Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 35
- Thread Author
- #1
அத்தியாயம் 1.
அந்த அதிகாலை நேரத்தில் தலை தெறிக்க மூச்சிறைக்க ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.ஓடியபடியே அவள் திரும்பி பார்க்க,காட்டு மிராண்டிகள் போல நான்கு ரவுடிகள் அவளை பிடித்தே ஆகவேண்டும் என்று நோக்கத்தில் துரத்தி வந்துகொண்டிருந்தனர்.
தன்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓட வந்தவள் கால் இடரி கீழே விழுந்தவளுக்கு பின்னந் தலையில் பலமாக அடிபட்டு விட்டது.இரத்த வெள்ளத்தில் அப்படியே அவள் மயங்கவதுற்கும் இரு வலிய கரங்கள் அவளை துக்குவதற்கும் சரியாக இருந்தது.
மருத்துவமனையில்,
இரண்டு நாட்கள் கழித்து கண்விழித்திருந்தாள் அவள்.தலைவேறு விண் விண்னென்று வலிக்கவும் தன் இரு கரங்களால் நெற்றியை அழுத்தி பிடித்து யோசித்து பார்த்தவளுக்கு தான் யார் என்பதே அவளுக்கு நினைவு வரவில்லை.
தனக்கு தான் யார்?தன் பெயர்? என்று திரும்ப திரும்ப யோசித்து பார்த்தவளுக்கு விடை என்னவோ பூஜியம்தான்.அவளுக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது.
“ஆஆஆ…”என்று தொண்டை வலிக்க கத்தினாள்.
“மேம் நீங்க கத்தாதிங்க.உங்களுக்கு பின்னந்தலையில அடிபட்டு கட்டு போட்டிருக்கு.ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதிங்க.ரிலாக்ஸா இருங்க.”என்றபடி ஒரு நர்ஸ் அவளுக்கு ட்ரிப்ஸ் போட்டு விட,
“நான் யாரு?எனக்கு எப்படி அடிபட்டுசச்சு?யாரு என்ன ஹாஸ்டல சேர்த்தது?”என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தவளை பரிதாபமாக பார்த்த நர்ஸ்
“மேம் உங்க பேர் இதழருவி.எனக்கு இது மட்டும் தான் தெரியும்.இரண்டுநாளா நீங்க ஐசியு ல மயக்கத்தல இருந்திங்க.இன்னைக்குதான் உங்கள நார்மல் அறைக்கு மாத்திருக்காங்க.உங்கள இங்க அட்மிட் பண்ணவரு மெடிசன் வாங்க வெளிய போயிருக்காரு.
உங்களுக்கு இதற்கு மேல டீடெயில் வேனும்னா அவருகிட்டதான் நீங்க கேட்கனும்.ஏன்னா உங்களுக்கு பின்னந்தலையில பலமா அடிபட்டதால உங்களுக்கு மெமரிலாஸ் ஆயிடுச்சு.”என்று நர்ஸ் சொல்லவும் அதிர்ந்து போனாள் இதழருவி.
அந்த நர்ஸ் வந்த வேலையை முடித்து விட்டு வெளியேறவும் ஆறடி ஆண்மகன் உள்ளே வந்தான்.
“இப்ப உங்களுக்கு பரவாலயா?”மென்மையான குரலில் கேட்டபடி அருகில் இருந்த ஸ்டுலை இழுத்து போட்டு அமர்ந்தான் அவன்.
“நீங்க?”சற்று தயக்கமாக அவள் கேட்கவும்
“நான் இதழரசன்.உங்களுக்கு மெமரி லாஸ்.நான் உங்கள பத்தி விசாரிச்சிட்டு இருக்கேன்.”என்று அவன் ஒருவித இறுக்குத்துடன் சொல்ல,
“என்பேரு இதழருவின்னு..”என்று தன் ஆள்காட்டி விரலை மேலே உயர்த்தி அவள் ஏதோ சொல்ல வருவதற்குள்
“அது உங்கள ஹாஸ்பிடல அட்மிட் பண்ணப்போ உங்க பேரு என்னன்னு கேட்டாங்க.எனக்கு உங்க பேர் தெரியாது.சோ நானே அந்த நேம கொடுத்தேன்.”என்று அவன் சொல்லவும்தான் அமைதியானாள்.
