New member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
பகுதி-5
மூன்று வருடத்திற்கு பிறகு சிலம்பம் மைதானத்தில் முதல் நாள் வகுப்பை மீண்டும் ஆரம்பித்து இருந்தார் கதிர்வேலன்.
நான்கு வயது குழந்தையில் இருந்து நடுநிலை வயதினர் வரை ஆண்கள் பெண்கள் என்று இருவருமே சிலம்பம் கற்றுக்கொள்ள வருகை தந்து இருந்தார்கள்.
மாலை வேளை என்பதால் தன் அண்ணனுக்கு தேநீரை எடுத்துக்கொண்டு மஞ்சள் நிற ஸ்கூட்டியில் ரோஜாவும் மைதானித்திற்கு வந்து இருந்தாள்.
'என்ன சின்னம்மா! கையில டீயா?' என குரல் கேக்கும் திசையை ரோஜா
திரும்பி பார்க்க, அங்கே கதிர்வேலனின் உயிர் தோழன் நாகராஜன் ரோஜாவை நோக்கி நடந்து வந்தான்.
நாகராஜனின் கேள்வியில் முகம் மாறிய ரோஜா,''என்னை சின்னம்மா, பொன்னமானு கூப்பிடக்கூடாதுன்னு தானே சொன்னேன்!' என கோபகனல் வீசினாள்.
ரோஜாவின் சிவந்த முகத்தை பார்த்து,''கதிர் மட்டும் உங்கள அம்மான்னு கூப்பிடலாமா' என அவன் கேட்டதும்,
'வாத்தியும் நீங்களும் ஒண்ணா!?' என கேட்ட ரோஜா,டீ பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு சிலம்பம் பயிற்சி நடக்கும் இடத்துக்கு சென்றாள்.
ரோஜாவை அங்கு பார்த்ததும்,'நீங்க ஏன் ம்மா இங்க வந்திங்க' என்று கதிர்வேலன் கேக்க,
'நீ ஒழுங்கா சிலம்பம் கத்து தரலைனா உன் மண்டையை உடைக்க தான் சின்னமா வந்து இருக்காங்க' என நகைப்புடன் சொன்னான் நாகராஜன்.
'ஏண்டா நாகா! அம்மாவை அப்படி கூப்பிடாதன்னு எத்தனை முறை சொல்லுறது' என கதிர்வேலன் கேட்டப்படியே ரோஜா கையில் இருந்த பிளாஸ்க்கை வாங்கி ஓரமாக வைத்தவரை ரோஜா தன் கோவப்பர்வையால் முறைத்தாள்.
'என்ன ம்மா ஏன் முறைக்கிறிங்க?'என கதிர்வேலன் ஒன்றும் அறியாத பிள்ளையை போல கேக்க,
'இப்போ ஏன் வாத்தி டீயை குடிக்காம ஓரமா எடுத்து வைக்குறிங்க?' என கேட்டவள், சில மூலிகைகள் கலந்து தயாரித்த தேநீரை கதிர்வேலனிடம் மீண்டும் எடுத்து நீட்டினாள்.
தேநீரின் நிறத்தை பார்த்து முகம் மாறிய கதிர்வேலன்,'இது என்ன கஷாயமா!'என கேட்டதும்,'நீங்க குடிக்கிற விஷத்தை விட இந்த கஷாயாம் மேல் தான்' என்றாள் ரோஜா.
'ஹையோ அம்மா... இதெல்லாம் எனக்கு ஒத்தே வராது,நீங்க இத வீட்டுக்கு எடுத்துட்டு போங்க' என கதிர்வேலன் சொன்னதும்,
'அதெல்லாம் ஒத்து வரும், இன்டைக்கு மட்டும் நீங்க குடிச்சிட்டு வீட்ட பக்கம் வாங்க, அப்புறம் இந்த ரோஜா யாருன்னு தெரியும்' என கை விரலை மடக்கி கதிர்வேலனை குத்துவதை போல நடித்து கட்டினாள் ரோஜா.
'என்னப்பா கதிரு, இன்னைக்கு நீ குடியை தொட்டா, அப்புறம் உங்க அம்மா ருத்ரதாண்டவம் ஆடுவாங்க போல!' என நாகராஜன் சொல்ல,
'கண்டிப்பா சொல்லுறேன்! நீங்க இன்டைக்கு குடிக்க கூடாது' என்ற ரோஜா, தன் கையால் டீயை ஊற்றி கதிர்வேலனுக்கும் நாகராஜனுக்கும் கொடுத்தாள்.
'உங்க அண்ணனை குடிக்கக்கூடாதுனு சொன்னால் அதுல ஒரு அர்த்தம் இருக்கு, நான் ஏன் குடிக்க கூடாது?' என்ற நாகராஜனின் காலை ஓங்கி மிதித்த ரோஜா,'வாத்தி குடிக்க நீங்க தான் காரணம்' என்றாள் கோபத்துடன்.
'என் நண்பன் குடிக்க நான் காரணம் இல்லைங்க, அதுக்கு காரணம் அவனோட ரவா லட்டு தான்' என்ற நாகராஜனின் இன்னோரு காலையும் மிதித்த ரோஜா,'சத்தமா பேசாதீங்க, பெரிய அண்ணன் காதுல விழ போகுது'
என்றாள்.
நாகராஜன் தாய் தந்தையை இழந்த இளைஞன்.
யாசகம் பெற்று பசியை போக்கிக்க மனமில்லாமல் படிக்கும் வயதில் பாண்டியனின் வீட்டில் எடுபுடி வேலைக்கு வந்தவனை, 'என்னை போலவே நாகாவையும் படிக்க வையுங்கள்' என்று கதிர்வேலன் கேட்டார்.
தன் இளைய மகனின் ஆசைப்படியே நாகராஜனை பனிரெண்டாம் வகுப்பு வரை பாண்டியன் படிக்க வைக்க, மேற்கொண்டு படிக்க பிடிக்காமல் நாகராஜன் சொந்தமாக தொழில் தொடங்க ஆசைப்பட்டு வங்கியின் உதவியை நாடினான்.
நாகராஜனுக்கு பின்புலம் யாரும் இல்லாத காரணத்தால், கதிர்வேலனின் தூண்டுதலால் பாண்டியனின் சிபாரிசில் இன்று சொந்தமாக நல்லது கெட்டதுக்கு பாத்திரங்கள், இருக்கைகள்,பந்திக்கு தேவையான இதர பொருட்கள் அடங்கிய தேவைகளை எடுத்து செய்யும் தொழிலை தொடங்கி, அதில் லாபத்தையும் சம்பாரித்து வருகின்றான் நாகராஜன்.
என்னதான் பணம் சம்பாரித்தாலும் அவனுக்கேன்று சொந்தங்கள் யாரும் இல்லை என்ற வேஷனம் அவனுக்கு இருக்க தான் செய்தது.
தன் நண்பனின் மனதை அறிந்த கதிர்வேலனும் அவனை தன் குடும்பத்தில் ஒருவனாக பார்த்து வந்தவன் கடந்த மூன்று வருடங்களாக இந்த ஊரை விட்டு சென்றதால் நாகராஜன் தனிமையில் இருந்தவன் மதுவுக்கு அடிமையாகி இருந்தான்.
குடி குடியை கெடுக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, உன்னை பார்த்து நான் கெட்டேன் என்னை பார்த்து நீ கெட்டாய் என்பதை போல நண்பர்கள் இருவரும் இப்போதும் மாலை நேரம் வந்தால் மதுப்பானதுக்கு அடிமையாகி இருந்தார்கள்.
கதிர்வேலனுடன் சேர்த்து நாகராஜனையும் நல் வழி படுத்த வேண்டும் என்று முடிவு செய்த ரோஜா, சில மூலிகைகளை க்கொண்டு தேநீரை தயார் செய்து வந்து இருக்க, நண்பர்கள் இருவரும் அதை தொடாமல் அழுசாட்டியம் செய்துக்கொண்டு இருப்பவர்களை ஆத்திரத்துடன் முறைத்தாள் ரோஜா.
'கதிரு...உங்க அம்மாவை போக சொல்லு, நம்ம அப்புறமா குடிக்கலாம்' என்று நாகராஜன் சொல்ல,
'என்னது அப்புறமா குடிக்க போறிங்களா' என ரோஜா கேக்க,'இல்ல இல்ல டீயை அப்புறம் குடிக்கிறோம்' என்றான் நாகராஜன்.
