Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 122
- Thread Author
- #1
நின்றுக்கொல்லும்!!!.
அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. ஒரே ஒரு வீடு மட்டும் உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வெகு நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால், அங்கு இருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவித துர்நாற்றமும் வீச ஆரம்பித்தது. உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
காவலர்கள் உள் நுழைந்து, யார் போன் பேசியது என்று கேட்டுக் கொண்டே, என்ன நடந்தது??, என்று விசாரித்தனர்.
அங்கிருந்து ஒரு பெண்மணி, “இந்த வீட்டில் தான் சார் ஒரே துர்நாற்றமா இருக்கு. வெகுநேரமா கதவு திறக்கல”, என்று கூறினார்.
போலீசாரின் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டு, உள்நுழைந்தனர். அவர்கள் கண்ட காட்சியில் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆம் இரு பிணங்கள் அங்கு அழுகும் நிலையில் இருந்தது. கணவன் மனைவி இருவரும் இறந்து கிடந்தனர். இது கொலையா, அல்லது தற்கொலையா?? விசாரணையை துவக்க தொடங்கினர்.
பிரேதபரிசோதனை நிபுணருக்கு தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவர் உடலை எடுத்துச்சென்று விட்டனர்.
இந்த கொலை எப்படி நடந்தது, எதனால் நடந்தது, ஏன் நடந்தது?, என்ற கோணத்தில் ஒரு போலீஸ் படையும், இது தற்கொலை தானா அதற்கான காரணம் என்ன?, ஏன் இவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?, என இன்னொரு பிரிவினரும் துப்பு துலக்க தொடங்கினர். பிரேத பரிசோதனையில் இருவரும் ஆசிட் குடித்ததற்கான அறிகுறிகள் தென்பட்டது. அதனால் அவர்களின் வாய் தொண்டை வயிறு பகுதி மிகவும் பாதிப்படைந்து இறப்பு நேர்ந்து இருப்பதாக தெரிந்தது.
அவர்களின் வீட்டில் ஒவ்வொரு இடத்தையும் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தனர். ஏதாவது ஒரு எவிடன்ஸ் கிடைக்குமா என்று?. எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அண்டை வீட்டினரிடம் இறந்தவர்களின் யாராவது எதிரியோ, அல்லது சண்டை, சச்சரவு ஏதாவது சமீபத்தில் நடந்த்தா, என்று போலீஸ் முதல் விசாரணையை தொடங்கினர்.
பக்கத்து வீட்டினரும்“அப்படி ஒன்றும் இல்லை சார். யாரும் இங்க வந்ததே இல்லை. இங்கே எந்த ஒரு சண்டையும் நடக்கல. அவங்க அவங்க வீட்டுல அவங்க அவங்க தான் இருந்தோம். நேத்து வரைக்கும் அவங்க நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க. ஆனா என்னனு தெரியல சார்“, என அவர்களுக்கு தெரிந்ததை கூறியிருந்தனர்.
அதில் ஒரு வயதான பெண்மணி, “ஐயா அவங்களுக்கு சில கடன்கள் இருந்ததா அந்த பெண் சொல்லி இருந்தாங்க. யாரிடம் கடன் வாங்கினாங்கன்னு எல்லாம் தெரியாது. கடன் கொடுத்தவர்கள் யாரும் இங்கே வந்து சத்தம் போடல”, என்றார் அந்தப் பெண்மணி.
இப்பொழுது போலீசின் பார்வை, கடன் கொடுத்தவர்கள் யார், அவர்களால் இந்த கொலை நடந்திருக்குமோ, என விசாரணையில் இறங்கினர்.
அடுத்ததாக இறந்தவர்களின் செல்போன் பரிசோதிக்கப்பட்டது. அதில் யாருடைய செல்போன் அதிகமாக பேசப்பட்டது பகிரப்பட்டது என ஆராய்ந்து பார்க்க துவங்கினர்.
