• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
20
அத்தியாயம்- 6

மகதி பேசிய வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று வர்மன் யோசிக்கும் முன்னே அவள் அங்கிருந்து வெளியேறி இருந்தாள்.

வர்மன் இருந்த சூழ்நிலையில் அவனும் மேற்கொண்டு மகதியின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.

மாயனுடன் ராஜனும் மகதியும் காரில் பயணித்துக்கொண்டு இருக்க,
"என்னைக்கு அந்த ரம்யா எங்க குடும்பத்துக்கு வந்தாளோ அன்னைக்கே என் குடும்பத்தோட நிம்மதி போனது தான் மிச்சம். அந்த ரம்யா வயத்துல பிறந்த பாவம் தான் அருண் வாழ்க்கையும் வீனா போகக் காரணம்" என்று வழியெல்லாம் ராஜன் புலம்பினார்.

"சார்... நீங்கத் தான் வர்மனுக்கு ஆறுதல் சொல்லணும். நீங்களே இப்படி கவலை பட்டால் பாவம் அவன் என்ன பண்ணுவான்" என்ற மாயனை கேள்வியாகப் பார்த்தாள் மகதி.

"பாவம் மாயா, எங்க குடும்ப பிரச்சனையில மகதியும் தெரியாம உள்ள வந்து சீக்கிகிட்டாள்" என்ற ராஜனுக்கு நாளுக்கு நாள் அருணால் பிரச்சனைகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

"எல்லாம் நல்லதுக்கு நினைப்போம் சார். நீங்க வருத்தப்பட்டு உங்க நலத்தை கெடுத்துக்காதிங்க"என்று மாயன் அவன் காரை வர்மன் வீட்டின் முன்னே நிறுத்தினான்.

"ஏன் மாயா... இப்போ அருண் எழுந்து அவன் அம்மா எங்கென்னு கேட்டால் என்ன பண்றது?" என்று ராஜன் கேக்க, "பேசாம அருணோட அம்மாவை வர வையுங்க மாமா" என்றாள் மகதி.

"அதுக்கு அந்தப் பொண்ணு எங்க இருக்கானு நமக்குத் தெரியணுமே மகதி"என்று ராஜன் சொல்ல,"ஏன் அவங்க இருக்குற இடம் வர்மனுக்கு கூடவா தெரியாது?" என்று கோவமாகக் கேட்டாள் மகதி.

"மகதி...தலையும் புரியாம காலும் புரியாம நீயா எதையாவது கேள்வினு கேக்காத, கொஞ்ச நேரம் சும்மா இரு" என்ற மாயன் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தவன், "சார்... அருணை நான் சமாளிச்சுக்கிறேன். நீங்க நிம்மதியா போய்ச் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க" என்றான்.

"சரி மாயா என் மருமகளை பார்த்து அழைச்சிட்டு போ. நம்ம நாளைக்கு மீட் பண்ணலாம்" என்ற ராஜன் வர்மனின் வீட்டுக்குள் நுழைய, மாயன் தன் தங்கையை அழைத்த்துக்கொண்டு அவன் வீட்டை நோக்கிக் காரை விரட்டினான்.

"சொந்த மருமகள் இப்போ எங்க இருக்கிறான்னு கூட இவருக்குத் தெரியாதாம்! ஆனா என்கிட்ட மட்டும் மருமகளே சிறுமகளேன்னு ஆசையா பேசுவாறாம்! இப்படியே அப்பாவும் மகனும் என் மனசுல நம்பிக்கையை வளர்த்துட்டு என்னை நல்லா ஏமாத்திட்டாங்க"என்று சத்தமாகப் புலம்பும் மகதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் சரமாரியாக வெடித்தது.

மகதியின் அர்த்தமில்லாத புலம்பளை கண்டு குழம்பிய மாயன்,"என்ன பாப்பா... யாரை திட்டிகிட்டு வர?" என்று கேட்டான்.

"ம்... எல்லாம் உங்க நண்பனைத் தான்" என்றவள் மேலும் வர்மனை வாய்க்குள் வசைப்பாடினாள்.