ஒரு வாரம் கடந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து இதழருவியை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான் இதழரசன்.
அந்த வீட்டை பார்க்கும் பொழுதே செல்வ செழிப்பை வாரி இறைத்திருப்பார்கள் போலும்.
வீட்டிற்குள் வந்ததும் தன் பார்வையை சுற்றியும் ஓட விட்டாள் இதழருவி.
அந்த மிகப்பெரிய வீட்டில் அவனையும் அவளையும் தவிர வேறு யாருமே இல்லை என்பதை நொடியில் புரிந்து கொண்டவளாக “ஏங்க வீட்டல நம்மள தவிர வேற யாரும் இல்லையா?”சிறிது தயக்கத்துடன் கேட்டிருக்க
“என்னோட அம்மா அப்பா தம்பி யூகே ல இருக்காங்க.நான் மட்டும் இங்க இருக்கேன்.”என்று ஒரு வித இறுக்கத்தோடு இதழரசன் கூறவும் பலத்த அமைதிக்கு போனாள் இதழருவி.
“சரிங்க நீங்க கீழ இருக்குற செகன்ட் ரூம யூஸ் பண்ணிக்கோங்க.நான் உங்களுக்கு ஆப்போசிட் இருக்கர ரூம்ல தான் இருப்பேன்.”அவ்வளவுதான் என்பது போல தன்னறைக்கு அவன் சென்றுவிட,
இதழருவி தயங்கியபடி அவன் கூறிய அறைக்குள் சென்றாள்.அவளுக்கு அந்த அறைக்குள் வந்ததும் புரியாத ஒர் உணர்வு தோன்றியது.
பளிங்கு தரையில் ஆங்காங்கே தாமரை பூக்கள்.அந்த அறையே பெரிய அறையாக இருந்தது.நான்கு ஆட்கள் படுக்கக்கூடிய பெரிய தேக்குமர கட்டல்.
அமைதியாக அங்குள்ள கபோர்டை திறந்து பார்க்க அதில் சுடிதார் சேரி நைட் ட்ரஸ் என்று இருந்தது.அத்தனை ஆடைகளும் இவளின் அளவுக்கு பொருந்தியதுதான் இவளுக்கு ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் ஒரு சேர வரவழைத்தது.
அதிலிருந்து சுடிதார் ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கதவை சாற்றினாள்.
இங்கு சமையலறையில் இறுய முகத்துடன் காலை உணவை சமைத்துக்கொண்டிருத்தான் இதழரசன்.
அரைமணி நேரத்தில் இதழருவி குளித்து ரெடியாகி வருவதற்குள் காலை உணவாக வெண்பொங்கல் தேங்காய் சட்னியை செய்து முடித்திருந்தான்.
சிறிது தயக்கத்துடன் அதே நேரத்தில் பயத்துடன் தன் அறைக்கதவை திறந்து அவள் வெளியே வரவும்
“மகாராணிக்கு நான் எப்பவும் போல சாப்பிட அழைக்கனமோ.”அவனின் கனீர் குரலில் திடுக்கிட்டு போனவளாக
“என்ன!”என்று அவள் அதிர்வுடன் கேட்கவும் அதில் அவன் சுதாகரித்தவன் “ அட நான் உங்கள சொல்லலிங்க.நான் வளர்த்திட்டிருக்கர கிளிய சொன்னேன்.
எப்பவும் சார்ப்பா இந்த டைம்க்கு சாப்பிட வந்திடும்.ஆனா இன்னைக்கு வராம அங்க இங்கன்னு பறந்துட்டு இருக்கு.”என்று ஆள்காட்டி விரலையும் பாம்பு விரலையும் சேர்த்து நெற்றியை அழுத்தமாக தேய்த்தவன் வீட்டிற்குள் பறந்து கொண்டிருந்த பஞ்சவர்ண கிளியை காண்பித்திருந்தான்.
அவன் காட்டிய திசையில் பஞ்சவர்ண கிளியை பறப்பதை வியப்புடன் பார்த்தவளுக்கு மனதில் அப்படியொரு மகிழ்ச்சி இதழருவிக்கு.
“ஃவெரி க்யூட்.”என்று மகிழ்வுடன் அவள் சொல்லி முடித்ததுதான் தாமதம் அக்கிளி பறந்து வந்து அவளின் வலது தோள் பட்டையில் அமர்ந்துவிட அவளுக்கு அப்படியொரு பிரம்மிப்பு.
“என்னங்க நான் இந்த வீட்டுக்கு இப்பதான் புதிசா வந்திருக்கேன்.ஆனா இந்த கிளி ரொம்ப பழகனமாறி என் தோள்பட்டையில் உட்காருது?”குழப்பத்துடன் அவள் கேட்கவும்
“அது ஒன்னுமில்லங்க.நம்ம அரசி யாரயாவது பிடிச்சு போச்சுன்னா வந்து உட்கார்ந்துக்கும்.நீங்க வாங்க சாப்பிடலாம்.”என்றபடி உணவு மேஜையை நோக்கி அவன் நடைபோட அவனை பின்தொடர்ந்தாள் இதழருவி.
ராஜேந்திரன் இல்லம்,
அந்த மிகப்பெரிய வீடு பாரம்பரியத்தில் செல்வ செழிப்புடன் ஜொலித்துக்கொண்டிருந்தது.
அவ்வீட்டினுள் வெள்ளை வேட்டி சட்டை அணிந்துபடி ஐம்பது வயதுடைய ஒரு நபர் ஊஞ்சலில் கால் மேல் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தார்.அவர் முன்பு தடிமாடு போல நான்கு ரவுடிகள் தலை குனிந்துபடி நின்றிருந்தனர்.
தன் மீசையை முறுக்கி விட்டபடி
“அந்த ஓடுகாலிய கொல்லாம வந்ததுக்கு இந்த மாசம் சம்பளம் நான் உங்க நாலு பேருக்கு தரமாட்டேன்.அடுத்து தடவ மிஸ் பண்ணிங்க உங்கள என்ன பண்ணுவேன்னே தெரியாது.”அந்த வீடே அதிரும்படியாக கர்ஜித்தார் ராஜேந்திரன்.
“ஏங்க அவ நம்ம பொண்ணுங்க.அவள ஏங்க இப்படி கொல்லனும்னு நினைக்கிரிங்க?அவ உங்க இரத்தம்ங்க.”கமறிய குரலில் கூறினார் நாச்சியார்.
“யாருடி என் இரத்தம் அந்த ஓடுகாலியா?இல்லவே இல்ல.அவ நம்ம பொண்ணே முதல்ல இல்ல.”ஊஞ்சலில் ஆடியபடி அவர் சொல்லவும் தன் கணவரை சிறு அதிர்வுடன் பார்த்தார் நாச்சியார்.
“நமக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்துடுச்சு.நீ குழந்த இறந்த விசயத்தை தாங்கமாட்டியேன்னு வேற குழந்தைய கொண்டு வந்து வெச்சிடுலாம்னு நினைச்சு எனக்கு தெரிஞ்ச அனாத ஆசரிமத்தல விசாரிச்சேன்.நம்ம நல்ல நேரமோ இல்ல கெட்ட நேரமோன்னு தெரியல.அந்த ஓடிகாலிதான் நமக்கு குழந்தையா கிடைச்சா.நீ மயக்கத்துல இருக்கும்போதே அவள உன் பக்கத்துல படுக்க வெச்சுட்டேன்.
இங்க பாரு அந்த ஓடுகாலி நம்ம பொண்ணு கிடையாது.இனிமேல் நமக்கு ஒரே பொண்ணுதான்.அது நம்ம சாதனா.நீ அந்த ஓடுகாலிய மறக்கிறதுதான் நல்லது.”என்று அழுத்தமாக கூறியபடி ஊஞ்சலில் இருந்து கீழே இறங்கியவர் விரு விருவென்று வீட்டை விட்டு வெளியேறவும் வெடித்து அழ ஆரம்பித்தார் நாச்சியார்.
‘கடவுளே! என் பொண்ண எப்படியாவது காப்பத்திடுங்க.அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்.எனக்கு அது போதும்.’தன் மனதில் மானசீகமாக கடவுளிடம் பிரார்த்தனை வைத்தபடியே வெளியில் கதறி அழுது கொண்டிருந்தார் நாச்சியார்.
நாச்சியார் என்னதான் அவர் இதழருவியை வயிற்றில் சுமக்கவில்லையென்றாலும் இருபத்தி ஐந்து வருடங்கள் தன் நெஞ்சில் சுமந்து பாசத்தை கொட்டி வளர்த்தவர் ஆயிற்றே.
ராஜேந்திரன் இதழருவி குழந்தையாக இருக்கும்பொழுது ஒருமுறை கூட தூக்கி கொஞ்சாத காரணம் தற்பொழுதுதான் புரிந்தது அவருக்கு.
ஆண் பிள்ளைதான் பிறக்கும் என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் இருந்தவருக்கு பெண் பிள்ளை பிறந்ததால் அவருக்கு ஏமாற்றம்.அதனால் இதழருவியை தூக்கி கொஞ்சவில்லை என்று அவரே ஒரு காரணத்தை யூகித்து வைத்திருந்தார்.
இங்கு இதழரசன் இல்லத்தில்,
இதழருவிக்கும் தனக்கும் உணவை பரிமாறி அவள் புறம் தட்டை நகர்த்தி வைத்திருந்தான் இதழரசன்.தற்பொழுதுதான் தன் அருகில் அமர்ந்த தேவதையை முழுவதுமாக பார்த்தான்.
லைட் ரெட் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.காதில் ஜிமிக்கி இல்லாத சிறு தங்கத்தோடு.கழுத்தில் எந்த ஆபரணும் இல்லாமல் வெறுமையாக காட்சி தந்ததை இவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
கைகளிலும் வளையல் என்பதை உறுதி செய்தவன் “உங்க ரூம்ல ரைட் சைட் இருக்கர ட்ரெஸ்சிங் டேபிள்ள நகைகள் இருக்கும்.மறக்காம எடுத்து போட்டுக்குங்க.”என்று சிறிது தயக்கத்துடன் அவன் சொல்ல,
“ஆமாங்க நான் கேட்கனும்னு நினைச்சேன்.இந்த வீட்டல லேடிஸ் இருக்காங்களா?அவங்களோட ட்ரெஸ்தான் அங்க இருக்குதா?”நினைவு வந்தவளாக அவள் கேட்டிருக்க
“இங்க லேடிஸ் எல்லாம் இல்லைங்க.அந்த எல்லா ட்ரெஸ்,ஜெல்வ்ஸ் எல்லாமே என் வருங்கால மனைவிக்காக வாங்கி வெச்சது.”சாப்பாட்டில் கோலமிட்டபடி அவன் கூறவும்
“அப்போ உங்க வருங்கால மனைவிக்கு வாங்கி வெச்ச ட்ரெஸ் ஜெல்வ் என்ன போட சொல்ரிங்க?”
“இப்ப உங்களுக்கு போட்டுக்க ட்ரெஸ்,ஜெல்வ் எதுவும் இல்ல.சோ நீங்களே எல்லாத்தையும் யூஸ் பண்ணிக்கோங்க.நான் என் வருங்கால மனைவி வந்ததுக்கு அப்புறம் அவளுக்கு பிடிச்ச மாதிரி வாங்கிக்கொடுத்துக்கிரேன்.”என்று பொறுமையாக அவன் கூறவும் தான் நிம்மதியாக பெரு மூச்சு விட்டாள் இதழருவி.
இருவரும் அமைதியாக காலை உணவை சாப்பிட்டு முடித்தனர்.
“இதழருவி நீங்க உங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க.எனக்கு வெளியே வேலை இருக்கு.நான் போயிட்டு வர்றேன்.நீங்க வாசல் கதவை உள்ள லாக் பண்ணிக்கோங்க.நான் போன் பண்ணா மட்டும் கதவ திறங்க.வேற யாரு வந்து கதவ தட்டுனாலும் கதவ திறக்காதிங்க.”என்று கடைசி வரி வாக்கியத்தை அழுத்தி தன் கனீர் குரலில் கூறவும் அவளின் தலை தானாக சரி என்பதுபோல அசைத்தது.
“தட்ஸ் குட்.”என்று தன் கனீர் குரலில் கூறியவன்
“அரிசி நான் இப்ப வெளியே போயிட்டு திரும்ப வர வரைக்கும் நீதான் என்னோட..என்ற வார்த்தை வெளியே சொல்வவந்தவன் அவ்வார்த்தை
யை வாயிக்குள்ளே விழுங்கி இதழருவிய நீதான் பத்திரமா பாத்துக்கனும்.”எனக்கூறியவன் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
தொடரும்.
