• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
20
அத்தியாயம் - 4

சிறுவன் அருணை அந்த நிலைமையில் பார்த்த வர்மன், "ஏங்க... அருணுக்கு என்னாச்சு!ஐயோ என் பிள்ளைக்கு என்னாச்சு?" என்று அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக்கொண்டு அருண் படிக்கும் பள்ளியின் நிர்வாகி அம்பிகாவிடம் பதற்றத்துடன் கேட்டான்.

அம்பிகாவோ பயத்தில் தன் வியர்வை பூத்த முகத்தைத் துடைத்துக்கொண்டே, "ஸ்கூல்ல அருண் தலையில அடிபட்டுப் பேச்சு மூச்சு இல்லாம மயங்கிட்டான் சார். அதான் நாங்க அருணை உடனே ஹாஸ்பிடல் தூக்கிட்டு வந்தோம்" என்றவரின் வார்த்தையைக் கேட்டு வர்மனின் முகம் கோவத்தில் சிவந்து போனது.

"என்ன மேடம் நீங்க... ரொம்ப சாதாரணமா பிள்ளைக்கு அடிபட்டுடுச்சுனு சொல்றிங்க, இப்போ எங்க பையனுக்கு எப்படி இருக்கு?" என்ற ராஜன் சிகிச்சை அறையில் இருக்கும் சிறுவனை எட்டிபார்த்த தருணம், "அந்தச் சின்னப் பையன் வீட்டுல இருந்து அவனோட பேரண்ட்ஸ் வந்தாச்சா?" என்று கேட்ட மருத்துவரின் அருகே பதறி அடித்து ஓடி வந்தான் வர்மன்.

"டாக்டர் என் பையனுக்கு என்னாச்சு? அவன் நல்லா இருக்கான் தானே? பயப்புடும் படி என் பிள்ளைக்கு ஒன்னும் ஆகலையே?" என்ற வர்மனின் கண்கள் அருண் மேல் உள்ள அதித அன்பால் ஈரமானது.

"சார்... உங்க பையன் கீழே விழுந்த வேகத்துல, பின் தலை கனமான இரும்பு பொருளில் மோதிப் பலத்த காயத்தோடு இல்லாம ரத்தப்போக்கும் அதிகமா ஏற்பட்டிருக்கு" என்ற டாக்டரின் வார்த்தையைக் கேட்டு வர்மன் அவன் தலையில் இடி இறங்கியதை போல நின்று இருந்தான்.

"டாக்டர் என்ன சொல்றிங்க? இப்போ அருண் எப்படி இருக்கான்" என்று பயத்துடன் மாயன் கேக்க,
"பையனுக்கு உடனே ஆபரேஷன் பண்ணனும் சார். ஆனா பையனோட ரத்தப் பிரிவு 'Rh-null'. இது ரொம்பவே அரிய வகை ரத்தம்.இப்போ எங்க பிளட் பேங்க்ல அந்த வகை ரத்தம் இல்லை" என்ற மருத்துவரின் அடுத்தடுத்து வார்த்தையைக் கேட்டு வர்மனின் இதயம் செயலிலந்து போனது.

"நாங்க உங்க பையனுக்காக வெளி ஹாஸ்பிடல்ல பிளட் கேட்டு இருந்தோம், ஆனா அங்கேயும் ஸ்டோக் இல்லைனு சொல்லிட்டாங்க, உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா, உடனே அவங்கள ரத்தம் கொடுக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணுங்க" என்று மருத்துவர் சொன்னதும், சற்றும் தாமதிக்கமல் வர்மன் அவனின் கைபேசி வாயிலாக அவனுடன் பணியாற்றும் சக நடிகர்களை அழைத்துப் பார்த்தான்.

"ஐயோ... இன்னைக்கு நடிகர் சங்கத்துல மீட்டிங், அதான் யாருமே போன் எடுக்க மாட்டுறாங்க" என்று கோவமாகச் சொன்ன வர்மனுக்கு அடுத்து என்ன செய்வதேன்றே புரியாமல் போனது.



"மாயா... உங்க குடும்பத்துல யாருக்காவது இந்த வகை பிளட் குரூப் இருக்கா? என்று ராஜன் கேட்டதும்,"இல்ல சார்" என்று கவலையாகச் சொன்ன மாயன், "சார்... மகாலிங்கம் சித்தப்பாவுக்கு இந்தப் பிளட் குரூப் தான்னு நினைக்கிறேன். இருங்க நான் எதுக்கும் சித்தப்பாவுக்கு போன் பண்ணி கேக்குறேன்" என்ற மாயன் தன் கைபேசியை எடுத்தான்.

