New member
- Joined
- Dec 23, 2024
- Messages
- 9
- Thread Author
- #1
முதல் தரிசனம்
(இது உண்மை சம்பவம்)
ஐந்து நாள் மருத்துவமனையில் இருந்துவிட்டு சுப்புலட்சுமி வீட்டிற்கு வந்தார். எல்லா பரிசோதனைகளையும் எடுத்துவிட்டு மயக்கம் வருவதற்கான காரணம், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு என்று மாத்திரைகளை கொடுத்து வீட்டிற்கு நல்லபடியாக அனுப்பி வைத்திருந்தார்கள் மருத்துவர்கள். பெரிதாக ஒன்றும் இல்லை என்ற நிம்மதியுடன் வீட்டுக்கு வந்து ஓய்வாக சாய்ந்தாள் சுப்புலட்சுமி.
அவளுக்கு நாற்பது வயது இருக்கும். திருமணமாகி இருபது வருடங்களை கடந்து விட்டவளுக்கு இரண்டு முத்தான பெண் பிள்ளைகள். கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தார். மனைவிக்கு அடிக்கடி உடல் சோர்வும் மயக்கமும் ஏற்பட பயந்துவிட்டவர், மருத்துவமனையில் சேர்த்து விட்டிருந்தார்.
எதுவும் பெரிதாக இல்லை என்று அறிக்கை வந்ததும் கணவன் குழந்தைகள் என்று அனைவருக்கும் நிம்மதி தான். பெண் பிள்ளைகள் என்பதால் வீட்டில் பொறுப்பாக அவர்களே அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டனர். மருத்துவமனையில் இருக்கும் போதும் சரி, தாய் வீட்டிற்கு வந்த பிறகும் சரி. தாய்க்கு ஓய்வு கொடுத்து விட்டு அவர்களே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ள. அன்று இரவு நிம்மதியாக உறக்கத்தை தழுவினார் சுப்புலட்சுமி.
நல்ல உறக்கத்தில் ‘மியாவ் மியாவ்’, என்று பூனைகள் கத்தும் சத்தம் அவர் காதுகள் அருகிலேயே கேட்டது. திட்டிட்டு எழுந்து அமர்ந்தவர். சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள். அவருடைய படுக்கையறை தான். இரவு விளக்கில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. குழல் விளக்கை சுழல விட்டவள், அங்கும் இங்கும் பார்வையிட ஒன்றும் பெரிதாக அவளுக்கு புலப்படவில்லை. மாத்திரையின் உபயத்தாள் தன்னுடைய கற்பனையாக இருக்கும் என்று நினைத்து படுத்துவிட்டாள். பகலில் எல்லாம் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. மீண்டும் மறுநாள் இரவு அதேபோல பூனை கத்தும் சத்தம். கணவனும் இரவு வேலைக்குச் சென்று விட. மகள்களை அழைத்து கூறினார். விளக்கு ஒளிர்ந்ததும் மீண்டும் சத்தம் கேட்கவில்லை.
‘உன்னுடைய கற்பனை’, என்று மகள்கள் கூறி விட.
‘அப்படித்தான் இருக்குமோ??’ என்ற சந்தேகமே வலுக்க ஆரம்பித்துவிட்டது சுப்புலட்சுமிக்கு. ஆனால் அது கற்பனையா இல்லையா என்று அடுத்த நாள் தெரிந்து விட்டது.
ஆம் இப்பொழுது பகலிலும் சத்தம் வர. கட்டிலின் தலைமாட்டில் இருந்த சோபாவுக்கு அடியில் இருந்து சத்தம் வருவதை உணர்ந்தவள். சோபாவை நகர்த்தி பார்க்க. அங்கே ஒரு பெரிய பூனையும் இரண்டு குட்டி புனைகளும் இருந்தது. சுப்புலட்சுமியை பார்த்ததும் தாய் பூனை ஓடிவிட அது எப்படி வந்தது என்று அப்போதுதான் கண்டறிந்தார். மாடி கிரில் வழியாக வீட்டிற்குள் நுழைந்திருந்தது குழந்தைகளுடன். அவ்வளவு சின்ன துவாரத்தில் இவ்வளவு பெரிய பூனை எப்படி வந்தது என்று ஆச்சரியம் தான் அவளுக்கு.
சுப்புலட்சுமிக்கு வளர்ப்பு பிராணிகள் என்றால் அசுசையான உணர்வு ஏற்படும். தொட்டு தூக்குவதெல்லாம் வாய்ப்பே இல்லை.
கணவன் நாய் வளர்க்கலாமா கோழி வளர்க்கலாமா??, என்று கேட்கும் போது கூட. தனக்கு அது பிடிக்காது என்று வளர்க்கவே தடை விதித்தவள் அவள் .
பூனையை பார்த்ததும் சும்மா விடுவாளா, தாம் தூம் என்று சத்தம் போட்டாள். ஒரு ஐந்து நாள் வீட்டில் இருக்கவில்லை என்றால் வீட்டை பூனைக்கு குத்தகை விட்டு விடுவீர்களா என்று.
கணவனும் அலுவலகம் மருத்துவமனை என்று இருக்க. மகள்களும் சமையல் வேலை கல்லூரி மருத்துவமனை என்று இருக்க யாருக்கும் பூனையை பார்க்க, இல்லையில்லை வீட்டை பார்க்க நேரம் இருந்திருக்கவில்லை. பாவம் அவர்களும் என்ன செய்வார்கள்?. பள்ளிக்கும் கல்லூரிக்கு விடுப்பு எடுத்து தாயை மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
ஆள் அரவமில்லாமல் வீடு எப்பொழுதும் காலியாக இருக்க. இரவில் மட்டுமே மனிதர்கள் வருவதால் பிறந்த பச்சிளம் பூனைக்குட்டிகளுடன் தாய் பூனை அங்கே வந்து அடைக்கலமாகிவிட்டது. இப்போது மனிதர்களை பார்த்ததும் குட்டிகளை விட்டுவிட்டு சிட்டாக பறந்து விட்டது.
மிகவும் சிறிய குட்டிகள் தான். என்ன செய்வது என்று தெரியாமல் மொட்டை மாடியில் கொண்டு சென்று ஓரமாக ஒரு பழைய அட்டை பெட்டிக்குள் வைத்துவிட்டு வந்தனர். அதையும் சுப்புலட்சுமி செய்யவில்லை அவளுடைய மகள்தான் செய்தாள்.
அன்று இரவும் அதே போல சத்தம். எப்படி இது சாத்தியமானது. ஆனால் இம்முறை கட்டிலின் அருகில் இல்லை வீட்டின் உள்ளே மட்டும் கேட்டது. எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்தால் படிக்கட்டின் மறைவில் ஒளிந்து கொண்டு இருந்தார்கள். இப்பொழுது தாய் இல்லை, குட்டிகள் இரண்டும் மட்டுமே இருந்தது. மீண்டும் கையுறையை அணிந்து கொண்டு மகள் அவர்களை வெளியே விட்டு விட்டு வந்தாள்.
அடுத்த நாளும் அதுவே தொடர்ந்தது. ஆனால் இப்பொழுது ஒரே ஒரு பூனை குட்டி மட்டுமே கத்திக் கொண்டிருந்தது .
ஒரு வெள்ளைக் குட்டியை மட்டும் விட்டுவிட்டு இன்னொரு குட்டியை தூக்கிக் கொண்டு சென்று விட்டது அந்த தாய் பூனை. இம்முறை அந்த வெள்ளைப் பூனை மட்டும் தனியாக கத்திக் கொண்டே இருந்தது.
வருத்தப்பட்ட சுப்புலட்சுமியின் கணவர். நீடில் வாங்கி எடுத்து வந்து அதில் பாலை உறிஞ்சி அந்தப் பிஞ்சு வெள்ளை பூனைக்கு கொடுக்க ஆரம்பித்தார்.
குட்டி மட்டும் தனியாக இருப்பதால் என்ன செய்வது என்று யோசித்தவர் பாலை கொடுத்து விட்டு மீண்டும் வெளியில் விட்டனர் பெண்கள் இருவரும். ஆனால் தனியாக இருக்க பயந்து கொண்டு அந்தக் குட்டி வெள்ளை பூனை கிரில் வழியாக உள்ளே நுழைந்து வீட்டின் உள்ளே கத்திக்கொண்டே இருந்தது.
வேறு வழி இல்லாமல் பால் கொடுத்தனர். தாய் பூனை வந்து அந்த வெள்ளைப் பூனையை தூக்கிச் சென்று விடும் என்று பார்த்தால் தாய்பூனை வரவே இல்லை. அந்த குட்டி பூனைக்கோ பார்வை கூட சரியாக தெரியவில்லை. படிக்கட்டு திட்டில் ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து அந்த பூனை குட்டியை பத்திரமாக வைத்துக் கொண்டு ஒரு வாரம் பார்த்த போதும் அந்த தாய் பூனை வருவதாகவே தெரியவில்லை.
அது வார விடுமுறை நாள் என்பதால். அந்த இரண்டு நாட்களும் அவர்கள் இந்த குட்டியை பார்த்துக் கொண்டனர். தந்தை இரண்டு மகள்கள் என்று அந்த குட்டி இடம் ஐக்கியமாகிவிட்டனர். ஆனால் சுப்புலட்சுமி மட்டும் ஒதுங்கியே நின்றாள் .
கணவனுக்கும் வேலைக்கு செல்ல வேண்டும் பெண்களுக்கும் கல்லூரி பள்ளி என்று செல்ல வேண்டும். அனைவரும் சென்று விட இப்பொழுது சுப்புலட்சுமி மட்டுமே வீட்டில் இருந்தாள் .
இப்பொழுதும் அவளுக்கு பூனை என்றால் அசுசை தான். ஆனால் ஒரு தாயாக, தாய் விட்டு சென்ற அந்த குட்டி பூனையை பார்ப்பதற்கு பாவமாக இருக்க. அதை தூக்காமல் அதற்கு கணவனின் வழியில் பால் புகட்டி கொண்டு இருந்தாள். இப்படியே ஒரு வாரம் சென்றது.
அது மிருகம் அவளுக்கு பிடிக்காது என்ற நிலை மாறி. ஒரு குழந்தையிடம் தாய்க்கு ஏற்படும் அன்பு ஏற்பட்டுவிட்டது சுப்புலட்சுமிக்கு. இப்பொழுதும் அந்த தாய் பூனை வரும் என்று பார்த்துக் கொண்டிருக்க. அது வருவதாக தெரியவில்லை.
அந்த குட்டி பூனைக்கு பார்வை தெளிவடைய ஆரம்பித்தது. அது ஒரு வாரம் பால் புகட்டிக் கொண்டிருந்த சுப்புலட்சுமியை தாயாக நினைக்க ஆரம்பித்து விட்டது. அந்த பூனையை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிய பெண்களை விட அதற்கு முதலில் பாவம் பார்த்து பாலை ஊட்டிய அவளுடைய கணவனை விட. அது இப்பொழுது அவளிடம் தான் ஒட்டிக்கொண்டது. இருந்தாலும் சுப்புலட்சுமிக்கு அதை தூக்க ஏதோ போல இருந்தது. அந்த எலும்புகள் எல்லாம் கைகளில் படும்போது உடல் முழுவதும் புல்லரிக்கும். அதனால் அதை எப்பொழுதுமே அவள் விரும்ப மாட்டாள்.
அடுத்த விடுமுறை நாள் வந்தது. பெண் பிள்ளைகள் மீண்டும் அந்த வெள்ளைக் குட்டி பூனையிடம் ஐக்கியம் ஆகிவிட்டனர். மொட்டை மாடியில் செடிக்கு தண்ணீர் ஊற்ற கூட பூனையுடனே சென்றனர். அதன் பிறகு அங்கே அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது அந்த வெள்ளை பூனையின் தாய் அதனுடைய இன்னொரு குட்டியை தூக்கிக் கொண்டு வந்தது.
தாய் வந்து விட்ட பிறகு அவர்களிடம் விடுவது தானே நியாயம். அது அந்தப் பெண் பிள்ளைகளுக்கும் புரிய. குட்டியை தாயிடம் விட்டனர்.. அந்த தாய் அந்தத் பூனைக்குட்டியை தூக்கிச் செல்ல நினைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. அது அந்த தாய் பூனை மட்டுமே அறிந்த ஒன்று.
தாயும் அந்த வெள்ளை குட்டி பூனையும் ஒரே நேர்கோட்டில் நின்று ‘மியோவ் மியோவ்’ என்று பேசிக் கொண்டனர். இவர்களும் மறைவாய் நின்று என்ன செய்கிறார்கள் அவர்கள் என்று பார்க்க. வெள்ளை பூனை மீண்டும் வீடு வந்து சேர்ந்தது.
தாய் அழைத்து செல்லவில்லையா??. எதனால் என்று யோசித்தவர்களுக்கு பிறகு தான் புரிந்தது. அதற்குப் பார்வை தெரியும் போது பரீட்சையமான முகம் மனிதர்களின் முகம். அது அவர்களை தான் தன் குடும்பமாக நினைத்து விட்டது. அந்த வீட்டில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பிறகு என்ன வீட்டிற்குள்ளும் வந்து விட்டது.
…….
அப்பொழுது சுப்புலட்சுமிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட பூனையின் கவனிப்பை அவரால் சரிவர பார்க்க முடியவில்லை என்று புலம்பி தள்ளினாள் சுப்புலட்சுமி. அவளுடைய கணவன் வெள்ளை குட்டி பூனையை ஒரு பெட்டியில் போட்டு வெளியில் சென்று விட்டு விட்டு வந்து விட்டார்.
சுப்புலட்சுமி மாத்திரையை போட்டுவிட்டு மதிய உறக்கத்திற்கு செல்ல. கனவில் கூட அந்த பூனை தான் வந்தது. வெள்ளை பூனையும் அதன் நீல நிற கண்களும். திடுக்கிட்டு எழுந்தவள் தவித்து தான் போனாள். பாவம் சிறு குட்டி, எங்கு என்ன செய்கிறதோ என்று பரிகவித்தாள்.. பெண் பிள்ளைகள் வந்தவுடன் பெண்களுடன் சேர்ந்து அவளும் தேடிச் சென்றாள்.. விட்ட இடத்தில் பூனைக்குட்டி இல்லை.
பாலை ஊற்றுவதற்கு எப்பொழுதும் அழைக்கும் அழைப்பு,, பெண்கள் அந்தக் குட்டிக்கு வைத்த பெயர் என்று ஒவ்வொரு பக்கமாக பிரிந்து தேடிச் சென்றனர்.
கரண்ட் கம்பம் இருந்த புதருக்குள் ஒளிந்து கொண்டு இருந்தது அந்த வெள்ளை குட்டி பூனை.
“ஃகிளிக் ஃகிளிக்’, என்ற சுப்புலட்சுமியின் குரலுக்கு. அது மியாவ் என்று குரல் கொடுத்தது. மீண்டும் சுப்புலட்சுமி குரல் கொடுக்க. புதருக்குள் இருந்து எட்டிப் பார்த்தது பூனைக்குட்டி. சுப்புலட்சுமியை பார்த்தவுடன் தாவி வந்து அவளிடம் ஒட்டிக்கொண்டது.
தாயின் அரவணைப்போடு கட்டி அணைத்துக் கொண்டாள் சுப்புலட்சுமி அந்த வெள்ளை குட்டி பூனையை.
