• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
22



முதன்முறையாக முறைவைத்து அழைக்கும் தம்பி மனைவியை பாசத்துடன் பார்த்தவன், “எங்க வீட்டுல உள்ளவரால உனக்கு எந்த அவப்பெயரும் வந்திரக்கூடாதுன்னு மனசைக் கல்லாக்கிக்கிட்டுதான் ஐஸ் அப்படிச் செய்தா. எப்ப அவர் பற்றிய சந்தேகம் வந்ததோ அப்பயிருந்து, நீ அங்க இருந்தவரை உன்னை அறியாமலே பாதுகாப்பா வச்சிருந்தா. அவர் முன்ன ஐஸ் நிற்கவோ பேசவோ மாட்டாள். நானே அவர் இருக்கிற இடத்தில் இவளை இருக்க விடமாட்டேன். இப்பவும் உனக்காக உன்கிட்ட பேசியதைத் தப்புன்னு நாங்க நினைக்கலை. என்ன உன் மனசுல இவளுக்கான இடமில்லைன்ற வருத்தத்தில் அப்பப்ப புலம்புவா” என்று மனைவியின் தோளணைத்து கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

சுவீகரன் பேசப்பேச வாயடைத்துப்போய் கேட்டிருந்த பூரணிக்கு நடப்பவை அனைத்திற்கும் மறுபக்கம் ஒன்று உண்டென்று புரிந்த நிமிடம், “அக்கா என்னை மன்னிச்சிருங்க” என்று ஐஸ்வர்யாவின் காலில் விழுந்துவிட்டாள். அவள் செய்த உதவி அப்படிப்பட்டதாகிற்றே!

“ஏய் பூரணி! ஏய் என்னமா செய்யுற? எழுந்திரி” என்று கணவனைவிட்டு விலகி அவளை எழுப்பித் தன்னோடு அணைத்துக்கொள்ள, “ஐம் சாரிக்கா. ஐம் சாரி. நா..நான் தப்புப்பண்ணிட்டேன். ஒரு நிமிடம்கூட உங்க இடத்திலிருந்தது யோசிச்சிப் பார்க்கலை. அப்ப உங்க மேல அன்புன்னு நான் சொன்னதெல்லாம் வெறும் வாய் வார்த்தைதான. நீங்க ரொம்ப கிரேட் அக்கா. நான்தான்...” என புலம்ப,

“ஹேய்மா! போதும். ரொம்ப எமோஷனலாகுற பாரு. அமைதியாயிரு” என்று ஆறுதல்படுத்த, திடீரென்று பின்னிருந்து இருகைகள் ஐஸ்வர்யாவை அணைக்க, ‘இது யார்டா?’ என்று நினைக்கையில், “நானும் சாரிக்கா. பூரணி விஷயம் தெரிந்த நாளிலிருந்த உங்களைத் திட்டாத நேரமில்லை” என்று சண்முகி மன்னிப்பு கேட்டாள்.

“அட ரௌடி பேபி மன்னிப்பெல்லாம் கேட்கிறா. உனக்கு இந்த சென்டிமெண்ட் சீன் செட்டாகலையே” என்று சண்முகியைச் சீண்டினாலும், அதையும் மீறி அத்தனை நாளிருந்த அலைப்புறுதல் நின்று மனதிற்குள் பேரமைதி ஐஸ்வர்யாவுக்குள்.

“இப்ப மட்டும் செட்டாகிக்கட்டும்” என்று சண்முகி சிணுங்க, “அங்க எட்டிப்பாரு அவன் நம்மளை முறைக்கிறான்” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு அங்கு வந்த தினகரனைக் காட்ட... “முறைச்சா முழியைத் தோண்டி மண்ணுல புதைச்சிரலாம் அக்கா” என்றாள்.

“அப்படின்ற? அப்ப உரிமையோடத் தோண்டு” என்ற ஐஸ்வர்யாவின் தோளில் செல்லமாய் அடிக்க, அவர்களைப் பார்த்த பூரணி புரியாது விழித்தாலும் ஏதோ புரிவதுபோலிருக்க, “எனக்குத் தெரியாம என்னவோ நடக்குது” என்றவள் கன்னம் தொட்டு, சண்முகிக்கு ஒரு...”

திடீரென்று அங்கு வந்த குலரசேகரனைக் கண்டு பேச்சுகள் தடைபட்டு, இடமே அமைதியாகி கோபமூச்சுகள் மட்டுமே அங்கு சுழன்றது. அவர் முகம் பார்க்கக்கூட யாரும் தயாராயில்லை. முகம் திருப்பி நின்றிருந்த சின்ன மருமகளின் அருகில் வந்தவர் படாரென அவள் காலில் விழ, “அத்தை” என்று பூரணி அலற, அவரின் அச்செயலில் திடீர் அதிர்வு அங்கே!

எழுந்து அவள்முன் கைகுவித்தவர், “நான் மன்னிக்கிற தப்பைச் செய்யலைதான். இருந்தாலும் என்னை மன்னிச்சிருமா. நான் செஞ்சது யாருக்கும் தெரியாதுன்ற மிதப்புல இருந்துட்டேன். எல்லாரும் என்னை ஒதுக்கி வச்சப்ப கூட ஏன் எதுக்குன்ற காரணம் தெரியாமல் தவிச்சேன். இதை நான் கண்டிப்பா எதிர்பார்க்கலை. நீங்க பேசினதைக் கேட்கலைன்னா கடைசிவரை தண்டனைக்கான காரணம் தெரியாமலே போயிருக்கும். மனதின் சபலத்தால் என் குடும்பத்தையே இழந்துட்டு நிற்கிறேன். பெண்பாவம் பொல்லாதுன்றதை அனுபவப்பூர்வமா உணர்ந்துட்டேன்.”

