- Thread Author
- #1
நேசங்களுடன் நித்திலன்!!!!
"கண்மணி!!!" இத்தனை வருடங்கள் கடந்த பின்பும் அவனின் அழைப்பில் கொட்டிக் கிடந்த நேசத்தில் அவளுள் அதே சிலிர்ப்பு!!!
"கண்மணி!!! லைன்ல இருக்கியா டா???" என்றவனின் குரலில் லேசாய் பதற்றம் கூடியிருந்ததோ??
"இருக்கேன் நித்தி!!! எனக்கு ஒன்னும் இல்லை பதறாதீங்க" என அவனைப் புரிந்தவளாய் உடனடியாக பதிலளித்தாள் அவனின் கண்மணி.
அவன் ஆசுவாசமாக பெருமூச்சொன்றை வெளியிடுவதை உணர்ந்து கொண்டவளின் முகத்தில் ஒரு புன்முறுவல் .
"இன்னைக்கு லோன் பேப்பர் சம்மிட் பண்ணதுல கொஞ்சம் குழப்பம் டா.. சோ அதை சரி பார்த்திட்டு கிளம்ப இன்னும் ஹாஃப் அன் ஹவர் ஆகிடும்.. நான் வேணும்னா மாமாவை வரச் சொல்லவா?? அவர் கூட கிளம்பிடுறியா நீ??" நிறைமாதத்தில் இருக்கும் மனைவியைத் தனியாய் காத்திருக்க வைக்கிறோமே எனும் பரிதவிப்பு அவன் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.
"அதெல்லாம் வேண்டாம் நித்தி!! இங்க இப்போதான் பேக்கர்ஸ் வந்து ஆல்மோஸ்ட் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு கிளம்பினாங்க.. அதைச் சொல்லத் தான் உங்களுக்கு கால் பண்ணேன்"
"இப்படி டெலிவரி டைம்ல டிரான்ஸ்ஃபர் கிடைக்கும்னு நான் நினைச்சே பார்க்கலை டா.. நானும் இதை போஸ்ட்போன் பண்ண எவ்வளவோ டிரை பண்ணேன்.. ப்ச் முடியலை.. அதான் இந்த டைம்ல உன்னை அலைய வைக்க வேண்டாம்னு உங்க வீட்டுல விட்டுட்டு போறேன்.. இருந்துப்ப தான???" என கடந்த ஒரு மாதமாய் கேட்டுக் கேட்டு சலித்துப் போன அதே கேள்வியை மீண்டும் அவளிடம் கேட்டவனின் குரலில், முதல் முறை கேட்டது போல இன்றளவும் கலக்கமே வியாபித்திருந்தது.
"நித்தி!!! பேங்க் மேனேஜரா இருக்கப்போ டிரான்ஸ்ஃபர் எல்லாம் யூஸ்வல் தானே?? இதுக்கு ஏன் இவளோ ஃபீல் பண்றீங்க நீங்க?? எப்படியும் ஒன்பதாம் மாசம் வளைகாப்பு போட்டா அம்மா வீட்டுல தான இருக்கணும்.. நான் கொஞ்சம் முன்னாடி எட்டாம் மாசமே போறேன்.. அவ்ளோதான்.. நீங்க இதையே யோசிக்காம போய் வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க.. டின்னர் அங்க தான்னு அம்மா சொல்லிட்டாங்க" என எதார்த்தத்தை அவனுக்கு புரிய வைக்க முயன்றவள், இதற்கு மேல் பேசினால் அவன் இதையே நினைத்து வருந்துவான் என்றுணர்ந்து அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
திருமணம் முடிந்து இதோ ஐந்து வருடங்கள் கடந்து விட்டது. இன்றளவும் அவனின் நேசத்தில் கடுகளவு கூட மாற்றம் இல்லை. சொல்லப்போனால், நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டு தான் போகிறது என்று அனுபவத்தில் உணர்ந்து கொண்ட கண்மணிக்கு, இப்படி ஒரு வாழ்க்கைத் துணையை தனக்குத் தேடிக் கொடுத்த பெற்றவர்களுக்கும் அந்த கடவுளுக்கும் நன்றி சொல்வதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.
நித்திலன் வரும் வரையிலும் அப்படியே அமர்ந்திருக்கப் பிடிக்காமல் மீண்டும் அனைத்தும் சரியாக எடுத்து வைத்தாகிற்றா என்று பார்த்து வர எண்ணிக் கிளம்பினாள்.
