• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
16


🐝அத்தியாயம் - 2

"வர்மன் வீட்டில் சிறுவன் அருணின் அழுகை சத்தம் அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தது.

"அப்பா சொன்னால் கேக்க மாட்டியா! ஏன் இப்படி அடம் பிடிக்குற?" என்ற வர்மனின் கையைத் தட்டி விட்ட சிறுவன், "எனக்கு அம்மா வேணும்" என்று அழுத்தமாகச் சொன்னான்.

"அடம் பிடிக்காதே அருண். நீ நல்ல பையன் தானே! அப்பா சொன்னால் கேட்கணும்" என்று பொறுமையாக அருணுக்கு எடுத்துறைத்தான் வர்மன்.

"மாட்டேன்... எனக்கு அம்மா வேணும்.அம்மாகிட்ட என்னை அழைச்சிட்டு போங்க"என்று ஒட்டாரம் பிடிக்கும் சிறுவனை ஒருக்கணம் முறைத்து பார்த்தவன்,"சரி... நீ நல்ல புள்ளையா இருந்தினா உன் அம்மாவை நான் ஊருல இருந்து உன்னைப் பார்க்க இங்க வரச் சொல்லுவேன், ஆனா நீ சமத்து பிள்ளையாக இருக்கனும்" என்ற வர்மனின் கையை மீண்டும் அதே கோபத்துடன் தட்டி விட்டான் சிறுவன்.

"முதல்ல அம்மா வரட்டும், அப்புறம் நீங்க என்னைக் கட்டி பிடிக்கலாம்!"என்ற சிறுவன் கோவமாக அவன் அறைக்குள் சென்று கதவை அடித்துச் சாத்தினான்.

சிறுவனின் செயலைக் கண்ட வர்மன் பெருமுச்சுடன் அவன் அறைக்குள் நுழைந்து தன் ஆடைகளைக் கலைந்து குளியலறை புகுந்து குளிர்ந்த நீரை தலையில் எடுத்து ஊற்றியவனின் உடலில் உள்ள வெப்பம் குறைந்ததே தவிர அவன் இதயத்தில் கொழுந்து விட்டு எரியும் சில துரோகங்களும் அதனால் ஏற்பட்ட காயங்களும் ஆறாத ரணமாக இருந்தது.

நீண்ட நேரம் தண்ணீரில் தன்னிலை மறந்து குளித்து முடித்தவன் வெள்ளை சட்டையும் கருப்பு நிற கால் சட்டையும் அணிந்துக்கொண்டு தலை முடியைத் துவட்டியப்படி தன் அறையிலிருந்து வெளியே வந்தவனை மேசையில் அமர்ந்து இருந்த வர்மனின் தந்தை ராஜன் பாவமாகப் பார்த்து இருந்தார்.

தன் அப்பாவின் எண்ண ஓட்டத்தை அறிந்த வர்மன் "அப்பா வாங்க சாப்பிடலாம்" என்று அவரை அழைத்தவன், சிறுவன் அருண் இருக்கும் அறையின் கதவைத் திறந்து பார்க்க, அங்கே கட்டிலில் சிறுவன் தலையணையை கட்டிக்கொண்டு கன்னத்தில் கண்ணீர் கோடுகளுடன் உறங்கிக்கொண்டு இருந்தான்.

தூங்கும் சிறுவனின் பால்மணம் மாறாத முகத்தைப் பார்த்துக் கவலைக் கொண்டவனாகத் தன் தந்தையின் அருகே அமர்ந்த வர்மன், "ஏன் அப்பா... ஏன் சில பொண்ணுங்க எல்லாம் இவ்ளோ கல் மனசா இருக்காங்க!? பெரியவுங்க பண்ற தப்புக்கு பிள்ளைங்க ஏன் தண்டனை அனுபவிக்கணும்?" என்ற வர்மனின் கேள்வியில் அப்படியொரு வலி மறைந்து இருந்தது.

"என் விதி தான் அருணுக்கும் விதிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அதான் அவனும் விவரம் தெரியும் போதே அவனோட அம்மா பாசம் இல்லாமல் ஏங்கி போறான்" என்ற வர்மனின் தோளை ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தார் ராஜன்.

"வர்மா... சொல்லுறேன் தப்பா எடுத்துக்காத, வேணும்னா அருணை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்போம். அவன் அங்கேயே ஹாஸ்டல்ல தங்கி படித்தால் இப்படி அம்மா வேணும் ஆட்டுக்குட்டி வேணும்னு அடம் பிடிக்கமாட்டான்" என்ற தன் தந்தையை பார்த்து முடியாது என்ற ரீதியில் மறுத்தான் வர்மன்.

வர்மன் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே இந்த வீட்டுக்கு வந்து செல்பவனுக்கு சிறுவன் அருண் செய்யும் அட்டுழியங்கள் எல்லாம் தெரிய வாய்ப்பு இல்லாமல் போனது.

விடிந்ததிலிருந்து இரவுவரை என் அம்மா எங்கே? அம்மாவை வரச் சொல்லுங்க என்ற சொற்களை மட்டும் தாரக மந்திரமாக உச்சரிக்கும் அருண் செய்யும் சேட்டைக்ளுக்கு அளவே இல்லாமல் போனது.

சிறுவன் அருண் அவ்வப்போது தன் தாத்தா ராஜனை எதிர்த்துப் பேசுவது மட்டுமில்லாமல் வயதுக்கு மீறிய செயலாக ராஜினின் மருந்தை எடுத்து ஒளித்து வைப்பது, ராஜன் சொல்ப் பேச்சைக் கேட்காமல் அடம் பிடிப்பது என்று பல ரக பட்ட தொல்லைகளைத் தருபவனின் மூளையில் என்னதான் பிரச்சனை இருக்கிறது என்பதை வர்மனும் ராஜனும் தெரிந்துகொள்ள தவறினார்கள்.

சினிமா துறையில் நடன கலைஞராக விஸ்வரூப வெற்றியை அடைந்து கொண்டிருக்கும் தன் மகன் வர்மனிடம் சிறுவன் அருணை பற்றிய அனாவசியமான செய்திகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று எண்ணிய ராஜனுக்கு சிறுவன் அருணால் நிம்மதி குறைந்து போனது.

தன் தந்தையின் எண்ண ஓட்டத்தை அறிந்த வர்மன், "அப்பா... அருண் இங்கே இருக்கிறது தான் அவனுக்குப் பாதுகாப்பு. ஆல்ரெடி மீடியாவில் அருணைப் பற்றித் தெரிஞ்ச மாதிரி ஒரு சில கேள்விகள் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்போ அருண் நமக்கிட்ட இருக்கிறது மட்டும் ரம்யாவுக்கு தெரிஞ்சா அப்புறம் பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். அதனால அருண் இங்கேயே இருக்கட்டும்" என்று தீர்க்கமான தன் முடிவைச் சொன்னான் வர்மன்.

"எனக்குப் புரியுது வர்மா...ஆனால் அருணை இப்படியே விட்டால் அவனுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தெரியாம போயிடும். அதுவும் இல்லாம இது தான் அம்மாவும் அப்பாவும் கூட இருந்து வளர்க்க வேண்டிய வயசு. எனக்கும் முன்ன மாதிரி அவன்க் கிட்ட மல்லுக்கட்ட முடியல. அதனாலதான் அவனை ஹாஸ்டல்ல சேர்க்கலாமானு கேட்டேன்" என்று ராஜன் சொல்ல, அவர் நிலையிலிருந்து யோசித்துப் பார்த்த வர்மன் தன் தந்தையின் எண்ணத்தைப் புரிந்துத் தான் இருந்தான்

"சரி வர்மா...நீ வா நம்ம சாப்பிடலாம். குழந்தை தானே பாத்துக்கலாம்" என்று ராஜன் சொல்ல, "நான் அருணை பாத்துக்க வேற ஒரு ஏற்பாடு பண்றேன் அப்பா" என்ற வர்மன் தன் தந்தையுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தவன், "மாயா நீயும் வந்து சாப்பிடு" என்று தன் நண்பன் மாயணையும் அழைத்தான்.

இதே சமயம் சென்னையிலிருந்து மும்பையை நோக்கி ரயிலில் பயணித்துக்கொண்டு இருந்த மகதிக்கு எப்போது அருள்மொழி வர்மனின் முகத்தைப் பார்ப்போம் என்ற தவிப்பு அப்படமாகத் தெரிந்தது.

"என்ன பாப்பா... மும்பைக்கு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறியா?" என்று மகதியின் அருகே படுத்து இருந்த மூதாட்டி பாதி உறக்கத்தில் ஏழுந்து, இந்த நொடிவரை தூங்காமல் அமர்ந்து இருக்கும் மகதியை கேட்டதும், "ஆமா பாட்டி... என் அண்ணன் வீட்டுக்குப் போறேன்"
என்றாள் மகதி.

"நாங்கயெல்லாம் அந்தக் காலத்துல பக்கத்து தெருவுல இருக்குற கடைக்குக் கூட ஆம்பள துணையில்லாம் போகமாட்டோம். ஆனா!இப்போ பாரு நீ தனியா மும்பை வரைக்கும் போற, காலம் ரொம்ப மாறிப் போச்சு" என்ற மூதாட்டி மீண்டும் படுத்துக் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தார்.

"பாப்பா... இந்தப் பையைப் பார்த்துக்கோ நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்" என்ற பெண் பயணி ஒருவர் மகதியின் கையில் ஒரு பையைக் கொடுத்துச் செல்ல, மகதியோ அமர்ந்த இடத்திலிருந்து எழாமல் ரயிலின் ஜன்னல் வழியே தெரியும் இயற்கை காட்சிகளை ரசித்தபடி அமர்ந்து இருந்தவள் மனதில் அருள்மொழி வர்மனின் நினைவுகள் மட்டுமே தோன்றிய வண்ணமாக இருந்தது.

"மகதி" அவள் பெயரின் சுபாவமே யாரையும் சார்ந்து இல்லாமல் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவள்.மற்றவருக்கு உதவி செய்யக் கூடியவள். மற்றவர்களின் உணர்ச்சிக்கும் மதிப்பு கொடுக்கத் தவறாதவள். காதலை விரும்பக்கூடிய பெண். என்றுமே உற்சாகம் நிறைந்த குணமுடைய பெண். தன்னை சுற்றியுள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண். சித்திர மாதத்தில் பிறந்த தன் ஒரே பெண் பிள்ளைக்குச் சித்ர மகதி என்று அவளின் அவள் தந்தை பெயர் சூட்டி அழகு பார்த்தவர் மகதியை தைரியமான பெண்ணாகத் தான் வளர்த்துள்ளாr

மகதியின் அப்பா மகாலிங்கம் சிறுவயதில் இருந்தே அவளுக்குக் கொடுத்த தைரியத்தின் அடிப்படையில் இன்று தனியாகத் தன் எதிர்கால வாழ்க்கையைத் தேடி மும்பைக்கு பயணிக்கும் மகதியின் பெரியம்மா பையன் தான் அருள்மொழி வர்மனின் உயிர் தோழன் மாயாண்டி என்கிற மாயன்.

மாயன் மும்பையில் தன் அம்மா, மனைவியுடன் வசிப்பவனுக்கு சகல வசதிகளும் அவன் நண்பன் அருள்மொழி வர்மன் ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளான்.

மாயனுக்கு தன் சித்தி மகள் மகதி என்றால் கொள்ளை பிரியம். இதுவரை மகதி கேட்டு அவன் இல்லை என்று சொன்ன சரித்திரமே கிடையாது. தன் சொந்த தங்கையாக மகதியை என்னும் மாயனை நம்பி மகதி மும்பைக்கு செல்ல முடிவெடுத்தவள் எப்படியாவது அருள்மொழி வர்மனை பார்த்து நம் காதலுக்காகப் பத்து வருடம் காத்திருக்கிறேன், ஏன் இன்னும் என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வியைக் கேட்பதற்காகத் தான் மகதி சென்னையிலிருந்து மும்பைக்கு பயணிக்கிறாள்.

கிட்டதட்ட 23 மணி நேர பயணத்திற்கு பிறகு மும்பையை நெருங்கப் போகும் ரயிலில் மகதி தன் அண்ணன் மாயனையும் தன் மன்னன் வர்மனையும் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்த அவளின் கைப்பேசிக்கு தன் தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது.

"அப்பா... இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அண்ணனைப் பார்த்துடுவேன். அண்ணனைப் பார்த்ததும் உங்களுக்குப் போன் பண்றேன். நீங்க ஜாக்கிரதையா இருங்க. அம்மாவைப் பயப்பட வேணாம்னு சொல்லுங்க" என்ற மகதி மறுமுனையில் தன் தந்தை பேச இருக்கும் வார்த்தையைக் கேட்காமல் கைப்பேசி அழைப்பைத் துண்டித்தாள்.

மீண்டும் மகதியின் தந்தை மகாலிங்கம், தன் மகளைக் கைபேசி வாயிலாக அழைத்தவர், "அம்மாடி! நான் போன் பண்ணா முதல்ல நான் என்ன பேசறேன்னு கேளு, நான் பேசுவதை கேட்காமல் நீயா பேசிட்டு போனை கட் பண்ணா என்ன அர்த்தம்? " என்று தன் அப்பா கேட்டதும்
தான் மகாலிங்கத்தை பேசவே விடவில்லை என்று அறிந்த மகதி தன் தலையில் தானே குட்டிக் கொண்டாள்.

"சாரி அப்பா...மும்பையை நெருங்க நெருங்க அண்ணனையும் வர்மனையும் பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷத்துல எனக்குக் கையும் ஓடல காலும் ஓடல" என்று மகதி சொல்ல,"சரி சரி, மாயன் ரயில்வே ஸ்டேஷன்ல தான் காத்துக்கிட்டு இருக்கான். அத சொல்லத் தான் உனக்குப் போன் பண்ணேன். நான் மறுபடியும் சொல்றேன்! நீ வர்மனுக்காகத் தான் மும்பைக்கு போறன்ற உண்மை மாயனுக்கு தெரியாது. அங்க என்ன சூழ்நிலையோ அதை வச்சி நீ மாயன்க்கிட்ட உன் மனசுல இருக்குறத பேசு" என்ற தன் தந்தையின் வார்த்தையில் ஏதோ விடயம் ஒளிந்திருக்கிறது என்று மகதி அறியவில்லை.

 
Joined
Feb 6, 2025
Messages
16

"நீங்கக் கவலைப்படாதீங்க அப்பா. நான் வேலைத் தேடி வந்தேன்னு அண்ணன் கிட்ட சொல்லிடுறேன். எனக்கும் வர்மனுக்கும் இருக்கிற காதல் யாருக்கும் தெரியக் கூடாது. தெரிஞ்சா கண்ணு காது வச்சு பெருசா ஒரு கதை கட்டிடுவாங்க. இப்பக் கூடப் பாருங்க இந்த டிவிக் காரங்க என் வர்மனை பற்றி என்னென்னமோ தப்பு தப்பா பேசுறாங்க. இவங்களுக்கு வேற வேலையே இல்ல" என்ற மகதி வர்மனை பற்றி யார் என்ன சொன்னாலும் எதையும் நம்பாதவளாகப் பேசிக்கொண்டு இருந்தாள்.

"ஏன் மகதி! ஒரு வேள டிவிக் காரங்க சொல்றது உண்மையா இருந்தா நீ என்ன பண்ணுவ? " என்று அவள் தந்தை கேட்டார்

"என்ன சொல்றீங்க? அப்போ அவங்க சொல்ற மாதேரி வர்மனுக்கு வேற ஒரு பொண்ணு கூடக் கல்யாணம் முடிந்து அவருக்குக் குழந்தை இருக்குன்னு நீங்களும் நம்புறீங்களா?" என்று மகதி தோய்ந்த குரலில் மகதி கேட்டாள்.

"அப்படி இல்லம்மா... மீடியாக்காரங்க சொல்றது முழுசா உண்மை இல்லனா கூட ஏதோ கொஞ்சநஞ்சம் உண்மை இருக்க தானே செய்யும்" என்று வருத்தமாகச் சொன்னார் மகாலிங்கம்.

"அப்பா... எப்பவும் கண்ணால பார்க்கிறதும் காதால கேட்கிறதும் பொய்யின்னு சொல்லுவாங்க. இப்ப எல்லாம் தீர விசாரிக்கிறதே பொய்யா தான் மாறுது. அதனால நீங்க என் வர்மனை பற்றித் தப்பா எதுவும் நினைக்காதீங்க. நான்தான் மும்பைக்கு போறேனே! நான் என் வர்மனை பார்த்து என்ன ஏதுன்னு கேட்டு அவர் கூடக் கல்யாண தேதியைக் குறிச்சுட்டு தான் அம்மாவுக்குப் போன் பண்ணுவேன். நீங்க வேணா பாருங்க வர்மனை அழைத்துக்கொண்டு நான் நேரா நம்ம வீட்டுக்கு வரேன்" என்று மனதில் உறுதியோடு பேசும் பெண்ணை நினைத்து ஒரு பக்கம் மகாலிங்கத்திற்கு சந்தோஷம் ஏற்பட்டாலும், மறுபக்கம் வர்மனை பற்றிய செய்திகளை அரைகுறையாகத் தெரிந்து கொண்டவருக்குத் தன் மகளின் எதிர்கால வாழ்க்கை என்ன ஆகும் என்ற கவலையும் இருந்தது.

"சரிமா...மாயன் வீட்டுக்குப் போனதும் எனக்குப் போன் பண்ணு" என்ற மகாலிங்கம் கைபேசி இணைப்பைத் துண்டிக்க, அடுத்த சில மணி நிமிடங்களிலேயே மகதி பயணித்த ரயில் மும்பை ரயில்வே நிலையத்தைச் சென்றடைந்தது.

"மாயன் அண்ணா..." என்று தூரத்தில் நின்று இருந்த தன் அண்ணனை அழைத்தப்படி பையைத் தூக்கிக்கொண்டு ஓடினாள் மகதி.

"பட்டுக்குட்டி வா வா எப்படிமா இருக்க? சித்தப்பா சித்தி எப்படி இருக்காங்க?"
என்று தன் தங்கையை அன்புடனும் அக்கறையுடனும் நலம் விசாரித்த மாயன் மகதி கையில் இருந்த பையைத் தன் வசம் வாங்கிக் கொண்டான்.

"எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்காங்க. ஆமா நீங்க என்ன ரொம்ப மெலிஞ்சி போயிட்டீங்க! என்ன?அண்ணி கொடுமை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுதா என்ன? " என்ற தன் தங்கையின் தலையில் செல்லமாகக் குட்டினான் மாயன்.

"அதானே! அண்ணியைப் பற்றிச் சொன்னா உங்களுக்குக் கோபம் வந்திடுமே. சரி சரி அப்புறம் எல்லாரும் எப்படி இருக்காங்க?" என்று மகதி பொத்தம் பொதுவாகக் கேட்டவள் மனதில் வர்மனின் நினைவு மட்டுமே பதிந்து இருந்தது.

"எல்லாரும் நா யாரு? உன் அண்ணியும் உன் பெரியம்மாவும் தான் வீட்ல இருக்காங்க. வேற யாரு இருக்காங்க? என்று மாயன் கேட்க, "அதான் அண்ணா! உங்க ஃப்ரெண்ட் வர்மன் எப்படி இருக்காரு?" என்ற மகதியை பார்த்து மாயனின் புருவம் இடுங்கியது.

"சொல்லுங்க அண்ணா... வர்மன் மாம்ஸ் எப்படி இருக்காரு? என்ற மகதியின் கண்களில் பத்து வருடத்திற்கு முன்பு மாயன் பார்த்த அதே ஆர்வமும் தவிப்பும் ஏக்கமும் நிறைந்து இருந்தது.

"என்ன பட்டுக்குட்டி நீ! இன்னும் வர்மனை உனக்கு நினைவிருக்கா!?" என்று மாயன் கேட்க, "என்ன கேள்வி இது?அவரை நினைக்காத நொடி இருக்கான்னு கேளுங்க. உங்க கேள்வியே தப்பு" என்ற மகதி வாட்டமாக மாயன் காரின் முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

மும்பை ரயில்வே நிலையத்திலிருந்து மாயன் தன் காரை அவன் வீட்டை நோக்கி விரட்டியவன் மனதில் மகதி வேலை தேடி தான் மும்பை வந்து இறங்கினாளா என்ற சந்தேகம் எழத் தொடங்கியது. இருப்பினும் இன்றே மகதியிடம் எதையும் கேட்கக் கூடாது என்று முடிவெடுத்தவன் அடுத்த சில நிமிடங்களிலேயே மகதியுடன் தன் வீட்டைச் சென்றடைந்தான்.

"பட்டுக்குட்டி... நீ வீட்டுக்கு வந்ததும் உன் அண்ணி உன்னை எதாவது சொன்னானா நீ அதெல்லாம் பெருசா எடுத்துக்காத" என்ற மாயன் தன் வீட்டின் கதவைத் தட்டியதும், "வரேன் வரேன்..." என்று கடுகடுத்த குரலோடு கதவைத் திறந்தாள் மாயனின் மனைவி நந்தினி.

"அண்ணி எப்படி இருக்கீங்க?" என்று மகதி நலம் விசாரிக்க, "இந்த வீட்ல இருக்குற இம்சை போதாதுன்னு புதுசா சென்னைல இருந்து இன்னொரு குட்டிச்சாத்தானை அழைச்சிட்டு வந்திருக்காரு" என்று புலம்பிக் கொண்டே தன் அறையினுள் நுழைந்து கதவை அடித்துச் சாத்தினாள் மாயனின் மனைவி நந்தினி.

"என்ன அண்ணா இது! ஏன் அண்ணி வெடுக்கு வெடுக்குன்னு பேசுறாங்க? இவங்க குணம் இது இல்லையே! நான் வந்தது அவங்களுக்கு பிடிக்கலையா?" என்று மகதி மனதில் பட்டதை நேரடியாகக் கேட்டுவிட்டாள்.

"நான் தான் சொன்னேனே… உன் அண்ணி ஏதாவது பேசினா நீ அதைப் பெருசா எடுத்துக்காதே. அதோ அங்கதான் உனக்கு ரூம் ரெடி பண்ணி இருக்கேன். போய்க் குளிச்சிட்டு வா சாப்பிடலாம். அம்மா கோவிலுக்குப் போய் இருக்காங்க
நாளைக்கு நைட்டு வந்துடுவாங்க"
என்ற மாயன் மகதியின் பையை எடுத்துச் சென்று அவளுக்காக ஏற்பாடு செய்திருந்த அறையில் வைத்தான்.

தனக்கான அறைக்குள் நுழைந்த மகதி முதல் வேலையாக அவள் பையில் இருந்த குடும்ப புகைப்படத்தை எடுத்து மேசையில் வைத்தவள் தன் கைகுறிப்பு புத்தகத்தை மட்டும் தலையணை கீழ் மறைத்து வைத்துக் கொண்டாள்.

குளித்து முடித்தப்பின் மகதி வெள்ளை நிற சுடிதார் அணிந்துக்கொண்டு வெளியே வந்தவளுக்காகக் காத்து இருந்த மாயன், "பட்டுக்குட்டி வா சாப்பிடலாம்" என்றவன் சாப்பாட்டு மேசையில் இருந்த தட்டை மகதி கையில் எடுத்துக் கொடுத்தான்.

"அண்ணா... அண்ணி எங்கே?" என்ற மகதி வீட்டைக் கண்களால் வட்டமிட்டப்படி கேட்டதும், "அவ வேலைக்குப் போயிட்டா, நீ வீட்டுக்கு வந்துட்டேன்னு சித்தப்பாவுக்கு நான் மெசேஜ் பண்ணிட்டேன். நீ இப்போ சாப்பிட்டு நிம்மதியா தூங்கு. உன் அண்ணி மதியம் சாப்பாடு செய்து ஹாட் பாக்ஸ்ல வச்சிருக்காள்" என்ற மாயன் அவசரமாகக் காலை உணவைச் சாப்பிட்டு முடித்தவன், "நான் வேலைக்குக் கிளம்புறேன் கதவைப் பூட்டிக்கோ. ஈவினிங் வந்து மீதி விஷயத்தைப் பேசிக்கலாம்" என்றவன் வேகமாக வாசலை நோக்கி நடந்தான்.

"அண்ணா அண்ணா இருங்க. நீங்க இப்போ ராஜன் மாமா வீட்டுக்குத் தானே போகப் போறீங்க. என்னையும் அங்க அழைச்சிட்டு போங்க" என்ற மகதியை கேள்வியாகப் பார்த்த மாயன், "என்ன பட்டு நீ... அப்படியெல்லாம் சொல்லாம அவங்க வீட்டுக்குப் போக முடியாது" என்று சமாளித்தவனை பார்த்து மகதியின் முகம் வாடிப் போனது.

"என்ன அண்ணா நீங்க... நான் வந்த முதல் நாளே என்னை இப்படி தனியா விட்டுட்டு போறேன்னு சொல்றிங்க! உங்களுக்கு நான் இங்க வந்தது பிடிக்கலையா?" என்று வராத கண்ணீரை துடைத்துக்கொண்ட தன் தங்கையைப் பார்த்து மனம் இறங்கினான் மாயன்.