“இங்க என்னை யாரும் அழைக்கலை. உங்க குடும்பத்தோட எப்பயிருந்து இந்தத் திடீர் உறவுன்னு தெரிஞ்சிக்கதான் அழையா விருந்தாளியா வந்தேன். வந்ததும் நல்லதுதான். எல்லார் மதிப்பிலிருந்தும் இறங்கி... ப்ச்..” என தனக்குத்தானே சுயபச்சாதாபம் எழ, “உன்னை அடுத்த வீட்டுப் பெண்ணா பார்க்காம, என் வீட்டுப் பெண்ணா பார்த்திருந்தா எதுவுமே மாறியிருக்காது. பெரிய தப்புப் பண்ணிட்டேன்மா” என்றார்.

கலங்கிய கண்களைத் துடைத்து ஐஸ்வாயாவிடம் வந்து, “நீயும் என்னை மன்னிச்சிருமா. இந்த நிமிடம் என்னை நானே அசிங்கமா பார்க்கிறேன். யாரையும் நேருக்கு நேர் பார்க்கிற தகுதிகூட எனக்கில்லை. உன் அத்தையோட நம்பிக்கையையும் முழுசா கெடுத்துட்டேன். ஏன் என் புத்தி அப்படியாச்சின்னு எனக்கேத் தெரியலை. வேண்டாத போதனை.. வேண்டாத நேரத்துல மூளைக்குள்ள புகுந்து என்னையே அழிச்சிருச்சி. இப்ப அதனால உங்களை இழந்து நிற்கிறேன்” என்றவர் திரும்பவும் பூரணியிடம் வந்து நின்றார்.

அவளோ பயத்தில் ஐஸ்வர்யாவின் கையை இறுக்கிக் கட்டிக்கொள்ள, பூரணியை ஆறுதலாக அணைத்துக்கொண்டாள்.

“நான் பண்ணின தப்புக்கு என் பையனைத் தண்டிச்சிராதமா. அவன் ரொம்ப நல்லவன். உன் அத்தையோட வளர்ப்பு சோடைபோகாது. உன்னை நல்லா பார்த்துக்குவான். என்னாலதான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன்ற அப்படின்னா, பிரச்சனைக்குரிய நான் இனி அங்கயிருக்கமாட்டேன். எனக்கு என் குடும்ப நிம்மதி முக்கியம்” என்று அங்கிருந்து நகர்ந்தவர் கண்முன் தோன்றியது அக்காட்சிகள்.

பாலைக் கொடுத்த அன்று ஏதோ ஒரு வேகத்தில் மகன் அறைக்குள் சென்றுவிட்டார்தான். ஆனால் அவர்கள் இருந்த கோலம் நிஜ கணவன் மனைவியைக் கண்முன் கொண்டுவர, முதன்முதலாகத் தன் தவறை உணர ஆரம்பித்தார். மகனின் தலையை மெல்ல வருடிக்கொடுத்து, மருமகளை தவறான எண்ணத்தில் இல்லாமல் தொட வர, மகனின் கரம் தன் கையைத் தட்டிவிட்டு மனைவியை அணைத்ததைக் கண்ட நிமிடம்தான், குலசேகரன் மனம் தன் தப்பை முழுதாக உணர்ந்து தெளிவானது.

மறுநாள் அவளை வீட்டைவிட்டு அனுப்பியதைக் கேட்டவருக்கு, தான் விதைத்த வினை என்பது புரிய, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்தார். ஏனோ அவள் முகம் பார்க்கத் திராணியற்றவராக, தன்னைப்பற்றிய உண்மை வீட்டினருக்குத் தெரியாதென்ற தைரியத்திலும், மகன் பைத்தியம் என்பதாலும், அவள் வீட்டில் பேசி மனைவியின் துணையுடன் மகனின் திருமண வாழ்க்கைக்கு முடிவும் கட்டிவிட்டார். இதோ அதற்கான பலனை அனுபவிக்கக் கிளம்பிவிட்டார் குலசேகரன்.

அவர் சென்ற நிமிடம் அப்படியே அமர்ந்தவள் வருடக்கணக்கில் சேர்த்து வைத்திருந்த அழுகையை அழுதாள். இதுதான் காரணமென்றில்லாது அனைத்திற்கு சேர்த்து அழுது தீர்த்தாள்.

அவள் துன்பம் போக சிறிது நேரம் அழவிட்டு, அவளருகில் அமர்ந்து தலையைக் கோதிக்கொடுத்து, “போதும் பூரணிமா. நடந்து முடிஞ்சதுக்காக அழுறது இதுவே கடைசியாயிருக்கட்டும். உன் வாழ்க்கையைப் பற்றிய முடிவெடுக்கிற நேரமிது. நல்ல முடிவோடதான் இந்த மண்டபத்தைவிட்டு நாங்க கிளம்புவோம்” என்றார் ஆனந்தி.

கணவனில் ஆரம்பித்து அனைவரும் அவளின் வாழ்க்கைக்கான முடிவெடுக்கச் சொல்ல, அங்கு வந்த மலையரசனும், ஜனனி ஜெஃப்ரினும் அதையே வலியுறுத்த, “முதலில் அவளை யோசிக்க விடுங்க” என்ற சண்முகி அனைவரையும் அனுப்பி தோழியிடம் வந்தமர்ந்தாள்.

