• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 22, 2024
Messages
46
"சார் கிளம்பலாமா.?" என்ற டிரைவரின் குரலுக்குச் சரியாகச் சீட்டில் அமர்ந்தபடி அவரை நிமிர்ந்து பார்த்தவன்

"கிளம்பலாம்ங்க." என்றான்.

தன் கிராமத்தை நோக்கிச் செல்கிறான் மூன்று நாள் விடுமுறையில் அதற்குப் பின் புனேவை நோக்கிப் பயணப்பட வேண்டும் அவனின் புதிய வேலையில் சேர்வதற்கு.

இன்றுடன் சென்னையோட அவனுக்கு இருந்த தொடர்பு முற்றுப்பெறுகிறது என நினைக்கும்போது லேசாக வலித்த இதயத்தைத் தடவி விட்டுக் கொண்டான்.

நோட்டிபிகேஷன் வந்ததற்கான சத்தத்தில் தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் வேலை தொடர்பாக வந்திருந்த செய்தியை பார்த்துவிட்டுத் தன் போல் அவன் கைகள் மெசஞ்சரில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு நபரின் செய்தியை சென்று பார்த்தவனின் விரல்கள் மெதுவாக அவற்றைத் தடவின.

பெருமூச்சோடு அலைபேசியை அனைத்து பாக்கெட்டில் வைத்தவனின் நினைவலைகள் பின்னே சென்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பு.

சென்னை எம் என் சி நிறுவனம் ஒன்றில் தலைமை கிராபிக் டிசைனராக வேலை பார்க்கிறான். மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம். அவன். வெற்றிச்செல்வன். வயது முப்பத்தி ஆறு.

அன்று அவ்வளவு வேலை இருந்தது அவனுக்கு. ஆனாலும் மனம் ஏனோ வெறுமையாக இருக்க முகப் புத்தகத்தில் சிறிது நேரம் உலா வர அதன் உள் நுழைந்தான். நண்பர்கள் போடும் சில மீம்ஸ்களைப் படித்துச் சிரித்து விட்டு வரலாமென உள் சென்றவனுக்கு, முக புத்தகமே சில நேரம் இவர்களை நண்பராக்கி கொள்ளுங்கள் எனக் காட்டும் நபரில் ஒரு பெயர் அவனை வெகுவாக ஈர்த்தது. பூங்குழலி ஏனோ அப்பெயர் அவன் மனதை வருட .அதற்கு ஒரு நண்பர் அழைப்பு விடுத்து விட்டு மெசேஜிலும் சென்று "ஹாய்" எனத் தட்டி விட்டு வந்து விட்டான். பின், அதைப் பற்றிச் சுத்தமாக மறந்தவன் தன் வீட்டிற்கு வந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவு உணவாக அமெரிக்கன் ஷாப்ஸி ஆர்டர் செய்துவிட்டு நீள் இருக்கையில் சாய்ந்தவன், அப்போதே தன் தொலைபேசியை எடுத்துப் பார்க்கப் பூங்குழலிடமிருந்து நட்பு ஏற்கப்பட்டு "ஹாய்.." என்ற பதிலும் வந்து இருந்தது.

ஆச்சரியம் அடைந்தவனுக்கு பெண் பெயரில் இருக்கும் போலி ஐடியோ என்ற சந்தேகம் இருக்க இவனும் பேசத் தொடங்கினான்

"எப்படி இருக்கீங்க.?" என்று…

"நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க…" எனக் கேட்டுப் பதில் வரப் பெண் பெயரில் இருக்கும் ஆண் னா..? என இவன் கேட்டு வைக்கப் பலமாகச் சிரிக்கும் பொம்மை ஒன்று வந்தது.

"இல்லங்க நிஜமாவே நான் பெண்தான்..." என்ற உடனடி பதிலில் ஆச்சரியமடைந்தவன்

"அப்படியா.?" எனக் கேட்க

"ஆமாங்க ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ். அதான் உங்களுக்கு ஒரு பதிலை அனுப்பிவிட்டேன்." என்று உண்மையைக் கூறியவளை ஏனோ மிகவும் பிடித்தது.

"நான் வெற்றி செல்வன்.." என்பதற்கு "தெரியுமே.." என்றாள் அவளும் சிரிக்கும் பொம்மையுடன்.

"ஹ்ம்ம்.." என்று இவனும் ஒரு சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பிவிட்டு தன்னைப் பற்றிய சிறு குறிப்பை அவளுக்கு அனுப்பினான்.

தாய் மட்டுமே கிராமத்தில் இருப்பதாகவும் தான் சென்னையில் வேலை செய்வதை பற்றியும் அவளிடம் பகிர்ந்து கொண்டவன் அவளைப் பற்றி விசாரிக்க அவளும் பெங்களூரில் சிஸ்டம் அனலிஸ்ட்டாக வேலை பார்ப்பதாகக் கூறினாள்...

இப்படியாக ஆறு மாதங்கள் இவர்களின் நட்பு முகநூலில் தொடர்ந்து கொண்டிருந்தது. தினமும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை இருவருமே பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தவர்களுக்கு ஒருவரோடு ஒருவர் பேசாமல் இருப்பதும் அன்றைய நாளில் நடந்த சம்பவங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் பெரும் இழப்பாகத் தோன்றியது. அன்று இரவும் வேலைகளை முடித்து வீட்டிற்கு வந்தவன் தனக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு அலைபேசியை எடுக்க

"வீட்டுக்கு வந்தாச்சா.?"

என்று கேட்டு அனுப்பி இருந்தாள் குழலி.

"வந்தாச்சு. வந்தாச்சு." என்று குதூகலமான பதிலை இவன் அனுப்ப அதற்கு ஒரு சோக பொம்மையை அனுப்பி இருந்தாள்.

"ஹேய் என்ன ஆச்சு மா.?" என்று சற்று பதறியவனாக இவன் கேட்க. அவனின் அக்கரையில் மனம் தழும்ப.

"ஏனோ மனசு சரியில்ல." என்றாள் அவள். அதுவரை ஒருவரை பற்றி ஒருவர் ஆழமாக எதுவும் விசாரித்துக் கொள்ளாதவர்கள் முதல் முறையாக அன்று கேட்டான் அவளிடம்

"ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல.?" என்று

"ப்ச்.ஏதோ தோஷம் அதனால எந்த வரணும் அமையல. ஆரம்பத்துல நிறைய வரன் வந்தது. வயசு போகப் போக அதுவும் குறைஞ்சிருச்சு." "அப்படி என்ன வயசு உனக்கு..?" என்றவனின் கேள்விக்குச் சில நொடிகள் பதில் இல்லாமல் பின்

"இருபத்து ஒன்பது." எனப் பதில் வந்தது.

"அப்படி ஒன்னும் ரொம்ப வயசாகி விடவில்லையே." என்றவனுக்கு சிரிப்பு பொம்மையை அனுப்பியவள் அத்துடன் ஆஃப்லைன் சென்று விட. இவனும் சிறிது யோசனைக்குப் பிறகு

"உனக்குப் பிரச்சனை இல்லனா? விருப்பப்பட்டா எனக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ஹாய் அனுப்பு." என்ற செய்தியுடன் அவனின் தொலைபேசி எண்ணை அனுப்பி வைத்தான்.

இரவு முழுவதும் அவள் ஏதேனும் பதில் அனுப்பி இருக்கிறாளா எனத் அலைபேசியை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு அவன் ஆசைப்பட்ட நிகழ்வு மட்டும் நடக்கவே இல்லை. சோர்வுடன் தாமதமாகத் தூங்கி தாமதமாக எழுந்தவனுக்கு மனம் ஏனோ வெறுமையாக இருந்தது. அலுவலகத்திற்கு நேரம் ஆவதை உணர்ந்தவன் குளித்துக் கிளம்பி வந்தவனுக்கு அதுவரை அலைபேசியை எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை. பணியிடத்திற்கு சென்ற பின்பே அலைபேசியை எடுத்துப் பார்த்தவனுக்கு

"நான் குழலி."என்ற ஒரு புது எண்ணிலிருந்து வாட்ஸ் அப்மெசேஜ் வந்திருந்தது. அந்தச் செய்தியைப் பார்த்தவனுக்கு மனசெல்லாம் மத்தாப்பு பூத்தது போன்று மனம் முழுவதும் மகிழ்வு பரவியது. பசித்திருக்கும் வேளையில் தண்ணீர் அருந்தும்போது அது எப்படி உணவு குழாயின் வழியாக உள்ளே சென்று வயிற்றில் பரவுவதை உணர முடியுமோ அப்படி கண்கள் பார்த்த செய்தி மூளையில் பதிந்து மனது முழுவதும் புத்துணர்ச்சியை பரவச் செய்தது. அவனுக்கு.

அதற்குப் பின் வாட்ஸ் அப்பில் இருவரும் தங்கள் நட்பை வளர்த்து வந்தார்கள். இவனின் மார்பளவு புகைப்படத்தைப் பார்த்துவிட்டு

"ரொம்ப அழகா இருக்கீங்க.!" என்று இவளிடமிருந்து வந்த ஒற்றை பாராட்டில் ஏதோ உலகத்தையே வென்றதைப் போல உணர்ந்தான் அவன்.

"ஆனா எனக்கு அப்படி சொல்லக் கொடுப்பினை இல்லையே. ரோஜா பூ மட்டும் தான் அங்க இருக்கு. ஒரு வேலை அந்த ரோஜாவைப் போலத் தான் நீயும் இருப்பியோ.?" என இவன் கேட்க எப்பொழுதும் போலச் சிரிக்கும் பொம்மையை அனுப்பாமல் இதயத்தை அனுப்பி வைத்தாள் அவள்.

இருவருக்குமே சொல்லப்படாத ஒரு நேசமும் பிணைப்பும் ஏற்பட்டு இருந்தது. இருவருக்குமே அவர்கள் ஆரம்பித்த நட்பிலிருந்து அடுத்த கட்டமான காதலை நோக்கி நகர்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்ள இருவருக்குமே தயக்கம் இருந்தது.

அந்தத் தயக்கமும் உடைந்தது ஒரு நாள். மேலும் ஒரு ஆறு மாத நட்பில். முதல் மூன்று மாதங்களுக்கு மெசேஜ்லேயே பேசிக் கொண்டிருந்தவர்கள் இரண்டு நாள் முழுவதும் பெண்ணவள் காய்ச்சலில் வாடித் தொலைபேசியைப் பார்க்காமல் இருக்க. என்னவோ ஏதோ எனப் பதறி அவளுக்கு அழைத்து இருந்தான் அவன்.

"ஹலோ." என்ற இவளின் சோர்வான குரலைக் கேட்ட பின்பே உயிர் வந்தது அவனுக்கு.

"எங்கடி போன.? போன் எடுக்காம." என்ற இவனின் உரிமையான அதட்டலில் அவளுக்கு வந்த காய்ச்சல் அவளை விட்டு ஓடிச் சென்றது. மேலும் மூன்று மாத அலைபேசி அழைப்பில் இன்னும் நெருக்கமானார்கள் இருவரும். அவர்களின் குடும்பங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டார்கள் அப்படியான ஒரு நாளில்.

தனிமையான இரவில் பேசிக் கொண்டிருக்கும்போது

"ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல நீங்க.?"

"அது ஒரு சோகக்கதை." என்றான் சிரித்துக் கொண்டே

"அதான் என்ன கதை. சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கிறேன்." என்றாள் இவளும் சிரிப்போடு.

"ப்ச் வேற பேசு."

"ஏன்? என்ன ஆச்சு? சொல்லுங்க."

"இப்ப தெரிஞ்சு என்ன பண்ண போற.?"

"என்னமோ பண்றேன்.'

"ப்ச் என்னமோ ஒரு பயம், ஒரு தயக்கம்."

"என்ன பயம்? என்ன தயக்கம்.?"

"அதெல்லாம் உனக்குச் சொன்னா புரியாது."

"சொல்லுங்க புரிஞ்சிக்க முடியுதான்னு பார்க்கிறேன்."

"நான் சொன்னாலும் உனக்குப் புரியாதுடி. சொன்னா கேளு." என்றவனுக்கு அவள் அமைதியை பதிலாகத் தர

"ஒரு வேலை உன்னை மாதிரி ஒரு தேவதை பெண்ணுக்காகத் தான் காத்திருந்தேனோ? என்னவோ.?" என்றான் அவளின் அமைதியை தாங்கிக் கொள்ள முடியாமல். அவனின் பதிலில் உடல் சிலிர்க்க. அவனுக்குப் பதில் கூற முடியாமல் அலைபேசியை அணைத்து இருந்தாள் இவள்.

' ஐயோ! எதுக்குடா உன் மனசு திறந்த அவகிட்ட.இத்தனை நாள் எப்படி பழகினியோ அப்படியே இருந்திருக்கலாமே. ஏன் உன் மனசுல இருக்குற காதல அவகிட்ட பகிர்ந்து கிட்ட."எனத் தன் தலையில் அடித்துக் கொண்டு தன்னையே நொந்து கொண்டவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.

அங்கோ அலைபேசியை அணைத்தவள் தலைக்கால் புரியாமல் குதித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் ஆண் அவன் சொல்லாமல் சொல்லிய காதலில்.

"ஹப்பா இத சொல்ல இவ்ளோ நாள் ஆகியிருக்கு உங்களுக்கு." என அலைபேசியில் அவன் புகைப்படத்தைப் பார்த்துக் கேள்வி கேட்டவளுக்கு வெட்கத்தில் கன்னம் பூத்து முகம் கொள்ளாமல் சிரிப்பும் வந்தது.

உரியவரிடம் காதலை உரைத்து விட்டாலும் மனதில் மகிழ்வோ நிம்மதியோ இல்லவே இல்லை அவனுக்கு. மனம் முழுவதும் பாரமே அழுத்தியது. அதற்குத் தோதாக அவளும் அவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இவனும் அழைக்காமல் அந்த வார இறுதியை நெருங்கிக் கொண்டிருக்க. அதற்கு மேல் முடியாமல் வருவது வரட்டும் எனத் துணிந்தவனாக அவளுக்கு அழைத்தவன் ஞாயிறு காலை அவளைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினான். காதலை பட்டும் படாமல் சொன்ன பிறகு அதை மேலும் உறுதிப்படுத்தாமலும் அவளுக்கு அழைக்காமலும் இருந்தவனின் மேல் கோபத்தில் இருந்தவள் தற்போது அவளைப் பார்க்க விரும்புவதாகக் கூறவும் ஏனோ அவனுள் ஒரு ரகசியம் இருப்பதாக உள்ளுணர்வு கூற அது என்ன எனத் தெரிந்து கொள்வதற்காகவே அவனைச் சந்திக்க சம்மதம் கூறி வருவதாக ஒப்புக்கொண்டாள் அவளும்.

அவளை வந்து அழைக்கட்டுமா? என்று கேட்டதற்கு தோழியின் வீட்டிற்கு சென்று விட்டு எல் ஐ சி பேருந்து நிலையத்தில் அவனுக்காகக் காத்திருப்பதாகக் கூற அவனும் சரி என்று ஒப்புக் கொண்டான்.

அதன்படி சரியாகப் பத்து மணிக்கு அவனுக்காகக் காத்திருந்தவளுக்கு மிதமான படபடப்பு. பெண்னவளுக்கு அவனைத் தெரியும் புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள். ஆனால் அவனுக்கோ அவளைத் தெரியாது முதல்முறையாக அவளை எப்படி கண்டுபிடிப்பான் என்ற ஆவல் மிகுதியாக இருக்க. அவன் எவ்வழி வருவானெனத் தெரியாமல் விழிகளை இங்கும் அங்கும் உருட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

தன் அருகே வேகமாக வந்து நின்ற சிகப்பு i20
காரைப் பார்த்து இவள் அதிர்ந்து நிற்க,
 
Last edited:
Joined
Nov 22, 2024
Messages
46
அதன் ஜன்னல் திறந்து, "ஹாய் குழலி. உள்ளே ஏறுங்க." என்றான் வெற்றிச்செல்வன் சிரிப்போடு. அவனை முதல் முறையாக நேரில் பார்ப்பதில் நெஞ்சம் படப்படக்க கண்களை விரித்தவளுக்கு அவளை எப்படி அவன் கண்டு கொண்டான் என்ற குறுகுறுபோடு காரினுள் ஏறி அமர்ந்தாள் அவள்.

அவள் உள்ளே வந்த அமர்ந்ததுமே அவள்மேல் இருந்து வந்த யாட்லி ரோஸ் பெர்ஃப்யூ மின் நறுமணம் கார் முழுவதும் பரவி அவன் நெஞ்சையும் அடைக்கச் செய்தது.

வான் நீலத்தில் முழு நீள உடை அணிந்து மேலே இடை வரை ஒரு ஓவர் கோட்டுடன் கையில் அதே நிறத்தில் கைப்பையும், சுருண்ட முடியோடு கண்கள் அலைபாய தேடிக் கொண்டிருந்தவள் தான் தன்னவள் என்பதை அறிந்தே அவளின் அருகில் தைரியமாகக் காரை நிறுத்தி உள்ளே ஏறச் சொன்னான்.

உள்ளே வந்து அவனின் அருகில் அமர்ந்தவளுக்கு அவனிடம் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை உணரவே முடிந்தது. ஆனாலும் அதைக் கவனமாகத் தவிர்த்தவள் அவன் கண்களை நேராகப் பார்த்து

"எப்படி இருக்கீங்க.? எப்படி என்ன கண்டுபிடிச்சீங்க...?" எனக் கேட்டாள் முகம் முழுவதும் புன்னகையுடன்.

"நீ பேசுறத வெச்சே இப்படித்தான் இருப்பேன்னு இங்க பச்சை குத்தி வெச்சிட்டேன்." என்றான் அவள் முகத்தைச் சுற்றி வட்டமிடுவது போலச் செய்துவிட்டு தன் நெஞ்சை சுட்டிக்காட்டி. அதில் முகம் செம்மையுற

"அப்புறம்." என்றாள்

"விஜிபிக்கு போகலாம். அங்க தான் ரிலாக்ஸ் சா பேச முடியும்." என்றவனுக்கு சம்மதமாகத் தலையசைக்க இவர்களின் பயணமும் தொடங்கியது. அவ்வப்போது ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தவளுக்கு அவனின் மாற்றம் புரிந்தே இருந்தது.

சிக்னலில் வண்டி நிற்க ஜன்னல் புறமாகத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கைகளை மெதுவாகப் பிடிக்க அதிர்ந்து திரும்பிப் பார்த்தவளை மென்புன்னகையோடு ஏறிட்டவன் "நல்லாவே என்னைப் பார்க்கலாம். நான் எதுவும் நினைச்சுக்க மாட்டேன்." என்றான் புன்னகை மாறா முகத்துடன். இவளுக்குத் தான் அது தர்ம சங்கடமாக இருந்தது அதற்குப் பின் செல்லும் இடம் வரும் வரை அமைதியாகவே தொடர்ந்தது அவர்களின் பயணம்.

கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தவன் பெருமூச்சுடன் "இறங்கலாம்" என்றவன் தன் பக்க கதவைத் திறந்து சற்று சிரமத்துடன் இறங்கினான் அவனைப் பார்க்கும்போது அவ்வளவாக வித்தியாசம் தெரியவில்லை ஆனால் ஊன்றிப் பார்க்கும்போது வித்தியாசம் தெரிந்தது. கால்களுக்குச் சிறப்புச் சிகிச்சை காலனி அணிந்திருந்தான் சற்று தாங்கித் தாங்கியே நடந்து வந்தான்.

அமைதியாக இருவரும் கடற்கரையின் அருகே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர "அப்பறம்."என்றான் அவளை நிமிர்ந்து பார்த்து அதேப் புன்னகை மாறா முகத்துடன்

"எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்.?"

என்றவளின் கேள்வியில் முதலில் அதிர்ந்தவன் பின்பு மெதுவாகச் சிரித்துவிட்டு "என்னைப் பார்த்தபிறகும்.இந்தக் கேள்வி கேட்கத் தோணுது உனக்கு." என்றான்

"ஏன் உங்களுக்கு என்ன? நல்ல தான இருக்கீங்க." என்றாள் அவளும்.

சிறு அமைதிக்கு பின்பு அவளை ஏறிட்டுப் பார்த்தவன்

"பக்கவாதம்... அஞ்சு வயசு வரைக்கும் நல்ல தான் நடந்துட்டு இருந்தேன். அதுக்கப்புறம் கொஞ்ச தூரம் நடந்தாலே கால்கள் சோர்வடைந்தது. ரொம்ப நேரம் நிக்க முடியாது. ஓட முடியாது. என்னன்னு கேட்கும்போது மருத்துவர்கள் கூறியதுதான். போகப் போகக் கொஞ்சம் கொஞ்சமா நடை தடைப்படும் சொன்னாங்க அதே மாதிரி தான் நடந்துட்டு இருக்கு. இப்போ ஏதோ கொஞ்ச தூரம் நடக்க முடியுது அதுவும் எவ்வளவு நாளைக்கு என்று தெரியவில்லை…கொஞ்சமா முதுகுத்தண்டில் பிரச்சனை வரும் உட்காருவதோ நடக்கிறதோ கஷ்டமாயிடும். அதுக்கப்புறம் படுக்கை தான் அதுவும் எவ்வளவு நாலுன்னு தெரியாது. உனக்கு ஏன் இந்தக் கஷ்டம். உன்னைத் தேடி ராஜகுமாரன் வருவான்."

"அதான் வந்துட்டீங்களே.

"ஹாஹாஹா காமெடி பண்ற பாத்தியா."

"இல்ல நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு இல்ல."

"பிடிக்கிறது வேற. வாழ்க்கை முழுக்க கூட வருவதுங்கிறது வேற அதுவும் இல்லாம."என்று சொல்லத் தயங்கியவன் பின் கடலைப் பார்த்து முகத்தைத் திருப்பியவன்

"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு புருஷனா உனக்கு எந்தச் சுகத்தையும் என்னால கொடுக்க முடியாது. அப்படி கொடுக்க முடியுமான்னு கூட எனக்குத் தெரியாது. உன் கைய பிடிச்சுக்க வா.?" என்று கேட்டவனின் அருகே நெருங்கி அமர்ந்தவள் அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள. அவனோ அவள் தோள்களைச் சுற்றி கைகளைக் கொண்டு போனவன் இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டான். "இப்படி எல்லாம் இருக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை." என்று அவள் காதில் கூறியவன் அவள் கன்னத்தில் மெதுவாக இதழை ஒற்றி எடுத்தான். கூசி சிலிர்த்தவள் குனிந்து கொள்ள,
"என்னுடைய முப்பத்து ஆறு வயசுல இதுதான் முதல் முறை."என்றான் சிறு வெட்கத்துடனும் ஏக்கத்துடனும்.
*சரி சொல்லுங்க எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்.?"என மறுபடியும் அவள் கேட்கப் பெருமூச்செறிந்தவன் தன் கைகளை அவளை விட்டு விலகிக் கொண்டு சற்று நகர்ந்து அமர்ந்தவன்

"இல்ல அதுக்கு வாய்ப்பில்லை என்றான்."

"ஏன்..?" என்றவளின் கேள்விக்கு

"எனக்கே தெரியாத ஒன்னுல என்னால ரிஸ்க் எடுக்க முடியாது..." என்றவனை கோபமாகப் பார்த்தவள் "இது மட்டும்தான் வாழ்க்கையா.?"
"இதுவும் ரொம்ப ரொம்ப தேவை.."என்றவன்
"உனக்கானவன் கட்டாயமாக வருவான்."

"ஆமா ஆமா வருவான்.இருபத்து ஒன்பது வருஷமா வராதவன் இனிமேயா வரப் போறான்." என்றாள் கோபத்துடன்.
"அதுவும் இல்லாம தோஷம் இருக்கிற பொண்ண எங்க அம்மா மருமகளாய் ஏத்துக்க மாட்டாங்க.." என்றான் வேண்டும் என்றே.
அதில் மனம் வலித்தாலும் அவனின் பயமும் தயக்கமும் தெரிந்தே இருந்தது. அவனைப் பார்த்துக் கொண்டே கடலில் சென்று சிறிது நேரம் விளையாடியவள் பின் அவனின் அருகில் வந்து
"டிரஸ் எல்லாம் ரொம்ப நனைஞ்சிருச்சு. காய வைக்கணும். இங்க ரூம் கிடைக்குமா? ரெஃப்ரெஷ் பண்ணிட்டு போயிடலாம்."எனக் கேட்க அவளைப் பார்த்தவனுக்கும் அவள் அதிகமாக நனைந்திருந்தது தெரிந்தது.
"வா." என்று அவளை அழைத்துச் சென்றவன் அங்கு ஒரு அறையைப் பதிவு செய்து அவளோடு நுழைந்தவன் பால்கனியில் சென்று நின்று கொண்டான். அவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வருவதற்கு. ஆனால் சிறிது நேரத்திலேயே இவனின் அருகில் நின்றவளை திரும்பிப் பார்த்தவனுக்கு குப்பென வியர்த்தது. மேலே அணிந்திருந்த ஓவர் கோட்டை கழட்டிவிட்டு கை இல்லாத நீண்ட மேக்ஸ்சியுடன் இவனின் அருகில் நெருங்கி நிற்க
"ப்ளீஸ் டி." என்றான் பாவமாக.
"எஸ், எஸ் உங்கள ப்ளீஸ் பண்ண தான் போறேன்." என்றவள் அவனோடு அறையினுள் நுழைந்து அவனை இறுக அணைக்க. அதற்கு மேல் அவனாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இத்தனை வருடங்களாக அடக்கி வைத்திருந்த ஆசைகளும், ஏக்கங்களும் கரை கடக்க துணிந்தது. அவளோடு கட்டிலில் சரிந்தவன் அவள் இதழ்களை ஆக்கிரமித்து மெது மெதுவாக அவள்மீது படர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிச் சென்றவனின் மோகத்தை அறைந்து தடுத்தது அவனின் அலைபேசி அழைப்பு. "அம்மா. அம்மா நீ எங்க அம்மா." என்ற பாடலுடன். விதுர்விதிர்த்து எழுந்தவன் வேகமாக அவளை நீங்கிச் சென்று குளியல் அறையில் புகுந்து கொண்டான். தன்னையே நிந்தித்தவனாக.

தன்னை விட்டு வேகமாகப் பிரிந்து சென்றவனை பார்த்தவாரே எழுந்து அமர்ந்தவள். முட்டிவரை உயர்ந்திருந்த ஆடையை இழுத்து சரிபடுத்தி அவன் வருகைக்காகக் காத்திருந்தாள். குளியலறையிலிருந்து வெளிவந்தவன் அவள் முகத்தைப் பார்க்காமல் அவளுக்கு எதிரிலிருந்து நாற்காலியில் அமர்ந்தவன் தனக்காக வடிவமைக்கப்பட்ட காலணிகளைக் கழட்டிவிட்டு கைக்கொண்டு கால்களைத் தூக்கி அவள் முன்னால் நீட்டியவன் தன் சூம்பி போன கால்களை அவளிடம் காட்டி
"பாத்தியா எப்படி இருக்குன்னு.?. உணர்ச்சிகள் இல்ல கால்களுக்கு. போகப் போக உணர்ச்சிகள் உடம்பு முழுவதுமே குறைந்து கொண்டே வரும். இப்படியொரு நிலையில நான் எப்படி உன்னைத் திருமணம் செய்து கொள்வது.?
"இப்ப உங்க பயம் என்ன? உங்களால முடியுமா? முடியாதாங்கிறது தான.? அது உறுதியாகிடுச்சுன்னா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல்ல உங்களுக்கு எந்தத் தடையும் இருக்காது இல்ல அதான்."
"சீ, சீ அதுக்காக உன்னைச் சோதனை எலி ஆக்கச் சொல்றியா." எனக் கேட்டான் கோபத்துடன்.
"நான் தானே விருப்பப்பட்டு." என்றவளின் பேச்சை
"ஷட் அப்."என்றவனின் இறுகிய குரல் அவளை மேலும் பேசாமல் தடுத்தது.
"இத மனசுல வச்சு தான் அறை எடுக்கச் சொன்னியா.?" என்று கேட்டவனுக்கு எந்தப் பதிலும் கூறாமல் அவள் அமைதியாக நிற்க.
"உன்ன பார்க்காமலேயே லவ் பண்ணினவன் டி நான். ஒரு நிமிஷத்துல தடம் புரள இருந்தேன். மன்னிச்சுக்கோ. நானும் மனுஷன் தான். எனக்கும் எல்லா ஆசையும் இருக்கு."
"அதான் உங்களால முடியுதே." என்றவளை கோபத்தோடு பார்த்தவன்
"எதுவும் பேசாமல் கிளம்பு." என்றவன் விறு விறுவென வெளியேற அமைதியாகப் பின் தொடர்ந்தாள் அவனை.

அவள் தோழியின் வீட்டில் அவளை இறக்கிவிட்டு சென்றவன் அதற்குப் பின் அவளோடு பேச இரு வாரங்கள் எடுத்துக் கொண்டான். அதுவும் தொலைபேசியில் அழைக்காமல் ஒரு செய்தியை மட்டும் இறுதியாக அவளுக்கு அனுப்பி வைத்தான். அவளுக்குத் தான் ஏற்றவன் அல்ல என்பதையும். விரைவிலேயே வளமான வாழ்வு அவளுக்கு அமையும் என வாழ்த்தி விட்டு அத்துடன் அவளைப் பிளாக் செய்து தன் சிம் கார்டையும் உடைத்து விட்டுப் புதிய தொலைபேசி எண், புதிய ஊர், புதிய வேலையெனப் பயணத்தைத் தொடங்கினான்.

"பாம்" என்ற காரின் சத்தத்தில் சுற்றம் உணர்ந்தவன் தன் கையில் இருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை ஒரு முறை பார்த்துவிட்டுக் கார் சீட்டில் தலையைச் சாய்த்தவன்.
"என்னை மாதிரி ஒருத்தன் உனக்கு வேண்டாம் டி. எனக்குப் பாடு பாக்கணும்னு உனக்கு என்ன தலை எழுத்தா? நீ நல்லா இரு.' என்று மனதில் நினைத்தவனின் கண்களின் ஓரம் கண்ணீர் வடிந்தது நிற்காமல்.
"சார் நீங்கச் சொன்ன இடம் வந்துடுச்சு." என்ற டிரைவரின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவன். தன் வீட்டு வாசலில் இருப்பதை உணர்ந்து மெதுவாக இறங்கினான்.
மூங்கில் வேலியை திறந்து உள் நுழைந்தவன் அழைப்பு மணியை அடித்துக் காத்திருக்க. கதவு திறந்ததும் நிமிர்ந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் நெஞ்சம் வாய் வழியே வெளியில் வந்து விடுமோ என அஞ்சி இதயத்தைக் கைக்கொண்டு அழுத்திப் பிடித்தவன்.
"ஹேய் நீ எங்க இங்க.?" என்றான் தன் முன் நின்ற பூங்குழலியை அதிர்வாகப் பார்த்தபடி.
"ஓஹோ! நீங்கப் பிளாக் பண்ணி ஒரு பெரிய மெசேஜ் அனுப்பினா உங்களை விட்டுப் போயிடுவேன்னு நினைச்சிங்களா.?"என இவள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே சமையலறையிலிருந்து வெளிவந்த இவனின் தாய்
"ராசா. வந்துட்டியா? வா ராசா. ஏமா மருமகளே உன் பஞ்சாயத்த அப்புறமா வச்சுக்கோ. முதல்ல அவனை உள்ள விடு. முகம் கழுவிட்டு வந்து ஏதாவது உங்கட்டும்." என்றார் மெலிதாகச் சிரித்துக் கொண்டு. அன்னையின் மருமகளே என்ற அழைப்பில் மேலும் அதிர்ந்தவனுக்கு ஆரம்ப கட்ட அதிர்ச்சி விலகி மனம் முழுவதும் மகிழ்வு நிறைந்து வழிந்தது. எதுவும் பேசாமல் தன் அறைக்குள் நுழைந்தவனுக்கு புன்னகை முகம் தான். அப்பொழுது,பக்கத்து வீட்டிலிருந்து வந்த பாடல் செவியை நிறைத்தது.

"நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா...."
 
Last edited:
Joined
Nov 22, 2024
Messages
46
Super paa heroine semma ivlo thooram iranginava nee block panna mattum vitruvaala 🥰🥰🥰🥰
படித்துவிட்டு உடனே கருத்திட்டதற்கு மிக்க நன்றி மா.. கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்வு 😍🥰❤️
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
நீ போகும் பாதையில் மனசு போகுதே எனக்கும். இன்னும் கொஞ்சம் அவங்களோட போகணும் போல இருக்கு. கதை ரொம்பவே நல்லாயிருந்தது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ஜீ💐💐💐
 
Joined
Nov 22, 2024
Messages
46
நீ போகும் பாதையில் மனசு போகுதே எனக்கும். இன்னும் கொஞ்சம் அவங்களோட போகணும் போல இருக்கு. கதை ரொம்பவே நல்லாயிருந்தது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ஜீ💐💐💐
கதை உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி நன்றி மிக்க நன்றி
 
Joined
Nov 22, 2024
Messages
46
Mohanraj அவர்கள் கொடுத்த விமர்சனம் 🥰
நன்றி நன்றி மிக்க நன்றி 🥰
நீ போகும் பாதையில் மனசு போகுதே..
~ ஜீனத் சபீஹா.

ஒருத்தனுக்கு ரொம்ப நாளா கல்யாணம் ஆகாம விரக்தியிலேயே மனம் நொந்து கிடந்தான்.அவன் பேருதான் வெற்றி செல்வன்.ஆனா திருமண வாழ்க்கைல அவன் தோல்வி செல்வன்.ஏன்னா அவனுக்குதான் கல்யாணம் ஆகலயே.

இப்டி இருக்கும்போது திடீர்னு முகநூல்ல ஒரு பொண்ணுக்கு ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் தட்டி விட்டான் நம்ம வெற்றி செல்வன்.

அந்த பொண்ணு அக்செப்ட் பண்ண உடனே ஹாய்னு மெசேஜ் பண்ணான் இந்த ஹீரோ படவா.

அதையும் அந்த பொண்ணு அக்செப்ட் பண்ணி பதிலுக்கு ஹாய்னு மெசேஜ் அனுப்புச்சி.மெசேஜ் அனுப்புன நம்ம ஹீரோயின் பேரு பூங்குழலி.

இப்டியே பேசி நம்பரும் மாத்திக்கிட்டு பேச ஆரம்பிச்சிட்டாங்க நம்ம வெற்றியும் குழலியும்.

திடீர்னு பார்த்தா ஒருநாள் ரூம் புக் பண்ணிட்டாங்க 🤣🤣🤣🤣.

என்னடா இது எழுத்தாளர் இவ்வளவு சீக்கிரமா கிளுகிளுப்பு காட்சிகளை வெச்சிட்டாரேனு பாத்தா,
அதுக்கப்புறம் வருது பாருங்க ஒரு உன்னதமான காதல் 🫶❤️.

நாம ஒருத்தர் மேல ஒருத்தர் காதல் வயப்பட்டு விட்டபிறகு, அப்புறம் வர நிறை குறைகளை பொருட்படுத்தாமல் வாழணும்னு எழுத்தாளர் சொல்ற விதம் நெத்தியடி ✌️.

கதையை நேர்த்தியாக வடிவமைத்த‌ எழுத்தாளருக்கு நல்வாழ்த்துகள் 💐 💐.
 
