- Thread Author
- #1
"என்னடி செய்யுது உனக்கு?"
"ரொம்ப முடியலைடா! "
"லேசா மழைல நனைஞ்சதுக்காடி, இப்படி அனத்திட்டு கிடக்குற?"
"சொல்ல மாட்ட! எவ்ளோ தூரம்.?கார சந்திரமண்டலத்துல நிறுத்திட்டு, செவ்வா கிரகத்தில இருந்து நடக்க விட்ருக்க.! மழைல கொஞ்சம் கரைஞ்சே போயிட்டேன் நா! மூஞ்ச பாரு! பொண்டாட்டிய பத்திரமா பாத்துக்க தெரியாதவனுக்கெல்லாம் ஒரு கல்யாணம்! அதுவும் என்னை மாதிரி ஒரு பிரிஷியஸ் ஏஞ்சலோட.!"
"தாயே ! நிறுத்து உன் புராணத்த, இப்போ என்ன? உனக்கு முடியலை. . . சூடா சாப்ட ஏதாவது தரேன், அப்புறமா ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துடலாம்."
"முதல்ல எனக்கு சூடா வெந்நீர் வேணும்டா குடிக்க, ஹாட் ஹாட்டா...!"
"சரிடி!"
"என்ன சரிடி. .? உனக்கு வெந்நீர் போட தெரியுமாங்க்கும்?" ஸ்விகில போடுடா. பத்து நிமிஷத்துல வந்திடும்!"
"எதே. . .?
" என்னடா?"
ஸ்விகில வெந்நீர்லாம் தரமாட்டாங்கடி!"
"யாரு சொன்னா?"
"யாரு சொல்லணும்? இதுகூட தெரியாதா?"
"போடா! உனக்கு தெரியாது! சீரகம் எல்லாம் கொஞ்சூண்டு போட்டு அம்மா கரெக்டா தொண்டைக்கு இதம்மா தருவாங்க! அது செய்ய உனக்கு தெரியாது!"
"தோடா! பிளெய்ன் சுடுதண்ணியே ஸ்விகில வராதுங்கறேன், மேடம்க்கு சீரக வெந்நீர் வேணுமாம்! அதெல்லாம் கேரளா கடைகள்ல கிடைக்கும்.அதுவும் சும்மா குடிக்க தரது! விலைக்கு வாங்க இல்லை!"
" இப்போ எனக்கு வெந்நீர் வேணும் குடிக்க!"
"போட்டுத் தரேண்டி ! கத்தாத! எதிர்த்த வீட்டு அங்கிள்க்கு நல்லா கேட்டுருக்கும் எல்லாம்.பார்! இங்கதான் பாக்கறார்.!"
"பாக்கட்டும்!"
எழுந்து, டிஷேர்ட்டை நன்றாக இழுத்து விட்டுட்டு, எதிர்த்த வீட்டிற்கு ஓடினாள் மஞ்சு!
"ஏய் மஞ்சு! என்னடி இது ? எங்க போற? நில்லு!"
"எதிர்த்த வீட்டிற்கு போய் மூச்சிரைக்க நின்றிருந்தாள் மஞ்சு!
" அங்கிள்! இங்க பாருங்க! ஸ்விகில குடிக்க வெந்நீர் ஆர்டர் பண்ணுன்னு சொன்னா, தரமாட்டான்னு சொல்றான் இந்த நெட்டக்குரங்கு!"
"போடி! குள்ள வாத்து! தாத்தாக்கு ஸ்விகி பத்தி என்ன தெரியும்?"
"ஆமா கேட்டுக்கோங்க அங்கிள்!இந்த அஷ்வின்தான் ஸ்விகி ஓனர்! ரூல்ஸ் புக்லாம் இவர் கன்ட்ரோல்!"
"ஏண்டா அஷ்வின், மஞ்சு எவ்ளோ அழகா. அங்கிள்ன்றா! உனக்கு மட்டும் நா என்னடா தாத்தா? போன வாரம் சாவி வாங்கறச்ச அங்கிள்ன்னுதானே பல்லைக் காட்டி வாங்கிட்டு போன!"
"இப்போ அதுவா விஷயம்? வயசானவங்கன்னா ரெஸ்பெக்ட் குடுக்கணும், அங்கிள்னு கூப்பிட்டு இன்சல்ட் பண்ணக்கூடாது ன்னு அப்பா சொல்லிருக்கார்!"