'நீங்க குடிக்குற வரைக்கும் நான் இங்க தான் இருப்பேன்' என்ற ரோஜா, அங்கே இருந்த கல் மேடையில் அமர்ந்தவள் அவளின் அலைபேசியை எடுத்து,
'என்ன முல்லை வீட்டுக்கு போயிட்டியா!ஏன் போனதும் எனக்கு மெசேஜ் பண்ணல!' என்ற குறுஞ்செய்தியை முல்லையின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைக்க, எதிர்முனையில் இருந்து ரோஜாவிற்கு எந்த பதிலும் கிட்டாமல் போனது.
***********
சிவகங்கையில் உள்ள முல்லையின் வீட்டு வாசலில் நின்றப்படியே பக்கத்து வீட்டு பத்மினி பாட்டி பேசியதை கேட்டு முல்லைக்கு மூச்சைடைத்து போனது.
'என்ன முல்ல... எப்படி இருக்க' என நலம் விசாரித்த பார்வதி, அருகே நின்று இருந்த வேலைக்கார பெண்மணியிடம் கண்களால் கட்டளையிட, அந்த பெண்ணோ முல்லையின் பையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.
'போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு'என்ற பார்வதியின் வார்த்தையை காதில் வாங்கிய முல்லையின் கண்ணுக்கு எதிரே அவள் வீட்டில் தெரியாத முகங்கள் சிலர் அமர்ந்து இருந்தார்கள்.
'என்ன முல்ல... ஏன் வாசல்ல நிக்குற, உள்ள வா' என்ற பார்வதி முல்லையின் கைபிடித்து வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
'அம்மா... நாளைக்கு பந்திக்கு தேவையான மளிகை சாமான்கள் எல்லாம் லிஸ்ட் போட்டுட்டேன், திடிர்னு விஷேஷம் ஏற்பாடு பண்ணதால பாத்திரம் பண்டங்கள் எல்லாம் பக்கத்து ஊருல தான் கேக்கணும்' என்ற மீசைக்கார பெரியவரின் கையில் ஒரு கட்டு பணத்தை திணித்தார் பார்வதி.
'நீங்க எங்க இருந்து வேணும்னாலும் ஆளை அழைச்சிட்டு வாங்க, நாளைக்கு என் தம்பிக்கும் முல்லைக்கும் இந்தே ஊரே உச்சு கொட்டுற மாதிரி நிச்சியம் நடந்தே ஆகணும்' என்றார் பார்வதி.
பார்வதியின் வார்த்தையைக் கேட்டு முல்லைக்கு நெஞ்சே அடைத்து போனது.
பாண்டியனின் மகனை காதலிக்கிறேன் என்று சொன்னால் தன் திருமணத்தில் பிரச்சனை வரும் என்று முல்லை எதிர்பார்த்தது தான்.
ஆனால் அந்த பிரச்சனை இவ்வளவு சீக்கிரம் வருமென்று முல்லை நினைத்து பார்க்கவில்லை.
சற்று முன் காரில் வரும் தருணம் கூட முருகன் முல்லையிடம் முகம் கொடுத்து பேசாததை எண்ணி பார்த்தவளுக்கு, தன் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து இருக்கக்கூடும் என்று புரிந்துக்கொண்டாள்.
முருகன் திட்டமிட்டு தன் அலைபேசியை அவரோடு எடுத்து சென்றதை அறிந்துகொண்ட முல்லைக்கு, இவர்கள் நாளை பண்ண இருக்கும் நிச்சியத்தை பற்றி எப்படியாவது ஜீவானந்தத்துக்கு தெரியப் படுத்த வேண்டும் என்ற அவசரம் இருந்தது.
இந்த முறை தவறாவிட்டால் மீண்டும் முல்லைக்கும் தன் தம்பிக்கும் திருமண ஏற்பாடு நடக்க வாய்ப்பில்லை என்று அறிந்திருந்த பார்வதி, சரியாக காயை நகர்த்தி முல்லை வெளியே யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு அவளை கிட்டத்தட்ட வீட்டில் சிறை பிடித்து வைத்தார்.
என் சம்மதம் இல்லாமல் எப்படி என் கல்யாணத்தை நீங்கள் தீர்மானிப்பிர்கள் என்று தைரியமாக தன் தந்தையை கேட்க துணிவில்லாத முல்லைக்கு எப்படியாவது ஜீவானந்தத்திடம் பேச வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது.
