Active member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 20
- Thread Author
- #1
அத்தியாயம் - 4
சிறுவன் அருணை அந்த நிலைமையில் பார்த்த வர்மன், "ஏங்க... அருணுக்கு என்னாச்சு!ஐயோ என் பிள்ளைக்கு என்னாச்சு?" என்று அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக்கொண்டு அருண் படிக்கும் பள்ளியின் நிர்வாகி அம்பிகாவிடம் பதற்றத்துடன் கேட்டான்.
அம்பிகாவோ பயத்தில் தன் வியர்வை பூத்த முகத்தைத் துடைத்துக்கொண்டே, "ஸ்கூல்ல அருண் தலையில அடிபட்டுப் பேச்சு மூச்சு இல்லாம மயங்கிட்டான் சார். அதான் நாங்க அருணை உடனே ஹாஸ்பிடல் தூக்கிட்டு வந்தோம்" என்றவரின் வார்த்தையைக் கேட்டு வர்மனின் முகம் கோவத்தில் சிவந்து போனது.
"என்ன மேடம் நீங்க... ரொம்ப சாதாரணமா பிள்ளைக்கு அடிபட்டுடுச்சுனு சொல்றிங்க, இப்போ எங்க பையனுக்கு எப்படி இருக்கு?" என்ற ராஜன் சிகிச்சை அறையில் இருக்கும் சிறுவனை எட்டிபார்த்த தருணம், "அந்தச் சின்னப் பையன் வீட்டுல இருந்து அவனோட பேரண்ட்ஸ் வந்தாச்சா?" என்று கேட்ட மருத்துவரின் அருகே பதறி அடித்து ஓடி வந்தான் வர்மன்.
"டாக்டர் என் பையனுக்கு என்னாச்சு? அவன் நல்லா இருக்கான் தானே? பயப்புடும் படி என் பிள்ளைக்கு ஒன்னும் ஆகலையே?" என்ற வர்மனின் கண்கள் அருண் மேல் உள்ள அதித அன்பால் ஈரமானது.
"சார்... உங்க பையன் கீழே விழுந்த வேகத்துல, பின் தலை கனமான இரும்பு பொருளில் மோதிப் பலத்த காயத்தோடு இல்லாம ரத்தப்போக்கும் அதிகமா ஏற்பட்டிருக்கு" என்ற டாக்டரின் வார்த்தையைக் கேட்டு வர்மன் அவன் தலையில் இடி இறங்கியதை போல நின்று இருந்தான்.
"டாக்டர் என்ன சொல்றிங்க? இப்போ அருண் எப்படி இருக்கான்" என்று பயத்துடன் மாயன் கேக்க,
"பையனுக்கு உடனே ஆபரேஷன் பண்ணனும் சார். ஆனா பையனோட ரத்தப் பிரிவு 'Rh-null'. இது ரொம்பவே அரிய வகை ரத்தம்.இப்போ எங்க பிளட் பேங்க்ல அந்த வகை ரத்தம் இல்லை" என்ற மருத்துவரின் அடுத்தடுத்து வார்த்தையைக் கேட்டு வர்மனின் இதயம் செயலிலந்து போனது.
"நாங்க உங்க பையனுக்காக வெளி ஹாஸ்பிடல்ல பிளட் கேட்டு இருந்தோம், ஆனா அங்கேயும் ஸ்டோக் இல்லைனு சொல்லிட்டாங்க, உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா, உடனே அவங்கள ரத்தம் கொடுக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணுங்க" என்று மருத்துவர் சொன்னதும், சற்றும் தாமதிக்கமல் வர்மன் அவனின் கைபேசி வாயிலாக அவனுடன் பணியாற்றும் சக நடிகர்களை அழைத்துப் பார்த்தான்.
"ஐயோ... இன்னைக்கு நடிகர் சங்கத்துல மீட்டிங், அதான் யாருமே போன் எடுக்க மாட்டுறாங்க" என்று கோவமாகச் சொன்ன வர்மனுக்கு அடுத்து என்ன செய்வதேன்றே புரியாமல் போனது.
"மாயா... உங்க குடும்பத்துல யாருக்காவது இந்த வகை பிளட் குரூப் இருக்கா? என்று ராஜன் கேட்டதும்,"இல்ல சார்" என்று கவலையாகச் சொன்ன மாயன், "சார்... மகாலிங்கம் சித்தப்பாவுக்கு இந்தப் பிளட் குரூப் தான்னு நினைக்கிறேன். இருங்க நான் எதுக்கும் சித்தப்பாவுக்கு போன் பண்ணி கேக்குறேன்" என்ற மாயன் தன் கைபேசியை எடுத்தான்.
"ப்ச்...அவன் சென்னையில தானே இருக்கான் ! அவன் எப்படி உடனே இங்க வர முடியும்" என்று பதற்றத்துடன் சொன்னார் ராஜன்.
"மாயா... காலையில மகாலிங்கம் மாமாவோட பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தாளே! அவள் பிளட் குரூப் என்ன?" என்ற வர்மனின் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னே மாயன் தன் கைபேசி வாயிலாக மகதியை அழைத்தான்.
மாயன் வீட்டில் இருக்கும் மகதியோ வர்மன் மீது கண்மூடி தனமாகத் தன் காதலை வளர்த்துக்கொண்டவளுக்கு அழுது அழுது தலைவலி வந்தது தான் மிச்சமானது.
இனி வர்மனின் நினைவே மகதிக்கு வரக் கூடாது என்று எண்ணியவள் அவனை நினைத்துக் கடந்த பத்து வருடங்களாக எழுதிக்கொண்டு இருக்கும் அவள் கைக்குறிப்பு புத்தகத்தைக் கிழித்து போட எண்ணி தலையணைக் கீழ் இருந்த புத்தகத்தை எடுத்துக் கிழிக்க போகும் சமயம் மகதியின் கைபேசிக்கு மாயனிடமிருந்து அழைப்பு வந்தது.
விழிகளில் பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக் கொண்ட மகதி, மாயனிடமிருந்து கைபேசி வாயிலாக வந்த அழைப்புக்கு உயிர் கொடுத்தவள் "சொல்லுங்க அண்ணா..." என்றாள்.
"மகதி... உன் பிளட் குரூப் என்னமா? " என்று பதற்றத்துடன் மாயன் கேக்க, "என்ன அண்ணா... எதாவது பிரச்சனையா?"
என்று மகதி ஏதும் புரிதயாதவளாக
கேட்டதும், "நீ முதல்ல உன் பிளட் குரூப் என்னனு சொல்லு" என்ற மாயனின் கைபேசியை தன் வசம் வேகமாகப் பிடுங்கினான் வர்மன்.
"அண்ணா... சொல்லுங்க எதாவது பிரச்சனையா?" என்று மீண்டும் மகதி கேட்டதும்,
"நான் வர்மன் பேசுறேன்" என்றவனின் குரலில் மகதியின் இதயத்துடிப்பு வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
"ஹலோ லைன்ல இருக்கியா? " என்று வர்மனும் பதற்றத்துடன் கேக்க,"ஆங் இருக்கேன்" என்ற மகதிக்கு வர்மனின் குரலை வைத்தே அங்கே ஏதோ பிரச்சனை என்று புரிந்துகொண்டவள், "சொல்லுங்க என்ன விஷயம்?" என்று அவளாக முன் வந்து வர்மனிடம் கேட்டாள்.
"உன் பிளட் குரூப் என்ன?" என்று வர்மன் கேட்டதும், "எனக்கு RH-null" என்று மகதி சொல்ல, "நல்லா தெரியுமா உனக்கு அந்தப் பிளட் குரூப் தானா!?" என்று மீண்டும் தெளிவாக வர்மன் கேட்டான்.
"என் பிளட் குரூப் என்னனு எனக்குத் தெரியாதா?" என்று வர்மன் மீது உள்ள கோவத்தில் கடுப்பாகச் சொன்ன மகதிக்கு அவன் குரலைக் காதுகொடுத்து கேக்கவே சங்கடமாக இருந்தது.
"சரி சரி... நீ ரெடியா இரு, இன்னும் கொஞ்ச நேரத்துல மாயன் வந்து உன்னை அழைச்சிட்டு வருவான்" என்ற வர்மன் சட்டென்று கைபேசி இணைப்பைத் துண்டித்தவன், "மாயா... உன் தங்கச்சிக்கும் நம்ம அருண் பிளட் குரூப் தான். நீ சீக்கிரமா போய் மகதியை இங்க அழைச்சிட்டு வா" என்று வர்மன் சொன்னதும் சற்றும் தாமதிக்காமல் வேகமாகத் தன் வீட்டை நோக்கி அவன் காரை விரட்டினான் மாயன்.
மகதியை அழைத்து வர மாயன் சென்ற கையோடு வர்மன் மருத்துவரைப் பார்க்கச் சென்றவன், "சார் பிளட் கொடுக்க ஆள் ஏற்பாடு பண்ணிட்டோம், நீங்க உடனே என் பையனுக்கு டிரீட்மென்ட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க" என்று வர்மன் பதட்டறதுடன் சொன்னவனை அங்குள்ள ஒருவன் மறைந்து நின்று கைபேசி வாயிலாகப் படம் எடுத்துக்கொண்டு இருந்தான்.
அருணின் உயிரைக் காப்பாற்ற போராடும் வர்மன் தன்னை சுற்றி நடக்கும் எந்த விஷயத்தையும் கண்டுகொள்ளாமல் மகதியின் வருகைக்காகக் காத்து இருந்தான்.
"சார்... பிளாட் கிடைத்ததும் ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ணிடுவோம். இந்தாங்க நீங்க முதல்ல அறுவை சிகிச்சைக்கான உரிமை ஒப்புதல் தாளுல கையெழுத்து போடுங்க" என்ற மருத்துவர் கொடுத்த சில ஆவணங்களில் கையெழுத்திட்டான் வர்மன்.
சிறுவன் அருணின் நிலையை எண்ணி வர்மன் இடிந்து போய் ஒரு இருக்கையில் அமர்ந்தவனின் இதயம் பயத்தில் இயல்புக்கு மாறாக வேகமாய் துடித்துக்கொண்டு இருந்தது.
பத்து நிமிடங்கள் கடந்து இருக்கும், "சார்… பிளட் கொடுக்க ஆள் வந்தாச்சா? நம்ம தாமதிக்குற ஒவ்வொரு நொடியும், உங்க பையனின் உயிருக்குத் தான் ஆபத்து" என்று மருத்துவர் சொல்ல, வர்மன் தன் நண்பன் மாயனின் கைபேசிக்கு அவனைத் தொடர்பு கொண்டவன் மகதியின் வரவுக்காகக் காத்து இருந்தான்.
"என்னப்பா மாயன் போன் எடுத்தானா?" என்று ராஜன் கேக்க, "இல்ல அப்பா லைன் போகல" என்று வர்மன் சொல்லும் தருணம், "அதோ உங்க நண்பன் வராரு" என்று தூரத்தில் வேகமாக ஓடி வரும் மாயணை காட்டினார் அருண் படிக்கும் பள்ளியின் நிர்வாகி அம்பிகா.
"மாயா...மகதி எங்கே?"என்று வர்மன் கேக்க, தூரத்தில் கால்களைத் தாங்கியப்படி நடந்து வந்த மகதியை பார்த்தவன் அவளுக்கு என்னானது என்றுக்கூட கேக்காமல்,
"டாக்டர் ரத்தம் கொடுக்க ஆள் வந்தாச்சு" என்ற வர்மன் மகதியின் கையைப் பிடித்து வேகமாக அவளை ரத்தம் கொடுக்கும் அறைக்குள் அனுப்பி வைத்தான்.
வர்மனின் செயலில் மகதிக்கு கோவம் ஏற்பட்டாலும் காரில் வரும் தருணத்தில் மாயன் சிறுவன் அருணுக்காகத் தான் ரத்தம் தேவைப்படுகிறது என்று சொன்னதால் மகதி இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளதாவள் எதையும் எதிர்பார்க்கமல் அருணுக்கு தன் ரத்தத்தை கொடுத்துக்கொண்டு இருந்தாள்.
சில மணி நேரம் கடந்த நிலையில்,
"சார் நாங்க ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ண போறோம்" என்ற மருத்துவர் வேகமாகச் சிகிச்சை அறைக்குள் நுழைய, அதே தருணம் ரத்தம் கொடுத்த மகதியை செவிலியர் கைத்தாங்கலாக அழைத்து வந்து ஒரு இருக்கையில் அமர வைத்தார்.
"அம்மாடி உனக்கு ரொம்ப நன்றி மா" என்று ராஜன் கைகள் கூப்பி மகதிக்கு தன் நன்றியைத் தெரிவித்ததும், "வர்மா... வர வழியில சின்ன விபத்து டா... அதான் வர லேட் ஆச்சு" என்றான் மாயன்.