அந்த அதிகாலை நேரத்தில் தலை தெறிக்க மூச்சிறைக்க ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.ஓடியபடியே அவள் திரும்பி பார்க்க,காட்டு மிராண்டிகள் போல நான்கு ரவுடிகள் அவளை பிடித்தே ஆகவேண்டும் என்று நோக்கத்தில் துரத்தி வந்துகொண்டிருந்தனர்.
தன்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓட வந்தவள் கால் இடரி கீழே விழுந்தவளுக்கு பின்னந் தலையில் பலமாக அடிபட்டு விட்டது.இரத்த வெள்ளத்தில் அப்படியே அவள் மயங்கவதுற்கும் இரு வலிய கரங்கள் அவளை துக்குவதற்கும் சரியாக இருந்தது.
மருத்துவமனையில்,
இரண்டு நாட்கள் கழித்து கண்விழித்திருந்தாள் அவள்.தலைவேறு விண் விண்னென்று வலிக்கவும் தன் இரு கரங்களால் நெற்றியை அழுத்தி பிடித்து யோசித்து பார்த்தவளுக்கு தான் யார் என்பதே அவளுக்கு நினைவு வரவில்லை.
தனக்கு தான் யார்?தன் பெயர்? என்று திரும்ப திரும்ப யோசித்து பார்த்தவளுக்கு விடை என்னவோ பூஜியம்தான்.அவளுக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது.
“ஆஆஆ…”என்று தொண்டை வலிக்க கத்தினாள்.
“மேம் நீங்க கத்தாதிங்க.உங்களுக்கு பின்னந்தலையில அடிபட்டு கட்டு போட்டிருக்கு.ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதிங்க.ரிலாக்ஸா இருங்க.”என்றபடி ஒரு நர்ஸ் அவளுக்கு ட்ரிப்ஸ் போட்டு விட,
“நான் யாரு?எனக்கு எப்படி அடிபட்டுசச்சு?யாரு என்ன ஹாஸ்டல சேர்த்தது?”என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தவளை பரிதாபமாக பார்த்த நர்ஸ்
“மேம் உங்க பேர் இதழருவி.எனக்கு இது மட்டும் தான் தெரியும்.இரண்டுநாளா நீங்க ஐசியு ல மயக்கத்தல இருந்திங்க.இன்னைக்குதான் உங்கள நார்மல் அறைக்கு மாத்திருக்காங்க.உங்கள இங்க அட்மிட் பண்ணவரு மெடிசன் வாங்க வெளிய போயிருக்காரு.
உங்களுக்கு இதற்கு மேல டீடெயில் வேனும்னா அவருகிட்டதான் நீங்க கேட்கனும்.ஏன்னா உங்களுக்கு பின்னந்தலையில பலமா அடிபட்டதால உங்களுக்கு மெமரிலாஸ் ஆயிடுச்சு.”என்று நர்ஸ் சொல்லவும் அதிர்ந்து போனாள் இதழருவி.
அந்த நர்ஸ் வந்த வேலையை முடித்து விட்டு வெளியேறவும் ஆறடி ஆண்மகன் உள்ளே வந்தான்.
“இப்ப உங்களுக்கு பரவாலயா?”மென்மையான குரலில் கேட்டபடி அருகில் இருந்த ஸ்டுலை இழுத்து போட்டு அமர்ந்தான் அவன்.
“நீங்க?”சற்று தயக்கமாக அவள் கேட்கவும்
“நான் இதழரசன்.உங்களுக்கு மெமரி லாஸ்.நான் உங்கள பத்தி விசாரிச்சிட்டு இருக்கேன்.”என்று அவன் ஒருவித இறுக்குத்துடன் சொல்ல,
“என்பேரு இதழருவின்னு..”என்று தன் ஆள்காட்டி விரலை மேலே உயர்த்தி அவள் ஏதோ சொல்ல வருவதற்குள்
“அது உங்கள ஹாஸ்பிடல அட்மிட் பண்ணப்போ உங்க பேரு என்னன்னு கேட்டாங்க.எனக்கு உங்க பேர் தெரியாது.சோ நானே அந்த நேம கொடுத்தேன்.”என்று அவன் சொல்லவும்தான் அமைதியானாள்.
ஒரு வாரம் கடந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து இதழருவியை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான் இதழரசன்.
அந்த வீட்டை பார்க்கும் பொழுதே செல்வ செழிப்பை வாரி இறைத்திருப்பார்கள் போலும்.
வீட்டிற்குள் வந்ததும் தன் பார்வையை சுற்றியும் ஓட விட்டாள் இதழருவி.
அந்த மிகப்பெரிய வீட்டில் அவனையும் அவளையும் தவிர வேறு யாருமே இல்லை என்பதை நொடியில் புரிந்து கொண்டவளாக “ஏங்க வீட்டல நம்மள தவிர வேற யாரும் இல்லையா?”சிறிது தயக்கத்துடன் கேட்டிருக்க
“என்னோட அம்மா அப்பா தம்பி யூகே ல இருக்காங்க.நான் மட்டும் இங்க இருக்கேன்.”என்று ஒரு வித இறுக்கத்தோடு இதழரசன் கூறவும் பலத்த அமைதிக்கு போனாள் இதழருவி.
“சரிங்க நீங்க கீழ இருக்குற செகன்ட் ரூம யூஸ் பண்ணிக்கோங்க.நான் உங்களுக்கு ஆப்போசிட் இருக்கர ரூம்ல தான் இருப்பேன்.”அவ்வளவுதான் என்பது போல தன்னறைக்கு அவன் சென்றுவிட,
இதழருவி தயங்கியபடி அவன் கூறிய அறைக்குள் சென்றாள்.அவளுக்கு அந்த அறைக்குள் வந்ததும் புரியாத ஒர் உணர்வு தோன்றியது.
பளிங்கு தரையில் ஆங்காங்கே தாமரை பூக்கள்.அந்த அறையே பெரிய அறையாக இருந்தது.நான்கு ஆட்கள் படுக்கக்கூடிய பெரிய தேக்குமர கட்டல்.
அமைதியாக அங்குள்ள கபோர்டை திறந்து பார்க்க அதில் சுடிதார் சேரி நைட் ட்ரஸ் என்று இருந்தது.அத்தனை ஆடைகளும் இவளின் அளவுக்கு பொருந்தியதுதான் இவளுக்கு ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் ஒரு சேர வரவழைத்தது.
அதிலிருந்து சுடிதார் ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கதவை சாற்றினாள்.
இங்கு சமையலறையில் இறுய முகத்துடன் காலை உணவை சமைத்துக்கொண்டிருத்தான் இதழரசன்.
அரைமணி நேரத்தில் இதழருவி குளித்து ரெடியாகி வருவதற்குள் காலை உணவாக வெண்பொங்கல் தேங்காய் சட்னியை செய்து முடித்திருந்தான்.
சிறிது தயக்கத்துடன் அதே நேரத்தில் பயத்துடன் தன் அறைக்கதவை திறந்து அவள் வெளியே வரவும்
“மகாராணிக்கு நான் எப்பவும் போல சாப்பிட அழைக்கனமோ.”அவனின் கனீர் குரலில் திடுக்கிட்டு போனவளாக
“என்ன!”என்று அவள் அதிர்வுடன் கேட்கவும் அதில் அவன் சுதாகரித்தவன் “ அட நான் உங்கள சொல்லலிங்க.நான் வளர்த்திட்டிருக்கர கிளிய சொன்னேன்.
எப்பவும் சார்ப்பா இந்த டைம்க்கு சாப்பிட வந்திடும்.ஆனா இன்னைக்கு வராம அங்க இங்கன்னு பறந்துட்டு இருக்கு.”என்று ஆள்காட்டி விரலையும் பாம்பு விரலையும் சேர்த்து நெற்றியை அழுத்தமாக தேய்த்தவன் வீட்டிற்குள் பறந்து கொண்டிருந்த பஞ்சவர்ண கிளியை காண்பித்திருந்தான்.
அவன் காட்டிய திசையில் பஞ்சவர்ண கிளியை பறப்பதை வியப்புடன் பார்த்தவளுக்கு மனதில் அப்படியொரு மகிழ்ச்சி இதழருவிக்கு.
“ஃவெரி க்யூட்.”என்று மகிழ்வுடன் அவள் சொல்லி முடித்ததுதான் தாமதம் அக்கிளி பறந்து வந்து அவளின் வலது தோள் பட்டையில் அமர்ந்துவிட அவளுக்கு அப்படியொரு பிரம்மிப்பு.
“என்னங்க நான் இந்த வீட்டுக்கு இப்பதான் புதிசா வந்திருக்கேன்.ஆனா இந்த கிளி ரொம்ப பழகனமாறி என் தோள்பட்டையில் உட்காருது?”குழப்பத்துடன் அவள் கேட்கவும்
“அது ஒன்னுமில்லங்க.நம்ம அரசி யாரயாவது பிடிச்சு போச்சுன்னா வந்து உட்கார்ந்துக்கும்.நீங்க வாங்க சாப்பிடலாம்.”என்றபடி உணவு மேஜையை நோக்கி அவன் நடைபோட அவனை பின்தொடர்ந்தாள் இதழருவி.
ராஜேந்திரன் இல்லம்,
அந்த மிகப்பெரிய வீடு பாரம்பரியத்தில் செல்வ செழிப்புடன் ஜொலித்துக்கொண்டிருந்தது.
அவ்வீட்டினுள் வெள்ளை வேட்டி சட்டை அணிந்துபடி ஐம்பது வயதுடைய ஒரு நபர் ஊஞ்சலில் கால் மேல் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தார்.அவர் முன்பு தடிமாடு போல நான்கு ரவுடிகள் தலை குனிந்துபடி நின்றிருந்தனர்.
தன் மீசையை முறுக்கி விட்டபடி
“அந்த ஓடுகாலிய கொல்லாம வந்ததுக்கு இந்த மாசம் சம்பளம் நான் உங்க நாலு பேருக்கு தரமாட்டேன்.அடுத்து தடவ மிஸ் பண்ணிங்க உங்கள என்ன பண்ணுவேன்னே தெரியாது.”அந்த வீடே அதிரும்படியாக கர்ஜித்தார் ராஜேந்திரன்.
“ஏங்க அவ நம்ம பொண்ணுங்க.அவள ஏங்க இப்படி கொல்லனும்னு நினைக்கிரிங்க?அவ உங்க இரத்தம்ங்க.”கமறிய குரலில் கூறினார் நாச்சியார்.
“யாருடி என் இரத்தம் அந்த ஓடுகாலியா?இல்லவே இல்ல.அவ நம்ம பொண்ணே முதல்ல இல்ல.”ஊஞ்சலில் ஆடியபடி அவர் சொல்லவும் தன் கணவரை சிறு அதிர்வுடன் பார்த்தார் நாச்சியார்.
“நமக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்துடுச்சு.நீ குழந்த இறந்த விசயத்தை தாங்கமாட்டியேன்னு வேற குழந்தைய கொண்டு வந்து வெச்சிடுலாம்னு நினைச்சு எனக்கு தெரிஞ்ச அனாத ஆசரிமத்தல விசாரிச்சேன்.நம்ம நல்ல நேரமோ இல்ல கெட்ட நேரமோன்னு தெரியல.அந்த ஓடிகாலிதான் நமக்கு குழந்தையா கிடைச்சா.நீ மயக்கத்துல இருக்கும்போதே அவள உன் பக்கத்துல படுக்க வெச்சுட்டேன்.
இங்க பாரு அந்த ஓடுகாலி நம்ம பொண்ணு கிடையாது.இனிமேல் நமக்கு ஒரே பொண்ணுதான்.அது நம்ம சாதனா.நீ அந்த ஓடுகாலிய மறக்கிறதுதான் நல்லது.”என்று அழுத்தமாக கூறியபடி ஊஞ்சலில் இருந்து கீழே இறங்கியவர் விரு விருவென்று வீட்டை விட்டு வெளியேறவும் வெடித்து அழ ஆரம்பித்தார் நாச்சியார்.
‘கடவுளே! என் பொண்ண எப்படியாவது காப்பத்திடுங்க.அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்.எனக்கு அது போதும்.’தன் மனதில் மானசீகமாக கடவுளிடம் பிரார்த்தனை வைத்தபடியே வெளியில் கதறி அழுது கொண்டிருந்தார் நாச்சியார்.
நாச்சியார் என்னதான் அவர் இதழருவியை வயிற்றில் சுமக்கவில்லையென்றாலும் இருபத்தி ஐந்து வருடங்கள் தன் நெஞ்சில் சுமந்து பாசத்தை கொட்டி வளர்த்தவர் ஆயிற்றே.