(இது உண்மை சம்பவம்)
ஐந்து நாள் மருத்துவமனையில் இருந்துவிட்டு சுப்புலட்சுமி வீட்டிற்கு வந்தார். எல்லா பரிசோதனைகளையும் எடுத்துவிட்டு மயக்கம் வருவதற்கான காரணம், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு என்று மாத்திரைகளை கொடுத்து வீட்டிற்கு நல்லபடியாக அனுப்பி வைத்திருந்தார்கள் மருத்துவர்கள். பெரிதாக ஒன்றும் இல்லை என்ற நிம்மதியுடன் வீட்டுக்கு வந்து ஓய்வாக சாய்ந்தாள் சுப்புலட்சுமி.
அவளுக்கு நாற்பது வயது இருக்கும். திருமணமாகி இருபது வருடங்களை கடந்து விட்டவளுக்கு இரண்டு முத்தான பெண் பிள்ளைகள். கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தார். மனைவிக்கு அடிக்கடி உடல் சோர்வும் மயக்கமும் ஏற்பட பயந்துவிட்டவர், மருத்துவமனையில் சேர்த்து விட்டிருந்தார்.
எதுவும் பெரிதாக இல்லை என்று அறிக்கை வந்ததும் கணவன் குழந்தைகள் என்று அனைவருக்கும் நிம்மதி தான். பெண் பிள்ளைகள் என்பதால் வீட்டில் பொறுப்பாக அவர்களே அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டனர். மருத்துவமனையில் இருக்கும் போதும் சரி, தாய் வீட்டிற்கு வந்த பிறகும் சரி. தாய்க்கு ஓய்வு கொடுத்து விட்டு அவர்களே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ள. அன்று இரவு நிம்மதியாக உறக்கத்தை தழுவினார் சுப்புலட்சுமி.
நல்ல உறக்கத்தில் ‘மியாவ் மியாவ்’, என்று பூனைகள் கத்தும் சத்தம் அவர் காதுகள் அருகிலேயே கேட்டது. திட்டிட்டு எழுந்து அமர்ந்தவர். சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள். அவருடைய படுக்கையறை தான். இரவு விளக்கில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. குழல் விளக்கை சுழல விட்டவள், அங்கும் இங்கும் பார்வையிட ஒன்றும் பெரிதாக அவளுக்கு புலப்படவில்லை. மாத்திரையின் உபயத்தாள் தன்னுடைய கற்பனையாக இருக்கும் என்று நினைத்து படுத்துவிட்டாள். பகலில் எல்லாம் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. மீண்டும் மறுநாள் இரவு அதேபோல பூனை கத்தும் சத்தம். கணவனும் இரவு வேலைக்குச் சென்று விட. மகள்களை அழைத்து கூறினார். விளக்கு ஒளிர்ந்ததும் மீண்டும் சத்தம் கேட்கவில்லை.
‘உன்னுடைய கற்பனை’, என்று மகள்கள் கூறி விட.
‘அப்படித்தான் இருக்குமோ??’ என்ற சந்தேகமே வலுக்க ஆரம்பித்துவிட்டது சுப்புலட்சுமிக்கு. ஆனால் அது கற்பனையா இல்லையா என்று அடுத்த நாள் தெரிந்து விட்டது.
ஆம் இப்பொழுது பகலிலும் சத்தம் வர. கட்டிலின் தலைமாட்டில் இருந்த சோபாவுக்கு அடியில் இருந்து சத்தம் வருவதை உணர்ந்தவள். சோபாவை நகர்த்தி பார்க்க. அங்கே ஒரு பெரிய பூனையும் இரண்டு குட்டி புனைகளும் இருந்தது. சுப்புலட்சுமியை பார்த்ததும் தாய் பூனை ஓடிவிட அது எப்படி வந்தது என்று அப்போதுதான் கண்டறிந்தார். மாடி கிரில் வழியாக வீட்டிற்குள் நுழைந்திருந்தது குழந்தைகளுடன். அவ்வளவு சின்ன துவாரத்தில் இவ்வளவு பெரிய பூனை எப்படி வந்தது என்று ஆச்சரியம் தான் அவளுக்கு.
சுப்புலட்சுமிக்கு வளர்ப்பு பிராணிகள் என்றால் அசுசையான உணர்வு ஏற்படும். தொட்டு தூக்குவதெல்லாம் வாய்ப்பே இல்லை.
கணவன் நாய் வளர்க்கலாமா கோழி வளர்க்கலாமா??, என்று கேட்கும் போது கூட. தனக்கு அது பிடிக்காது என்று வளர்க்கவே தடை விதித்தவள் அவள் .
பூனையை பார்த்ததும் சும்மா விடுவாளா, தாம் தூம் என்று சத்தம் போட்டாள். ஒரு ஐந்து நாள் வீட்டில் இருக்கவில்லை என்றால் வீட்டை பூனைக்கு குத்தகை விட்டு விடுவீர்களா என்று.
கணவனும் அலுவலகம் மருத்துவமனை என்று இருக்க. மகள்களும் சமையல் வேலை கல்லூரி மருத்துவமனை என்று இருக்க யாருக்கும் பூனையை பார்க்க, இல்லையில்லை வீட்டை பார்க்க நேரம் இருந்திருக்கவில்லை. பாவம் அவர்களும் என்ன செய்வார்கள்?. பள்ளிக்கும் கல்லூரிக்கு விடுப்பு எடுத்து தாயை மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
ஆள் அரவமில்லாமல் வீடு எப்பொழுதும் காலியாக இருக்க. இரவில் மட்டுமே மனிதர்கள் வருவதால் பிறந்த பச்சிளம் பூனைக்குட்டிகளுடன் தாய் பூனை அங்கே வந்து அடைக்கலமாகிவிட்டது. இப்போது மனிதர்களை பார்த்ததும் குட்டிகளை விட்டுவிட்டு சிட்டாக பறந்து விட்டது.
மிகவும் சிறிய குட்டிகள் தான். என்ன செய்வது என்று தெரியாமல் மொட்டை மாடியில் கொண்டு சென்று ஓரமாக ஒரு பழைய அட்டை பெட்டிக்குள் வைத்துவிட்டு வந்தனர். அதையும் சுப்புலட்சுமி செய்யவில்லை அவளுடைய மகள்தான் செய்தாள்.
அன்று இரவும் அதே போல சத்தம். எப்படி இது சாத்தியமானது. ஆனால் இம்முறை கட்டிலின் அருகில் இல்லை வீட்டின் உள்ளே மட்டும் கேட்டது. எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்தால் படிக்கட்டின் மறைவில் ஒளிந்து கொண்டு இருந்தார்கள். இப்பொழுது தாய் இல்லை, குட்டிகள் இரண்டும் மட்டுமே இருந்தது. மீண்டும் கையுறையை அணிந்து கொண்டு மகள் அவர்களை வெளியே விட்டு விட்டு வந்தாள்.
அடுத்த நாளும் அதுவே தொடர்ந்தது. ஆனால் இப்பொழுது ஒரே ஒரு பூனை குட்டி மட்டுமே கத்திக் கொண்டிருந்தது .
ஒரு வெள்ளைக் குட்டியை மட்டும் விட்டுவிட்டு இன்னொரு குட்டியை தூக்கிக் கொண்டு சென்று விட்டது அந்த தாய் பூனை. இம்முறை அந்த வெள்ளைப் பூனை மட்டும் தனியாக கத்திக் கொண்டே இருந்தது.
வருத்தப்பட்ட சுப்புலட்சுமியின் கணவர். நீடில் வாங்கி எடுத்து வந்து அதில் பாலை உறிஞ்சி அந்தப் பிஞ்சு வெள்ளை பூனைக்கு கொடுக்க ஆரம்பித்தார்.
குட்டி மட்டும் தனியாக இருப்பதால் என்ன செய்வது என்று யோசித்தவர் பாலை கொடுத்து விட்டு மீண்டும் வெளியில் விட்டனர் பெண்கள் இருவரும். ஆனால் தனியாக இருக்க பயந்து கொண்டு அந்தக் குட்டி வெள்ளை பூனை கிரில் வழியாக உள்ளே நுழைந்து வீட்டின் உள்ளே கத்திக்கொண்டே இருந்தது.
வேறு வழி இல்லாமல் பால் கொடுத்தனர். தாய் பூனை வந்து அந்த வெள்ளைப் பூனையை தூக்கிச் சென்று விடும் என்று பார்த்தால் தாய்பூனை வரவே இல்லை. அந்த குட்டி பூனைக்கோ பார்வை கூட சரியாக தெரியவில்லை. படிக்கட்டு திட்டில் ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து அந்த பூனை குட்டியை பத்திரமாக வைத்துக் கொண்டு ஒரு வாரம் பார்த்த போதும் அந்த தாய் பூனை வருவதாகவே தெரியவில்லை.
அது வார விடுமுறை நாள் என்பதால். அந்த இரண்டு நாட்களும் அவர்கள் இந்த குட்டியை பார்த்துக் கொண்டனர். தந்தை இரண்டு மகள்கள் என்று அந்த குட்டி இடம் ஐக்கியமாகிவிட்டனர். ஆனால் சுப்புலட்சுமி மட்டும் ஒதுங்கியே நின்றாள் .
கணவனுக்கும் வேலைக்கு செல்ல வேண்டும் பெண்களுக்கும் கல்லூரி பள்ளி என்று செல்ல வேண்டும். அனைவரும் சென்று விட இப்பொழுது சுப்புலட்சுமி மட்டுமே வீட்டில் இருந்தாள் .
இப்பொழுதும் அவளுக்கு பூனை என்றால் அசுசை தான். ஆனால் ஒரு தாயாக, தாய் விட்டு சென்ற அந்த குட்டி பூனையை பார்ப்பதற்கு பாவமாக இருக்க. அதை தூக்காமல் அதற்கு கணவனின் வழியில் பால் புகட்டி கொண்டு இருந்தாள். இப்படியே ஒரு வாரம் சென்றது.
அது மிருகம் அவளுக்கு பிடிக்காது என்ற நிலை மாறி. ஒரு குழந்தையிடம் தாய்க்கு ஏற்படும் அன்பு ஏற்பட்டுவிட்டது சுப்புலட்சுமிக்கு. இப்பொழுதும் அந்த தாய் பூனை வரும் என்று பார்த்துக் கொண்டிருக்க. அது வருவதாக தெரியவில்லை.
அந்த குட்டி பூனைக்கு பார்வை தெளிவடைய ஆரம்பித்தது. அது ஒரு வாரம் பால் புகட்டிக் கொண்டிருந்த சுப்புலட்சுமியை தாயாக நினைக்க ஆரம்பித்து விட்டது. அந்த பூனையை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிய பெண்களை விட அதற்கு முதலில் பாவம் பார்த்து பாலை ஊட்டிய அவளுடைய கணவனை விட. அது இப்பொழுது அவளிடம் தான் ஒட்டிக்கொண்டது. இருந்தாலும் சுப்புலட்சுமிக்கு அதை தூக்க ஏதோ போல இருந்தது. அந்த எலும்புகள் எல்லாம் கைகளில் படும்போது உடல் முழுவதும் புல்லரிக்கும். அதனால் அதை எப்பொழுதுமே அவள் விரும்ப மாட்டாள்.
அடுத்த விடுமுறை நாள் வந்தது. பெண் பிள்ளைகள் மீண்டும் அந்த வெள்ளைக் குட்டி பூனையிடம் ஐக்கியம் ஆகிவிட்டனர். மொட்டை மாடியில் செடிக்கு தண்ணீர் ஊற்ற கூட பூனையுடனே சென்றனர். அதன் பிறகு அங்கே அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது அந்த வெள்ளை பூனையின் தாய் அதனுடைய இன்னொரு குட்டியை தூக்கிக் கொண்டு வந்தது.
தாய் வந்து விட்ட பிறகு அவர்களிடம் விடுவது தானே நியாயம். அது அந்தப் பெண் பிள்ளைகளுக்கும் புரிய. குட்டியை தாயிடம் விட்டனர்.. அந்த தாய் அந்தத் பூனைக்குட்டியை தூக்கிச் செல்ல நினைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. அது அந்த தாய் பூனை மட்டுமே அறிந்த ஒன்று.
தாயும் அந்த வெள்ளை குட்டி பூனையும் ஒரே நேர்கோட்டில் நின்று ‘மியோவ் மியோவ்’ என்று பேசிக் கொண்டனர். இவர்களும் மறைவாய் நின்று என்ன செய்கிறார்கள் அவர்கள் என்று பார்க்க. வெள்ளை பூனை மீண்டும் வீடு வந்து சேர்ந்தது.
தாய் அழைத்து செல்லவில்லையா??. எதனால் என்று யோசித்தவர்களுக்கு பிறகு தான் புரிந்தது. அதற்குப் பார்வை தெரியும் போது பரீட்சையமான முகம் மனிதர்களின் முகம். அது அவர்களை தான் தன் குடும்பமாக நினைத்து விட்டது. அந்த வீட்டில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பிறகு என்ன வீட்டிற்குள்ளும் வந்து விட்டது.
…….
அப்பொழுது சுப்புலட்சுமிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட பூனையின் கவனிப்பை அவரால் சரிவர பார்க்க முடியவில்லை என்று புலம்பி தள்ளினாள் சுப்புலட்சுமி. அவளுடைய கணவன் வெள்ளை குட்டி பூனையை ஒரு பெட்டியில் போட்டு வெளியில் சென்று விட்டு விட்டு வந்து விட்டார்.
சுப்புலட்சுமி மாத்திரையை போட்டுவிட்டு மதிய உறக்கத்திற்கு செல்ல. கனவில் கூட அந்த பூனை தான் வந்தது. வெள்ளை பூனையும் அதன் நீல நிற கண்களும். திடுக்கிட்டு எழுந்தவள் தவித்து தான் போனாள். பாவம் சிறு குட்டி, எங்கு என்ன செய்கிறதோ என்று பரிகவித்தாள்.. பெண் பிள்ளைகள் வந்தவுடன் பெண்களுடன் சேர்ந்து அவளும் தேடிச் சென்றாள்.. விட்ட இடத்தில் பூனைக்குட்டி இல்லை.
பாலை ஊற்றுவதற்கு எப்பொழுதும் அழைக்கும் அழைப்பு,, பெண்கள் அந்தக் குட்டிக்கு வைத்த பெயர் என்று ஒவ்வொரு பக்கமாக பிரிந்து தேடிச் சென்றனர்.
கரண்ட் கம்பம் இருந்த புதருக்குள் ஒளிந்து கொண்டு இருந்தது அந்த வெள்ளை குட்டி பூனை.
“ஃகிளிக் ஃகிளிக்’, என்ற சுப்புலட்சுமியின் குரலுக்கு. அது மியாவ் என்று குரல் கொடுத்தது. மீண்டும் சுப்புலட்சுமி குரல் கொடுக்க. புதருக்குள் இருந்து எட்டிப் பார்த்தது பூனைக்குட்டி. சுப்புலட்சுமியை பார்த்தவுடன் தாவி வந்து அவளிடம் ஒட்டிக்கொண்டது.
தாயின் அரவணைப்போடு கட்டி அணைத்துக் கொண்டாள் சுப்புலட்சுமி அந்த வெள்ளை குட்டி பூனையை.