அதிலும் சரியான துப்பு கிடைக்கவில்லை. பரிசோதனை முடிவில் அவர்கள் இரவில் உணவு உண்டு விட்டு நீர் அருந்தி விட்டு சிறிது நேரம் கழித்து படுக்க சென்று இருந்தனர். அந்தத் தண்ணீர் தான் ஆசிட் கலந்து உள்ளது என முடிவு எடுத்து வாட்டர்கேனில் உள்ள தண்ணீரை பரிசோதனை செய்ததில், அதில் ஆசிட் கலந்துள்ளது என முதல் விசாரணையில் தெளிவு படுத்தப்பட்டது. இப்பொழுது தண்ணீர் போடும் ஆட்களை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு எடுத்து அப்பகுதியில் உள்ள வாட்டர் கேன் போடும் ஆட்களை விசாரணை செய்தனர்.
அதில் வினோத் என்ற இளைஞன் “அந்த வீட்டில் நான் தான் சார் தண்ணீர் கேன் போட்டேன். அவர்களுக்கு மட்டுமல்ல அந்த மாடியில் மூன்று வீடுகளுக்கு தண்ணீர் கேன் போட்டது நான்தான்”, என்று கூறினான்.
“சரி நீ எப்ப கூப்பிட்டாலும் வரணும். இப்ப போ என அனுப்பி வைத்தனர்.
அடுத்ததாக அந்தத் தண்ணீரில் ஆசிட் கலந்தது யார்??, ஏன் பழைய பகையை மனதில் வைத்து சரியான தருணத்தில் பழிவாங்க துடித்திருக்கிறான். யார் அவன்??, அவனை கண்டுபிடிக்க போலீஸ் மிகவும் கவனமாக விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அடுத்த நடவடிக்கையாக இறந்தவர்களின் பேங்க் பாஸ்புக் தேடி எடுக்கப்பட்டு அதில் ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டும். பேங்க் மேனேஜரிடம் இந்த பாஸ்புக் ஸ்டேட்மென்ட் எங்களுக்கு வேண்டும் என அடுத்த விசாரணை ஆரம்பமானது. அதில் எட்டு வருஷத்துக்கு முன் ஐந்து லட்சம் ரூபாய் பரிவர்த்தனை நடத்தப்பட்டு. பேங்க் அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. இந்தப் பணம் அனுப்பியவர் யார்? என விசாரணையில் துப்பு கிடைத்தது.
போலீஸின் அடுத்த நடவடிக்கை. வீராசாமி அவர்தான் ஐந்து லட்ச ரூபாய் கடன் கொடுத்தவர்.
அவரை விசாரிக்க தான் இப்பொழுது போலீசார் சென்றனர். “வீட்ல யார் ஐயா, வீராசாமி இருக்கிறாங்களா?”.
உள்ளே இருந்து ஒரு குரல், “யாரது, உள்ளே வாங்க. நான் தான் வீராசாமி”, என்றார். நடுத்தர வர்க்கம். இரண்டு பிள்ளைகள் மனைவி என்று சிறிய குடும்பம்.
“என்ன வேணும் சார்?“, என வீராசாமி கேள்வி கேட்க.
“உங்களிடம் விசாரணை செய்துவிட்டு போகலாம்னு வந்தோம்”, என்றனர்.
“என்ன விசாரணை சார்?, உள்ள வாங்க”, என அவர்களை உள்ளே அழைத்தார் வீராசாமி.
அவர்களும் உள்ளே வந்து நடந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டனர்.
“இரண்டு கொலை நடந்திருக்கு. அது உங்களுக்கு தெரிஞ்சவங்க, எட்டு வருஷத்துக்கு முன்னாடி நீங்க கடன் கொடுத்திருக்கிறீங்க. அவங்க இப்போ இறந்துட்டாங்க. அவர்கள் குடித்த தண்ணீரில் ஆசிட் கலந்துள்ளது. சந்தேகத்தின் பெயரில் உங்களை விசாரிக்க வந்துள்ளோம்”, எனக் கூறி முடித்தார்.
“சார் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் கடன் கொடுத்தது உண்மைதான். கடன் கொடுத்து ஏமாந்துட்டேன் சார். அவங்க என்னை ஏமாத்திட்டாங்க. எல்லாத்துக்கும் அந்த கடவுள் சாட்சி. கஷ்டப்பட்டு உழைத்த பணம் சார். பையனுக்கு படிப்புக்கு பணம் கட்ட வேண்டும் என கேட்டு வாங்கி சென்றார்கள். பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும் நகைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கி சென்றார்கள் சார். அவர்கள் என் தூரத்து உறவினர்கள் தான். ஆனால் அவர்களை பழிவாங்கும் எண்ணம் எனக்கு வந்ததில்லை சார். பணம் கொடுத்து ஒரு வருடம் ஆகியும் பணம் திரும்பி வராததால் நாங்கள் வீட்டிற்கு சென்று பணம் திரும்ப கேட்டோம். பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம் பையன் இன்னும் வேலைக்கு போகல பையன் வேலைக்கு போனா உங்க பணத்தை திருப்பி கொடுக்கிறோம்னு சாக்கு சொல்லி எங்களை அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நாட்கள் கடந்து செல்ல அவர்களின் பிள்ளைக்கு வேலை கிடைத்துவிட்டது. என அறிந்து மறுபடியும் திருப்பி பணம் கேட்க வீட்டிற்கு சென்றோம். ஆனால் இந்த முறை அவர்களின் பேச்சும் நடையும், செயலும் மிகவும் எகத்தாளமாகவும் ஏளனமாகவும் காணப்பட்டது நாங்கள் இந்த முறை பணம் கேட்டும் முறையான பதில் வரவில்லை. அதற்கு மாறாக மிகவும் கீழ்த்தரமாக பேசி எங்களை அடித்து துரத்தாத குறையாக வெளியே அனுப்பினர். இதனால் மனம் உடைந்து கடவுள் மீது பாரத்தை போட்டு என் மனைவியை உடன் அழைத்து வந்து விட்டேன். அதிலிருந்து அவர்கள் முகத்தில் விழிப்பதே இல்லை. இது நாள் வரை அவர்களை எங்கு பார்த்தாலும் பார்க்காதவாறு சென்று விடுவேன். மனம் வருத்தம் தான் சார். இதனால நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். மன உளைச்சலில் இருந்தேன். ஆனால் அவர்களை கொல்ற அளவுக்கு கொலைகாரன் இல்ல சார் நானு. அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொண்டுச்சு சார். என்னை ஏமாற்றி வாங்கிய பணம் இன்று என்ன ஆச்சு அனுபவிக்க முடிஞ்சுதா?? ஒரு வருத்தம் இருந்தாலும் என்ன சார் சொல்றதுக்கு இல்ல. ஆனா இந்தக் கொலை நான் செய்யல. இது எங்க வேணாலும் சொல்லுவேன் சார்” என வீராசாமி தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விட்டார்.
இதை பக்கத்தில் இருந்த போலீஸ் அதிகாரி வாக்கு மூலத்தை ரெக்கார்ட் செய்து கொண்டார்.
“அப்புறம் வீராசாமி நீங்க ஒருமுறை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்டா ரெஜிஸ்டர் பண்ணி கையெழுத்து போடணும். நாங்க எப்ப கூப்பிட்டாலும் நீங்க வரணும்” என்றார்.
“சார் இன்னைக்கு சாயந்திரமே அங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துடறேன்” வீராசாமி சொல்ல வந்த போலீஸ்காரர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.
கொலைக்கான காரணம் கடன் கொடுத்த வீராசாமி இல்லை என தெரிந்தாலும். அடுத்த என்ன செய்யலாம் என்ற கோணத்தில் புலன்விசாரணை ஆரம்பிக்க தொடங்கினர். மறுபடியும் இறந்தவர் வீடு அங்கு மறுபடியும் துப்பு துலக்க ஆரம்பித்தனர்.
இரவில் சாப்பிட்ட தட்டுகள் இரண்டு சிங் கிள் இருந்தது. அடுத்ததாக அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில். பாதிக்கு மேல் குடிக்கப்பட்டு அதில் கொஞ்சமாக தண்ணீர் இருந்தது. அதில் தான் ஆசிட் கலந்துள்ளது அது ஒரு பழைய பாட்டில். யார் இதை வைத்திருப்பார்கள் தண்ணீர் இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் உபயோகிக்கவில்லை. அப்படி இருக்க இந்த ஆசிட் பாட்டில் எப்படி வந்தது? என்ற கண்ணோட்டத்தில் விசாரணை அடுத்த கட்டத்திற்கு சென்றது.
மறுபடியும் முதலில் இருந்து போலீஸ் விசாரணை ஆரம்பிக்கப்படுகிறது. போலீசுக்கு தகவல் செய்த பெண்மணியை அழைத்து, “நீங்க என்ன பாத்தீங்க எப்ப பார்த்தீங்க நேத்து அவங்கள உங்க கூட தான் இருந்தாங்களா?“ இப்படி பல கேள்விகளை காவலர்கள் கேட்டார்கள்.
“சார் நேற்று இரவு ஒரு ஒன்பது மணி அளவில் எல்லோரும் மொட்டை மாடியில் தான் இருந்தோம். அவர்களின் கணவர் அவர்கள் வீட்டு வாசலில் இருந்து மனைவியை கூப்பிட்டார். கொஞ்சம் குடித்து இருப்பார் போல. வார்த்தைகள் குளறியபடி கூப்பிட்டார். அப்புறம் அந்த அம்மா கீழே போய்ட்டாங்க. அதுக்கப்புறம் மேல வரவே இல்ல. பிறகு அவர்களின் வீடு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அவ்வளவுதான் சார் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது இரவில் எப்படி இருந்ததோ. அதேபோல கதவும் மூடப்பட்டு இருந்தது. விடிந்து கதவு திறக்கப்படவே இல்லை” என்றார்.
“இரவு வரை அதேபோல இருந்ததனால் சந்தேகம் வந்து, அவர்களின் ஜன்னல் ஓரத்தில் நின்று கதவை தட்டினேன். லேசான துர்வாடை அடிப்பது போல் உணர்ந்தேன். அப்புறம்தான் சார் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணேன்” என்றார் அந்த பெண்மணி.
“சரி நீ போமா.” அடுத்த அந்த வயதான பெண்மணியின் புறம் திரும்பியவர், “நீங்க சொல்லுங்கமா? நேற்று என்ன நடந்தது?“
அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. ஒரே ஒரு வீடு மட்டும் உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வெகு நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால், அங்கு இருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவித துர்நாற்றமும் வீச ஆரம்பித்தது. உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
காவலர்கள் உள் நுழைந்து, யார் போன் பேசியது என்று கேட்டுக் கொண்டே, என்ன நடந்தது??, என்று விசாரித்தனர்.
அங்கிருந்து ஒரு பெண்மணி, “இந்த வீட்டில் தான் சார் ஒரே துர்நாற்றமா இருக்கு. வெகுநேரமா கதவு திறக்கல”, என்று கூறினார்.
போலீசாரின் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டு, உள்நுழைந்தனர். அவர்கள் கண்ட காட்சியில் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆம் இரு பிணங்கள் அங்கு அழுகும் நிலையில் இருந்தது. கணவன் மனைவி இருவரும் இறந்து கிடந்தனர். இது கொலையா, அல்லது தற்கொலையா?? விசாரணையை துவக்க தொடங்கினர்.
பிரேதபரிசோதனை நிபுணருக்கு தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவர் உடலை எடுத்துச்சென்று விட்டனர்.
இந்த கொலை எப்படி நடந்தது, எதனால் நடந்தது, ஏன் நடந்தது?, என்ற கோணத்தில் ஒரு போலீஸ் படையும், இது தற்கொலை தானா அதற்கான காரணம் என்ன?, ஏன் இவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?, என இன்னொரு பிரிவினரும் துப்பு துலக்க தொடங்கினர். பிரேத பரிசோதனையில் இருவரும் ஆசிட் குடித்ததற்கான அறிகுறிகள் தென்பட்டது. அதனால் அவர்களின் வாய் தொண்டை வயிறு பகுதி மிகவும் பாதிப்படைந்து இறப்பு நேர்ந்து இருப்பதாக தெரிந்தது.
அவர்களின் வீட்டில் ஒவ்வொரு இடத்தையும் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தனர். ஏதாவது ஒரு எவிடன்ஸ் கிடைக்குமா என்று?. எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அண்டை வீட்டினரிடம் இறந்தவர்களின் யாராவது எதிரியோ, அல்லது சண்டை, சச்சரவு ஏதாவது சமீபத்தில் நடந்த்தா, என்று போலீஸ் முதல் விசாரணையை தொடங்கினர்.
பக்கத்து வீட்டினரும்“அப்படி ஒன்றும் இல்லை சார். யாரும் இங்க வந்ததே இல்லை. இங்கே எந்த ஒரு சண்டையும் நடக்கல. அவங்க அவங்க வீட்டுல அவங்க அவங்க தான் இருந்தோம். நேத்து வரைக்கும் அவங்க நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க. ஆனா என்னனு தெரியல சார்“, என அவர்களுக்கு தெரிந்ததை கூறியிருந்தனர்.
அதில் ஒரு வயதான பெண்மணி, “ஐயா அவங்களுக்கு சில கடன்கள் இருந்ததா அந்த பெண் சொல்லி இருந்தாங்க. யாரிடம் கடன் வாங்கினாங்கன்னு எல்லாம் தெரியாது. கடன் கொடுத்தவர்கள் யாரும் இங்கே வந்து சத்தம் போடல”, என்றார் அந்தப் பெண்மணி.
இப்பொழுது போலீசின் பார்வை, கடன் கொடுத்தவர்கள் யார், அவர்களால் இந்த கொலை நடந்திருக்குமோ, என விசாரணையில் இறங்கினர்.
அடுத்ததாக இறந்தவர்களின் செல்போன் பரிசோதிக்கப்பட்டது. அதில் யாருடைய செல்போன் அதிகமாக பேசப்பட்டது பகிரப்பட்டது என ஆராய்ந்து பார்க்க துவங்கினர்.
அதிலும் சரியான துப்பு கிடைக்கவில்லை. பரிசோதனை முடிவில் அவர்கள் இரவில் உணவு உண்டு விட்டு நீர் அருந்தி விட்டு சிறிது நேரம் கழித்து படுக்க சென்று இருந்தனர். அந்தத் தண்ணீர் தான் ஆசிட் கலந்து உள்ளது என முடிவு எடுத்து வாட்டர்கேனில் உள்ள தண்ணீரை பரிசோதனை செய்ததில், அதில் ஆசிட் கலந்துள்ளது என முதல் விசாரணையில் தெளிவு படுத்தப்பட்டது. இப்பொழுது தண்ணீர் போடும் ஆட்களை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு எடுத்து அப்பகுதியில் உள்ள வாட்டர் கேன் போடும் ஆட்களை விசாரணை செய்தனர்.
அதில் வினோத் என்ற இளைஞன் “அந்த வீட்டில் நான் தான் சார் தண்ணீர் கேன் போட்டேன். அவர்களுக்கு மட்டுமல்ல அந்த மாடியில் மூன்று வீடுகளுக்கு தண்ணீர் கேன் போட்டது நான்தான்”, என்று கூறினான்.
“சரி நீ எப்ப கூப்பிட்டாலும் வரணும். இப்ப போ என அனுப்பி வைத்தனர்.
அடுத்ததாக அந்தத் தண்ணீரில் ஆசிட் கலந்தது யார்??, ஏன் பழைய பகையை மனதில் வைத்து சரியான தருணத்தில் பழிவாங்க துடித்திருக்கிறான். யார் அவன்??, அவனை கண்டுபிடிக்க போலீஸ் மிகவும் கவனமாக விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அடுத்த நடவடிக்கையாக இறந்தவர்களின் பேங்க் பாஸ்புக் தேடி எடுக்கப்பட்டு அதில் ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டும். பேங்க் மேனேஜரிடம் இந்த பாஸ்புக் ஸ்டேட்மென்ட் எங்களுக்கு வேண்டும் என அடுத்த விசாரணை ஆரம்பமானது. அதில் எட்டு வருஷத்துக்கு முன் ஐந்து லட்சம் ரூபாய் பரிவர்த்தனை நடத்தப்பட்டு. பேங்க் அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. இந்தப் பணம் அனுப்பியவர் யார்? என விசாரணையில் துப்பு கிடைத்தது.
போலீஸின் அடுத்த நடவடிக்கை. வீராசாமி அவர்தான் ஐந்து லட்ச ரூபாய் கடன் கொடுத்தவர்.
அவரை விசாரிக்க தான் இப்பொழுது போலீசார் சென்றனர். “வீட்ல யார் ஐயா, வீராசாமி இருக்கிறாங்களா?”.
உள்ளே இருந்து ஒரு குரல், “யாரது, உள்ளே வாங்க. நான் தான் வீராசாமி”, என்றார். நடுத்தர வர்க்கம். இரண்டு பிள்ளைகள் மனைவி என்று சிறிய குடும்பம்.
“என்ன வேணும் சார்?“, என வீராசாமி கேள்வி கேட்க.
“உங்களிடம் விசாரணை செய்துவிட்டு போகலாம்னு வந்தோம்”, என்றனர்.
“என்ன விசாரணை சார்?, உள்ள வாங்க”, என அவர்களை உள்ளே அழைத்தார் வீராசாமி.
அவர்களும் உள்ளே வந்து நடந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டனர்.
“இரண்டு கொலை நடந்திருக்கு. அது உங்களுக்கு தெரிஞ்சவங்க, எட்டு வருஷத்துக்கு முன்னாடி நீங்க கடன் கொடுத்திருக்கிறீங்க. அவங்க இப்போ இறந்துட்டாங்க. அவர்கள் குடித்த தண்ணீரில் ஆசிட் கலந்துள்ளது. சந்தேகத்தின் பெயரில் உங்களை விசாரிக்க வந்துள்ளோம்”, எனக் கூறி முடித்தார்.
“சார் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் கடன் கொடுத்தது உண்மைதான். கடன் கொடுத்து ஏமாந்துட்டேன் சார். அவங்க என்னை ஏமாத்திட்டாங்க. எல்லாத்துக்கும் அந்த கடவுள் சாட்சி. கஷ்டப்பட்டு உழைத்த பணம் சார். பையனுக்கு படிப்புக்கு பணம் கட்ட வேண்டும் என கேட்டு வாங்கி சென்றார்கள். பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும் நகைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கி சென்றார்கள் சார். அவர்கள் என் தூரத்து உறவினர்கள் தான். ஆனால் அவர்களை பழிவாங்கும் எண்ணம் எனக்கு வந்ததில்லை சார். பணம் கொடுத்து ஒரு வருடம் ஆகியும் பணம் திரும்பி வராததால் நாங்கள் வீட்டிற்கு சென்று பணம் திரும்ப கேட்டோம். பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம் பையன் இன்னும் வேலைக்கு போகல பையன் வேலைக்கு போனா உங்க பணத்தை திருப்பி கொடுக்கிறோம்னு சாக்கு சொல்லி எங்களை அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நாட்கள் கடந்து செல்ல அவர்களின் பிள்ளைக்கு வேலை கிடைத்துவிட்டது. என அறிந்து மறுபடியும் திருப்பி பணம் கேட்க வீட்டிற்கு சென்றோம். ஆனால் இந்த முறை அவர்களின் பேச்சும் நடையும், செயலும் மிகவும் எகத்தாளமாகவும் ஏளனமாகவும் காணப்பட்டது நாங்கள் இந்த முறை பணம் கேட்டும் முறையான பதில் வரவில்லை. அதற்கு மாறாக மிகவும் கீழ்த்தரமாக பேசி எங்களை அடித்து துரத்தாத குறையாக வெளியே அனுப்பினர். இதனால் மனம் உடைந்து கடவுள் மீது பாரத்தை போட்டு என் மனைவியை உடன் அழைத்து வந்து விட்டேன். அதிலிருந்து அவர்கள் முகத்தில் விழிப்பதே இல்லை. இது நாள் வரை அவர்களை எங்கு பார்த்தாலும் பார்க்காதவாறு சென்று விடுவேன். மனம் வருத்தம் தான் சார். இதனால நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். மன உளைச்சலில் இருந்தேன். ஆனால் அவர்களை கொல்ற அளவுக்கு கொலைகாரன் இல்ல சார் நானு. அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொண்டுச்சு சார். என்னை ஏமாற்றி வாங்கிய பணம் இன்று என்ன ஆச்சு அனுபவிக்க முடிஞ்சுதா?? ஒரு வருத்தம் இருந்தாலும் என்ன சார் சொல்றதுக்கு இல்ல. ஆனா இந்தக் கொலை நான் செய்யல. இது எங்க வேணாலும் சொல்லுவேன் சார்” என வீராசாமி தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விட்டார்.
