• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

பழைய டேப்ரெக்கார்டும் இளையராஜா இசையும்

Administrator
Joined
Sep 3, 2024
Messages
157

பழைய டேப்ரெக்காடும் இளையராஜா இசையும்​



குப்புற படுத்தான், மல்லாக்கா படுத்தான், தூக்கமே வரவில்லை. பானையில் ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்து படுத்தான். சுவரில் மஞ்சள் நிறத்தில் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்த குண்டு பல்பு வெளிச்சம் பிரகாசமாய் எரிய, எழுந்து ஆப் பண்ணிட்டு திரும்பவும் படுத்தான். வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்ட சுவற்றில், இரண்டு பல்லிகள் இணைந்து கொண்டு இவனவே பார்த்துக் கொண்டிருந்தது.

“என்ன எழவுடா தூக்கமே வரமாட்டுது.” கண்ணை மூடி படுத்தான். கனவில் எவளோ ஒருத்தி கன்னத்தில் முத்தமிடுவது போல கனவு.

“வேண்டாம்.”

“ஏன்?”

“ஏய்..”

“இருயா?”

“ வேண்டாம்.” ஓ…..ன்னு சத்தமிட்டு எழுந்தான்.

“அடேய் என்னடா? தூக்கத்துல புலம்பிக்கிட்டு இருக்க? ஒன்னும் இல்லம்மா.” கருப்பாயி எழுந்து லைட்டை போட்டு “அடேய்… சின்னவனே... என்னடா?”

“கத்துன ஒன்னும் இல்லன்னு சொல்ற?”

“ஒன்னும் இல்ல நீ போய் படு.” செல்லப்பனின் தலையைத் தொட்டு பார்த்தாள். கீழே கிடந்த போர்வையை எடுத்து போர்த்திவிட்டு வெளியே வந்து உட்கார்ந்து வெத்தலை பையை எடுத்து இரண்டு வெற்றிலையில் சுண்ணாம்பு பாக்கு வைத்து வாயிலுள்ளே நுழைத்தாள்.

செல்லப்பன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான் . வெத்தலையே மென்றுகொண்டே…

பாட்டு படிச்சேன் கதை படிச்சேன். தாலாட்டு படிச்சேன். மேற்கு மலையில் யானை வருதுன்னு சொல்ல இல்ல. கள்ளகாட்டுல களை எடுக்க இல்ல. அலறிய அலறி அடித்து ஓடுனமே. காடு கண்ட காடு அறியாது. பருவம் போனால் விதைப்பு தாங்காது. சித்திரையிலே கள்ளைபுடுங்கி ஆடியில விதைத்த விதை.மண்ணுக்கு அடியில் முளைத்து வரலையே.. காட்டுல யானைக்கு காவு இருக்கையில பன்னிக்கு காவு இருக்கு இல்ல …

பயிர நம்பி பொழப்பு இருக்கு இல்ல..

செல்லாயி நீதானப்பா துணைன்னு இருக்க இல்ல…

செல்லாயி இந்த வருஷத்துல

10 மூட வந்துச்சுன்னா உன்னோட இடத்துல வந்து முடி எடுக்கிறேன்னு சொல்லி சொல்லிஅழுதாள். செல்லாயி இவன் வேற நடு சாமத்துல கத்திக்கிட்டு இருக்கான்னு புலம்பினாள் .செல்லாலிபுரத்துக்கு வந்து 25 வருஷம் ஆச்சு .சுத்தியே தோப்பு. செல்லாயி புருஷன் கருப்பையா ஒரு சென்ட் இடம் வாங்கி குடியிருக்கையிலே ஒரு சனம் இருக்காதாம். இப்படி கத கதையாக சொல்லிக்கிட்டே…

ஊரே இருட்டா தான் இருக்கும்னு சொன்னாள். மேற்கு தொடர்ச்சி மல அடிவரத்தில விறுவிறுன்னு… காத்து விசயிலே காத்தையும் பொருட்படுத்தமால் ஆளுகே கள்ள காட்டுக்கு கள்ள புடுங்க கால அஞ்சு மணிக்கு கிளம்பி விடுவார்கள். செல்லப்பன் செல்லாயிபுரத்தில் இருக்கிற அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12வது படித்துக் கொண்டிருக்கிறான்.

யூனிபார்ம் வெள்ளை சட்டை , காக்கி பேண்ட் பொம்பள பிள்ளைகளுக்கு, வெள்ளை சுடிதார்,பேண்ட் பச்சை பேண்டுக்கு தகுந்தாற் போல் பச்சை நிறத் துப்பட்டா.செல்லாயிபுரத்தில் பாதி சனம் இங்கே தான் படிக்குது. செல்லப்பன் பேக் எடுத்துப் போக மாட்டான். இரண்டு நோட்டு, இரண்டு புத்தகம், அவ்வளவுதான் . அப்பன் 100 ஏக்கர் நிலம் வைத்திருப்பது போல பள்ளிக்கூடத்தில் சத்துணவு சாப்பாடு சாப்பிட மாட்டாரு.. பெரிய பருப்பு மாதிரி.

