• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
23
பாகம் 12.



காலையிலே செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.


தனபால் பூபதியை தொடர்பு கொண்டான்.



ராமசுப்பு விஷயம் கேள்விபட்டியா.. இது எப்படி நடந்தது………?



ஹாஹாஹா… என்று பூபதி கர்ண கொடூரமாக சிரித்தான்.



போனில் சொல்ல முடியாது. நேரில் வா . சொல்றது என்ன. காமிக்க வே செய்யறேன். வாடா. என்ஜாய் பண்ணலாம்.



அவசர அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு தனியே காரெடுத்து அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு போனான்.


அங்கே அவனை சிரிப்புடன் பூபதி வரவேற்றான்.



‘இது எப்படிடா. தானா சிறுத்தை அடித்து கொன்றதா. நான் என்னவோ அவரை கத்தியால், அல்லது துப்பாக்கியால் கொல்வார்கள் என்று நினைத்தேன்.
இல்லை காரொடு மலை யிலிருந்து உருட்டி விடுவார்கள் என்று கூட நினைத்தேன் இது என்னடா புது டெக்னிக்கா இருக்கு”



|ஆமாண்டா. சிறுத்தை அடிச்சி, கடித்து குதறி கொன்னுடிச்சி என்று சிறுத்தை போல் தாவி, ஆக்ரோஷமாக நடித்து காண்பித்தான்:


அந்த பாவிகள் வயதான மனிதரின் இறப்பை கொண்டாடினர்கள் .



“சரி. எப்படி இதெல்லாம் . நடந்தது சொல்லுடா என்று கேட்க இரு உனக்கு காண்பிக்கிறேன்.’ என்று தன் போனை எடுத்து காண்பித்தான்.



அதில் ராமசுப்புவை வலுக்கட்டாயமாக காரை விட்டு இறக்கி, ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தையை அவர் மீது ஏவிவிட்டார்கள். அவர் அலறிய அலரலும் கண்களில் தெரிந்த பயமும், அந்த வயதில் ஏதும் செய்ய முடியாத நிராயுதபாணியாக நின்ற கோலமும் ,பிறர் துன்பத்தைக் கண்டு மகிழும் இந்த கேடு கெட்டவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது.



சிரித்து ஓய்ந்தார்கள்



“ஒழிந்தாண்டா.’



‘சரி. எப்படி வெளியே வர சம்மதிச்சான்.”


“வேற எப்படி. அவன் பேத்தியை கடத்தி வைத்து இருக்கிறோம். டீல் பேசணும் வா . என்றதும், பேத்தியாச்சே. வராமல் இருந்து விட முடியுமா. அவன் துரதிஷ்டம் என்ன தெரியுமா . மனைவியிடம் கூட எதுவும் சொல்லவில்லை. அது நமக்கு வசதியா போயிற்று. போலீஸும் அவன் சாவிற்கு சிறுத்தைதான் காரணம் என்று பைலை க்ளோஸ் பண்ணிவிட்டார்கள்.”


‘“பின்ன… சிறுத்தை தானே காரணம்.’”என்று அர்த்தத்துடன் சிரித்தார்கள்.



அடுத்து பூபதி கேட்ட ட்ரீட்டை ஒப்புக்கொண்டு நடிகையிடம் பேசி வரவழைத்தான்.


கோயம்புத்தூரில் இருக்கும் செல்வன் பங்களாவில் சந்தித்தாரகள்.


மிகவும் கவர்ச்சியாக உடை உடுத்திக் கொண்டுவந்தாள். கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசினாள்.



அவர்கள் இருவரிடமும், ‘என்னிடம் யார் பேசியது. எஸ்டேட் ஓனர் யார். என்று கேட்க , தனபால் அவசரமாக நான்தான் பேசினேன். நான் தான் ஈச்சனார் எஸ்டேட் . மாளிகை இந்த பங்களா உட்பட எல்லாவற்றிற்கும் அதிபதி”என்றதும் ,


பூபதி அவனை முறைக்கவே,


அதற்குள் தன் மடிமீது அமர்ந்திருந்த அவளிடம், எல்லாம் என் நண்பன் பூபதிக்காக உன்னை கூப்பிட்டேன்”என்று அவளின் வழவழ உடம்பை தடவிக் கொண்டே சொன்னான்.


அவள் அதை இலட்சியம் செய்யாமல்.
தனபாலை இழுத்துக் கொண்டு அறைக்குள் போனாள்:


பூபதி நொருங்கினான்.அவனால் அந்த அவமானத்தை தாங்க முடியவில்லை.


சுவற்றை ஓங்கி குத்தினான்.


என் நண்பன் எனக் கே துரோகம் இழைத்து விட்டானே அவனை சும்மா விடக் கூடாது.


நல்லவேளை தான் அவளுடன் இருப்பதை திரும்ப, திரும்ப பார்த்து ரசிப்பதற்காத காமிரா செட் பண்ணி , தனபாலுக்கும் தெரியாமல் வைத்து இருந்தான்.


அவனை பழிவாங்க அது உதவும் என்று கருவிக்கொண்டுபோய்விட்டான்.


இரண்டு மணி நேரம் கழித்து வந்தான்.



அதற்குள் அவள் கிளம்பிவிட்டியிருந்தாள்.


‘“எங்கடா மச்சான் போய்ட்ட. உனக்கா காத்து இருந்தாள். நீ இல்லை என்றதும் போய் விட்டாள்”” என்று தனபால் பொய் சொல்வதை புரிந்துக் கொண்டான்.


பரவாயில்லைடா.



நீ ஒன்றும் மனசில் வைத்துக்கொள்ளாதே. நான் சொல்லதானே செய்தேன்………….


சரி போதும்.. நாம கிளம்பலாம்.


ஞாபகம் வந்தவனாய் என் பையை உள்ளே வைத்துவிட்டேன் எடுத்துவிட்டு வருகிறேன். நீ போய் காரில் உட்கார் என்றான்.


சரி. என்று தனபால் போய் விட்டான்.அவன் மாது முழுக்க மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தது.

ஐயோ.. என்ன உடம்பு. என்ன சாகஸம். இவனுக்கு மட்டும் அவளை விட்டு தரக் கூடாது. ‘“ என்று அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல் காருக்குள் போனான்.


பூபதி அந்த அறைக்குள் போய் தான் ஒளித்து வைத்திருந்த காமிராவை பையில போட்டுக்கொண்டு வந்தான்.


எஸ்டேட் போனதும், தனபால் முதல் வேலையாக எல்லா சொத்து உரிமைகளையும் தன் பெயருக்கு வருமாறு செய்தான்.


எல்லோரையும் அதட்டியும், உருட்டியும் சிலரை பணத்தாசையாலும் மசிய வைத்தான்.


தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top