வந்ததில் இருந்து யாரிடமும் ஒரு வார்த்தைக்கூட பேசாத முல்லையின் நடவடிக்கையை கவனிக்கும் விதமாக பார்வதி தன் இமைகளுக்கு கட்டளையிட்டு கண்கள் மூடாமல் முல்லையை கண் கணித்துக்கொண்டு இருந்தார்.
முல்லை தன் அறைக்குள் நுழைந்தவள், இதயத்தின் பாரம் தாங்காமல் தன் கட்டிலில் அமர்ந்தவளுக்கு,தன் தந்தை மீது இருந்த பாசமே பகையாக மாறிப்போனதை போல உணர்ந்து இருந்தாள்.
இரவு நேரம் கடந்தும் முல்லை தன் அறையில் இருந்து வெளியே வராமல் இருக்க,' முல்ல... முல்ல கதவை திற' என்ற முருகனின் கனீர் குரலில் முல்லை கதவை திறந்தவளின் கண்கள் இரண்டும் ரத்தசிவப்பாக இருந்தது.
தன் மகள் அழுது இருக்கிறாள் என்று முருகனும் அறிந்து இருந்தார்.
ஆனால் அவரின் பகட்டு கௌரவம் தன் மகள் மீது அவர் வைத்து இருந்த அன்பை அடியோடு அழித்து இருந்தது.
'இந்தா... இதுல பட்டு புடவை நகையெல்லாம் இருக்கு, நாளைக்கு உனக்கும் கேசவனுக்கும் நிச்சியம், அடுத்த வாரம் உங்க ரெண்டு பேருக்கும் கேசவனோட குலதெய்வ கோவில்ல கல்யாணம்' என்ற முருகன் தன் மகளின் முன்னே விலை உயர்ந்த புடவை நகைகளை நீட்டினார்.
முருகன் தந்த எதையும் தொட்டு கூட பார்க்க மனமில்லாத முல்லை,'எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை' என்று தைரியமாக முருகனிடம் சொன்னாள்.
தரையை பார்த்து பேசும் முல்லையின் வார்த்தையை கேட்ட முருகன் தன் அருகே நின்று இருந்த வேலைக்காரரை கன்னம் சிவக்கும்ப்படி அடித்ததும், அந்த அடியில் முல்லையின் கண்களில் கண்ணீர் வந்தது.
' ஏங்க... ஏன் கோவப்படுறிங்க, ஏன் உங்க பொண்ணு மேல இருக்குற கோவத்தை இவன் மேல காட்டுறிங்க' என்று பார்வதி கேக்க,
'இங்க பாரு முல்ல... நாளைக்கு உனக்கும் கேசவனுக்கும் நிச்சயம் நடக்குறது உறுதி.
நடுவுல நீ அந்த குன்னக்குடி குடும்பத்தோட சேர்ந்து என்னை அசிங்கப்படுத்த நினைச்ச, உன் அம்மா போன இடத்துக்கே உன்னையும் அனுப்பி வச்சிடுவேன் சொல்லிட்டேன் பார்த்துக்கோ' என்ற முருகனின் கோவத்தை கண்டு முல்லைக்கு உள் ஜுரமே வந்திருந்தது.
'ஏங்க... நீங்க கோவப்படாதிங்க, அதெல்லாம் முல்லைக்கு உங்கள பற்றி நல்லாவே தெரியும், முல்லை முரண்டு பண்ணால் நீங்க அவளை உயிரோட புதைச்சுடுவீங்கன்னு உங்க மகளுக்கு தெரியாதா என்ன!?' என்று பார்வதி பட்டும் படாமல் முருகனை கொம்பு சீவி விட,
முல்லையோ தன் தந்தையின் கோவமான முகத்தை பார்த்த அச்சத்தில் தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.
'ஏய் பார்வதி... எதுக்கும் அவளை சூசகமா பார்த்துக்கோ, இது என் கௌரவ பிரச்சனை' என்று எச்சரித்த முருகனுக்கு எக்காரணத்தைக் கொண்டும் தனக்கு பாண்டியன் சம்மந்தியாக வந்து விடவேக்கூடாதென எண்ணம் மட்டுமே இருந்தது.
பகுதி-5
மூன்று வருடத்திற்கு பிறகு சிலம்பம் மைதானத்தில் முதல் நாள் வகுப்பை மீண்டும் ஆரம்பித்து இருந்தார் கதிர்வேலன்.
நான்கு வயது குழந்தையில் இருந்து நடுநிலை வயதினர் வரை ஆண்கள் பெண்கள் என்று இருவருமே சிலம்பம் கற்றுக்கொள்ள வருகை தந்து இருந்தார்கள்.
மாலை வேளை என்பதால் தன் அண்ணனுக்கு தேநீரை எடுத்துக்கொண்டு மஞ்சள் நிற ஸ்கூட்டியில் ரோஜாவும் மைதானித்திற்கு வந்து இருந்தாள்.
'என்ன சின்னம்மா! கையில டீயா?' என குரல் கேக்கும் திசையை ரோஜா
திரும்பி பார்க்க, அங்கே கதிர்வேலனின் உயிர் தோழன் நாகராஜன் ரோஜாவை நோக்கி நடந்து வந்தான்.
நாகராஜனின் கேள்வியில் முகம் மாறிய ரோஜா,''என்னை சின்னம்மா, பொன்னமானு கூப்பிடக்கூடாதுன்னு தானே சொன்னேன்!' என கோபகனல் வீசினாள்.
ரோஜாவின் சிவந்த முகத்தை பார்த்து,''கதிர் மட்டும் உங்கள அம்மான்னு கூப்பிடலாமா' என அவன் கேட்டதும்,
'வாத்தியும் நீங்களும் ஒண்ணா!?' என கேட்ட ரோஜா,டீ பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு சிலம்பம் பயிற்சி நடக்கும் இடத்துக்கு சென்றாள்.
ரோஜாவை அங்கு பார்த்ததும்,'நீங்க ஏன் ம்மா இங்க வந்திங்க' என்று கதிர்வேலன் கேக்க,
'நீ ஒழுங்கா சிலம்பம் கத்து தரலைனா உன் மண்டையை உடைக்க தான் சின்னமா வந்து இருக்காங்க' என நகைப்புடன் சொன்னான் நாகராஜன்.
'ஏண்டா நாகா! அம்மாவை அப்படி கூப்பிடாதன்னு எத்தனை முறை சொல்லுறது' என கதிர்வேலன் கேட்டப்படியே ரோஜா கையில் இருந்த பிளாஸ்க்கை வாங்கி ஓரமாக வைத்தவரை ரோஜா தன் கோவப்பர்வையால் முறைத்தாள்.
'என்ன ம்மா ஏன் முறைக்கிறிங்க?'என கதிர்வேலன் ஒன்றும் அறியாத பிள்ளையை போல கேக்க,
'இப்போ ஏன் வாத்தி டீயை குடிக்காம ஓரமா எடுத்து வைக்குறிங்க?' என கேட்டவள், சில மூலிகைகள் கலந்து தயாரித்த தேநீரை கதிர்வேலனிடம் மீண்டும் எடுத்து நீட்டினாள்.
தேநீரின் நிறத்தை பார்த்து முகம் மாறிய கதிர்வேலன்,'இது என்ன கஷாயமா!'என கேட்டதும்,'நீங்க குடிக்கிற விஷத்தை விட இந்த கஷாயாம் மேல் தான்' என்றாள் ரோஜா.
'ஹையோ அம்மா... இதெல்லாம் எனக்கு ஒத்தே வராது,நீங்க இத வீட்டுக்கு எடுத்துட்டு போங்க' என கதிர்வேலன் சொன்னதும்,
'அதெல்லாம் ஒத்து வரும், இன்டைக்கு மட்டும் நீங்க குடிச்சிட்டு வீட்ட பக்கம் வாங்க, அப்புறம் இந்த ரோஜா யாருன்னு தெரியும்' என கை விரலை மடக்கி கதிர்வேலனை குத்துவதை போல நடித்து கட்டினாள் ரோஜா.
'என்னப்பா கதிரு, இன்னைக்கு நீ குடியை தொட்டா, அப்புறம் உங்க அம்மா ருத்ரதாண்டவம் ஆடுவாங்க போல!' என நாகராஜன் சொல்ல,
'கண்டிப்பா சொல்லுறேன்! நீங்க இன்டைக்கு குடிக்க கூடாது' என்ற ரோஜா, தன் கையால் டீயை ஊற்றி கதிர்வேலனுக்கும் நாகராஜனுக்கும் கொடுத்தாள்.
