப்பிடுறீங்க. நான் கண்டிப்பா வர்றேன்னு" உற்சாகமா பேசிக் கதை எழுதி அனுப்பியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் அகிலா.
சிலரால் முடியாத சூழ்நிலை. இன்னும் சிலர் சிறுகதை எழுதிப் பழக்கமே இல்லாதவர்கள். இருந்தும் முயற்சிப்பதாகச் சொன்னவர்கள்.
மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். போட்டியில் பங்கெடுத்த போட்டியாளர்களுக்கும், சிறப்பு எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும், போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாசகப் பெருமக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



Last edited: