New member
- Joined
- Feb 16, 2025
- Messages
- 8
- Thread Author
- #1
நீயும் நானும் அன்பே…
அந்த இடம் முழுவதுமே அமைதியை நிரப்பிக் கொண்டிருந்தது.செவிலியர்களும்,
மருத்துவர்களும்,நோயாளிகள் அவர்களுடன் வருவோர் என இடமே மக்களுடன் பரபரப்பைத் தொற்றிக் கொண்டிருந்தாலும் ஒருவித அமைதியை கடைப்பிடித்திருந்தது.
ஆனால் அதே இடத்தில் ஒரு ஓரமாய் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மனமோ கடல் அலையைப் போல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.வெளியே அமைதியை நிலைநாட்டிக் கொண்டிருந்தாலும் மனதிலுள்ளே இரைச்சலின் சத்தம் அவனின் காதை அடைக்க இரண்டு கைகளால் தன் காதுகளை அடைத்துப் பிடித்துக் கொண்டிருந்தான்.
அவனின் நிலைமையைக் கண்ட அவனுடன் வந்திருந்த நண்பன் அருகில் வந்து "என்ன ஆச்சுடா? உடம்புக்கு எதுவும் முடியலையா?"
வருத்தம் தொண்டையை அடைத்துக் கொண்டதோடு வறண்டும் போய் இருக்க பேச வார்த்தை வராமல் "இல்லை" என்று தலையை மட்டும் அசைத்துக் கொண்டான்.
நண்பனின் தோள்களை ஆதரவாய் பற்றிக் கொண்டவன் "கதிரேசா வீட்ல எல்லோர்கிட்டயும் சொல்லிட்டியா?" என்று தன் நண்பன் கிருஷ்ணன் கேட்டகவும் தலைகுனிந்து இருந்தவன் நிமிர்ந்து கோபமாய் ஒரு பார்வை பார்த்தான்.
அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டவனோ "கதிரேசா கோபப்படாதே! இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் இருக்கு அதுக்குள்ளாள நாம நினைக்காதது எல்லாம் நடந்துச்சு போச்சு அதான்…" என்று கிருஷ்ணன் பேச்சை இழுத்து பேசவும் சட்டென்று ஏதோ ஒரு வேகத்தில் எழுந்த கதிரேசன் கிருஷ்ணனைப் பார்த்து…
"நீ என்னோட நண்பனாச்சேன்னு தான் உதவிக்குஅழைச்சேன்,
ஆனால் நீ பேசுறதைப் பார்த்தால் எல்லாம் முடிஞ்சு போன மாதிரி பேசுற,அவளுக்கு என்ன தேவையோ அதுக்கான முடிவை நானே தான் எடுப்பேன் இதை மற்றவங்களுக்கு சொல்லனும் எந்த அவசியமும் இல்லை அதேமாதிரி அவ ஆசைப்பட்ட மாதிரி எங்க கல்யாணமும் கண்டிப்பா நடக்கும்" என்று சொல்லும் போது கதிரேசனின் கண்கள் இரண்டும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.
எதற்கும் அசராதவன் இன்று கலங்கி நிற்பதைப் பார்க்க கிருஷ்ணனுக்கும் வருத்தமாகத் தான் இருந்தது.ஆனால் இந்த நிலைமையை எல்லோரும் கடந்தே ஆக வேண்டும் என்பது வழக்கமான ஒன்று தானே!
ஆனால் கதிரேசன் மனதிலோ நீலாவைப் பற்றிய எண்ணங்களே மனம் முழுவதும் நிறைந்து இருந்தது.அதை அவனால் புறக்கணிக்கவும் முடியவில்லை.அவனுடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துப் போனவளை எப்படி மறக்க முடியும்.இமைகள் மூடி சுவற்றில் சாய்ந்து தன்னவளின் எண்ணங்களை மீண்டும் தன்னுள்ளே நிரப்பிக் கொண்டிருந்தான்.