'உங்க அண்ணனை குடிக்கக்கூடாதுனு சொன்னால் அதுல ஒரு அர்த்தம் இருக்கு, நான் ஏன் குடிக்க கூடாது?' என்ற நாகராஜனின் காலை ஓங்கி மிதித்த ரோஜா,'வாத்தி குடிக்க நீங்க தான் காரணம்' என்றாள் கோபத்துடன்.
'என் நண்பன் குடிக்க நான் காரணம் இல்லைங்க, அதுக்கு காரணம் அவனோட ரவா லட்டு தான்' என்ற நாகராஜனின் இன்னோரு காலையும் மிதித்த ரோஜா,'சத்தமா பேசாதீங்க, பெரிய அண்ணன் காதுல விழ போகுது'
என்றாள்.
நாகராஜன் தாய் தந்தையை இழந்த இளைஞன்.
யாசகம் பெற்று பசியை போக்கிக்க மனமில்லாமல் படிக்கும் வயதில் பாண்டியனின் வீட்டில் எடுபுடி வேலைக்கு வந்தவனை, 'என்னை போலவே நாகாவையும் படிக்க வையுங்கள்' என்று கதிர்வேலன் கேட்டார்.
தன் இளைய மகனின் ஆசைப்படியே நாகராஜனை பனிரெண்டாம் வகுப்பு வரை பாண்டியன் படிக்க வைக்க, மேற்கொண்டு படிக்க பிடிக்காமல் நாகராஜன் சொந்தமாக தொழில் தொடங்க ஆசைப்பட்டு வங்கியின் உதவியை நாடினான்.
நாகராஜனுக்கு பின்புலம் யாரும் இல்லாத காரணத்தால், கதிர்வேலனின் தூண்டுதலால் பாண்டியனின் சிபாரிசில் இன்று சொந்தமாக நல்லது கெட்டதுக்கு பாத்திரங்கள், இருக்கைகள்,பந்திக்கு தேவையான இதர பொருட்கள் அடங்கிய தேவைகளை எடுத்து செய்யும் தொழிலை தொடங்கி, அதில் லாபத்தையும் சம்பாரித்து வருகின்றான் நாகராஜன்.
என்னதான் பணம் சம்பாரித்தாலும் அவனுக்கேன்று சொந்தங்கள் யாரும் இல்லை என்ற வேஷனம் அவனுக்கு இருக்க தான் செய்தது.
தன் நண்பனின் மனதை அறிந்த கதிர்வேலனும் அவனை தன் குடும்பத்தில் ஒருவனாக பார்த்து வந்தவன் கடந்த மூன்று வருடங்களாக இந்த ஊரை விட்டு சென்றதால் நாகராஜன் தனிமையில் இருந்தவன் மதுவுக்கு அடிமையாகி இருந்தான்.
குடி குடியை கெடுக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, உன்னை பார்த்து நான் கெட்டேன் என்னை பார்த்து நீ கெட்டாய் என்பதை போல நண்பர்கள் இருவரும் இப்போதும் மாலை நேரம் வந்தால் மதுப்பானதுக்கு அடிமையாகி இருந்தார்கள்.
கதிர்வேலனுடன் சேர்த்து நாகராஜனையும் நல் வழி படுத்த வேண்டும் என்று முடிவு செய்த ரோஜா, சில மூலிகைகளை க்கொண்டு தேநீரை தயார் செய்து வந்து இருக்க, நண்பர்கள் இருவரும் அதை தொடாமல் அழுசாட்டியம் செய்துக்கொண்டு இருப்பவர்களை ஆத்திரத்துடன் முறைத்தாள் ரோஜா.
'கதிரு...உங்க அம்மாவை போக சொல்லு, நம்ம அப்புறமா குடிக்கலாம்' என்று நாகராஜன் சொல்ல,
'என்னது அப்புறமா குடிக்க போறிங்களா' என ரோஜா கேக்க,'இல்ல இல்ல டீயை அப்புறம் குடிக்கிறோம்' என்றான் நாகராஜன்.
