• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 26, 2024
Messages
11
லண்டன் விமானநிலையத்தில் நீண்ட நேரமாக செக்கிங்கில் காத்திருந்த முகிலனின் அலைபேசி மிளிர்ந்து மெசேஜ் வந்திருப்பதாக கூற, அதை பார்க்காமலேயே அது யாராக இருக்கும் என்று அறிந்து கொண்டவனின் கண்களில், சோர்வு நீங்கி தன் மனையாளை நினைத்து காதல் மின்னியது.

அதற்கு அவன் பதில் அளிக்க முயலும் போதே அடுத்து அவனது முறை வர, போனை சட்டைப் பாக்கெட்டில் இட்டவன், செக்கிங் ஃபார்மாலிட்டிஸ் மற்றும் இதர வேலைகளை முடித்துக் கொண்டு வந்தமர, ஒரு மணி நேரத்திற்கு மேலானது.

அதற்குள் அவனது வாட்ஸ் அப்பை பல கோப ஸ்டிக்கர்களாலும், குழப்ப ஸ்டிக்கர்களாலும் நிறைத்திருந்தால் அவனது இல்லாள் வசுமதி.

இன்னும் அவள் ஆன்லைனில் இருப்பதாக காட்டவே, தனது வாட்சில் மணியை பார்த்தவன், அவளுக்கு கோபத்தோடு வாட்ஸ் அப்பிலேயே பதில் அளிக்க தொடங்கினான்.

“இன்னும் தூங்காம என்னடி பண்ணிக்கிட்டு இருக்க, இந்தியால இது நைட் ஒரு மணி...”

“ ம்ம்ம் நீங்க வந்து டைம் சொல்றதுக்காகத் தான் இன்னும் தூங்காம முழிச்சிட்டிருக்கேன் வூட்டுகாரறே…ஏன்னா இங்க வாட்ச் இல்ல பாருங்க.”

“என்ன பேச்சுல திமிரு ஜாஸ்தியா இருக்கு? பக்கத்துல என்னோட அம்மா இல்லையா என்ன?”

“இங்க தான் இருக்காங்க நல்லா தூங்கிட்டு இருக்காங்க.”

“நீயும் போய் தூங்க வேண்டியது தானே லூசு. இந்த டைம்ல நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்?”

“எங்கே வயித்துல இருக்க உன் புள்ள தான் என்னை படுக்கவும் விடாம, தூங்கவும் விடாம உள்ள புரண்டுகிட்டே இருக்காளே, இதுல நான் எங்க இருந்து தூங்க?”

“பொய் சொல்லாதடி என் பிள்ளை எல்லாம் ரொம்ப சமத்து, நான் தான் பாப்பாகிட்ட சொல்லிட்டு வந்தேனே, அம்மாவுக்கு எந்த தொந்தரவும் குடுக்கக் கூடாதுன்னு.

உனக்கு உன் புருஷனோட பேசனும், அதுக்கு ஏன் டி என் பிள்ளையை வம்புக்கு இழுக்கற?”

“தெரியிதில்ல? அப்புறம் ஏன் என்னோட மெசேஜ் பார்த்துட்டு ரிப்ளை பண்ணல? அதோட பிளைட் ஏறிட்டீங்களானும் தெரியல, அப்புறம் எப்படி எனக்கு தூக்கம் வரும் மாமா?”

“செக்கிங்ல இருந்தேன் ம்மா, அதோட இது அங்க அன்டைம் வேற, அது தான் உன் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்னு நான் கால் பண்ணல.

நீ நிம்மதியா கண்ணை மூடி தூங்குவியாம், மாமா நாளைக்கு நைட் உன் கண்ணு முன்னாடி இருப்பேனாம்.”

“நைட் ஆகுமா?... “

“அச்சோ இவ்வளவு நாள் காத்திருந்த என் பொண்டாட்டியாள இந்த ஒரு நாள் காத்திருக்க முடியலையா என்ன?”

