Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 87
- Thread Author
- #1
அத்தியாயம் 18.
"நான்தான் அன்னைக்கே உங்ககிட்ட சொன்னனே?
இதழருவிய பொண்ணு பார்க்க வரப்போர நாள்ல அவ விடியற்காலையில் வீட்ட விட்டு போயிட்டான்னு சொன்னனே."என்று ராஜேந்திரனை முந்திக்கொண்டு பதிலளித்தார் நாச்சியார்.
நாச்சியார் தன்னை முந்திக்கொண்டு பதில் அளிக்கவும் ராஜேந்திரனுக்கு அப்பாட என்று இருந்தது.
"மேடம் நான் உங்ககிட்ட கேட்கர கேள்விக்கு மட்டும் நீங்க பதில் சொன்னா போதும்."என்று அழுத்தமாக நாச்சியாரை பார்த்து சொன்னவனின் பார்வை மீண்டும் ராஜேந்திரனிடத்தில் அழுத்தமாக பதிந்தது.
"ஓகே சார்.ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி.நாங்க கிளம்புறோம்."என்று அழுத்தமாக அவரை பார்த்து சொல்லிவிட்டு கார்த்திகேயனை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல எத்தனிக்கும் தருணத்தில்,
"கிளம்புங்க ஆனா இனி இந்த வீட்டுக்கு திரும்ப வராதிங்க."தன் கனீர் குரலில் சத்தமாக வார்த்தைகளை சிதறவிட்டிருந்தார் ராஜேந்திரன்.
இதழரசன் தன் இதழில் படரவிட்டிருந்த புன்னகையுடன் திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவ்வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
அவனின் பார்வை ஏதோ ஒன்றை உணர்த்திய போலவே தோன்றியது ராஜேந்திரனுக்கு.அது என்ன என்றுதான் சரியாக அவருக்கு பிடிபடவில்லை.
ஆனந்தி இல்லம்,
"என்னங்க நானும் ரொம்ப நேரமா உங்கள பார்க்கிரேன்.ஏன் என்கோட பேசமாட்டிங்கிரிங்க?"என்று தன் கணவனிடம் கவவையாக கேட்டார் ஆனந்தி.
"என்ன பேச சொல்ர ஆனந்தி? பேசறதுக்கு எதுவும் இல்லை."முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாது பேசியிருந்தார் சாந்தகுமார்.
'என்கிட்ட கலந்துக்காகம தன்னந்தனியா முடிவு எடுக்கர பழக்கம் எப்பதான் உன்ன விட்டு போகுமோ?'என்று ஆதங்கமாக மனதில் நினைத்தபடி மெளனமாக நீள்விருக்கையில் அமர்ந்திருந்தார் அவர்.
பெண் வீட்டில் நிச்சயத்தார்த்தையும் கையோட வைத்தது நல்லதுதான் என்றாலும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காது ஆனந்தியே அங்கு முடிவு எடுத்தது அவருக்கு சற்று வருத்தம்தான்.
"இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு என்கோட பேசாம இப்படி அமைதியா இருக்கிங்க?"பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு சன்ன குரலில் கேட்டார் ஆனந்தி.
"நீ நிச்சயதார்த்தம் இன்னைக்கே பண்ணிடலாம்னு சம்பந்திக்கிட்ட கேட்கறதக்கு முன்னாடி ஏன் என்கிட்ட ஒருவார்த்தை கேட்கல?"நிறுத்தி நிதானமாக கேட்டார் சாந்தகுமார்.
"இதுக்கா இவ்வளவு நேரம் கவலையா இருந்திங்க."என்று ஆனந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவராக மேலும் தொடர்ந்தார்.
"சரி இனிமேல் உங்கள கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டேன் போதுமா."என்றார் நிதானமாக.
அவர் அப்படி கூறவும் சரி என்பது போல் சாந்தகுமார் தன் தலையை அசைத்திருந்தார்.
சாகித்தியன் கார்டனில் மெல்ல நடைபோட்டுக்கொண்டிருந்தான்.அந்த இளை வெய்யிலில் இயற்கை தென்றல் அவனின் தேகத்தை வருடிக்கொண்டிருந்தது.
சாதனாவை பற்றி நினைக்க நினைக்க அவனுக்கு கோபம்தான் வந்தது.அதே நேரத்தில் அவளின் அழகையும் ரசித்தான் அவன்.
"என்ன மாப்ள ஒரே கணவுலயே இருக்கிங்க போல.நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன பலத்த யோசனை உங்களுக்கு?"என்று சந்தோஷ் சாகித்தியனிடம் கேட்டபடி அங்க போடப்பட்ட இருக்கையில் அமர்ந்தான்.
"நீங்க வேற ஏங்க மாமா?"என்று சலிப்புடன் கூறியபடி அவரின் அருகில் அமர்ந்தான் சாகித்தியன்.
அவன் அமர்ந்ததுதான் தாமதம் "சாகித்தியன்... கொஞ்சம் சீக்கிரம் இங்க வா?"தன் அன்னையின் சத்தமான பதட்டமான அழைப்பில் என்னவோ எதோ என்று வேகமாக வீட்டை நோக்கி ஓடினான் சாகித்தின்.
அவனை தொடர்ந்து சந்தோஷ் ஓடினான்."என்னமா?"என்றபடி வேக நடையுடன் வீட்டிற்குள் சாகித்தியன் வரவும்
"என்னன்னு தெரியல திடீரென்று பூர்ண மயங்கி விழுந்துட்டா. கொஞ்சம் என்ன ஏதுன்னு பாருப்பா. தவித்த குரலில் கூறினார் ஆனந்தி.
"என்ன சொல்றீங்க அக்கா என்ன ஆச்சு?"என்றபடி தன் சகோதரியின் அறைக்குள் சென்றான் சாகித்தியன்.
சந்தோஷ் பதட்டமாக அறைக்குள் செல்லும் போது ஆனந்தி தன் மகனின் அறையில் இருந்து வேகமாக ஸ்டத்ஸ்கோப்பை எடுத்துக் கொண்டு வந்து சாகித்தியனிடம் கொடுத்துவிட்டு தள்ளி நின்றார்.
பூர்ணாவின் வலதுகையின் மணிக்கட்டை பிடித்து நாடி பிடித்து பார்த்து விட்டு புன்னகையுடன் தன் மாமனை ஏறிட்டு பார்த்தவன் "வாழ்த்துக்கள் மாமா.நீங்க அப்பா ஆக போறிங்க."என்று சாகித்தியன் மகிழ்ச்சியாக சொல்லவும்தான் ஆனந்திக்கு நிம்மதியாகவும் அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மகிழ்ச்சியில்
சந்தோஷ்க்கு சில நிமிடங்கள் எல்லாம் பேச்சே வரவில்லை.
"நான்தான் அன்னைக்கே உங்ககிட்ட சொன்னனே?
இதழருவிய பொண்ணு பார்க்க வரப்போர நாள்ல அவ விடியற்காலையில் வீட்ட விட்டு போயிட்டான்னு சொன்னனே."என்று ராஜேந்திரனை முந்திக்கொண்டு பதிலளித்தார் நாச்சியார்.
நாச்சியார் தன்னை முந்திக்கொண்டு பதில் அளிக்கவும் ராஜேந்திரனுக்கு அப்பாட என்று இருந்தது.
"மேடம் நான் உங்ககிட்ட கேட்கர கேள்விக்கு மட்டும் நீங்க பதில் சொன்னா போதும்."என்று அழுத்தமாக நாச்சியாரை பார்த்து சொன்னவனின் பார்வை மீண்டும் ராஜேந்திரனிடத்தில் அழுத்தமாக பதிந்தது.
"ஓகே சார்.ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி.நாங்க கிளம்புறோம்."என்று அழுத்தமாக அவரை பார்த்து சொல்லிவிட்டு கார்த்திகேயனை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல எத்தனிக்கும் தருணத்தில்,
"கிளம்புங்க ஆனா இனி இந்த வீட்டுக்கு திரும்ப வராதிங்க."தன் கனீர் குரலில் சத்தமாக வார்த்தைகளை சிதறவிட்டிருந்தார் ராஜேந்திரன்.
இதழரசன் தன் இதழில் படரவிட்டிருந்த புன்னகையுடன் திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவ்வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
அவனின் பார்வை ஏதோ ஒன்றை உணர்த்திய போலவே தோன்றியது ராஜேந்திரனுக்கு.அது என்ன என்றுதான் சரியாக அவருக்கு பிடிபடவில்லை.
ஆனந்தி இல்லம்,
"என்னங்க நானும் ரொம்ப நேரமா உங்கள பார்க்கிரேன்.ஏன் என்கோட பேசமாட்டிங்கிரிங்க?"என்று தன் கணவனிடம் கவவையாக கேட்டார் ஆனந்தி.
"என்ன பேச சொல்ர ஆனந்தி? பேசறதுக்கு எதுவும் இல்லை."முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாது பேசியிருந்தார் சாந்தகுமார்.
'என்கிட்ட கலந்துக்காகம தன்னந்தனியா முடிவு எடுக்கர பழக்கம் எப்பதான் உன்ன விட்டு போகுமோ?'என்று ஆதங்கமாக மனதில் நினைத்தபடி மெளனமாக நீள்விருக்கையில் அமர்ந்திருந்தார் அவர்.
பெண் வீட்டில் நிச்சயத்தார்த்தையும் கையோட வைத்தது நல்லதுதான் என்றாலும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காது ஆனந்தியே அங்கு முடிவு எடுத்தது அவருக்கு சற்று வருத்தம்தான்.
"இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு என்கோட பேசாம இப்படி அமைதியா இருக்கிங்க?"பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு சன்ன குரலில் கேட்டார் ஆனந்தி.
"நீ நிச்சயதார்த்தம் இன்னைக்கே பண்ணிடலாம்னு சம்பந்திக்கிட்ட கேட்கறதக்கு முன்னாடி ஏன் என்கிட்ட ஒருவார்த்தை கேட்கல?"நிறுத்தி நிதானமாக கேட்டார் சாந்தகுமார்.
"இதுக்கா இவ்வளவு நேரம் கவலையா இருந்திங்க."என்று ஆனந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவராக மேலும் தொடர்ந்தார்.
"சரி இனிமேல் உங்கள கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டேன் போதுமா."என்றார் நிதானமாக.
அவர் அப்படி கூறவும் சரி என்பது போல் சாந்தகுமார் தன் தலையை அசைத்திருந்தார்.
சாகித்தியன் கார்டனில் மெல்ல நடைபோட்டுக்கொண்டிருந்தான்.அந்த இளை வெய்யிலில் இயற்கை தென்றல் அவனின் தேகத்தை வருடிக்கொண்டிருந்தது.
சாதனாவை பற்றி நினைக்க நினைக்க அவனுக்கு கோபம்தான் வந்தது.அதே நேரத்தில் அவளின் அழகையும் ரசித்தான் அவன்.
"என்ன மாப்ள ஒரே கணவுலயே இருக்கிங்க போல.நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன பலத்த யோசனை உங்களுக்கு?"என்று சந்தோஷ் சாகித்தியனிடம் கேட்டபடி அங்க போடப்பட்ட இருக்கையில் அமர்ந்தான்.
"நீங்க வேற ஏங்க மாமா?"என்று சலிப்புடன் கூறியபடி அவரின் அருகில் அமர்ந்தான் சாகித்தியன்.
அவன் அமர்ந்ததுதான் தாமதம் "சாகித்தியன்... கொஞ்சம் சீக்கிரம் இங்க வா?"தன் அன்னையின் சத்தமான பதட்டமான அழைப்பில் என்னவோ எதோ என்று வேகமாக வீட்டை நோக்கி ஓடினான் சாகித்தின்.
அவனை தொடர்ந்து சந்தோஷ் ஓடினான்."என்னமா?"என்றபடி வேக நடையுடன் வீட்டிற்குள் சாகித்தியன் வரவும்
"என்னன்னு தெரியல திடீரென்று பூர்ண மயங்கி விழுந்துட்டா. கொஞ்சம் என்ன ஏதுன்னு பாருப்பா. தவித்த குரலில் கூறினார் ஆனந்தி.
"என்ன சொல்றீங்க அக்கா என்ன ஆச்சு?"என்றபடி தன் சகோதரியின் அறைக்குள் சென்றான் சாகித்தியன்.
சந்தோஷ் பதட்டமாக அறைக்குள் செல்லும் போது ஆனந்தி தன் மகனின் அறையில் இருந்து வேகமாக ஸ்டத்ஸ்கோப்பை எடுத்துக் கொண்டு வந்து சாகித்தியனிடம் கொடுத்துவிட்டு தள்ளி நின்றார்.
பூர்ணாவின் வலதுகையின் மணிக்கட்டை பிடித்து நாடி பிடித்து பார்த்து விட்டு புன்னகையுடன் தன் மாமனை ஏறிட்டு பார்த்தவன் "வாழ்த்துக்கள் மாமா.நீங்க அப்பா ஆக போறிங்க."என்று சாகித்தியன் மகிழ்ச்சியாக சொல்லவும்தான் ஆனந்திக்கு நிம்மதியாகவும் அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மகிழ்ச்சியில்
சந்தோஷ்க்கு சில நிமிடங்கள் எல்லாம் பேச்சே வரவில்லை.