Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 87
- Thread Author
- #1
அத்தியாயம் 16.
கடல் அன்னையின் மடியில் மெது மெதுவாக தன் ஒளியை குறைத்து மேற்கில் சாயச ஆரம்பித்திருந்தான் கதிரவன்.
விக்ரமனின் தனி கெஸ்ட் ஹவுஸ் அது,
ஒரு அறையின் மெத்தையில் மயக்கத்தில் படுத்திருந்தாள் இதழருவி.
அவளையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
'நீ எனக்கானவ.அதனாலதான் உனக்கு உன்னோட பழைய நினைவுகள் போயிருக்கு."என்று மனதில் நினைத்தபடி அவ்வறையில் இருந்த ஒற்றை நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தான் விக்ரம்.
அவனின் கைபேசி அவனின் கவனத்தை தன் பக்கம் இழுத்தது.
"சொல்லுங்க அப்பா?"என்றான்.
அப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ "அவன் நல்லா தேடி அலையட்டும்.அதுதான் எனக்கு வேனும்.அவன் கண்ணுமுன்னாடியே எனக்கும் இதழருவிக்கும் கல்யாணம் நடக்கனும்.
அதைப்பார்த்து அவன் துடிச்சு போகனும்.இரண்டு வருசமா அவன தோற்கடிக்க காத்திருந்தேன்.அதுக்கு சரியான நேரம் இப்பதான் கூடி வந்திருக்குப்பா."என்று வன்மமாக கூறிவிட்டு அழைப்பை கட்செய்துவிட்டு கைபேசியை தன் கால்சட்டையில் திணித்தவன் மெத்தையில் மயக்கத்தில் இருந்த இதழருவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவ்வறையிலிருந்து வெளியேறி கதவை சாற்றி லாக் செய்துவிட்டு அந்த கெஸ்ட் ஹவுஸ்லிருந்து வெளியேறி இருந்தான் விக்ரம்.
ராஜேந்திரன் இல்லம்,
"அம்மா இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்மா.கொஞ்ச நாள் போகட்டும்."என்று சாதனா தன் அன்னையிடம் சத்தமாக சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில்
"எதுக்கு நீயும் எவனயோ இழுத்துவிட்டு ஓடவா?"தன் தந்தையின் கணீர் குரலில் திடுக்கிட்டு போனவளாக சத்தம் வந்த திசையில் அவள் திரும்பி பார்க்க,மாடிப் படிகளிலிருந்து மெதுவாக இறங்கி வந்து கொண்டிருந்தார் ராஜேந்திரன்.
சாதனாவும் அவளின் அன்னையும் மரியாதை நிமித்தமாக தாங்கள் அமர்ந்திருந்த நீள்விருக்கையில் இருந்து மேலே எழுந்து நின்றார்கள்.
"அப்பா.. நான் ஒன்னும் அந்த இதழருவி மாறி கிடையாது.அது உங்களுக்கு நல்லா தெரியும்."என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன் தந்தையிடம் தன்மையாகவே பேசினாள்.
சாதானவிற்கு தன் தந்தை மேல் எப்பொழுதும் ஒரு மரியாதை உண்டு. அது நிச்சயமாக பயத்தினால் வந்த மரியாதை அல்ல பாசத்தினாள் வந்த மரியாதை.
"என்மேல நீ பாசம் வைச்சது உண்மைன்னா உனக்கு என்மேல் மரியாதை இருக்கரது உண்மைன்னா நான் பார்த்த மாப்பிள்ளைய நீ கல்யாணம் பண்ணிக்கனும்."அவர் கூறிய மறுநொடி
"நீங்க பார்த்திருக்கர மாப்பிள்ளைய நான் கல்யாணம் பண்ணிக்கரேன் அப்பா."என்று வெடுக்கென்று மகிழ்ச்சியே இல்லாத குரலில் கூறினாள் சாதனா.
ராஜேந்திரன் வெளியே செல்ல எத்தனிக்கும் தருணத்தில்,"என்னங்க நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்."என்ற தன் மனைவி நாச்சியார் குரலில் நின்றவர்,
"என்கிட்ட என்ன பேசனும்?"எரிச்சலாக வெளிவந்தது அவரின் வார்த்தைகள்.
"இன்னைக்கு நம்ம வீட்டுக்கு போலிஷ் அதிகாரி இதழருவிகிட்ட முக்கியமான விசயம் பேசனும்னு வீட்டுக்கு வந்தாரு.
நான் இதழருவி காணோம போன விசயத்தை சொல்லி அவள கண்டுபிடிக்க சொன்னேன்.
அவரும் பர்சனலா தேடிக் கண்டுபிடிக்கரேன்னு சொல்லிருக்காரு."என்று தயக்கத்துடன் அவர் கூறிமுடித்ததுதான் தாமதம்
டீபாயின் மீது அலங்காரத்துக்கு வைத்திருந்த சிறு பூஞ்சாடியை கோபத்துடன் தூக்கி சுவற்றில் விட்டெறிந்தார் ராஜேந்திரன்.
அது பெரிய சத்தத்துடன் சிறு சிறு துகள்களாக தரையில் சிதறியிருந்தது.
இவரின் செயலைக் கண்ட நாச்சியார்க்கு பயத்தில் அவரிடம் பேச நா எழவில்லை.
தன் தந்தையின் சினத்தால் சாதனாவும் சற்று திடுக்கிட்டுதான் போனாள்.
"நீ அந்த ஓடிபோனவள பத்தி பேசறது இதுவே கடைசியா இருக்கட்டும்.நான் ஏற்கனவே சொல்லிட்டேன் அந்த ஓடிபோனவ நமக்கு பிறக்கல.நமக்கு ஒரே பொண்ணு சாதனா மட்டும்தானு.
இனிமேல் அவள பத்தின பேச்ச நீ எடுத்தா.. என்னோட இன்னொரு முகத்த நீ பார்ப்ப.ஆனா அதுக்கப்புறம் நீ உயிரோட இருப்பியான்னு எனக்கு தெரியாது."என்று அழுத்தமாக தன் ஆள்காட்டி விரலை தன் மனைவியின் நெஞ்சில் அழுத்தி அவர் கூறியதை பார்த்த சாதனாவுக்கு தன் தந்தையை பார்க்க சற்று பயமாகதான் இருந்தது.
அவரின் அந்த அழுத்தமான எச்சரிக்கையில் நாச்சியார் ஒருநிமிடம் நடுங்கித்தான் போனார்.
"பார்த்து நடந்துக்கோ."என்று எச்சரிக்கை விடுத்துவிட்டு வேக நடையில் வீட்டின் வாயிலை கடந்தபின்புதான் நாச்சியார்க்கு மூச்சே வந்தது.
தளர்ந்து போனவராக நீள்விருக்கையில் தொப் என்று அமர்ந்தார் நாச்சியார்.அவரின் விழிகளில் கண்ணீர் தேங்கி இப்பவோ அப்பவோ கன்னத்தில் வழிய தயாராக இருந்தது.
"அம்மா தயவுசெய்து அப்பாகிட்ட இனிமேல் அவளபத்தி பேசாதிங்க.அவரோடு கோபத்தி பத்தி உங்களுக்கு நல்லா தெரியும்.இதுக்குமேல எனக்கு என்ன சொல்ரதுன்னு தெரியல."என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள் சாதனா.
வானில் தன் அதிகாரத்தை நிலை நாட்டியிருந்தான் சந்திரன்.
கடல் அன்னையின் மடியில் மெது மெதுவாக தன் ஒளியை குறைத்து மேற்கில் சாயச ஆரம்பித்திருந்தான் கதிரவன்.
விக்ரமனின் தனி கெஸ்ட் ஹவுஸ் அது,
ஒரு அறையின் மெத்தையில் மயக்கத்தில் படுத்திருந்தாள் இதழருவி.
அவளையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
'நீ எனக்கானவ.அதனாலதான் உனக்கு உன்னோட பழைய நினைவுகள் போயிருக்கு."என்று மனதில் நினைத்தபடி அவ்வறையில் இருந்த ஒற்றை நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தான் விக்ரம்.
அவனின் கைபேசி அவனின் கவனத்தை தன் பக்கம் இழுத்தது.
"சொல்லுங்க அப்பா?"என்றான்.
அப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ "அவன் நல்லா தேடி அலையட்டும்.அதுதான் எனக்கு வேனும்.அவன் கண்ணுமுன்னாடியே எனக்கும் இதழருவிக்கும் கல்யாணம் நடக்கனும்.
அதைப்பார்த்து அவன் துடிச்சு போகனும்.இரண்டு வருசமா அவன தோற்கடிக்க காத்திருந்தேன்.அதுக்கு சரியான நேரம் இப்பதான் கூடி வந்திருக்குப்பா."என்று வன்மமாக கூறிவிட்டு அழைப்பை கட்செய்துவிட்டு கைபேசியை தன் கால்சட்டையில் திணித்தவன் மெத்தையில் மயக்கத்தில் இருந்த இதழருவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவ்வறையிலிருந்து வெளியேறி கதவை சாற்றி லாக் செய்துவிட்டு அந்த கெஸ்ட் ஹவுஸ்லிருந்து வெளியேறி இருந்தான் விக்ரம்.
ராஜேந்திரன் இல்லம்,
"அம்மா இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்மா.கொஞ்ச நாள் போகட்டும்."என்று சாதனா தன் அன்னையிடம் சத்தமாக சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில்
"எதுக்கு நீயும் எவனயோ இழுத்துவிட்டு ஓடவா?"தன் தந்தையின் கணீர் குரலில் திடுக்கிட்டு போனவளாக சத்தம் வந்த திசையில் அவள் திரும்பி பார்க்க,மாடிப் படிகளிலிருந்து மெதுவாக இறங்கி வந்து கொண்டிருந்தார் ராஜேந்திரன்.
சாதனாவும் அவளின் அன்னையும் மரியாதை நிமித்தமாக தாங்கள் அமர்ந்திருந்த நீள்விருக்கையில் இருந்து மேலே எழுந்து நின்றார்கள்.
"அப்பா.. நான் ஒன்னும் அந்த இதழருவி மாறி கிடையாது.அது உங்களுக்கு நல்லா தெரியும்."என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன் தந்தையிடம் தன்மையாகவே பேசினாள்.
சாதானவிற்கு தன் தந்தை மேல் எப்பொழுதும் ஒரு மரியாதை உண்டு. அது நிச்சயமாக பயத்தினால் வந்த மரியாதை அல்ல பாசத்தினாள் வந்த மரியாதை.
"என்மேல நீ பாசம் வைச்சது உண்மைன்னா உனக்கு என்மேல் மரியாதை இருக்கரது உண்மைன்னா நான் பார்த்த மாப்பிள்ளைய நீ கல்யாணம் பண்ணிக்கனும்."அவர் கூறிய மறுநொடி
"நீங்க பார்த்திருக்கர மாப்பிள்ளைய நான் கல்யாணம் பண்ணிக்கரேன் அப்பா."என்று வெடுக்கென்று மகிழ்ச்சியே இல்லாத குரலில் கூறினாள் சாதனா.
ராஜேந்திரன் வெளியே செல்ல எத்தனிக்கும் தருணத்தில்,"என்னங்க நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்."என்ற தன் மனைவி நாச்சியார் குரலில் நின்றவர்,
"என்கிட்ட என்ன பேசனும்?"எரிச்சலாக வெளிவந்தது அவரின் வார்த்தைகள்.
"இன்னைக்கு நம்ம வீட்டுக்கு போலிஷ் அதிகாரி இதழருவிகிட்ட முக்கியமான விசயம் பேசனும்னு வீட்டுக்கு வந்தாரு.
நான் இதழருவி காணோம போன விசயத்தை சொல்லி அவள கண்டுபிடிக்க சொன்னேன்.
அவரும் பர்சனலா தேடிக் கண்டுபிடிக்கரேன்னு சொல்லிருக்காரு."என்று தயக்கத்துடன் அவர் கூறிமுடித்ததுதான் தாமதம்
டீபாயின் மீது அலங்காரத்துக்கு வைத்திருந்த சிறு பூஞ்சாடியை கோபத்துடன் தூக்கி சுவற்றில் விட்டெறிந்தார் ராஜேந்திரன்.
அது பெரிய சத்தத்துடன் சிறு சிறு துகள்களாக தரையில் சிதறியிருந்தது.
இவரின் செயலைக் கண்ட நாச்சியார்க்கு பயத்தில் அவரிடம் பேச நா எழவில்லை.
தன் தந்தையின் சினத்தால் சாதனாவும் சற்று திடுக்கிட்டுதான் போனாள்.
"நீ அந்த ஓடிபோனவள பத்தி பேசறது இதுவே கடைசியா இருக்கட்டும்.நான் ஏற்கனவே சொல்லிட்டேன் அந்த ஓடிபோனவ நமக்கு பிறக்கல.நமக்கு ஒரே பொண்ணு சாதனா மட்டும்தானு.
இனிமேல் அவள பத்தின பேச்ச நீ எடுத்தா.. என்னோட இன்னொரு முகத்த நீ பார்ப்ப.ஆனா அதுக்கப்புறம் நீ உயிரோட இருப்பியான்னு எனக்கு தெரியாது."என்று அழுத்தமாக தன் ஆள்காட்டி விரலை தன் மனைவியின் நெஞ்சில் அழுத்தி அவர் கூறியதை பார்த்த சாதனாவுக்கு தன் தந்தையை பார்க்க சற்று பயமாகதான் இருந்தது.
அவரின் அந்த அழுத்தமான எச்சரிக்கையில் நாச்சியார் ஒருநிமிடம் நடுங்கித்தான் போனார்.
"பார்த்து நடந்துக்கோ."என்று எச்சரிக்கை விடுத்துவிட்டு வேக நடையில் வீட்டின் வாயிலை கடந்தபின்புதான் நாச்சியார்க்கு மூச்சே வந்தது.
தளர்ந்து போனவராக நீள்விருக்கையில் தொப் என்று அமர்ந்தார் நாச்சியார்.அவரின் விழிகளில் கண்ணீர் தேங்கி இப்பவோ அப்பவோ கன்னத்தில் வழிய தயாராக இருந்தது.
"அம்மா தயவுசெய்து அப்பாகிட்ட இனிமேல் அவளபத்தி பேசாதிங்க.அவரோடு கோபத்தி பத்தி உங்களுக்கு நல்லா தெரியும்.இதுக்குமேல எனக்கு என்ன சொல்ரதுன்னு தெரியல."என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள் சாதனா.
வானில் தன் அதிகாரத்தை நிலை நாட்டியிருந்தான் சந்திரன்.