Member
- Joined
- Nov 22, 2024
- Messages
- 46
- Thread Author
- #1
"சார் கிளம்பலாமா.?" என்ற டிரைவரின் குரலுக்குச் சரியாகச் சீட்டில் அமர்ந்தபடி அவரை நிமிர்ந்து பார்த்தவன்
"கிளம்பலாம்ங்க." என்றான்.
தன் கிராமத்தை நோக்கிச் செல்கிறான் மூன்று நாள் விடுமுறையில் அதற்குப் பின் புனேவை நோக்கிப் பயணப்பட வேண்டும் அவனின் புதிய வேலையில் சேர்வதற்கு.
இன்றுடன் சென்னையோட அவனுக்கு இருந்த தொடர்பு முற்றுப்பெறுகிறது என நினைக்கும்போது லேசாக வலித்த இதயத்தைத் தடவி விட்டுக் கொண்டான்.
நோட்டிபிகேஷன் வந்ததற்கான சத்தத்தில் தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் வேலை தொடர்பாக வந்திருந்த செய்தியை பார்த்துவிட்டுத் தன் போல் அவன் கைகள் மெசஞ்சரில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு நபரின் செய்தியை சென்று பார்த்தவனின் விரல்கள் மெதுவாக அவற்றைத் தடவின.
பெருமூச்சோடு அலைபேசியை அனைத்து பாக்கெட்டில் வைத்தவனின் நினைவலைகள் பின்னே சென்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பு.
சென்னை எம் என் சி நிறுவனம் ஒன்றில் தலைமை கிராபிக் டிசைனராக வேலை பார்க்கிறான். மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம். அவன். வெற்றிச்செல்வன். வயது முப்பத்தி ஆறு.
அன்று அவ்வளவு வேலை இருந்தது அவனுக்கு. ஆனாலும் மனம் ஏனோ வெறுமையாக இருக்க முகப் புத்தகத்தில் சிறிது நேரம் உலா வர அதன் உள் நுழைந்தான். நண்பர்கள் போடும் சில மீம்ஸ்களைப் படித்துச் சிரித்து விட்டு வரலாமென உள் சென்றவனுக்கு, முக புத்தகமே சில நேரம் இவர்களை நண்பராக்கி கொள்ளுங்கள் எனக் காட்டும் நபரில் ஒரு பெயர் அவனை வெகுவாக ஈர்த்தது. பூங்குழலி ஏனோ அப்பெயர் அவன் மனதை வருட .அதற்கு ஒரு நண்பர் அழைப்பு விடுத்து விட்டு மெசேஜிலும் சென்று "ஹாய்" எனத் தட்டி விட்டு வந்து விட்டான். பின், அதைப் பற்றிச் சுத்தமாக மறந்தவன் தன் வீட்டிற்கு வந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவு உணவாக அமெரிக்கன் ஷாப்ஸி ஆர்டர் செய்துவிட்டு நீள் இருக்கையில் சாய்ந்தவன், அப்போதே தன் தொலைபேசியை எடுத்துப் பார்க்கப் பூங்குழலிடமிருந்து நட்பு ஏற்கப்பட்டு "ஹாய்.." என்ற பதிலும் வந்து இருந்தது.
ஆச்சரியம் அடைந்தவனுக்கு பெண் பெயரில் இருக்கும் போலி ஐடியோ என்ற சந்தேகம் இருக்க இவனும் பேசத் தொடங்கினான்
"எப்படி இருக்கீங்க.?" என்று…
"நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க…" எனக் கேட்டுப் பதில் வரப் பெண் பெயரில் இருக்கும் ஆண் னா..? என இவன் கேட்டு வைக்கப் பலமாகச் சிரிக்கும் பொம்மை ஒன்று வந்தது.
"இல்லங்க நிஜமாவே நான் பெண்தான்..." என்ற உடனடி பதிலில் ஆச்சரியமடைந்தவன்
"அப்படியா.?" எனக் கேட்க
"ஆமாங்க ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ். அதான் உங்களுக்கு ஒரு பதிலை அனுப்பிவிட்டேன்." என்று உண்மையைக் கூறியவளை ஏனோ மிகவும் பிடித்தது.
"நான் வெற்றி செல்வன்.." என்பதற்கு "தெரியுமே.." என்றாள் அவளும் சிரிக்கும் பொம்மையுடன்.
"ஹ்ம்ம்.." என்று இவனும் ஒரு சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பிவிட்டு தன்னைப் பற்றிய சிறு குறிப்பை அவளுக்கு அனுப்பினான்.
தாய் மட்டுமே கிராமத்தில் இருப்பதாகவும் தான் சென்னையில் வேலை செய்வதை பற்றியும் அவளிடம் பகிர்ந்து கொண்டவன் அவளைப் பற்றி விசாரிக்க அவளும் பெங்களூரில் சிஸ்டம் அனலிஸ்ட்டாக வேலை பார்ப்பதாகக் கூறினாள்...
இப்படியாக ஆறு மாதங்கள் இவர்களின் நட்பு முகநூலில் தொடர்ந்து கொண்டிருந்தது. தினமும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை இருவருமே பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தவர்களுக்கு ஒருவரோடு ஒருவர் பேசாமல் இருப்பதும் அன்றைய நாளில் நடந்த சம்பவங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் பெரும் இழப்பாகத் தோன்றியது. அன்று இரவும் வேலைகளை முடித்து வீட்டிற்கு வந்தவன் தனக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு அலைபேசியை எடுக்க
"வீட்டுக்கு வந்தாச்சா.?"
என்று கேட்டு அனுப்பி இருந்தாள் குழலி.
"வந்தாச்சு. வந்தாச்சு." என்று குதூகலமான பதிலை இவன் அனுப்ப அதற்கு ஒரு சோக பொம்மையை அனுப்பி இருந்தாள்.
"ஹேய் என்ன ஆச்சு மா.?" என்று சற்று பதறியவனாக இவன் கேட்க. அவனின் அக்கரையில் மனம் தழும்ப.
"ஏனோ மனசு சரியில்ல." என்றாள் அவள். அதுவரை ஒருவரை பற்றி ஒருவர் ஆழமாக எதுவும் விசாரித்துக் கொள்ளாதவர்கள் முதல் முறையாக அன்று கேட்டான் அவளிடம்
"ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல.?" என்று
"ப்ச்.ஏதோ தோஷம் அதனால எந்த வரணும் அமையல. ஆரம்பத்துல நிறைய வரன் வந்தது. வயசு போகப் போக அதுவும் குறைஞ்சிருச்சு." "அப்படி என்ன வயசு உனக்கு..?" என்றவனின் கேள்விக்குச் சில நொடிகள் பதில் இல்லாமல் பின்
"இருபத்து ஒன்பது." எனப் பதில் வந்தது.
"அப்படி ஒன்னும் ரொம்ப வயசாகி விடவில்லையே." என்றவனுக்கு சிரிப்பு பொம்மையை அனுப்பியவள் அத்துடன் ஆஃப்லைன் சென்று விட. இவனும் சிறிது யோசனைக்குப் பிறகு
"உனக்குப் பிரச்சனை இல்லனா? விருப்பப்பட்டா எனக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ஹாய் அனுப்பு." என்ற செய்தியுடன் அவனின் தொலைபேசி எண்ணை அனுப்பி வைத்தான்.
இரவு முழுவதும் அவள் ஏதேனும் பதில் அனுப்பி இருக்கிறாளா எனத் அலைபேசியை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு அவன் ஆசைப்பட்ட நிகழ்வு மட்டும் நடக்கவே இல்லை. சோர்வுடன் தாமதமாகத் தூங்கி தாமதமாக எழுந்தவனுக்கு மனம் ஏனோ வெறுமையாக இருந்தது. அலுவலகத்திற்கு நேரம் ஆவதை உணர்ந்தவன் குளித்துக் கிளம்பி வந்தவனுக்கு அதுவரை அலைபேசியை எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை. பணியிடத்திற்கு சென்ற பின்பே அலைபேசியை எடுத்துப் பார்த்தவனுக்கு
"நான் குழலி."என்ற ஒரு புது எண்ணிலிருந்து வாட்ஸ் அப்மெசேஜ் வந்திருந்தது. அந்தச் செய்தியைப் பார்த்தவனுக்கு மனசெல்லாம் மத்தாப்பு பூத்தது போன்று மனம் முழுவதும் மகிழ்வு பரவியது. பசித்திருக்கும் வேளையில் தண்ணீர் அருந்தும்போது அது எப்படி உணவு குழாயின் வழியாக உள்ளே சென்று வயிற்றில் பரவுவதை உணர முடியுமோ அப்படி கண்கள் பார்த்த செய்தி மூளையில் பதிந்து மனது முழுவதும் புத்துணர்ச்சியை பரவச் செய்தது. அவனுக்கு.
அதற்குப் பின் வாட்ஸ் அப்பில் இருவரும் தங்கள் நட்பை வளர்த்து வந்தார்கள். இவனின் மார்பளவு புகைப்படத்தைப் பார்த்துவிட்டு
"ரொம்ப அழகா இருக்கீங்க.!" என்று இவளிடமிருந்து வந்த ஒற்றை பாராட்டில் ஏதோ உலகத்தையே வென்றதைப் போல உணர்ந்தான் அவன்.
"ஆனா எனக்கு அப்படி சொல்லக் கொடுப்பினை இல்லையே. ரோஜா பூ மட்டும் தான் அங்க இருக்கு. ஒரு வேலை அந்த ரோஜாவைப் போலத் தான் நீயும் இருப்பியோ.?" என இவன் கேட்க எப்பொழுதும் போலச் சிரிக்கும் பொம்மையை அனுப்பாமல் இதயத்தை அனுப்பி வைத்தாள் அவள்.
இருவருக்குமே சொல்லப்படாத ஒரு நேசமும் பிணைப்பும் ஏற்பட்டு இருந்தது. இருவருக்குமே அவர்கள் ஆரம்பித்த நட்பிலிருந்து அடுத்த கட்டமான காதலை நோக்கி நகர்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்ள இருவருக்குமே தயக்கம் இருந்தது.
அந்தத் தயக்கமும் உடைந்தது ஒரு நாள். மேலும் ஒரு ஆறு மாத நட்பில். முதல் மூன்று மாதங்களுக்கு மெசேஜ்லேயே பேசிக் கொண்டிருந்தவர்கள் இரண்டு நாள் முழுவதும் பெண்ணவள் காய்ச்சலில் வாடித் தொலைபேசியைப் பார்க்காமல் இருக்க. என்னவோ ஏதோ எனப் பதறி அவளுக்கு அழைத்து இருந்தான் அவன்.
"ஹலோ." என்ற இவளின் சோர்வான குரலைக் கேட்ட பின்பே உயிர் வந்தது அவனுக்கு.
"எங்கடி போன.? போன் எடுக்காம." என்ற இவனின் உரிமையான அதட்டலில் அவளுக்கு வந்த காய்ச்சல் அவளை விட்டு ஓடிச் சென்றது. மேலும் மூன்று மாத அலைபேசி அழைப்பில் இன்னும் நெருக்கமானார்கள் இருவரும். அவர்களின் குடும்பங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டார்கள் அப்படியான ஒரு நாளில்.
தனிமையான இரவில் பேசிக் கொண்டிருக்கும்போது
"ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல நீங்க.?"
"அது ஒரு சோகக்கதை." என்றான் சிரித்துக் கொண்டே
"அதான் என்ன கதை. சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கிறேன்." என்றாள் இவளும் சிரிப்போடு.
"ப்ச் வேற பேசு."
"ஏன்? என்ன ஆச்சு? சொல்லுங்க."
"இப்ப தெரிஞ்சு என்ன பண்ண போற.?"
"என்னமோ பண்றேன்.'
"ப்ச் என்னமோ ஒரு பயம், ஒரு தயக்கம்."
"என்ன பயம்? என்ன தயக்கம்.?"
"அதெல்லாம் உனக்குச் சொன்னா புரியாது."
"சொல்லுங்க புரிஞ்சிக்க முடியுதான்னு பார்க்கிறேன்."
"நான் சொன்னாலும் உனக்குப் புரியாதுடி. சொன்னா கேளு." என்றவனுக்கு அவள் அமைதியை பதிலாகத் தர
"ஒரு வேலை உன்னை மாதிரி ஒரு தேவதை பெண்ணுக்காகத் தான் காத்திருந்தேனோ? என்னவோ.?" என்றான் அவளின் அமைதியை தாங்கிக் கொள்ள முடியாமல். அவனின் பதிலில் உடல் சிலிர்க்க. அவனுக்குப் பதில் கூற முடியாமல் அலைபேசியை அணைத்து இருந்தாள் இவள்.
' ஐயோ! எதுக்குடா உன் மனசு திறந்த அவகிட்ட.இத்தனை நாள் எப்படி பழகினியோ அப்படியே இருந்திருக்கலாமே. ஏன் உன் மனசுல இருக்குற காதல அவகிட்ட பகிர்ந்து கிட்ட."எனத் தன் தலையில் அடித்துக் கொண்டு தன்னையே நொந்து கொண்டவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
அங்கோ அலைபேசியை அணைத்தவள் தலைக்கால் புரியாமல் குதித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் ஆண் அவன் சொல்லாமல் சொல்லிய காதலில்.
"ஹப்பா இத சொல்ல இவ்ளோ நாள் ஆகியிருக்கு உங்களுக்கு." என அலைபேசியில் அவன் புகைப்படத்தைப் பார்த்துக் கேள்வி கேட்டவளுக்கு வெட்கத்தில் கன்னம் பூத்து முகம் கொள்ளாமல் சிரிப்பும் வந்தது.
உரியவரிடம் காதலை உரைத்து விட்டாலும் மனதில் மகிழ்வோ நிம்மதியோ இல்லவே இல்லை அவனுக்கு. மனம் முழுவதும் பாரமே அழுத்தியது. அதற்குத் தோதாக அவளும் அவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இவனும் அழைக்காமல் அந்த வார இறுதியை நெருங்கிக் கொண்டிருக்க. அதற்கு மேல் முடியாமல் வருவது வரட்டும் எனத் துணிந்தவனாக அவளுக்கு அழைத்தவன் ஞாயிறு காலை அவளைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினான். காதலை பட்டும் படாமல் சொன்ன பிறகு அதை மேலும் உறுதிப்படுத்தாமலும் அவளுக்கு அழைக்காமலும் இருந்தவனின் மேல் கோபத்தில் இருந்தவள் தற்போது அவளைப் பார்க்க விரும்புவதாகக் கூறவும் ஏனோ அவனுள் ஒரு ரகசியம் இருப்பதாக உள்ளுணர்வு கூற அது என்ன எனத் தெரிந்து கொள்வதற்காகவே அவனைச் சந்திக்க சம்மதம் கூறி வருவதாக ஒப்புக்கொண்டாள் அவளும்.
அவளை வந்து அழைக்கட்டுமா? என்று கேட்டதற்கு தோழியின் வீட்டிற்கு சென்று விட்டு எல் ஐ சி பேருந்து நிலையத்தில் அவனுக்காகக் காத்திருப்பதாகக் கூற அவனும் சரி என்று ஒப்புக் கொண்டான்.
அதன்படி சரியாகப் பத்து மணிக்கு அவனுக்காகக் காத்திருந்தவளுக்கு மிதமான படபடப்பு. பெண்னவளுக்கு அவனைத் தெரியும் புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள். ஆனால் அவனுக்கோ அவளைத் தெரியாது முதல்முறையாக அவளை எப்படி கண்டுபிடிப்பான் என்ற ஆவல் மிகுதியாக இருக்க. அவன் எவ்வழி வருவானெனத் தெரியாமல் விழிகளை இங்கும் அங்கும் உருட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
தன் அருகே வேகமாக வந்து நின்ற சிகப்பு i20 காரைப் பார்த்து இவள் அதிர்ந்து நிற்க,
"கிளம்பலாம்ங்க." என்றான்.
தன் கிராமத்தை நோக்கிச் செல்கிறான் மூன்று நாள் விடுமுறையில் அதற்குப் பின் புனேவை நோக்கிப் பயணப்பட வேண்டும் அவனின் புதிய வேலையில் சேர்வதற்கு.
இன்றுடன் சென்னையோட அவனுக்கு இருந்த தொடர்பு முற்றுப்பெறுகிறது என நினைக்கும்போது லேசாக வலித்த இதயத்தைத் தடவி விட்டுக் கொண்டான்.
நோட்டிபிகேஷன் வந்ததற்கான சத்தத்தில் தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் வேலை தொடர்பாக வந்திருந்த செய்தியை பார்த்துவிட்டுத் தன் போல் அவன் கைகள் மெசஞ்சரில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு நபரின் செய்தியை சென்று பார்த்தவனின் விரல்கள் மெதுவாக அவற்றைத் தடவின.
பெருமூச்சோடு அலைபேசியை அனைத்து பாக்கெட்டில் வைத்தவனின் நினைவலைகள் பின்னே சென்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பு.
சென்னை எம் என் சி நிறுவனம் ஒன்றில் தலைமை கிராபிக் டிசைனராக வேலை பார்க்கிறான். மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம். அவன். வெற்றிச்செல்வன். வயது முப்பத்தி ஆறு.
அன்று அவ்வளவு வேலை இருந்தது அவனுக்கு. ஆனாலும் மனம் ஏனோ வெறுமையாக இருக்க முகப் புத்தகத்தில் சிறிது நேரம் உலா வர அதன் உள் நுழைந்தான். நண்பர்கள் போடும் சில மீம்ஸ்களைப் படித்துச் சிரித்து விட்டு வரலாமென உள் சென்றவனுக்கு, முக புத்தகமே சில நேரம் இவர்களை நண்பராக்கி கொள்ளுங்கள் எனக் காட்டும் நபரில் ஒரு பெயர் அவனை வெகுவாக ஈர்த்தது. பூங்குழலி ஏனோ அப்பெயர் அவன் மனதை வருட .அதற்கு ஒரு நண்பர் அழைப்பு விடுத்து விட்டு மெசேஜிலும் சென்று "ஹாய்" எனத் தட்டி விட்டு வந்து விட்டான். பின், அதைப் பற்றிச் சுத்தமாக மறந்தவன் தன் வீட்டிற்கு வந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவு உணவாக அமெரிக்கன் ஷாப்ஸி ஆர்டர் செய்துவிட்டு நீள் இருக்கையில் சாய்ந்தவன், அப்போதே தன் தொலைபேசியை எடுத்துப் பார்க்கப் பூங்குழலிடமிருந்து நட்பு ஏற்கப்பட்டு "ஹாய்.." என்ற பதிலும் வந்து இருந்தது.
ஆச்சரியம் அடைந்தவனுக்கு பெண் பெயரில் இருக்கும் போலி ஐடியோ என்ற சந்தேகம் இருக்க இவனும் பேசத் தொடங்கினான்
"எப்படி இருக்கீங்க.?" என்று…
"நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க…" எனக் கேட்டுப் பதில் வரப் பெண் பெயரில் இருக்கும் ஆண் னா..? என இவன் கேட்டு வைக்கப் பலமாகச் சிரிக்கும் பொம்மை ஒன்று வந்தது.
"இல்லங்க நிஜமாவே நான் பெண்தான்..." என்ற உடனடி பதிலில் ஆச்சரியமடைந்தவன்
"அப்படியா.?" எனக் கேட்க
"ஆமாங்க ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ். அதான் உங்களுக்கு ஒரு பதிலை அனுப்பிவிட்டேன்." என்று உண்மையைக் கூறியவளை ஏனோ மிகவும் பிடித்தது.
"நான் வெற்றி செல்வன்.." என்பதற்கு "தெரியுமே.." என்றாள் அவளும் சிரிக்கும் பொம்மையுடன்.
"ஹ்ம்ம்.." என்று இவனும் ஒரு சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பிவிட்டு தன்னைப் பற்றிய சிறு குறிப்பை அவளுக்கு அனுப்பினான்.
தாய் மட்டுமே கிராமத்தில் இருப்பதாகவும் தான் சென்னையில் வேலை செய்வதை பற்றியும் அவளிடம் பகிர்ந்து கொண்டவன் அவளைப் பற்றி விசாரிக்க அவளும் பெங்களூரில் சிஸ்டம் அனலிஸ்ட்டாக வேலை பார்ப்பதாகக் கூறினாள்...
இப்படியாக ஆறு மாதங்கள் இவர்களின் நட்பு முகநூலில் தொடர்ந்து கொண்டிருந்தது. தினமும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை இருவருமே பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தவர்களுக்கு ஒருவரோடு ஒருவர் பேசாமல் இருப்பதும் அன்றைய நாளில் நடந்த சம்பவங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் பெரும் இழப்பாகத் தோன்றியது. அன்று இரவும் வேலைகளை முடித்து வீட்டிற்கு வந்தவன் தனக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு அலைபேசியை எடுக்க
"வீட்டுக்கு வந்தாச்சா.?"
என்று கேட்டு அனுப்பி இருந்தாள் குழலி.
"வந்தாச்சு. வந்தாச்சு." என்று குதூகலமான பதிலை இவன் அனுப்ப அதற்கு ஒரு சோக பொம்மையை அனுப்பி இருந்தாள்.
"ஹேய் என்ன ஆச்சு மா.?" என்று சற்று பதறியவனாக இவன் கேட்க. அவனின் அக்கரையில் மனம் தழும்ப.
"ஏனோ மனசு சரியில்ல." என்றாள் அவள். அதுவரை ஒருவரை பற்றி ஒருவர் ஆழமாக எதுவும் விசாரித்துக் கொள்ளாதவர்கள் முதல் முறையாக அன்று கேட்டான் அவளிடம்
"ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல.?" என்று
"ப்ச்.ஏதோ தோஷம் அதனால எந்த வரணும் அமையல. ஆரம்பத்துல நிறைய வரன் வந்தது. வயசு போகப் போக அதுவும் குறைஞ்சிருச்சு." "அப்படி என்ன வயசு உனக்கு..?" என்றவனின் கேள்விக்குச் சில நொடிகள் பதில் இல்லாமல் பின்
"இருபத்து ஒன்பது." எனப் பதில் வந்தது.
"அப்படி ஒன்னும் ரொம்ப வயசாகி விடவில்லையே." என்றவனுக்கு சிரிப்பு பொம்மையை அனுப்பியவள் அத்துடன் ஆஃப்லைன் சென்று விட. இவனும் சிறிது யோசனைக்குப் பிறகு
"உனக்குப் பிரச்சனை இல்லனா? விருப்பப்பட்டா எனக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ஹாய் அனுப்பு." என்ற செய்தியுடன் அவனின் தொலைபேசி எண்ணை அனுப்பி வைத்தான்.
இரவு முழுவதும் அவள் ஏதேனும் பதில் அனுப்பி இருக்கிறாளா எனத் அலைபேசியை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு அவன் ஆசைப்பட்ட நிகழ்வு மட்டும் நடக்கவே இல்லை. சோர்வுடன் தாமதமாகத் தூங்கி தாமதமாக எழுந்தவனுக்கு மனம் ஏனோ வெறுமையாக இருந்தது. அலுவலகத்திற்கு நேரம் ஆவதை உணர்ந்தவன் குளித்துக் கிளம்பி வந்தவனுக்கு அதுவரை அலைபேசியை எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை. பணியிடத்திற்கு சென்ற பின்பே அலைபேசியை எடுத்துப் பார்த்தவனுக்கு
"நான் குழலி."என்ற ஒரு புது எண்ணிலிருந்து வாட்ஸ் அப்மெசேஜ் வந்திருந்தது. அந்தச் செய்தியைப் பார்த்தவனுக்கு மனசெல்லாம் மத்தாப்பு பூத்தது போன்று மனம் முழுவதும் மகிழ்வு பரவியது. பசித்திருக்கும் வேளையில் தண்ணீர் அருந்தும்போது அது எப்படி உணவு குழாயின் வழியாக உள்ளே சென்று வயிற்றில் பரவுவதை உணர முடியுமோ அப்படி கண்கள் பார்த்த செய்தி மூளையில் பதிந்து மனது முழுவதும் புத்துணர்ச்சியை பரவச் செய்தது. அவனுக்கு.
அதற்குப் பின் வாட்ஸ் அப்பில் இருவரும் தங்கள் நட்பை வளர்த்து வந்தார்கள். இவனின் மார்பளவு புகைப்படத்தைப் பார்த்துவிட்டு
"ரொம்ப அழகா இருக்கீங்க.!" என்று இவளிடமிருந்து வந்த ஒற்றை பாராட்டில் ஏதோ உலகத்தையே வென்றதைப் போல உணர்ந்தான் அவன்.
"ஆனா எனக்கு அப்படி சொல்லக் கொடுப்பினை இல்லையே. ரோஜா பூ மட்டும் தான் அங்க இருக்கு. ஒரு வேலை அந்த ரோஜாவைப் போலத் தான் நீயும் இருப்பியோ.?" என இவன் கேட்க எப்பொழுதும் போலச் சிரிக்கும் பொம்மையை அனுப்பாமல் இதயத்தை அனுப்பி வைத்தாள் அவள்.
இருவருக்குமே சொல்லப்படாத ஒரு நேசமும் பிணைப்பும் ஏற்பட்டு இருந்தது. இருவருக்குமே அவர்கள் ஆரம்பித்த நட்பிலிருந்து அடுத்த கட்டமான காதலை நோக்கி நகர்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்ள இருவருக்குமே தயக்கம் இருந்தது.
அந்தத் தயக்கமும் உடைந்தது ஒரு நாள். மேலும் ஒரு ஆறு மாத நட்பில். முதல் மூன்று மாதங்களுக்கு மெசேஜ்லேயே பேசிக் கொண்டிருந்தவர்கள் இரண்டு நாள் முழுவதும் பெண்ணவள் காய்ச்சலில் வாடித் தொலைபேசியைப் பார்க்காமல் இருக்க. என்னவோ ஏதோ எனப் பதறி அவளுக்கு அழைத்து இருந்தான் அவன்.
"ஹலோ." என்ற இவளின் சோர்வான குரலைக் கேட்ட பின்பே உயிர் வந்தது அவனுக்கு.
"எங்கடி போன.? போன் எடுக்காம." என்ற இவனின் உரிமையான அதட்டலில் அவளுக்கு வந்த காய்ச்சல் அவளை விட்டு ஓடிச் சென்றது. மேலும் மூன்று மாத அலைபேசி அழைப்பில் இன்னும் நெருக்கமானார்கள் இருவரும். அவர்களின் குடும்பங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டார்கள் அப்படியான ஒரு நாளில்.
தனிமையான இரவில் பேசிக் கொண்டிருக்கும்போது
"ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல நீங்க.?"
"அது ஒரு சோகக்கதை." என்றான் சிரித்துக் கொண்டே
"அதான் என்ன கதை. சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கிறேன்." என்றாள் இவளும் சிரிப்போடு.
"ப்ச் வேற பேசு."
"ஏன்? என்ன ஆச்சு? சொல்லுங்க."
"இப்ப தெரிஞ்சு என்ன பண்ண போற.?"
"என்னமோ பண்றேன்.'
"ப்ச் என்னமோ ஒரு பயம், ஒரு தயக்கம்."
"என்ன பயம்? என்ன தயக்கம்.?"
"அதெல்லாம் உனக்குச் சொன்னா புரியாது."