கதிரேசன் தன் சொந்த ஊருக்கு திருமணத்திற்காக குடும்பத்தோடு சென்றிருந்தான்.ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக நண்பனோடு ஆற்றங்கரையின் ஓரம் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது…
அங்கே ஒருசில இளம் பெண்களின் கூட்டம் ஒன்றாக அமர்ந்துக் கொண்டு எதைப் பற்றியோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது சட்டென்று ஒருத்தி எழுந்து முன்னால் போடப்பட்டிருந்த பின்னலிட்ட சடையை தன் தலையை லேசாக அசைத்து பின்னால் நகர்த்தியவள் எழுந்து சத்தமாக "பேச்சுவார்த்தை எல்லாம் சரிபட்டு வராது உடனடியாக களத்தில் குதிச்சு நிரூபிச்சு காட்டுங்க பார்ப்போம்" என்று கண்களின் கருவிழிகளை உருட்டிக் கொண்டு கைகளை இரண்டையும் இடுப்பில் அடவுக் கொடுத்து வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.
கதிரேசனுக்கு அவளைப் பார்த்த உடனே ஏனோ நெஞ்சில் ஓவியமாய் பதிந்து போனாள்.அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட பக்கத்தில் இருந்த நண்பனோ சிறிது பதற்றத்தோடு "கதிரேசா நாம இங்கே நிற்க வேண்டாம் வா சீக்கிரமா போகலாம்"
என்றான்.
அவனின் பதற்றத்தைப் புரிந்துக் கொள்ளாமல் கதிரேசனோ "கொஞ்சம் அமைதியா இருடா இங்கே என்னவோ நடக்கப் போகுதுன்னு வேடிக்கை பார்த்துட்டு போகலாம்" என்றான் ஆர்வமாக….
நண்பனோ இன்னும் அவசரமாய் "இங்கே நடக்கிறதை பார்க்க வேண்டாம்னு தான் போகலாம்னு சொல்றேன்" என்றான்.
கதிரேசனோ நண்பனை புரியாமல் பார்த்தான்.அதற்கிடையில் அந்த பெண்களுக்குள் வாக்குவாதம் கொஞ்சம் பலமாகச் சென்றுக் கொண்டிருந்தது.அதில் ஒருத்தி அங்கிருந்து வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்.
நீண்ட பின்னலிட்டவளோ தாவணியின் முனையை எடுத்து இடுப்பில் சொறுவிக் கொண்டு எதற்காகவோ தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.
கதிரேசனின் நண்பனோ அவனின் கையைப் பிடித்து இழுத்துக் கொள்ள முயற்சிக்க கதிரேசனோ நண்பனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றான்.
அப்பொழுது எதிரே நின்றுக் கொண்டிருந்த இருவரையும் முறைத்தவளோ ஆற்றில் ஒரே தாவலில் குதித்தாள்.அடுத்து அங்கிருந்த மற்றவர்களும் ஒவ்வொருவராக ஆற்றில் குதித்தார்கள்.
நண்பனோ "அடேய்… அவ நம்பளை பார்த்துட்டா போச்சு வேலில போற ஓணானை மடியில் போட்ட கதை தான் இனிமேல் உன் நிலைமை ஒழுங்கா தப்பிக்கிற வழிய பாரு சாமி நான் இங்க இருந்து போறேன்" என்று அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.
கதிரேசன் என்ன நடக்கிறது? என்பதை பார்க்கும் ஆவலில் ஆற்றங்கரையின் ஓரமாக எட்டி நின்று அங்கேயே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆற்றில் குதித்த எல்லோரும் வேகமாக நீந்திக் கொண்டிருந்தார்கள்.இதில் குறிப்பிட்ட தொலைவு வரை வேகமாக நீந்தி விட்டு திரும்பி கரையில் இவன் பார்த்த அவளே தான் முதலில் வந்து ஏறியவள் அங்கே வைத்திருந்த ஒரு துணியை வைத்து உடல் முழுக்க ஈரத்தோடு இருப்பதை மூடியபடி மேலே வந்தவள் கதிரேசன் வேடிக்கைப் பார்ப்பதைப் பார்த்தப்படியே அருகில் வந்தவள் “ஏய் என்ன இதுவரைக்கும் பொண்ணுங்களை பார்த்ததில்லையோ? அப்படியே முழுங்கிற மாதிரி பார்க்கிறே?” என்று மிரட்டியபடி கேட்டாள்.