“நீ என்ன முடிவெடுத்தாலும் என் ஆதரவு உனக்குதான் பூரணி. கடைசிவரை உன்னோடவே இருப்பேன். அதே சமயம் உன் கணவரோட வாழப்போனா இங்கேயிருக்கிற அத்தனை பேரையும்விட நான்தான் அதிகம் சந்தோஷப்படுவேன். எனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம்” என்றாள்.

“நான் எதிர்மறையா சொன்னா கல்யாணமே பண்ணாம என்னோட இருந்திருவ இல்ல சண்மு?” என்று அவளை ஆழ்ந்து பார்க்க,

சிறு அதிர்வு கண்ணில் வந்தபோதும், “அப்பவும் இப்படித்தான் ஏதோ உளறின. அப்படிலாம் எதுவும் கிடையாது பூரணி. சரியான ஆள் கிடைக்காததால வெய்ட்டிங்” என்றாள்.

“எனக்கு உண்மை தெரியும் சண்மு” என்றதும், “ப்ச்.. விடு பரவாயில்லை. மனசைப் போட்டுக் குழப்பிக்காம முடிவெடு” என்று எழுந்து அவளுக்கு யோசிக்க இடைவெளி கொடுத்துச் செல்ல, தோழியைக் கண்டவள் கண்கள் கலங்கியது. இத்தனை நடந்தும் கடைசிவரைத் தன்னுடன் இருக்கிறேன் என்பவளை என்னவென்று சொல்வாள். தோழிக்காகவாவது நல்ல முடிவெடுக்க வேண்டுமென்ற எண்ணம் எழாமலில்லை.

“நீ நட்பாகக் கிடைக்க என்ன தவம் செய்தேன் சண்மு. இக்கலிகாலத்தில் உன்னைப்போல் லட்சத்தில் ஒருத்தி மட்டுமே இருப்பாள். உன் நட்பு கிடைக்க நான் எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தேனோ!”

“என் பிடிவாதத்தால் எனக்குப் பிடித்தவர்களைக் கஷ்டப்படுத்த மட்டுமே செய்திருக்கேன். எனக்காகவே என்னை விட்டு விலகப்போவதாகச் சொல்லும் என் வசீகரன்! என்ன தப்பு செய்தாங்க அவங்க? ஒரு உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை நினைக்காது போனதில், மனநிலை பிறழ்ந்தது அவங்க தவறில்லையே? தன்னைப் பற்றிய உண்மை தெரிந்ததும் என்னைத் தேடித்தானே வந்தாங்க.”

“வசீகரனைப் பிடித்திருந்தும் மறுக்கும் நிலையைக் கடவுள் ஏன் கொடுக்கணும்? யார் யாருக்காகவோவா திருமணம் செய்தது? இல்லையே. நாங்க வாழத்தானே! ஏன் வாழக்கூடாது? யாரோ ஒருத்தருக்காக என் வாழ்வோட சேர்த்து என் வசீகரன் வாழ்வையும் ஏன் அழிக்கணும்? இல்லை நான் வாழ்வேன். இனியொரு முறை என் வசீகரனை என்னிடம் யாசிக்க விடமாட்டேன்.”

மனதில் ஒரு தெளிவு எழுந்ததும் தன் முடிவைத் தோழியிடமும் மாமியாரிடமும் சொல்ல, இதோ அனைவரின் ஆசீர்வாதத்துடன் தன் கணவனின் முன் நிற்கிறாள்.

“பரி நீ..” என்றவனை பட்டென்று அடிக்க, திகைத்து நின்றவனைக் கண்டு, “ஏன்டா.. வேற யாரையாவது பிடிச்சா நான் கல்யாணம் செய்துக்கணுமா? சொல்லு செய்துக்கணுமா? ஒண்ணுக்கு இரண்டு முறை தாலி கட்டிட்டு பேச்சா பேசுற? எவ்வளவு தைரியமிருந்தா என்னைப் பார்த்து அப்படிச் சொல்வ? அதோட என்னை விட்டுட்டு கண்காணாத இடத்துக்குப் போயிருவியா? நான் வேண்டாமா உனக்கு? ஆனா எனக்கு நீ வேணும். நீ மட்டும்தான் வேணும். என்னை விட்டுப் போகணும்னு நினைப்பியா?” என்று அவனை விடாது அடித்தாள்.

அவளின் செல்ல அடியில் நிதானத்திற்கு வந்திருந்தவன், தன்னைச் சூழ்ந்த துன்பத்தையெல்லாம் ஆழ மூச்செடுத்து வெளியே தள்ளி, மனைவியின் கைபிடித்து கண்பார்த்து, “காலையில் மூன்றாவது முறையா தாலி கட்டுறேன் பரி. அதுவும் உன் முழு சம்மதத்தோடு” என்றான் வசீகரப் புன்னகை சிந்தி.

“உன்னை.. போடா..” என்றாள் சிணுங்கலாக.

“போடா வேண்டாம் பரிமா. வாடா சொல்லு” என்று மார்போடு மென்மையாய் அணைக்க, அவர்கள் மேல் பூமாரி பொழிந்தது இளையவர்களின் சந்தோஷக் கூச்சலுடன்.

