New member
- Joined
- Dec 26, 2024
- Messages
- 11
- Thread Author
- #1
லண்டன் விமானநிலையத்தில் நீண்ட நேரமாக செக்கிங்கில் காத்திருந்த முகிலனின் அலைபேசி மிளிர்ந்து மெசேஜ் வந்திருப்பதாக கூற, அதை பார்க்காமலேயே அது யாராக இருக்கும் என்று அறிந்து கொண்டவனின் கண்களில், சோர்வு நீங்கி தன் மனையாளை நினைத்து காதல் மின்னியது.
அதற்கு அவன் பதில் அளிக்க முயலும் போதே அடுத்து அவனது முறை வர, போனை சட்டைப் பாக்கெட்டில் இட்டவன், செக்கிங் ஃபார்மாலிட்டிஸ் மற்றும் இதர வேலைகளை முடித்துக் கொண்டு வந்தமர, ஒரு மணி நேரத்திற்கு மேலானது.
அதற்குள் அவனது வாட்ஸ் அப்பை பல கோப ஸ்டிக்கர்களாலும், குழப்ப ஸ்டிக்கர்களாலும் நிறைத்திருந்தால் அவனது இல்லாள் வசுமதி.
இன்னும் அவள் ஆன்லைனில் இருப்பதாக காட்டவே, தனது வாட்சில் மணியை பார்த்தவன், அவளுக்கு கோபத்தோடு வாட்ஸ் அப்பிலேயே பதில் அளிக்க தொடங்கினான்.
“இன்னும் தூங்காம என்னடி பண்ணிக்கிட்டு இருக்க, இந்தியால இது நைட் ஒரு மணி...”
“ ம்ம்ம் நீங்க வந்து டைம் சொல்றதுக்காகத் தான் இன்னும் தூங்காம முழிச்சிட்டிருக்கேன் வூட்டுகாரறே…ஏன்னா இங்க வாட்ச் இல்ல பாருங்க.”
“என்ன பேச்சுல திமிரு ஜாஸ்தியா இருக்கு? பக்கத்துல என்னோட அம்மா இல்லையா என்ன?”
“இங்க தான் இருக்காங்க நல்லா தூங்கிட்டு இருக்காங்க.”
“நீயும் போய் தூங்க வேண்டியது தானே லூசு. இந்த டைம்ல நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்?”
“எங்கே வயித்துல இருக்க உன் புள்ள தான் என்னை படுக்கவும் விடாம, தூங்கவும் விடாம உள்ள புரண்டுகிட்டே இருக்காளே, இதுல நான் எங்க இருந்து தூங்க?”
“பொய் சொல்லாதடி என் பிள்ளை எல்லாம் ரொம்ப சமத்து, நான் தான் பாப்பாகிட்ட சொல்லிட்டு வந்தேனே, அம்மாவுக்கு எந்த தொந்தரவும் குடுக்கக் கூடாதுன்னு.
உனக்கு உன் புருஷனோட பேசனும், அதுக்கு ஏன் டி என் பிள்ளையை வம்புக்கு இழுக்கற?”
“தெரியிதில்ல? அப்புறம் ஏன் என்னோட மெசேஜ் பார்த்துட்டு ரிப்ளை பண்ணல? அதோட பிளைட் ஏறிட்டீங்களானும் தெரியல, அப்புறம் எப்படி எனக்கு தூக்கம் வரும் மாமா?”
“செக்கிங்ல இருந்தேன் ம்மா, அதோட இது அங்க அன்டைம் வேற, அது தான் உன் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்னு நான் கால் பண்ணல.
நீ நிம்மதியா கண்ணை மூடி தூங்குவியாம், மாமா நாளைக்கு நைட் உன் கண்ணு முன்னாடி இருப்பேனாம்.”
“நைட் ஆகுமா?... “
“அச்சோ இவ்வளவு நாள் காத்திருந்த என் பொண்டாட்டியாள இந்த ஒரு நாள் காத்திருக்க முடியலையா என்ன?”
“முடியலையே மாமா...”
இரு பக்கமும் கனத்த மவுனம், அவனுக்கும் அவளை உடனே பார்க்க வேண்டும் என்று தான் தோன்றியது.
எப்போதடா தன் மனைவியின் கைகளைப் பிடித்தப்படி, அவள் வயிற்றில் வளரும் தங்கள் குழந்தையின் அசைவுகளை தொட்டு உணர்வது என்று தவித்துக் கொண்டிருந்தான்.
