Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 157
- Thread Author
- #1


"அடியே, மரகதம்! மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர நேரமாச்சுடி, ரெடியா?" என்றார் சிதம்பரம்.
"எல்லாம் ரெடிங்க, உங்க பொண்ணு ரெடியான்னு பாக்குறேன்." என்று சொல்லிக் கொண்டே மாடிக் கதவைத் திறந்தவர், எதிரிலிருந்தவளைப் பார்த்து அதிர்ந்து நின்றார்.
"ஏன்னம்மா? அங்கேயே நிக்கிற? உள்ள வா!" என்றாள் தேன்மலர் சிரிப்புடன்.
"நீயாடி கிளம்பி நிக்கிற?" என்றார் அவர், அதிர்ச்சி விலகாமல்.
"அம்மா, நான்தான்ம்மா! அதுக்குள்ள நீ பெத்த ரத்தினத்தை மறந்துட்டியே!" என்றாள் அவள், கிண்டல் சிரிப்புடன்.
"அம்மா, அதிர்ச்சி ஆகாம எப்படி இருப்பாங்கடி? நீ பார்க்க வர ஒவ்வொரு மாப்பிள்ளையையும் பொண்ணைக் காட்டாமாட்டாங்க போல. நாம கிளம்பலாம்னு போறப்ப தான் மேடம் வெளிலயே வருவீங்க. இன்னைக்கு என்ன எல்லாத்துக்கும் முன்னாடி ரெடியாகி நிக்கிறீங்க? சம்திங் ராங்!" என்று சந்தேகமாகப் பார்த்தாள் தேன்மலரின் தங்கைப் பனிமலர்.
"ரெடியா இருந்தாலும் தப்பு, இல்லையென்றாலும் தப்பு! சரி, திரும்பி குளிக்கட்டா?" என்று தேன்மலர் வேகமாகத் திரும்பினாள்.
"ஏய்! ஏய்! அதுலா வேணாடி, தேனு!" என்றார் அவசரமாக.
"பின்ன என்னம்மா?" என்று சினுங்கினாள் அவள்.
"ஏய்! பனி, அந்தப் பக்கம் போடி. அவ ஏதாச்சும் கிறுக்கு மாதிரி பண்ணி வைக்கப் போறா. உங்க அப்பா கிட்ட யாருடி திட்டுவாங்குறது?" என்று இரண்டாவது மகளை வெளியே இழுத்தார்.
"அம்மா! எனக்கு ஒரே சந்தேகமா இருக்கு. இவ ஆளே சரியில்ல!" என்றாள் பனிமலர், சந்தேகமாக.
"சரிம்மா, நா புடவையைக் கலட்டுறேன்!" என்று தேன்மலர் அவிழ்க்கப் போனாள்.
"ஏய்! வேணாடி! இவ பேசுறதுலாம் பெருசா எடுத்துக்காத. என் தங்கம் அழகா இருக்க, இந்தப் புடவையில என் கண்ணே பட்டுரும் போல!" என்று கைகளில் நெட்டி முறித்தார்.
தேன்மலர் சந்தோஷமாக சிரித்தாள்.
"அம்மா இருந்தாலும்..." என்று பனிமலர் ஆரம்பிக்க,
"வாய மூடிக்கிட்டு வெளிய வாடி!" என்று இழுத்துச் சென்றார்.
"அந்தப் பயம் இருக்கணும்." என்று சிரித்தாள். அப்பொழுது அவளுடைய போன் அடித்தது.
"ஹலோ.." என்றாள் சந்தோஷமாக.
"பொண்ணு ரெடியா?" என்ற ஆண்குரல் கேட்டது.
"பொண்ணு ரெடியாகி ஆறு மாசமாச்சு." உற்சாகமாக சொன்னாள்.
"அய்யய்யோ! சரியான அழுக்கு பொண்ணா இருக்கும் போலயே! குளிக்காமலேயே ஆறு மாசமா? அதான் ஊரோட என்ட்ரென்ஸ்லே நாத்தம் அடிக்குதா?" என்றான் கிண்டலாக.
"பாவா..." கோபமாக குறுக்கிட்டாள்.
"சரி, சரி, கூல் பேபி! நாங்க பக்கத்துல வந்துட்டோம்."
"சூப்பர்."
"நேர்ல மீட் பண்ணலாம். பை!" என்று வைத்தான்.
'காதலிக்கிறவனையே கல்யாணம் பண்ணுற வாய்ப்பு எத்தனைப் பேருக்கு கிடைக்குமோ! நம்ம அப்பாவுக்குக் காதல்'னாவே அலர்ஜி. தெரிஞ்சா கல்யாணமே நடக்காது! தெரியவே கூடாது! முருகா, காப்பாத்து!' மேலே பார்த்து வேண்டிக் கொண்டே கதவு பக்கம் திரும்பியவள் லேசாக அதிர்ந்தாள்.
"என்ன பண்ணிட்டு இருக்க?" என்றாள் பனிமலர்ச் சந்தேகமாக.
'நா போன் பேசுனதைக் கேட்டுருப்பாளோ?' யோசனையுடன் பார்த்தாள்.
"மேல பார்த்து என்ன பண்ணுற?"
"ஒன்னும் இல்லடி, இந்த வரன் செட்டாகணும்னு வேண்டிக்கிட்டேன்." என்றாள் சிரிப்புடன்.
"ஒ... சொல்ல வந்ததையே மறந்துட்டேன்! மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தாச்சு. மாமா செம்மையா இருக்காரு. உனக்கு வேண்டாம்னா சொல்லு, நா கட்டிக்கிறேன்!" கண்ணடித்தாள்.
"ஏய்!" என்றாள் கோவமாக.
"சரி, சரி, கோவப்படாத! மாப்பிள்ளைக்குத் தம்பி ஏதாவது இருக்கானு நா விசாரிச்சுட்டு வரேன்." என்று செல்ல போனவள்.
"தம்பி இல்ல." என்றாள் வேகமாக.
"அது எப்படி உனக்குத் தெரியும்?" என்று வேகமாகத் திரும்பி கேட்டாள்.
"அது..." என்று தடுமறியவள், "ஆ... அப்படி இருந்தாலும் உனக்கு இல்லை." என்றாள் அவசரமாக.
"ஏன்? ஏன்?" என்றாள் வேகமாக.
"அங்கேயும் வந்து உன் தொல்லைய அனுபவிக்க முடியாதுப்பா! என் கொழுந்தனுக்கு உன்னைவிட பெட்டராக நானே பொண்ணு பார்ப்பேன்." என்றாள் கிண்டலாக.
"என்னை விட உனக்கு உன் கொழுந்தன் முக்கியமா போயிட்டானாடி?" என்று சண்டைக்கு வந்தாள்.
"ஏய்! என்னங்க டி, சத்தம் போட்டுக்கிட்டு இருக்கீங்க? மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துட்டாங்கடி!" என்று திட்டியப்படியே உள்ளே வந்தார் மரகதம்.
"அம்மா, பாரும்மா! இவளுக்கு என்னைவிட இவ கொழுந்தன் முக்கியமாம்!" என்று புகார்க் கொடுத்தாள்.
"என்னடி உலறுற?" குழப்பமாகக் கேட்டார். நடந்த அனைத்தையும் வேகமாக எடுத்துரைத்தாள் சிறியவள்.
"எரும… அந்தப் பையனுக்கு அக்கா மட்டும் தான் டி!" என்று தலையில் அடித்தார்.
"அப்போ, தம்பி இல்லையா?"
"ஒரு அம்மாகிட்ட பேசுற பேச்சா இது? இவங்கலாம் கிளம்பிட்டும், அப்பறம் இருக்கு டி, சின்னவளே! அக்காவை அஞ்சு நிமிஷத்துல கூட்டிக்கிட்டு வா!" பதிலை எதிர்பார்க்காமல் சென்றார்.
"இருந்தாலும், நீ இப்படி சொல்லலாமா?" என்றாள் சோகமாக.
"ஏய், லூசு!" என்று தலையில் லேசாகத் தட்டிவிட்டு, "சும்மா சொன்னேன் டி! எனக்கு நீதான் முக்கியம்." என சிரிப்புடன் அணைத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் பனிமலர், தேன்மலரைக் கீழே அழைத்து வந்தாள். அனைவரையும் பார்த்து வணங்கினாள். அங்கு இரண்டு பெரியவர்கள், ஒரு பையன் மற்றும் ஓர்ப் பெண் இருந்தனர். மாப்பிள்ளை, இவளைப் பார்த்துக் கண்ணடித்து, சிரித்தபடி தலையை ஆட்டினான். இவளும் யாரும் அறியாமல் வெக்கத்துடன் தலையை ஆட்டினாள்.
"இது தான் ம்மா, மாப்பிள்ளைப் பையன். பையனோட அப்பா, அம்மா, இவங்க அக்கா," என்று அறிமுகம் செய்தார் தரகர். தேன்மலர் அனைவரையும் பார்த்து சிரித்தாள்.
"என்ன படிச்சிருக்கம்மா?" என்றார் பையனின் அப்பா.
"பி.இ."
"எங்க வேலைப் பார்க்கறீங்க?" என்றாள் பையனின் அக்கா.
"எக்ஸ் கம்பெனி, சென்னைல ஒர்க் பண்ணுறேன்."
"சிதம்பரம் சார், வீட்டுக்குப் போய் தகவல் சொல்லுறேன். இதுல நமக்கு சரி வராது. எங்களுக்குப் பொண்ணு ஃபோட்டோலயே ரொம்ப பிடிச்சுப் போச்சு. நீங்க என் பையனைப் பார்க்கணும்னு தான் நேர்ல வந்தோம். நீங்க கலந்து பேசி உங்க முடிவ சொல்லுங்க." என்றார் பையனின் அப்பா சிரிப்புடன்.
"எங்களுக்கும் பையன ரொம்ப பிடிச்சுருக்கு." என்றார் சந்தோஷமாக.