"பாப்பா... போதும் நிறுத்து.என் காது வலிக்குது" என்ற மாயன் தன் சுண்டு விரலால் அவன் காதைக் குடைந்துகொள்ள, "எனக்கு இதயமே வலிக்குது, அது உங்களுக்குத் தெரியலையா?" என்ற மகதி பொங்கி வரும் அழுகையை தனக்குள் இழுத்து பிடித்துக்கொண்டாள்.

தன் தங்கையின் கண்ணீரை கண்டு பதறிய மாயன், "என்னடா பாப்பா நீ... ஏன் அழற?" என்றவன் சட்டென்று காரை ஓரம் கட்டியதும், மகதி சத்தம் போட்டு அழுதவள்,
"அண்ணா... நான் இங்க வந்ததே எங்க கல்யாணம் எப்போ நடக்கும்னு வர்மனை பார்த்துக் கேக்க தான் வந்தேன்" என்ற மகதியின் வார்த்தையைக் கேட்டுப் புருவம் உயிர்த்தினான் மாயன்.

"என்ன பாப்பா சொல்லுற? உன் கல்யாணத்துக்கும் வர்மனுக்கும் என்ன சம்மந்தம்" என்ற மாயனிடம் மகதி அவள் கைபேசியில் உள்ள புகைப்படத்தைக் காட்டியவள், "இது அவரு எனக்கு எழுதிக்கொடுத்த லெட்டர். இதுல என்ன எழுதி இருக்குனு படியுங்கள்" என்றவளின் கைபேசியில் உள்ள லெட்டரை வாசித்தான் மாயன்.

"இந்த லெட்டரை தான் நான் தினமும் ஆயிரம் முறையாவது படிச்சி பார்த்துப்பேன். என் போனோட டிஸ்பிலேல கூட இந்த லெட்டர் தான்" என்ற மகதியின் அழுகையை பார்த்த மாயனுக்கு அந்தக் கணம் தான் அவளின் அழுகைக்கு காரணமே மாயன் தான் என்ற கூற்று புரிந்தது.

"வர்மன் எனக்குக் கொடுத்த நம்பிக்கையில தான் நான் அவருக்காக இத்தனை வருடம் காத்து இருந்தேன். வீட்டுல அம்மா அவங்க தம்பிக்கு என்னைக் கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க. ஆனா என் மனசுல வர்மனை தவிர வேற யாருமே இல்லைனு அப்பாவுக்குத் தெரியும். அதனால தான் நான் அப்பாகிட்ட மட்டும் சொல்லிட்டு வர்மனை தேடி மும்பைக்கு வந்தேன். ஆனா அவருக்கு என்னைப் பற்றிய நினைவே இல்லை" என்றவளின் வார்த்தைகள் உடைந்து, எழுத்துக்கள் கண்ணீரால் மிதந்தது.

"நான் தான் இத்தனை வருடமும் அவரைக் கண் மூடித் தனமா காதலிச்சு இருக்கேன். ஆனா அவரு என்னடானா யாரோ ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவருக்குப் பிறந்த குழந்தையோடு அவரு ரொம்ப சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்காரு" என்றவள் மேலும் அழுதுக்கொண்டு தான் இருந்தாள்.

மகதியின் கண்ணீருக்கு மாயன் தான் முழு காரணம் என்று உணர்ந்த மாயனுக்கு இனி மகதியின் சிரிப்புக்கும் அவனே காரணமாக மாற வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆணித்தனமாகப் பதிந்தது.

"பாப்பா... நீ அழாத. எல்லாம் நன்மைக்குனு நினைப்போம். கண்ணைத் துடைச்சுக்கோ" என்ற மாயன் காரைத் தன் வீட்டை நோக்கி விரட்டினான்.

மாயன் வீட்டுக்குள் நுழைந்த மகதியை,
"குட்டி பாப்பா எப்படி இருக்க" என்ற கீதா ஆசையோடு கட்டிக்கொண்டு கன்னத்தில் இதழ் பத்திதார்.

"பெரியம்மா... நீங்க எப்படி இருக்கிங்க?" என்ற மகதியின் கண்கள் இரண்டும் மாதுளை மணிகளின் நிறத்தில் சிவந்து காணப்பட்டது.