இதை பக்கத்தில் இருந்த போலீஸ் அதிகாரி வாக்கு மூலத்தை ரெக்கார்ட் செய்து கொண்டார்.
“அப்புறம் வீராசாமி நீங்க ஒருமுறை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்டா ரெஜிஸ்டர் பண்ணி கையெழுத்து போடணும். நாங்க எப்ப கூப்பிட்டாலும் நீங்க வரணும்” என்றார்.
“சார் இன்னைக்கு சாயந்திரமே அங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துடறேன்” வீராசாமி சொல்ல வந்த போலீஸ்காரர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.
கொலைக்கான காரணம் கடன் கொடுத்த வீராசாமி இல்லை என தெரிந்தாலும். அடுத்த என்ன செய்யலாம் என்ற கோணத்தில் புலன்விசாரணை ஆரம்பிக்க தொடங்கினர். மறுபடியும் இறந்தவர் வீடு அங்கு மறுபடியும் துப்பு துலக்க ஆரம்பித்தனர்.
இரவில் சாப்பிட்ட தட்டுகள் இரண்டு சிங் கிள் இருந்தது. அடுத்ததாக அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில். பாதிக்கு மேல் குடிக்கப்பட்டு அதில் கொஞ்சமாக தண்ணீர் இருந்தது. அதில் தான் ஆசிட் கலந்துள்ளது அது ஒரு பழைய பாட்டில். யார் இதை வைத்திருப்பார்கள் தண்ணீர் இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் உபயோகிக்கவில்லை. அப்படி இருக்க இந்த ஆசிட் பாட்டில் எப்படி வந்தது? என்ற கண்ணோட்டத்தில் விசாரணை அடுத்த கட்டத்திற்கு சென்றது.
மறுபடியும் முதலில் இருந்து போலீஸ் விசாரணை ஆரம்பிக்கப்படுகிறது. போலீசுக்கு தகவல் செய்த பெண்மணியை அழைத்து, “நீங்க என்ன பாத்தீங்க எப்ப பார்த்தீங்க நேத்து அவங்கள உங்க கூட தான் இருந்தாங்களா?“ இப்படி பல கேள்விகளை காவலர்கள் கேட்டார்கள்.
“சார் நேற்று இரவு ஒரு ஒன்பது மணி அளவில் எல்லோரும் மொட்டை மாடியில் தான் இருந்தோம். அவர்களின் கணவர் அவர்கள் வீட்டு வாசலில் இருந்து மனைவியை கூப்பிட்டார். கொஞ்சம் குடித்து இருப்பார் போல. வார்த்தைகள் குளறியபடி கூப்பிட்டார். அப்புறம் அந்த அம்மா கீழே போய்ட்டாங்க. அதுக்கப்புறம் மேல வரவே இல்ல. பிறகு அவர்களின் வீடு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அவ்வளவுதான் சார் காலையில் எழுந்து பார்க்கும் பொழுது இரவில் எப்படி இருந்ததோ. அதேபோல கதவும் மூடப்பட்டு இருந்தது. விடிந்து கதவு திறக்கப்படவே இல்லை” என்றார்.
“இரவு வரை அதேபோல இருந்ததனால் சந்தேகம் வந்து, அவர்களின் ஜன்னல் ஓரத்தில் நின்று கதவை தட்டினேன். லேசான துர்வாடை அடிப்பது போல் உணர்ந்தேன். அப்புறம்தான் சார் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணேன்” என்றார் அந்த பெண்மணி.
“சரி நீ போமா.” அடுத்த அந்த வயதான பெண்மணியின் புறம் திரும்பியவர், “நீங்க சொல்லுங்கமா? நேற்று என்ன நடந்தது?“