தலையில் விழுந்த பூக்களை எதிர்பாராததால் வெட்கத்தில் கணவனை விட்டு விலக, “ஹேய் பூரணி வாழ்த்துகள்” என்று தோழியை மெல்லியதாய் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் சண்முகி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அவளைத் தொடர்ந்து அனைவரும் வாழ்த்து சொல்ல, மெல்லிய புன்னகையுடன் கூடிய வெட்கத்துடன் அதனை ஏற்று கணவனைப் பார்க்க, ஆதரவாய் தன் தோள்சாய்த்து உச்சியில் முத்தமிட ஏனோ சந்தோஷத்தில் இருவர் கண்களும் கலங்கியது.

எப்படியும் பூரணியை சம்மதிக்க வைத்துவிடலாமென்ற நம்பிக்கையில் மண்டபத்தை இருநாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்ததால், அவளின் சம்மதம் கிடைத்த மறுநிமிடத்திலிருந்து இரவோடிரவாக வெகுவேகமாக கல்யாண ஏற்பாடுகள் நடக்க, பெண், மாப்பிள்ளை வீட்டினருடன் ஜெஃப்ரின் குடும்பத்தினரும் அங்கிருந்தனர். அதிகம் ஆட்களை அழைக்காவிடினும் முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்தார்கள்.

காலை முகூர்த்த நேரத்தில் மண்டபத்தில் அழையா விருந்தாளியாய் வந்த தனசேகரன் குடும்பத்தினரைக் கண்ட ஆனந்தி சற்று சங்கடத்துடனே அவர்களை வரவேற்றார்.

“காலையிலதான் தினா சொன்னான் ஆனந்தி. சித்தி உறவை அப்படியே விட்டுருவீங்களா? ஆம்பளைங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், பெண்கள்தான் வீட்டையும் உறவையும் நல்லபடியா பார்த்துக்கணும்னு ஒரே அறிவுரை. அவன் என்ன சொன்னாலும் உன்னை விட்டா எனக்கு வேற உறவு ஏது சொல்லு? நாம ஒண்ணா இருக்கணும்னுதான ஒரே வீட்டில் நம்மைக் கொடுத்தாங்க. என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும் விசேஷ நேரம் நாங்கயில்லாமல் எப்படி? அதான் கூப்பிடலைனாலும் குடும்பத்தோட வந்துட்டேன்” என்றார் சுகந்தி.

தனக்கும் அக்கா மட்டும்தானே பிறந்த வீட்டு உறவு என்றெண்ணி, மகனின் திருமணத்தை சொல்லாமல் விட்ட குற்றவுணர்வில் மன்னிப்பு கேட்டு முகம் மலர அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார் ஆனந்தி.

முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதத்துடனும், பெரியவர்களின் மனம் நிறைந்த ஆசியுடனும், சிறியவர்களின் வாழ்த்துகளுடனும், திருமதி.பரிபூரணி வசீகரனாக மூன்றாவது முறையாக வசீகரனின் கரத்தினால் தாலி வாங்கிக்கொண்டாள் பரிபூரணி.

தாலி கட்டும்போது அவள் காதருகில் குனிந்து, “இதை நான் உனக்குக் கட்டுறேன். இனி எப்பவும் என்னோடவே இருக்கணும்” என்றான்.

வியப்பாய் விழி விரித்தவள், “உங்களுக்கு ஞாபகமிருக்காதுங்க. இந்த வார்த்தையை முதல்முறை தாலி கட்டும்போதும் சொன்னீங்க. என்னாலதான் உங்களோடவே இருக்க முடியலை” என்றாள் வருத்தத்துடன்.

அவளை ஆச்சர்யமாகப் பார்த்து, “அப்ப அந்த நேரத்திலும் என்னோடவே இருக்கச்சொல்லி உனக்காக ஏங்கியிருக்கேன்னு சொல்லு” என்று கண்சிமிட்ட, நாணம் மேலிட “அப்படிலாம் ஒண்ணுமில்லை” என்று தலைகுனிய... சிறியவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானதுதான் மிச்சம்.

மேடைச் சடங்குகள் முடிந்த வேளையில் மைக்குடன் மேடையேறிய தினகரன் முதலில் மணமக்களை வாழ்த்தி, பின் “இத்திருமணத்திற்கு வந்திருப்பவர்கள் எங்கேயும் நகராம அப்படியே இருந்து இன்னொரு ஜோடியையும் வாழ்த்திட்டுப் போங்க. இது திடீர்த் திருமணம்தான். பிடிச்சவங்க இருக்கலாம். பிடிக்கலைனாலும் எனக்காக இருந்தா சந்தோஷப்படுவேன்” என்று பேசிக்கொண்டிருக்க,

தனசேகரன் குடும்பத்தினர் அவனை அதிர்ந்து பார்க்க, “அப்பா, அம்மா, மனோண்ணா என்னை மன்னிச்சிருங்க. என்னதுன்னு கெஸ் பண்ணிட்டீங்கன்னு உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது. எனக்குதான் கல்யாணம். நான் பார்த்த பெண் வசதி மட்டும்தான் குறைவு. மற்றபடி குணத்துல ரொம்பவே உயர்ந்தவள். கஷ்டப்பட்டு எங்க பூரணி அண்ணி கால்ல விழுந்து அவளை கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சிருக்கேன். கல்யாணத்தைத் தள்ளிப்போட வேண்டாம்னு வசீண்ணா கல்யாணத்தோட எங்களோடதையும் வைக்க முடிவு பண்ணிட்டேன்” என்றதில் பூரணி அவனை முறைக்க, அவனோ கெஞ்சலாகப் பார்த்தான்.

முன்தின இரவு நடந்ததும் அதுதான். பூரணி தினகரனின் பெற்றோரை நினைத்து அவர்களின் திருமணம் சரிவராது என்று அழுத்தமாக நின்றவளைக் கெஞ்சாத குறையாக கெஞ்சி சம்மதிக்க வைத்தான் தினகரன். அதன்பின் சண்முகியிடம் பேசவைத்து, சண்முக சுந்தரத்திடமும் பேச வைத்து ‘தன் மனைவியை மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காமல் நல்லபடி பார்த்துக்கொள்ளுவேன்’ என்று அவர்களுக்கு வாக்களித்து, வசீகரன் பூரணி திருமணம் முடிந்த அடுத்த முகூர்த்தத்தில் தங்களின் திருமணம் நடக்க வேண்டுமென்று, அதற்கும் ஒரு போராட்டம் நடத்தி ஒருவழியாக சம்மதிக்க வைத்திருந்தான்.

“இன்னும் அரைமணி நேரத்தில் கல்யாணம்” என்று அறிவித்து கீழே இறங்கி வந்தவன் வருங்கால மாமனாரிடம் பேசி சண்முகியைக் கண்டு கண்ணடித்து, அவளின் ‘கொன்னுருவேன்’ என்ற திட்டையும் வாங்கி தன் பெற்றோரிடம் செல்ல, அவர்களின் பேச்சுகளையும் கோபத்தையும் தாங்கி அமைதியாக ஆனால் பிடிவாதமாக நின்றிருந்தான்.

தினகரனின் அந்நிலையைக் கண்ட சண்முகி மனதில் ஏதோவொரு இடமாற்றம். கணவனாக அவள் இதயத்தில் இடம் பிடித்துவிட்டானோ!

“திருமணத்திற்குப் பின்னான காதலில் அதீத சுகமுண்டு! இதை அறிவார் மிகச்சிலரே!”

தற்செயலாகத் திரும்பிய தினகரன் பாவையின் பார்வைதனில் என்னவென்று புருவம் உயர்த்திக் கேட்க, அவனின் பெற்றோரைப் பார்த்தவாறு ஒன்றுமில்லையென்று தலையசைக்க, தான் பார்த்துக்கொள்வதாக கண்மூடித் திறந்து ஆறுதலளிக்க, அதற்கும் மென்மையாகத் தலையசைத்துப் புன்னகைத்தாள்.

“அண்ணலும் நோக்கினார்! அவளும் நோக்கினாள்!” ஐஸ்வர்யா சண்முகியை இடிக்க, “அக்கா” என்ற கெஞ்சல் குரலில் கொஞ்சலிருந்ததோ!

சொன்ன நேரத்தில் தினகரன்-சண்முகி திருமணம் நடக்க, மகனுக்காக இறங்கி வந்தாலும் சண்முகியைக் கண்டவர்களுக்கு, ‘வசதி இல்லாவிட்டாலும் கலராகவாவது இருந்திருக்கலாம். தினகரனுக்கு சண்முகி பொருத்தமில்லை’ என்ற எண்ணம் தனசேகரன், சுகந்தி, ஸ்வாதிக்கு இருக்க மனோகரன் தம்பியின் விருப்பமென்று இருந்துவிட்டான்.

‘தனது பிடித்தமின்மையால் தன்னால் எதுவும் பிரச்சனையாகிவிடுமோ? வசீகரன் வாழ்க்கை போல் தன் மகனின் வாழ்க்கையும் ஆகிவிட்டால்?’ என பயந்த சுகந்தி, தங்கையின் பொறுப்பில் மணமக்களை விட்டு மற்றவர்களை அழைத்துச் சென்றுவிட்டார்.

மலையரசன் குடும்பமும் வளைகாப்பு முடிந்ததும் பெண் பிறந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்பதால், திருமணம் முடிந்ததும் முறையாக விடைபெற்று மண்டபத்திலிருந்தே வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்கள்.

அன்றைய இரவு உணவு முடித்து அவரவர் அறைக்குச் செல்லும் முன் புதுப்பெண்களின் தயக்கத்தை உடைக்க, அனைவரும் கேலியும் கிண்டலுமாய் பேசிக் கொண்டிருக்க, இளையவர்களுக்கு இடையில் தாங்கள் எதற்கென்று பேரனை தன்னுடன் படுக்கவைத்துக் கொண்டார் ஆனந்தி.

“டேய் வசீ! தினா! இன்னைக்கு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டா. வர்றீங்களா தண்ணியடிக்கலாம்?” என்றழைத்தான் சுவீகரன்.

“அண்ணா நீயா? நீயேதானா? நாங்களே கூப்பிட்டாலும் வரமாட்டேன்னுவ” என்று தினகரன் ஆச்சர்யப்பட,

“கர்மா இஸ் பூமராங்னு சொன்னேன்ல மிஸ்டர்.கரன்.. சுவீகரன். பார்த்தியா தண்ணியடிக்க நீயே கூப்பிடுற?” வசீகரன் அண்ணனைக் கிண்டலடித்தான்.

“நீங்க தண்ணியடிப்பீங்களா?” பரிபூரணி அதிர்ந்து கேட்க,

“அடேய் ஊத்தப்பம்! நீயுமா?” என்று சண்முகி அவனை முறைத்தாள்.

“கர்மா இஸ் பூமராங்கா? சிக்குனீங்கடா” என்ற சுவீகரன் சத்தமாகச் சிரித்தான்.

“அடேய் அண்ணா! பாவி.. நேரம் பார்த்துத் தாக்கிட்டியே” என்று சுவீகரன் மேல் பாய...

“அத்தான் மேல் ஏன் பாயுறீங்க? முதல்ல எங்களுக்குப் பதில் சொல்லுங்க?” என்று இருவரும் நிற்க, தினகரன் மெல்ல நகருவதைக் கண்ட சண்முகி அவனை விரட்டிச்செல்ல தங்களுக்கான அறையில் இருவரும் நுழைய கதவு சாத்தப்பட்டது.

“நேக்கா ஒரு ஜோடி எஸ்கேப் ஆகிருச்சி” என்ற ஐஸ்வர்யா சிரித்தபடி, “வர வர நாரதர் வேலை நல்லா பார்க்குறீங்க.” கணவனை இடிக்க...

“நாம் செய்யும் செயல் நன்மையில் முடியும்னா, கலகம் தப்பில்லையே” என்று சிரித்தான் சுவீகரன்.

“பரிமா இப்படிப் பார்க்கக்கூடாது. வேணும்னா நீயும் வா சேர்ந்து தண்ணியடிக்கலாம்.”

“என்னது? தண்ணியடிக்க நானா?” என்று அலற,

“ஐயோ! அது அந்தத் தண்ணியில்லைமா. நாம குடிக்கிற தண்ணீர். பிலீவ் மீ” என்று அப்பாவியாய் முகம் வைக்க... சுவீகரன் ஐஸ்வர்யா இருவரும் அவன் நிலையைக் கண்டு விழுந்து விழுந்து சிரிக்க, அவன் முறைக்கவும் இடத்தைக் காலி செய்தார்கள்.

விளையாட்டு என்று தெரிந்தும் தன்னை முறைத்து நின்ற மனைவியினருகில் புன்னகையுடன் வந்தவன், சட்டென்று கன்னத்தில் முத்தமிட்டு கைகளில் அவளைத் தூக்க, அவன் தூக்குவானென்று எதிர்பாராததால் வந்த தடுமாற்றத்தில் கணவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முகம் பார்க்க, அவனின் கண்சிமிட்டலில் நாணம் எழ, ‘வசீகரிக்காதே வசீகரா’ என்றது அவள் கண்கள்.

“அப்படித்தான் வசீகரிப்பேன் மிஸஸ்.பரிபூரணி வசீகரன்” என்று நெற்றி முட்டி மென்மையாய் முத்தமிட, இருவருக்குள்ளும் ஒரு நிறைவான புன்னகை.


அப்புன்னகை அவர்களின் காலம் வரை நிலைத்திருக்கும்.



நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்
 
New member
Joined
Sep 12, 2024
Messages
1
அவளைத் தொடர்ந்து அனைவரும் வாழ்த்து சொல்ல, மெல்லிய புன்னகையுடன் கூடிய வெட்கத்துடன் அதனை ஏற்று கணவனைப் பார்க்க, ஆதரவாய் தன் தோள்சாய்த்து உச்சியில் முத்தமிட ஏனோ சந்தோஷத்தில் இருவர் கண்களும் கலங்கியது.

எப்படியும் பூரணியை சம்மதிக்க வைத்துவிடலாமென்ற நம்பிக்கையில் மண்டபத்தை இருநாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்ததால், அவளின் சம்மதம் கிடைத்த மறுநிமிடத்திலிருந்து இரவோடிரவாக வெகுவேகமாக கல்யாண ஏற்பாடுகள் நடக்க, பெண், மாப்பிள்ளை வீட்டினருடன் ஜெஃப்ரின் குடும்பத்தினரும் அங்கிருந்தனர். அதிகம் ஆட்களை அழைக்காவிடினும் முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்தார்கள்.

காலை முகூர்த்த நேரத்தில் மண்டபத்தில் அழையா விருந்தாளியாய் வந்த தனசேகரன் குடும்பத்தினரைக் கண்ட ஆனந்தி சற்று சங்கடத்துடனே அவர்களை வரவேற்றார்.

“காலையிலதான் தினா சொன்னான் ஆனந்தி. சித்தி உறவை அப்படியே விட்டுருவீங்களா? ஆம்பளைங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், பெண்கள்தான் வீட்டையும் உறவையும் நல்லபடியா பார்த்துக்கணும்னு ஒரே அறிவுரை. அவன் என்ன சொன்னாலும் உன்னை விட்டா எனக்கு வேற உறவு ஏது சொல்லு? நாம ஒண்ணா இருக்கணும்னுதான ஒரே வீட்டில் நம்மைக் கொடுத்தாங்க. என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும் விசேஷ நேரம் நாங்கயில்லாமல் எப்படி? அதான் கூப்பிடலைனாலும் குடும்பத்தோட வந்துட்டேன்” என்றார் சுகந்தி.

தனக்கும் அக்கா மட்டும்தானே பிறந்த வீட்டு உறவு என்றெண்ணி, மகனின் திருமணத்தை சொல்லாமல் விட்ட குற்றவுணர்வில் மன்னிப்பு கேட்டு முகம் மலர அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார் ஆனந்தி.

முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதத்துடனும், பெரியவர்களின் மனம் நிறைந்த ஆசியுடனும், சிறியவர்களின் வாழ்த்துகளுடனும், திருமதி.பரிபூரணி வசீகரனாக மூன்றாவது முறையாக வசீகரனின் கரத்தினால் தாலி வாங்கிக்கொண்டாள் பரிபூரணி.

தாலி கட்டும்போது அவள் காதருகில் குனிந்து, “இதை நான் உனக்குக் கட்டுறேன். இனி எப்பவும் என்னோடவே இருக்கணும்” என்றான்.

வியப்பாய் விழி விரித்தவள், “உங்களுக்கு ஞாபகமிருக்காதுங்க. இந்த வார்த்தையை முதல்முறை தாலி கட்டும்போதும் சொன்னீங்க. என்னாலதான் உங்களோடவே இருக்க முடியலை” என்றாள் வருத்தத்துடன்.

அவளை ஆச்சர்யமாகப் பார்த்து, “அப்ப அந்த நேரத்திலும் என்னோடவே இருக்கச்சொல்லி உனக்காக ஏங்கியிருக்கேன்னு சொல்லு” என்று கண்சிமிட்ட, நாணம் மேலிட “அப்படிலாம் ஒண்ணுமில்லை” என்று தலைகுனிய... சிறியவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானதுதான் மிச்சம்.

மேடைச் சடங்குகள் முடிந்த வேளையில் மைக்குடன் மேடையேறிய தினகரன் முதலில் மணமக்களை வாழ்த்தி, பின் “இத்திருமணத்திற்கு வந்திருப்பவர்கள் எங்கேயும் நகராம அப்படியே இருந்து இன்னொரு ஜோடியையும் வாழ்த்திட்டுப் போங்க. இது திடீர்த் திருமணம்தான். பிடிச்சவங்க இருக்கலாம். பிடிக்கலைனாலும் எனக்காக இருந்தா சந்தோஷப்படுவேன்” என்று பேசிக்கொண்டிருக்க,

தனசேகரன் குடும்பத்தினர் அவனை அதிர்ந்து பார்க்க, “அப்பா, அம்மா, மனோண்ணா என்னை மன்னிச்சிருங்க. என்னதுன்னு கெஸ் பண்ணிட்டீங்கன்னு உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது. எனக்குதான் கல்யாணம். நான் பார்த்த பெண் வசதி மட்டும்தான் குறைவு. மற்றபடி குணத்துல ரொம்பவே உயர்ந்தவள். கஷ்டப்பட்டு எங்க பூரணி அண்ணி கால்ல விழுந்து அவளை கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சிருக்கேன். கல்யாணத்தைத் தள்ளிப்போட வேண்டாம்னு வசீண்ணா கல்யாணத்தோட எங்களோடதையும் வைக்க முடிவு பண்ணிட்டேன்” என்றதில் பூரணி அவனை முறைக்க, அவனோ கெஞ்சலாகப் பார்த்தான்.

முன்தின இரவு நடந்ததும் அதுதான். பூரணி தினகரனின் பெற்றோரை நினைத்து அவர்களின் திருமணம் சரிவராது என்று அழுத்தமாக நின்றவளைக் கெஞ்சாத குறையாக கெஞ்சி சம்மதிக்க வைத்தான் தினகரன். அதன்பின் சண்முகியிடம் பேசவைத்து, சண்முக சுந்தரத்திடமும் பேச வைத்து ‘தன் மனைவியை மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காமல் நல்லபடி பார்த்துக்கொள்ளுவேன்’ என்று அவர்களுக்கு வாக்களித்து, வசீகரன் பூரணி திருமணம் முடிந்த அடுத்த முகூர்த்தத்தில் தங்களின் திருமணம் நடக்க வேண்டுமென்று, அதற்கும் ஒரு போராட்டம் நடத்தி ஒருவழியாக சம்மதிக்க வைத்திருந்தான்.

“இன்னும் அரைமணி நேரத்தில் கல்யாணம்” என்று அறிவித்து கீழே இறங்கி வந்தவன் வருங்கால மாமனாரிடம் பேசி சண்முகியைக் கண்டு கண்ணடித்து, அவளின் ‘கொன்னுருவேன்’ என்ற திட்டையும் வாங்கி தன் பெற்றோரிடம் செல்ல, அவர்களின் பேச்சுகளையும் கோபத்தையும் தாங்கி அமைதியாக ஆனால் பிடிவாதமாக நின்றிருந்தான்.

தினகரனின் அந்நிலையைக் கண்ட சண்முகி மனதில் ஏதோவொரு இடமாற்றம். கணவனாக அவள் இதயத்தில் இடம் பிடித்துவிட்டானோ!

“திருமணத்திற்குப் பின்னான காதலில் அதீத சுகமுண்டு! இதை அறிவார் மிகச்சிலரே!”

தற்செயலாகத் திரும்பிய தினகரன் பாவையின் பார்வைதனில் என்னவென்று புருவம் உயர்த்திக் கேட்க, அவனின் பெற்றோரைப் பார்த்தவாறு ஒன்றுமில்லையென்று தலையசைக்க, தான் பார்த்துக்கொள்வதாக கண்மூடித் திறந்து ஆறுதலளிக்க, அதற்கும் மென்மையாகத் தலையசைத்துப் புன்னகைத்தாள்.

“அண்ணலும் நோக்கினார்! அவளும் நோக்கினாள்!” ஐஸ்வர்யா சண்முகியை இடிக்க, “அக்கா” என்ற கெஞ்சல் குரலில் கொஞ்சலிருந்ததோ!

சொன்ன நேரத்தில் தினகரன்-சண்முகி திருமணம் நடக்க, மகனுக்காக இறங்கி வந்தாலும் சண்முகியைக் கண்டவர்களுக்கு, ‘வசதி இல்லாவிட்டாலும் கலராகவாவது இருந்திருக்கலாம். தினகரனுக்கு சண்முகி பொருத்தமில்லை’ என்ற எண்ணம் தனசேகரன், சுகந்தி, ஸ்வாதிக்கு இருக்க மனோகரன் தம்பியின் விருப்பமென்று இருந்துவிட்டான்.

‘தனது பிடித்தமின்மையால் தன்னால் எதுவும் பிரச்சனையாகிவிடுமோ? வசீகரன் வாழ்க்கை போல் தன் மகனின் வாழ்க்கையும் ஆகிவிட்டால்?’ என பயந்த சுகந்தி, தங்கையின் பொறுப்பில் மணமக்களை விட்டு மற்றவர்களை அழைத்துச் சென்றுவிட்டார்.

மலையரசன் குடும்பமும் வளைகாப்பு முடிந்ததும் பெண் பிறந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்பதால், திருமணம் முடிந்ததும் முறையாக விடைபெற்று மண்டபத்திலிருந்தே வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்கள்.

அன்றைய இரவு உணவு முடித்து அவரவர் அறைக்குச் செல்லும் முன் புதுப்பெண்களின் தயக்கத்தை உடைக்க, அனைவரும் கேலியும் கிண்டலுமாய் பேசிக் கொண்டிருக்க, இளையவர்களுக்கு இடையில் தாங்கள் எதற்கென்று பேரனை தன்னுடன் படுக்கவைத்துக் கொண்டார் ஆனந்தி.

“டேய் வசீ! தினா! இன்னைக்கு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டா. வர்றீங்களா தண்ணியடிக்கலாம்?” என்றழைத்தான் சுவீகரன்.

“அண்ணா நீயா? நீயேதானா? நாங்களே கூப்பிட்டாலும் வரமாட்டேன்னுவ” என்று தினகரன் ஆச்சர்யப்பட,

“கர்மா இஸ் பூமராங்னு சொன்னேன்ல மிஸ்டர்.கரன்.. சுவீகரன். பார்த்தியா தண்ணியடிக்க நீயே கூப்பிடுற?” வசீகரன் அண்ணனைக் கிண்டலடித்தான்.

“நீங்க தண்ணியடிப்பீங்களா?” பரிபூரணி அதிர்ந்து கேட்க,

“அடேய் ஊத்தப்பம்! நீயுமா?” என்று சண்முகி அவனை முறைத்தாள்.

“கர்மா இஸ் பூமராங்கா? சிக்குனீங்கடா” என்ற சுவீகரன் சத்தமாகச் சிரித்தான்.

“அடேய் அண்ணா! பாவி.. நேரம் பார்த்துத் தாக்கிட்டியே” என்று சுவீகரன் மேல் பாய...

“அத்தான் மேல் ஏன் பாயுறீங்க? முதல்ல எங்களுக்குப் பதில் சொல்லுங்க?” என்று இருவரும் நிற்க, தினகரன் மெல்ல நகருவதைக் கண்ட சண்முகி அவனை விரட்டிச்செல்ல தங்களுக்கான அறையில் இருவரும் நுழைய கதவு சாத்தப்பட்டது.

“நேக்கா ஒரு ஜோடி எஸ்கேப் ஆகிருச்சி” என்ற ஐஸ்வர்யா சிரித்தபடி, “வர வர நாரதர் வேலை நல்லா பார்க்குறீங்க.” கணவனை இடிக்க...

“நாம் செய்யும் செயல் நன்மையில் முடியும்னா, கலகம் தப்பில்லையே” என்று சிரித்தான் சுவீகரன்.

“பரிமா இப்படிப் பார்க்கக்கூடாது. வேணும்னா நீயும் வா சேர்ந்து தண்ணியடிக்கலாம்.”

“என்னது? தண்ணியடிக்க நானா?” என்று அலற,

“ஐயோ! அது அந்தத் தண்ணியில்லைமா. நாம குடிக்கிற தண்ணீர். பிலீவ் மீ” என்று அப்பாவியாய் முகம் வைக்க... சுவீகரன் ஐஸ்வர்யா இருவரும் அவன் நிலையைக் கண்டு விழுந்து விழுந்து சிரிக்க, அவன் முறைக்கவும் இடத்தைக் காலி செய்தார்கள்.

விளையாட்டு என்று தெரிந்தும் தன்னை முறைத்து நின்ற மனைவியினருகில் புன்னகையுடன் வந்தவன், சட்டென்று கன்னத்தில் முத்தமிட்டு கைகளில் அவளைத் தூக்க, அவன் தூக்குவானென்று எதிர்பாராததால் வந்த தடுமாற்றத்தில் கணவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முகம் பார்க்க, அவனின் கண்சிமிட்டலில் நாணம் எழ, ‘வசீகரிக்காதே வசீகரா’ என்றது அவள் கண்கள்.

“அப்படித்தான் வசீகரிப்பேன் மிஸஸ்.பரிபூரணி வசீகரன்” என்று நெற்றி முட்டி மென்மையாய் முத்தமிட, இருவருக்குள்ளும் ஒரு நிறைவான புன்னகை.


அப்புன்னகை அவர்களின் காலம் வரை நிலைத்திருக்கும்.



நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்
அருமையான கதை வாழ்த்துக்கள் சொர்ணா சாந்தகுமார்
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top