New member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 15
- Thread Author
- #1
அத்தியாயம் 4
அஞ்சலி அழுது கொண்டிருக்க அவளை நெருங்கிய கிருஷ்ணன் ஆத்திரத்தில் கையை ஓங்க, அது அஞ்சலியின் கன்னத்தை நெருங்கும் முன் வீராவின் கை தடுத்தது...
" டேய் நாயே யாரு டா நீ, இப்படி சம்மந்தம் இல்லாம என் பொண்ணு வாழ்க்கையில வந்து அவ வாழ்கையை நாசம் பண்ணிட்டயே, உன்ன " என்று ஆத்திரத்தில் அலறியவர் அவனது சட்டையை கொத்தாக பிடித்து உலுக்க, வீரா அப்படியே நின்றான்.
" ஏன் டா என் பொண்ணு வாழ்க்கையில வந்த, அவளை இப்படி கேவலபடுத்தி நிப்பாட்டவா? " ஆத்திரம் ஒரு பக்கம் தனது மகளின் நிலை கண்டு ஆற்றாமை மறுபக்கம் என்று கலந்து வந்தது கிருஷ்ணனின் குரல்...
தனது சட்டையிலிருந்த கிருஷ்ணனின் கையை விடுவித்து,
" நா ஒன்னும் சம்பந்தம் இல்லாம அவ வாழ்க்கையில வரலங்க, சம்பந்தம் இருக்க போய் தான் வந்தேன். " திடமாக வீராவின் குரல், கிருஷ்ணனின் குரல் இன்னும் ஆத்திரமாக மாறியது,
" என் பொண்ணு வாழ்க்கையில உனக்கு எப்படி டா சம்பந்தம் வந்துச்சு "
" ஏன்னா அது அவ வாழ்கை இல்ல எங்களோட வாழ்கை " வீராவின் குரல் உறுதியாக வந்தது
கிருஷ்ணன் அமைதியாக நின்றார்.
" கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார் எந்த சம்பந்தமும் இல்லாம நாங்க எப்படி இப்படி ஆகிருப்போம்ன்னு? "
"............................."
" அவளை பாக்குற அந்த நொடி வரைக்கும் எனக்கும் தெரியாது அவளை இங்க பாக்க போறேன்னு, அவ வந்து என்னை கட்டி புடிக்குற வரைக்கும் தெரியாது என்னை போல தான் அவளும்ன்னு. இங்க எதுவும் பிளான் பண்ணி எல்லாம் நடக்கலங்க எல்லாமே இயல்பா நடந்தது... "
" அது எப்படி ரெண்.... "
" ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி நடக்கும்ன்னு கேட்க வரீங்க அப்படி தான? " கிருஷ்ணன் கேள்வியையும் சேர்த்து வீரா கேட்டு விட,
" அது தான் எங்களுக்கும் கூட அதிசயமா இருக்கு " என்று வீரா சொல்ல,
குழம்பிப் போனார் கிருஷ்ணன்.
அங்கிருந்த கூட்டம் முழுவதும் அதே குழப்பத்தில் நிற்க்க வீரா அஞ்சலியின் பக்கம் திரும்பி அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.
" நீ ஏன் அம்மு அழுற, மாமா இருக்கும் போது நீ அழ கூடாது டி " சுற்றி இருந்த கூட்டத்தை கருத்தில் கொள்ளாமல் அஞ்சலியின் மீது வீரா கவனம் செலுத்த, அங்கிருந்த யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை...
ஒருவர் அல்ல இரண்டு பேருமே கனவில் ஒருத்தரை இன்னோருத்தர் பார்த்து காதலித்தோம் என்று சொல்லியது அனைவருக்கும் குழப்பதையே கொடுத்தது என்றாலும், அது தான் உண்மை என அவர்கள் இருவரும் நிற்பதிலும் பொய் இருப்பதாக தெரியவில்லை.
கூட்டம் முழுவதும் நிசப்தம் நிறைந்து இருக்க, வீராவை பார்த்து அஞ்சலியின் கழுத்தில் தாலியை கட்ட சொன்னார் கிருஷ்ணன்...
சட்டென்று கிருஷ்ணன் சொல்ல வீராவுக்கு ஒன்றும் புரியாமல் விழித்தான்,
" என்ன தம்பி புரியலயா என் பொண்ணு கழுத்துல தாலிய கட்டுன்னு சொன்னேன்.. "
வீரா இதை சற்றும் எதிர்பார்க்காததால் சட்டென என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்க,
" என்ன டா முழிக்க இவ்ளோ நேரம் ஏதேதோ பேசிட்டு இருந்த இப்போ தாலியை கட்டுன்னு சொல்லவும் முழிக்க, இவ்ளோ தான் உன் கனவு காதலா? "
" என்னங்க என்ன பேசிட்டு இருக்கீங்க? அவன் யாரு என்னன்னு எதுவும் தெரியாம அவனை போய் நம்ம பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொல்லுறீங்க? " கிருஷ்ணனின் மனைவி கிருஷ்ண வேணி கேட்க,
" வேற என்ன பண்ண சொல்லுற வேணி அதான் அவங்க லவ் பண்ணிட்டாங்களே இதுக்கு மேல நாம என்ன பேச? "
" அதுக்குன்னு, நல்லது கெட்டது பாக்காம எப்படி? "
" அதுக்கான உரிமை எல்லாம் நமக்கு கிடையாது வேணி, இப்போ உள்ள குழந்தைங்க நல்லது கெட்டத பத்தி எல்லாம் யோசிக்குறது இல்ல, அப்படி யோசிக்குற புள்ளையையும் நாம பெக்கலை " வேதனையோடு வந்தது கிருஷ்ணனின் குரல், வேணி அவரை ஆறுதல் படுத்த,
" நம்ம புள்ள அப்படி கிடையாதுங்க நம்ம புள்ள நல்ல புள்ளைங்க "
" அடி போடி பைத்தியகாரி, கனவுல பாத்தேன், காதல் பண்ணுனேன்னு இவ்ளோ பெரிய கூட்டத்துக்கு நடுவுல அவனை கட்டி புடிச்சுட்டு நிக்குறா அவளை போய் நல்ல புள்ள நம்ம புள்ளன்னு சொல்லிட்டு இருக்க " என்று பேசும் போதே கிருஷ்ணனின் குரல் தழுதலுத்தது, கண்கள் நீரை சுரந்து தள்ளியது...
தனது கணவனுக்கு துணையாக தன்னை கேளாமலே ஜோடி சேர்ந்து கொண்டது வேணியின் கண்ணீர்.
மனம் கொடுத்த மன்னவன் வருவான்.....
அஞ்சலி அழுது கொண்டிருக்க அவளை நெருங்கிய கிருஷ்ணன் ஆத்திரத்தில் கையை ஓங்க, அது அஞ்சலியின் கன்னத்தை நெருங்கும் முன் வீராவின் கை தடுத்தது...
" டேய் நாயே யாரு டா நீ, இப்படி சம்மந்தம் இல்லாம என் பொண்ணு வாழ்க்கையில வந்து அவ வாழ்கையை நாசம் பண்ணிட்டயே, உன்ன " என்று ஆத்திரத்தில் அலறியவர் அவனது சட்டையை கொத்தாக பிடித்து உலுக்க, வீரா அப்படியே நின்றான்.
" ஏன் டா என் பொண்ணு வாழ்க்கையில வந்த, அவளை இப்படி கேவலபடுத்தி நிப்பாட்டவா? " ஆத்திரம் ஒரு பக்கம் தனது மகளின் நிலை கண்டு ஆற்றாமை மறுபக்கம் என்று கலந்து வந்தது கிருஷ்ணனின் குரல்...
தனது சட்டையிலிருந்த கிருஷ்ணனின் கையை விடுவித்து,
" நா ஒன்னும் சம்பந்தம் இல்லாம அவ வாழ்க்கையில வரலங்க, சம்பந்தம் இருக்க போய் தான் வந்தேன். " திடமாக வீராவின் குரல், கிருஷ்ணனின் குரல் இன்னும் ஆத்திரமாக மாறியது,
" என் பொண்ணு வாழ்க்கையில உனக்கு எப்படி டா சம்பந்தம் வந்துச்சு "
" ஏன்னா அது அவ வாழ்கை இல்ல எங்களோட வாழ்கை " வீராவின் குரல் உறுதியாக வந்தது
கிருஷ்ணன் அமைதியாக நின்றார்.
" கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார் எந்த சம்பந்தமும் இல்லாம நாங்க எப்படி இப்படி ஆகிருப்போம்ன்னு? "
"............................."
" அவளை பாக்குற அந்த நொடி வரைக்கும் எனக்கும் தெரியாது அவளை இங்க பாக்க போறேன்னு, அவ வந்து என்னை கட்டி புடிக்குற வரைக்கும் தெரியாது என்னை போல தான் அவளும்ன்னு. இங்க எதுவும் பிளான் பண்ணி எல்லாம் நடக்கலங்க எல்லாமே இயல்பா நடந்தது... "
" அது எப்படி ரெண்.... "
" ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி நடக்கும்ன்னு கேட்க வரீங்க அப்படி தான? " கிருஷ்ணன் கேள்வியையும் சேர்த்து வீரா கேட்டு விட,
" அது தான் எங்களுக்கும் கூட அதிசயமா இருக்கு " என்று வீரா சொல்ல,
குழம்பிப் போனார் கிருஷ்ணன்.
அங்கிருந்த கூட்டம் முழுவதும் அதே குழப்பத்தில் நிற்க்க வீரா அஞ்சலியின் பக்கம் திரும்பி அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.
" நீ ஏன் அம்மு அழுற, மாமா இருக்கும் போது நீ அழ கூடாது டி " சுற்றி இருந்த கூட்டத்தை கருத்தில் கொள்ளாமல் அஞ்சலியின் மீது வீரா கவனம் செலுத்த, அங்கிருந்த யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை...
ஒருவர் அல்ல இரண்டு பேருமே கனவில் ஒருத்தரை இன்னோருத்தர் பார்த்து காதலித்தோம் என்று சொல்லியது அனைவருக்கும் குழப்பதையே கொடுத்தது என்றாலும், அது தான் உண்மை என அவர்கள் இருவரும் நிற்பதிலும் பொய் இருப்பதாக தெரியவில்லை.
கூட்டம் முழுவதும் நிசப்தம் நிறைந்து இருக்க, வீராவை பார்த்து அஞ்சலியின் கழுத்தில் தாலியை கட்ட சொன்னார் கிருஷ்ணன்...
சட்டென்று கிருஷ்ணன் சொல்ல வீராவுக்கு ஒன்றும் புரியாமல் விழித்தான்,
" என்ன தம்பி புரியலயா என் பொண்ணு கழுத்துல தாலிய கட்டுன்னு சொன்னேன்.. "
வீரா இதை சற்றும் எதிர்பார்க்காததால் சட்டென என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்க,
" என்ன டா முழிக்க இவ்ளோ நேரம் ஏதேதோ பேசிட்டு இருந்த இப்போ தாலியை கட்டுன்னு சொல்லவும் முழிக்க, இவ்ளோ தான் உன் கனவு காதலா? "
" என்னங்க என்ன பேசிட்டு இருக்கீங்க? அவன் யாரு என்னன்னு எதுவும் தெரியாம அவனை போய் நம்ம பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொல்லுறீங்க? " கிருஷ்ணனின் மனைவி கிருஷ்ண வேணி கேட்க,
" வேற என்ன பண்ண சொல்லுற வேணி அதான் அவங்க லவ் பண்ணிட்டாங்களே இதுக்கு மேல நாம என்ன பேச? "
" அதுக்குன்னு, நல்லது கெட்டது பாக்காம எப்படி? "
" அதுக்கான உரிமை எல்லாம் நமக்கு கிடையாது வேணி, இப்போ உள்ள குழந்தைங்க நல்லது கெட்டத பத்தி எல்லாம் யோசிக்குறது இல்ல, அப்படி யோசிக்குற புள்ளையையும் நாம பெக்கலை " வேதனையோடு வந்தது கிருஷ்ணனின் குரல், வேணி அவரை ஆறுதல் படுத்த,
" நம்ம புள்ள அப்படி கிடையாதுங்க நம்ம புள்ள நல்ல புள்ளைங்க "
" அடி போடி பைத்தியகாரி, கனவுல பாத்தேன், காதல் பண்ணுனேன்னு இவ்ளோ பெரிய கூட்டத்துக்கு நடுவுல அவனை கட்டி புடிச்சுட்டு நிக்குறா அவளை போய் நல்ல புள்ள நம்ம புள்ளன்னு சொல்லிட்டு இருக்க " என்று பேசும் போதே கிருஷ்ணனின் குரல் தழுதலுத்தது, கண்கள் நீரை சுரந்து தள்ளியது...
தனது கணவனுக்கு துணையாக தன்னை கேளாமலே ஜோடி சேர்ந்து கொண்டது வேணியின் கண்ணீர்.
மனம் கொடுத்த மன்னவன் வருவான்.....