முதலில் தன்னை மீட்டுக் கொண்ட வசுமதி தன்னவனின் மனநிலையை மாற்ற,
“என்னடா புருஷா சத்தத்தையே காணோம், வாட்ஸ் அப்பை ஓப்பன் பண்ணி வச்சுட்டு முன்னாடி போற ஏர் ஹோஸ்டர்ஸ்ஸை எல்லாம் சைட் அடிச்சிட்டு இருக்கியா?”
இவனும் புன்னகையோடு பதில் அனுப்பத் தொடங்கினான்.
“அச்சச்சோ கரெக்டா கண்டுபிடிச்சிட்டாளே, சோத்துல விஷம் வெச்சிடுவாளோ பயமா இருக்கே?”
“ஆமா ஆமா நீங்க ரொம்ப பயந்தவர் தான் நான் நம்பிட்டேன்.”
அப்போது சரியாக பிளைட் பற்றிய அனௌன்ஸ்மென்ட் வர,
“சரிப்பா நான் தூங்க போறேன் நீங்க பார்த்து பத்திரமா வாங்க, புட் அவாய்ட் பண்ணாம கரெக்டா அந்தந்த நேரத்துக்கு சாப்பிடுங்க, குட் நைட் மாமா.”
அவளுக்கு பதில் அனுப்பிவிட்டு தன் உடைமைகளோடு விமானத்தை நோக்கி நடந்தான் முகிலன்.
முகிலனது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது. திருமணமான ஒரு மூத்த சகோதரியும் ஒரு தம்பியும் இருந்தனர்.
அவனது தந்தை அவன் கல்லூரி காலத்திலேயே தவறி இருக்க, அன்னையின் நெசவு வேலையில் கிடைத்த பணத்தில் தான் கடைசி வருட படிப்பையே முடித்தான்.
எப்போதுமே படிப்பில் முதல் மாணவனாக திகழும் அவனுக்கு மேலே படிக்க விருப்பம் இருந்தும், குடும்ப சூழ்நிலை காரணமாக கடைசி வருட படிப்பிலேயே கேம்பஸில் செலக்ட்டாகி வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டான். அவனது சம்பளம் மட்டுமே அந்த குடும்பத்துக்கு வருமானமாக இருந்தது.
வேலைக்கு சேர்ந்த அடுத்த மாதமே தன் அன்னையின் பல வருட உழைப்புக்கு ஒய்வு கொடுத்தவன், சம்பாதிக்கும் பணத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பி, தன் தம்பியை மேலே படிக்க வைத்தான்.
குடும்ப சூழ்நிலை சற்றே உயரத் தொடங்க, வீட்டில் அவனுக்கு வரன் பார்க்கத் தொடங்கினர்.
ஆனால் தனக்கென்று ஒரு சொந்தவீடு வாங்கிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன், என்ற முடிவில் உறுதியாக இருந்தவன்,கிடைத்த வருமானத்தில் சிறிது சிறிதாக சேமித்து முதலில் ஒரு நிலத்தை வாங்கினான்.
அதை அடமானமாக வைத்தே வங்கிக்கடன் பெற்று, தங்களுக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் குடியேறினான்.
அதன் பிறகு அவனுக்கு அமைந்த வரன் தான் வசுமதி.
மூத்தமகன் என்பதால் குடும்பத்து பாரம் முழுவதும் அவன் தலையில், அதை பங்கிட்டுக் கொள்ளும் தோழியாக கடவுள் அமைத்து கொடுத்த வரமாக வந்தவள் தான் வசுமதி.
திருமணத்திற்கு முன்பே அவன் தெளிவாக கூறி விட்டான்.
“ வசு என்னோட அம்மா எந்தவொரு விஷயமா இருந்தாலும் மனசுல வெச்சுக்காம முகத்திற்கு நேரா கேட்க கூடியவங்க.
இதனாலயே என் சொந்தத்துல நிறைய பேர் அவங்களுக்கு எதிராத் தான் நிற்பாங்க. முகத்துக்கு நேரா அவங்க எதுவும் சொல்லாம போனாலும், பின்னாடி இவங்களை ப் பத்தி தப்பா தான் பேசுவாங்க.
அதனால அவங்களுக்கு துணையா நான் அவங்க பக்கம் நின்னு தான் ஆகனும்.
திருமணத்திற்கு பிறகு உங்களுக்குள்ள கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை நடந்தாலும், என்னால உனக்கு ஆதரவா பேச முடியாது. எனக்காக அவங்களை பொறுத்து போவயா?...”
அதற்கு அவளிடம் இருந்து தலையசைப்போடு கூடிய குறுநகை தான் பதிலாகக் கிடைத்தது.
அதற்கு அவன் பதில் அளிக்க முயலும் போதே அடுத்து அவனது முறை வர, போனை சட்டைப் பாக்கெட்டில் இட்டவன், செக்கிங் ஃபார்மாலிட்டிஸ் மற்றும் இதர வேலைகளை முடித்துக் கொண்டு வந்தமர, ஒரு மணி நேரத்திற்கு மேலானது.
அதற்குள் அவனது வாட்ஸ் அப்பை பல கோப ஸ்டிக்கர்களாலும், குழப்ப ஸ்டிக்கர்களாலும் நிறைத்திருந்தால் அவனது இல்லாள் வசுமதி.
இன்னும் அவள் ஆன்லைனில் இருப்பதாக காட்டவே, தனது வாட்சில் மணியை பார்த்தவன், அவளுக்கு கோபத்தோடு வாட்ஸ் அப்பிலேயே பதில் அளிக்க தொடங்கினான்.
“இன்னும் தூங்காம என்னடி பண்ணிக்கிட்டு இருக்க, இந்தியால இது நைட் ஒரு மணி...”
“ ம்ம்ம் நீங்க வந்து டைம் சொல்றதுக்காகத் தான் இன்னும் தூங்காம முழிச்சிட்டிருக்கேன் வூட்டுகாரறே…ஏன்னா இங்க வாட்ச் இல்ல பாருங்க.”
“என்ன பேச்சுல திமிரு ஜாஸ்தியா இருக்கு? பக்கத்துல என்னோட அம்மா இல்லையா என்ன?”
“இங்க தான் இருக்காங்க நல்லா தூங்கிட்டு இருக்காங்க.”
“நீயும் போய் தூங்க வேண்டியது தானே லூசு. இந்த டைம்ல நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்?”
“எங்கே வயித்துல இருக்க உன் புள்ள தான் என்னை படுக்கவும் விடாம, தூங்கவும் விடாம உள்ள புரண்டுகிட்டே இருக்காளே, இதுல நான் எங்க இருந்து தூங்க?”
“பொய் சொல்லாதடி என் பிள்ளை எல்லாம் ரொம்ப சமத்து, நான் தான் பாப்பாகிட்ட சொல்லிட்டு வந்தேனே, அம்மாவுக்கு எந்த தொந்தரவும் குடுக்கக் கூடாதுன்னு.
உனக்கு உன் புருஷனோட பேசனும், அதுக்கு ஏன் டி என் பிள்ளையை வம்புக்கு இழுக்கற?”
“தெரியிதில்ல? அப்புறம் ஏன் என்னோட மெசேஜ் பார்த்துட்டு ரிப்ளை பண்ணல? அதோட பிளைட் ஏறிட்டீங்களானும் தெரியல, அப்புறம் எப்படி எனக்கு தூக்கம் வரும் மாமா?”
“செக்கிங்ல இருந்தேன் ம்மா, அதோட இது அங்க அன்டைம் வேற, அது தான் உன் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்னு நான் கால் பண்ணல.
நீ நிம்மதியா கண்ணை மூடி தூங்குவியாம், மாமா நாளைக்கு நைட் உன் கண்ணு முன்னாடி இருப்பேனாம்.”
“நைட் ஆகுமா?... “
“அச்சோ இவ்வளவு நாள் காத்திருந்த என் பொண்டாட்டியாள இந்த ஒரு நாள் காத்திருக்க முடியலையா என்ன?”
“முடியலையே மாமா...”
இரு பக்கமும் கனத்த மவுனம், அவனுக்கும் அவளை உடனே பார்க்க வேண்டும் என்று தான் தோன்றியது.
எப்போதடா தன் மனைவியின் கைகளைப் பிடித்தப்படி, அவள் வயிற்றில் வளரும் தங்கள் குழந்தையின் அசைவுகளை தொட்டு உணர்வது என்று தவித்துக் கொண்டிருந்தான்.
முதலில் தன்னை மீட்டுக் கொண்ட வசுமதி தன்னவனின் மனநிலையை மாற்ற,
“என்னடா புருஷா சத்தத்தையே காணோம், வாட்ஸ் அப்பை ஓப்பன் பண்ணி வச்சுட்டு முன்னாடி போற ஏர் ஹோஸ்டர்ஸ்ஸை எல்லாம் சைட் அடிச்சிட்டு இருக்கியா?”
இவனும் புன்னகையோடு பதில் அனுப்பத் தொடங்கினான்.
“அச்சச்சோ கரெக்டா கண்டுபிடிச்சிட்டாளே, சோத்துல விஷம் வெச்சிடுவாளோ பயமா இருக்கே?”
“ஆமா ஆமா நீங்க ரொம்ப பயந்தவர் தான் நான் நம்பிட்டேன்.”
அப்போது சரியாக பிளைட் பற்றிய அனௌன்ஸ்மென்ட் வர,
“சரிப்பா நான் தூங்க போறேன் நீங்க பார்த்து பத்திரமா வாங்க, புட் அவாய்ட் பண்ணாம கரெக்டா அந்தந்த நேரத்துக்கு சாப்பிடுங்க, குட் நைட் மாமா.”
அவளுக்கு பதில் அனுப்பிவிட்டு தன் உடைமைகளோடு விமானத்தை நோக்கி நடந்தான் முகிலன்.
முகிலனது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது. திருமணமான ஒரு மூத்த சகோதரியும் ஒரு தம்பியும் இருந்தனர்.
அவனது தந்தை அவன் கல்லூரி காலத்திலேயே தவறி இருக்க, அன்னையின் நெசவு வேலையில் கிடைத்த பணத்தில் தான் கடைசி வருட படிப்பையே முடித்தான்.
எப்போதுமே படிப்பில் முதல் மாணவனாக திகழும் அவனுக்கு மேலே படிக்க விருப்பம் இருந்தும், குடும்ப சூழ்நிலை காரணமாக கடைசி வருட படிப்பிலேயே கேம்பஸில் செலக்ட்டாகி வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டான். அவனது சம்பளம் மட்டுமே அந்த குடும்பத்துக்கு வருமானமாக இருந்தது.
வேலைக்கு சேர்ந்த அடுத்த மாதமே தன் அன்னையின் பல வருட உழைப்புக்கு ஒய்வு கொடுத்தவன், சம்பாதிக்கும் பணத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பி, தன் தம்பியை மேலே படிக்க வைத்தான்.
குடும்ப சூழ்நிலை சற்றே உயரத் தொடங்க, வீட்டில் அவனுக்கு வரன் பார்க்கத் தொடங்கினர்.
ஆனால் தனக்கென்று ஒரு சொந்தவீடு வாங்கிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன், என்ற முடிவில் உறுதியாக இருந்தவன்,கிடைத்த வருமானத்தில் சிறிது சிறிதாக சேமித்து முதலில் ஒரு நிலத்தை வாங்கினான்.
அதை அடமானமாக வைத்தே வங்கிக்கடன் பெற்று, தங்களுக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் குடியேறினான்.
அதன் பிறகு அவனுக்கு அமைந்த வரன் தான் வசுமதி.
மூத்தமகன் என்பதால் குடும்பத்து பாரம் முழுவதும் அவன் தலையில், அதை பங்கிட்டுக் கொள்ளும் தோழியாக கடவுள் அமைத்து கொடுத்த வரமாக வந்தவள் தான் வசுமதி.
திருமணத்திற்கு முன்பே அவன் தெளிவாக கூறி விட்டான்.
“ வசு என்னோட அம்மா எந்தவொரு விஷயமா இருந்தாலும் மனசுல வெச்சுக்காம முகத்திற்கு நேரா கேட்க கூடியவங்க.
இதனாலயே என் சொந்தத்துல நிறைய பேர் அவங்களுக்கு எதிராத் தான் நிற்பாங்க. முகத்துக்கு நேரா அவங்க எதுவும் சொல்லாம போனாலும், பின்னாடி இவங்களை ப் பத்தி தப்பா தான் பேசுவாங்க.
அதனால அவங்களுக்கு துணையா நான் அவங்க பக்கம் நின்னு தான் ஆகனும்.
திருமணத்திற்கு பிறகு உங்களுக்குள்ள கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை நடந்தாலும், என்னால உனக்கு ஆதரவா பேச முடியாது. எனக்காக அவங்களை பொறுத்து போவயா?...”
அதற்கு அவளிடம் இருந்து தலையசைப்போடு கூடிய குறுநகை தான் பதிலாகக் கிடைத்தது.
Last edited: