• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
45





மோகன் நினைவு வரவும் அஞ்சலி கொஞ்சம் கலங்கி போனாள்...

நம் துயரத்தில் சம்பந்தம் இல்லாத ஒருவனை துயரத்தில் மூழ்க வைத்து விட்டோமே என்று நினைக்கும் போதே குற்ற உணர்வு அவளை குடைந்து எடுக்க ஆரம்பித்தது.

" அவன் உண்மையில் தன் மீது ஆசை கொண்டிருந்தானே, அவனுக்கு தன்னை நிரம்பவே பிடித்து இருந்ததே, அவன் மனம் நம்மோடு ஒரு ஆசை வாழ்கை நடத்தி இருக்க வேண்டுமே... " என்ற எண்ணம் தோன்ற அவளின் உடலிலும் மனதிலும் ஒரு கூச்சம், தவிப்பு,

" என்ன ஜென்மமடா ஆண்டவா இந்த பெண் ஜென்மம்... சூழ்நிலை கைதியாக வாழ்ந்து வாழ்ந்து தனக்கான வாழ்கையை தொலைக்க எப்போதும் தயாராக இருக்கிறோமே, " என்று வேதனையில் அவள் குரல் வெளிப்பட,

" ஆனாலும் இது போன்ற நிலை இல்லாத சூழல் வரும் போது பெண் இனமும் என்ன செய்யும்? " என்ற கேள்வி குரலாக ஒலித்தது வீராவின் குரல்.

" மாமு "

" சொல்லு அம்மு "

" என்ன தான் காரணம் சரியா இருந்தாலும் நாம செஞ்சது தப்பு தான மாமு.... "

" அறியாமல் நடக்கும் தப்புக்கு நாம எப்படி அம்மு பொறுப்பு ஏற்க முடியும்? "

" ஆனா மாமு... "

" நமக்கு நம்மள புடிக்கும் அம்மு ஆனா நாம நிஜமா? இல்லையான்னு நமக்கு தெரியாதே அம்மு... "
அவள் கேள்வி கேட்கும் முன் அவளுக்கு பதில் வந்தது வீராவிடமிருந்து.

" ம்ம்ம் ஆமா தான் மாமு, ஆனாலும் நாம செஞ்சது தப்பு தான் மாமு "

" அந்த ஒரு நிமிஷத்தை யோசிச்சு பாரு அம்மு, அந்த நிமிஷம் நாம நம்ம கண்ட்ரோல்ல இல்ல, சுற்றம் சூழல் எல்லாம் மறந்து போனோம், தாயை தேடும் கன்று போல எனக்கு நீ கன்று, உனக்கு நான் கன்றுன்னு தாய்மையை நோக்கி தான் ஓடிட்டோமே அம்மு "

ஆமாம் வீரா சொல்வதும் சத்தியமான உண்மை ஆச்சே அவளால் மறுத்து பேச முடியவில்லை...

" ஆனாலும் மாமு அவர் மனசுல ஆசை வளந்ததுக்கு நாம தான் காரணம் மாமு பாவம் அவரு "

" அப்போ நம்ம மனசுல வளர்ந்த அன்புக்கு யார் காரணம் அம்மு? "

" அன்பு வேற ஆசை வேற மாமு "

" அன்பில் இல்லாத ஆசை எங்கிருக்கு அம்மு? "

" என்ன மாமு இப்படி கேக்குற, அப்போ அவர் மனசுல ஆசை வளர்ந்ததுக்கு நாம காரணம் இல்லையா? "

" நாம காரணம் இல்லன்னு சொல்லல அம்மு ஆனா அதுக்கு நாம பொறுப்பு இல்லன்னு சொல்லுறோம். "

" அப்ப காரணம் நாம தான்னு மாமு ஒத்துக்குற தான மாமு? "

" காரணத்துக்கு ஆயிரம் காரியம் இருக்கு அம்மு, அதுக்கு நாம மட்டும் தான் காரணம்னு சொல்ல முடியாது, அவனுக்கு நம்ம மேல ஆசை வர காரணமா இருந்த காரணி நமக்கும் தான் இருந்தது ஆனா நமக்கு அவன் மேல ஆசை வரலையே? "

வீராவின் இந்த கருத்தைக் கேட்கவும் அஞ்சலி அமைதியாக யோசிக்க ஆரம்பித்தாள்,

பெற்றோருக்காக, அவர்களின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல முடியாமல் தான் திருமணத்திற்கு சம்மதித்திருந்தள் அஞ்சலி, அப்படி சம்மதித்த போதும், மோகனின் உருவத்தை முன்னால் காட்டியும், ரத்தமும் சதையுமாக அவனே வந்து நின்றும், அவனது குரலில் தன்னோடு பேசியும், அவனது ஆசை நிறைந்த வரிகளை கேட்டும் கூட அவளுக்கு அவனின் மீது விருப்பம் என்று சொல்லும் அளவில் எந்த உணர்வும் வரவில்லை என்பது தான் மெய்யான உண்மை.
அதை உணர்ந்தவள் அவனிடமே சொன்னாள்,

" ஆமா மாமு நீ சொல்லுறது சரி தான் அவர் மேல எனக்கு எந்த விதமான ஒரு உணர்வும் வரல... "

" அவ்ளோ தான் அம்மு விஷயம் "

" அவ்ளோ தான்னா புரியல மாமு... "

" அடியே... "

" ஹைய் சூப்பரா இருக்கு மாமு "

" என்னது அம்மு "

" ம்ம்ம் நீ சொன்ன அடியே " சிந்தை கலைந்து சிரித்த முகமாய் அவள் கூற,
அவனும் சிரித்தான்...
இருவரும் மனம் விட்டு சிரித்தனர், பின் மறுபடியும் வீரா பதிலுக்கு வந்தான்,

" எப்படி மாமு "

" என்ன டி பொண்டாட்டி "

" நாம எங்க விட்டோமோ அங்க இருந்தே பேச தொடங்குற "

" ஒரு விஷயம் பேச ஆரம்பிச்சா முழுசா பேசிரனும் அம்மு, அப்போதான் ஒரு தெளிவு வரும்... "

" ம்ம் ஆமா மாமு, சரி சொல்லு மாமு "

" ஒருத்தவங்க மேல அன்பு ஆசையும் வளரதுக்கு அவங்க தான் காரணமாக இருக்கணும்னு அவசியமில்லை அவங்கள நாம பார்க்கிற பார்வை தான் காரணமா இருக்கும். அவங்களோட பார்வைக்கு நாம பொறுப்பாக முடியாது... ஒருத்தன ஊர்ல இருக்குற எல்லாரும் அயோக்கியன்னு சொல்லுவாங்க ஆனா அவனும் ஒரு குறிப்பிட்ட உள்ளத்துக்கு நல்லவனா தெரியுவான், அதே போல தான் ஊருக்கே நல்லவனா தெரியுறவன் ஒரு குறிப்பிட்ட உள்ளத்துக்கு கெட்டவனா தெரியுவான் இதுக்கு நாம பொறுப்பு ஆக முடியாது... " என்று வீரா சொல்லு அவனின் பேச்சில் இருந்த உண்மை அவளை ஓரளவு சமன் செய்திருந்தது.

ஆனாலும் கூட,
தான் சரி என்று திருமணத்திற்கு சம்மதித்திற்க்காக விட்டால் அவனுக்கு தன் மேல் எந்த பிரியமும் வந்திருக்காதே என்ற எண்ணம் அவளிடம் இருக்க தான் செய்தது...

" அம்மு, உன்ன மாதிரி பொண்ண பார்த்த உடனே எல்லாருக்கும் புடிச்சிரும் டி ஏன்னா நீ அம்புட்டு அழகு, உன் முகத்துல அப்படி ஒரு கலை உண்டு " என்று வீரா சொல்ல,

" போ மாமு " என்று வெட்கத்தில் சிவக்க ஆரம்பித்தாள்...

" இந்த வெட்கம் இன்னும் அழக கூட்டுது டி செல்லம் "

" அச்சோ போ மாமு, எப்படி தான் உன்னால இதெல்லாம் முடியுதோ தெரியல மாமு "

" என்னது அம்மு "

" சூழல் எப்படி இருந்தாலும் அதுல காதலை வெளிப்படுத்தி எல்லாத்தையும் அதுக்குள்ள அடக்கி வச்சிடுற... நீ உண்மையிலேயே சூப்பர் மாமு, லவ் யூ மாமு " என்று நெகிழ்ந்து கூற,

" லவ் யூ அம்மு " என்று அழகாய் கூறி சிரித்தான் வீரா...



மனம் கொடுத்த மன்னவன் வருவான்......
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
721
மோகன் நினைவு வரவும் அஞ்சலி கொஞ்சம் கலங்கி போனாள்...

நம் துயரத்தில் சம்பந்தம் இல்லாத ஒருவனை துயரத்தில் மூழ்க வைத்து விட்டோமே என்று நினைக்கும் போதே குற்ற உணர்வு அவளை குடைந்து எடுக்க ஆரம்பித்தது.

" அவன் உண்மையில் தன் மீது ஆசை கொண்டிருந்தானே, அவனுக்கு தன்னை நிரம்பவே பிடித்து இருந்ததே, அவன் மனம் நம்மோடு ஒரு ஆசை வாழ்கை நடத்தி இருக்க வேண்டுமே... " என்ற எண்ணம் தோன்ற அவளின் உடலிலும் மனதிலும் ஒரு கூச்சம், தவிப்பு,

" என்ன ஜென்மமடா ஆண்டவா இந்த பெண் ஜென்மம்... சூழ்நிலை கைதியாக வாழ்ந்து வாழ்ந்து தனக்கான வாழ்கையை தொலைக்க எப்போதும் தயாராக இருக்கிறோமே, " என்று வேதனையில் அவள் குரல் வெளிப்பட,

" ஆனாலும் இது போன்ற நிலை இல்லாத சூழல் வரும் போது பெண் இனமும் என்ன செய்யும்? " என்ற கேள்வி குரலாக ஒலித்தது வீராவின் குரல்.

" மாமு "

" சொல்லு அம்மு "

" என்ன தான் காரணம் சரியா இருந்தாலும் நாம செஞ்சது தப்பு தான மாமு.... "

" அறியாமல் நடக்கும் தப்புக்கு நாம எப்படி அம்மு பொறுப்பு ஏற்க முடியும்? "

" ஆனா மாமு... "

" நமக்கு நம்மள புடிக்கும் அம்மு ஆனா நாம நிஜமா? இல்லையான்னு நமக்கு தெரியாதே அம்மு... "
அவள் கேள்வி கேட்கும் முன் அவளுக்கு பதில் வந்தது வீராவிடமிருந்து.

" ம்ம்ம் ஆமா தான் மாமு, ஆனாலும் நாம செஞ்சது தப்பு தான் மாமு "

" அந்த ஒரு நிமிஷத்தை யோசிச்சு பாரு அம்மு, அந்த நிமிஷம் நாம நம்ம கண்ட்ரோல்ல இல்ல, சுற்றம் சூழல் எல்லாம் மறந்து போனோம், தாயை தேடும் கன்று போல எனக்கு நீ கன்று, உனக்கு நான் கன்றுன்னு தாய்மையை நோக்கி தான் ஓடிட்டோமே அம்மு "

ஆமாம் வீரா சொல்வதும் சத்தியமான உண்மை ஆச்சே அவளால் மறுத்து பேச முடியவில்லை...

" ஆனாலும் மாமு அவர் மனசுல ஆசை வளந்ததுக்கு நாம தான் காரணம் மாமு பாவம் அவரு "

" அப்போ நம்ம மனசுல வளர்ந்த அன்புக்கு யார் காரணம் அம்மு? "

" அன்பு வேற ஆசை வேற மாமு "

" அன்பில் இல்லாத ஆசை எங்கிருக்கு அம்மு? "

" என்ன மாமு இப்படி கேக்குற, அப்போ அவர் மனசுல ஆசை வளர்ந்ததுக்கு நாம காரணம் இல்லையா? "

" நாம காரணம் இல்லன்னு சொல்லல அம்மு ஆனா அதுக்கு நாம பொறுப்பு இல்லன்னு சொல்லுறோம். "

" அப்ப காரணம் நாம தான்னு மாமு ஒத்துக்குற தான மாமு? "

" காரணத்துக்கு ஆயிரம் காரியம் இருக்கு அம்மு, அதுக்கு நாம மட்டும் தான் காரணம்னு சொல்ல முடியாது, அவனுக்கு நம்ம மேல ஆசை வர காரணமா இருந்த காரணி நமக்கும் தான் இருந்தது ஆனா நமக்கு அவன் மேல ஆசை வரலையே? "

வீராவின் இந்த கருத்தைக் கேட்கவும் அஞ்சலி அமைதியாக யோசிக்க ஆரம்பித்தாள்,

பெற்றோருக்காக, அவர்களின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல முடியாமல் தான் திருமணத்திற்கு சம்மதித்திருந்தள் அஞ்சலி, அப்படி சம்மதித்த போதும், மோகனின் உருவத்தை முன்னால் காட்டியும், ரத்தமும் சதையுமாக அவனே வந்து நின்றும், அவனது குரலில் தன்னோடு பேசியும், அவனது ஆசை நிறைந்த வரிகளை கேட்டும் கூட அவளுக்கு அவனின் மீது விருப்பம் என்று சொல்லும் அளவில் எந்த உணர்வும் வரவில்லை என்பது தான் மெய்யான உண்மை.
அதை உணர்ந்தவள் அவனிடமே சொன்னாள்,

" ஆமா மாமு நீ சொல்லுறது சரி தான் அவர் மேல எனக்கு எந்த விதமான ஒரு உணர்வும் வரல... "

" அவ்ளோ தான் அம்மு விஷயம் "

" அவ்ளோ தான்னா புரியல மாமு... "

" அடியே... "

" ஹைய் சூப்பரா இருக்கு மாமு "

" என்னது அம்மு "

" ம்ம்ம் நீ சொன்ன அடியே " சிந்தை கலைந்து சிரித்த முகமாய் அவள் கூற,
அவனும் சிரித்தான்...
இருவரும் மனம் விட்டு சிரித்தனர், பின் மறுபடியும் வீரா பதிலுக்கு வந்தான்,

" எப்படி மாமு "

" என்ன டி பொண்டாட்டி "

" நாம எங்க விட்டோமோ அங்க இருந்தே பேச தொடங்குற "

" ஒரு விஷயம் பேச ஆரம்பிச்சா முழுசா பேசிரனும் அம்மு, அப்போதான் ஒரு தெளிவு வரும்... "

" ம்ம் ஆமா மாமு, சரி சொல்லு மாமு "

" ஒருத்தவங்க மேல அன்பு ஆசையும் வளரதுக்கு அவங்க தான் காரணமாக இருக்கணும்னு அவசியமில்லை அவங்கள நாம பார்க்கிற பார்வை தான் காரணமா இருக்கும். அவங்களோட பார்வைக்கு நாம பொறுப்பாக முடியாது... ஒருத்தன ஊர்ல இருக்குற எல்லாரும் அயோக்கியன்னு சொல்லுவாங்க ஆனா அவனும் ஒரு குறிப்பிட்ட உள்ளத்துக்கு நல்லவனா தெரியுவான், அதே போல தான் ஊருக்கே நல்லவனா தெரியுறவன் ஒரு குறிப்பிட்ட உள்ளத்துக்கு கெட்டவனா தெரியுவான் இதுக்கு நாம பொறுப்பு ஆக முடியாது... " என்று வீரா சொல்லு அவனின் பேச்சில் இருந்த உண்மை அவளை ஓரளவு சமன் செய்திருந்தது.

ஆனாலும் கூட,
தான் சரி என்று திருமணத்திற்கு சம்மதித்திற்க்காக விட்டால் அவனுக்கு தன் மேல் எந்த பிரியமும் வந்திருக்காதே என்ற எண்ணம் அவளிடம் இருக்க தான் செய்தது...

" அம்மு, உன்ன மாதிரி பொண்ண பார்த்த உடனே எல்லாருக்கும் புடிச்சிரும் டி ஏன்னா நீ அம்புட்டு அழகு, உன் முகத்துல அப்படி ஒரு கலை உண்டு " என்று வீரா சொல்ல,

" போ மாமு " என்று வெட்கத்தில் சிவக்க ஆரம்பித்தாள்...

" இந்த வெட்கம் இன்னும் அழக கூட்டுது டி செல்லம் "

" அச்சோ போ மாமு, எப்படி தான் உன்னால இதெல்லாம் முடியுதோ தெரியல மாமு "

" என்னது அம்மு "

" சூழல் எப்படி இருந்தாலும் அதுல காதலை வெளிப்படுத்தி எல்லாத்தையும் அதுக்குள்ள அடக்கி வச்சிடுற... நீ உண்மையிலேயே சூப்பர் மாமு, லவ் யூ மாமு " என்று நெகிழ்ந்து கூற,

" லவ் யூ அம்மு " என்று அழகாய் கூறி சிரித்தான் வீரா...



மனம் கொடுத்த மன்னவன் வருவான்......
இந்த கனவு லோலாயிங்க கூட முடியல சாமி
 
Joined
Nov 30, 2024
Messages
34
அம்மு மனசு கஷ்டப்படும் நேரம் அவளை சமாதான படுத்தறதுக்கு எங்க இருந்து தான் பறந்து வரியோ வீரா😍 அதுவும் சமாதானம் மட்டும் இல்ல . அவளை முழுசா தெளியவும் வைக்கிற.
மோகனோட நிலை, அது பாவம்தான். ஆனால் அந்த சூழல்ல பெத்தவங்க ஆசைய நிறைவேற்றது தவிர அம்முவால வேற என்ன பண்ண முடியும் .
தன்னோட மனசுல பதிஞ்ச உருவம் நிஜம் , அவன நம்ம பாப்போம்னு தெரிஞ்சிருந்தா அவளும் நிச்சயம் போராடி தான் இருந்திருப்பா. இப்போ மனசுக்கு பிடிச்சவனை பார்த்தாச்சு. இனி என்ன, வீரா அம்மு நீங்க ரெண்டு பேருமே சேர்ந்து போராடி காதல்லையும் வாழ்க்கையிலயும் வெற்றி பெறுங்கள், வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top