Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 87
- Thread Author
- #1
அத்தியாயம் 28.
சாகித்தியன் மருத்துவமனை,
அவசர சிகிச்சை அறையில் சாகித்தியன் தான் நாச்சியாருக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தான்.
இதழருவி அவசர சிகிச்சை அறைக் கதவின் வெளியே நின்று வட்டவடிவ கண்ணாடியின் வழியாக தன் தாயை பார்த்து மெளனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் பாவை.
"அழதாத இதழ்.அவங்களுக்கு ஒன்னும் ஆகாது.நீ தைரியமா இரு."என்று இதழரசன் ஆறுதல் படுத்தவும்
"அழாம எப்படி என்னால இருக்க முடியும்? நான் வேணா அவங்களுக்கு சொந்த மகளா இல்லாம இருக்கலாம்.ஆனா அவங்க இப்பவரைக்கும் அவங்களோட சொந்த பொண்ணா நினைச்சுதான் என்மேல ரொம்ப அக்கறையா இருக்காங்க.
அவங்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கலாம்.தெரியாம இருக்கரதுக்கு வாய்ப்பு இல்லைதான்.
என்னைக்கும் எனக்கு அம்மான்னா அது அவங்க மட்டும்தான். தங்கச்சின்னா அது சாதனா மட்டும் தான்."என்று சன்ன குரலில் கூறியபடி மெளனமாக அவள் கண்ணீர் விடவும் , அதைப் பார்த்த சாதனா முகத்தை திருப்பிக் கொண்டாள்.
தற்பொழுது இதழருவியை பிடிக்காமல் முகத்தை திருப்பவில்லை,எங்கு அவள் அழுவதை தொடர்ந்து பார்த்தால் ஓடிச்சென்று தான் இதழருவியை ஆறத் தழுவி விடுவோம் என்று பயத்தினால் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளுக்கு தன் தந்தையை நினைக்க நினைக்க அருவருப்பாக இருந்தது.அவளுக்கு இதழருவியை பிடிக்காதுதான்.
ஆனால் இதழருவிக்கு ஒரு பிரச்சினை என்று வந்தபொழுது அவளாள் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கமுடியவில்லை.அந்த சூழ்நிலையில் அக்கா என்று நினைத்து உதவவில்லை.அதற்கு மாறாக இதழருவியும் தன்னை போல் ஒரு பெண்தானே.
பெண்ணுக்கு சக பெண்ணே உதவி செய்யாமல் இருந்தால் எப்படி? என்பது சாதனாவின் கொள்கை.
இதழரசன் இதழருவியிடம் ஆறுதலாக பேசிக் கொண்டிருந்த பொழுது அவனின் கவனத்தை கைபேசி தன் திசைக்கு திருப்பியிருந்தது.
தன் கைபேசியை எடுத்துவன் தொடு திரையில் வந்து கொண்டிருந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தபடி இதழருவியை விட்டு சற்று தூரம் தள்ளி வந்தவன்
"சொல்லு கார்த்திகேயன்."என்று கணீர் குரலில் கேட்டிருந்தான் இதழரசன்.
"சார்.. ராஜேந்திரன் இறந்துட்டாரு.தலையில ரொம்ப அடி பட்டதால் மருத்துவமனையில் இறந்துட்டாரு.
அப்புறம் விக்ரமும் அவங்க அப்பாவும் கோமாக்கு போயிட்டாங்க.விக்ரம் தம்பிங்க இரண்டு பேரும் எங்க நம்ம அப்பா அண்ணன செய்தித்தாள் மற்றும் டிவி ல்ல ஃப்ளாஷ் செய்தியா வந்திரும்னு நினைச்சு தற்கொலை பண்ணிட்டாங்க.
"அவங்க தற்கொலைக்கு நாம காரணம் கிடையாது.நீங்க ப்ர்தரா என்ன பண்ணனுமா அதை பண்ணிடுங்க.கையோட அந்த கேஷ்ஸ சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் கை செய்திடுங்க.
இந்த கேஷ் க்ளோஸ் பண்ணதுக்கப்புறம் நான் கொஞ்சம் ப்ரேக் எடுக்கலான்னு இருக்கேன் கார்த்திகேயன்."என்று கூறிவிட்டு அழைப்பை கட் செய்துவிட்டு தன் கால் சட்டை பாக்கெட்டில் திணித்து விட்டு இதழருவியை நெருங்கி இருந்தான் இதழரசன்.
