Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 143
- Thread Author
- #1
❤காதல் ஓவியம்❤
❤ஓவியம் ️நிறைவுப்பகுதி❤
“டேய்! அறிவு கெட்டவனுங்களா. யார தூக்கிட்டு வர சொன்னா, யாரை தூக்கிட்டு வந்து இருக்கீங்க?” என்று ஷாமிலியைத் தூக்கி வந்தவர்களை திட்டினான் அகிலன்.
“பாஸ் அங்க இந்த பொண்ணு தான் இருந்துச்சு” என்றான் ஒருவன்.
“டேய்! இது நான் கட்டிக்கப்போற பொண்ணு இல்லடா. அவளோட அக்கா” என்றான் அகிலன்.
“டேய் அகில். கெட்டதிலும் ஒரு நல்லது இருக்குடா. இவ கழுத்துலயும் தாலியை கட்டு.” என்றார் சேது.
“என்ன கிழவா சொல்ற?”
“அட ஆமாடா. முல்லையை மட்டும் கல்யாணம் பண்ணா, உனக்கு ஒரு பங்கு சொத்து தான் கிடைக்கும். இவ கழுத்துலயும் சேர்த்து தாலியை கட்டு. இவளுங்க ரெண்டு பேருடைய சொத்தும், உனக்கு தான் வரும். கட்டுடா தாலியை” என்று மகனிடம் சொன்னார்.
“தாலி கட்டுவதற்கு ரெண்டு கை தேவை. ஆனால், உனக்கு ஒரு கை தான் இருக்கு. இப்போ அந்த ஒரு கைக்கும் விலங்கு மாட்ட ஆள் வராங்கடா மாப்பிள்ளைங்களா.” என்று வந்தான் மணிமாறன்.
“டேய்! காமெடி பிஸ். நீ எங்கடா இங்க?”
“நான் வரது இருக்கட்டும். என்னை ஏன்டா அகிலா ஆள் வச்சு கடத்துன? நீ கூப்பிட்டா நானே வந்து இருப்பேனே.” என்றான் நக்கலாக.
“ஏய் அகில்! இந்த லூசு பையனிடம் உனக்கு என்ன பேச்சு. கட்டுடா அந்த ஷாமிலி கழுத்துல தாலியை.” என்றார் சேது.
“அட மட சாம்பிராணி. இப்போ நீ என் கழுத்துல தாலியைக் கட்டினால் உனக்கு சொத்து கிடைக்குமா? நீங்க என்ன பைத்தியமா?” என்று ஷாமிலி கேட்க,
“ஆமா அப்பா. அந்த முல்லைக் கூட என்னைப் பார்த்தா கொஞ்சம் பயப்படுவாள். ஆனா இந்த ஷாமிலி இருக்கு பாரு. பத்து ஊரு வாயை சேர்த்து ஒண்ணா வச்சு பேசுவா. அப்படியே இவ ஆத்தா மாதிரி.” என்றான் அகிலன்.
“டேய்! நான் ஒன்னும் என் அம்மா மாதிரி, உனக்கு மரியாதை எல்லாம் கொடுத்துக்கிட்டு இருக்கமாட்டேன். உன் வாயை பேத்துடுவேன் பார்த்துக்கோ.”
“என்னடி சவுண்ட் விடுற.?”
“ஏய்! நான் ரைட்ல ஒன்னு விட்டேன் வை. லெப்ட்ல திரும்பிக்கும். முதல்ல மரியாதையா என் கைக்கட்டை அவுத்து விடு. எங்க அம்மாவுக்கு மட்டும் உன்னுடைய யோக்கியதை தெரிஞ்சதுன்னு வை. அவங்களே உன்னை சுட்டுத் தள்ளிடுவாங்க.”