"யாரு? நா வயசானவனா? உனக்கு இப்போதான் கல்யாணமாயிருக்குன்னா, நா வயசானவனாயிடுவேனா?" என் கடைசி பையனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலைடா?"
" அது உங்க பிரச்சினை தாத்தா! மற்ற ஏழு பேர்க்கும் கல்யாணம் ஆகி நீங்க பேரன் பேத்தி எல்லாம் எடுத்தாச்சு!"
"நீ வம்புக்குன்னே அப்படி கூப்டறடா!போ ! உங்கப்பன் குசும்பு! வேறென்ன?"
கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகுது! அதுக்குள்ள ஓராயிரம் சண்டை! கொஞ்சம் அந்த பிள்ளய அனுசரிச்சா என்னடா?"
" தாத்தா சண்டை போடறது மஞ்சு ! நானில்ல!"
"நா சண்டையெல்லாம் போடலை அங்கிள்! சுடுதண்ணீர் ஆர்டர் போட்டு தரசொன்னேன்!"
"அதான் நானே போட்டுத் தரேன்னேனே!"
"உனக்கு தெரியாது! நீ கருக்கீருவ! கருகின வெந்நீர் எப்படி குடிக்கறது?"
அஷ்வின் அவளின் அழிச்சாட்டியும் பார்த்து , மோவாயில் விரல்வைத்து 'ஙே' எனப் பார்த்திருந்தான்.
பாஷ்யம் மாமாவும் திகைத்துதான் விழித்தார்.
"ஏம்மா குழந்தே!வெந்நீர். எப்படிம்மா கருகும்?"
"அதெல்லாம் இவன் கருக்குவான் அங்கிள்!" ரொம்ப கேர்லெஸ் இவன்!
"ஆமா! இவ அப்டியே கேர்கேர் ஃபுல்ஃபுல் தான்! "
"நீங்க மாமிய கூப்டுங்க அங்கிள்!"
"அவ இப்போதாண்டா தூங்கப் போனா!"
"நானும் போறேண்டா! மாமியோடயே போய்த் தூங்கிக்கறேன்!"
"ஓய்! அரைடிக்கெட் நீ காய்ச்சலை மாமிக்கு கடத்திராத! போய் நம்ம வீட்ல தூங்கு போ!"
"போடா!" என்றபடி கால்களை உதைத்துக்கொண்டு மஞ்சு செல்லவும்,
"தாத்தா,மாமி வெந்நீர் வைச்சுருந்தா ஒரு ஃபிளாஸ்க்ல தாங்களேன்! ராட்சசி படுத்துவா!"
" அது என்னடா அஷ்வின் நா உனக்கு தாத்தா, என் வைஃப் மாமியாடா?"
"உங்க கவலை . . . . நீங்க வயசா தெரியறீங்க! மாமி அப்டியே உங்க பொண்ணு மாதிரி இருக்கா. . .!
" அடேய். . ்கிராதகா!" நீ ஸ்விகிலியே வெந்நீர் போட்டுக்கோ! போ!"
சிரித்தபடி வெளியேறினான் அஷ்வின்.
இரண்டு பேரும் எதிர்த்த வீட்டுக்கு குடி வந்து ஒரு வாரம்தான் ஆயிற்று. கார்த்திகேயன், அஷ்வினின் அப்பா பாஷ்யம் என்ற ரங்க பாஷ்யத்தின் பால்ய கால நண்பர். அவர்கள் நட்பு அப்படியே இன்று வரை தொடர்கிறது! கார்த்திகேயனுக்கு கூடப்பிறந்த தமக்கை பிரேமா! பிரேமாவின் மகள்தான் மஞ்சு ! ஒரே பெண். கணவர் பலராமன்,பஹ்ரெயினில் வேலை. வருடம் ஒரு முறை முப்பது நாள் லீவில் வருவார். கம்பெனி செலவுதான். அதுபோக மிகவும் அவசரம் என்றால் வருவார். அது சொந்த செலவில் தான் வரவேண்டும். நல்ல சம்பளம்.போக ஊரில் நிலபுலன்களும் ஒரு மாடி வீடும் இருக்கிறது.