“முடியலையே மாமா...”

இரு பக்கமும் கனத்த மவுனம், அவனுக்கும் அவளை உடனே பார்க்க வேண்டும் என்று தான் தோன்றியது.

எப்போதடா தன் மனைவியின் கைகளைப் பிடித்தப்படி, அவள் வயிற்றில் வளரும் தங்கள் குழந்தையின் அசைவுகளை தொட்டு உணர்வது என்று தவித்துக் கொண்டிருந்தான்.

முதலில் தன்னை மீட்டுக் கொண்ட வசுமதி தன்னவனின் மனநிலையை மாற்ற,

“என்னடா புருஷா சத்தத்தையே காணோம், வாட்ஸ் அப்பை ஓப்பன் பண்ணி வச்சுட்டு முன்னாடி போற ஏர் ஹோஸ்டர்ஸ்ஸை எல்லாம் சைட் அடிச்சிட்டு இருக்கியா?”

இவனும் புன்னகையோடு பதில் அனுப்பத் தொடங்கினான்.

“அச்சச்சோ கரெக்டா கண்டுபிடிச்சிட்டாளே, சோத்துல விஷம் வெச்சிடுவாளோ பயமா இருக்கே?”

“ஆமா ஆமா நீங்க ரொம்ப பயந்தவர் தான் நான் நம்பிட்டேன்.”

அப்போது சரியாக பிளைட் பற்றிய அனௌன்ஸ்மென்ட் வர,

“சரிப்பா நான் தூங்க போறேன் நீங்க பார்த்து பத்திரமா வாங்க, புட் அவாய்ட் பண்ணாம கரெக்டா அந்தந்த நேரத்துக்கு சாப்பிடுங்க, குட் நைட் மாமா.”

அவளுக்கு பதில் அனுப்பிவிட்டு தன் உடைமைகளோடு விமானத்தை நோக்கி நடந்தான் முகிலன்.

முகிலனது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது. திருமணமான ஒரு மூத்த சகோதரியும் ஒரு தம்பியும் இருந்தனர்.

அவனது தந்தை அவன் கல்லூரி காலத்திலேயே தவறி இருக்க, அன்னையின் நெசவு வேலையில் கிடைத்த பணத்தில் தான் கடைசி வருட படிப்பையே முடித்தான்.

எப்போதுமே படிப்பில் முதல் மாணவனாக திகழும் அவனுக்கு மேலே படிக்க விருப்பம் இருந்தும், குடும்ப சூழ்நிலை காரணமாக கடைசி வருட படிப்பிலேயே கேம்பஸில் செலக்ட்டாகி வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டான். அவனது சம்பளம் மட்டுமே அந்த குடும்பத்துக்கு வருமானமாக இருந்தது.

வேலைக்கு சேர்ந்த அடுத்த மாதமே தன் அன்னையின் பல வருட உழைப்புக்கு ஒய்வு கொடுத்தவன், சம்பாதிக்கும் பணத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பி, தன் தம்பியை மேலே படிக்க வைத்தான்.

குடும்ப சூழ்நிலை சற்றே உயரத் தொடங்க, வீட்டில் அவனுக்கு வரன் பார்க்கத் தொடங்கினர்.

ஆனால் தனக்கென்று ஒரு சொந்தவீடு வாங்கிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன், என்ற முடிவில் உறுதியாக இருந்தவன்,கிடைத்த வருமானத்தில் சிறிது சிறிதாக சேமித்து முதலில் ஒரு நிலத்தை வாங்கினான்.

அதை அடமானமாக வைத்தே வங்கிக்கடன் பெற்று, தங்களுக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் குடியேறினான்.

அதன் பிறகு அவனுக்கு அமைந்த வரன் தான் வசுமதி.

மூத்தமகன் என்பதால் குடும்பத்து பாரம் முழுவதும் அவன் தலையில், அதை பங்கிட்டுக் கொள்ளும் தோழியாக கடவுள் அமைத்து கொடுத்த வரமாக வந்தவள் தான் வசுமதி.