“ஏய்! என்ன ரொம்ப திமிரா பேசுற. உன் அம்மா என்ன கிழிக்க போறான்னு நானும் பாக்குறேன். இதோ பாரு இங்கதான் உன் அம்மா இருக்கா” என்று சொன்னபடி சேது ஒரு அறைக்குள் முல்லையின் அக்கா ஷாமிலியையும், முல்லையின் அப்பா சந்திரனையும், கதிரின் நண்பன் மணிமாறனையும் உள்ளே தள்ளிவிட்டார் சேது.
“இந்திரா” என்று அங்கு இருந்த மனைவியைக் கண்டு அதிர்ந்தார் சந்திரன்.
“என்னங்க. ஐயோ பாத்து. டேய்! என் புருஷன் மேலயா கை வைக்கிற உன்னை...” என்று அவர் திட்ட,
“என்ன இந்திரா? நீ எப்படி இங்க? ஏன் உன்னைக் கட்டிப் போட்டுருக்காங்க?”
“என்னங்க என்னை மன்னிச்சிடுங்க. இவனுங்களை எல்லாம் நம்பி நான் மோசம் போய்ட்டேன்.” என்று சொல்ல,
“ஐயோ! இந்துமா என்ன பேச்சு பேசுறீங்க? நீங்க மோசம் போயிட்டீங்களா?” என்று அதிர்ந்து கேட்டான் மணிமாறன்.
“ஏய்! லூசு மாறா. அவங்க வேற அர்த்தத்தில் சொல்றாங்க. உங்களுக்கு வாய் இருக்கு பாருங்க” என்று கடிந்தாள் ஷாமிலி.
“இந்துமா எதை சொல்வதாக இருந்தாலும் முழுசா சொல்லுங்க பயமா இருக்கு இல்ல
“டேய்! இவன எதுக்குடா கடத்திக்கிட்டு வந்தீங்க.?” என்றார் சேது.
“நீங்கதான சார் சொன்னீங்க. பஞ்சாமிர்தம் சாப்பிடுற முகம் மாதிரி ஒருவர் இருப்பாருன்னு. இவன் தான் அப்படித் தெரிந்தான். அதான் தூக்கிட்டோம்” என்றான் அடியாள்.
“டேய்! அது பழனிடா. நான் பாவம்டா. ஐயோ கடவுளே! இந்தக் குடும்பத்துல மாட்டிகிட்டு நான் முழிக்கிறேன்” என்று தன்னையே நொந்து கொண்டான் மணிமாறன்.
“ஷாமிலி என்னை மன்னிச்சிடுமா. நீயும் முல்லையும் எவ்வளவு சொல்லியும் கேட்காம, நான் இந்த அகிலனை நம்பினேன். இவனுங்க காலைச் சுத்தின பாம்பு மாதிரி ,நம்ம குடியைக் கெடுத்தூட்டானுங்க. நல்லவேளை இவன் முல்லை கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடி இவனுடைய கேவலமான புத்தி நமக்கு தெரிஞ்சிருச்சு” என்றார் இந்திரா.
“ஏய் கிழவி.! நீ கவலைப்படாத. இதோ இப்பவே நான் உன் வீட்டுக்கு போயி. முல்லையை தூக்கிட்டு வந்து. உன் கண் எதிரிலேயே அவ கழுத்துலயும், இவ கழுத்துலயும் தாலி கட்டி, இவளுங்க ரெண்டு பேரையுமே என் பொண்டாட்டியா ஆக்கிகிறேன். என்றான் அகிலன்.
“ஏய் அறிவு கெட்டவனே. நீயின்னு இல்ல, உன் அப்பனுக்கு அப்பன் வந்தாலும், உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது” என்று கத்தினாள் ஷாமிலி.
“அதானே இவனால மோதிரமே போட முடியல. இவரு தாலி கட்ட போறாராம். போடா” என்றான் மாறன்.
“அப்பா பாத்தீங்களா நான் சொன்னது உண்மைதான். முல்லைக்கு அந்த மோதிரத்தை போட்டது நான் இல்ல.”
“வேற யாருடா மகனே” என்று புரியாது கேட்டார் சேது.
“வேற யாரு. என் மச்சான்... இல்ல இல்ல. என் சகல தான்.”
“என்னடா சொல்ற?”
“டேய்! தொப்பி, டோப்பா மண்டை. எங்க மாமா கதிரு தான்டா என் தங்கச்சி விரலில் மோதிரம் போட்டது.” என்று சிரிக்க,
“என்னம்மா சொல்ற? கதிர்... கதிர நீ பார்த்தியா. அவன் நல்லா இருக்கானா? அவனுக்கு செஞ்ச பாவம் தான், நான் என் சொந்தக்காரங்க கையாலேயே அசிங்கப்பட்டு நிற்கிறேன்” என்றார் இந்திரா.
“அம்மா நீங்க ஏதும் கவலைப்படாதீங்க. இவனுடைய பூச்சாண்டி எல்லாம் கதிர் மாமாகிட்ட செல்லுபடியாகாது. நம்ம கதிர் மாமா தான் அன்னைக்கு நம்ம முல்லை கையில மோதிரத்தை போட்டாரு.”
“என்ன, எனக்கு மருமகளா வர வேண்டிய பொண்ணு கையில, அவன் மோதிரம் போட்டானா?”
“ஹலோ! நீ என்ன மோதிரம் போட்டதுக்கே வாயை பிளக்குற. என் மச்சான் மோதிரம் போட்டதுக்கு முன்னாடியே, கொத்து பரோட்டா போட்டுட்டான்.”
“என்ன கொத்து பரோட்டாவா? அப்படினா?” என்று சேது கேட்க,
“ஆங்! முட்டையை உடைத்து ஊற்றி, பரோட்டாவை பிச்சி போட்டு...”
“ஏய் மாறா! வாயை மூடு. இங்கே என்ன நடக்குது. நீ என்ன இப்போ சமையல் குறிப்பு சொல்லிகிட்டு இருக்குற?” என்று மணிமாறனைக் கடிந்தாள் ஷாமிலி.
“என்ன? அப்போ கதிர் இந்து அத்தை வீட்டுக்கு வந்தானா.?”
“டேய்! கூமுட்டை. என் மச்சான் இந்து வீட்டுக்கு வந்ததுக்கே நீ இவ்வளவு ஜெர்க் குடுக்குறியே. அவன் தான் முல்லைக்கு வீட்டுக்காரன்னு சொன்னா, நீ என்ன பண்ணுவ?”
“டேய் என்னடா சொல்ற? நான் மட்டும் அவனை பார்த்தேன்னு வை. அவனுக்கு மறுநாளே பாடை கட்டிடுவேன்” என்று அகிலன் கோவத்தில் கொதிக்க,
“அடப் போடா ஸ்டேம்ப் வாயா. என் மச்சான் தொட்டிலே கட்டிட்டான்டா. நீ என்னடான்னா...” மணிமாறன் நக்கலாய் அனைத்தையும் சொல்ல,
“ஏய் என்ன சொல்றிங்க?” என்று கத்தினார் இந்து.
“ஆமா அம்மா. நீங்க பாட்டி ஆக போறீங்க.”
“ஏங்க உங்க அம்மா ஏற்கனவே பாட்டி மாதிரி தான் இருக்காங்க” என்று அவன் ஷாமிலிக்கு பதில் கொடுக்க,
“ஹேய் ஷட் அப். என் இந்திரா பாட்டி இல்ல. என்னோட பியூட்டி” என்று இடையிட்டார் சந்திரன்.
“ம்... அன்னைக்கு சாப்பிட்ட ஜிலேபி, ரொம்ப நல்லா வேலை செஞ்சு இருக்கு போல.”
“ஐயோ இங்க என்ன நடக்குது? ஷாமிலி நீ சொல்றது உண்மையா? நிஜமாவே நான் பாட்டியாக போறேனா?” என்று கேட்டார் இந்து.
