New member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 15
- Thread Author
- #1
கொஞ்ச நாளாய் தான் எனக்கு இது நடக்கிறது. மிகச் சில தினங்களுக்கு முன்பு இருந்துதான் அந்த உணர்வு தோன்றுகிறது. அது வரும்போது எல்லாம் என் நிம்மதி பறி போய், என்னைப் பரிதாப ஜீவனாகத் தவிக்க வைக்கிறது. என்னால் இதை, இந்த இதய பிசைவை தாங்க முடியும் என்று தோன்றவில்லை. எந்தக் கனத்திலும் அளவுக்கு மீறி ஊதப்பட்ட பலூன்போல நான் வெடித்து சிதறி விடுவேன் போல இருக்கிறது.
அதன் ஆரம்ப அறிகுறியாகத் தானோ என்னவோ, எனது உடல் எடையை இழக்க தொடங்கி உள்ளது. அதுவும் அசுர வேகத்தில். இன்னும் கொஞ்ச நாள் வரை இந்நிலை நீடித்தால், என் உடலை நானே உணர கூட முடியாமல் போய்விடும்.
‘எல்லாத்துக்கும் காரணம் இந்த அரசாங்கம் தான் சார். தன் பிள்ளைகளுக்குச் சோறு போட வக்கு இல்லாத பெற்றோர்களுக்கு எதுக்கு பிள்ளைகள்? தன் குடிமகனுக்கு வேலை கொடுக்க முடியாத அரசாங்கத்திற்கு, எதற்கு இத்தனை மக்கள்? என் புலம்பல் பெரிது. காரணம் நான் ஒரு வேலை இல்லாப் பட்டதாரி. ஆனால், உங்களிடம் நான் சொல்ல வந்தது எனது பர்சனல் பிரச்சனைகளைப் பற்றி அல்ல. மாறாக எனக்குச் சில தினங்களாக நடக்கும் அந்த விசித்திரங்களை பற்றி. குறிப்பாக மாடி வீட்டில் அந்த அந்நியன் குடி வந்ததிலிருந்து.’
‘என் பெயர் ரமேஷ். நான் தூத்துக்குடி பக்கம் ஒரு பெயர் சொன்னால் உங்களால் அறிந்து கொள்ள முடியாத ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். படித்து விட்டு வேலை தேடும் லட்சோப லட்சம் பாவிகளில் ஒருவன். நானும் இறுதியில் படை எடுத்தது ஆபத்பாந்தவன் சென்னை நோக்கித் தான். இன்னொரு முக்கிய காரணம் அங்கே தான் எனது எல்லோர் நண்பன் சரவணன் இருக்கிறான். என்னைப் போல விஐபியாகச் சென்று, அங்கே தட்டுத் தடுமாறி இப்போது ஏதோ ஒரு கம்பெனியில் அக்கவுண்டாக நல்ல வேலையில் இருக்கிறான். அவன் தான் எனக்குச் சொன்னான். தான் ஒரு மேன்ஷனில் இருப்பதாக. அவனுக்கு இப்போது கம்பெனி குவார்டர்ஸ கிடைத்துவிட்டதால், அவன் இருந்த அறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் (லாபம் = அட்வான்ஸ் மிச்சம்) அங்கே மாடி அறை ஒன்று காலியாக இருக்கிறது என்றும். வேற யாரை வேணும் என்றாலும் கூட அழைத்து வா என்றும் சொன்னான்.’
நண்பனிடம் தகவலைப் பெற்றதும், உடனே அந்த மேன்ஷனில் குடியேறினேன். ஒரு முறை வந்து பார்த்துவிட்டு ஏற்பாடுகள் செய்துவிட்டுச் சென்றான். அந்த மேன்சனை பற்றி நான் சொல்லி ஆக வேண்டும். என்னைப் பற்றியும் தான். சென்னையில் ஒரு ஒதுக்கு புறத்திலிருந்தது அந்தக் கட்டிடம். கட்டப்பட்ட ஆண்டு நிச்சயம் ஆங்கிலேயன் நடை போட்ட ஒரு ஆண்டு. உள்ளே பகலிலேயே இருட்டு எபெக்ட். நமக்குப் பழைய சத்திய ஜித்ரே படங்களை நினைவுபடுத்தும். உள்ளே ஹாலில்தான் மாடிக்குச் செல்லும் படிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவைகள் அந்தக் கால ஸ்டைலில் அமைக்கப்பட்ட மரப் படிகள். அவைகளை பார்க்கும்போது எல்லாம், மனிதன் ஏறினால் எப்படிச் சத்தம் வரும் என்று ஒரு ஆவல் வருவதை என்னால் தடுக்க முடியாது.’
‘மாடி அறையில் நான் வந்ததிலிருந்து நீண்ட நாளுக்கு யாருமே வந்தது கிடையாது. ஒவ்வொரு நாளும் நான் வேலை தேடி அலைந்து களைத்து வரும்போதும் என்னை வரவேற்பது அந்த ரிசப்ஷனில் இருக்கும் ஒரு வயதான கிழவன்தான். அவன் பேசி நான் கேட்டதாக நினைவு இல்லை. பேசுவானா என்றே தெரிய வில்லை.’
‘அப்புறம் ஒரு விஷயம். என்னைப் பற்றி ஒரு கேவலமான உண்மை உங்களிடம் சொல்லாமல் மறைக்கலாம் என்று தான் உள்ளம் சொல்கிறது. இவைகளை யாரிடமாவது பகிர்ந்தால் தான், எனக்குக் கொஞ்சமேனும் ஆறுதல் கிடைக்கும் போல இருப்பதால், இதை மறைக்காமல் சொல்லுகிறேன். அதாவது பல மாத வேலையின் அலைச்சலும், ஆற்றாமையும், தோல்வியும் என்னை விரக்தியின் உச்சியில் விரட்டிய ஒரு கோடி காலத்தில் ஒரு நாளில் தான், நான் தற்கொலைக்கு முயன்றேன். எனது வாழ்வில் நான் எதையும் விறுவிறுப்பாக உணராத சோகை வாழ்க்கை எனக்குப் போர் அடித்து விட்டததனால் வந்த முடிவு அது.’
ஆனால், அன்றைய தினம்தான் எல்லாம் தொடங்கியது.
பூச்சி மருந்தை நான் பல கலவையான சிந்தனைகள் தாக்குதலுக்கு இடையில் உற்று பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்வில் இனி ஏதும் நான் அடைய வேண்டியதில்லை என்கிற நிலையில் இருந்த, அந்தக் கணத்தில் தான் என் வாழ்வில் அந்த விறுவிறுப்பு வினாடிகள் தோன்றின. முதல்முறையாக எனது காதுகள் அந்த ஒலியைக் கேட்டது. நான் நீண்ட நாளாகக் கேட்கத் துடித்த அந்த ஒலி. க்ரச்சக்... க்ரச்சக்... க்ரச்சக்...
மாடியின் அந்தப் படியில் யாரோ ஏறும் ஒலி. ஏனோ எனக்கு இந்த வினாடி வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக, அந்த ஒலிக்குச் சொந்தக்கார மனிதனைப் பார்க்கும் ஆவல் எழுந்தது.’
‘பூச்சி மருந்து டப்பாவைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, முதலில் செய்ய வேண்டிய வேலையாக ஓடிச் சென்று மாடிப்படிகளை நோக்கினேன். எப்போதும் அந்தக் கட்டிடத்திற்குள் இருக்கும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்ட ஒளிபோல, ஒளி தரும் பழைய கால சோகையான சாண்ட்லியர் வெளிச்சத்தில் பார்த்தேன். அந்த மனிதன் தனது கடைசி படிகளில் இருந்தான். ஏனோ அவனைப் பார்க்கும்போது ஒரு இனம் புரியாத மர்ம உணர்வு என்னைத் தாக்கியது. அந்த உணர்வு எனக்கு மிகப் புதிது. ஏன் அந்த மனிதனை பார்க்கும்போது மட்டும் இது தெரியவில்லை. அதற்கான விடை அறிய எனது மனம் ஆவல் கொண்டது.’
நான் சில நாளாக வேலை தேடும் படலத்தை அறவே நிறுத்திவிட்டு, பாதாள சாக்கடையில் ஒளிந்து இருக்கும், ஒளி ஒத்து கொள்ளாத ஒரு கரப்பான் போல, அந்த அறைகளில் அடைந்து கிடந்தேன். எனவே அடுத்த நாள் காலை அவன் முகத்தைப் பார்க்க எழுந்து ஓடி வந்தேன். ஆனால் அப்போதைக்கு அவன் அந்த அறையில் இல்லை. வேலை தேடியோ அல்லது வேலைக்கோ அல்லது வேறு எங்கோ ரூமை பூட்டிவிட்டுச் சென்றிருந்தான். அவனிடம் ஏதோ ஒன்று இருந்ததே அது என்ன?’
அதன் ஆரம்ப அறிகுறியாகத் தானோ என்னவோ, எனது உடல் எடையை இழக்க தொடங்கி உள்ளது. அதுவும் அசுர வேகத்தில். இன்னும் கொஞ்ச நாள் வரை இந்நிலை நீடித்தால், என் உடலை நானே உணர கூட முடியாமல் போய்விடும்.
‘எல்லாத்துக்கும் காரணம் இந்த அரசாங்கம் தான் சார். தன் பிள்ளைகளுக்குச் சோறு போட வக்கு இல்லாத பெற்றோர்களுக்கு எதுக்கு பிள்ளைகள்? தன் குடிமகனுக்கு வேலை கொடுக்க முடியாத அரசாங்கத்திற்கு, எதற்கு இத்தனை மக்கள்? என் புலம்பல் பெரிது. காரணம் நான் ஒரு வேலை இல்லாப் பட்டதாரி. ஆனால், உங்களிடம் நான் சொல்ல வந்தது எனது பர்சனல் பிரச்சனைகளைப் பற்றி அல்ல. மாறாக எனக்குச் சில தினங்களாக நடக்கும் அந்த விசித்திரங்களை பற்றி. குறிப்பாக மாடி வீட்டில் அந்த அந்நியன் குடி வந்ததிலிருந்து.’
‘என் பெயர் ரமேஷ். நான் தூத்துக்குடி பக்கம் ஒரு பெயர் சொன்னால் உங்களால் அறிந்து கொள்ள முடியாத ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். படித்து விட்டு வேலை தேடும் லட்சோப லட்சம் பாவிகளில் ஒருவன். நானும் இறுதியில் படை எடுத்தது ஆபத்பாந்தவன் சென்னை நோக்கித் தான். இன்னொரு முக்கிய காரணம் அங்கே தான் எனது எல்லோர் நண்பன் சரவணன் இருக்கிறான். என்னைப் போல விஐபியாகச் சென்று, அங்கே தட்டுத் தடுமாறி இப்போது ஏதோ ஒரு கம்பெனியில் அக்கவுண்டாக நல்ல வேலையில் இருக்கிறான். அவன் தான் எனக்குச் சொன்னான். தான் ஒரு மேன்ஷனில் இருப்பதாக. அவனுக்கு இப்போது கம்பெனி குவார்டர்ஸ கிடைத்துவிட்டதால், அவன் இருந்த அறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் (லாபம் = அட்வான்ஸ் மிச்சம்) அங்கே மாடி அறை ஒன்று காலியாக இருக்கிறது என்றும். வேற யாரை வேணும் என்றாலும் கூட அழைத்து வா என்றும் சொன்னான்.’
நண்பனிடம் தகவலைப் பெற்றதும், உடனே அந்த மேன்ஷனில் குடியேறினேன். ஒரு முறை வந்து பார்த்துவிட்டு ஏற்பாடுகள் செய்துவிட்டுச் சென்றான். அந்த மேன்சனை பற்றி நான் சொல்லி ஆக வேண்டும். என்னைப் பற்றியும் தான். சென்னையில் ஒரு ஒதுக்கு புறத்திலிருந்தது அந்தக் கட்டிடம். கட்டப்பட்ட ஆண்டு நிச்சயம் ஆங்கிலேயன் நடை போட்ட ஒரு ஆண்டு. உள்ளே பகலிலேயே இருட்டு எபெக்ட். நமக்குப் பழைய சத்திய ஜித்ரே படங்களை நினைவுபடுத்தும். உள்ளே ஹாலில்தான் மாடிக்குச் செல்லும் படிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவைகள் அந்தக் கால ஸ்டைலில் அமைக்கப்பட்ட மரப் படிகள். அவைகளை பார்க்கும்போது எல்லாம், மனிதன் ஏறினால் எப்படிச் சத்தம் வரும் என்று ஒரு ஆவல் வருவதை என்னால் தடுக்க முடியாது.’
