• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
15
வீராவோடு அஞ்சலி கலந்து தன்னை அவனுக்குள் புதைத்து நிற்க்க, அதுவரைக்கும் கலகலப்பாக இருந்த கல்யாண வீடு அதை இழந்து...
சுற்றிலும் மௌனம்...
மௌனம்...........
அங்கு என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை, நொடிகள் சில கடக்க மௌனம் கலைந்து சலசலப்பு ஆரம்பம் ஆனது, ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுக்குள் ஏதோ, ஏதேதோ பேச ஆரம்பித்தனர்,

கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் அஞ்சலியின் தந்தையை கண்டு,
" ஏய் என்ன பா நடக்குது இங்க " என்று கேட்க,

" அஞ்சலி...... " என்று அந்த இடம் அதிர கத்தினார் அஞ்சலியின் தந்தை கிருஷ்ணன்.

அந்த சத்தத்திற்கு கல்யாண வீடே அதிர்ந்தது.
சலசலப்பு அடங்கி மீண்டும் மௌனம் நிறைய.....,
அஞ்சலியும் வீராவும் துளியும் அசைந்ததாக தெரியவில்லை... இதனால் மேலும் கடுப்பான கிருஷ்ணன்,
அஞ்சலியின் அருகில் வந்து அவளை வீராவிடமிருந்து இழுத்துப் பிரிக்க அந்த சத்தத்தில் சுதாரித்துக் கொண்ட ராஜா வீராவை வந்து பிடித்தான்...

" என்ன அஞ்சலி இதெல்லாம்... " பற்களை நரநரவென கடித்து, மூச்சை இழுத்து அடக்கி கொண்ட கோபத்தோடு கேட்ட கிருஷ்ணனை பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தாள் அஞ்சலி.

" டேய் வீரா என்னடா பண்ற? " ஒருவித சங்கடமாக கேட்டான் ராஜா.

" ராஜா அது என் அஞ்சலி டா " பரிதவிப்போடு சொன்னான் வீரா.

அங்கிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை, ராஜாவும் பேச திணறினான், மோகன் பித்து பிடிக்காத குறையாக அப்படியே சிலையாகி நின்றான்.

" டேய் என்ன டா சொல்லுற? "

" அவ என்னோட அஞ்சலி டா " வீராவின் குரல் சலனம் இல்லாமல் வந்தது...

" டேய் அது யாருன்னு உனக்கு தெரியுமா? அது தான் டா நம்ம மோகனுக்கு பார்த்திருக்க பொண்ணு இன்னைக்கு அவங்க கல்யாணம் டா " என்று ராஜா சொல்ல,

வீராவும் அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே நின்றான்...

வீராவின் பேச்சு கூட்டத்தில் சலசலப்பை அதிகமாக்கியது,

ஒருவர் மாற்றி ஒருவர் வீராவையும் அஞ்சலியையும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டனர் ஆனால்,
அவர்கள் இருவருமே எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை, என்ன பதில் பேச என்பதும் தெரியவில்லை அவர்கள் இருவரும் அப்படியே நின்று இருக்க அமைதி இப்போது கோபமாக மாறியது...

" டேய் வீரா ஏன்டா இப்படி பண்ண? சொல்லுடா ஏன் இப்படி பண்ணுன? எதுக்கு டா இன்னும் இப்படி அமைதியாவே நிக்குற... வாயை தொறந்து பேசு டா " குரலை உசத்தி உக்கிர குரலில் ராஜா கேட்க,

" எனக்கு தெரியல டா " என்று சொன்ன வீராவை பார்த்து சற்றே மிரண்டு தான் போனான்.

அதை கேட்ட கிருஷ்ணன் கோபத்தின் உச்சிக்கு சென்று வீராவின் சட்டையை கொத்தாக பிடித்து,

" டேய் எவன் டா நீ? இங்க வந்து என்ன டா செஞ்சு வச்சுருக்க? எதுவும் தெரியாம எதுக்கு டா என் பொண்ணை கட்டி புடிச்ச? "

"..............."

" டேய் கேட்குறாங்க இல்ல வாயை தொறந்து பேசி தான் தொலையேன். உனக்கு எப்படி டா அந்த புள்ளைய தெரியும் உங்களுக்குள்ள அப்படி என்ன டா உறவு இருக்கு? "

"..............."

" டேய் இப்போ நீ பேச போறியா இல்லையா டா? ஒழுங்கா சொல்லு டா அவளுக்கும் உனக்கும் என்ன டா சம்பந்தம்.... "

"..............."

" டேய் இப்போ நீ சொல்ல போறியா இல்லையா டா நாயே அங்க பாரு டா நம்ம நண்பன் எப்படி நிக்கான்னு ஒழுங்கா உண்மையை சொல்லி தொலையென் டா " ஆத்திரமாகவும் ஆற்றாமையுடனும் ராஜா கத்த,

" டேய் சொல்லு சொல்லுன்னு சொன்னா என்ன டா சொல்ல சொல்லுற அவன் என் உயிரு டா போதுமா அத தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது " வீராவின் குரல் மூலைமுடுக்குகளில் முட்டி எதிரொலித்தது....

இப்போது அனைவரின் பார்வையும் அஞ்சலி மீது பதிய அவள் எந்தவித உணர்வும் காட்டாது அப்படியே நின்றாள்.

" அவன் என்னமா சொல்லுறான்? அவன் யாரு? " கோபமும் ஏக்கமும் நிறைந்த குரலில் கிருஷ்ணன்...

" அவன் வீரா ப்பா, அவன் எனக்கு உயிரு ப்பா அத தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது ப்பா " கண்களில் இருந்து வழிந்த கண்ணீரோடு அடக்கி கொண்ட அழுகையோடு வந்தது அஞ்சலியின் குரல்

அவர்கள் இருவரும் சொன்னது ஒரே பதில் தான் ஆனால் அது யாருக்கும் தெளிவை கொடுக்கவில்லை, அனைவரும் குழப்ப மனநிலையோடு இருக்க, ஆற்றாமையில் வெடித்தான் மோகன்....

" ஹேய் என்ன ரெண்டு பேரும் படம் ஓட்டிட்டு இருக்கீங்க....
ஹான்....
அவன் உன்ன உயிருன்னு சொல்லுறான் நீ அவனை உயிருன்னு சொல்லுற அப்போ என்ன ம.... றுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன? சொல்லு டி என்னை கல்யாணம் பண்ணிக்க ஏன் சம்மதம் சொன்ன, எதுக்காக என் மனசுலயும் உன்ன பத்தின ஆசையை வளர வச்ச, சொல்லு டி சொல்லு ஏன் இப்படி செஞ்ச....... "

அஞ்சலி மௌனமாக அழுது கொண்டிருக்க,

குரலை தனித்து, மூக்கை இழுத்து உறிஞ்சிவிட்டு,
" இப்போ கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி கூட உன்ன பார்த்து பேசிட்டு தான டி வந்தேன், அப்போ கூட என்னை பார்த்து சந்தோசமா தான டி சிரிச்ச, அந்த சிரிப்புல பொய்யோ, நடிப்போ எனக்கு தெரியலயே... அந்த அளவுக்கு இருந்துட்டு என் மனசுல உன்னை பத்தின ஆசையை அளவுக்கு மேல வளத்து விட்டுட்டு.......
ஏன் டி இப்படி செஞ்ச, சொல்லு ஏன் இப்படி செஞ்ச " மீண்டும் குரல் உயர்ந்தது....

" ஏன்னா இப்படி ஒருத்தன் நிஜமா இருக்கேன்னு அவளுக்கு தெரியாது டா.... " சத்தமாக வந்தது வீராவின் குரல்

" அவளுக்கு மட்டும் இல்ல டா எனக்கும் கூட தெரியாது நிஜமா இவ இருப்பா என் கண்ணுல வந்து படுவான்னு "

மோகன் அவனை கூர்ந்து பார்த்தான்,

" ஏன்னா நாங்க ரெண்டு பேருமே கனவுல பார்த்து தான் டா லவ் பண்ணுனோம்..... " என்று வீரா சொல்ல அனைவரும் அதிர்ச்சியோடும், புரியாமலும் அவனை பார்த்தனர்....



மனம் கொடுத்த மன்னவன் வருவான்....
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top