“அம்மா நாங்க ஊர்ல இருந்து வந்த கொஞ்ச நாளிலேயே கதிர் மாமாவையும், கீதா அத்தையையும் பார்த்தோம்” என்று இதுவரை நடந்த எல்லாக் கதையையும் சொன்னாள்.
இந்து ஆனந்த கண்ணீருடன், “அப்போ என் மகளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என் மக அவ ஆசைப்பட்ட துணையையே கட்டிக்கிட்டாளா? எனக்கு அந்தப் பையன முதன்முதலில் பார்க்கும் போதே ஒரு சந்தேகம் இருந்துச்சு. எப்படியோ என் மகள் சந்தோஷமா இருந்தால் எனக்கு போதும்.” என்றார்.
“அம்மா அந்த சந்தோஷத்துக்கு அடையாளமா, இப்போ முல்லை வயத்துள்ள கதிர் மாமாவுடைய குழந்தை வளருது.” என்றாள் ஷாமிலி.
“இல்ல இத நான் ஒத்துக்கவே மாட்டேன்” என்று அலறினான் அகிலன்.
“டேய் டுபுக்கு. நீ என்னடா ஒத்துக்குறது. என் மச்சான் அங்க கொத்து பரோட்டாவும், சால்னாவும் ஊத்தி சாப்பிட்டு முடிச்சு கை கழுவிட்டு, வாழை இலையை தூக்கிப் போட்டுட்டான். இப்போ வந்து நீ என்னடானா பந்தி முடிந்துடுதான்னு கேக்குற?”
“ஆண்டவா! இங்க என்ன நடக்குது?அப்போ அந்த கதிர் வந்துட்டானா?”
“டேய் அகில்! இனிமேல் காலதாமதம் ஆக்கக்கூடாது. முல்லை அந்த இந்து வீட்டில்தான் இருக்கிறாள். அந்த வீட்டையே பிளாஸ்ட் பண்ண சொல்லு. அவளோடு சேர்ந்து அந்த வீடு இடிந்து தரைமட்டமாகட்டும். நீ இந்த ஷாமிலி கழுத்துல தாலி கட்டு. அப்போ தான் மீதம் இருக்கிற சொத்து நம்ப கைக்கு வரும்.” என்று சேது சொல்ல, அதை செயல்படுத்த அகிலன் கைபேசியை எடுத்தான்.
“ஹலோ... ஹலோ... டேய் அகிலா. யாருக்குடா கால் பண்ற? நீங்க கால் பண்ணி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். நீ வச்ச பாமும் சரி, உன்னோட ஆள் மாலினியும் சரி, என்கிட்ட தான் இருக்காங்க” என்று வந்தான் கதிரோவியன்.
“டேய்! நீ அந்த ட்ரைவர் பையன் தானே?”
“நான் டிரைவர் பையன் இல்லடா. என் முல்லை செல்லக்குட்டியோட முறை பையன். இன்னும் கேட்டால் என் அழகியோட புருஷன். அதுக்கு மேலயும் கேட்டால் என் அழகி பெற்றெடுக்க போகும், குட்டி தேவதைக்கு அப்பா.”
“கதிர் மாப்பிள்ளை என்னை மன்னிச்சிடுங்க. உங்களுடைய நல்ல மனசு எனக்கு புரிய.ல அந்த சின்ன வயசில உங்க வாழ்க்கையை நான் கெடுத்துட்டேன்.” என்று மன்னிப்பு கேட்டார் இந்து.
“இந்து மேடம். உங்களுக்கும் எனக்கும் இருக்கிற பெர்சனல் வேற டீலிங். இப்போ நாங்க வந்த விஷயமே வேற. மேடம் ஜீ வாங்க” என்று கதிர் சொல்ல, கீதா அவர்கள் பேண்ட் சட்டை அணிந்து, கிட்டதட்ட CID சகுந்தலா மாதிரி உள்ளே நுழைந்தார்.