• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
35
அத்தியாயம் 2.

தனக்குரிய காவல் வாகனத்தில் தான் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு வந்திருந்தான் இதழரசன் ஐபிஎஸ்.அவனின் கேபன் சென்று அடைவதற்குள் அங்கு அவனுக்கு கீழ் பணிபுரியும் அனைத்து காவல் துறையினரும் தங்களின் காலை வணக்கத்தை சிலர் பவ்வியத்துடனும் சிலர் மனதில் வெறுப்பாக வெளியில் சிரித்தபடி காலை வணக்கத்தை தெரிவித்தனர்.

இறுகிய முகத்துடன் கண்ணசைவில் அவ்வணக்கத்தை ஏற்றபடி தனது கேபினை அடைந்து சுழல் நாற்காலியில் கெத்தாக அமர்ந்தான் இதழரசன்.

இதழரசன் இருப்பத்தெட்டை தொடும் ஆண்மகன்.மாநிறம்.தன் வேலைக்கேற்ற கட்டுக்கோப்பான முறுக்கேறிய உடம்பு.எப்பொழுதும் அவனின் முகம் இறுக்கத்துடனே காணப்படும்.அதெல்லாம் வேலையில் மட்டுமே.

இதழரசன் ஏ எஸ் பி என்று பதவி தாங்கிய நேம் போர்டை சரியாக வைத்தவன் தான் பார்க்க வேண்டிய வேலைகளை ஆரம்பித்தான்.

தனது கைபேசியில் இன்பெக்டருக்கு அழைப்பு விடத்தவன் அவ்வழைப்பு நொடியில் அப்பக்கம் அழைப்பை ஏற்று
“சார் சொல்லுங்க.”பவ்வியத்துடன் பேசிட,

“கார்த்திகேயன் நாம பாக்கப்போற கேஸோட கரண்ட் டீட்டியல் எனக்கு வேனும்.என் கேபினுக்கு எடுத்துட்டு வாங்க.”என்று அதிகாரமாக அவன் சொல்லவும்

அப்பக்கம் கார்த்திகேயனோ “ஐந்து நிமிசத்தில வந்திர்ரேன் சார்.”என்று அவசரமாக மறுமொழி கூறியபடி அழைப்பை கட்செய்துவிட்டு கேஸ் ஃபைலை எடுத்துக் கொண்டு அவசரநடையில் ஏ எஸ் பி கேபின் கதவை தட்டிவிட்டு உள்ளே செல்ல,

“வாங்க கார்த்திகேயன்.உட்காருங்க.”என்று இதழரசன் தன் கம்பீரமான குரலில் அங்க போடப்பட்ட இருக்கைகளில் ஒன்றில் அமரச்சொல்ல, அவ்விருக்கையில் மரியாதை கலந்த பவ்யத்துடன் அமர்ந்தான் கார்த்திகேயன்.

“சார்..இந்த கேஸ் ரொம்ப டிபிக்கல்ட்டா இருக்கும் போல.இது ஒரு பெரிய நெட் வொர்க் சார்.ஏழை குழந்தைகள் அப்புறம் மிடில் க்ளாஸ் பொண்ணுங்கள கடத்தி உடல் உறுப்புகள எடுத்து ரெட் மார்க்கெட் என்ற பேருல சட்டத்துக்கு விரோதமா வெளிநாட்டுக்கு சப்ளை பண்றாங்க.”என்று தான் கூற வந்ததை தெளிவாக கூறியிருந்தான்.

“கார்த்திகேயன் கேஸ் டிபகல்ட்டா இருந்தாதான் நமக்கு சேலன்ஜிங்கா இருக்கும்.அந்த‌ டிபகல்ட்டா என்கிற வார்த்தைய தூக்கிட்டு சேலன்ஞ் என்ற வார்த்தைய சேர்த்துங்க.
அதுக்கப்புறம் இந்த கேஸ் ஆர்வமா மாறிடும்.

முதல்ல சென்னை ல இருக்கர எல்லா ஸ்கூல்,காலேஜ்லயும் நேருல போய் அவார்னெஸ் கொடுக்கனும் கார்த்திகேயன்.அப்புரம் அந்த அவார்னெஸ் வீடியோவ சோசியல் மீடியாவிலும் போடனும்.”என்று இதழரசின் குரல் அதிகாரத்துடன் வெளிவந்தது.

“ஓகே சார்.”என்று தன் மேலதிகாரிக்கு கம்பீரத்துடன் சல்யூட் அடித்து அவ்வறையிலிருந்து வெளியேறியிருந்தான் கார்த்திகேயன்.

இதழரசன் இல்லத்தில்,

என்ன செய்வதென்று தெரியாமல் கைகளை பிசைந்தபடி அமைதியாக தன் அறையில் இருந்த குஷன் சோபாவில் அமர்ந்திருந்தாள் இதழருவி.

‘மணி ஒன்றாக போகுது.வெளியபோன அவரையும் காணேம்.எனக்கு பசி வேற வயித்த கிள்ளுதே.இப்ப என்ன பண்றது?’என்று கவலை தேய்ந்த முகத்துடன் மனதில் நினைத்தபடி தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து மேல எழுந்து நின்றவள் பூனை நடையாக நடுக்கூடத்திற்கு வந்திருந்தாள்.

அவள் வெளியே வந்ததும்தான் தாமதம் அரசி அவளின் வலது தோள்பட்டையில் அமர்ந்து கீகீ..என்ற அந்த பஞ்சவர்ணகிளி கத்தவும்

“என்ன அரசி? உனக்கும் பசிக்குதா? எனக்கும் பசிக்குது.இப்ப என்ன பண்றது?”என்று தன் முகத்தை சுருக்கி சோர்வுடன் அவள் கூறவும்,

மறுநொடியே அந்த கிளி பறந்து சென்று உணவு மேஜையில் அமர்ந்து கீகீ.. என்று கத்தி இதழருவியை உணவு மேஜைக்கு வரச்சொல்லி அழைத்தது.

அவளும் அதை புரிந்து கொண்டு உணவு மேஜையை நெருங்கி நாற்காலியில் அமர்ந்தவளுக்கு அப்பொழுதுதான் மற்றொரு ஹாட் பாக்ஸ் அதன் அருகில் சிறு பாத்திரம் இருந்ததை கவனித்தாள்.

‘அட இந்த ஹாட் பாக்ஸையும் இந்த பாத்திரத்தையும் நான் காலையில பார்த்தனே.’என்று மனதில் நினைத்தபடி அந்த ஹாட்பாக்ஸை திறந்து பார்க்க அதில் ஆறு சப்பாத்திகள் சூடாக இருந்தது.

அவற்றை பார்த்ததும் அவளின் விழிகள் மின்னியது.வெகு ஆர்வத்துடன் அந்த சிறு பாத்திரத்தையும் அவள் திறந்து பார்க்க அதில் வெங்காய சட்னி இருந்தது.

மறுகணமே தட்டில் நான்கு சப்பாத்தியை பரிமாறி சிறிது வெங்காய சட்னியை வைத்து சாப்பிடத் தொடங்கினாள்.

நன்றாக சாப்பிட்டு முடித்து பெரிய ஏப்பமாக விட்டவள் அப்பொழுதுதான் தன் அருகில் இருந்த அரிசியை பார்க்க அந்த கிளி இதழருவியையே பார்த்துக்கொண்டிருந்தது.

“சாரி அரிசி.உனக்கு சாப்பிட எதுவும் தராம நான் சாப்பிட்டேன்.இரு வர்ரேன்.”என்றபடி சமையல் அறையை நோக்கி ஓடினாள்.

சமையல் அறைக்குள் வந்தவளுக்கு அடுப்பு திட்டின் ஓரத்தில் தட்டில் ஒரு கொய்யா பழம் இருக்க அதை மகிழ்வுடன் உணவு மேஜைக்கு எடுத்து வந்தவள் மகிழ்வுடன் அரிசிக்கு கொடுக்க அது இதழருவி கொடுத்த கொய்யா பழத்தை கொத்தி கொத்தி தின்றது.

சாலையில் சிகப்பு சிக்னல் விழுந்ததுதால் தன்னுடைய வாகனத்தை ப்ரேக் அடித்து நிறுத்தியவன் கிரீன் சிக்னல் விழும்வரை மகிழுந்தில் காத்துக்கொண்டிருந்தான்.

ரெட் கலர் சிக்னல் விழுந்துதால் ஒரு இளம் பெண் அச்சாலையை கடக்க முற்படும் பொழுது இதழரசன் அருகில் உள்ள சரக்குலாரியை இயக்கும் ஓட்டுநர் ரெட் சிக்னல் முடிவதற்கு முன்பே வாகனத்தை உயிர்பித்து வேகமாக வாகனத்தை இயக்கி அப்பெண்ணின் மேல் மோதியிருக்க அப்பெண் தூக்கி வீசப்பட்டு சாலையை ஒட்டியிருந்த காலி இடத்தில் விழுந்து சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்துவிட்டாள்.

இதெல்லாம் நொடியில் நடந்திருந்தது.அதற்குள் க்ரீன் சிக்னல் விழவும் இதழரசன் தனது மகிழுந்தை வேகமாக செலுத்தி அந்த காலி இடத்தை அடைந்து வாகனத்தை விட்டு இறங்கியிருந்தான்.அந்த சரக்கு லாரி ட்ரைவர் தானகாவே அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

அது ஒரு பிரபல மருத்துவமனை,

“இங்க பாருங்க சார்.உங்க வலி எனக்கு புரியது.பட் ரியாலிட்டியை புரிஞ்சுக்க பாருங்க சார்.உங்க பொண்ணு இறந்தது உங்களால தாங்கிக்க முடியாதுதான்.ஆனா அதுதான் உண்மை.

இந்த நிலையிலும் உங்க பொண்ணோட உடல் உறுப்புகள தானம் பண்ணியிருக்கிங்க.உங்க நல்ல மனசு என்னால புரிஞ்சுக்க முடியது.”என்று அந்த நல்ல மனதிரின் தோளை தட்டிவிட்டு அவரை தாண்டி முன்னே நடந்தான் சாகித்தியன்.

சாகித்தியன் அந்த மருத்துவமனைக்கு ஒனர்‌.அவன் இதய அறுவை சிகிச்சை மருத்துவர்.

தனது கேபினுக்குள் வந்தவன் ஆயாசமாக தன் சுழல் நாற்காலியில் அமர்ந்தான்.

“சார்..மே ஐ கமின்.”கதவை திறந்து அனுமதி கேட்டுவிட்டு சாகித்தியன் பதிலுக்காக காத்திருந்தான் ரங்கன்.

“வாங்க ரங்கன்.”

“சார்..இதழருவி மேம் கொஞ்சநாளா ஹாஸ்பிடல் வரலிங்க சார்.வர்ர பேசண்ட் எல்லாருமே அவங்களதான் எங்க எங்கன்னு கேட்கறாங்க.எங்களாள பதில் சொல்ல முடியல சார்.சார் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க.

இதழருவி மேடம் எப்ப திரும்ப மருத்துவமனைக்கு வருவாங்க சார்?”

“எனக்கும் தெரியல.அவங்க போன்க்கு ட்ரை பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வருது.நீங்க போய் வேலையை பாருங்க ரங்கன்.”என்று சாகித்தியன் பொறுமையாக பதில் சொல்ல அவ்வறையிலிருந்து அமைதியாக வெளியேறி இருந்தான் ரங்கன்.

ராஜேந்திரன் இல்லம்,

‘எப்படியோ அவ அப்படியே தொலஞ்சு போனா சரிதான்.’என்று மனதில் நினைத்தபடி தன் அன்னையை நெருங்கியருந்தாள் சாதனா.

“அம்மா.. நான் வெளிய போயிட்டு வர்றேன்.”என்று அவள் கூறவும்

“சாதனா.. உன் அப்பாகிட்ட கொஞ்சம் பேசிப்பாரேன். இதழருவிய எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லும்மா.”என்று பார்வையால் அவளுக்காக இறஞ்சிய தன் தாயை சுத்தமாக பிடிக்கவில்லை சாதனாவிற்கு.

“அம்மா.. அவளை பத்தி என்கிட்ட பேசாதிங்க. எனக்கு வெறுப்பாக இருக்கிறது. அவ ஒன்னும் என் கூட பிறந்த அக்கா இல்லையே.

நான் வெளியே போயிட்டு வரேன்.”அவ்வளவுதான் என்பதை போல அவரின் பதிலுக்காக கூட காத்திருக்காது தன் வேகமான நடையில் நடுக்கூடத்தை தாண்டி வீட்டின் வாயிலை கடந்து போர்டிகோவிற்கு வந்தவள்,

தன் மகிழுந்தை உயிர்ப்பித்து ரிவர்ஸ் எடுத்து அந்த தன் வீட்டின் ராட்சத கேட்டை கடந்து சாலையில் செலுத்த ஆரம்பித்தாள் சாதனா.

‘பெரிய டாக்டராம் அவ.அவளும் அவ மூஞ்சியும்.’என்று இதழருவியை தன் மனதில் கரித்து கொட்டியபடி மகிழுந்தை சாலையில் செலுத்திக்கொண்டிருந்தவள் சாலையின் குறுக்கே நாய் வரவும் திடிரென்று சடன் ப்ரேக் அடித்து வாகனத்தை நிறுத்தியிருந்தாள்.

அதே சமயம் அவளின் மகிழுந்திற்கு பின் மற்றொரு வாகனம் சிறு இடைவெளியில் சடன் ப்ரேக் போட்டு க்ரீச்சிட்டு நின்றது.அவ்வாகனத்தில் இருந்து கோபத்துடன் வேகமாக இறங்கி வந்தான் சாகித்தியன்.

“ஏய்.. உனக்கு அறிவில்ல.இப்படிதான் நடுரோட்டல திடீர்னு சடன் ப்ரேக் போட்டு நிற்பியா?”என்று அவன் கத்தியதில் பயங்கர கோபம் கொண்டவளாக வேகமாக சீட் பெல்ட் கலட்டியவள் அதே வேகத்துடன் காரின் கதவை வேகமாக திறந்து இறங்கி நின்றவள்,

“ஹலோ மைன்ட் யுவர் வோர்ட்.திடிரென குறுக்கால நாய் வந்திருச்சு.அதனாலதான் ப்ரேக் அடித்து வண்டிய ஸ்டாப் பண்ண வேண்டியா போச்சு.”என்று திமிராக பதிலளித்தவள் அவன் எதிர்பார்க்காத நேரத்தில் காரில் வேகமாக அமர்ந்து நொடியில் வாகனத்தை உயிர்பித்து அவள் செலுத்த ஆரம்பித்திருந்தை பார்த்த சாகித்தியன்

‘ரொம்ப திமிர் பிச்சவளா இருப்பா போல.’தன் மனதில் நினைத்தபடி தனது மகிழுந்தில் ஏறி அமர்ந்தவன் தன் வீட்டை நோக்கி செலுத்த ஆரம்பித்தான்.

ஆனந்தி இல்லம்,

“இன்னும் அவன காணோம்.செஞ்ச வெச்ச சாப்பாடே ஆரிடும் போல.”என்று ஆனந்தி வாய்விட்டே புலம்பிக்கொண்டிருக்கும்பொழுது,

“அம்மா..”என்றபடி வீட்டிற்குள் வந்திருந்தான் சாகித்தியன்.

“மதியம் சாப்பிட வர சொன்னா சாய்ந்தாரம் நாலு மணிக்கு சாப்பிட வந்திருக்க.உன்ன என்ன பண்ணா தகும்?”இடுப்பில் ஒரு கையை ஊன்றி தன் மகனை முறைத்தபடி கேட்டிருந்தார் ஆனந்தி.

“ம்மா..சர்ஜரி பண்ணி முடிச்சிட்டு வர லேட்டாகிடுச்சும்மா.ட்ரை டூ அண்டர்ஸ்டேன்ட் மீ ம்மா.எனக்கு பயங்கர பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்களேன்.”என்று கண்களை சுருக்கி கெஞ்சதுளாக அவன் சொல்லவும் அமைதியாக உணவு மேஜயை நோக்கி நடைபோட்டார் ஆனந்தி.

“ஏண்டா இப்படி இருக்க?இந்த வீட்டுல சமையல் காரங்க இருந்தும் சித்தி உனக்காக மூனு நேரமும் சமைக்கிறாங்க.அவங்க மதியானம் சமைச்சு வெச்சுட்டு ஹால்ல உட்கார்ந்து நீ வருவியா வருவியான்னு வாசல்யே நீ வரவரைக்கும் பாத்துட்டே இருந்தாங்க தெரியுமா?”எனக்கேட்டாள் சாகித்தியனின் பெரியப்பாவின் மகள் பூர்ணா.

“நீயுமா..”என்பதை போல் தன் சகோதரியை சலிப்பு
டன் பார்த்தவன் “சாரி சிஸ்டர்.”சிறு குரலில் கூறிவிட்டு தன் அன்னையை பின்தொடர்ந்தான் சாகித்தியன்.

தொடரும்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top