"ப்ச்...அவன் சென்னையில தானே இருக்கான் ! அவன் எப்படி உடனே இங்க வர முடியும்" என்று பதற்றத்துடன் சொன்னார் ராஜன்.

"மாயா... காலையில மகாலிங்கம் மாமாவோட பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தாளே! அவள் பிளட் குரூப் என்ன?" என்ற வர்மனின் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னே மாயன் தன் கைபேசி வாயிலாக மகதியை அழைத்தான்.

மாயன் வீட்டில் இருக்கும் மகதியோ வர்மன் மீது கண்மூடி தனமாகத் தன் காதலை வளர்த்துக்கொண்டவளுக்கு அழுது அழுது தலைவலி வந்தது தான் மிச்சமானது.

இனி வர்மனின் நினைவே மகதிக்கு வரக் கூடாது என்று எண்ணியவள் அவனை நினைத்துக் கடந்த பத்து வருடங்களாக எழுதிக்கொண்டு இருக்கும் அவள் கைக்குறிப்பு புத்தகத்தைக் கிழித்து போட எண்ணி தலையணைக் கீழ் இருந்த புத்தகத்தை எடுத்துக் கிழிக்க போகும் சமயம் மகதியின் கைபேசிக்கு மாயனிடமிருந்து அழைப்பு வந்தது.

விழிகளில் பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக் கொண்ட மகதி, மாயனிடமிருந்து கைபேசி வாயிலாக வந்த அழைப்புக்கு உயிர் கொடுத்தவள் "சொல்லுங்க அண்ணா..." என்றாள்.

"மகதி... உன் பிளட் குரூப் என்னமா? " என்று பதற்றத்துடன் மாயன் கேக்க, "என்ன அண்ணா... எதாவது பிரச்சனையா?"
என்று மகதி ஏதும் புரிதயாதவளாக
கேட்டதும், "நீ முதல்ல உன் பிளட் குரூப் என்னனு சொல்லு" என்ற மாயனின் கைபேசியை தன் வசம் வேகமாகப் பிடுங்கினான் வர்மன்.

"அண்ணா... சொல்லுங்க எதாவது பிரச்சனையா?" என்று மீண்டும் மகதி கேட்டதும்,
"நான் வர்மன் பேசுறேன்" என்றவனின் குரலில் மகதியின் இதயத்துடிப்பு வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

"ஹலோ லைன்ல இருக்கியா? " என்று வர்மனும் பதற்றத்துடன் கேக்க,"ஆங் இருக்கேன்" என்ற மகதிக்கு வர்மனின் குரலை வைத்தே அங்கே ஏதோ பிரச்சனை என்று புரிந்துகொண்டவள், "சொல்லுங்க என்ன விஷயம்?" என்று அவளாக முன் வந்து வர்மனிடம் கேட்டாள்.

"உன் பிளட் குரூப் என்ன?" என்று வர்மன் கேட்டதும், "எனக்கு RH-null" என்று மகதி சொல்ல, "நல்லா தெரியுமா உனக்கு அந்தப் பிளட் குரூப் தானா!?" என்று மீண்டும் தெளிவாக வர்மன் கேட்டான்.

"என் பிளட் குரூப் என்னனு எனக்குத் தெரியாதா?" என்று வர்மன் மீது உள்ள கோவத்தில் கடுப்பாகச் சொன்ன மகதிக்கு அவன் குரலைக் காதுகொடுத்து கேக்கவே சங்கடமாக இருந்தது.

"சரி சரி... நீ ரெடியா இரு, இன்னும் கொஞ்ச நேரத்துல மாயன் வந்து உன்னை அழைச்சிட்டு வருவான்" என்ற வர்மன் சட்டென்று கைபேசி இணைப்பைத் துண்டித்தவன், "மாயா... உன் தங்கச்சிக்கும் நம்ம அருண் பிளட் குரூப் தான். நீ சீக்கிரமா போய் மகதியை இங்க அழைச்சிட்டு வா" என்று வர்மன் சொன்னதும் சற்றும் தாமதிக்காமல் வேகமாகத் தன் வீட்டை நோக்கி அவன் காரை விரட்டினான் மாயன்.