"சொல்லுங்க புரிஞ்சிக்க முடியுதான்னு பார்க்கிறேன்."
"நான் சொன்னாலும் உனக்குப் புரியாதுடி. சொன்னா கேளு." என்றவனுக்கு அவள் அமைதியை பதிலாகத் தர
"ஒரு வேலை உன்னை மாதிரி ஒரு தேவதை பெண்ணுக்காகத் தான் காத்திருந்தேனோ? என்னவோ.?" என்றான் அவளின் அமைதியை தாங்கிக் கொள்ள முடியாமல். அவனின் பதிலில் உடல் சிலிர்க்க. அவனுக்குப் பதில் கூற முடியாமல் அலைபேசியை அணைத்து இருந்தாள் இவள்.
' ஐயோ! எதுக்குடா உன் மனசு திறந்த அவகிட்ட.இத்தனை நாள் எப்படி பழகினியோ அப்படியே இருந்திருக்கலாமே. ஏன் உன் மனசுல இருக்குற காதல அவகிட்ட பகிர்ந்து கிட்ட."எனத் தன் தலையில் அடித்துக் கொண்டு தன்னையே நொந்து கொண்டவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
அங்கோ அலைபேசியை அணைத்தவள் தலைக்கால் புரியாமல் குதித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் ஆண் அவன் சொல்லாமல் சொல்லிய காதலில்.
"ஹப்பா இத சொல்ல இவ்ளோ நாள் ஆகியிருக்கு உங்களுக்கு." என அலைபேசியில் அவன் புகைப்படத்தைப் பார்த்துக் கேள்வி கேட்டவளுக்கு வெட்கத்தில் கன்னம் பூத்து முகம் கொள்ளாமல் சிரிப்பும் வந்தது.
உரியவரிடம் காதலை உரைத்து விட்டாலும் மனதில் மகிழ்வோ நிம்மதியோ இல்லவே இல்லை அவனுக்கு. மனம் முழுவதும் பாரமே அழுத்தியது. அதற்குத் தோதாக அவளும் அவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இவனும் அழைக்காமல் அந்த வார இறுதியை நெருங்கிக் கொண்டிருக்க. அதற்கு மேல் முடியாமல் வருவது வரட்டும் எனத் துணிந்தவனாக அவளுக்கு அழைத்தவன் ஞாயிறு காலை அவளைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினான். காதலை பட்டும் படாமல் சொன்ன பிறகு அதை மேலும் உறுதிப்படுத்தாமலும் அவளுக்கு அழைக்காமலும் இருந்தவனின் மேல் கோபத்தில் இருந்தவள் தற்போது அவளைப் பார்க்க விரும்புவதாகக் கூறவும் ஏனோ அவனுள் ஒரு ரகசியம் இருப்பதாக உள்ளுணர்வு கூற அது என்ன எனத் தெரிந்து கொள்வதற்காகவே அவனைச் சந்திக்க சம்மதம் கூறி வருவதாக ஒப்புக்கொண்டாள் அவளும்.
அவளை வந்து அழைக்கட்டுமா? என்று கேட்டதற்கு தோழியின் வீட்டிற்கு சென்று விட்டு எல் ஐ சி பேருந்து நிலையத்தில் அவனுக்காகக் காத்திருப்பதாகக் கூற அவனும் சரி என்று ஒப்புக் கொண்டான்.
அதன்படி சரியாகப் பத்து மணிக்கு அவனுக்காகக் காத்திருந்தவளுக்கு மிதமான படபடப்பு. பெண்னவளுக்கு அவனைத் தெரியும் புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள். ஆனால் அவனுக்கோ அவளைத் தெரியாது முதல்முறையாக அவளை எப்படி கண்டுபிடிப்பான் என்ற ஆவல் மிகுதியாக இருக்க. அவன் எவ்வழி வருவானெனத் தெரியாமல் விழிகளை இங்கும் அங்கும் உருட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
தன் அருகே வேகமாக வந்து நின்ற சிகப்பு i20 காரைப் பார்த்து இவள் அதிர்ந்து நிற்க,
Last edited: