• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
16
💐அத்தியாயம் - 3

அருள்மொழி வர்மனை சிறுவன் அருண் அப்பா என்று அழைத்ததை நம்ப முடியாமல் மகதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

"சொல்லுங்க அப்பா இவங்க தான் என் அம்மாவா!?" என்று கேட்ட அருண் வேகமாக ஓடிச் சென்று மகதியை ஏக்கமாகக் கட்டிக்கொண்டான்.

"அருண்... இந்தப் பக்கம் வா. அப்பா யாரு இவங்க?" என்ற வர்மன் சிறுவன் அருணை தன் வசம் அணைத்துக்கொண்டவனை ஏமாற்றமாகப் பார்த்தாள் மகதி.

தன்னை யாரென்று தெரியாததை போலப் பேசும் வர்மனின் வார்த்தையைக் கேட்டு மகதியின் முகம் மேலும் வாடிப்போனது.

"அப்பா... உங்கள தான் கேக்குறேன் யாரு இவங்க?" என்று மீண்டும் வர்மன் கேக்க,
"என்ன வர்மா நீ! என் மருமகளை மறந்துட்டியா! இவ தான் நம்ம மகாலிங்கம் பொண்ணு மகதி" என்று ராஜன் சொன்னதும், "என்ன மகதியா!?" என்று ஆச்சிரியமாகக் கேட்ட வர்மனின் அருகே நின்று இருந்த சிறுவன் மீண்டும் மகதி அருகே சென்றவன், "அம்மா... நீங்கத் தானே என் அம்மா?" என்று மீண்டும் அதே ஏக்கத்துடன் கேட்டான்.

"அருண்... இவங்க உன் அம்மா இல்ல" என்ற வர்மன் சிறுவனைத் தன் வசம் தூக்கிகொண்டவன், "எப்படி மகதி இருக்க? அத்தை மாமா எப்படி இருக்காங்க?" என்று கேட்ட வர்மனுக்கு தன் தந்தையிடம் பணியாற்றிய மகாலிங்கத்தை உரிமையோடு மாமா என்று அழைப்பது தான் வழக்கம்.

இத்தனை வருடம் வர்மனின் காதலுக்காகக் காத்து இருந்த மகதிக்கு அவனை அப்பா என்று அழைத்த சிறுவனைப் பார்த்து, எது உண்மை எது பொய் என்று புரியாமல் குழம்பி போனவளை,"மருமகளே... வர்மன் உன்கிட்ட தான் பேசுறான்" என்ற ராஜனின் குரல் சுயத்துக்கு அழைத்து வந்தது.

"ஹாங்...நல்லா இருக்காங்க" என்று மகதி சொல்ல, "அருண் வா நேரமாகுது பாரு குளிச்சிட்டு ஸ்கூல் கிளம்பனும்" என்ற வர்மன் சிறுவனைக் தூக்கிக்கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தவனை
அதே இடத்தில் சட்டையைப் பிடித்து
என்னை ஏன்டா ஏமாத்துன என்று கத்தி அழ வேண்டும் என்று மகதிக்கு ஆதங்கம் தோன்றியது.

"மகதி...அருணை நேரத்தோடு ஸ்கூலுக்கு அனுப்பனும். அதனால தான் வர்மன் உன்க்கிட்ட சரியா பேசாம போறான். நீ வா, வந்து இப்படி உட்காரு. மாயா... அருண் கிளம்பினதும் அவனை ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போயி விட்டுடு. அப்புறம் அவன் டீச்சர் ஏதோ அருணைப் பற்றிப் பேசணும்னு சொன்னாங்க. நான் சாயங்காலம் அவங்களை வந்து பார்க்கிறேன்னு சொல்லு" என்று ராஜன் சொல்ல, "அண்ணா... வர்மனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று கேட்ட மகதியின் குரலில் அவ்வளவு வலிகள் நிறைந்து இருந்ததை மாயன் உணர்ந்து இருந்தான்.

"மகதி... நான் தான் சொன்னேனே! இங்க எதுவும் நீ நினைத்ததை போல இருக்காது. சரி நீ உக்காரு நான் போய் அருணை ஸ்கூல்ல விட்டுட்டு வரேன்" என்ற மாயன் சிறுவன் அறைக்குள் நுழைந்தவன் வர்மனுடன் சேர்ந்து சிறுவனைப் பள்ளிக்குக் கிளம்ப உதவி செய்தான்.

"மாட்டேன்... நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன். எனக்கு என் அம்மா எங்கன்னு சொல்லுங்க. அப்போ தான் நான் ஸ்கூலுக்கு போவேன்" என்று அடம் பிடிக்கும் சிறுவனை ஒரு வழியாகக் காக்கா குளியலை குளிப்பாட்டி வர்மன் சாப்பாட்டு மேசைக்குத் தூக்கி வந்தவனின் முகமெல்லாம் வியர்வை துளி படர்ந்து இருந்தது.

கடந்த சில வருடங்களாக ஊடங்களிலும் செய்தி தாள்களிலும் வர்மனை பற்றி வந்த எந்த கட்டுக்கதையையும் நம்பாத மகதிக்கு இன்று நேரில் வர்மனை குழந்தையுடன் பார்த்ததும் அவள் காதில் விழுந்த செய்திகள் எல்லாம் உண்மை தானா என்று தோன்றியது.

"அப்புறம் மருமகளே... எப்போ சென்னையில இருந்து வந்த?" என்று ராஜன் விசாரிக்க, "காலையில தான் மாமா"என்ற மகதிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

"அப்பா... நீங்கச் சாப்பிட்டீங்களா?" என்ற வர்மன் அவசர அவசரமாகச் சிறுவனுக்குக் காலை உணவை ஊட்டியவன், "மகதி நீ சாப்பிட்டியா?" எனக் கடமைக்கென்று விசாரிப்பவனின் பேச்சில் ஒரு துளி கூடக் காதல் உணர்வே இல்லை என்று அப்பட்டமாகப் புரிந்துகொண்ட மகதிக்கு அந்தக் கணமே அங்கிருந்து வெளியேற வேண்டும் எண்ணம் தோன்றியது.

"மாயா... இவன் இதுக்கு மேல சாப்பிட மாட்டான். மதியம் லஞ்ச் இந்தப் பாக்ஸ்ல இருக்கு. நீ போய் அருணை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடு. இன்னைக்கு நடிகர் சங்கத்துல ஒரு மீட்டிங் இருக்கு நான் அங்க கிளம்பனும்" என்ற வர்மன் சிறுவன் அருணின் கன்னத்தில் இதழ் பதித்தவன் வேகமாக அவன் அறைக்குள் புகுந்தவனை இமைகள் அசைக்காமல் பார்த்து
இருந்தாள் மகதி.

"மருமகளே...என்ன நீ? ஏன் ஒரு மாதிரி இருக்க? ஆமா... ஏன் நீ மட்டும் மும்பை வந்து இருக்க? எதாவது முக்கியமான விஷயமா?" என்று ராஜன் உரிமையாக மகதியை கேட்டதும், "சார்... பாப்பாவுக்கு மும்பையில வேலை பார்க்கனும்னு ஆசையாம், அதான் சித்தப்பா இங்க அனுப்பி வச்சி இருக்காரு" என்ற மாயன் சிறுவன் அருணை தன் தோளில் தூக்கிகொண்டான்.

"ஓ... வேலைக்கு வந்து இருக்கியா.ஆமா நீ என்ன படிச்சு இருக்க?" என்று ராஜன் கேட்டதும், "B. Ed. முடிச்சிட்டு பாப்பா ஒரு ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்த்துகிட்டு இருந்தா சார்" என்று மாயன் சொல்ல, "என்னப்பா சொல்ற? சென்னை ஸ்கூல்ல வேலை பார்த்த டீச்சர் பொண்ணுக்கு மும்பையில வேலை செய்யறதுக்கு என்ன அவசியம் வந்துச்சு?" என்ற ராஜனின் மனதில் தோன்றிய அதே கேள்விதான் மாயன் மனதிலும் தோன்றியது.

"அது...அது வந்து மாமா, வீட்ல கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க. அதான் நான் கொஞ்ச நாள் இங்க வந்து வேலை பார்க்கலாம்ன்னு அண்ணன் வீட்டுக்கு வந்துட்டேன்"
என்ற மகதியின் வார்த்தையைக் கேட்டு ராஜன் சிரித்துக் கொண்டவர் "ஏமா கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலையா? என்ன காதல் விவகாரம் ஏதாவது இருக்கா என்ன? என்று சிரித்துக்கொண்டே கேட்டார் ராஜன்.

"ஆமாம் காதல் தான். பத்து வருஷமா உங்க மகனைத் தான் காதலிக்கிறேன். ஆனா என் காதலுக்கு ஒரு துளிகூட தகுதி இல்லாதவர் உங்கள் மகன்" என்று தன் மனதளவில் நினைத்த மகதி, "சரி மாமா நான் கிளம்புறன்" என்றவள் அவசர அவசரமாக வாசலை நோக்கி நடந்தாள்.

"மகதி...நீதானே ராஜன் சாரை இன்னைக்கு பார்த்தே ஆகணும்னு வேகவேகமாக இந்த வீட்டுக்குக் கிளம்பி வந்த! இப்ப என்ன உடனே நம்ம வீட்டுக்குப் போகலாம்ன்னு சொல்ற?" என மாயன் கேட்க,
"ஆமா...நான் தான் மாமாவைப் பார்க்கலாம்னு வந்தேன். அதான் பாத்துட்டேனே. நீங்க என்னை வீட்ல இறக்கி விட்டுடுங்க"என்ற மகதியின் முகம் வாடி இருப்பதை பார்த்த மாயனுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று எண்ணம் தோன்றியது.

"என் மருமக காலையில தானேப்பா சென்னையில இருந்து மும்பைக்கு வந்து இறங்கி இருக்கிறாள். அதான் சோர்வா இருக்கிறாள் போல! இனி மும்பையிலதான மகதி இருக்கப் போறாள். அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்துட்டு போகட்டும். இப்போ அருணை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே மகதியை உன் வீட்டுல டிராப்
பண்ணிட்டு வா " என்று ராஜன் சொல்ல,
"சரி சார் நாங்க கிளம்புறோம்"என்ற மாயன் சிறுவன் அருணை அழைத்துச் சென்று காரின் முன் இருக்கையில் அமர வைத்தான்.

வர்மன் நுழைந்த அறையை ஒரு கணம் திரும்பிப் பார்த்த மகதி அவனைக் காணாமல் "போயிட்டு வரேன் மாமா" என்று ராஜனிடம் சொன்னபடி வேகவேகமாக மாயன் காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

சிறுவன் அருணையும் மகதியையும் வர்மன் வீட்டிலிருந்து மாயன் காரில் அழைத்துச் செல்ல, வழி எல்லாம் மகதி பல மணக்குமரல்களை மனதில் சுமந்தபடியே அமர்ந்திருந்தவளை காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் சிறுவன் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு வந்தவன் மனதில் இவள் தான் நம் அம்மாவா என்ற கேள்வி மட்டுமே எழுந்த வண்ணமாக இருந்தது.

"என்ன அருண் செல்லம் ஏன் என் தங்கச்சிய திரும்பித் திரும்பிப் பாக்குற?" என்று மாயன் கேட்க, "இவங்கதான் உங்க தங்கச்சியா? இவங்க எங்க இருந்து வராங்க? நான் இவங்கள உங்க கூடப் பார்த்ததே இல்லையே" என்ற சிறுவன் மாயனிடம் நட்பாகப் பேசுபவன் தன் தாத்தாவிடம் கடுக்கடுத்து எரிந்து விழக் காரணம் அவன் அம்மா எங்கே என்று கேட்கும் சிறுவனின் கேள்விக்கு இதுவரை அவர் பதில் சொல்லாமல் இருப்பது தான்.

 
Joined
Feb 6, 2025
Messages
16

மாயன் பேசுவதோ சிறுவன் பேசுவதோ எதைப்பற்றியும் காதில் வாங்காத மகதியின் மனம் முழுதும் ரணமாய் மாறி இருக்க, கடந்த பத்து வருடமாக எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கின்றோம் என்று தன்னைத்தானே நொந்து கொண்ட பெண்ணிற்கு தன் தந்தையிடம் இந்த நொடியே பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

காரின் கண்ணாடி வழியே மகதியின் எண்ண ஓட்டத்தை அறிந்ந்துகொண்ட மாயன், "பட்டுக்குட்டி என்ன ஆச்சு உனக்கு? ஏன் ஒரு மாதிரி இருக்க? ராஜன் சார் வீட்டுக்கு வரும்போது உனக்கு இருந்த சந்தோஷம் இப்போ உன் முகத்துல சுத்தமா இல்லையே? என்னமா உடம்பு ஏதாவது சரியில்லையா? "என்று மாயன் கேட்டதும்

"அண்ணா உண்மையைச் சொல்லுங்க, வர்மனுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? இந்த குழந்தை அவரோட பிள்ளையா? அப்போ இந்தக் குழந்தையோட அம்மா யார்?" என்ற மகதியின் கேள்விக்குச் சிறுவன் எதிரே எந்தப் பதிலைச் சொன்னாலும் அது குழந்தையின் மனதை பாதிக்கும் என்று அறிந்திருந்தான் மாயன்.

"மகதி இப்ப எதுக்கு உனக்கு இந்தக் கேள்வி எல்லாம்? நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன், இந்த இடைப்பட்ட காலத்துல ராஜன் சார் வீட்ல எவ்வளவோ பிரச்சனைகள் நடந்துடுச்சி. அதனால நீ இதையெல்லாம் பெரிசு படுத்தாமல் எதுக்காக மும்பைக்கு வந்தியோ அந்த வேலையைப் பார்" என்ற மாயன் தன் தங்கையிடம் கண்டிப்புடன் பேசியதும் மகதி மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஜன்னல் வழியே தெரியும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு வந்தவளின் எண்ணம் முழுதும் வர்மன் வசமே இருந்தது.

முதலில் சிறுவனைப் பள்ளியில் இறக்கி விட்ட மாயன் "அருண் செல்வம்...ஸ்கூல்ல சேட்டை பண்ண கூடாது. யாரையும் அடிக்கக் கூடாது" என்று அறிவுரை வழங்கினான்.

"நானா யாரையும் அடிக்கமாட்டேன். எனக்கு அம்மா இல்லைன்னு யாராவது சொன்னா கண்டிப்பா நான் அவங்கள அடிப்பேன்" என்று சிறுவன் மழலை மனம் மாறாமல் சொன்னவன், மாயனிடமிருந்து கோபமாகத் தன் பையை வாங்கிக்கொண்டு பள்ளிக்குள் நுழைந்தவனை பார்த்து மாயனுக்கு பாவமாக இருந்தது.

"சார் சார்... நீங்க வந்தா அம்பிகா மேடம் உங்கள வந்து பார்க்கச் சொன்னாங்க" என்று மாயனிடம் வாட்ச்மேன் தெரியப்படுத்த,
"பட்டுக்குட்டி...நீ கார்லயே இரு. நான் போயி அருணோட பிரின்ஸ்பாலை மீட் பண்ணிட்டு வரேன்" என்ற மாயன் காரை ஓரமாக நிறுத்தியபடி பள்ளிக்குள் நுழைந்தான்.

மாயன் அங்கிருந்து சென்ற அடுத்த கணம் தன் கைபேசி வாயிலாக மகதி அவள் தந்தை மகாலிங்கத்தை அழைத்தவள்,
"அப்பா... நான் ஏமாந்துட்டேன் அப்பா. என்னால இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கவே முடியல.வர்மனுக்கு நான் யாருன்னு கூட நினைவு இல்ல. அவருக்குக் கல்யாணம் முடிந்து எட்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு. மீடியா சொன்னதெல்லாம் உண்மைதான். என்னை அவரு ஏமாத்திட்டாரு, மகதின்னு நான் ஒரு பொண்ணு இருக்கிறதே அவருக்கு நினைவு இல்லை அப்பா" என்று கதறி அழுத தன் மகளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாமல் மகாலிங்கம் தவித்துப் போனார்.

"ஏன் அப்பா எனக்கு மட்டும் இப்படி நடக்கணும்? நான் என்ன பாவம் பண்ணேன்?" என்று மனதளவில் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சராசரியாக அனைவரும் கேட்கும் அதே கேள்வியைத் தன் தந்தையிடம்
கேட்டாள் மகதி.

"அம்மாடி மகதி அழாதம்மா. நீ இப்படி அழுதா அப்பாவால தாங்கிக்க முடியாதுன்னு உனக்குத் தெரியும்தானே.
நீ இங்கே இருந்து மும்பைக்கு கிளம்பும்போதே நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?எது நடந்தாலும் தைரியமா இருக்கணும்னு தானே சொன்னேன். எதுக்காக நீ இப்படி அழற? அழாதமா என் செல்லம்ல" என்று தன் மகளுக்கு ஆறுதல் கூறும் மகாலிங்கத்திற்கு தெரியும் மகதி தன் தந்தையை நேசிக்கும் அதே அளவுக்கு வர்மனை நேசிக்கின்றாள் என்று உண்மை.

"அவர்தானே அப்பா அவருக்காக என்னைக் காத்திருக்க சொன்னாரு. இப்ப அவருக்கு என்னை நினைவே இல்லையே! அப்போ அவர் அன்னைக்கு என்கிட்ட பொய் சொல்லி இருக்காரா?என்னை சுத்தி என்ன நடக்குது? எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அவரைக் குழந்தையோட பார்த்ததும் அவர் சட்டையைப் பிடிச்சு ஏன் என்னை ஏமாத்துனீங்கன்னு கேட்கணும்னு தோணுச்சு. ஆனா ஏன்னு தெரியல என்னால அழறத தவிர வேற எதுவுமே பண்ண முடியல. அப்பா... நீங்கக் கிளம்பி வந்து என் பொண்ண ஏன் ஏமாத்துனேன்னு கேளுங்க. கேட்டுச் சண்டை போடுங்க" என்று மகதி சிறு குழந்தையைப் போலத் தன் தந்தையிடம் வெளிப்படையாகப் பேசுபளுக்கு கண்ணுக்குத் தெரிந்த கடவுளும் நண்பனும் தன் தந்தை ஒருவர் மட்டுமே.

"அம்மாடி... அவசரத்திலும் ஆவேசத்திலும் எதையும் பேசக் கூடாது. அப்பா சொன்னா கேளு.முதல்ல கண்ண தொடச்சிக்கோ. மாயன் வீட்டுக்குப் போய் நீ இன்னைக்கு முழுக்க ரெஸ்ட் எடு. நாளைக்கு இங்கே கிளம்பி வந்துடு. ஆனா என்ன ஒன்னு நீ இங்கே கிளம்பி வந்தினா அடுத்த வாரமே உனக்கும் உன் அம்மாவோட தம்பிக்கும் உன் அம்மா கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிடுவாள். அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு" என்று மகாலிங்கம் சொல்ல, பொங்கி வரும் அழுகையை தன் புறங்கையால் துடைத்துக்கொண்ட மகதி தன்னை தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

"இல்ல! நான் ஊருக்கு வரமாட்டேன். வந்தா நீங்கச் சொல்ற மாதிரி கண்டிப்பா அம்மா மாமாக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைப்பாங்க.ஏன் என்னோட நினைவே இல்லாம வர்மன் வாழும்போது! என்னால அவரை நினைக்காம வாழ முடியாதா என்ன?"என்று மகதி தன் தந்தையிடம் தைரியமாகச் சொல்லும் பெண்ணிற்கு வர்மன் இல்லாமல் அவளால் வாழ்வது கடினம் என்று மகாலிங்கமும் அறிந்திருந்தார்.

"சரிடா செல்லம்...அப்பா என்னைக்கு உன்னோட முடிவுக்கு எதிர்வாதம் பண்ணியிருக்கேன் சொல்லு கேப்போம்!? இப்பவும் உனக்குத் தான் இந்த அப்பாவோட சப்போர்ட். ஆனா நீ எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கணும். வர்மன் மட்டுமே உனக்கு வாழ்க்கை இல்லைன்னு இப்ப நீ சொன்ன பாரு அதை நீ கடைசி வரைக்கும் நினைவில் வச்சிக்கணும் . உன் அம்மா மாதிரி நீ உடனே கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் சொல்லமாட்டேன். இனி வர்மன் உன் வாழ்க்கையில் இல்லைன்னு உனக்குத் தெரிஞ்சு போச்சு.அதனால மறுபடியும் வர்மனை பற்றி யோசிக்காம நீ படிச்சப் படிப்புக்கு மாயன் கிட்ட சொல்லி ஒரு வேலை ஏற்பாடு பண்ணி பெரியம்மா வீட்டிலிருந்து வேலைக்குப் போயிட்டு
வா. அப்பா எப்படியும் இன்னும் 10 நாளில் உன்னை மும்பைக்கு வந்து சந்திக்கிறேன்" என்ற மகாலிங்கம் மேற்கொண்டு தன் மகளைக் கஷ்டப்படுத்தாமல் கைபேசி இணைப்பைப் துண்டித்தார்.

தன் அப்பாவிடம் பேசி முடித்த மகதிக்கு வர்மன்னை நினைத்து மேலும் மேலும் இதயம் வலித்தது.எவ்வளவு சமாதானம் படுத்தியும் அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் போனாள்.

"பட்டுக்குட்டி...என்னம்மா என்ன ஆச்சு?
ஏன் கண்கலங்கி இருக்கு?"
என்று தன் தங்கையை விசாரித்தபடி மாயன் காரின் கதவைத் திறக்க,"ஒன்னும் இல்ல அண்ணா...அப்பா ஞாபகம் வந்திருச்சு" என்ற மகதி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

"இதுக்கெல்லாமா அழுவாங்க! சரி சரி வா வீட்டுக்குப் போகலாம் என்ற மாயன் அடுத்த சில நிமிடங்களிலேயே மகதியை தன் வீட்டு வாசலில் இறக்கி விட்டவன்," இந்தா சாவி. வீட்டைப் பூட்டிக்கோ, அண்ணிகிட்ட ஒரு சாவி இருக்கு அவ வந்துருவாள். நம்ம ஈவினிங் பார்க்கலாம்" என்றவன் வேகமாகத் தன் காரை வர்மனின் வீட்டை நோக்கி விரட்டினான்.

மகதி வீட்டுக்குள் நுழைந்தவள் சற்றும் தாமதிக்காமல் அவள் அறைக்குள் நுழைந்து தன் கைக்குறிப்பு புத்தகத்தைத் திறந்து அருள்மொழி வர்மனின் கையப்பதை பார்த்துச் சத்தம் போட்டு அழுதவள், "ஏன் வர்மா என்னை ஏமாத்துனீங்க! என் நினைவே உங்களுக்கு இல்லையா?" என்று கதறி அழுதவளின் காதலை இந்த நொடிவரை வர்மன் அறிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை.

அன்றைய தினம் மதிய நேரம் வர்மனுக்கு சிறுவன் அருணின் பள்ளியிலிருந்து கைபேசி வாயிலாக அழைப்பு வந்த அடுத்த நொடி, வர்மணும் அவனின் தந்தை ராஜனும் மாயனின் காரில் தன் வீட்டிலிருந்து வேகமாகத் தனியார் மருத்துவ மனைக்கு சென்றவர்களின் கண்ணுகளுக்கு எதிரே சிறுவன் அருண் அவசர சிகிச்சையில் செயற்கை சுவாசத்தின் உதவியோடு தலை முழுதும் ரத்தத்துடன் படுத்து இருந்தவனை பார்த்து வர்மனின் மூச்சே நின்று போனது.

 
New member
Joined
Feb 8, 2025
Messages
13
Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe
 
New member
Joined
Feb 8, 2025
Messages
13
inbound8709773534962572059.jpg
 
New member
Joined
May 2, 2025
Messages
8
O my goodness kulanthai pavam and magathe magalinkam bond very nice stroy mooving superb👌👌
 
New member
Joined
May 2, 2025
Messages
8
O my goodness kulanthai pavam and magathe magalinkam bond very nice stroy mooving superb💖💖💖💖💖lots of ❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐
 

sam

New member
Joined
May 5, 2025
Messages
8
ஐயோ இந்த வர்மனுக்கு என்ன மெமரி லாஸ் ஆகிச்சா பாவமே இந்த மஹதி அருளுக்கு என்னானது நல்ல இடத்துல நிறுத்திங்க 😡
 
New member
Joined
Feb 8, 2025
Messages
10
Super super nice story....
அருணுக்கு என்ன ஆனதோ...
Waiting for next ud.🌹
 
New member
Joined
May 2, 2025
Messages
6
Thodakkamaga erukum varman kathai migavum puthithaaga ulathu . Padikum pothu puriyavillai padika padika tha purikirathu 💞💞
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top