திருமணத்திற்கு முன்பே அவன் தெளிவாக கூறி விட்டான்.

“ வசு என்னோட அம்மா எந்தவொரு விஷயமா இருந்தாலும் மனசுல வெச்சுக்காம முகத்திற்கு நேரா கேட்க கூடியவங்க.

இதனாலயே என் சொந்தத்துல நிறைய பேர் அவங்களுக்கு எதிராத் தான் நிற்பாங்க. முகத்துக்கு நேரா அவங்க எதுவும் சொல்லாம போனாலும், பின்னாடி இவங்களை ப் பத்தி தப்பா தான் பேசுவாங்க.

அதனால அவங்களுக்கு துணையா நான் அவங்க பக்கம் நின்னு தான் ஆகனும்.

திருமணத்திற்கு பிறகு உங்களுக்குள்ள கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை நடந்தாலும், என்னால உனக்கு ஆதரவா பேச முடியாது. எனக்காக அவங்களை பொறுத்து போவயா?...”

அதற்கு அவளிடம் இருந்து தலையசைப்போடு கூடிய குறுநகை தான் பதிலாகக் கிடைத்தது.

 
Last edited:
New member
Joined
Dec 26, 2024
Messages
11
அது மட்டுமா திருமணத்திற்கு பிறகு வீட்டுக்கடன் திருமணத்திற்காக வாங்கியகடன், தன் தம்பியின் கல்விக்கடன் என்று நிறைய இருப்பதால், அதை சரி செய்ய ஆன்சைட் ஆபருக்காக வெகு நாட்கள் காத்திருப்பதாகவும், அதனால் இரண்டு வருடத்திற்கு குழந்தை பற்றிய பேச்சு வேண்டாம் அது வரும் போது வரட்டும் என்று கூறியதற்கும், அவளிடமிருந்து தலையசைப்பு மட்டுமே பதிலாக வந்தது.

ஒரு வருடம் நன்றாகத் தான் சென்றது, அவ்வப்போது எழும் அன்னையின் உரிமை பிரச்சினைக்கு அவனுக்காக பொருத்துத் தான் சென்றாள்.

உறவுகளின் நல்லசேதி எப்போது என்ற கேள்விகளை இருவருமே புன்னகையோடு கடந்தனர்.

ஒருமுறை தெருவில் நடைபெற்ற விசேஷத்திற்கு புன்னகை முகமாக சென்றவள், திரும்பி வரும்போது வாடிய முகத்தோடு வந்தாள்.

காரணம் கேட்டவனுக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறியவள், அவ்வப்போது தன் கண்களில் திரளும் நீரை துடைத்தபடியே வேலை செய்து கொண்டிருந்தாள்.

குடும்பத்தாரின் முன்பு கேள்வி கேட்டு அவளை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவன், அன்று இரவு நீ காரணத்தை சொல்லித் தான் ஆக வேண்டும் என்று உறுதியாக நிற்க, கணவனின் மார்பில் சாய்ந்து கதறி அழத் தொடங்கினால் பெண்ணவள்.

விஷேசத்தில் எதையோ எடுத்து வரச் சொல்லி அவளை அந்த வீட்டினுள் அனுப்ப, அங்கு சென்றவளை கண்ட அந்த வீட்டின் வயதானப் பாட்டி அவளை அந்த பொருளை எடுக்க விடாமல்,

“குழந்தை குட்டியோட இருக்கவங்க தான் முத இந்த சடங்கு பண்ணணும், உனக்கே இதெல்லாம் தெரிய வேணாமா…”

என்று கூற அப்போதே அவள் முகம் கன்றி விட்டது.தலைவலி என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு வந்து விட்டாள்.

அன்று தான் முகிலனுக்கு தன் குடும்ப சூழ்நிலையை எண்ணி குழந்தை பிறப்பை தள்ளி வைத்தது தவறோ என்று தோன்ற தொடங்கியது.

தன் மார்போடு அவளை இறுக அணைத்துக் கொண்டவன் தன்னவளின் மனக்காயத்தை போக்கத் தொடங்கினான்.

இரண்டு மாதம் கழித்து ஒருநாள், தன் முன்னாள் வெட்கத்தோடு இருகோடுகள் கொண்ட டெஸ்ட்டிங் கிட்டை அவள் நீட்டிட, மகிழ்ச்சியோடு அணைத்து கொண்டவன் முத்த மழையில் அவளை மூழ்கடித்தான்.

வாழ்க்கை என்னும் கடலில் அலைகளில் சீற்றம் தோன்றுவது இயல்பு தானே, இவர்களை மட்டும் விட்டுவிடுமா என்ன?


வெகுநாட்களாக அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆன்சைட் ஆபர் இப்போது அவனை தேடி வந்தது.

கடன் பிரச்சினைகளை தீர்க்க அவன் அயல்நாடு சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மனம் முழுவதும் பாரத்தோடு மீண்டும் தன்னவளின் முன்பு தனது கோரிக்கையை முன்வைத்தான்.

அவன் கூறிய செய்தி கேட்டு அழுது கொண்டே அந்த இடத்தைவிட்டுச் சென்றவள், அடுத்த நாளே முகத்தில் புன்னகையையும் கண்களில் வலியையும் தேக்கிக் கொண்டு அவனுக்கு சம்மதம் கூறி, இந்த தற்காலிக பிரிவுக்கு தன் மனதை தயார் படுத்தத் தொடங்கினாள்.

குழந்தையின் மூன்றுமாத ஸ்கேனை கண்டுவிட்டு விமானம் ஏறியவன் தான், ஏழுமாதங்கள் கழித்து கம்பெனியில் கெஞ்சி வாங்கிய இரண்டு வாரவிடுமுறையில் தன் மனைவியின் பிரசவநாளுக்காக வந்து கொண்டிருக்கின்றான்.

முழுதாக ஏழு மாத பிரிவு…என்னதான் அலைபேசியில் இரவுநேரத்திலும், காலையில் கிளம்பும்போதும் வீடியோ காலில் பேசினாலும், மனம் அவளை காணத் தவித்தது.

நான்குமாதத்திற்கு முன்பு குழந்தையுடைய பாதத்தின் அச்சு தெரிவதாக கூறியவளின் குரலில் அவ்வளவு சந்தோஷம். அதை போட்டோ எடுக்க முயன்று, முடியாமல் போகவே சோகமாக பேசியதும் நினைவிற்கு வந்தது.

காதலோடு வீட்டிற்கு வந்தவனை கண்களில் நிறைத்துக் கொண்டவள் பேசா மடந்தையானாள். உறவுகளின் விசாரிப்புக்கு இடையே அவள் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்தவன், அவளை எழுந்து செல்ல அனுமதிக்கவே இல்லை.

ஏழுமாதத்திற்கு முன்பு வாந்தி மயக்கம் காரணமாக பொலிவிழந்து காணப்பட்ட தன்னவளின் முகம், இன்று முழு தாய்மையின் பூரிப்பில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

அவனுக்கோ அவளை தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.

உணர்வுக் குவியலாக அவனிருக்க, அவளோ உறவுகளின் முன்னிலையில் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

இரவு உணவுக்குப் பிறகு மூச்சு வாங்கியபடி அவள் நடந்து கொண்டிருக்க, அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவனின் அருகில் வந்த அவன் அன்னை, அப்போது தான் ஒரு விஷயத்தை கூறினார்.

தலை திரும்பாத காரணத்தால் குழந்தையை ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டிய கட்டாயம்.

போன மாத பரிசோதனையின் போதே டாக்டர் இதைப் பற்றி கூறியிருக்க, தொலைதூரத்தில் இருக்கும் முகிலனிடம் கூறி, அவனை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்து தான் யாருமே இதைப் பற்றி அவனிடம் கூறியிருக்கவில்லை.