சிறுவன் அருணை அந்த நிலைமையில் பார்த்த வர்மன், "ஏங்க... அருணுக்கு என்னாச்சு!ஐயோ என் பிள்ளைக்கு என்னாச்சு?" என்று அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக்கொண்டு அருண் படிக்கும் பள்ளியின் நிர்வாகி அம்பிகாவிடம் பதற்றத்துடன் கேட்டான்.
அம்பிகாவோ பயத்தில் தன் வியர்வை பூத்த முகத்தைத் துடைத்துக்கொண்டே, "ஸ்கூல்ல அருண் தலையில அடிபட்டுப் பேச்சு மூச்சு இல்லாம மயங்கிட்டான் சார். அதான் நாங்க அருணை உடனே ஹாஸ்பிடல் தூக்கிட்டு வந்தோம்" என்றவரின் வார்த்தையைக் கேட்டு வர்மனின் முகம் கோவத்தில் சிவந்து போனது.
"என்ன மேடம் நீங்க... ரொம்ப சாதாரணமா பிள்ளைக்கு அடிபட்டுடுச்சுனு சொல்றிங்க, இப்போ எங்க பையனுக்கு எப்படி இருக்கு?" என்ற ராஜன் சிகிச்சை அறையில் இருக்கும் சிறுவனை எட்டிபார்த்த தருணம், "அந்தச் சின்னப் பையன் வீட்டுல இருந்து அவனோட பேரண்ட்ஸ் வந்தாச்சா?" என்று கேட்ட மருத்துவரின் அருகே பதறி அடித்து ஓடி வந்தான் வர்மன்.
"டாக்டர் என் பையனுக்கு என்னாச்சு? அவன் நல்லா இருக்கான் தானே? பயப்புடும் படி என் பிள்ளைக்கு ஒன்னும் ஆகலையே?" என்ற வர்மனின் கண்கள் அருண் மேல் உள்ள அதித அன்பால் ஈரமானது.
"சார்... உங்க பையன் கீழே விழுந்த வேகத்துல, பின் தலை கனமான இரும்பு பொருளில் மோதிப் பலத்த காயத்தோடு இல்லாம ரத்தப்போக்கும் அதிகமா ஏற்பட்டிருக்கு" என்ற டாக்டரின் வார்த்தையைக் கேட்டு வர்மன் அவன் தலையில் இடி இறங்கியதை போல நின்று இருந்தான்.
"டாக்டர் என்ன சொல்றிங்க? இப்போ அருண் எப்படி இருக்கான்" என்று பயத்துடன் மாயன் கேக்க,
"பையனுக்கு உடனே ஆபரேஷன் பண்ணனும் சார். ஆனா பையனோட ரத்தப் பிரிவு 'Rh-null'. இது ரொம்பவே அரிய வகை ரத்தம்.இப்போ எங்க பிளட் பேங்க்ல அந்த வகை ரத்தம் இல்லை" என்ற மருத்துவரின் அடுத்தடுத்து வார்த்தையைக் கேட்டு வர்மனின் இதயம் செயலிலந்து போனது.
"நாங்க உங்க பையனுக்காக வெளி ஹாஸ்பிடல்ல பிளட் கேட்டு இருந்தோம், ஆனா அங்கேயும் ஸ்டோக் இல்லைனு சொல்லிட்டாங்க, உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா, உடனே அவங்கள ரத்தம் கொடுக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணுங்க" என்று மருத்துவர் சொன்னதும், சற்றும் தாமதிக்கமல் வர்மன் அவனின் கைபேசி வாயிலாக அவனுடன் பணியாற்றும் சக நடிகர்களை அழைத்துப் பார்த்தான்.
"ஐயோ... இன்னைக்கு நடிகர் சங்கத்துல மீட்டிங், அதான் யாருமே போன் எடுக்க மாட்டுறாங்க" என்று கோவமாகச் சொன்ன வர்மனுக்கு அடுத்து என்ன செய்வதேன்றே புரியாமல் போனது.
"மாயா... உங்க குடும்பத்துல யாருக்காவது இந்த வகை பிளட் குரூப் இருக்கா? என்று ராஜன் கேட்டதும்,"இல்ல சார்" என்று கவலையாகச் சொன்ன மாயன், "சார்... மகாலிங்கம் சித்தப்பாவுக்கு இந்தப் பிளட் குரூப் தான்னு நினைக்கிறேன். இருங்க நான் எதுக்கும் சித்தப்பாவுக்கு போன் பண்ணி கேக்குறேன்" என்ற மாயன் தன் கைபேசியை எடுத்தான்.