‘மாடி அறையில் நான் வந்ததிலிருந்து நீண்ட நாளுக்கு யாருமே வந்தது கிடையாது. ஒவ்வொரு நாளும் நான் வேலை தேடி அலைந்து களைத்து வரும்போதும் என்னை வரவேற்பது அந்த ரிசப்ஷனில் இருக்கும் ஒரு வயதான கிழவன்தான். அவன் பேசி நான் கேட்டதாக நினைவு இல்லை. பேசுவானா என்றே தெரிய வில்லை.’
‘அப்புறம் ஒரு விஷயம். என்னைப் பற்றி ஒரு கேவலமான உண்மை உங்களிடம் சொல்லாமல் மறைக்கலாம் என்று தான் உள்ளம் சொல்கிறது. இவைகளை யாரிடமாவது பகிர்ந்தால் தான், எனக்குக் கொஞ்சமேனும் ஆறுதல் கிடைக்கும் போல இருப்பதால், இதை மறைக்காமல் சொல்லுகிறேன். அதாவது பல மாத வேலையின் அலைச்சலும், ஆற்றாமையும், தோல்வியும் என்னை விரக்தியின் உச்சியில் விரட்டிய ஒரு கோடி காலத்தில் ஒரு நாளில் தான், நான் தற்கொலைக்கு முயன்றேன். எனது வாழ்வில் நான் எதையும் விறுவிறுப்பாக உணராத சோகை வாழ்க்கை எனக்குப் போர் அடித்து விட்டததனால் வந்த முடிவு அது.’
ஆனால், அன்றைய தினம்தான் எல்லாம் தொடங்கியது.
பூச்சி மருந்தை நான் பல கலவையான சிந்தனைகள் தாக்குதலுக்கு இடையில் உற்று பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்வில் இனி ஏதும் நான் அடைய வேண்டியதில்லை என்கிற நிலையில் இருந்த, அந்தக் கணத்தில் தான் என் வாழ்வில் அந்த விறுவிறுப்பு வினாடிகள் தோன்றின. முதல்முறையாக எனது காதுகள் அந்த ஒலியைக் கேட்டது. நான் நீண்ட நாளாகக் கேட்கத் துடித்த அந்த ஒலி. க்ரச்சக்... க்ரச்சக்... க்ரச்சக்...
மாடியின் அந்தப் படியில் யாரோ ஏறும் ஒலி. ஏனோ எனக்கு இந்த வினாடி வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக, அந்த ஒலிக்குச் சொந்தக்கார மனிதனைப் பார்க்கும் ஆவல் எழுந்தது.’
‘பூச்சி மருந்து டப்பாவைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, முதலில் செய்ய வேண்டிய வேலையாக ஓடிச் சென்று மாடிப்படிகளை நோக்கினேன். எப்போதும் அந்தக் கட்டிடத்திற்குள் இருக்கும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்ட ஒளிபோல, ஒளி தரும் பழைய கால சோகையான சாண்ட்லியர் வெளிச்சத்தில் பார்த்தேன். அந்த மனிதன் தனது கடைசி படிகளில் இருந்தான். ஏனோ அவனைப் பார்க்கும்போது ஒரு இனம் புரியாத மர்ம உணர்வு என்னைத் தாக்கியது. அந்த உணர்வு எனக்கு மிகப் புதிது. ஏன் அந்த மனிதனை பார்க்கும்போது மட்டும் இது தெரியவில்லை. அதற்கான விடை அறிய எனது மனம் ஆவல் கொண்டது.’
நான் சில நாளாக வேலை தேடும் படலத்தை அறவே நிறுத்திவிட்டு, பாதாள சாக்கடையில் ஒளிந்து இருக்கும், ஒளி ஒத்து கொள்ளாத ஒரு கரப்பான் போல, அந்த அறைகளில் அடைந்து கிடந்தேன். எனவே அடுத்த நாள் காலை அவன் முகத்தைப் பார்க்க எழுந்து ஓடி வந்தேன். ஆனால் அப்போதைக்கு அவன் அந்த அறையில் இல்லை. வேலை தேடியோ அல்லது வேலைக்கோ அல்லது வேறு எங்கோ ரூமை பூட்டிவிட்டுச் சென்றிருந்தான். அவனிடம் ஏதோ ஒன்று இருந்ததே அது என்ன?’