• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
157
முனியாண்டி ஹோட்டல்



நாலடி சந்து, அதற்கு பின்புறம் சற்று வரிசையான ஓட்டு வீடுகள், இடதுபுறம் பவா மெடிக்கல் வலது புறம் ராஜேஸ்வரி மளிகை கடை, அதன் அருகில் முருகன் கறிக்கடை, நாலு ரோடு சந்திக்கும் முச்சந்தியில் முனியாண்டி ஹோட்டல் இருக்கு.



பழைய காலத்து ஓட்டு வீடு தான் இப்போது ஹோட்டலாக இருக்கு. உள்ளே சென்றால் ஓடுகளின் மேல் எல்லாம் கருப்பு அடஞ்ச புகைமூட்டம்.



சரியில்லாத தரைத்தளம். இடது புறத்தில் நாலு மேஜை, வலது புறத்தில் மூன்று மேஜை, மொத்தம் ஏழு மேஜை மட்டும் போடப்பட்டு இருந்தது.



காலையில் பூரி ,தோசை, வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர் சாதம், பூரிக்கு குருமா தோசைக்கு சாம்பார் சட்னி, காலை ஏழு மணி முதல் பன்னிரண்டு மணி வரை தான் தோசையும், பூரியும் இருக்கும்.



நண்பகல் சோறு தான். சோற்றுக்கு சிக்கன் குழம்பு, ரசம், சாம்பார், சிக்கன் கிரேவி, மோர் இருக்கும்.

மூணு மூணு வரை தான் அதுக்கு அப்புறம் ஆறு மணியிலிருந்து புரோட்டா, தோசை சப்பாத்தி,இட்லி.

புரோட்டா நல்லா பெரிதாக சுடா நல்லா இருக்கும். சப்பாத்தியும் சுட சுட நல்லா இருக்கும்.

முனியாண்டி கல்லாப்பெட்டியில் அருகே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்.

குட்டையான உயரம், முண்டா பனியன், கைலி கட்டிக்கொண்டு கண்ணே கரைன்னு என்று முகம்.

தொப்பை வெளியில் தெரிந்தபடி இருக்க கடைக்குள் உள்ளே வந்து பார்சல் கட்ட தொடங்கி விட்டார்.

அடிக்கடி போன் வந்து கொண்டே இருக்க ஹலோ

ம்…சொல்லுங்க

மொத்தம் பத்து பார்சல்

சரி அண்ணே கட்டிடறேன்னு சொல்லுவார் முனியாண்டி.

கடைக்கு எகுத்தாப்புல இவரோட மளிகை கடை இருக்கு.

சின்ன கடை தான் பெரிய கடை இல்லை.

இவருடைய மனைவியை பஞ்சவர்ணம் தான் கடையை பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

பஞ்சவர்ணத்துக்கு அம்பது வயசு பார்க்க முப்பது வயசு பொம்பள மாதிரி இருப்பா.

நல்ல குண்டு, குட்டையான உயரம், சுருண்ட கூந்தல்.

பஞ்சவர்ணத்திற்கு ஒரு மகன் கல்லூரியில் கோவையில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு மக உண்டு.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள்.மல்ல மல்லிகை கடைக்கு ஆள் வராத நேரங்களில் ஹோட்டல் கடைக்கு வந்து சாம்பார் ,சட்னி, பார்சல் கட்ட ஆரம்பித்து விடுவாள்.

பற்றாக்குறைக்கு இட்லி அவித்து கொடுப்பாள் பஞ்சவர்ணம்.

மெயின் ரோட்டில் இருந்து உள்ளே இருக்கும் கடைதான் முனியாண்டி கடை.

மெயின் ரோட்டில் இருக்கும் ஹோட்டல் கடைகளில் எட்டில் எட்டு ரூபாய், முனியாண்டி கடையில் விலை மிகவும் குறைவு தோசை 15, இட்லி 6 ரூபாய், காசுக்கு தகுந்த நல்லா சாப்பாடு தான் சாம்பார் அவ்வளவு ருசியாக கெட்டியாக இருக்கும்.

சட்டினி தேங்காய் சட்னி, தக்காளி சட்னி தான்.

தக்காளி சட்னி , தேங்காய் சட்னி தண்ணி ஊத்தாம நல்லா கெட்டியா இருக்கும்.

மெயின் ரோடு கடைக்கு சென்று சாப்பிடும் அனைவரும் இங்க தான் வருவார்கள்.

ஹிந்தி காரர்கள் பெரும்பாலும் அதிகம்.

இரவு 12 மணி வரை கடை இருக்கும்.

முனியாண்டிக்கு ஒரு டிவிஎஸ் வண்டி உண்டு.

அதுல பார்சல் எல்லாம் யார் ,யாருக்கு கொடுக்க வேண்டுமோ?

அங்கே எல்லாம் சென்று கொடுத்துவிட்டு தான் வருவார்.

கடைக்கு தேவையான எல்லா பொருட்களையும் பெரும்பாலும் வண்டியிலேயே வாங்கி வந்து விடுவார், காலையில சரியாக 7 40க்கு பார்க்கலாம் அவர உழவர் சந்தையில் இருந்து காலையிலேயே வாழையிலை வாங்கிக் கொண்டு வருவார்.

முனியாண்டி கடைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறான் சமூக நாதன்.

ஆமாம்.. சண்முகநாதன் தான்.

தனது கிராமத்தை விட்டு இங்கு வந்து திருப்பூர் பின்னாலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

கிட்டத்தட்ட மூன்று வருடமாக தனியாக சமைத்து உண்டு வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறான் .

சன்முக நாதன் அளவான ஓட்டு வீடு வாடகைக்கு எடுத்து அங்குதான் தங்கி இருக்கிறான்.

முனியாண்டி கடைக்கு இப்போது தான் வந்து தினமும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான்.

தினமும் பணம் கொண்டு தான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறான்.

திடீர்னு சண்முகநாதனிடம் பணம் தட்டுப்பாடு ஏற்பட ஒரு நாளுக்கு குறைந்த செலவில் சாப்பிட நினைத்தான்.

சண்முகநாதன் வேறு ஒரு நண்பர்களிடத்தில் ஒரு லட்சம் வாங்கி இருக்கிறான்.

அதற்கு வட்டி கட்டவே வாங்குற சம்பளம் சரியா இருக்கு.

ஒரு நாளைக்கு இரவு மட்டும் தான் சாப்பிட்டான்.

தினம் காசு கொடுத்து சாப்பிட சன்முக நாதனுக்கு சற்று சிரமமாக இருந்தது.

முனியாண்டி கடையில் ஒரு மாதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.

காசு பற்றாக்குறைவினால் இரவு மட்டுமே சாப்பிட ஆரம்பித்தான்.

முனியாண்டி கிட்ட தினமும் இங்கே தான் சாப்பிடுறேன் இரவு மட்டும் சாப்பிட்டுகிறேன், எனக்கு அடுத்த மாசம் அஞ்சாம் தேதி சம்பளம் கிடைக்கும் மொத்தமாக கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னான் சண்முகநாதன்.

முனியாண்டி சண்முகநாதனிடம்

இப்படித்தான் சொல்லுவாங்க

.ஆயிரம் ,இரண்டாயிரம், ஆறாயிரம் வந்த பிறகு ஓடிப் போயிடுவாங்க ..

என்னோட கடை இப்படியே தான் இருக்கு.

பாத்தீங்களா!

இப்படியே தான் இருக்குது.

இப்ப எல்லாம் யாருக்கும் கொடுக்கிறது இல்லை கடன்.

சண்முகநாதனிடம் கம்பெனியில் வேலை செய்யும் ராஜசேகர் சொல்லித்தான் முனியாண்டி கிட்ட கேட்டான்.

சண்முகநாதன் அப்பா பேரு விசுவநாதன்.

பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட அப்பா ஊரை விட்டு வந்தவன் தான் இந்த சண்முகநாதன்.

சண்முகம் என்ற பெயருக்கு பின்னால் அப்பா பேரு நாதன் என்பதை சேர்த்துக்கொண்டு சண்முகநாதன் வச்சுகிட்டான்.

சண்முகநாதனுக்கு ஜாதகத்துல தோஷம் செவ்வாய் தோஷம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் கம்பெனில வேலை செய்து கொண்டு இருக்கும்போது தேன்மொழியை பார்த்தான். கிட்டத்தட்ட தேன்மொழியோடு பழக்கம் தான்.

முனியாண்டி ஹேட்டலில் சாப்பிட்டு முடித்த பிறகு தான் ஆலமரச்செல்வனுக்கு தெரியும் சட்டை பையில் இருந்த பணத்தை காணவில்லை.

கை கழுவி விட்டு தனது சட்டை பாக்கெட் லில் தேடி பார்த்தான்.

காணவில்லை.

முனியாண்டி கிட்ட அண்ணே பணத்தை காணவில்லை நாளைக்கு தரேன்னு சொன்னான்

ஆலமரச்செல்வன்.

பரவாலப்பா..

பிறகு தெனமும் இரவு இங்கே சாப்பபிடு

அடுத்த மாசம் கூட சேர்த்து கொடுன்னு

முனியாண்டி சொல்ல ஆலமரச் செல்வனுக்கு

கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது.



-கோம்பை மா.மணிகண்டன்
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top