ஏற்கனவே இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியோடு வசுமதியை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அடுத்த அதிர்ச்சியையும் அவர் கொடுக்க, இருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று விட்டான் முகிலன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் வசுமதிக்கு திடீரென வலி ஏற்பட்டதால் அடுத்த நாளே மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

மருத்துவமனை வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இருக்க பனிக்குடம் உடைவதற்கு முன்பே ஆப்ரேஷன் செய்வது நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார்.

இவன் வருகைக்காகத் தான் அனைவருமே காத்துக் கொண்டிருந்தனர்.

அதனால் நாளை மறுநாளே நல்லநாள் என்பதால் மருத்துவமனைக்குச் செல்லலாமா என்று அன்னை கேட்க, இவனிடமோ வார்த்தைகளே இல்லை.

இரவில் தன் கைக்குள் இருந்த மனைவியின் வயிற்றில், சிசுவின் அசைவுகளை உணர்ந்தவனுக்கு உலகையே வென்றுவிட்ட மகிழ்ச்சி. தன்னவளின் தோள்மீது சாய்ந்து கண்மூடியவன்,

“சாரிடா தங்கம் அந்த நேரத்துல கண்டிப்பா நீ என்னை தேடி இருப்ப இல்லையா.

ஆனா…என்னால உன் பக்கத்துல இருக்க முடியாம போயிடுச்சு. ரொம்ப வலிச்சுதா…”

“ம்ம்,...ஆனா ஒருவேளை நீங்க என்கூட இல்லாதபோது நம்ம பிள்ளை வெளிய வந்திருந்தா தான், எனக்கு இன்னும் ரொம்ப வலிச்சிருக்கும் மாமா…”
 
Last edited:
New member
Joined
Dec 26, 2024
Messages
11
அடுத்த நாளே வசுமதியோடு மருத்துவமனைக்குச் சென்றவன், டாக்டரிடம் அவள் உடல்நலனைப் பற்றி விசாரித்துவிட்டு, அன்றே ஆபரேஷனுக்கு சம்மதம் என்று கூறி அவளை அட்மிட்டும் செய்து விட்டான்.

காலையில் அனுமதிக்கப்பட்டவளுக்கு தேவையான டெஸ்டுகள் செய்யப்பட்டு ட்ரிப்ஸ் போடப்பட்டது. ஆபரேஷன் தியேட்டருக்குள் அவளை அழைத்துச் செல்லும் வரை அவளுடனே இருந்தவன், மதிய உணவைக் கூட ஒதுக்கிவிட்டு தன்னவளின் கைகளை பிடித்தபடியே, அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே தன்னவளை எப்போது காண்போம் என்று ஆவலோடு காத்திருந்தவனுக்கு, பெண் குழந்தை பிறந்த செய்தியை செவிலியர் வந்து கூறி, குழந்தையை அவன் கைகளில் கொடுக்க, கை நடுக்கத்தோடு குழந்தையை வாங்கியவன் கேட்ட முதல் கேள்வி,

“என் மனைவியை பார்க்க முடியுமா சிஸ்டர்?”

“ சாரி சார் ஆபரேஷன் பண்ணதும் நாலுமணி நேரம் கண்டிப்பா ஐசியூல அவங்களை வச்சிருப்பாங்க. அதுக்கப்புறம் தான் ரூமுக்கு கூட்டிட்டு வருவோம்.”

அவனைப் போலவே அவளும் ஐசியூவில் எப்போது அவனை காண்போம் என்று காத்துக் கொண்டிருந்தாள்.

பல மாத பிரிவைவிட இந்த சிலமணி நேரப் பிரிவு அவர்களை பல யுகங்களாக தோன்ற வைத்தது.