ராஜேந்திரன் இதழருவி குழந்தையாக இருக்கும்பொழுது ஒருமுறை கூட தூக்கி கொஞ்சாத காரணம் தற்பொழுதுதான் புரிந்தது அவருக்கு.
ஆண் பிள்ளைதான் பிறக்கும் என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் இருந்தவருக்கு பெண் பிள்ளை பிறந்ததால் அவருக்கு ஏமாற்றம்.அதனால் இதழருவியை தூக்கி கொஞ்சவில்லை என்று அவரே ஒரு காரணத்தை யூகித்து வைத்திருந்தார்.
இங்கு இதழரசன் இல்லத்தில்,
இதழருவிக்கும் தனக்கும் உணவை பரிமாறி அவள் புறம் தட்டை நகர்த்தி வைத்திருந்தான் இதழரசன்.தற்பொழுதுதான் தன் அருகில் அமர்ந்த தேவதையை முழுவதுமாக பார்த்தான்.
லைட் ரெட் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.காதில் ஜிமிக்கி இல்லாத சிறு தங்கத்தோடு.கழுத்தில் எந்த ஆபரணும் இல்லாமல் வெறுமையாக காட்சி தந்ததை இவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
கைகளிலும் வளையல் என்பதை உறுதி செய்தவன் “உங்க ரூம்ல ரைட் சைட் இருக்கர ட்ரெஸ்சிங் டேபிள்ள நகைகள் இருக்கும்.மறக்காம எடுத்து போட்டுக்குங்க.”என்று சிறிது தயக்கத்துடன் அவன் சொல்ல,
“ஆமாங்க நான் கேட்கனும்னு நினைச்சேன்.இந்த வீட்டல லேடிஸ் இருக்காங்களா?அவங்களோட ட்ரெஸ்தான் அங்க இருக்குதா?”நினைவு வந்தவளாக அவள் கேட்டிருக்க
“இங்க லேடிஸ் எல்லாம் இல்லைங்க.அந்த எல்லா ட்ரெஸ்,ஜெல்வ்ஸ் எல்லாமே என் வருங்கால மனைவிக்காக வாங்கி வெச்சது.”சாப்பாட்டில் கோலமிட்டபடி அவன் கூறவும்
“அப்போ உங்க வருங்கால மனைவிக்கு வாங்கி வெச்ச ட்ரெஸ் ஜெல்வ் என்ன போட சொல்ரிங்க?”
“இப்ப உங்களுக்கு போட்டுக்க ட்ரெஸ்,ஜெல்வ் எதுவும் இல்ல.சோ நீங்களே எல்லாத்தையும் யூஸ் பண்ணிக்கோங்க.நான் என் வருங்கால மனைவி வந்ததுக்கு அப்புறம் அவளுக்கு பிடிச்ச மாதிரி வாங்கிக்கொடுத்துக்கிரேன்.”என்று பொறுமையாக அவன் கூறவும் தான் நிம்மதியாக பெரு மூச்சு விட்டாள் இதழருவி.
இருவரும் அமைதியாக காலை உணவை சாப்பிட்டு முடித்தனர்.
“இதழருவி நீங்க உங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க.எனக்கு வெளியே வேலை இருக்கு.நான் போயிட்டு வர்றேன்.நீங்க வாசல் கதவை உள்ள லாக் பண்ணிக்கோங்க.நான் போன் பண்ணா மட்டும் கதவ திறங்க.வேற யாரு வந்து கதவ தட்டுனாலும் கதவ திறக்காதிங்க.”என்று கடைசி வரி வாக்கியத்தை அழுத்தி தன் கனீர் குரலில் கூறவும் அவளின் தலை தானாக சரி என்பதுபோல அசைத்தது.
“தட்ஸ் குட்.”என்று தன் கனீர் குரலில் கூறியவன்
“அரிசி நான் இப்ப வெளியே போயிட்டு திரும்ப வர வரைக்கும் நீதான் என்னோட..என்ற வார்த்தை வெளியே சொல்வவந்தவன் அவ்வார்த்தை
யை வாயிக்குள்ளே விழுங்கி இதழருவிய நீதான் பத்திரமா பாத்துக்கனும்.”எனக்கூறியவன் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
தொடரும்.