கார்த்திகேயனுக்கு அஷ்வின், ஸ்ரீதரன் என இரண்டு மகன்கள்.அஷ்வின் பெரியவன்! கார்த்திகேயன் பேங்க் மேனேஜராக இருந்து ரிடையர்ட் ஆனவர்! அவர் கடைசியாக வேலை பார்த்த மதுரை நகரம் பிடித்து விட்டதால் அங்கேயே, வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். கார்த்திகேயன் அம்மா மங்களம், சிறிது காலமாக மிகவும் சுகவீனமடைந்திருந்தார். கார்த்திகேயன் அப்பா சடாட்சரம் மத்தியசர்க்காரில் இரயில்வேயில் வேலை பார்த்தவர். அஷ்வின் பிஜி இரண்டாம் வருடம் அடி எடுத்து வைத்தபோது நெஞ்சுவலி என ஆஃபீசில் இருந்தபடியே, கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்து விட்டு, ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தனர்.ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தபோது, கார்த்திகேயன் இடிந்து போனார்.
மங்களம் பற்றி சொல்லவே வேண்டாம். வெகு மாதங்களாயிற்று அவர் மீண்டு வர!
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து கொண்டே வந்தது அவரது உடல்நிலை! ஏற்கனவே கார்த்திகேயனுக்கு தன் தமக்கை பிரேமாவின் மகள் மஞ்சுளாவைத் தன் பையன் அஷ்வினுக்கு மணமுடிக்க ஆசை! ஆனாலும் தனக்குள்ளேயே வைத்திருந்தாரே தவிர வெளியில் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை!
அவரது மனைவி ஸ்வர்ணா ஆறு வருடங்களுக்கு முன் வந்த காய்ச்சலில், படுக்காமல் கொள்ளாமல் திடுதிப்பென்று ஒரு நள்ளிரவில் ஹாஸ்பிட்டலில் ஐசியூவில் அட்மிட் செய்த அடுத்த நாள் இவரையும், இரு மகன்களையும் தவிக்க விட்டு மறைந்து போனார்.
அஷ்வின் அப்போதுதான் பிளஸ் ஒன் சேர்ந்திருந்தான் அடுத்தவன் ஸ்ரீதரன் பத்தாவது! இரு பிள்ளைகளுக்கும், பொதுத் தேர்வு நடக்கும் நேரம் மனைவியின் திடீர் மறைவு அவரை அப்படியே நிலை குலைய செய்தது!
தமக்கை பிரேமாவும், தந்தையும்தான் பெருமளவு குடும்பத்தை நிர்வகித்தது!
மஞ்சு மிகவும் சிறிய பெண் அவளும் ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள். பெரும்பாலும் இங்கேதான் வாசம்! அக்ஷ்வின் அவளை அவ்வளவு அழகாக பார்த்துக் கொள்வான்.ஆனால் மஞ்சு மிகவும் சேட்டை! ஸ்ரீஈதரனுடன் ஒத்துப் போகாது!
அப்பொழுதே பிரேமாவுக்கும் தம்பி மகனுக்கு தன் மகளைக் கொடுக்க எண்ணம் இருந்தது! இருவரும் படிப்பை முடிக்கும்போது இது பற்றிப் பேசலாம் என இருந்தார்.
அப்பாவின் திடீர் மறைவு, பின் தாயின் சுகவீனம் என நாட்கள் ஓட, அஷ்வின் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில்ஒரு நல்ல கம்பெனியில் தேர்வாகி, நாக்பூரில் பிளேஸ்மெண்ட் கிடைக்கவும், தம்பியிடம் பிரேமா பேச, அவருக்கும் சம்மதமே!
அவரது தாய் மங்களத்தின் இடைவிடாத புலம்பலினால் ஸ்திரமாக விழுந்த வித்து , இப்போது செயல் வடிவம் எடுக்க தொடங்கி, கல்யாண வேலைகள் விறுவிறுப்பாக நடக்கத் தொடங்க, மஞ்சுவுக்கு உள்ளுக்குள் ஒரே பயம்!
அவளுக்கு அஷ்வினைப் பிடிக்கும் என்றாலும் கல்யாணம் என்றெல்லாம் அவள் யோசித்ததே இல்லை!
அஷ்வினைப் பொறுத்த வரை மஞ்சு மீது அளவில்லாத பிரியம். அவளே மனைவி என்னும்போது சந்தோஷமாகவே இருந்தது! மஞ்சு இப்பொழுது பிஎஸ்சி ஐடி கடைசி வருஷத்தில் இருந்தாள். அகடமிக் இயர் முடிந்து, டெர்ம் எண்ட் பரீட்சைகள் மட்டுமே இருந்தது!
மஞ்சு எப்போதுமே விளையாட்டு பிள்ளைதான்.ஒரே பெண் என செல்லம் வேறு! மாமா, அப்பா இருவரிடமும் அளவில்லாத செல்லம்.தாய் பிரேமாதான் சிறிது கண்டிப்பாய் இருப்பாள். பாட்டி மங்களத்திடமும் செல்லம்தான்.
அஷ்வினுமே ஜாலியான குணம் என்றாலும், பொறுப்பும் உணர்ந்தவன்.
வீடு உறவினர் வருகையால் நிறைந்திருந்தது! மஞ்சுவை எழுப்பச் சென்றாள் பிரேமா!
"ஏய் மஞ்சு!என்னடி இன்னும் தூங்கற?எழுந்துக்கோ! எல்லோரும் உன்ன பாக்கணுங்கறா!"
"நா என்ன பொம்மையா. .?போ. . .!"
"என்ன மஞ்சு இது விளையாட்டுத்தனமாவே இருக்க இன்னும்.கல்யாணப்பொண்ணுடி நீ! குளிச்சி நல்லதா உடுத்திகிட்டு பளிச்சுன்னு இருக்க வேண்டாமா?"
"நா ஒண்ணும் தூங்கலைம்மா! அடுத்த மாசம் பரீட்சைக்கு தேவையான நோட்ஸ் கேட்டுட்டு இருந்தேன் புவனாகிட்ட! நா மூணு கிளாஸ் பங்க் பண்ணிட்டேனே!"
"சரிடி! இப்போ எழும்பி குளிச்சுட்டு, நல்லதா ஒரு புடவை மாத்திக்கோடி.என் கண்ணுல்ல. !"
"புடவையா. . . .அம்மாம்மா. . .! நீ எனக்கு பிராமிஸ் பண்ணிருக்க புடவை கட்ட சொல்ல மாட்டேன்னு.!"
" அஷ்வினும் ஆசைப்படறாண்டி!"
"அப்போ அவனையே கட்டிக்க சொல்லு!"
"உஷ்! அவன் இவன்னு கத்தாத .!"
"என்ன அத்தை? என்ன சத்தம்? இவ ஏன் ஒரங்குட்டான் மாதிரி இருக்கா?"
"" ஏய்! நெட்டகுரங்கு! எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க போறதினாலதான்!"
"என்ன செய்ய? நடக்கப்போறதே! இரண்டு பேருமே தப்பிக்க முடியாது!"
மஞ்சுவுக்கு அழுகையில் உதடு பிதுங்கியது!
"ஏய்! குட்டச்சி? எதுக்கு இப்போ அழுகை? ம்.ம்.ம்.?"
-----------
"உனக்கு தப்பிக்கணுமாடி? "
"போடா. .!"
"எதுக்கு இப்போ அழற?"
"இந்த ஸ்ரீஈதர் சொல்றான், நா, அம்மா பாட்டி எல்லோரையும் விட்டுட்டு உன்கூட நாக்பூர் போறேனாம். நினைச்ச உடனே எல்லாம் வரமுடியாதாம்! அதனால சமையல் எல்லாம் நல்லா கத்துக்கணுமாம். நிறைய்ய வேலை செய்யணுமாம்! பொறுப்பா இருக்கணுமாம்! இப்டி நிறைய சொல்றாண்டா. . . .!"
"அவன் சொல்றது இருக்கட்டும்! நீ இந்த வருஷம் படிப்பை முடிச்சுட்டு, வேலை பாக்க போறேன்னு சொன்ன! இப்படி விளையாட்டுதனமா எவ்ளோ நாள் இருப்ப சொல்லு? உன்னைப் பாத்துக்கவாவது உனக்கு தெரியணும்ல?"
"ஏண்டா? நீ என்ன பாத்துக்கமாட்டியா? இவ்ளோ நாள் நீதானே பார்த்த?"
"நா பாத்துப்பேண்டி! ஆனா நீயும் வளர வேண்டாமா?"
"என்னடா பயங்காட்ற?"
"ரொம்ப முடியலைடா! "
"லேசா மழைல நனைஞ்சதுக்காடி, இப்படி அனத்திட்டு கிடக்குற?"
"சொல்ல மாட்ட! எவ்ளோ தூரம்.?கார சந்திரமண்டலத்துல நிறுத்திட்டு, செவ்வா கிரகத்தில இருந்து நடக்க விட்ருக்க.! மழைல கொஞ்சம் கரைஞ்சே போயிட்டேன் நா! மூஞ்ச பாரு! பொண்டாட்டிய பத்திரமா பாத்துக்க தெரியாதவனுக்கெல்லாம் ஒரு கல்யாணம்! அதுவும் என்னை மாதிரி ஒரு பிரிஷியஸ் ஏஞ்சலோட.!"
"தாயே ! நிறுத்து உன் புராணத்த, இப்போ என்ன? உனக்கு முடியலை. . . சூடா சாப்ட ஏதாவது தரேன், அப்புறமா ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துடலாம்."
"முதல்ல எனக்கு சூடா வெந்நீர் வேணும்டா குடிக்க, ஹாட் ஹாட்டா...!"
"சரிடி!"
"என்ன சரிடி. .? உனக்கு வெந்நீர் போட தெரியுமாங்க்கும்?" ஸ்விகில போடுடா. பத்து நிமிஷத்துல வந்திடும்!"
"எதே. . .?
" என்னடா?"
ஸ்விகில வெந்நீர்லாம் தரமாட்டாங்கடி!"
"யாரு சொன்னா?"
"யாரு சொல்லணும்? இதுகூட தெரியாதா?"
"போடா! உனக்கு தெரியாது! சீரகம் எல்லாம் கொஞ்சூண்டு போட்டு அம்மா கரெக்டா தொண்டைக்கு இதம்மா தருவாங்க! அது செய்ய உனக்கு தெரியாது!"
"தோடா! பிளெய்ன் சுடுதண்ணியே ஸ்விகில வராதுங்கறேன், மேடம்க்கு சீரக வெந்நீர் வேணுமாம்! அதெல்லாம் கேரளா கடைகள்ல கிடைக்கும்.அதுவும் சும்மா குடிக்க தரது! விலைக்கு வாங்க இல்லை!"
" இப்போ எனக்கு வெந்நீர் வேணும் குடிக்க!"
"போட்டுத் தரேண்டி ! கத்தாத! எதிர்த்த வீட்டு அங்கிள்க்கு நல்லா கேட்டுருக்கும் எல்லாம்.பார்! இங்கதான் பாக்கறார்.!"
"பாக்கட்டும்!"
எழுந்து, டிஷேர்ட்டை நன்றாக இழுத்து விட்டுட்டு, எதிர்த்த வீட்டிற்கு ஓடினாள் மஞ்சு!
"ஏய் மஞ்சு! என்னடி இது ? எங்க போற? நில்லு!"
"எதிர்த்த வீட்டிற்கு போய் மூச்சிரைக்க நின்றிருந்தாள் மஞ்சு!
" அங்கிள்! இங்க பாருங்க! ஸ்விகில குடிக்க வெந்நீர் ஆர்டர் பண்ணுன்னு சொன்னா, தரமாட்டான்னு சொல்றான் இந்த நெட்டக்குரங்கு!"
"போடி! குள்ள வாத்து! தாத்தாக்கு ஸ்விகி பத்தி என்ன தெரியும்?"
"ஆமா கேட்டுக்கோங்க அங்கிள்!இந்த அஷ்வின்தான் ஸ்விகி ஓனர்! ரூல்ஸ் புக்லாம் இவர் கன்ட்ரோல்!"
"ஏண்டா அஷ்வின், மஞ்சு எவ்ளோ அழகா. அங்கிள்ன்றா! உனக்கு மட்டும் நா என்னடா தாத்தா? போன வாரம் சாவி வாங்கறச்ச அங்கிள்ன்னுதானே பல்லைக் காட்டி வாங்கிட்டு போன!"
"இப்போ அதுவா விஷயம்? வயசானவங்கன்னா ரெஸ்பெக்ட் குடுக்கணும், அங்கிள்னு கூப்பிட்டு இன்சல்ட் பண்ணக்கூடாது ன்னு அப்பா சொல்லிருக்கார்!"
"யாரு? நா வயசானவனா? உனக்கு இப்போதான் கல்யாணமாயிருக்குன்னா, நா வயசானவனாயிடுவேனா?" என் கடைசி பையனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலைடா?"
" அது உங்க பிரச்சினை தாத்தா! மற்ற ஏழு பேர்க்கும் கல்யாணம் ஆகி நீங்க பேரன் பேத்தி எல்லாம் எடுத்தாச்சு!"
"நீ வம்புக்குன்னே அப்படி கூப்டறடா!போ ! உங்கப்பன் குசும்பு! வேறென்ன?"
கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகுது! அதுக்குள்ள ஓராயிரம் சண்டை! கொஞ்சம் அந்த பிள்ளய அனுசரிச்சா என்னடா?"
" தாத்தா சண்டை போடறது மஞ்சு ! நானில்ல!"
"நா சண்டையெல்லாம் போடலை அங்கிள்! சுடுதண்ணீர் ஆர்டர் போட்டு தரசொன்னேன்!"
"அதான் நானே போட்டுத் தரேன்னேனே!"
"உனக்கு தெரியாது! நீ கருக்கீருவ! கருகின வெந்நீர் எப்படி குடிக்கறது?"
அஷ்வின் அவளின் அழிச்சாட்டியும் பார்த்து , மோவாயில் விரல்வைத்து 'ஙே' எனப் பார்த்திருந்தான்.
பாஷ்யம் மாமாவும் திகைத்துதான் விழித்தார்.
"ஏம்மா குழந்தே!வெந்நீர். எப்படிம்மா கருகும்?"
"அதெல்லாம் இவன் கருக்குவான் அங்கிள்!" ரொம்ப கேர்லெஸ் இவன்!
"ஆமா! இவ அப்டியே கேர்கேர் ஃபுல்ஃபுல் தான்! "
"நீங்க மாமிய கூப்டுங்க அங்கிள்!"
"அவ இப்போதாண்டா தூங்கப் போனா!"
"நானும் போறேண்டா! மாமியோடயே போய்த் தூங்கிக்கறேன்!"
"ஓய்! அரைடிக்கெட் நீ காய்ச்சலை மாமிக்கு கடத்திராத! போய் நம்ம வீட்ல தூங்கு போ!"
"போடா!" என்றபடி கால்களை உதைத்துக்கொண்டு மஞ்சு செல்லவும்,
"தாத்தா,மாமி வெந்நீர் வைச்சுருந்தா ஒரு ஃபிளாஸ்க்ல தாங்களேன்! ராட்சசி படுத்துவா!"
" அது என்னடா அஷ்வின் நா உனக்கு தாத்தா, என் வைஃப் மாமியாடா?"
"உங்க கவலை . . . . நீங்க வயசா தெரியறீங்க! மாமி அப்டியே உங்க பொண்ணு மாதிரி இருக்கா. . .!
" அடேய். . ்கிராதகா!" நீ ஸ்விகிலியே வெந்நீர் போட்டுக்கோ! போ!"
சிரித்தபடி வெளியேறினான் அஷ்வின்.
இரண்டு பேரும் எதிர்த்த வீட்டுக்கு குடி வந்து ஒரு வாரம்தான் ஆயிற்று. கார்த்திகேயன், அஷ்வினின் அப்பா பாஷ்யம் என்ற ரங்க பாஷ்யத்தின் பால்ய கால நண்பர். அவர்கள் நட்பு அப்படியே இன்று வரை தொடர்கிறது! கார்த்திகேயனுக்கு கூடப்பிறந்த தமக்கை பிரேமா! பிரேமாவின் மகள்தான் மஞ்சு ! ஒரே பெண். கணவர் பலராமன்,பஹ்ரெயினில் வேலை. வருடம் ஒரு முறை முப்பது நாள் லீவில் வருவார். கம்பெனி செலவுதான். அதுபோக மிகவும் அவசரம் என்றால் வருவார். அது சொந்த செலவில் தான் வரவேண்டும். நல்ல சம்பளம்.போக ஊரில் நிலபுலன்களும் ஒரு மாடி வீடும் இருக்கிறது.