இதழருவி வராண்டாவில் போடப்பட்ட இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.
கதிரவன் சந்திரனுக்கு விடை கொடுத்திருந்த நேரம் அது.
ஆனந்தி அனைத்து விசயத்தையும் தெரிந்து கொண்டு இரவு உணவை சமைத்து மருத்துவ மனைக்கு எடுத்து வந்திருந்தார்.
ஆனந்திக்கு சாதனாவை நன்கு தெரியும்.ஆனால், இதழருவியை தற்பொழுதுதான் பார்க்கிறார்.இதழரசன் தன் தாய் தந்தை வீட்டுக்கு சென்று அனைத்து உண்மையும் கூறியிருந்தான்.
தற்பொழுது அவரை அழைத்து வந்தது கூட இதழரசன் தான்.
"இதழ்.. இவங்கதான் என்னோட அம்மா."என்று இதழரசன் தன் தாயை இதழருவிக்கு அறிமுகப்படுத்தி வைக்கவும்
இதழருவி அந்த சூழ்நிலையிலும் கூட அவருக்கு எழுந்து நின்று கைகூப்பி 'வணக்கம் அத்தை 'என்று கூறியிருந்தாள்.
இதழருவியோட இந்த பணிவு நிதானம் ஆனந்தியை வெகுவாக கவர்ந்திருந்தது.
"இதழருவி நான் எல்லாத்தையும் கேள்வி பட்டேன்மா.நீயும் சாதனாவும் தைரியமா இருக்கனும்.உங்க ரெண்டு பேர்த்துக்கும் நான் இருக்கேன்.
நீங்க இரண்டு பேரும் ஆனந்தியோட மருமகள்கள்.எதற்கும் சோர்ந்து போயிடக் கூடாது.இப்படியே நீயும் சாதனாவும் இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு திசையில சாப்பிடாம உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்?
உங்களுக்கு நான் சமைச்சு எடுத்துட்டு வந்திருக்கேன்.இரண்டு பேரும் எழுந்து வாங்க சாப்பிட "என்று ஆனந்தி சாதனா மற்றும் இதழருவியை அழைத்திருக்க
"ஆன்ட்டி எனக்கு இப்ப பசிக்கல.நான் கொஞ்ச நேரம் கழித்து சாப்பிட்டுக்கிறேன்."என்று சாதனா சொல்லவும்
"என்னம்மா சாதனா உன் முகத்த பார்த்தா காலையில இருந்தே சாப்பிடாம இருப்ப போல,
என் இடத்தில் உங்க அம்மா சாப்பிட வான்னு கூப்பிட்டு இருந்தா வந்திருப்பிங்க."என்று ஆனந்தி குரல் தேய்ந்து உள் ஒலிக்க,
"நாங்க சாப்பிட வரோம் ஆன்ட்டி."என்று மறுநொடி தீர்க்கமாக கூறியிருந்தாள் சாதனா.அவள் நாங்க என்று இதழருவியையும் சேர்த்துதான் கூறியிருந்தாள்.
ஆனந்தி அவர்களை அங்கு இருந்த உணவு விடுதிக்கு அழைத்து சென்றார்.
சாதனாவும் இதழருவியும் தற்பொழுதும் பேசிக்கொள்ளவில்லை.
அமைதியாக பெயரிற்கு சிறிது சாப்பிட்டு விட்டு மீண்டும் காரிடாரில் ஆளுக்கொரு திசையில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
இவர்கள் தான் சாப்பிட அழைத்தற்காகவாவது சிறிதேனும் சாப்பிட்டார்களே என்று நிம்மதி அடைந்தவர்,
"இதழருவி, சாதனா பார்த்து பத்திரமா இருங்க.உங்களுக்கு துனையா என் இரண்டு மகன்களும் இங்க இருப்பாங்க.உங்களோட சூழ்நிலை புரிந்து தான் நான் உங்கள நம்ம வீட்டுக்கு கூப்பிடல.
மணி இப்ப பத்தாச்சு.இன்னும் மூனு மணி நேரத்தில் உங்க அம்மாக்கு மயக்கம் தெளிந்து விடும் என்று சாகித்தியன் சொன்னான்.
நான் உங்கள நாளைக்கு வந்து பார்க்கிறேன்.நாளைக்கு நாம எல்லாரும்
நம்ம வீட்டுக்கு போயிடலாம்."என்று சாதனா இதழருவியிடம் விடைபெற்றார் ஆனந்தி.
சாகித்தியன் மருத்துவமனை,
அவசர சிகிச்சை அறையில் சாகித்தியன் தான் நாச்சியாருக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தான்.
இதழருவி அவசர சிகிச்சை அறைக் கதவின் வெளியே நின்று வட்டவடிவ கண்ணாடியின் வழியாக தன் தாயை பார்த்து மெளனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் பாவை.
"அழதாத இதழ்.அவங்களுக்கு ஒன்னும் ஆகாது.நீ தைரியமா இரு."என்று இதழரசன் ஆறுதல் படுத்தவும்
"அழாம எப்படி என்னால இருக்க முடியும்? நான் வேணா அவங்களுக்கு சொந்த மகளா இல்லாம இருக்கலாம்.ஆனா அவங்க இப்பவரைக்கும் அவங்களோட சொந்த பொண்ணா நினைச்சுதான் என்மேல ரொம்ப அக்கறையா இருக்காங்க.
அவங்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கலாம்.தெரியாம இருக்கரதுக்கு வாய்ப்பு இல்லைதான்.
என்னைக்கும் எனக்கு அம்மான்னா அது அவங்க மட்டும்தான். தங்கச்சின்னா அது சாதனா மட்டும் தான்."என்று சன்ன குரலில் கூறியபடி மெளனமாக அவள் கண்ணீர் விடவும் , அதைப் பார்த்த சாதனா முகத்தை திருப்பிக் கொண்டாள்.
தற்பொழுது இதழருவியை பிடிக்காமல் முகத்தை திருப்பவில்லை,எங்கு அவள் அழுவதை தொடர்ந்து பார்த்தால் ஓடிச்சென்று தான் இதழருவியை ஆறத் தழுவி விடுவோம் என்று பயத்தினால் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளுக்கு தன் தந்தையை நினைக்க நினைக்க அருவருப்பாக இருந்தது.அவளுக்கு இதழருவியை பிடிக்காதுதான்.
ஆனால் இதழருவிக்கு ஒரு பிரச்சினை என்று வந்தபொழுது அவளாள் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கமுடியவில்லை.அந்த சூழ்நிலையில் அக்கா என்று நினைத்து உதவவில்லை.அதற்கு மாறாக இதழருவியும் தன்னை போல் ஒரு பெண்தானே.
பெண்ணுக்கு சக பெண்ணே உதவி செய்யாமல் இருந்தால் எப்படி? என்பது சாதனாவின் கொள்கை.
இதழரசன் இதழருவியிடம் ஆறுதலாக பேசிக் கொண்டிருந்த பொழுது அவனின் கவனத்தை கைபேசி தன் திசைக்கு திருப்பியிருந்தது.
தன் கைபேசியை எடுத்துவன் தொடு திரையில் வந்து கொண்டிருந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தபடி இதழருவியை விட்டு சற்று தூரம் தள்ளி வந்தவன்
"சொல்லு கார்த்திகேயன்."என்று கணீர் குரலில் கேட்டிருந்தான் இதழரசன்.
"சார்.. ராஜேந்திரன் இறந்துட்டாரு.தலையில ரொம்ப அடி பட்டதால் மருத்துவமனையில் இறந்துட்டாரு.
அப்புறம் விக்ரமும் அவங்க அப்பாவும் கோமாக்கு போயிட்டாங்க.விக்ரம் தம்பிங்க இரண்டு பேரும் எங்க நம்ம அப்பா அண்ணன செய்தித்தாள் மற்றும் டிவி ல்ல ஃப்ளாஷ் செய்தியா வந்திரும்னு நினைச்சு தற்கொலை பண்ணிட்டாங்க.
"அவங்க தற்கொலைக்கு நாம காரணம் கிடையாது.நீங்க ப்ர்தரா என்ன பண்ணனுமா அதை பண்ணிடுங்க.கையோட அந்த கேஷ்ஸ சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் கை செய்திடுங்க.
இந்த கேஷ் க்ளோஸ் பண்ணதுக்கப்புறம் நான் கொஞ்சம் ப்ரேக் எடுக்கலான்னு இருக்கேன் கார்த்திகேயன்."என்று கூறிவிட்டு அழைப்பை கட் செய்துவிட்டு தன் கால் சட்டை பாக்கெட்டில் திணித்து விட்டு இதழருவியை நெருங்கி இருந்தான் இதழரசன்.
இதழருவி வராண்டாவில் போடப்பட்ட இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.
கதிரவன் சந்திரனுக்கு விடை கொடுத்திருந்த நேரம் அது.
ஆனந்தி அனைத்து விசயத்தையும் தெரிந்து கொண்டு இரவு உணவை சமைத்து மருத்துவ மனைக்கு எடுத்து வந்திருந்தார்.
ஆனந்திக்கு சாதனாவை நன்கு தெரியும்.ஆனால், இதழருவியை தற்பொழுதுதான் பார்க்கிறார்.இதழரசன் தன் தாய் தந்தை வீட்டுக்கு சென்று அனைத்து உண்மையும் கூறியிருந்தான்.
தற்பொழுது அவரை அழைத்து வந்தது கூட இதழரசன் தான்.
"இதழ்.. இவங்கதான் என்னோட அம்மா."என்று இதழரசன் தன் தாயை இதழருவிக்கு அறிமுகப்படுத்தி வைக்கவும்
இதழருவி அந்த சூழ்நிலையிலும் கூட அவருக்கு எழுந்து நின்று கைகூப்பி 'வணக்கம் அத்தை 'என்று கூறியிருந்தாள்.
இதழருவியோட இந்த பணிவு நிதானம் ஆனந்தியை வெகுவாக கவர்ந்திருந்தது.
"இதழருவி நான் எல்லாத்தையும் கேள்வி பட்டேன்மா.நீயும் சாதனாவும் தைரியமா இருக்கனும்.உங்க ரெண்டு பேர்த்துக்கும் நான் இருக்கேன்.
நீங்க இரண்டு பேரும் ஆனந்தியோட மருமகள்கள்.எதற்கும் சோர்ந்து போயிடக் கூடாது.இப்படியே நீயும் சாதனாவும் இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு திசையில சாப்பிடாம உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்?
உங்களுக்கு நான் சமைச்சு எடுத்துட்டு வந்திருக்கேன்.இரண்டு பேரும் எழுந்து வாங்க சாப்பிட "என்று ஆனந்தி சாதனா மற்றும் இதழருவியை அழைத்திருக்க
"ஆன்ட்டி எனக்கு இப்ப பசிக்கல.நான் கொஞ்ச நேரம் கழித்து சாப்பிட்டுக்கிறேன்."என்று சாதனா சொல்லவும்
"என்னம்மா சாதனா உன் முகத்த பார்த்தா காலையில இருந்தே சாப்பிடாம இருப்ப போல,
என் இடத்தில் உங்க அம்மா சாப்பிட வான்னு கூப்பிட்டு இருந்தா வந்திருப்பிங்க."என்று ஆனந்தி குரல் தேய்ந்து உள் ஒலிக்க,
"நாங்க சாப்பிட வரோம் ஆன்ட்டி."என்று மறுநொடி தீர்க்கமாக கூறியிருந்தாள் சாதனா.அவள் நாங்க என்று இதழருவியையும் சேர்த்துதான் கூறியிருந்தாள்.
ஆனந்தி அவர்களை அங்கு இருந்த உணவு விடுதிக்கு அழைத்து சென்றார்.
சாதனாவும் இதழருவியும் தற்பொழுதும் பேசிக்கொள்ளவில்லை.
அமைதியாக பெயரிற்கு சிறிது சாப்பிட்டு விட்டு மீண்டும் காரிடாரில் ஆளுக்கொரு திசையில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
இவர்கள் தான் சாப்பிட அழைத்தற்காகவாவது சிறிதேனும் சாப்பிட்டார்களே என்று நிம்மதி அடைந்தவர்,
"இதழருவி, சாதனா பார்த்து பத்திரமா இருங்க.உங்களுக்கு துனையா என் இரண்டு மகன்களும் இங்க இருப்பாங்க.உங்களோட சூழ்நிலை புரிந்து தான் நான் உங்கள நம்ம வீட்டுக்கு கூப்பிடல.
மணி இப்ப பத்தாச்சு.இன்னும் மூனு மணி நேரத்தில் உங்க அம்மாக்கு மயக்கம் தெளிந்து விடும் என்று சாகித்தியன் சொன்னான்.
நான் உங்கள நாளைக்கு வந்து பார்க்கிறேன்.நாளைக்கு நாம எல்லாரும்
நம்ம வீட்டுக்கு போயிடலாம்."என்று சாதனா இதழருவியிடம் விடைபெற்றார் ஆனந்தி.