"ப்ச்...அவன் சென்னையில தானே இருக்கான் ! அவன் எப்படி உடனே இங்க வர முடியும்" என்று பதற்றத்துடன் சொன்னார் ராஜன்.
"மாயா... காலையில மகாலிங்கம் மாமாவோட பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தாளே! அவள் பிளட் குரூப் என்ன?" என்ற வர்மனின் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னே மாயன் தன் கைபேசி வாயிலாக மகதியை அழைத்தான்.
மாயன் வீட்டில் இருக்கும் மகதியோ வர்மன் மீது கண்மூடி தனமாகத் தன் காதலை வளர்த்துக்கொண்டவளுக்கு அழுது அழுது தலைவலி வந்தது தான் மிச்சமானது.
இனி வர்மனின் நினைவே மகதிக்கு வரக் கூடாது என்று எண்ணியவள் அவனை நினைத்துக் கடந்த பத்து வருடங்களாக எழுதிக்கொண்டு இருக்கும் அவள் கைக்குறிப்பு புத்தகத்தைக் கிழித்து போட எண்ணி தலையணைக் கீழ் இருந்த புத்தகத்தை எடுத்துக் கிழிக்க போகும் சமயம் மகதியின் கைபேசிக்கு மாயனிடமிருந்து அழைப்பு வந்தது.
விழிகளில் பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக் கொண்ட மகதி, மாயனிடமிருந்து கைபேசி வாயிலாக வந்த அழைப்புக்கு உயிர் கொடுத்தவள் "சொல்லுங்க அண்ணா..." என்றாள்.
"மகதி... உன் பிளட் குரூப் என்னமா? " என்று பதற்றத்துடன் மாயன் கேக்க, "என்ன அண்ணா... எதாவது பிரச்சனையா?"
என்று மகதி ஏதும் புரிதயாதவளாக
கேட்டதும், "நீ முதல்ல உன் பிளட் குரூப் என்னனு சொல்லு" என்ற மாயனின் கைபேசியை தன் வசம் வேகமாகப் பிடுங்கினான் வர்மன்.
"அண்ணா... சொல்லுங்க எதாவது பிரச்சனையா?" என்று மீண்டும் மகதி கேட்டதும்,
"நான் வர்மன் பேசுறேன்" என்றவனின் குரலில் மகதியின் இதயத்துடிப்பு வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
"ஹலோ லைன்ல இருக்கியா? " என்று வர்மனும் பதற்றத்துடன் கேக்க,"ஆங் இருக்கேன்" என்ற மகதிக்கு வர்மனின் குரலை வைத்தே அங்கே ஏதோ பிரச்சனை என்று புரிந்துகொண்டவள், "சொல்லுங்க என்ன விஷயம்?" என்று அவளாக முன் வந்து வர்மனிடம் கேட்டாள்.
"உன் பிளட் குரூப் என்ன?" என்று வர்மன் கேட்டதும், "எனக்கு RH-null" என்று மகதி சொல்ல, "நல்லா தெரியுமா உனக்கு அந்தப் பிளட் குரூப் தானா!?" என்று மீண்டும் தெளிவாக வர்மன் கேட்டான்.
"என் பிளட் குரூப் என்னனு எனக்குத் தெரியாதா?" என்று வர்மன் மீது உள்ள கோவத்தில் கடுப்பாகச் சொன்ன மகதிக்கு அவன் குரலைக் காதுகொடுத்து கேக்கவே சங்கடமாக இருந்தது.
"சரி சரி... நீ ரெடியா இரு, இன்னும் கொஞ்ச நேரத்துல மாயன் வந்து உன்னை அழைச்சிட்டு வருவான்" என்ற வர்மன் சட்டென்று கைபேசி இணைப்பைத் துண்டித்தவன், "மாயா... உன் தங்கச்சிக்கும் நம்ம அருண் பிளட் குரூப் தான். நீ சீக்கிரமா போய் மகதியை இங்க அழைச்சிட்டு வா" என்று வர்மன் சொன்னதும் சற்றும் தாமதிக்காமல் வேகமாகத் தன் வீட்டை நோக்கி அவன் காரை விரட்டினான் மாயன்.