"உங்க பொண்ணுக்கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க சார். எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை."
"என்னம்மா தேனு, உனக்குப் பிடிச்சுருக்கா?" என்று சிரித்தபடி கேட்க, புன்னகையுடன் தலையை ஆட்டினாள்.
"எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம், சார்." என்றார் பையனின் அப்பா.
"இன்னும் என்னங்க, சார்னு சொல்லிக்கிட்டு? சம்மந்தின்னு உரிமையோட கூப்பிடுங்க." என்றார் சிதம்பரம் சந்தோஷமாக, சிரித்தபடி.
"நீங்களும் கூப்பிடுங்க." என்று பையனின் அப்பா, சிதம்பரத்தின் கையைப் பிடித்துக் கொண்டே கூறினார்.
"ஆசிர்வாதம் வாங்கிக்கோ தேனு." என்றார் மரகதம்.
பையனின் அம்மா, அப்பாவின் காலில் விழுந்தாள்.
"நல்ல இரும்மா, சந்தோஷமா இருக்கணும்." என்று ஆசிர்வதித்தனர்.
பையனின் அக்காவும், அம்மாவும் பூ வைத்து உறுதிச் செய்தனர். கல்யாணத் தேதி ஓர் மாதத்துக்குள் பேசி முடிவும் செய்தனர்.
"இப்பயாச்சும் பொண்ணு கிட்ட பேசவிடுவாங்களா? இல்ல, கல்யாணத்துக்கு அப்புறம்தானா?" என்றான் மாப்பிள்ளை மெதுவாக, தன் அக்காவின் காதில்."டேய்! கம்முனு இருடா! ஏற்கனவே தரகர் சொல்லிருக்காருல, அவங்க அப்பா அந்தக் காலத்து ஆளுன்னு." என்று மெதுவாகப் பல்லைக் கடித்தபடி தம்பியை அடக்கினாள்.
"என்னம்மா, சொல்லுறாங்க மாப்பிள்ளை?" என்றார் சிதம்பரம், சிரிப்புடன்.
"ஒன்னும் இல்லைங்க... நிச்சயதார்த்தம் இல்லையான்னு கேட்டான்." என்று சமாளித்தாள்.
"இல்ல மாப்பிள்ளை, இன்னும் இரண்டு மாசத்துல உங்களுக்கும் தேனுக்கும் குரு பார்வை முடிய போகுது. தேதியும் நல்ல தேதி இல்ல. அதான் நேரவே கல்யாணத்த வச்சுக்கலாம்னு." என்றார் விளக்கமாக.
"சரிங்க மாமா." என்று வேகமாகத் தலையை ஆட்டினான்.
"பொண்ணுக்கிட்ட தனியா பேசணும்னு நினைச்சிங்கனா, பேசுங்க மாப்பிள்ளை." என்றார் சிரித்தபடி.
"ஆமாடா, போ." என்றார் பையனின் அப்பா.
"தேனு, மாப்பிள்ளையை அழைச்சிட்டுப் போமா?" என்றார் சிதம்பரம்.
கொல்லைப்புறம் அழைத்துச் சென்றாள். "என்ன ஹனி, இப்ப ஹேப்பியா?" என்றான் சிரிப்புடன்.
"ஹேப்பிதான் பாவா, இருந்தாலும் கல்யாணம் முடியுற வரைக்கும் பயமாகத்தான் இருக்கு." என்றாள் லேசாகச் சிரித்தபடி.
"பயப்படாதே, நான் இருக்கேன் எல்லாம் பார்த்துக்கலாம்." என்றான் ஆறுதலாக.
"ஆமா, நீங்க எப்படி இங்க பொண்ணு பார்க்க வந்தீங்க? உங்க ஃபோட்டோ எப்படி வந்தது? ஓரே குழப்பமா இருக்கு!"
"அதை நா அப்புறம் சொல்லுறேன். என் கிட்ட நைட், இங்கதான் உக்காந்து பேசுவியா?" என்றான் சுற்றிப் பார்த்தபடி.
"ஆமா பாவா, இந்தத் துணித்துவைக்கிற கல்லுல தான் உக்காந்து பேசுவேன்." என்று கல்லைக் காட்டினாள்.
"இன்னிமே யாருக்கும் தெரியாம பேசத் தேவையில்ல." என்றான் சிரிப்புடன்.
"ஆ..." என்று ஆரம்பிக்கும் போதே
"எக்ஸ்க்யூஸ் மீ... சாரி ஃபார்த் த டிஸ்டர்பன்ஸ்." என்றபடி வந்தாள் பனிமலர். இருவரும் திரும்பிப் பார்த்தனர். "உங்களை வரச் சொன்னாங்க." என்றாள் தயங்கியபடி.
"சரி, வாங்க போகலாம்." என்று இரு பெண்களுடன் உள்ளே வந்தான்.
கல்யாணத்தைப் பற்றி அனைத்தையும் பேசி முடிவு செய்துவிட்டு, மாப்பிள்ளை வீட்டார்க் கிளம்பினர்.