"என்ன அம்மா? கோவில்ல நல்ல
தரிசனமா?" என்ற மாயன் தன் சட்டையைக் கழட்டி ஆணியில் மாட்டியவன் கைக்கால்களைக் கழுவ சென்றான்.

"கண்ணுக்குக் குளிர்ச்சியா பாண்டி முனிஸ்வரணை தரிசனம் பண்ணிட்டு வந்தேன் மாயா" என்ற கீதா தன் மகனின் நெற்றியில் விபூதியை பூசினார்.

"பாப்பா... நீயும் போய்க் கைக்கால் அலம்பிட்டு வா, அம்மா நீங்கச் சாப்பிட்டீங்களா?" என்ற மாயன் தன் அறையை எட்டி பார்க்க அங்கே அவனின் மனைவி நந்தினி கையில் புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டு இருந்தாள்.

"நான் சாப்பிட்டேன் மாயா"என்று கீதா சொல்ல,"நந்தினி... நீ சாப்பிட்டியா?" என்ற மாயனின் கேள்வியைக் காதில் வாங்காதப்படி தன் அறையில் அமர்ந்து இருந்தாள் நந்தினி.

"இன்னும் நந்தினி சாப்பிடல மாயா.
ஒரு வேள உங்ககூட சாப்பிட காத்து இருக்காகளோ என்னவோ" என்று கீதா சொன்னதும், "நந்தினி ஏன் இன்னும் நீ சாப்பிடல?நேரத்துக்குச் சாப்பிடுன்னு எத்தனை முறை சொல்லுறது" என்று கேட்டுக்கொண்டே மாயன் அவன் அறைக்குள் நுழைந்தான்.

"எனக்குப் பசிச்சா நான் சாப்பிடுப்பேன். உங்க கரிசனமோ உங்க அம்மா கரிசனமோ எனக்குத் தேவையில்லை" என்ற நந்தினி புத்தகத்தை மூடி வைத்தவள் கட்டிலில் படுத்துப் போர்வையால் தன்னை முழுவதுமாகப் போர்த்திகொண்டாள்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நந்தினியின் மாற்றத்தைக்கண்டு பழகிப் போன மாயன் பெருமூச்சுடனே அறையிலிருந்து வெளியே வந்தான்.

மகிழ்ச்சியாக இருந்த தன் மகனும் மருமகளும் சில மாதங்களாக மனஸ்த்தாபத்தோடு வாழ்ந்து வருவதை உணர்ந்த கீதா அவர்களே அவர்களுக்குள் பேசிச் சமாதானம் அடையட்டும் என்று எண்ணியவர் கணவன் மனைவி பிரச்சனையில் தலையிடக் கூடாது என்று முடிவெடுத்து அமைதியை கடைபிடித்தார்.

"குட்டிமா சாப்பிடலாமா?" என்ற மாயனே தன் தங்கைக்குச் சாப்பாட்டை பரிமாறியவன், "அம்மா... வர்மனுக்கு சாப்பாடு எடுத்து வச்சிட்டீங்களா" என்று கேட்டவன், முன்னதாகவே தன் நண்பனுக்கும் சேர்த்து சமைக்கும்ப்படி நந்தினியிடம் குறுஞ்செய்தி வாயிலாகத் தெரியப்படுத்தி இருந்தான்.

"நந்தினி எல்லாமே ரெடி பண்ணி வச்சிட்டாள் மாயா. ஆமா! அந்தச் சின்னப் பையன் இப்போ எப்படி தான் இருக்கான்" என்ற கீதாவிடம் அருணின் தற்போதையை நிலைமையைப் பற்றி விவரமாக எடுத்துறைத்தான் மாயன்.