அது வாடகை வீடு தான். இவர்கள் திருமணம் முடிந்த கையோடு இங்கு தான் வந்து குடியேறியிடுக்க, அவ்வீட்டின் ஒவ்வொரு இடமும் அவர்களின் காதல் கதையை அழகாய் எடுத்துச் சொல்லும். அப்படி ஒரு நிறைவான வாழ்க்கையைத் தான் அவர்கள் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். எனவே இத்தனை அழகான நினைவுகளை தாங்கி நிற்கும் இந்த வீட்டினை விட்டுச் செல்வது கண்மணிக்கு மிகவும் கடினமாக இருந்தது.
வருங்காலத்தில் இந்த வீட்டை, வீட்டின் உரிமையாளர்கள் விற்கும் எண்ணத்திற்கு வந்தால், தாங்களே வாங்கிக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டே வந்தவள் அவர்களின் படுக்கையறைக்கு வந்திருந்தாள்.
அங்கே அவர்களின் உடமையெல்லாம் நித்திலனே எடுத்து வைத்து விட்டு போயிருக்க, லாஃப்ட்டில் இருந்த சில பைகளை மட்டும் அந்த 'பாஸ்ட் மூவர்ஸ்' கம்பெனியில் இருந்து வந்த ஆட்கள் கீழே எடுத்து வைத்து விட்டுப் போயிருந்தனர்.
அதில் சில பைகளில் நித்திலனின் பழைய புத்தகங்கள் மற்றும் அவன் சிறுவயதில் வாங்கிய சில பரிசுக் கோப்பைகள் அடங்கியிருக்க, அதற்கு அருகே அழுக்குப் படாமல் இருக்க பாலீத்தின் பை ஒன்றில் சுற்றப்பட்டிருந்த சூட்கேஸ் ஒன்று பெண்ணவளின் கவனத்தை ஈர்த்தது.
"இந்த சூட்கேஸ்க்கு மட்டும் என்னவாம் இவளோ பாதுகாப்பு??" என நினைத்தவளின் புருவம் மேலேற, அந்த பாலீத்தின் பையைப் பிரித்து உள்ளிருந்த சூட்கேஸை வெளியில் எடுத்தாள்.
அது ஒரு நம்பர்லாக் வகை சூட்கேஸாக இருக்க, "என்ன நம்பர் போட்டு வச்சிருப்பாங்க??" என தாடையைத் தடவிக் கொண்டே யோசித்தவள், முதலில் அவனின் பிறந்த நாள் தேதியைப் போட, அது திறக்கவில்லை.
"வேற எந்த நம்பர் போடுறது??" என தனக்குள் கேட்டுக் கொண்ட அடுத்த முயற்சியாக அவனின் கைபேசி கடவு எண்ணை அழுத்திப் பார்க்க, அதுவும் தவறாகிப் போனது.
"அட என்னடா இது??" என நொந்து கொண்டவள், கடைசி முயற்சியாக கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல் அவளின் பிறந்தநாள் எண்ணைப் போட, அது சட்டென திறந்து கொண்டு அவளை திகைக்கச் செய்தது.
"இந்த சூட்கேஸை நான் கல்யாணம் ஆகி வந்ததுல இருந்து பார்த்ததே இல்லை.. ஆனா இதுக்கு என் பெர்த் டேட்டை நம்பர் லாக்ல செட் பண்ணி வச்சிருக்காங்க இந்த நித்தி!!" என ஆச்சரியப்பட்டவள், உள்ளே என்ன இருக்கிறது என பார்க்கத் தன்னை மீறிய ஆர்வத்துடன் அதைத் திறந்திருந்தாள்.
உள்ளே, அவள் கனவிலும் எதிர்பாரா வகையில் நித்திலனின் காதல் சின்னங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷமாய், பாதுகாப்பாக அதற்குள் அடங்கியிருந்தது.
"அடப்பாவி!! சில்லுனு ஒரு காதல் படத்துல வர மாதிரி எனக்கு முன்னாடி வேற ஒருத்தி இருக்காளா???" என அந்த சூட்கேஸில் அடங்கியிருந்தத ஒரு பெண்ணின் துப்பட்டா, ஒற்றைக்கால் கொலுசு, சில மிட்டாய் கவர்கள் என ஒவ்வொன்றாய் கண்டவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அதிலும் அனைத்திற்கும் அருகில், உடைந்த கண்ணாடி வளையல்களைக் கொண்டு அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த டைரி அவளின் கவனத்தைக் கவர,
"நித்தி!! இப்படி ஒரு நிலமையில என்னைய கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே??? லவ் எல்லாம் பண்ணா அவங்க நினைவுச் சின்னத்தை எல்லாம் என் கண்ணுல படாம ஒளிச்சு வச்சிருக்கலாம் தான?? உங்கமேல கோவம் கூட பட முடியலை" என்றவளின் மனம் ஒரு நிலையில் அல்லாமல் திண்டாடித் தவித்தது.
நிச்சயம் கணவனின் அன்பின் மீது துளியளவும் சந்தேகம் இல்லை. நித்திலன் அவளுடன் வாழ்ந்த வாழ்க்கை பொய்யில்லை என அவள் அறிந்திருந்தாலும் தனக்கு முன் அவன் வாழ்வில் ஒருத்தி இருந்திருக்கிறாள் என்பதை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
'என் நித்தி!! எனக்கு மட்டும் தான்!! இது அவர் வாழ்க்கையில முடிஞ்சு போனது.. இனி நான் மட்டும் தான் அவருக்கு' என மனதில் அதை நன்றாய் பதித்துக் கொண்டவள், தடதடக்கும் மனதுடன் அந்த டைரியைத் திறந்து முதல் பக்கத்தைப் பார்க்க அவள் கண்கள் அதிர்ச்சியில் சாசர் போல் விரிந்தது.
"நித்தி!!!!" என்றவளுக்கு உண்மையில் அந்தநொடியை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் கண்கள் கலங்க அப்படியே அமர்ந்து விட்டாள்.
இன்னமும் அவளால் தன் கண்களால் கண்டதை நம்பமுடியவில்லை.
'எப்படி???' எனும் ஒரே கேள்வி தான் அவள் மனதெங்கும் வியாபித்திருக்க, நடுங்கும் கரங்களுடன் மீண்டும் அந்தப் பக்கத்தை திறந்து பார்வையை அதில் பதித்தவளுக்கு மீண்டும் ஆனந்தத்தில் கண்ணீர் வரும் போலானது.
ஏனெனில் அங்கே இருந்தது அவளின் வரைபடம் அல்லவா??? 'கண்மணி' எனும் அவள் பெயரை மட்டுமே கொண்டு அவளின் முகத்தை அழகாய் வரைந்து வைத்திருந்தான் அவளின் காதல் கணவன் நித்திலன்.
"நிஜமாவே நான் தானா???" என மீண்டும் நம்பமாட்டாமல் அவன் மறைத்து வைத்திருந்த காதலை கண்டுகொள்ள அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டியவளுக்கு உண்மையில் அவனின் காதலைக் கண்டு பிரமிப்பாக இருந்தது.
"அப்போ நான் +2 படிக்கிறப்போ இருந்து என்னை லவ் பண்றீங்களா நித்தி நீங்க???" என மனதோடு அவனிடம் கேட்டுக் கொண்டவள்,
அங்கு அவனின் எழுத்து வழியாக, அவளின் கடந்தகாலத்திற்கு காலப்பயணம் மேற்கொண்டு வந்துவிட்டாள்.
அங்கு அவன் சேமித்து வைத்திருந்த அவளின் துப்பட்டா முதற்கொண்டு ஒவ்வொரு பொருளும் எப்போது எப்படி அவனிடம் வந்து சேர்ந்தது என அவனின் எழுத்தின் வாயிலாக அறிந்து கொண்டவளுக்கு, 'இப்படி பைத்தியக்காரத் தனமா ஒருத்தன் நம்ம பின்னாடியே இத்தனை வருஷம் சுத்திருக்கான்.. அதுகூட தெரியாம எப்படி டி இருந்த??? மக்கு மக்கு!!' என தன் மீதே கோபம் கொண்டு தலையில் தட்டிக் கொண்டாள்.
தொடர்ந்து, ஆசையும் ஆர்வமும் போட்டிபோட அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டியவளுக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல் அந்த டைரியில் இருந்த ஒவ்வொரு பக்கங்களும் அவளின் மீதான நித்திலன் மாசில்லா காதல் பெண்ணவள் மீது மழையாய்ப் பொழிந்து அவளைக் குளிர்வித்தது.
