Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 87
- Thread Author
- #1
அத்தியாயம் 17.
"என்னங்க உங்களுக்கு நூறு ஆயுசு.இப்பதான் அக்கா நீங்க ஏன் வரலைன்னு என்கிட்ட கேட்டுட்டு இருந்தாங்க.அதற்குள்ள சஸ்பென்ஸா நீங்களே வந்துட்டிங்க."என்று சிரித்தபடி ஆனந்தி தன் கணவனிடம் கூறவும்
"நம்ம மகனுக்கு பொண்ணு பார்க்க போறோம்.நான் இல்லாம எப்படி?"தன் மனைவிக்கு பதிலளித்து விட்டு தன் அண்ணியின் புறம் திரும்பியவர் "அண்ணி எப்படி இருக்கிங்க?"என்று கேட்டிருக்க
"நான் நல்லா இருக்கேன் தம்பி.வீட்டுக்கு வரேன்னு ஒரு வார்த்தை கூட எங்கிட்ட சொல்லவே இல்லையே?"என்று செந்தாமரை குறைபட்டுக்கொள்ள
"அண்ணி நான் ஆனந்தி கிட்டயே நான் வீட்டுக்கு வரத சொல்லவே இல்ல.சரி உங்களுக்கு எல்லாம் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு சஸ்பென்ஸா வந்துட்டேன்."என்று அவர் கூறி முடிக்கும் தருவாயில்
"சித்தப்பா எப்படி இருக்கிங்க? நல்லா இருக்கிங்களா?"என்று மகிழ்ச்சியுடன் கேட்டபடி அவரை நெருங்கி இருந்தாள் பூர்ணா.
அவர் பூர்ணாவுக்கு பதில் கூறவதற்கு முன்பே சாகித்தியன் தன் தந்தையை ஆரத்தழுவி வெல்கம் அவர் ஹோம் என்று கூறி அவரை விடுத்து தள்ளி நின்றான்.
"எப்படி இருக்கிங்க மாமா?"என்று சந்தோஷ் கேட்க,
"நல்லா இருக்கேன் சந்தோஷ்."என்று அவர் கூறிமுடித்த நொடி
"ஏங்க நீங்க போய் சீக்கிரமா ரெடியாகி வாங்க.நாம நல்ல நேரத்துல பொண்ணு பார்க்க போகனும்."என்று தன் கணவனை துரிதப்படுத்தினார் ஆனந்தி.
"சந்தோஷ் நீங்க பூர்ணாவ கூட்டிட்டு உங்க கார்ல முன்னாடி மெதுவா போயிட்டு இருங்க.நாங்க பின்னாடி இன்னொரு காருல வந்து ஜாயின் பண்ணிக்கரோம்."என்று ஆனந்தி தன்மையாக சொல்லவும்
"சரிங்க அத்தை."என்று சந்தோஷ் பூர்ணாவை அழைத்துக்கொண்டு வீட்டின் வாயிலை கடக்கும் சமயத்தில்,
"மாப்ள நில்லுங்க.நானும் உங்க கூடவே வரேன்."என்றபடி செந்தாமரை அவர்களை நோக்கி நடை போடவும்,
"அக்கா நீங்க எங்ககோடயே வாங்க."என்று ஆனந்தி கூறவும்
"நீங்க குடும்பம் சகீதமா இன்னொரு காருல வாங்க.நான் என் மகளோட காருல போயிக்கிறேன்."என்று வெடுக்கென்று பிரித்து செந்தாமரை சொல்லவும் ஆனந்தியின் முகம் கூம்பி விட்டது.
ஆனந்தி என்றும் செந்தாமரையை தன் கூடப்பிறக்காத சகோதிரியாகத்தான் பார்க்கிறார்.
அவர் கூறியது சரியானதுதான் என்றாலும் சொன்ன விதம் மனதிற்கு நெருடலை தந்திருக்கிறது ஆனந்திக்கு.
சிறிது நேரத்திற்கு பிறகு இரண்டு மகிழுந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக பொண்ணு வீட்
டை நோக்கி சென்று கொண்டிருந்தன.
"என்னங்க உங்களுக்கு நூறு ஆயுசு.இப்பதான் அக்கா நீங்க ஏன் வரலைன்னு என்கிட்ட கேட்டுட்டு இருந்தாங்க.அதற்குள்ள சஸ்பென்ஸா நீங்களே வந்துட்டிங்க."என்று சிரித்தபடி ஆனந்தி தன் கணவனிடம் கூறவும்
"நம்ம மகனுக்கு பொண்ணு பார்க்க போறோம்.நான் இல்லாம எப்படி?"தன் மனைவிக்கு பதிலளித்து விட்டு தன் அண்ணியின் புறம் திரும்பியவர் "அண்ணி எப்படி இருக்கிங்க?"என்று கேட்டிருக்க
"நான் நல்லா இருக்கேன் தம்பி.வீட்டுக்கு வரேன்னு ஒரு வார்த்தை கூட எங்கிட்ட சொல்லவே இல்லையே?"என்று செந்தாமரை குறைபட்டுக்கொள்ள
"அண்ணி நான் ஆனந்தி கிட்டயே நான் வீட்டுக்கு வரத சொல்லவே இல்ல.சரி உங்களுக்கு எல்லாம் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு சஸ்பென்ஸா வந்துட்டேன்."என்று அவர் கூறி முடிக்கும் தருவாயில்
"சித்தப்பா எப்படி இருக்கிங்க? நல்லா இருக்கிங்களா?"என்று மகிழ்ச்சியுடன் கேட்டபடி அவரை நெருங்கி இருந்தாள் பூர்ணா.
அவர் பூர்ணாவுக்கு பதில் கூறவதற்கு முன்பே சாகித்தியன் தன் தந்தையை ஆரத்தழுவி வெல்கம் அவர் ஹோம் என்று கூறி அவரை விடுத்து தள்ளி நின்றான்.
"எப்படி இருக்கிங்க மாமா?"என்று சந்தோஷ் கேட்க,
"நல்லா இருக்கேன் சந்தோஷ்."என்று அவர் கூறிமுடித்த நொடி
"ஏங்க நீங்க போய் சீக்கிரமா ரெடியாகி வாங்க.நாம நல்ல நேரத்துல பொண்ணு பார்க்க போகனும்."என்று தன் கணவனை துரிதப்படுத்தினார் ஆனந்தி.
"சந்தோஷ் நீங்க பூர்ணாவ கூட்டிட்டு உங்க கார்ல முன்னாடி மெதுவா போயிட்டு இருங்க.நாங்க பின்னாடி இன்னொரு காருல வந்து ஜாயின் பண்ணிக்கரோம்."என்று ஆனந்தி தன்மையாக சொல்லவும்
"சரிங்க அத்தை."என்று சந்தோஷ் பூர்ணாவை அழைத்துக்கொண்டு வீட்டின் வாயிலை கடக்கும் சமயத்தில்,
"மாப்ள நில்லுங்க.நானும் உங்க கூடவே வரேன்."என்றபடி செந்தாமரை அவர்களை நோக்கி நடை போடவும்,
"அக்கா நீங்க எங்ககோடயே வாங்க."என்று ஆனந்தி கூறவும்
"நீங்க குடும்பம் சகீதமா இன்னொரு காருல வாங்க.நான் என் மகளோட காருல போயிக்கிறேன்."என்று வெடுக்கென்று பிரித்து செந்தாமரை சொல்லவும் ஆனந்தியின் முகம் கூம்பி விட்டது.
ஆனந்தி என்றும் செந்தாமரையை தன் கூடப்பிறக்காத சகோதிரியாகத்தான் பார்க்கிறார்.
அவர் கூறியது சரியானதுதான் என்றாலும் சொன்ன விதம் மனதிற்கு நெருடலை தந்திருக்கிறது ஆனந்திக்கு.
சிறிது நேரத்திற்கு பிறகு இரண்டு மகிழுந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக பொண்ணு வீட்
டை நோக்கி சென்று கொண்டிருந்தன.