அதற்கு கதிரேசன் சற்றும் அசராமல் சிரித்தப்படியே “பொண்ணுங்க நிறைய பேரை பார்த்திருக்கேன் ஆனால் இந்த மாதிரி தைரியமான பொண்ணை இப்போத் தான் பார்க்கிறேன்” என்றான்.
அதே முறைப்போடு உற்றுப் பார்த்தவள் “ஹோ என்கிட்டயே ஜொல்லு ஊத்துறே? இரு” என்று சட்டென்று அவனே எதிர்பாரா நேரத்தில் அவனை ஆற்றில் தள்ளி விட்டாள்.
இவனோ பதறியபடி “அம்மாஆ…” என்று கத்தியபடி விழுந்தவன் கொஞ்சம் எம்மியபடி “எனக்கு நீச்சல் தெரியாது ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க” என்று கதறினான்.
இதற்கிடையில் ஏற்கனவே நீந்தியவர்கள் கரையில் ஏறிவிட பக்கத்தில் இருந்த மற்ற பெண்களில் ஒருத்தி “ஹேய் எதுக்கு இப்போ யாருன்னு தெரியாத அந்த ஆளை தள்ளி விட்டே?”
அதற்கு அவளோ “என்கிட்ட வம்பு பேசினான் அதான்” என்ற பொழுது அவனோ தண்ணீரில் தத்தளித்தப்படி மூழ்கிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்தவர்களில் ஒருத்தி “ஹேய் அந்த ஆளுக்கு உண்மையிலேயே நீச்சல் தெரியில போல ஆத்துத் தண்ணீர் இழுத்தப்படி மூழ்கிட்டு இருக்கான்டி” என்றதும் எட்டிப் பார்த்தவள் எதுவும் யோசிக்காமல் ஆற்றில் குதித்தவள் அவனின் தலைமுடியை பிடித்து இழுத்தப்படி அவள் நீந்தி வந்தாள்.
இதற்கிடையில் கதிரேசனை விட்டுச் சென்ற நண்பனோ அவன் இன்னும் வராததால் திரும்பவும் ஆற்றங்கரைக்கு வந்தான்.
அங்கே நின்றிருந்த பெண்களைப் பார்த்தப்படி ஆற்றங்கரையில் எட்டிப் பார்த்தவன் கதிரேசனை அவள் இழுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தவன் “ஹய்யோ கதிரேசா என்னடா இது? அவனுக்கு நீச்சல் வேற தெரியாதே! எப்படி அவன் தண்ணீர் குள்ளே போனான்?” என்று புலம்ப அவள் அவனை இழுத்துக் கொண்டு கரைக்கு வர கதிரேசனின் நண்பன் அவனை தூக்கிக் கொண்டு கரையில் போட அவள் தான் கதிரேசனுக்கு முதலுதவி செய்துக் கொண்டிருந்தாள்.
வயிற்றை அழுத்தவும் வாயிலிருந்து தண்ணீர் வெளியே வர அவன் நண்பன் காலை தேய்த்து விடவும் லேசாக கண்ணைத் திறந்தான் கதிரேசன்.
அதைப் பார்த்த அவன் நண்பன் “கதிரேசா வெளியூர்ல இருந்து வந்துட்டு நல்லா படியா ஊர் போய் சேர வழியைப் பாருடா எதுக்கு இந்த தேவையில்லாத வேலை நல்லவேளை நீலா வந்து காப்பாத்தினாள் என்று சொன்னவன் “ஆமா தண்ணீல போய் எப்படி விழுந்தே?” என்று அடுத்து ஒரு கேள்வியைக் கேட்கவும் கதிரேசன் எழுந்து உட்கார்ந்தான்.
அவன் அப்படிக் கேட்டதும் எல்லோரும் நீலாவைப் பார்க்க கதிரேசனோ “ஆற்றுடைய அழகுல மயங்கி நழுவி உள்ளே விழுந்திட்டேன்” என்றான்.
நீலா வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள மற்ற பெண்கள் கதிரேசனை அதிசயித்துப் போய் பார்த்தனர்.
அவன் நண்பனோ “வாடா வீட்டுக்கு போகலாம்” என்று அழைத்துப் போனவன் போகும் வழியினில் “கதிரேசா அந்த நீலாத் தானே உன்னை ஆத்துல தள்ளி விட்டாள்”
இவனோ யோசனையோடு “இல்லை” என்றதும் “அடேய் மறைக்காதே! நான் இந்த ஊர்க்காரன் எனக்குத் தெரியாதா? நீலா சரியான ரவுடி யாராவது அவகிட்ட வம்பு பேசினால் இப்படித் தான் எதாவது ஏடாகூடாமாக பண்ணிடுவாள் அதனாலத் தான் உன்னை அப்பவே இங்கிருந்து போகலாம்னு சொன்னேன் கேட்டியா! இப்போ பாரு நல்லவேளை அவளா உன்னை வந்து காப்பாத்தினாள் ஏதோ உனக்கு நல்ல நேரம் ஆனால் அவளைப் போய் நீ காப்பாத்துறேன் பொய் சொன்னே பாரு ம்ம்…” என்றான் சலித்தப்படி…
கதிரேசன் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை நீயே எதாவது தப்பா புரிஞ்சுக்காதே!”
“ஆளே சரியில்லை எதாவது வம்பு பண்ணிடப்போற பார்த்து இருந்துக்கோ” என்று தன் நண்பனை எச்சரித்து விட்டே அனுப்பினான்.
அடுத்து இருவருக்குமான சந்திப்பு திருமண நிகழ்ச்சியில் நடந்தது.
நீலா எங்கே சென்றாலும் அவள் கண்களில் படும்படியே நின்றுக் கொண்டிருந்தான்.
நீலா பொறுக்க முடியாமல் “ஹேய் இங்கே வா எதுக்கு இப்போ என் முன்னாடி சீன் போடுற?” என்று நேராக கதிரேசனைப் பார்த்துக் கேட்டாள்.
அவனோ சுற்றும் முற்றும் பார்த்தப்படி “என்னைத் தான் சொன்னீங்களா?”
அவளோ “ம்ம்… நடிக்காதே! உன்னைத் தான் சொன்னேன் வெளியூர்ல இருந்து வந்த மாதிரி ஒழுங்கா சேதாரம் ஆகாமல் ஊர் போய் சேரனும் புரியுதா?” என்று கதிரேசனை மிரட்டிச் சென்றாள் நீலா.
அவளின் திமிரான பேச்சில் இன்னும் விழுந்தவன் தன் நண்பனிடம் “ஏன்டா இந்த நீலா ஏன்டா இவ்வளவு அழகா இருக்கா?” என்றதும்
அவனோ “நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது மச்சான் அவளைப் பார்த்தால் இந்த ஊர்ல உள்ள பசங்க எல்லாம் ஓடுறானுங்க நீ என்னடான்னா அவளை இரசிக்கிற காதலுக்கு கண் இல்லைன்னு சும்மாவா சொன்னாங்க” என்று நொந்துக் கொண்டான்.
அடுத்து சந்தையில் வைத்து பார்க்கவும் அதே பாணியை கதிரேசன் பின்பற்ற இம்முறை நீலா அவனின் நண்பனிடம் சென்று “இங்கே பாரு இனிமேல் அந்தப் பய என்கிட்ட வந்து வழிஞ்சுட்டு நிற்கிறதைப் பார்த்தேன் அவ்வளவு தான் வெளியூர்காரனாச்சேன்னு போன போகட்டும் பார்த்தா இது சரி வராது போல” என்று மிரட்டிச் சென்றாள்.
ஒரு மரத்தின் ஓரம் கதிரேசனை அழைத்துச் சென்று அவனைப் பார்த்து “ஏன்டா உனக்கு இந்த தேவையில்லாத வேலை” என்று நடந்ததைச் சொன்னான்.
கதிரேசன் அப்போதும் “எனக்கு நீலாவை பிடிச்சிருக்குடா அவளை கல்யாணம் பண்ணனும் ஆசைப்படுறேன்”என்றான்.
அந்த இடம் முழுவதுமே அமைதியை நிரப்பிக் கொண்டிருந்தது.செவிலியர்களும்,
மருத்துவர்களும்,நோயாளிகள் அவர்களுடன் வருவோர் என இடமே மக்களுடன் பரபரப்பைத் தொற்றிக் கொண்டிருந்தாலும் ஒருவித அமைதியை கடைப்பிடித்திருந்தது.
ஆனால் அதே இடத்தில் ஒரு ஓரமாய் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மனமோ கடல் அலையைப் போல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.வெளியே அமைதியை நிலைநாட்டிக் கொண்டிருந்தாலும் மனதிலுள்ளே இரைச்சலின் சத்தம் அவனின் காதை அடைக்க இரண்டு கைகளால் தன் காதுகளை அடைத்துப் பிடித்துக் கொண்டிருந்தான்.
அவனின் நிலைமையைக் கண்ட அவனுடன் வந்திருந்த நண்பன் அருகில் வந்து "என்ன ஆச்சுடா? உடம்புக்கு எதுவும் முடியலையா?"
வருத்தம் தொண்டையை அடைத்துக் கொண்டதோடு வறண்டும் போய் இருக்க பேச வார்த்தை வராமல் "இல்லை" என்று தலையை மட்டும் அசைத்துக் கொண்டான்.
நண்பனின் தோள்களை ஆதரவாய் பற்றிக் கொண்டவன் "கதிரேசா வீட்ல எல்லோர்கிட்டயும் சொல்லிட்டியா?" என்று தன் நண்பன் கிருஷ்ணன் கேட்டகவும் தலைகுனிந்து இருந்தவன் நிமிர்ந்து கோபமாய் ஒரு பார்வை பார்த்தான்.
அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டவனோ "கதிரேசா கோபப்படாதே! இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் இருக்கு அதுக்குள்ளாள நாம நினைக்காதது எல்லாம் நடந்துச்சு போச்சு அதான்…" என்று கிருஷ்ணன் பேச்சை இழுத்து பேசவும் சட்டென்று ஏதோ ஒரு வேகத்தில் எழுந்த கதிரேசன் கிருஷ்ணனைப் பார்த்து…
"நீ என்னோட நண்பனாச்சேன்னு தான் உதவிக்குஅழைச்சேன்,
ஆனால் நீ பேசுறதைப் பார்த்தால் எல்லாம் முடிஞ்சு போன மாதிரி பேசுற,அவளுக்கு என்ன தேவையோ அதுக்கான முடிவை நானே தான் எடுப்பேன் இதை மற்றவங்களுக்கு சொல்லனும் எந்த அவசியமும் இல்லை அதேமாதிரி அவ ஆசைப்பட்ட மாதிரி எங்க கல்யாணமும் கண்டிப்பா நடக்கும்" என்று சொல்லும் போது கதிரேசனின் கண்கள் இரண்டும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.
எதற்கும் அசராதவன் இன்று கலங்கி நிற்பதைப் பார்க்க கிருஷ்ணனுக்கும் வருத்தமாகத் தான் இருந்தது.ஆனால் இந்த நிலைமையை எல்லோரும் கடந்தே ஆக வேண்டும் என்பது வழக்கமான ஒன்று தானே!
ஆனால் கதிரேசன் மனதிலோ நீலாவைப் பற்றிய எண்ணங்களே மனம் முழுவதும் நிறைந்து இருந்தது.அதை அவனால் புறக்கணிக்கவும் முடியவில்லை.அவனுடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துப் போனவளை எப்படி மறக்க முடியும்.இமைகள் மூடி சுவற்றில் சாய்ந்து தன்னவளின் எண்ணங்களை மீண்டும் தன்னுள்ளே நிரப்பிக் கொண்டிருந்தான்.