அதுவும் கடைசியாக அவளின் பரீட்சை முடிந்த இறுதி நாள், அவர்கள் குடும்பத்துடன் அவ்வூரை விட்டுக் கிளம்பிய தினத்தில், நித்திலனின் மனநிலையை படித்துத் தெரிந்து கொண்டவளுக்கு, தன்னைப்போல் கண்கள் கலங்க, "ஏன் நித்தி?? சொல்லிருக்களாமே?? ஏன் இப்படி தனியா கஷ்டப்பட்டீங்க??" என எப்போதோ அவன் அடைந்த துயருக்கு இப்போது கண்ணீர் சிந்தினாள் அவனின் கண்மணி.
நேரம் போவது தெரியாமல் அவள் அந்த டைரியிலே மூழ்கியிருக்க, வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நித்திலன் கதவைத் தட்டித் தட்டி பார்த்துவிட்டு அவள் திறக்கவில்லை என்றதும் அவளுக்கு என்னாயிற்றோ என பயந்துபோய் தன்னிடம் உள்ள சாவி கொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்தவன்,
"கண்மணி!!! டேய்!! கண்மணி!! எங்கடா இருக்க??" என பரிதவிப்புடன் அவளை அழைத்துக் கொண்டே வீட்டின் ஒவ்வொரு இடமாய் அவளைத் தேடியவன், இறுதியாக அவர்களின் படுக்கையறைக்கு வர, அங்கே அவன் வந்ததைக் கூட உணர முடியாமல் அவன் மறைத்து வைத்திருந்த பொக்கிஷத்தின் மத்தியில் சமைந்து போய் அமர்ந்திருந்தாள் அவனின் கண்மணி.
"பார்த்துவிட்டாள்!!! அனைத்தையும் பார்த்துவிட்டாள்!!!" எனக் கண்டதும் புரிந்து கொண்டவனின் மனம் எவ்வாறு உணர்கிறது என அவனாலேயே விளங்கிக் கொள்ள முடியவில்லை.
கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்களாக யாருக்கும் தெரியாமல் அவன் மட்டுமே நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த சுகமான பாரம் ஒன்று இன்று விடுதலை அடைந்துவிட்டது. ஆனால் அதை நினைத்து மகிழ்ச்சி அடையக் கூட அவனின் மரத்துவிட்ட மூளை செயல்படவில்லை.
இதை அனைத்தையும் கண்ட பின் அவனின் கண்மணியின் மனம் எவ்வாறு உணர்கிறது என்பதிலே அவனின் எண்ணம் சுழல, மெதுவாய் எட்டு வைத்து அவனின் மனையாளை நெருங்கி மண்டியிட்டு கீழே அமார்ந்தவன், "கண்மணி!!!" என பெயருக்கே வலித்து விடும் போல் மிகவும் மென்மையாய் அழைக்க,
அவளிடம் பதிலில்லை.
"டேய் கண்மணி!!" என அவளின் தோளைத் தொட்டு அழைத்த பின்பு தான் அவளுக்கு ஸ்மரணையே வர, அவளின் நித்தி வந்துவிட்டதே அப்போது தான் அவளின் புத்திக்கு உரைத்தது.
"நித்தி!!!" என அடுத்த நொடி அவனைப் பாய்ந்து கட்டிக் கொண்டவள், எதற்கு அழுகிறோம் என்றே தெரியாமல் அவன் மார்பில் முகத்தைப் பதித்து அழுது தீர்க்க,
அவளுக்கு என்னவாகிற்று எனப் புரியாமல், அவள் அழுகையையும் தாங்கமாட்டாமல், "கண்மணி!!! என்னைப் பாரு!! என்னடா?? எதுக்குமா இந்த அழுகை.. ரிலாக்ஸ்!! ஒன்னும் இல்லை.. நீ அழுது உள்ள பேபியையும் பயம் காட்டாத டா.." என ஆதரவாய் அவள் முதுகை நீவி விட்டுக் கொண்டே நித்திலன் பேச, கொஞ்சம் கொஞ்சமாக அவளின் அழுகை சமன்பட்டது.
இன்னும் லேசாய் விசும்பல் இருக்க, மெதுவாய் அவன் மார்பில் இருந்த முகத்தை நிமிர்த்தி நித்திலனின் முகம் பார்த்தவள், "ஏன்????" ஒரே கேள்வி தான் அவளிடம்.
'ஏன் என்னிடம் முன்பே கூறவில்லை???' என்கிற அவளின் ஆதங்கம் அவனுக்கு நன்றாய் புரிந்தாலும், அவனிடம் அதே அமைதியான புன்னகை.
"ஏன் சொல்லணும்???" என விளையாட்டாய், அழுது சிவந்திருந்த அவளின் மூக்கைப் பிடித்து இழுத்தபடி அவன் இலகுவாகக் கேட்க,
"கண்மணி!!!" இத்தனை வருடங்கள் கடந்த பின்பும் அவனின் அழைப்பில் கொட்டிக் கிடந்த நேசத்தில் அவளுள் அதே சிலிர்ப்பு!!!
"கண்மணி!!! லைன்ல இருக்கியா டா???" என்றவனின் குரலில் லேசாய் பதற்றம் கூடியிருந்ததோ??
"இருக்கேன் நித்தி!!! எனக்கு ஒன்னும் இல்லை பதறாதீங்க" என அவனைப் புரிந்தவளாய் உடனடியாக பதிலளித்தாள் அவனின் கண்மணி.
அவன் ஆசுவாசமாக பெருமூச்சொன்றை வெளியிடுவதை உணர்ந்து கொண்டவளின் முகத்தில் ஒரு புன்முறுவல் .
"இன்னைக்கு லோன் பேப்பர் சம்மிட் பண்ணதுல கொஞ்சம் குழப்பம் டா.. சோ அதை சரி பார்த்திட்டு கிளம்ப இன்னும் ஹாஃப் அன் ஹவர் ஆகிடும்.. நான் வேணும்னா மாமாவை வரச் சொல்லவா?? அவர் கூட கிளம்பிடுறியா நீ??" நிறைமாதத்தில் இருக்கும் மனைவியைத் தனியாய் காத்திருக்க வைக்கிறோமே எனும் பரிதவிப்பு அவன் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.
"அதெல்லாம் வேண்டாம் நித்தி!! இங்க இப்போதான் பேக்கர்ஸ் வந்து ஆல்மோஸ்ட் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு கிளம்பினாங்க.. அதைச் சொல்லத் தான் உங்களுக்கு கால் பண்ணேன்"
"இப்படி டெலிவரி டைம்ல டிரான்ஸ்ஃபர் கிடைக்கும்னு நான் நினைச்சே பார்க்கலை டா.. நானும் இதை போஸ்ட்போன் பண்ண எவ்வளவோ டிரை பண்ணேன்.. ப்ச் முடியலை.. அதான் இந்த டைம்ல உன்னை அலைய வைக்க வேண்டாம்னு உங்க வீட்டுல விட்டுட்டு போறேன்.. இருந்துப்ப தான???" என கடந்த ஒரு மாதமாய் கேட்டுக் கேட்டு சலித்துப் போன அதே கேள்வியை மீண்டும் அவளிடம் கேட்டவனின் குரலில், முதல் முறை கேட்டது போல இன்றளவும் கலக்கமே வியாபித்திருந்தது.
"நித்தி!!! பேங்க் மேனேஜரா இருக்கப்போ டிரான்ஸ்ஃபர் எல்லாம் யூஸ்வல் தானே?? இதுக்கு ஏன் இவளோ ஃபீல் பண்றீங்க நீங்க?? எப்படியும் ஒன்பதாம் மாசம் வளைகாப்பு போட்டா அம்மா வீட்டுல தான இருக்கணும்.. நான் கொஞ்சம் முன்னாடி எட்டாம் மாசமே போறேன்.. அவ்ளோதான்.. நீங்க இதையே யோசிக்காம போய் வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க.. டின்னர் அங்க தான்னு அம்மா சொல்லிட்டாங்க" என எதார்த்தத்தை அவனுக்கு புரிய வைக்க முயன்றவள், இதற்கு மேல் பேசினால் அவன் இதையே நினைத்து வருந்துவான் என்றுணர்ந்து அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
திருமணம் முடிந்து இதோ ஐந்து வருடங்கள் கடந்து விட்டது. இன்றளவும் அவனின் நேசத்தில் கடுகளவு கூட மாற்றம் இல்லை. சொல்லப்போனால், நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டு தான் போகிறது என்று அனுபவத்தில் உணர்ந்து கொண்ட கண்மணிக்கு, இப்படி ஒரு வாழ்க்கைத் துணையை தனக்குத் தேடிக் கொடுத்த பெற்றவர்களுக்கும் அந்த கடவுளுக்கும் நன்றி சொல்வதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.
நித்திலன் வரும் வரையிலும் அப்படியே அமர்ந்திருக்கப் பிடிக்காமல் மீண்டும் அனைத்தும் சரியாக எடுத்து வைத்தாகிற்றா என்று பார்த்து வர எண்ணிக் கிளம்பினாள்.
அது வாடகை வீடு தான். இவர்கள் திருமணம் முடிந்த கையோடு இங்கு தான் வந்து குடியேறியிடுக்க, அவ்வீட்டின் ஒவ்வொரு இடமும் அவர்களின் காதல் கதையை அழகாய் எடுத்துச் சொல்லும். அப்படி ஒரு நிறைவான வாழ்க்கையைத் தான் அவர்கள் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். எனவே இத்தனை அழகான நினைவுகளை தாங்கி நிற்கும் இந்த வீட்டினை விட்டுச் செல்வது கண்மணிக்கு மிகவும் கடினமாக இருந்தது.
வருங்காலத்தில் இந்த வீட்டை, வீட்டின் உரிமையாளர்கள் விற்கும் எண்ணத்திற்கு வந்தால், தாங்களே வாங்கிக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டே வந்தவள் அவர்களின் படுக்கையறைக்கு வந்திருந்தாள்.
அங்கே அவர்களின் உடமையெல்லாம் நித்திலனே எடுத்து வைத்து விட்டு போயிருக்க, லாஃப்ட்டில் இருந்த சில பைகளை மட்டும் அந்த 'பாஸ்ட் மூவர்ஸ்' கம்பெனியில் இருந்து வந்த ஆட்கள் கீழே எடுத்து வைத்து விட்டுப் போயிருந்தனர்.
அதில் சில பைகளில் நித்திலனின் பழைய புத்தகங்கள் மற்றும் அவன் சிறுவயதில் வாங்கிய சில பரிசுக் கோப்பைகள் அடங்கியிருக்க, அதற்கு அருகே அழுக்குப் படாமல் இருக்க பாலீத்தின் பை ஒன்றில் சுற்றப்பட்டிருந்த சூட்கேஸ் ஒன்று பெண்ணவளின் கவனத்தை ஈர்த்தது.
"இந்த சூட்கேஸ்க்கு மட்டும் என்னவாம் இவளோ பாதுகாப்பு??" என நினைத்தவளின் புருவம் மேலேற, அந்த பாலீத்தின் பையைப் பிரித்து உள்ளிருந்த சூட்கேஸை வெளியில் எடுத்தாள்.
அது ஒரு நம்பர்லாக் வகை சூட்கேஸாக இருக்க, "என்ன நம்பர் போட்டு வச்சிருப்பாங்க??" என தாடையைத் தடவிக் கொண்டே யோசித்தவள், முதலில் அவனின் பிறந்த நாள் தேதியைப் போட, அது திறக்கவில்லை.
"வேற எந்த நம்பர் போடுறது??" என தனக்குள் கேட்டுக் கொண்ட அடுத்த முயற்சியாக அவனின் கைபேசி கடவு எண்ணை அழுத்திப் பார்க்க, அதுவும் தவறாகிப் போனது.
"அட என்னடா இது??" என நொந்து கொண்டவள், கடைசி முயற்சியாக கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல் அவளின் பிறந்தநாள் எண்ணைப் போட, அது சட்டென திறந்து கொண்டு அவளை திகைக்கச் செய்தது.
"இந்த சூட்கேஸை நான் கல்யாணம் ஆகி வந்ததுல இருந்து பார்த்ததே இல்லை.. ஆனா இதுக்கு என் பெர்த் டேட்டை நம்பர் லாக்ல செட் பண்ணி வச்சிருக்காங்க இந்த நித்தி!!" என ஆச்சரியப்பட்டவள், உள்ளே என்ன இருக்கிறது என பார்க்கத் தன்னை மீறிய ஆர்வத்துடன் அதைத் திறந்திருந்தாள்.
உள்ளே, அவள் கனவிலும் எதிர்பாரா வகையில் நித்திலனின் காதல் சின்னங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷமாய், பாதுகாப்பாக அதற்குள் அடங்கியிருந்தது.
"அடப்பாவி!! சில்லுனு ஒரு காதல் படத்துல வர மாதிரி எனக்கு முன்னாடி வேற ஒருத்தி இருக்காளா???" என அந்த சூட்கேஸில் அடங்கியிருந்தத ஒரு பெண்ணின் துப்பட்டா, ஒற்றைக்கால் கொலுசு, சில மிட்டாய் கவர்கள் என ஒவ்வொன்றாய் கண்டவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அதிலும் அனைத்திற்கும் அருகில், உடைந்த கண்ணாடி வளையல்களைக் கொண்டு அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த டைரி அவளின் கவனத்தைக் கவர,
"நித்தி!! இப்படி ஒரு நிலமையில என்னைய கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே??? லவ் எல்லாம் பண்ணா அவங்க நினைவுச் சின்னத்தை எல்லாம் என் கண்ணுல படாம ஒளிச்சு வச்சிருக்கலாம் தான?? உங்கமேல கோவம் கூட பட முடியலை" என்றவளின் மனம் ஒரு நிலையில் அல்லாமல் திண்டாடித் தவித்தது.
நிச்சயம் கணவனின் அன்பின் மீது துளியளவும் சந்தேகம் இல்லை. நித்திலன் அவளுடன் வாழ்ந்த வாழ்க்கை பொய்யில்லை என அவள் அறிந்திருந்தாலும் தனக்கு முன் அவன் வாழ்வில் ஒருத்தி இருந்திருக்கிறாள் என்பதை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
'என் நித்தி!! எனக்கு மட்டும் தான்!! இது அவர் வாழ்க்கையில முடிஞ்சு போனது.. இனி நான் மட்டும் தான் அவருக்கு' என மனதில் அதை நன்றாய் பதித்துக் கொண்டவள், தடதடக்கும் மனதுடன் அந்த டைரியைத் திறந்து முதல் பக்கத்தைப் பார்க்க அவள் கண்கள் அதிர்ச்சியில் சாசர் போல் விரிந்தது.
"நித்தி!!!!" என்றவளுக்கு உண்மையில் அந்தநொடியை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் கண்கள் கலங்க அப்படியே அமர்ந்து விட்டாள்.
இன்னமும் அவளால் தன் கண்களால் கண்டதை நம்பமுடியவில்லை.
'எப்படி???' எனும் ஒரே கேள்வி தான் அவள் மனதெங்கும் வியாபித்திருக்க, நடுங்கும் கரங்களுடன் மீண்டும் அந்தப் பக்கத்தை திறந்து பார்வையை அதில் பதித்தவளுக்கு மீண்டும் ஆனந்தத்தில் கண்ணீர் வரும் போலானது.
ஏனெனில் அங்கே இருந்தது அவளின் வரைபடம் அல்லவா??? 'கண்மணி' எனும் அவள் பெயரை மட்டுமே கொண்டு அவளின் முகத்தை அழகாய் வரைந்து வைத்திருந்தான் அவளின் காதல் கணவன் நித்திலன்.
"நிஜமாவே நான் தானா???" என மீண்டும் நம்பமாட்டாமல் அவன் மறைத்து வைத்திருந்த காதலை கண்டுகொள்ள அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டியவளுக்கு உண்மையில் அவனின் காதலைக் கண்டு பிரமிப்பாக இருந்தது.
"அப்போ நான் +2 படிக்கிறப்போ இருந்து என்னை லவ் பண்றீங்களா நித்தி நீங்க???" என மனதோடு அவனிடம் கேட்டுக் கொண்டவள்,
அங்கு அவனின் எழுத்து வழியாக, அவளின் கடந்தகாலத்திற்கு காலப்பயணம் மேற்கொண்டு வந்துவிட்டாள்.
அங்கு அவன் சேமித்து வைத்திருந்த அவளின் துப்பட்டா முதற்கொண்டு ஒவ்வொரு பொருளும் எப்போது எப்படி அவனிடம் வந்து சேர்ந்தது என அவனின் எழுத்தின் வாயிலாக அறிந்து கொண்டவளுக்கு, 'இப்படி பைத்தியக்காரத் தனமா ஒருத்தன் நம்ம பின்னாடியே இத்தனை வருஷம் சுத்திருக்கான்.. அதுகூட தெரியாம எப்படி டி இருந்த??? மக்கு மக்கு!!' என தன் மீதே கோபம் கொண்டு தலையில் தட்டிக் கொண்டாள்.
தொடர்ந்து, ஆசையும் ஆர்வமும் போட்டிபோட அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டியவளுக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல் அந்த டைரியில் இருந்த ஒவ்வொரு பக்கங்களும் அவளின் மீதான நித்திலன் மாசில்லா காதல் பெண்ணவள் மீது மழையாய்ப் பொழிந்து அவளைக் குளிர்வித்தது.
அதுவும் கடைசியாக அவளின் பரீட்சை முடிந்த இறுதி நாள், அவர்கள் குடும்பத்துடன் அவ்வூரை விட்டுக் கிளம்பிய தினத்தில், நித்திலனின் மனநிலையை படித்துத் தெரிந்து கொண்டவளுக்கு, தன்னைப்போல் கண்கள் கலங்க, "ஏன் நித்தி?? சொல்லிருக்களாமே?? ஏன் இப்படி தனியா கஷ்டப்பட்டீங்க??" என எப்போதோ அவன் அடைந்த துயருக்கு இப்போது கண்ணீர் சிந்தினாள் அவனின் கண்மணி.
நேரம் போவது தெரியாமல் அவள் அந்த டைரியிலே மூழ்கியிருக்க, வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நித்திலன் கதவைத் தட்டித் தட்டி பார்த்துவிட்டு அவள் திறக்கவில்லை என்றதும் அவளுக்கு என்னாயிற்றோ என பயந்துபோய் தன்னிடம் உள்ள சாவி கொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்தவன்,
"கண்மணி!!! டேய்!! கண்மணி!! எங்கடா இருக்க??" என பரிதவிப்புடன் அவளை அழைத்துக் கொண்டே வீட்டின் ஒவ்வொரு இடமாய் அவளைத் தேடியவன், இறுதியாக அவர்களின் படுக்கையறைக்கு வர, அங்கே அவன் வந்ததைக் கூட உணர முடியாமல் அவன் மறைத்து வைத்திருந்த பொக்கிஷத்தின் மத்தியில் சமைந்து போய் அமர்ந்திருந்தாள் அவனின் கண்மணி.
"பார்த்துவிட்டாள்!!! அனைத்தையும் பார்த்துவிட்டாள்!!!" எனக் கண்டதும் புரிந்து கொண்டவனின் மனம் எவ்வாறு உணர்கிறது என அவனாலேயே விளங்கிக் கொள்ள முடியவில்லை.
கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்களாக யாருக்கும் தெரியாமல் அவன் மட்டுமே நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த சுகமான பாரம் ஒன்று இன்று விடுதலை அடைந்துவிட்டது. ஆனால் அதை நினைத்து மகிழ்ச்சி அடையக் கூட அவனின் மரத்துவிட்ட மூளை செயல்படவில்லை.
இதை அனைத்தையும் கண்ட பின் அவனின் கண்மணியின் மனம் எவ்வாறு உணர்கிறது என்பதிலே அவனின் எண்ணம் சுழல, மெதுவாய் எட்டு வைத்து அவனின் மனையாளை நெருங்கி மண்டியிட்டு கீழே அமார்ந்தவன், "கண்மணி!!!" என பெயருக்கே வலித்து விடும் போல் மிகவும் மென்மையாய் அழைக்க,
அவளிடம் பதிலில்லை.
"டேய் கண்மணி!!" என அவளின் தோளைத் தொட்டு அழைத்த பின்பு தான் அவளுக்கு ஸ்மரணையே வர, அவளின் நித்தி வந்துவிட்டதே அப்போது தான் அவளின் புத்திக்கு உரைத்தது.
"நித்தி!!!" என அடுத்த நொடி அவனைப் பாய்ந்து கட்டிக் கொண்டவள், எதற்கு அழுகிறோம் என்றே தெரியாமல் அவன் மார்பில் முகத்தைப் பதித்து அழுது தீர்க்க,
அவளுக்கு என்னவாகிற்று எனப் புரியாமல், அவள் அழுகையையும் தாங்கமாட்டாமல், "கண்மணி!!! என்னைப் பாரு!! என்னடா?? எதுக்குமா இந்த அழுகை.. ரிலாக்ஸ்!! ஒன்னும் இல்லை.. நீ அழுது உள்ள பேபியையும் பயம் காட்டாத டா.." என ஆதரவாய் அவள் முதுகை நீவி விட்டுக் கொண்டே நித்திலன் பேச, கொஞ்சம் கொஞ்சமாக அவளின் அழுகை சமன்பட்டது.
இன்னும் லேசாய் விசும்பல் இருக்க, மெதுவாய் அவன் மார்பில் இருந்த முகத்தை நிமிர்த்தி நித்திலனின் முகம் பார்த்தவள், "ஏன்????" ஒரே கேள்வி தான் அவளிடம்.
'ஏன் என்னிடம் முன்பே கூறவில்லை???' என்கிற அவளின் ஆதங்கம் அவனுக்கு நன்றாய் புரிந்தாலும், அவனிடம் அதே அமைதியான புன்னகை.
"ஏன் சொல்லணும்???" என விளையாட்டாய், அழுது சிவந்திருந்த அவளின் மூக்கைப் பிடித்து இழுத்தபடி அவன் இலகுவாகக் கேட்க,