"பாவம் அந்தச் சின்னப் பையன்! தாய் பாசத்துக்கு ஏங்குற வயசுல அவனைப் பெத்துப்போட்ட ரக்ஷாஷி வேற எவன் கூடவோ கூத்து கும்மாளமுன்னு சுத்திகிட்டு இருக்காள்.ஹ்ம்... இந்தக் கடவுளுக்கும் கண்ணு இல்லாம போச்சு.
குழந்தையை நல்லப்படியா பாத்துக்க துப்பு இல்லாத ஆளுங்ககிட்ட தான் அந்த இறைவனும் பிள்ளை வரத்தைக் கொடுக்குறான். ஆனா இங்க பாரு. என் மகனுக்கும் மருமகளும் ஒரு பிள்ளை வேணும்னு நான் தவமா தவம் இருக்கேன். அந்தக் கடவுளுக்கு என் வேண்டுதல் கேக்கவே மாட்டுது" என்ற கீதாவின் புலம்பல் தன் அறையில் படுத்து இருந்த நந்தினி காதில் தெள்ள தெளிவாகக் கேட்டது

"அம்மா... யாருக்கு என்ன கொடுக்கணும்னு அந்தக் கடவுளுக்குத் தெரியும்.
இறைவன் கொடுக்குறதை யாராலும் தடுக்கவும் முடியாது. அவன் தடுக்குறதை யாராலும் கொடுக்கவும் முடியாது" என்ற மாயனின் பேச்சைக் கேட்ட நந்தினியின் விழிகள் ஈரமானது.

"சரி மாயா... நீ சாப்பிட்டு உன் நண்பனுக்குச் சாப்பாடு எடுத்துட்டு போ. மகதி செல்லம் நம்ம காலையில நிறைய கதை பேசலாம். இப்போ நான் போய்த் தூங்குறேன். கால் எல்லாம் ரொம்ப வலியா இருக்கு" என்ற கீதா அவர் அறைக்குள் சென்றார்.

"அண்ணா...அண்ணிக்கும் உங்களுக்கும் சண்டையா? ஏன் அண்ணி உங்ககூட சரியா பேச மாட்டுறாங்க?" என்று மகதி கேட்டதும்,
"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல பாப்பா.வேலையில நந்தினிக்கு எதாவது பிரச்சனை இருக்கும். சரி நீ போய்ப் படுத்துக்கோ நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்" என்ற மாயன் வர்மனுக்காகச் சாப்பாடை எடுத்து வைத்தான்.

"அண்ணா...அருணை பத்திரமா பார்த்துக்கொங்க" என்று மகதி சொல்ல, "ம்... நான் பார்த்துக்குறேன் குட்டி. அப்புறம் சித்தப்பா உன்கிட்ட அந்த மீடியா நியூஸ் பற்றி எதாவது கேட்டா நீ எதுவும் சொல்லாத. நான் சித்தப்பாகிட்ட பாக்குவமா பேசிக்கிறேன்" என்ற மாயன் சமையலறையிலிருந்து இன்னொரு சாப்பாட்டுத் தட்டை எடுத்துக்கொண்டு நந்தினியின் அறைக்குச் சென்றான்.

"நந்து உனக்குச் சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் சாப்பிட்டு படுத்துக்கோ" என்றவன் வேறு சட்டையை அணிந்துகொண்டு வேகமாகத் தன் வீட்டிலிருந்து வெளியேறினான்.

மாயன் தன் வீட்டிலிருந்து வெளியேறியதும் நந்தினி அவள் அறையில் இருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தவள்,
"நீ சாப்பிட்டியா?" என்று தன்னை கேள்வியாகப் பார்த்து இருந்த மகதியை கேட்டாள்.

 
Joined
Feb 6, 2025
Messages
20
"ஆங் அண்ணி நான் சாப்பிட்டேன்" என்று மகதி தயக்கத்துடன் சொன்னதும், நந்தினி தனக்கான உணவைச் சாப்பிட்டு முடித்தவள் சமையலறையை சுத்தம் செய்துக்கொண்டு இருந்தாள்.

"அண்ணி... நான் பாத்திரம் துளக்கி வைக்கிறேன் நீங்கப் போய் ரெஸ்ட் எடுங்க" என்ற மகதியை அழுத்தமாகப் பார்த்தவள்,

"நீ சாப்பிட்டேன்னு தானே சொன்ன! போ... போய்ப் படுத்துக்கோ"என்ற நந்தினி வேகமாகத் தன் வேலைகளை முடித்துக்கொண்டு கையில் தைலத்துடன் கீதாவின் அறைக்குள் நுழைந்தவளை பார்த்தப்படியே மகதியும் தன் அறைக்குள் சென்று விட்டாள்.