12 30 க்கு சாப்பாடு டைம் பெல் அடித்தவுடன் முதல் ஆளா வீட்டிற்கு வந்து விடுவான்,வந்தவுடன்அலமாரியில் இருக்கும் பெரிய டேப்ரெக்காட் போட்டு இளையராஜாவின் பாடல்கள் இருக்கும் கேசட்டை எடுத்து போடுவான். கேசட்டில் இரண்டு சக்கரங்கள் இருக்கும். பாடல் ஓட ஓட மற்றொரு புறத்தில் குறைந்துக் கொண்டே வரும் எதிர் புறத்திற்கு அதிகரித்துக் கொண்டே வரும். அலமாரியில் அதற்குப் பக்கத்தில் பெரிய பெரிய டப்பாக்கள் இருக்கும். செல்லப்பனுக்கு இளையராஜாவின் பாடல்கள் என்ற அவ்வளவு பிரியம்.

“நிலா அது வானத்து மேல பல அது ஓடத்து மேல” பாடலை போட்டவுடன் இரண்டு குச்சிகளை உடைத்து வந்து டப்பாவின் மேல் பாடலுக்கு தகுந்தாற்போல் தாளம் போடுவான்.

”ஆகாய தாமரை அருகில் வந்ததோ!

மெல்லிசைப் பாட்டு முழங்கிட கேட்டு இதயமே இளசு தான் இளமையிலேயே” தலையை ஆட்டிக்கொண்டு குச்சியில் டப்பாவில் அடித்து கொண்டு இருப்பான். தெருவில் ஒன்பது முப்பதுக்கு மேல இரவு தூங்கி விடுவார்கள். தெரு அமைதியாக காட்சியளிக்கும்.தெருவில் பாதி பேர் கொத்தனார் ,சித்தாள், காளவாசல் வேலைகளுக்கு தான் போவார்கள்.

பொழுதானதும் சோறாக்கி குழம்பு வைத்து சாப்பிட்டு விடுவார்கள்.

விடியற் காலையில் 5:00 மணிக்கு என்னை செல்லப்பன் பாடலை போட தொடங்கி விடுவான். முதலில் சாமி பாட்டு போட்டு பின் திரைப்பட பாடல்களை போடுவான். ‘ஓம் என்ற உச்சரித்தம் நீதானே சாமுண்டி….. எல்.ஆர்.ஈஸ்வரி பாடலை போட்டு….

என் புத்தம் புது காலை பொன்னிற வேளை பாடலை போடுவான். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் பாட்டு தான் போடுவான் .1999 களில் வெளிவந்த பாடல்களை தனியாக எழுதி பண்ணைபுரத்தில் போய் பதிவு பண்ணி வந்து திருப்பி ,திருப்பி போட்டு கேட்பான். டேபிள் கார்டை விட்டு, எப்படியாவது சிடி பிளேயர் வாங்க வேண்டும் என்று கொள்ள ஆசை. செல்லப்பனுக்கு இருந்தாலும் ,யாரிடம் கேட்பது கையிலே காசு இல்ல.ஸ்கூல் லீவு நாட்களில் காளவாசலுக்கு, கொத்தனார் வேலைக்கு போய் ஆயிரம் ரூபாய் வைத்திருந்தான்.

பணத்தை எடுத்து நேராக கம்பம் சென்று, காந்தி சிலை பஸ் ஸ்டாப் இறங்கினான்.

சுற்றிச் சுற்றி பார்த்தான்.

சிக்னலை தாண்டி பெரிய பெரியகடையில் வெளியில் ஸ்பீக்கர், சிடி பிளேயர் போட்ட விளம்பர பாதகை இருக்க பக்கத்தில் சென்று உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

கடைக்காரன் என்னப்பா .

என்ன..

வேணும்.

அண்ணே …

சிடி பிளேயர் இருக்கா .

இருக்கு.

வாங்க கடையிலுள் நுழைந்தான்.

கடைக்காரர் ஒவ்வொரு சிடி பிளேயராக எடுத்து காண்பிக்க..அதிகமான விலை எல்லாம் வேண்டாம் அண்ணே.. கொஞ்சம் கம்மியான ரேட்ல சொல்லுங்க..

.ஆயிரம் ரூபாயிலிருந்து இருக்கு.

தார்கெட் 1200

சோனி 2500 ரூபாய் எது வேணும் பாருங்க பாத்து சொல்லுங்க.அண்ணே

அந்த முன்னாடி எடுத்து போட்டீங்களே.தார்கெட் அதுவே எடுங்க …

அதுவே போதும் .இதுவா.. ம்….கடைக்காரர் தார் கெட் கம்பெனி சிடி பிளேயரை எடுத்து ஒரு கேசட் போட்டு காட்டினார்.

சிடி பிளேயர் வெளியில் அழகான சிறிய லைட்டுகள் எரிந்து கொண்டிருந்தன.

செல்லப்பனுக்கு மனதில் பெரிய சந்தோசம்

.நம்ம வீட்டுல புதுசா சிடி பிளேயர்.