கதிரேசன் தன் சொந்த ஊருக்கு திருமணத்திற்காக குடும்பத்தோடு சென்றிருந்தான்.ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக நண்பனோடு ஆற்றங்கரையின் ஓரம் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது…
அங்கே ஒருசில இளம் பெண்களின் கூட்டம் ஒன்றாக அமர்ந்துக் கொண்டு எதைப் பற்றியோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது சட்டென்று ஒருத்தி எழுந்து முன்னால் போடப்பட்டிருந்த பின்னலிட்ட சடையை தன் தலையை லேசாக அசைத்து பின்னால் நகர்த்தியவள் எழுந்து சத்தமாக "பேச்சுவார்த்தை எல்லாம் சரிபட்டு வராது உடனடியாக களத்தில் குதிச்சு நிரூபிச்சு காட்டுங்க பார்ப்போம்" என்று கண்களின் கருவிழிகளை உருட்டிக் கொண்டு கைகளை இரண்டையும் இடுப்பில் அடவுக் கொடுத்து வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.
கதிரேசனுக்கு அவளைப் பார்த்த உடனே ஏனோ நெஞ்சில் ஓவியமாய் பதிந்து போனாள்.அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட பக்கத்தில் இருந்த நண்பனோ சிறிது பதற்றத்தோடு "கதிரேசா நாம இங்கே நிற்க வேண்டாம் வா சீக்கிரமா போகலாம்"
என்றான்.
அவனின் பதற்றத்தைப் புரிந்துக் கொள்ளாமல் கதிரேசனோ "கொஞ்சம் அமைதியா இருடா இங்கே என்னவோ நடக்கப் போகுதுன்னு வேடிக்கை பார்த்துட்டு போகலாம்" என்றான் ஆர்வமாக….
நண்பனோ இன்னும் அவசரமாய் "இங்கே நடக்கிறதை பார்க்க வேண்டாம்னு தான் போகலாம்னு சொல்றேன்" என்றான்.
கதிரேசனோ நண்பனை புரியாமல் பார்த்தான்.அதற்கிடையில் அந்த பெண்களுக்குள் வாக்குவாதம் கொஞ்சம் பலமாகச் சென்றுக் கொண்டிருந்தது.அதில் ஒருத்தி அங்கிருந்து வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்.
நீண்ட பின்னலிட்டவளோ தாவணியின் முனையை எடுத்து இடுப்பில் சொறுவிக் கொண்டு எதற்காகவோ தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.
கதிரேசனின் நண்பனோ அவனின் கையைப் பிடித்து இழுத்துக் கொள்ள முயற்சிக்க கதிரேசனோ நண்பனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றான்.
அப்பொழுது எதிரே நின்றுக் கொண்டிருந்த இருவரையும் முறைத்தவளோ ஆற்றில் ஒரே தாவலில் குதித்தாள்.அடுத்து அங்கிருந்த மற்றவர்களும் ஒவ்வொருவராக ஆற்றில் குதித்தார்கள்.
நண்பனோ "அடேய்… அவ நம்பளை பார்த்துட்டா போச்சு வேலில போற ஓணானை மடியில் போட்ட கதை தான் இனிமேல் உன் நிலைமை ஒழுங்கா தப்பிக்கிற வழிய பாரு சாமி நான் இங்க இருந்து போறேன்" என்று அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.
கதிரேசன் என்ன நடக்கிறது? என்பதை பார்க்கும் ஆவலில் ஆற்றங்கரையின் ஓரமாக எட்டி நின்று அங்கேயே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆற்றில் குதித்த எல்லோரும் வேகமாக நீந்திக் கொண்டிருந்தார்கள்.இதில் குறிப்பிட்ட தொலைவு வரை வேகமாக நீந்தி விட்டு திரும்பி கரையில் இவன் பார்த்த அவளே தான் முதலில் வந்து ஏறியவள் அங்கே வைத்திருந்த ஒரு துணியை வைத்து உடல் முழுக்க ஈரத்தோடு இருப்பதை மூடியபடி மேலே வந்தவள் கதிரேசன் வேடிக்கைப் பார்ப்பதைப் பார்த்தப்படியே அருகில் வந்தவள் “ஏய் என்ன இதுவரைக்கும் பொண்ணுங்களை பார்த்ததில்லையோ? அப்படியே முழுங்கிற மாதிரி பார்க்கிறே?” என்று மிரட்டியபடி கேட்டாள்.