'நீங்க குடிக்குற வரைக்கும் நான் இங்க தான் இருப்பேன்' என்ற ரோஜா, அங்கே இருந்த கல் மேடையில் அமர்ந்தவள் அவளின் அலைபேசியை எடுத்து,
'என்ன முல்லை வீட்டுக்கு போயிட்டியா!ஏன் போனதும் எனக்கு மெசேஜ் பண்ணல!' என்ற குறுஞ்செய்தியை முல்லையின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைக்க, எதிர்முனையில் இருந்து ரோஜாவிற்கு எந்த பதிலும் கிட்டாமல் போனது.
***********
சிவகங்கையில் உள்ள முல்லையின் வீட்டு வாசலில் நின்றப்படியே பக்கத்து வீட்டு பத்மினி பாட்டி பேசியதை கேட்டு முல்லைக்கு மூச்சைடைத்து போனது.
'என்ன முல்ல... எப்படி இருக்க' என நலம் விசாரித்த பார்வதி, அருகே நின்று இருந்த வேலைக்கார பெண்மணியிடம் கண்களால் கட்டளையிட, அந்த பெண்ணோ முல்லையின் பையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.
'போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு'என்ற பார்வதியின் வார்த்தையை காதில் வாங்கிய முல்லையின் கண்ணுக்கு எதிரே அவள் வீட்டில் தெரியாத முகங்கள் சிலர் அமர்ந்து இருந்தார்கள்.
'என்ன முல்ல... ஏன் வாசல்ல நிக்குற, உள்ள வா' என்ற பார்வதி முல்லையின் கைபிடித்து வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
'அம்மா... நாளைக்கு பந்திக்கு தேவையான மளிகை சாமான்கள் எல்லாம் லிஸ்ட் போட்டுட்டேன், திடிர்னு விஷேஷம் ஏற்பாடு பண்ணதால பாத்திரம் பண்டங்கள் எல்லாம் பக்கத்து ஊருல தான் கேக்கணும்' என்ற மீசைக்கார பெரியவரின் கையில் ஒரு கட்டு பணத்தை திணித்தார் பார்வதி.
'நீங்க எங்க இருந்து வேணும்னாலும் ஆளை அழைச்சிட்டு வாங்க, நாளைக்கு என் தம்பிக்கும் முல்லைக்கும் இந்தே ஊரே உச்சு கொட்டுற மாதிரி நிச்சியம் நடந்தே ஆகணும்' என்றார் பார்வதி.
பார்வதியின் வார்த்தையைக் கேட்டு முல்லைக்கு நெஞ்சே அடைத்து போனது.
பாண்டியனின் மகனை காதலிக்கிறேன் என்று சொன்னால் தன் திருமணத்தில் பிரச்சனை வரும் என்று முல்லை எதிர்பார்த்தது தான்.
ஆனால் அந்த பிரச்சனை இவ்வளவு சீக்கிரம் வருமென்று முல்லை நினைத்து பார்க்கவில்லை.
சற்று முன் காரில் வரும் தருணம் கூட முருகன் முல்லையிடம் முகம் கொடுத்து பேசாததை எண்ணி பார்த்தவளுக்கு, தன் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து இருக்கக்கூடும் என்று புரிந்துக்கொண்டாள்.
முருகன் திட்டமிட்டு தன் அலைபேசியை அவரோடு எடுத்து சென்றதை அறிந்துகொண்ட முல்லைக்கு, இவர்கள் நாளை பண்ண இருக்கும் நிச்சியத்தை பற்றி எப்படியாவது ஜீவானந்தத்துக்கு தெரியப் படுத்த வேண்டும் என்ற அவசரம் இருந்தது.
இந்த முறை தவறாவிட்டால் மீண்டும் முல்லைக்கும் தன் தம்பிக்கும் திருமண ஏற்பாடு நடக்க வாய்ப்பில்லை என்று அறிந்திருந்த பார்வதி, சரியாக காயை நகர்த்தி முல்லை வெளியே யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு அவளை கிட்டத்தட்ட வீட்டில் சிறை பிடித்து வைத்தார்.
என் சம்மதம் இல்லாமல் எப்படி என் கல்யாணத்தை நீங்கள் தீர்மானிப்பிர்கள் என்று தைரியமாக தன் தந்தையை கேட்க துணிவில்லாத முல்லைக்கு எப்படியாவது ஜீவானந்தத்திடம் பேச வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது.
வந்ததில் இருந்து யாரிடமும் ஒரு வார்த்தைக்கூட பேசாத முல்லையின் நடவடிக்கையை கவனிக்கும் விதமாக பார்வதி தன் இமைகளுக்கு கட்டளையிட்டு கண்கள் மூடாமல் முல்லையை கண் கணித்துக்கொண்டு இருந்தார்.
முல்லை தன் அறைக்குள் நுழைந்தவள், இதயத்தின் பாரம் தாங்காமல் தன் கட்டிலில் அமர்ந்தவளுக்கு,தன் தந்தை மீது இருந்த பாசமே பகையாக மாறிப்போனதை போல உணர்ந்து இருந்தாள்.
இரவு நேரம் கடந்தும் முல்லை தன் அறையில் இருந்து வெளியே வராமல் இருக்க,' முல்ல... முல்ல கதவை திற' என்ற முருகனின் கனீர் குரலில் முல்லை கதவை திறந்தவளின் கண்கள் இரண்டும் ரத்தசிவப்பாக இருந்தது.
தன் மகள் அழுது இருக்கிறாள் என்று முருகனும் அறிந்து இருந்தார்.
ஆனால் அவரின் பகட்டு கௌரவம் தன் மகள் மீது அவர் வைத்து இருந்த அன்பை அடியோடு அழித்து இருந்தது.
'இந்தா... இதுல பட்டு புடவை நகையெல்லாம் இருக்கு, நாளைக்கு உனக்கும் கேசவனுக்கும் நிச்சியம், அடுத்த வாரம் உங்க ரெண்டு பேருக்கும் கேசவனோட குலதெய்வ கோவில்ல கல்யாணம்' என்ற முருகன் தன் மகளின் முன்னே விலை உயர்ந்த புடவை நகைகளை நீட்டினார்.
முருகன் தந்த எதையும் தொட்டு கூட பார்க்க மனமில்லாத முல்லை,'எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை' என்று தைரியமாக முருகனிடம் சொன்னாள்.
தரையை பார்த்து பேசும் முல்லையின் வார்த்தையை கேட்ட முருகன் தன் அருகே நின்று இருந்த வேலைக்காரரை கன்னம் சிவக்கும்ப்படி அடித்ததும், அந்த அடியில் முல்லையின் கண்களில் கண்ணீர் வந்தது.
' ஏங்க... ஏன் கோவப்படுறிங்க, ஏன் உங்க பொண்ணு மேல இருக்குற கோவத்தை இவன் மேல காட்டுறிங்க' என்று பார்வதி கேக்க,
'இங்க பாரு முல்ல... நாளைக்கு உனக்கும் கேசவனுக்கும் நிச்சயம் நடக்குறது உறுதி.
நடுவுல நீ அந்த குன்னக்குடி குடும்பத்தோட சேர்ந்து என்னை அசிங்கப்படுத்த நினைச்ச, உன் அம்மா போன இடத்துக்கே உன்னையும் அனுப்பி வச்சிடுவேன் சொல்லிட்டேன் பார்த்துக்கோ' என்ற முருகனின் கோவத்தை கண்டு முல்லைக்கு உள் ஜுரமே வந்திருந்தது.
'ஏங்க... நீங்க கோவப்படாதிங்க, அதெல்லாம் முல்லைக்கு உங்கள பற்றி நல்லாவே தெரியும், முல்லை முரண்டு பண்ணால் நீங்க அவளை உயிரோட புதைச்சுடுவீங்கன்னு உங்க மகளுக்கு தெரியாதா என்ன!?' என்று பார்வதி பட்டும் படாமல் முருகனை கொம்பு சீவி விட,
முல்லையோ தன் தந்தையின் கோவமான முகத்தை பார்த்த அச்சத்தில் தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.
'ஏய் பார்வதி... எதுக்கும் அவளை சூசகமா பார்த்துக்கோ, இது என் கௌரவ பிரச்சனை' என்று எச்சரித்த முருகனுக்கு எக்காரணத்தைக் கொண்டும் தனக்கு பாண்டியன் சம்மந்தியாக வந்து விடவேக்கூடாதென எண்ணம் மட்டுமே இருந்தது.