மகதியை அழைத்து வர மாயன் சென்ற கையோடு வர்மன் மருத்துவரைப் பார்க்கச் சென்றவன், "சார் பிளட் கொடுக்க ஆள் ஏற்பாடு பண்ணிட்டோம், நீங்க உடனே என் பையனுக்கு டிரீட்மென்ட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க" என்று வர்மன் பதட்டறதுடன் சொன்னவனை அங்குள்ள ஒருவன் மறைந்து நின்று கைபேசி வாயிலாகப் படம் எடுத்துக்கொண்டு இருந்தான்.
அருணின் உயிரைக் காப்பாற்ற போராடும் வர்மன் தன்னை சுற்றி நடக்கும் எந்த விஷயத்தையும் கண்டுகொள்ளாமல் மகதியின் வருகைக்காகக் காத்து இருந்தான்.
"சார்... பிளாட் கிடைத்ததும் ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ணிடுவோம். இந்தாங்க நீங்க முதல்ல அறுவை சிகிச்சைக்கான உரிமை ஒப்புதல் தாளுல கையெழுத்து போடுங்க" என்ற மருத்துவர் கொடுத்த சில ஆவணங்களில் கையெழுத்திட்டான் வர்மன்.
சிறுவன் அருணின் நிலையை எண்ணி வர்மன் இடிந்து போய் ஒரு இருக்கையில் அமர்ந்தவனின் இதயம் பயத்தில் இயல்புக்கு மாறாக வேகமாய் துடித்துக்கொண்டு இருந்தது.
பத்து நிமிடங்கள் கடந்து இருக்கும், "சார்… பிளட் கொடுக்க ஆள் வந்தாச்சா? நம்ம தாமதிக்குற ஒவ்வொரு நொடியும், உங்க பையனின் உயிருக்குத் தான் ஆபத்து" என்று மருத்துவர் சொல்ல, வர்மன் தன் நண்பன் மாயனின் கைபேசிக்கு அவனைத் தொடர்பு கொண்டவன் மகதியின் வரவுக்காகக் காத்து இருந்தான்.
"என்னப்பா மாயன் போன் எடுத்தானா?" என்று ராஜன் கேக்க, "இல்ல அப்பா லைன் போகல" என்று வர்மன் சொல்லும் தருணம், "அதோ உங்க நண்பன் வராரு" என்று தூரத்தில் வேகமாக ஓடி வரும் மாயணை காட்டினார் அருண் படிக்கும் பள்ளியின் நிர்வாகி அம்பிகா.
"மாயா...மகதி எங்கே?"என்று வர்மன் கேக்க, தூரத்தில் கால்களைத் தாங்கியப்படி நடந்து வந்த மகதியை பார்த்தவன் அவளுக்கு என்னானது என்றுக்கூட கேக்காமல்,
"டாக்டர் ரத்தம் கொடுக்க ஆள் வந்தாச்சு" என்ற வர்மன் மகதியின் கையைப் பிடித்து வேகமாக அவளை ரத்தம் கொடுக்கும் அறைக்குள் அனுப்பி வைத்தான்.
வர்மனின் செயலில் மகதிக்கு கோவம் ஏற்பட்டாலும் காரில் வரும் தருணத்தில் மாயன் சிறுவன் அருணுக்காகத் தான் ரத்தம் தேவைப்படுகிறது என்று சொன்னதால் மகதி இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளதாவள் எதையும் எதிர்பார்க்கமல் அருணுக்கு தன் ரத்தத்தை கொடுத்துக்கொண்டு இருந்தாள்.
சில மணி நேரம் கடந்த நிலையில்,
"சார் நாங்க ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ண போறோம்" என்ற மருத்துவர் வேகமாகச் சிகிச்சை அறைக்குள் நுழைய, அதே தருணம் ரத்தம் கொடுத்த மகதியை செவிலியர் கைத்தாங்கலாக அழைத்து வந்து ஒரு இருக்கையில் அமர வைத்தார்.
"அம்மாடி உனக்கு ரொம்ப நன்றி மா" என்று ராஜன் கைகள் கூப்பி மகதிக்கு தன் நன்றியைத் தெரிவித்ததும், "வர்மா... வர வழியில சின்ன விபத்து டா... அதான் வர லேட் ஆச்சு" என்றான் மாயன்.