கார்த்திகேயனுக்கு அஷ்வின், ஸ்ரீதரன் என இரண்டு மகன்கள்.அஷ்வின் பெரியவன்! கார்த்திகேயன் பேங்க் மேனேஜராக இருந்து ரிடையர்ட் ஆனவர்! அவர் கடைசியாக வேலை பார்த்த மதுரை நகரம் பிடித்து விட்டதால் அங்கேயே, வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். கார்த்திகேயன் அம்மா மங்களம், சிறிது காலமாக மிகவும் சுகவீனமடைந்திருந்தார். கார்த்திகேயன் அப்பா சடாட்சரம் மத்தியசர்க்காரில் இரயில்வேயில் வேலை பார்த்தவர். அஷ்வின் பிஜி இரண்டாம் வருடம் அடி எடுத்து வைத்தபோது நெஞ்சுவலி என ஆஃபீசில் இருந்தபடியே, கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்து விட்டு, ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தனர்.ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தபோது, கார்த்திகேயன் இடிந்து போனார்.
மங்களம் பற்றி சொல்லவே வேண்டாம். வெகு மாதங்களாயிற்று அவர் மீண்டு வர!
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து கொண்டே வந்தது அவரது உடல்நிலை! ஏற்கனவே கார்த்திகேயனுக்கு தன் தமக்கை பிரேமாவின் மகள் மஞ்சுளாவைத் தன் பையன் அஷ்வினுக்கு மணமுடிக்க ஆசை! ஆனாலும் தனக்குள்ளேயே வைத்திருந்தாரே தவிர வெளியில் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை!
அவரது மனைவி ஸ்வர்ணா ஆறு வருடங்களுக்கு முன் வந்த காய்ச்சலில், படுக்காமல் கொள்ளாமல் திடுதிப்பென்று ஒரு நள்ளிரவில் ஹாஸ்பிட்டலில் ஐசியூவில் அட்மிட் செய்த அடுத்த நாள் இவரையும், இரு மகன்களையும் தவிக்க விட்டு மறைந்து போனார்.
அஷ்வின் அப்போதுதான் பிளஸ் ஒன் சேர்ந்திருந்தான் அடுத்தவன் ஸ்ரீதரன் பத்தாவது! இரு பிள்ளைகளுக்கும், பொதுத் தேர்வு நடக்கும் நேரம் மனைவியின் திடீர் மறைவு அவரை அப்படியே நிலை குலைய செய்தது!
தமக்கை பிரேமாவும், தந்தையும்தான் பெருமளவு குடும்பத்தை நிர்வகித்தது!
மஞ்சு மிகவும் சிறிய பெண் அவளும் ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள். பெரும்பாலும் இங்கேதான் வாசம்! அக்ஷ்வின் அவளை அவ்வளவு அழகாக பார்த்துக் கொள்வான்.ஆனால் மஞ்சு மிகவும் சேட்டை! ஸ்ரீஈதரனுடன் ஒத்துப் போகாது!
அப்பொழுதே பிரேமாவுக்கும் தம்பி மகனுக்கு தன் மகளைக் கொடுக்க எண்ணம் இருந்தது! இருவரும் படிப்பை முடிக்கும்போது இது பற்றிப் பேசலாம் என இருந்தார்.
அப்பாவின் திடீர் மறைவு, பின் தாயின் சுகவீனம் என நாட்கள் ஓட, அஷ்வின் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில்ஒரு நல்ல கம்பெனியில் தேர்வாகி, நாக்பூரில் பிளேஸ்மெண்ட் கிடைக்கவும், தம்பியிடம் பிரேமா பேச, அவருக்கும் சம்மதமே!
அவரது தாய் மங்களத்தின் இடைவிடாத புலம்பலினால் ஸ்திரமாக விழுந்த வித்து , இப்போது செயல் வடிவம் எடுக்க தொடங்கி, கல்யாண வேலைகள் விறுவிறுப்பாக நடக்கத் தொடங்க, மஞ்சுவுக்கு உள்ளுக்குள் ஒரே பயம்!
அவளுக்கு அஷ்வினைப் பிடிக்கும் என்றாலும் கல்யாணம் என்றெல்லாம் அவள் யோசித்ததே இல்லை!
அஷ்வினைப் பொறுத்த வரை மஞ்சு மீது அளவில்லாத பிரியம். அவளே மனைவி என்னும்போது சந்தோஷமாகவே இருந்தது! மஞ்சு இப்பொழுது பிஎஸ்சி ஐடி கடைசி வருஷத்தில் இருந்தாள். அகடமிக் இயர் முடிந்து, டெர்ம் எண்ட் பரீட்சைகள் மட்டுமே இருந்தது!
மஞ்சு எப்போதுமே விளையாட்டு பிள்ளைதான்.ஒரே பெண் என செல்லம் வேறு! மாமா, அப்பா இருவரிடமும் அளவில்லாத செல்லம்.தாய் பிரேமாதான் சிறிது கண்டிப்பாய் இருப்பாள். பாட்டி மங்களத்திடமும் செல்லம்தான்.
அஷ்வினுமே ஜாலியான குணம் என்றாலும், பொறுப்பும் உணர்ந்தவன்.
வீடு உறவினர் வருகையால் நிறைந்திருந்தது! மஞ்சுவை எழுப்பச் சென்றாள் பிரேமா!
"ஏய் மஞ்சு!என்னடி இன்னும் தூங்கற?எழுந்துக்கோ! எல்லோரும் உன்ன பாக்கணுங்கறா!"
"நா என்ன பொம்மையா. .?போ. . .!"
"என்ன மஞ்சு இது விளையாட்டுத்தனமாவே இருக்க இன்னும்.கல்யாணப்பொண்ணுடி நீ! குளிச்சி நல்லதா உடுத்திகிட்டு பளிச்சுன்னு இருக்க வேண்டாமா?"
"நா ஒண்ணும் தூங்கலைம்மா! அடுத்த மாசம் பரீட்சைக்கு தேவையான நோட்ஸ் கேட்டுட்டு இருந்தேன் புவனாகிட்ட! நா மூணு கிளாஸ் பங்க் பண்ணிட்டேனே!"
"சரிடி! இப்போ எழும்பி குளிச்சுட்டு, நல்லதா ஒரு புடவை மாத்திக்கோடி.என் கண்ணுல்ல. !"
"புடவையா. . . .அம்மாம்மா. . .! நீ எனக்கு பிராமிஸ் பண்ணிருக்க புடவை கட்ட சொல்ல மாட்டேன்னு.!"
" அஷ்வினும் ஆசைப்படறாண்டி!"
"அப்போ அவனையே கட்டிக்க சொல்லு!"
"உஷ்! அவன் இவன்னு கத்தாத .!"
"என்ன அத்தை? என்ன சத்தம்? இவ ஏன் ஒரங்குட்டான் மாதிரி இருக்கா?"
"" ஏய்! நெட்டகுரங்கு! எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க போறதினாலதான்!"
"என்ன செய்ய? நடக்கப்போறதே! இரண்டு பேருமே தப்பிக்க முடியாது!"
மஞ்சுவுக்கு அழுகையில் உதடு பிதுங்கியது!
"ஏய்! குட்டச்சி? எதுக்கு இப்போ அழுகை? ம்.ம்.ம்.?"
-----------
"உனக்கு தப்பிக்கணுமாடி? "
"போடா. .!"
"எதுக்கு இப்போ அழற?"
"இந்த ஸ்ரீஈதர் சொல்றான், நா, அம்மா பாட்டி எல்லோரையும் விட்டுட்டு உன்கூட நாக்பூர் போறேனாம். நினைச்ச உடனே எல்லாம் வரமுடியாதாம்! அதனால சமையல் எல்லாம் நல்லா கத்துக்கணுமாம். நிறைய்ய வேலை செய்யணுமாம்! பொறுப்பா இருக்கணுமாம்! இப்டி நிறைய சொல்றாண்டா. . . .!"
"அவன் சொல்றது இருக்கட்டும்! நீ இந்த வருஷம் படிப்பை முடிச்சுட்டு, வேலை பாக்க போறேன்னு சொன்ன! இப்படி விளையாட்டுதனமா எவ்ளோ நாள் இருப்ப சொல்லு? உன்னைப் பாத்துக்கவாவது உனக்கு தெரியணும்ல?"
"ஏண்டா? நீ என்ன பாத்துக்கமாட்டியா? இவ்ளோ நாள் நீதானே பார்த்த?"
"நா பாத்துப்பேண்டி! ஆனா நீயும் வளர வேண்டாமா?"
"என்னடா பயங்காட்ற?"