அதற்கு கதிரேசன் சற்றும் அசராமல் சிரித்தப்படியே “பொண்ணுங்க நிறைய பேரை பார்த்திருக்கேன் ஆனால் இந்த மாதிரி தைரியமான பொண்ணை இப்போத் தான் பார்க்கிறேன்” என்றான்.
அதே முறைப்போடு உற்றுப் பார்த்தவள் “ஹோ என்கிட்டயே ஜொல்லு ஊத்துறே? இரு” என்று சட்டென்று அவனே எதிர்பாரா நேரத்தில் அவனை ஆற்றில் தள்ளி விட்டாள்.
இவனோ பதறியபடி “அம்மாஆ…” என்று கத்தியபடி விழுந்தவன் கொஞ்சம் எம்மியபடி “எனக்கு நீச்சல் தெரியாது ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க” என்று கதறினான்.
இதற்கிடையில் ஏற்கனவே நீந்தியவர்கள் கரையில் ஏறிவிட பக்கத்தில் இருந்த மற்ற பெண்களில் ஒருத்தி “ஹேய் எதுக்கு இப்போ யாருன்னு தெரியாத அந்த ஆளை தள்ளி விட்டே?”
அதற்கு அவளோ “என்கிட்ட வம்பு பேசினான் அதான்” என்ற பொழுது அவனோ தண்ணீரில் தத்தளித்தப்படி மூழ்கிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்தவர்களில் ஒருத்தி “ஹேய் அந்த ஆளுக்கு உண்மையிலேயே நீச்சல் தெரியில போல ஆத்துத் தண்ணீர் இழுத்தப்படி மூழ்கிட்டு இருக்கான்டி” என்றதும் எட்டிப் பார்த்தவள் எதுவும் யோசிக்காமல் ஆற்றில் குதித்தவள் அவனின் தலைமுடியை பிடித்து இழுத்தப்படி அவள் நீந்தி வந்தாள்.
இதற்கிடையில் கதிரேசனை விட்டுச் சென்ற நண்பனோ அவன் இன்னும் வராததால் திரும்பவும் ஆற்றங்கரைக்கு வந்தான்.
அங்கே நின்றிருந்த பெண்களைப் பார்த்தப்படி ஆற்றங்கரையில் எட்டிப் பார்த்தவன் கதிரேசனை அவள் இழுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தவன் “ஹய்யோ கதிரேசா என்னடா இது? அவனுக்கு நீச்சல் வேற தெரியாதே! எப்படி அவன் தண்ணீர் குள்ளே போனான்?” என்று புலம்ப அவள் அவனை இழுத்துக் கொண்டு கரைக்கு வர கதிரேசனின் நண்பன் அவனை தூக்கிக் கொண்டு கரையில் போட அவள் தான் கதிரேசனுக்கு முதலுதவி செய்துக் கொண்டிருந்தாள்.
வயிற்றை அழுத்தவும் வாயிலிருந்து தண்ணீர் வெளியே வர அவன் நண்பன் காலை தேய்த்து விடவும் லேசாக கண்ணைத் திறந்தான் கதிரேசன்.
அதைப் பார்த்த அவன் நண்பன் “கதிரேசா வெளியூர்ல இருந்து வந்துட்டு நல்லா படியா ஊர் போய் சேர வழியைப் பாருடா எதுக்கு இந்த தேவையில்லாத வேலை நல்லவேளை நீலா வந்து காப்பாத்தினாள் என்று சொன்னவன் “ஆமா தண்ணீல போய் எப்படி விழுந்தே?” என்று அடுத்து ஒரு கேள்வியைக் கேட்கவும் கதிரேசன் எழுந்து உட்கார்ந்தான்.
அவன் அப்படிக் கேட்டதும் எல்லோரும் நீலாவைப் பார்க்க கதிரேசனோ “ஆற்றுடைய அழகுல மயங்கி நழுவி உள்ளே விழுந்திட்டேன்” என்றான்.
நீலா வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள மற்ற பெண்கள் கதிரேசனை அதிசயித்துப் போய் பார்த்தனர்.