மகதியை அழைத்து வர மாயன் சென்ற கையோடு வர்மன் மருத்துவரைப் பார்க்கச் சென்றவன், "சார் பிளட் கொடுக்க ஆள் ஏற்பாடு பண்ணிட்டோம், நீங்க உடனே என் பையனுக்கு டிரீட்மென்ட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க" என்று வர்மன் பதட்டறதுடன் சொன்னவனை அங்குள்ள ஒருவன் மறைந்து நின்று கைபேசி வாயிலாகப் படம் எடுத்துக்கொண்டு இருந்தான்.

அருணின் உயிரைக் காப்பாற்ற போராடும் வர்மன் தன்னை சுற்றி நடக்கும் எந்த விஷயத்தையும் கண்டுகொள்ளாமல் மகதியின் வருகைக்காகக் காத்து இருந்தான்.

"சார்... பிளாட் கிடைத்ததும் ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ணிடுவோம். இந்தாங்க நீங்க முதல்ல அறுவை சிகிச்சைக்கான உரிமை ஒப்புதல் தாளுல கையெழுத்து போடுங்க" என்ற மருத்துவர் கொடுத்த சில ஆவணங்களில் கையெழுத்திட்டான் வர்மன்.

சிறுவன் அருணின் நிலையை எண்ணி வர்மன் இடிந்து போய் ஒரு இருக்கையில் அமர்ந்தவனின் இதயம் பயத்தில் இயல்புக்கு மாறாக வேகமாய் துடித்துக்கொண்டு இருந்தது.

பத்து நிமிடங்கள் கடந்து இருக்கும், "சார்… பிளட் கொடுக்க ஆள் வந்தாச்சா? நம்ம தாமதிக்குற ஒவ்வொரு நொடியும், உங்க பையனின் உயிருக்குத் தான் ஆபத்து" என்று மருத்துவர் சொல்ல, வர்மன் தன் நண்பன் மாயனின் கைபேசிக்கு அவனைத் தொடர்பு கொண்டவன் மகதியின் வரவுக்காகக் காத்து இருந்தான்.

"என்னப்பா மாயன் போன் எடுத்தானா?" என்று ராஜன் கேக்க, "இல்ல அப்பா லைன் போகல" என்று வர்மன் சொல்லும் தருணம், "அதோ உங்க நண்பன் வராரு" என்று தூரத்தில் வேகமாக ஓடி வரும் மாயணை காட்டினார் அருண் படிக்கும் பள்ளியின் நிர்வாகி அம்பிகா.

"மாயா...மகதி எங்கே?"என்று வர்மன் கேக்க, தூரத்தில் கால்களைத் தாங்கியப்படி நடந்து வந்த மகதியை பார்த்தவன் அவளுக்கு என்னானது என்றுக்கூட கேக்காமல்,
"டாக்டர் ரத்தம் கொடுக்க ஆள் வந்தாச்சு" என்ற வர்மன் மகதியின் கையைப் பிடித்து வேகமாக அவளை ரத்தம் கொடுக்கும் அறைக்குள் அனுப்பி வைத்தான்.

வர்மனின் செயலில் மகதிக்கு கோவம் ஏற்பட்டாலும் காரில் வரும் தருணத்தில் மாயன் சிறுவன் அருணுக்காகத் தான் ரத்தம் தேவைப்படுகிறது என்று சொன்னதால் மகதி இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளதாவள் எதையும் எதிர்பார்க்கமல் அருணுக்கு தன் ரத்தத்தை கொடுத்துக்கொண்டு இருந்தாள்.

சில மணி நேரம் கடந்த நிலையில்,
"சார் நாங்க ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ண போறோம்" என்ற மருத்துவர் வேகமாகச் சிகிச்சை அறைக்குள் நுழைய, அதே தருணம் ரத்தம் கொடுத்த மகதியை செவிலியர் கைத்தாங்கலாக அழைத்து வந்து ஒரு இருக்கையில் அமர வைத்தார்.

"அம்மாடி உனக்கு ரொம்ப நன்றி மா" என்று ராஜன் கைகள் கூப்பி மகதிக்கு தன் நன்றியைத் தெரிவித்ததும், "வர்மா... வர வழியில சின்ன விபத்து டா... அதான் வர லேட் ஆச்சு" என்றான் மாயன்.
 
Joined
Feb 6, 2025
Messages
20
"என்ன மாயா சொல்லுற விபத்தா?" என்ற வர்மனின் பார்வை மகதியின் மீது பதிந்து மீண்டதும், "ஆமா வர்மா...வீட்டுல இருந்து மகதி காருல ஏறும்போது ஒரு பைக் காரர் இடிச்சிட்டாரு" என்று மாயன் சொன்னதும்,
"பெருசா ஏதும் அடிப்பட்டுச்சா மா" என்று ராஜன் கேட்க, இல்லை என்ற ரீதியில் தலையசைத்த மகதியை பார்த்த வர்மன் மகதியுடம் ஒரு வார்த்தை கூடப் பேசுவில்லை.

"அண்ணா...குழந்தைக்கு எப்படி அடி பட்டுச்சு?" என்று மகதி பொறுமையாக மாயனிடம் கேக்க, "எங்களுக்கும் ஒண்ணுமே புரியல மகதி.
ஸ்கூல்ல இருந்து போன் வந்ததும் நாங்களே தலையும் புரியாம வாலும் புரியாமல் ஹாஸ்பிடலுக்கு வந்து பார்த்தா அருண் பேச்சு மூச்சு இல்லாமல் அவனுக்கு ஆபரேஷன் பண்ணனும், ரத்தம் வேணும்னு டாக்டர் சொல்லிட்டாரு" என்று குழந்தையின் மீது அதிக பாசம் உள்ளவனாக மாயன்
தெரிவித்தான்.

"மேடம்... என் பேரனுக்கு என்னதான் ஆச்சு? ஒரு பிள்ளைக்குத் தலையில அடிப்பட்டு ஆப்ரேஷன் பண்ற அளவுக்கா உங்க ஸ்கூல் நிர்வாகம் பிள்ளைகளைக் கவனிக்காம இருக்கீங்க" என்று வர்மனின் தந்தை ராஜன், பள்ளியின் உரிமையாளர் அம்பிகாவை பார்த்துக் கோபத்துடனும் ஆதங்கத்துடன் தன் கேள்விகளை எழுப்பினார்.

"சார்... எங்க மேல எந்தத் தப்பும் இல்லை.
உங்க வீட்டு பிள்ளை தான் கொஞ்ச நாளாவே சொல் பேச்சு கேக்காம அவன்கூட படிக்கிற எல்லா பசங்க கூடவும் ரொம்ப வைலன்ட்டா பழக ஆரம்பிச்சான்.

அருணை பற்றி நான் இன்னைக்கு காலையில கூட இதோ மிஸ்டர் மாயன்கிட்ட பேசனேன்" என்ற பள்ளியின் நிர்வாகி அம்பிகா சொன்னது போலவே அருண் மூர்க்க குணமாக மாறுகிறான் என்று வர்மனும் அறிந்து தான் இருந்தான்.

"இன்னைக்கு அசெம்பிளி முடிந்ததும் பசங்க எல்லாம் அமைதியா அவங்கவங்க கிளாஸ்க்கு போயிட்டாங்க. ஆனா உங்க பையன் மட்டும் ஸ்கூல் காம்பவுண்ட் சுவரை ஏற முயற்சி பண்ணதால அவன் கூடப் படிக்கிற ஒரு பையன் அருணை அப்படியெல்லாம் பண்ணாதே கீழ இறங்குன்னு கண்டிச்சு இருக்கான். ஆனா அவன் சொல் பேச்சைக் கேட்காமல் அருண் மறுபடியும் காம்பவுண்ட் சுவரை ஏற முயற்சி செய்தவன் மேல இருந்து கீழ விழுந்த வேகத்துல இரும்பு பொருள் தலையில் பட்டு ரத்தப்போக்கு அதிகமாகி நாங்க அருணை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு வந்து சேர்த்தோம். நீங்களே சொல்லுங்க இதுல எங்க மேல என்ன சார் தப்பு இருக்கு" என்று பொறுமை இழந்தவராக அம்பிகா ராஜனிடம் பேசுவதை கேட்டு வர்மனுக்கு என்ன செய்வதென்றே புரியாமல் இப்போதைக்கு சிறுவன் அருண் உயிர் பிழைத்தால் போதும் என்று எண்ணம் மட்டுமே அவனுக்கும் தோன்றியது.

எட்டு வயதே ஆகிருக்கும் அருணுக்கு இதுவரை சின்னதாகக் காயம் கூட ஏற்படமால் பார்த்துக்கொண்ட அவனின் தாத்தா ராஜன், இன்று தன் பேரனுக்குப் பேச்சு மூச்சு இல்லாமல் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு இருப்பதை எண்ணி தவித்துத் தான் போனார்.

என்னதான் தன் அம்மா எங்கே என்று கேட்டு அருண் வர்மனை தொல்லை கொடுத்தாலும், தினமும் அவனின் மழலைக் குரலைக் கைபேசி வாயிலாகக் கேட்காமல் வர்மன் ஒரு நாளைக் கூடக் கடந்தது இல்லை.

குழந்தையின் இந்த நிலைமைக்குத் தானும் ஒரு முக்கிய காரணம் என்று அறிந்திருந்த வர்மனுக்கு வாழ்க்கையே சூனியமானதைப் போலத் தோன்றியது.

உலகத்தில் உள்ள எல்லா கடவுளிடமும் சிறுவன் அருணை காப்பாற்றி மீண்டும் பழையபடி தன்னிடம் தந்து விடுங்கள் என்று மனதார வேண்டிக் கொண்டான் வர்மன்.

இந்த நிலையில் ராஜன் மற்றும் வர்மனின் தவிப்பை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டிருந்த மகதிக்கு வர்மன் மீது இருந்த கோபம் சற்று குறைந்தது என்னவோ உண்மைதான்.

"மகதி... உன் கால் ரொம்ப வலிக்குதா? நான் வேணா உன்ன வீட்டுக்கு அழைச்சிட்டு போய் விடவா" என்று சோர்வாக அமர்ந்து இருந்த மகதியை பார்த்து மாயன் கேட்டான்.

"இருக்கட்டும் அண்ணா...சரி அந்தப் பிள்ளையோட அம்மா எங்கே?"என்று மகதி கேட்டதும், மாயன் அவளை முறைத்து பார்க்க," சொல்லுங்க அண்ணா உங்க நண்பன் வர்மனின் பொண்டாட்டி எங்கே? " என்று சின்னக் கடுப்புடன் தான் கேட்டாள் மகதி.

"குழந்தையோட அம்மா வெளிநாட்டில் இருக்காங்க. இதுக்கப்புறம் நீ இதைப்பற்றியெல்லாம் எதுவும்
கேட்காத" என்று மாயன் சொல்ல,
"குழந்தைக்கு அடிபட்ட விஷயத்தை அவங்க அம்மா கிட்ட சொல்லிட்டீங்களா?" என்று கேட்டாள் மகதி.

"என்ன பட்டுக்குட்டி நீ? நான்தான் சொல்றேனே இந்த விஷயத்தைப் பற்றி நீ என்கிட்ட எதையும் கேட்காத" என்று கோவமாகப் பேசும் மாயனின் பதிலைக் கேட்டு இவர்கள் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டாள் மகதி.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடந்த நிலையில் ஆப்ரேஷன் தியாட்டரிலிருந்து வெளியே வந்த மருத்துவரை நெருங்கிச் சென்ற வர்மன், "டாக்டர் என் குழந்தை எப்படி இருக்கான்?" என்று கேட்டவனுக்கு மருத்துவரின் பதில் என்னவாக இருக்கும் என்ற பயம் அவன் தைரியத்தை நிலை குழைய வைத்தது.

"சார்... உங்க பையன் பின்தலையில் அடிபட்டதால
மூளையின் பின்புறத்தில் செரிபெல்லம் என்ற பகுதியில் ரத்தக்கட்டி உருவாகி அதோடு, மூளைத்தண்டுக்கு அழுத்தம் ஏற்பட்டு இருந்துச்சு. நாங்க ஆப்ரேஷன் பண்ணாம இருந்திருந்தா குழந்தையின் உயிருக்கே அது ஆபத்தாக முடிந்து இருக்கும். நல்ல வேளையாகச் சரியான நேரத்துல நீங்க உங்க பையனுக்கு ரத்தம் கொடுக்க ஆளை ஏற்பாடு பண்ணீங்க" என்ற மருத்துவரின் வார்த்தையைக் கேட்டு வர்மன் ஒரு கணம் மகதியின் மீது தன் பார்வையை செலுத்தினான்.

"குழந்தைக்கு இப்போ நாங்க அந்த ரத்தக்கட்டியை அகற்றி, அழுத்தத்தைத் தளர்த்தியிருக்கோம்.
இவ்ளோ பெரிய ஆப்ரேஷனை தாங்கிக்க கூடிய சக்தி உங்க பிள்ளைக்கு இல்லை தான். ஆனாலும் இந்த ஆப்ரேஷன் பண்ணலைனா பின்னாடி குழந்தைக்கு அதுவே பெரிய பிரச்சனையைக் கொடுக்கும். அதான் உடனே நாங்க இந்த ஆப்ரேஷனை பண்ணி முடிச்சோம். ஆப்ரேஷன் சக்ஸஸ் தான். குழந்தையை ஐசியுக்கு மாத்தியதும் நீங்கப் போய்ப் பாருங்க" என்று மருத்துவர் சொன்னதும், ராஜனை தொடங்கி வர்மனின் முகத்திலும் அப்போது தான் நிம்மதி தெரிந்தது

"உங்களுக்கு ரொம்ப நன்றி டாக்டர்.இனி என் குழந்தைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே?" என்று வர்மன் கேட்க,
"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்" என்ற டாக்டர் இவர்களைக் கடந்து மருத்துவரின் அறைக்குச் சென்றார்.

ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது என்ற மருத்துவரின் சொல்லில் கொஞ்சமாக நிம்மதி அடைந்த வர்மன், "மகதி...நீ பண்ண உதவியை நான் சாகும் வரை மறக்கவே மாட்டேன்" என்றவன் உணர்ச்சிவசப்பட்டு மகதியின் கரங்களைப் பற்றிக்கொண்டதும், "நீங்கத் தான் என்னை மறந்துட்டிங்களே வர்மா!" என்று மனதில் எண்ணிய மகதிக்கு அவள் கண்களில் கண்ணீரும் வற்றிப்போனது.

ஐ.சி.யுவில் இருக்கும் சிறுவன் அருணை எப்பொழுது பார்ப்போம் என்ற தவிப்பில் வர்மன் சிகிச்சை அறைக்கு வெளியே குறுக்கும் நடுக்குமாக நடந்துக் கொண்டு இருக்க, ராஜன், மகதி, மாயன் என்று மூவரும் காத்திருப்பு இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.

"சார் உங்களுக்குக் குடிக்க டீ வாங்கிட்டு வரவா" என்று சோர்வாக அமர்ந்து இருக்கும் ராஜனிடம் மாயன் கேட்கும் தருணம் மாயனின் கைபேசிக்கு வர்மனின் அசிஸ்டன்ட் கோரியோகிராபர் ஷீலா அழைத்திருந்தார்.

"ஹலோ ஷீலா...நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன்? எதுவா இருந்தாலும் நாளைக்கு கால் பண்றேன் அப்போ பேசிக்கலாம்" என்ற மாயன் கைபேசி இணைப்பைத் துண்டிக்கும் முன்னே,
"மாயன் சார் இருங்க இருங்க...எக்ஸ் மீடியா பாத்தீங்களா? நம்ப வர்மன் மாஸ்டரை பற்றித் தான் செய்தி வந்துகிட்டு இருக்கு" என்று ஷீலா சொன்னதும் மாயனின் முகம் சட்டென்று மாறிப்போனது.

"என்ன வர்மன் மாஸ்டர் பத்தியா?" என்ற மாயன் ஷீலாவிடமிருந்து வந்த அழைப்பைத் துண்டித்தவன், சற்றும் தாமதிக்காமல் தன் கைபேசியின் வாயிலாகவே எக்ஸ் மீடியாவில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் செய்தியைப் பார்த்தவனின் முகம் அதிர்ச்சியாக மாறுவதை கண்ட வர்மன், மாயனின் கைப்பேசியை தன்வசம் எடுத்துப் பார்த்தவனின் முகமும் அதிர்ச்சி கலந்த கோபத்தில் மாறியது.

"என்ன மாயா யாரு என்ன சொல்றாங்க?" என்று ராஜன் கேட்க,

"ஹாய் செல்லம்ஸ்!
“என்ன மாஸ்டர்! அப்போ இது தான் உண்மையா? இத நீங்கச் சொல்லவே இல்லையே!” – கோலிவுட்டை உலுக்கிய சினிமா பின்னணி பரபரப்பு!

நடன இயக்குனர் அருள்மொழி வர்மன் தன் சொந்த உழைப்பின் மூலம் உச்சம் தொட்ட பிரபலம். ஆனால் இவர் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கும்னு யாரும் எதிர்பார்க்கல!

அப்படி என்ன ரகசியமுன்னு தானே கேக்குறிங்க!

வர்மன் மாஸ்டர்க்கு எட்டு வயசுல பிள்ளை இருக்காம். இதுவரைக்கும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய எந்தத் தகவலும் வெளியே சொல்லாதவரின் அந்த ரகசியம் தான் இப்போ வெளிச்சத்துக்கு வந்து இருக்கு.

ஆனா இதுல ஆச்சர்யத்தோட கவலைப்படும் விதமாக இன்னொரு விஷயமும் இருக்கு. வர்மன் மாஸ்டர் தனது மனைவியுடன் கடந்த சில வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். காரணம்? மன முரண்பாடு! ஆனால், இன்று தன் குழந்தைக்கு ஏற்பட்ட சிக்கலைக் கேட்டு அவசரமாக மருத்துவமனைக்கு வந்துள்ளாராம் அவரது மனைவி!

இந்த நேரத்தில் அனைவரையும் நெகிழ வைக்கும் ஒரு காட்சியையும் நீங்கப் பாருங்க.

மருத்துவமனையில் வர்மன் மாஸ்டர், இத்தனை வருடம் கடந்து தன் பிள்ளைக்காக மீண்டும் வந்த அவர் மனைவியின் கரங்களைப் பற்றிக்கொண்டு நன்றி தெரிவித்த புகைப்படமும் நம்ம பிலே பண்ண போறோம்!

வெளியே யாருக்கும் கட்டுப்படாத கம்பீரம். ஆனால் உள்ளத்தில் ஆனந்த கண்ணீர்!”
இது தான் இப்போ வர்மன் மாஸ்டர் வாழ்க்கையின் ரியலான சீன்!

இது தான் நம்ம எக்ஸ் மீடியாவில் மட்டும் கிடைக்கும் உண்மையான அப்டேட்!இன்னும் இந்த மாதிரி பல பிரபலங்களின் இன்னொரு பக்கத்தைத் தெரிந்து கொள்ள என்னோடு இணைந்து இருங்கள்"
என்ற செய்தியைக் கேட்டுக் கைபேசி வாயிலாகப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்த நிலையில்,
வர்மன் சற்று முன் மகதியின் கரங்களைப் பற்றிக் கொண்டு நன்றி தெரிவித்த புகைப்படமும் சேனலில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.
 
New member
Joined
May 2, 2025
Messages
6
இந்த மீடியாக்காரங்களுக்கு வேற வேலையே இல்ல எல்லாருடைய வாழ்க்கையிலையும் கும்மி அடிக்கிறாங்க பாவம் மகதி உண்மையில் அந்த குழந்தைக்கு யார் தான் அம்மா அப்பா கதை நல்லா சுவாரசியமா போகுது வாரத்திற்கு மூன்று முறையாவது பதிவை போடுங்கள் சிஸ்டர் 🤭
 
New member
Joined
Feb 8, 2025
Messages
12
இந்த வர்மனுக்கு கல்யாண ஆகிடுத்தா ரொம்ப குழப்பமா இருக்குதே அருண் பாவம்
 
New member
Joined
Mar 12, 2025
Messages
8
என்னடா இது new ப்ரோப்லேம் மகதி என்ன panna போறாளோ. ஆனாலும் மகதிக்கு ஒரு விதத்துல sandosham தான் இருக்கும் இந்த செய்தி ஆனா இப்போ புரியாது kadhai போக poga புரியும்
 
New member
Joined
Feb 8, 2025
Messages
11
Super super மகதிக்கு நல்லது நடக்குமா..Super Lovely story
 
New member
Joined
May 2, 2025
Messages
11
மஹதி அருணின் அம்மா இல்லையா அப்போ வர்மனின் மனைவி யாரு குழப்பதுக்கு சீக்கிரமா பதில் சொல்லுங்க 😍
 
New member
Joined
Feb 8, 2025
Messages
16
Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe
 
New member
Joined
May 9, 2025
Messages
7
Yaru unMayana mom for the kid,Varma tell the truth
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top