Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 87
- Thread Author
- #1
அத்தியாயம் 13.
அன்றிரவு அப்படியே கழிந்தது.
ராஜேந்திரன் இல்லம்,
"வீட்டு வேலையை முடிச்சிட்டு உட்காரதுக்குள்ள போதும் போதும்னு ஆயரது சாமி."என்று முனகியபடி நீள்விருக்கையில் அமர்ந்தார் நாச்சியார்.
கடிகாரத்தில் சரியாக பத்து மணி.
கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் 'என்ன இதழருவியோட கார் சவுண்ட் கேக்குது.இந்நேரம் மருத்துவமனையில்ல இருக்கனும்.
ஒருவேளை ஏதாவது மறந்து வெச்சுட்டு போயிருப்பாளோ?'தன் மனதில் நாச்சியார் மகளை பற்றி சிந்தனைகளை ஓட விட்டுக்கொண்டிருக்கும்பொழுதே,
எதையோ பறிகொடுத்தவள்போல சோர்ந்து போன முகத்துடன் தளர்ந்த நடையுடன் வீட்டிற்குள் வந்தாள் இதழருவி.
"இதழருவி உன் முகம் ஏன் சோர்ந்து போய் இருக்கு? உடம்புக்கு முடியலயாமா?"அக்கறையாக கேட்டபடி தன் மகளை நெருங்கியிருந்தார் நாச்சியார்.
அவர் பேசியது காதில் விழுந்ததா? விழவில்லையா அது அவளுக்குதான் வெளிச்சம்.
அவளின் சிந்தனையெல்லாம் எங்கயோ இருந்தது.
"இதழருவி என்னம்மா ஆச்சு?"என்று அவளின் தோள்களை பற்றி உலுக்கியபடி சத்தமாக நாச்சியார் கேட்கவும்தான் தன் சிந்தனைகளிலிருந்து வெளிப்பட்டவளாக தன் தாயை பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றுப் போனவளாய் அவரின் நெஞ்சில் சாய்ந்து விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.
அதில் பதறிப்போனவர் "என்ன ஆச்சும்மா?வா இப்படி வந்து சோபாவுல உட்காரு."என்று அவளை தன் நெஞ்சில் தலை சாய்த்திருந்தவளை விலக்கி நீள்விருக்கையில் அமரவைத்து தானும் அமர்ந்தார் நாச்சியார்.
அவர் நீள்விருக்கையில் அமர்ந்ததும் அவரின் மடியில் தன் முகத்தை புதைத்து மீண்டும் விம்மி விம்மி அழத்தொடங்கியிருந்தாள் இதழருவி.
அவளின் தலயை மென்மையாக வருடியபடி "ஹாஸ்பிடல் எதாவது பிரச்சனையாம்மா?எதுவா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லுட."என்று தன் மகளிடம் பரிவுடன் கேட்டார் நாச்சியார்.
"அம்மா.. ஹாஸ்பிடல்ல என்ன இனிமேல் வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்கம்மா.நான் எந்த தப்புமே செய்யல."என்று அழுகையின் இடையில் சொல்லிவிட்டு தற்பொழுது வெடித்து அழ ஆரம்பித்திருந்தாள்.
"என்னம்மா சொல்ற!"சிறு அதிர்வுடன் கேட்டார் நாச்சியார்.
"ஆமாம ம்மா.. காலையில ஹாஸ்பிடல் போய் பேசண்ட்க்கு ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு இருந்தேன்.
திடிரெனு எம்.டி.கூப்ட்டதா சொன்னாங்க.நானும் போனேன்.எம்.டி.இனிமேல் இங்க வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க.
நான் ரீசன் கேட்டேன்.அதற்கு அவங்க நான் இந்த ஹாஸ்பிடலோட எம்.டி. உனக்கு ரீசன் சொல்ல வேண்டிய அவசியமில்லைன்னு மூஞ்சியல அடிச்சமாறி சொல்லிட்டாரு அம்மா."என்று குலுங்கி குலுங்கி அழுதாள் இதழருவி.
"சரி அழாதடி.சும்மா எதுக்கெடுத்தாலும் அழறத முதல்ல நிறுத்து.இப்ப என்ன உனக்கு அந்த ஹாஸ்பிடல்ல வேலையில்லின்னா உனக்கு வேற எந்த ஹாஸ்பிடல்ல வேலை கிடைக்காத என்ன?
நிச்சயமா ஏதோ ஒரு ஹாஸ்பிடல்ல நீ படிச்ச படிப்புக்கும் உன் திறமைக்க ஏத்த வேலை கிடைக்கும்.சும்மா கண்ண கசிக்கிட்டு இருக்காம மூஞ்சிய கழுவிவிட்டு இந்த பேப்ரல நீ படிச்ச படிப்ப்புக்கு விளம்பரம் எதாவது வந்திருக்கானு பாரு.
அதைவிட்டுட்டு சின்ன குழந்தைமாறி அழுதுட்டு.என் பொண்ணு இப்படி அழறது எனக்கு சுத்தமா பிடிக்கல."என்று கறார் பேர் வழியாக அவர் கூறவும்தான் அவரின் மடியில் புதைத்திருந்த தன் முகத்தை வெளியே எடுத்து நிமிர்ந்து நீள்விருக்கையில் சாய்ந்து அமர்ந்தவள் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரை தன் ஆள்காட்டி விரலை கொண்டு சுண்டி விட்டாள் இதழருவி.
இதழருவி இப்படிதான்.எளிதில் உணர்ச்சி வசப்படுபவள்.
"சரிம்மா.நான் போய் மூஞ்சிய கழுவிவிட்டு வரேன்."என்று தெளிவாக பேசியவள் தன் அறையை நோக்கி நடை போட்டிருந்தாள்.
அன்றிரவு அப்படியே கழிந்தது.
ராஜேந்திரன் இல்லம்,
"வீட்டு வேலையை முடிச்சிட்டு உட்காரதுக்குள்ள போதும் போதும்னு ஆயரது சாமி."என்று முனகியபடி நீள்விருக்கையில் அமர்ந்தார் நாச்சியார்.
கடிகாரத்தில் சரியாக பத்து மணி.
கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் 'என்ன இதழருவியோட கார் சவுண்ட் கேக்குது.இந்நேரம் மருத்துவமனையில்ல இருக்கனும்.
ஒருவேளை ஏதாவது மறந்து வெச்சுட்டு போயிருப்பாளோ?'தன் மனதில் நாச்சியார் மகளை பற்றி சிந்தனைகளை ஓட விட்டுக்கொண்டிருக்கும்பொழுதே,
எதையோ பறிகொடுத்தவள்போல சோர்ந்து போன முகத்துடன் தளர்ந்த நடையுடன் வீட்டிற்குள் வந்தாள் இதழருவி.
"இதழருவி உன் முகம் ஏன் சோர்ந்து போய் இருக்கு? உடம்புக்கு முடியலயாமா?"அக்கறையாக கேட்டபடி தன் மகளை நெருங்கியிருந்தார் நாச்சியார்.
அவர் பேசியது காதில் விழுந்ததா? விழவில்லையா அது அவளுக்குதான் வெளிச்சம்.
அவளின் சிந்தனையெல்லாம் எங்கயோ இருந்தது.
"இதழருவி என்னம்மா ஆச்சு?"என்று அவளின் தோள்களை பற்றி உலுக்கியபடி சத்தமாக நாச்சியார் கேட்கவும்தான் தன் சிந்தனைகளிலிருந்து வெளிப்பட்டவளாக தன் தாயை பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றுப் போனவளாய் அவரின் நெஞ்சில் சாய்ந்து விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.
அதில் பதறிப்போனவர் "என்ன ஆச்சும்மா?வா இப்படி வந்து சோபாவுல உட்காரு."என்று அவளை தன் நெஞ்சில் தலை சாய்த்திருந்தவளை விலக்கி நீள்விருக்கையில் அமரவைத்து தானும் அமர்ந்தார் நாச்சியார்.
அவர் நீள்விருக்கையில் அமர்ந்ததும் அவரின் மடியில் தன் முகத்தை புதைத்து மீண்டும் விம்மி விம்மி அழத்தொடங்கியிருந்தாள் இதழருவி.
அவளின் தலயை மென்மையாக வருடியபடி "ஹாஸ்பிடல் எதாவது பிரச்சனையாம்மா?எதுவா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லுட."என்று தன் மகளிடம் பரிவுடன் கேட்டார் நாச்சியார்.
"அம்மா.. ஹாஸ்பிடல்ல என்ன இனிமேல் வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்கம்மா.நான் எந்த தப்புமே செய்யல."என்று அழுகையின் இடையில் சொல்லிவிட்டு தற்பொழுது வெடித்து அழ ஆரம்பித்திருந்தாள்.
"என்னம்மா சொல்ற!"சிறு அதிர்வுடன் கேட்டார் நாச்சியார்.
"ஆமாம ம்மா.. காலையில ஹாஸ்பிடல் போய் பேசண்ட்க்கு ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு இருந்தேன்.
திடிரெனு எம்.டி.கூப்ட்டதா சொன்னாங்க.நானும் போனேன்.எம்.டி.இனிமேல் இங்க வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க.
நான் ரீசன் கேட்டேன்.அதற்கு அவங்க நான் இந்த ஹாஸ்பிடலோட எம்.டி. உனக்கு ரீசன் சொல்ல வேண்டிய அவசியமில்லைன்னு மூஞ்சியல அடிச்சமாறி சொல்லிட்டாரு அம்மா."என்று குலுங்கி குலுங்கி அழுதாள் இதழருவி.
"சரி அழாதடி.சும்மா எதுக்கெடுத்தாலும் அழறத முதல்ல நிறுத்து.இப்ப என்ன உனக்கு அந்த ஹாஸ்பிடல்ல வேலையில்லின்னா உனக்கு வேற எந்த ஹாஸ்பிடல்ல வேலை கிடைக்காத என்ன?
நிச்சயமா ஏதோ ஒரு ஹாஸ்பிடல்ல நீ படிச்ச படிப்புக்கும் உன் திறமைக்க ஏத்த வேலை கிடைக்கும்.சும்மா கண்ண கசிக்கிட்டு இருக்காம மூஞ்சிய கழுவிவிட்டு இந்த பேப்ரல நீ படிச்ச படிப்ப்புக்கு விளம்பரம் எதாவது வந்திருக்கானு பாரு.
அதைவிட்டுட்டு சின்ன குழந்தைமாறி அழுதுட்டு.என் பொண்ணு இப்படி அழறது எனக்கு சுத்தமா பிடிக்கல."என்று கறார் பேர் வழியாக அவர் கூறவும்தான் அவரின் மடியில் புதைத்திருந்த தன் முகத்தை வெளியே எடுத்து நிமிர்ந்து நீள்விருக்கையில் சாய்ந்து அமர்ந்தவள் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரை தன் ஆள்காட்டி விரலை கொண்டு சுண்டி விட்டாள் இதழருவி.
இதழருவி இப்படிதான்.எளிதில் உணர்ச்சி வசப்படுபவள்.
"சரிம்மா.நான் போய் மூஞ்சிய கழுவிவிட்டு வரேன்."என்று தெளிவாக பேசியவள் தன் அறையை நோக்கி நடை போட்டிருந்தாள்.