தன் படுக்கையில் கண் மூடிப் படுத்து இருந்த மகதிக்கு காலையிலிருந்து இவள் வாழ்வில் நடந்த விஷயங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தவளுக்கு தூக்கம் வர மறுத்தது.

மீண்டும் தன் கைக்குறிப்பு புத்தகத்தை எடுத்த மகதி எப்போதும் போலவே வர்மனின் கையெழுத்தை பார்த்தப்படியே கண்கள் மூடி உறங்க முயற்சி செய்தாள்.

இதே தருணம் சிறுவன் அருணனுடன் மருத்துவமனையில் இருக்கும் வர்மனுக்கு சாப்பாடுக் கொண்டு சென்ற மாயன் அவனைச் சாப்பிட வைக்க அரும்பாடு பட்டான்.

"வர்மா... நான் சொல்றதை கேட்பியா மாட்டியா? நீ சாப்பிட்டு நல்லா இருந்தாதான் அருணையும் உங்க அப்பாவையும் நீ பார்த்துக்க முடியும்.இப்போ நீ சாப்பாடு வேண்டாம்னு சொல்றதால எதுவும் இங்க மாறப் போறது இல்லை வர்மா" என்று தன் நண்பனை உரிமையோடு கடிந்து கொண்டான் மாயன்.

"என்னால எப்படிடா சாப்பிட முடியும்?
அருணை நினைத்தாலே பச்சைத்தண்ணீர் கூட என்னால குடிக்க முடியல" என்ற வர்மனை நட்புடன் ஆறுதலாகக் கட்டி அணைத்துக் கொண்டான் மாயன்.

"இதோ! இப்போ மருந்து சாப்பிட்டு மயக்கத்துல தூங்கிக்கிட்டு இருக்கான். கண்விழிச்சதும் என் அம்மா எங்கேன்னு கேட்டா என்கிட்ட என்ன பதில் டா இருக்கு" என்ற வர்மனின் கண்ணீரை பல வருடங்களாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் மாயன்.

"வர்மா...அருணை பற்றி நீ கவலைப்படாதே,
அவன் சின்னப் பையன் தான்.நான் அவனைப் பார்த்துக்கிறேன்.நீ முதல்ல சாப்பிடு" என்ற மாயன் விடாப்பிடியாகத் தன் நண்பனைச் சாப்பிட வைத்தான்.

அன்றைய தினம் இரவே அருணை சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றி இருந்தார்கள். கிட்டத்தட்ட அவனை இரண்டு மூன்று செவிலியர்கள் கண்காணித்துக் கொண்டு இருக்க,
குழந்தையின் கண்களிலும் தலையிலும் உள்ள கட்டை பார்த்து வர்மனுக்கு அருணை நினைத்து மேலும் கவலை எழுந்தது.

"வர்மா... நான் அருணை பார்த்துக்கிறேன், நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு" என்று மாயன் சொன்னதும், அருணின் சிகிச்சை அறையிலேயே இருந்த சின்னக் கட்டிலில் படுத்த வர்மனுக்கு சட்றென்று மகதியின் நினைவு எழுந்தது.

"மாயா... இன்னைக்கு இந்த மீடியாக்காரனுங்க பண்ண கேவலமான செயலால மகதி அப்பா உன்கிட்ட போன் பண்ணி ஏதாவது கேட்டாரா?" என்று கேட்டான் வர்மன்.

"இல்ல வர்மா... நான் தான் இப்போ சித்தப்பாக்கு போன் பண்ணி பேசப் போறேன். நீ கவலைப்படாத, நான் பார்த்துக்கிறேன்" என்ற மாயன் அந்த அறையிலிருந்து வெளியே வந்தவன் சற்றும் தாமதிக்காமல் மகதியின் அப்பா மகாலிங்கத்தை கைபேசி வாயிலாக அழைத்தான்.

"ஹலோ மாயா உன் ஃபோனுக்காகத் தான் காத்துக்கிட்டு இருக்கேன். அங்க என்னப்பா நடக்குது. மீடியால நம்ப மகதியைப் பற்றி என்ன என்னமோ சொல்றாங்களே என்னப்பா பிரச்சனை" என்று மகாலிங்கம் கேட்டார்.

"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல சித்தப்பா. ஆனா மகதி என்னவோ வர்மன் கொடுத்த கடிதத்தை வைத்து அவனை விரும்புவதாகச் சொல்கிறாளே அது உண்மையா?" என்று கேட்டான் மாயன்.

"உன் தங்கச்சி உன்கிட்டயே எல்லா உண்மையும் சொல்லிட்டாளா! ஆமாம் மாயா! வர்ணனை கல்யாணம் பண்ணிக்க தான் மகதி ஆசைப்படுகிறாள்" என்ற மகாலிங்கம் மாயனிடம் கிட்டதட்ட 10 நிமிடங்கள் மனம் திறந்து பேசினார்.

"நீங்கச் சொல்றதெல்லாம் சரிதான் சித்தப்பா. ஆனா மகதி கிட்ட இருக்கிற கடிதம் வர்மன் எழுதியது இல்லை" என்று மாயன் சொன்னதும் மகாலிங்கத்திற்கு அவன் வார்த்தையைக் கேட்டுத் தலையில் இடி இறங்கியதைப் போல இருந்தது.

"என்னப்பா சொல்ற! அப்போ அந்தக் கடிதத்தை வர்மன் எழுதலையா?" என்று மகாலிங்கம் அதிர்ச்சி கலந்த கேள்வியை எழுப்பினார்.

"இல்ல சித்தப்பா, அவனுக்கும் அந்தக் கடிதத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் இனி வர்மனுக்கும் மகதிக்கும் சம்பந்தம் பேசி முடிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு" என்றான் மாயன்.

"ஐயோ வேண்டாம் மாயா. அதெல்லாம் சரி வராது. நான் மகதிக்கு எதார்த்தத்தை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கிறேன். என் பொண்ணை இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணி தர எனக்கு இஷ்டம் இல்லை" என்று மகாலிங்கம் திட்டவட்டமாகத் தன் எண்ணத்தைத் தெரிவித்தார்.

"சித்தப்பா... நான் மகதிக்கு அண்ணன். ஆனால் எனக்கு அவள் மகள் மாதிரி தான். நானே என்னுடைய தங்கச்சி வாழ்க்கை கெட்டுப் போகணும்னு நினைப்பேனா! நான் இருக்கேன். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்." என்ற மாயனின் வார்த்தையில் மகாலிங்கத்திற்கு சிறிய நம்பிக்கை வந்தது.

"மகதி அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழனும். நான் வாழவைப்பேன். அதுக்கு ஏற்ற மாதிரி என் நண்பனும் நல்லா இருக்கணும். அந்தக் குழந்தை அருணுக்கும் அம்மா கிடைக்கணும்.
இப்படி எல்லாருக்கும் எல்லா நல்லதும் நடக்கணும்.நடக்கும். நான் நடக்க வைப்பேன்" என்ற மாயன்
கைபேசி இணைப்பைத் துண்டித்தவன் மனதில் கூட்டி கழித்து ஒரு கணக்கைப் போட்டு வைத்தான்.

மருந்தின் வீரியத்தால் சிறுவன் அருண் அன்றைய தினம் இரவு நிம்மதியாக உறங்கியவனுக்கு வலி தெரியாமல் இருக்கவும் சில மருந்துகளைப் பரிந்துரைத்து இருந்தார் மருத்துவர்.

கவலையில் சோர்வாக இருந்த வர்மணும் அவனை மறந்து உறங்கிக்கொண்டு இருந்தவனுக்கு இனியாவது தன் நண்பனின் வாழ்வில் எல்லாமே நல்லதாகவே நடக்க வேண்டும் என்று எண்ணிய மாயனும் அமர்ந்தப்படியே உறக்கத்தை தழுவினான்.

மறுநாள் விடியல் காலை அளவில் கண் விழித்த வர்மனின் விழிகள் முதலில் கண்டது அருணை தான்.

செவிலியர்கள் அருண் அருகே நின்றப்படி மருந்தின் அளவை மாற்றிக்கொண்டு இருந்த தருணம், "வர்மா...நீ வீட்டுக்குப் போய்க் குளிச்சிட்டு, அப்படியே அப்பாவை இங்க அழைச்சிட்டு வந்துடு. அருண் எழுந்தால் நான் அவன்கூட இருக்கேன்" என்று மாயன் சொன்னதும் வர்மணும் தன் வீட்டிற்கு கிளம்பி சென்றான்.

வர்மன் சென்ற சில நிமிடங்களில் அருண் உறக்கத்திலிருந்து எழுந்தவன், "ஆ...தலை வலிக்குது. கண்ணு தெரியல" என்று கத்தி கூப்பாடு போட்டவனின் குரலில் மருத்துவரே அவன் இருக்கும் அறைக்கு ஓடோடி வந்து சேர்ந்தார்.

"தம்பி... உனக்கு நடந்து இருக்குறது ரொம்ப பெரிய ஆபரேஷன். நீ இப்படியெல்லாம் கத்தக் கூடாது" என்று மருத்துவர் அறிவுரை கூறினாலும் அருணின் வாயை மூட முடியவில்லை.

கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்த அருணோ, "அப்பா... அப்பா எங்க இருக்கீங்க? எனக்குத் தலை வலிக்குது, எனக்கு எல்லாமே இருட்டா இருக்கு. எனக்குப் பயமா இருக்கு"என்று கத்தியவனை சமாதானம் செய்ய முடியாமல் அனைவரும் தவித்துப் போனார்கள்.

அருணின் பிடிவாதத்தை நன்கு அறிந்து இருந்த மாயானோ,
"ஹலோ... யாரு அருணோட அம்மா பேசுறிங்களா?" என்று வெறும் கையைக் காதில் வைத்துப் பேசுபவனின் குரலைக் கேட்டு அருண் அமைதியானான்.

"என்ன சொல்லுறிங்க அருண் அம்மா! அப்படியா! ஐயோ நீங்க அப்போ வர மாட்டிங்களா?" என்று மாயன் கைபேசியில் பேசுவதை போலப் பாசாங்கு செய்பவனை பார்த்து மருத்துவரும் செவிலியர்களும் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

"சரி அருண் அம்மா. நான் போனை வச்சிடுறேன்" என்ற மாயன், "என்ன அருண் நீ இப்படி பண்ணிட்ட?" என்ற மாயனின் கேள்வியில்,

"மாமா...நீங்க யாருகிட்ட பேசுனீங்க?" என்று கைகளை நீட்டி மாயனின் குரல் கேட்ட திசையை நோக்கி எதிர் கேள்வி கேட்டான் சிறுவன்.

"நான் உங்க அம்மாகிட்ட தான் பேசினேன்" என்று மாயன் சொல்ல, "என்ன! என் அம்மாகிட்டயா? என் அம்மா ஏன் என்கூட பேசாம உங்ககூட பேசுனாங்க?" என்று சிறுவன் கோவமாகக் கேட்டான்.

"உன் அம்மா உன்கிட்ட பேசத் தான் போன் பண்ணாங்க. ஆனா பாரு நீ கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணதால உன்கிட்ட பேசாம போனை கட் பண்ணிட்டாங்க" என்று மாயன் சொன்னதும் சிறுவனின் முகத்தில் ஏமாற்றம் ஒட்டிக்கொண்டாது.

"மாமா... சாரி மாமா... நான் இனி கத்த மாட்டேன். ப்ளீஸ் அம்மாவை என்கூட பேசச் சொல்லுங்க" என்று சிறுவன் கெஞ்சி கேட்டதும், "சரி சரி... இன்னைக்கு ஈவினிங் உன்கூட உன் அம்மா போன்ல பேசுவாங்க" என்று மாயன் வாக்குறுதி கொடுக்க, "அப்போ அம்மா என்னைப் பார்க்க நேர்ல வரமாட்டாங்களா?" என்று பாவமாகக் கேட்டான் சிறுவன்.

"உன் அம்மாவுக்கு ஹாஸ்பிடல் வாடை ஒத்துக்காது அருண்! அதனால இப்போதைக்கு உன் அம்மா உன்கிட்ட போன்ல பேசுவாங்க. நீ வீட்டுக்குப் போனதும் உன் அம்மா உன்கூடவே வந்து தங்கிப்பாங்க" என்று மாயன் சொல்ல, "சரி சரி அப்போ என்கிட்ட இன்னைக்கு போன்ல மட்டும் பேசச் சொல்லுங்க" என்ற சிறுவனின் ஏக்கத்தைக் கண்டு மருத்துவருக்கும் செவிலியற்குமே பாவமாக இருந்தது.

அன்றைய தினம் வர்மனும் அவனின் அப்பா ராஜனும் மீண்டும் மருத்துவ மனைக்கு வந்து சிறுவன் அருணுடனே தங்கி இருந்தார்கள்.

நாளெல்லாலாம் அருண் அமைதியை கடைபிடித்தவன், "அப்பா மணி என்ன?" என்று வர்மனிடம் கேக்க, "இப்போ ஏன் சார் டைம் கேக்குறீங்க?"என்று புரியாமல் கேட்டார் ராஜன்.

"தாத்தா...ஈவினிங் என் அம்மாவை என்கூட போன்ல பேச வைக்கிறேன்னு மாயன் மாமா சொன்னாரு தாத்தா. எங்கே மாமா? ஏன் இன்னும் அம்மா எனக்குப் போன் பண்ணல?"என்று கேட்டான் அருண்.

அருணின் வார்த்தையைக் கேட்டு வர்மனின் முகத்தில் இறுக்கம் கூடி போக, அதே தருணம் வர்மனின் கைபேசிக்கு புது எண்ணிலிருந்து வந்த அழைப்புக்குப் பதில் தந்தவன்,"ஹலோ யார் பேசுறது?"என்று வர்மன் கேட்டான்.

"நா... நான் அருணோட அம்மா பேசுறேன். போனை அருண்க் கிட்ட கொடுங்க" என்று கைபேசி வாயிலாக ஒலித்த பெண்ணின் குரலைக் கேட்டு, "என்ன அருணோட அம்மாவா?" என்று வர்மன் கேட்டதும்,

"அப்பா...போனை என்கிட்ட தாங்க நான் அம்மாகிட்ட பேசணும்" என்ற அருணின் தவிப்பைக் கண்ட வர்மனுக்கு தன்னிடம் பேசும் பெண் யாரென்ற கேள்வி எழும்ப,
"அம்மா..."என்று பார்வை தெரியாத பிள்ளை அருண் தன் தாயின் குரலை கேக்க ஏங்கி இருந்தான்.



 
New member
Joined
Feb 8, 2025
Messages
13
இந்த மாயன் பண்ண வேலை தான் மஹாதி கவலைக்கு காரணம் எப்படியோ இவனே அவங்கள சேர்த்து வைக்க போறான். ஆனாலும் அருண் பாவம்
 
New member
Joined
Feb 8, 2025
Messages
13
கதை அருமை ஆனால் ஏன் வாரம் ஒரு முறை தான் போடுறீங்க சிஸ்டர் சீக்கிரமா அடுத்த பார்ட் போடுங்க 👍.
 
New member
Joined
Feb 8, 2025
Messages
11
எல்லாத்துக்கும் காரணம் இந்த மாயன் தான் போல நாரதர் கலகம் நன்மையில் முடியுமா என்று பார்ப்போம்😂😂😂
 
New member
Joined
Feb 8, 2025
Messages
11
இனி தான் கதை சூடு பிடிக்கும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰
 
New member
Joined
May 2, 2025
Messages
7
Waiting for your next ud this👌part so emotional. Why mrs mayan so sad. Pls ud soon
 
New member
Joined
May 9, 2025
Messages
8
The culprit who knows the truth is Mayan,is that correct. Is the phone call from Maghadhi
 
New member
Joined
May 2, 2025
Messages
8
அக்கா ரொம்ப அழகான கதை அருண் அம்மா பாசம் வர்மன் பிள்ளை பாசம் மாயன் நண்பன் பாசம் மகதி காதல் பாசம் நந்தினி பிள்ளை ஏக்கம் இப்படி நிறைய விஷயம் இருக்கு அடுத்த பகுதி சீக்கிரமா போடுங்க அக்கா 👌
 
New member
Joined
Feb 8, 2025
Messages
16
Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Super super நல்லது நடக்குமா...
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top