ஒரு வழியாக ஐசியூவில் இருந்து அவளை வெளியே கொண்டு வர, கதவுகளுக்கு வெளியே அவளுக்காக காத்திருந்தவன், கண்களில் நீரோடு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

“ பாப்பாவை பார்த்தீங்களா?”

“பார்த்தேன்ம்மா அவ எப்பவோ ரூமுக்கு வந்துட்டா, நீ தான் லேட்.”

“இவங்க தான் நாலுமணி நேரம் கழிச்சு தான் ரூமுக்கு கூட்டிட்டு போவேன்னு சொல்லிட்டாங்க.”

குழந்தை போல செவிலியரை கைகாட்டி அவள் குறை கூற அவர் சிரித்தபடியே,

“இதுக்கு மேல கண்டிப்பா நான் உங்க கணவர்கிட்ட இருந்து உங்களை பிரிச்சு வைக்க மாட்டேன் மேடம். இதுக்கப்பறம் நீங்க உங்க கணவர் பக்கத்திலேயே இருக்கலாம்.”

அதன் பிறகு வாய்மூடாமல் ஆப்ரேஷன் தியேட்டரில் அவள் நினைவில் இருந்தவரை, அவர்கள் பேசிய அனைத்தையும் தன்னவனிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள்.

அவ்வப்போது குழந்தைக்கு தன் தாயாரின் உதவியோடு எழுந்தமர்ந்து பசியாற்றியவள். மீண்டும் அவனோடு பேசிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவளது தாயார் தான்,

“ அடியே ஆபரேஷன் செஞ்ச உடம்பை வச்சுக்கிட்டு பேசிக்கிட்டே இருக்காத, இரண்டு நாளாச்சும் வாயை மூடிக்கிட்டு இரு.”

என்று கூற, அவரை முறைத்தவளோ பாவமாக தன்னவனை பார்த்தாள்.

"அவங்க சொல்றதும் சரிதான், இப்போ மருந்தோட வீரியத்தால தான் உனக்கு வலி தெரியல, வீரியம் குறைஞ்சதும் ஆப்ரேஷன் பண்ண இடத்துல வலிக்க ஆரம்பிக்கும், இன்னைக்கு ஒரு நாள் மட்டுமாவது பேசாம ரெஸ்ட் எடும்மா. "


அதன் பிறகு அவள் அமைதியாகிவிட முகிலன் வந்தவர்களை கவனிக்கத் தொடங்கினான்.

ஒருவாரம் உறவுகளின் வருகை மருத்துவமனை வாசம் என்று சென்று விட்டது.

அடுத்து நான்கு நாட்கள் உடல்வலி கண்டபோதும் அதை முகத்தில் காட்டாது, இருவருமே ஒவ்வொரு நிமிடங்களையும் பொக்கிஷமாக தங்களின் மனதுக்குள் நிறைத்துக் கொண்டனர்.

இனி அடுத்து அவன் வருகை புரியும்வரை இது தானே அவர்களின் அற்புதமான நினைவு பெட்டகங்கள்.

அவன் கிளம்பும் நாளும் வந்தது, போனமுறை போல தற்போது அவளால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

கைகளில் குழந்தையை ஏந்தியபடி தன் மனைவியை மார்போடு அணைத்துக் கொண்டவனின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

“மாமா ப்ளீஸ் எனக்கு ஒரேயொரு ப்ராமிஸ் மட்டும் பண்ணு, தயவுசெஞ்சு இதுக்கு மேல இந்த மாதிரி ஒரு பிரிவு என் வாழ்நாள்ல வரவே கூடாது.”

“கண்டிப்பா தங்கம் பணப் பிரச்சினையை தீர்க்க, நாம வாழ்க்கைக்கு கொடுத்த விலை நிறைய அழகான தருணங்கள்.

ஒவ்வொரு தடவையும் நீ குழந்தையோட அசைவுப் பத்தி சொல்லும் போதும், ஹாஸ்பிடல்ல நடந்ததைப் பத்தி சொல்லும் போதும், ஒரு நல்ல கணவனா உனக்கு துணையா என்னால இருக்க முடியாம போயிடுச்சேன்னு, எவ்வளவு வருத்தப்பட்டிருக்கேன் தெரியமா?

இப்போ ஒரு நல்ல அப்பாவா நம்ம தேவதை கூட இருக்காம, அவளோட ஒவ்வொரு அசைவையும் நேரடியா ரசிக்காம உங்களை இப்படி தவிக்க விட்டுட்டு போறேனே?”

“ ஐயோ அப்படியெல்லாம் சொல்லாதீங்க மாமா, நம்ம குடும்பத்துக்காக தானே அங்க போய் தனியா கஷ்டப்படறீங்க, எங்களுக்காவது இங்க எல்லாரும் கூட இருக்காங்க, ஆனா உங்களுக்கு?”

“உன் உடம்பை கவனிச்சுக்கோ டா நேரத்துக்கு சாப்பிடு, இனி டைம் கிடைக்கும் போது தான் உன்னால தூங்க முடியும்.

அதனால நைட் எனக்காக ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்காம, நல்லா தூங்கி ரெஸ்ட் எடு.”

“அதெல்லாம் முடியாது நான் போன் பண்ணாட்டி எம்புருஷன் டைம் பாஸூக்கு வேற யாரையாவது பிடிச்சு தொல்லை பண்ணுவான். அதுல இருந்து மத்தவங்களை நான் தானே காப்பாத்தனும். ”

சிறிது நேரம் கதை பேசியபடி இருந்தவன், அன்பு மனைவியோடு ஒரு வாரமேயான தனது சிசுவையும் அலைபேசியில் புகைப்படமாக சேமித்துக் கொண்டு, மனம் கனக்க விமான நிலையத்திற்கு கிளம்பினான்.

ட்ராலியை உருட்டிக் கொண்டு சென்றவன் தனது அலைபேசியின் மெசேஜ் சத்தம் கேட்டு புன்னகையோடு அதை எடுத்துப் பார்க்க, அவன் எண்ணத்தை பொய்க்காமல் வசுமதி தான் குழந்தையோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தோடு, சில வரிகளையும் அனுப்பி இருந்தாள்.

“ஹேப்பி ஜெர்னி அப்பா. பராக்கு பார்த்துக்கிட்டு நிற்காம ப்ளைட்டை பிடிக்கிற வழியைப் பாருங்க.

அங்கபோய் ரீச் ஆனதும் மறக்காம மெசேஜ் போடுங்க, இல்லையென்றால் தொடர் அழைப்புகளை உங்கள் மிட்நைட் நேரத்தில் சந்திக்க நேரிடும். வீ ஆல்வேஸ் லவ் யூ அப்பா…”

...முற்றும்…

பிரிவிலும் உயிர்க்கும் நேசமிது!
 
Last edited:
New member
Joined
Jan 19, 2025
Messages
10
அக்கா கதை சூப்பர் ஒரு மாதிரி மனசு நிறைஞ்சிடுச்சு❤️❤️❤️❤️வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰
 
New member
Joined
Dec 26, 2024
Messages
11
அக்கா கதை சூப்பர் ஒரு மாதிரி மனசு நிறைஞ்சிடுச்சு❤️❤️❤️❤️வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰
நன்றிம்மா😍
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
ஒருவித கட்டாயத்தில் வெளிநாடு செல்லும் நிறைய ஆண்களின் சூழ்நிலைகள் இப்படிதான் அமைந்துவிடுகிறது. அழகான கதை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சரண்யா💐💐💐
 
New member
Joined
Dec 26, 2024
Messages
11
ஒருவித கட்டாயத்தில் வெளிநாடு செல்லும் நிறைய ஆண்களின் சூழ்நிலைகள் இப்படிதான் அமைந்துவிடுகிறது. அழகான கதை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சரண்யா💐💐💐
நன்றி சிஸ்😍
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top