அவன் நண்பனோ “வாடா வீட்டுக்கு போகலாம்” என்று அழைத்துப் போனவன் போகும் வழியினில் “கதிரேசா அந்த நீலாத் தானே உன்னை ஆத்துல தள்ளி விட்டாள்”
இவனோ யோசனையோடு “இல்லை” என்றதும் “அடேய் மறைக்காதே! நான் இந்த ஊர்க்காரன் எனக்குத் தெரியாதா? நீலா சரியான ரவுடி யாராவது அவகிட்ட வம்பு பேசினால் இப்படித் தான் எதாவது ஏடாகூடாமாக பண்ணிடுவாள் அதனாலத் தான் உன்னை அப்பவே இங்கிருந்து போகலாம்னு சொன்னேன் கேட்டியா! இப்போ பாரு நல்லவேளை அவளா உன்னை வந்து காப்பாத்தினாள் ஏதோ உனக்கு நல்ல நேரம் ஆனால் அவளைப் போய் நீ காப்பாத்துறேன் பொய் சொன்னே பாரு ம்ம்…” என்றான் சலித்தப்படி…
கதிரேசன் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை நீயே எதாவது தப்பா புரிஞ்சுக்காதே!”
“ஆளே சரியில்லை எதாவது வம்பு பண்ணிடப்போற பார்த்து இருந்துக்கோ” என்று தன் நண்பனை எச்சரித்து விட்டே அனுப்பினான்.
அடுத்து இருவருக்குமான சந்திப்பு திருமண நிகழ்ச்சியில் நடந்தது.
நீலா எங்கே சென்றாலும் அவள் கண்களில் படும்படியே நின்றுக் கொண்டிருந்தான்.
நீலா பொறுக்க முடியாமல் “ஹேய் இங்கே வா எதுக்கு இப்போ என் முன்னாடி சீன் போடுற?” என்று நேராக கதிரேசனைப் பார்த்துக் கேட்டாள்.
அவனோ சுற்றும் முற்றும் பார்த்தப்படி “என்னைத் தான் சொன்னீங்களா?”
அவளோ “ம்ம்… நடிக்காதே! உன்னைத் தான் சொன்னேன் வெளியூர்ல இருந்து வந்த மாதிரி ஒழுங்கா சேதாரம் ஆகாமல் ஊர் போய் சேரனும் புரியுதா?” என்று கதிரேசனை மிரட்டிச் சென்றாள் நீலா.
அவளின் திமிரான பேச்சில் இன்னும் விழுந்தவன் தன் நண்பனிடம் “ஏன்டா இந்த நீலா ஏன்டா இவ்வளவு அழகா இருக்கா?” என்றதும்
அவனோ “நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது மச்சான் அவளைப் பார்த்தால் இந்த ஊர்ல உள்ள பசங்க எல்லாம் ஓடுறானுங்க நீ என்னடான்னா அவளை இரசிக்கிற காதலுக்கு கண் இல்லைன்னு சும்மாவா சொன்னாங்க” என்று நொந்துக் கொண்டான்.
அடுத்து சந்தையில் வைத்து பார்க்கவும் அதே பாணியை கதிரேசன் பின்பற்ற இம்முறை நீலா அவனின் நண்பனிடம் சென்று “இங்கே பாரு இனிமேல் அந்தப் பய என்கிட்ட வந்து வழிஞ்சுட்டு நிற்கிறதைப் பார்த்தேன் அவ்வளவு தான் வெளியூர்காரனாச்சேன்னு போன போகட்டும் பார்த்தா இது சரி வராது போல” என்று மிரட்டிச் சென்றாள்.
ஒரு மரத்தின் ஓரம் கதிரேசனை அழைத்துச் சென்று அவனைப் பார்த்து “ஏன்டா உனக்கு இந்த தேவையில்லாத வேலை” என்று நடந்ததைச் சொன்னான்.
கதிரேசன் அப்போதும் “எனக்கு நீலாவை பிடிச்சிருக்குடா அவளை கல்யாணம் பண்ணனும் ஆசைப்படுறேன்”என்றான்.