செல்லப்பன் சிடிபிளேயர் வாங்க தான் காசு இருந்தது .ஸ்பீக்கர் வாங்க காசு இல்லை. வீட்டில் எப்எம் இருந்தது. வெள்ளை நிறத்தில் இரவு 9 மணிக்கு எல்லாம் நடுத்தர பாடல்கள் ஒளிபரப்பப்படும்.

இரவு 7 மணிக்கு விக்ரமாதித்தன் கதைகள் .

வேதாளம் முருங்க மரம் ஏறிய கதைகள் அழகாக சொல்வார்கள்.

எப்எம் இருக்கும் ஸ்பீக்கரை கழட்டி எடுத்து பெரிய மண்பானையில் வைத்தான் .சிடி பிளேயர் இருந்து ஸ்பீக்கருக்கு வயரை இணைத்தான்.சிடி பிளேயர் போட்டான் .ஒலி வந்தது .பொத்து…. பொத்து…. என ஒலி வந்தது.

“ஆசை அதிகம் வச்சு மனசு அடக்கி வைக்கலாமா …

என் மாமா”

சிடி பிளேயர் சரிபார்த்து பாடலுக்கு ஏற்ற போல் சவுண்டை குறைத்தும் கூட்டியும் வைத்தான்.செல்லப்பன் தெருவில் யார் வீட்டில் பாட்டு போட்டாலும் போடாவிட்டாலும் செல்லப்பன்ணு பாட்டை போட்டு கேட்டு விட்டு தான் எங்கேயும் சொல்வான்.

செல்லப்பனுக்கு பள்ளியில் நிறைய நண்பர்கள் உண்டு. எல்லோரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள். மதிய சாப்பாட்டுக்கு செல்லப்பன் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்தான். இந்நாளில் அதுவே வாடிக்கையாக விட்டது .டிபன் பாக்ஸில் தனியாக சோறு ,குழம்பு கொண்டு வந்து விடுவார்கள் . அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு, கண்ணாடி முன் நின்று ஒவ்வொருத்தரும் தலையை சீவி செல்ல எப்படியும் பத்து நிமிடத்திற்கு மேலாகும்.. இப்படியே ஒரு வருடமும் கடந்தது. 2011 இல் ரிலையன்ஸ் மொபைல் அறிமுகமானது. தமிழ்நாட்டில் பரவலாக விற்பனையும் செய்யப்பட்டது .அடுத்ததாக நோக்கியா 1100. செல்லப்பன் வீட்டில் செல் இருந்தது. செல்லப்பன் தனது நண்பரோடு மதிய உணவு சாப்பிடும் போது அன்று நடந்தது ,மாலை வந்து செல்லப்பன் புத்தகங்களை வைத்து விட்டு டிவியை போட்டான்.செல்லப்பன் நாற்காலியில் சாய்வாக உட்கார்ந்தான்.

டேய்…

சின்னவனே ...

டேய்..

சின்னவனே .

அடுப்பு அறையில் இருந்து கூப்பிட்டாள். செவ்வந்தி

என்ன சொல்லு?

டேய்..சின்னவனே..

என்னடா செல்போனை காணல..

எந்த செல் போன் ,அதுதான் ரிலையன்ஸ்.

என்ன சொல்ற அக்கா.

தெரியலையே நீ கூட்டிட்டு வர்ற பசங்க எடுத்து இருப்பாங்களாடா கேட்டுப்பாரு. மறுநாள் மதிய அனைவரையும் கூப்பிட்டு அலமாரியில்மொபைல் இருந்தது.நேத்து மாலை காணல யாரு எடுத்ததுன்னு தெரியல யாராவது எடுத்து இருந்தால் கொடுத்து விடுங்கடா.

என்ன சொல்லப்பா சொல்ற.. நாங்க எதுக்கு எடுக்க போறோம்.டேய்..

யாராவது எடுத்தீங்களாடா!

சொல்லுங்கடா!

தமிழரசன் பக்கத்தில் வந்து நண்பா ..

அது அக்காவோட செல். ஒரு செல் தான் ஏதோ எமர்ஜென்சிக்கு யாராவது கால் பண்ணா எடுத்து பேசுறதுக்கு அந்த ஒருசெல்தான் இருந்தது.கவலைப்படாதடா…கிடைச்சிரும். சரிங்கடா ..நான் சொன்னா எல்லாம் தப்பா நினைச்சுக்கமாட்டீங்களே?

சொல்லுடா !என்ன இனிமேல் எங்க வீட்டுக்கு யாரும் வர வேண்டாம். சரிங்களா. .இருந்தாலும் இ மேல் வர வேண்டாம்.

பள்ளி முடிந்ததும், நேராக வீட்டிற்கு வந்து இளையராஜாவின் வாய்ஸ் ஆப் பாடல்கள் கேசட்டை எடுத்தான்

சிடி பிளேயர் போட்டு அமைதியாக உட்கார்ந்தான் .வீட்டில் யாருமே இல்லை.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top