Joined
Nov 22, 2024
Messages
46
Fathima Nafa அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம் 🥰
Zeenath Sabeeha நானுமே சொல்லனும் னு நினைச்சேன்... அருமைய இருந்தது மா... 💖💖
 
Joined
Nov 22, 2024
Messages
46
முகநூலில் பிரியா பாண்டிஸ் அவர்கள் கொடுத்த விமர்சனம் உங்களின் அருமையான விமர்சனத்திற்கு மிக்க நன்றி டியர் 🥰

Zeenath Sabeeha நீ போகும் பாதையில் மனசு போகுதே.. ஆமா அப்படி தான் இருக்கு ஸ்டோரியும். மேகஸின்ல ட்ராவல்ல ஜஸ்ட் ஒன் பேஜ் ஸ்டோரி படிச்ச ஃபீல். ப்ராக்டிகலா எந்த பொண்ணும் இந்த ரிஸ்க் எடுக்க மாட்டாங்க. ஒருவேளை காதல் வந்த பின்னாடி உண்மை தெரிஞ்சதால குழலியால ஈசியா அக்சப்ட் பண்ணிக்க முடிஞ்சுருக்கலாம். நல்ல கதை வாழ்த்துக்கள் ஷீனத் அக்கா👍👍👍.
 
Joined
Nov 22, 2024
Messages
46
நன்றி டியர் உமா கார்த்திக் படித்ததோடு அல்லாமல் விமர்சனமும் கொடுத்ததற்கு மிக்க நன்றி
முகநூலில் வந்த விமர்சனம்

🩷நீ போகும் பாதையில்
மனசு போகுதே🩷

விமர்சனம் மூலமா ஒரு கதையை போய் தேடிப் படிக்கிறது ரொம்ப மகிழ்ச்சி..!!
நல்ல கதைகளுக்கு விமர்சனம் தர எல்லாரும் கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்.. 🙏🙏🙏 அப்பதான் அது நாலு பேருக்கு தெரியும்.. தாழ்மையான வேண்டுகோள். 🫂❤️

உணர்வுகளை தாங்கும் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ❤️

ஒரு ஹைக்கூ கவிதை படித்த உணர்வு. 🩷
இந்த கதை முடியுற வரை, இதழ்கள்ல ஒரு புன்னகை நிலைக்குது.

விமர்சனங்கள் மூலமா வெளி தெரியிற கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ❤️

எப்படி சுருக்கி எழுதுனீங்க
அந்த கேள்விக்கு பதில் வேணும்..

மனிதனின் இயலாமை.. உணர்வுகளின் ஏக்கம் . விவரிக்க பயன்படுத்திய வார்த்தை தேர்வு திறமை..!!

ஒரு பிரம்மாண்டமான உணர்வுகளை எதார்த்தமாக கடத்தும் இந்த காதல் கதையை எழுZeenath Sabeeha Sabeeha
வாழ்த்துகள் அக்கா ♥️🫂

உங்க கதை.. உங்க அறிமுகம் தந்தது. ரொம்ப மகிழ்வா இருக்கு..!! இன்னும் நிறைய விமர்சனங்கள்.. உங்கள் முகவரியாக ..வாசகர்களை ஈர்க்க வாழ்த்துக்கள். 💝💐💐💐💐💐

❤️நன்றிகள் 🙏கோடி❤️
உமா கார்த்திக்
 
Joined
Nov 22, 2024
Messages
46
Kalai karthi அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம் 🥰
நீ போகும் பாதையிலே மனம் போகுதே சிறுகதை அருமை sis.நட்பாக பழகி காதலாக மாறினாலும் தனது உடல்நிலை எண்ணி வேண்டாம் நினைப்பது வரை உணர்வு அவ்வளவு அழகாக காட்டியிருக்கேங்கே sis. உமா நன்றிடா உங்களுக்கும். போட்டியில் மட்டும் எழுதாமல் தொடர்ந்து எழுதுங்கள் sis. வாழ்த்துகள்sis.வாழ்க வளமுடன்.
 
Joined
Nov 22, 2024
Messages
46
Srividhya அவர்கள் கொடுத்த முகநூல் விமர்சனம் 🥰

Not often to FB and reading mode. Yesterday when I checked saw review of Priya Pandees and read Zeenath Sabeeha short cute story. There were times I use to read only the stories which has been reviewed by her. Many times asked her why she is not writing. So happy. What a pending down.As the line goes to be a speaker you have to be a good listener. She has been a good reader and reviewer so has given wonderful story.https://sornasandhanakumar.com/threads/ni-pokum-pataiyil-manacu-pokute.352/
 
Joined
Nov 22, 2024
Messages
46
Priya kumar அவர்கள் கொடுத்த முகநூல் விமர்சனம்

Super sis naanum eppo dhan padichchen.... rendu peroda unarrvugala nalla sollirukkenga.....
 
Joined
Nov 22, 2024
Messages
46
Kavitha kannan அவர்கள் கொடுத்த முகநூல் விமர்சனம்
இப்ப தான் படிச்சேன் சூப்பர் சகி செம் ஃபீல் ஒரு மாதிரி லவ் ஃபீலாச்சு
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top