தன் தங்கையின் சோகமான முகத்தை பார்த்துப் பெருமூச்சுடன்,"ம்... சரி வாப்போகலாம். ஆனா அங்க வந்து நீ தேவையில்லாததை எதையும் பேசக் கூடாது. ஏன்னா இந்த இடைப்பட்ட பத்து வருஷத்துல நீ பார்த்த யாரும் முன்னாடி மாதிரி இல்ல" என்ற மாயனின் வார்த்தையில் உள்ள அர்த்தத்தை விளையாட்டாக எண்ணிய மகதி முதல் ஆளாக மாயனுடன் கிளம்பி அருள்மொழி வர்மனின் வீட்டுக்குச் சென்றாள்.

மாயன் தன் காரை வர்மன் பங்களாவின் நுழைவாயிலில் நிறுத்தியவன், மகதியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைய,

"மாயா... யார் இந்தப் பொண்ணு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!? " என்று கேட்டுக் கொண்டே தன் கையில் தேநீர் கோப்பையுடன் வந்த வர்மனின் தந்தை மகதியை கேள்வியாகப் பார்த்தார்.

"என்ன மாமா நீங்க?உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலையா!? நான் தான் உங்க சிநேகிதர் மகாலிங்கம் பொண்ணு மகதி. வார்த்தைக்கு வார்த்தை மருமகளே மருமகளேன்னு கூப்பிடுவீங்களே என்னை மறந்துட்டீங்களா?" என்ற மகதி ஓடிச் சென்று உரிமையாக ராஜனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.

"அடடே...நம்ம மகாலிங்கம் பொண்ணா! என்னமா இப்படி வளர்ந்துட்ட! சரி அம்மா அப்பா எப்படி இருக்காங்க?" என்ற ராஜனுக்கு மகதியின் தந்தை மகாலிங்கம் தான் ராஜன் திரையுலகத்தில் கொடிகட்டி பறந்த காலத்தில் உதவியாளராக இருந்தவர்.

"அம்மா அப்பா எல்லாம் ரொம்ப நல்லா இருக்காங்க.உங்கள கேட்டதா சொன்னாங்க.நீங்க எப்படி மாமா இருக்கீங்க?" என்று முழு அன்போடு
விசாரித்த பெண் அவளின் கண்கள் அந்த வீட்டில் தன் மன்னவன் அருள்மொழி வர்மன் எங்கே இருக்கின்றான் என்று தேடி அலைந்தது.

"எனக்கென்னமா! நான் நல்லா இருக்கேன். உன்ன இத்தனை வருஷம் கடந்து பார்த்தது ரொம்ப சந்தோஷம். வா வா வந்து உட்காரு" என்ற ராஜன் மகதியை அன்போடு அழைத்து வந்து சாய்வு இருக்கையில் அமர வைத்த வேளையில்

"வெளிய போங்க... நீங்க என் ரூமுக்கு வராதீங்க..." என்ற சிறுவன் அருண் தன் அறையிலிருந்து கத்திக் கொண்டே வெளியே வந்தவன் முற்றத்தில் அமர்ந்திருந்த மகதியை கேள்வியாகப் பார்த்தான்.

"அருண்... அப்பா சொல்ற பேச்சைக் கேளு. நேரம் ஆகுது பாரு. ஸ்கூலுக்கு கிளம்பனும்" என்ற வர்மன் சிறுவன் அருணின் அறையிலிருந்து வெளியே வந்தவனை பத்து வருடத்திற்கு பிறகு நேருக்கு நேராகச் சந்திக்கும் மகதியின் செவிகளில்

"அப்பா இவங்க யாரு?இவங்க தான் என் அம்மாவா?"என்று சிறுவன் அருண் கேட்ட கேள்வியைத் தாண்டி, சிறுவன் வர்மனை அப்பா என்று அழைத்த சொற்கள் மட்டுமே மகதியின் காதில் விழுந்த நிலையில் சட்டென்று அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.









 
New member
Joined
May 2, 2025
Messages
8
iyo pavam mahathi avaloda love start agurathauku munnadiye stop agiduchu ipo varman nilai enna sikiram next part podunga sisy this one super super sisy
 
New member
Joined
Feb 8, 2025
Messages
10
மஹதி வர்மன் மேல இவ்ளோ காதல் இருக்கு ஆனால் வர்மனுக்கு மஹதி பற்றி நினைவே இல்லையா?
 
New member
Joined
Feb 8, 2025
Messages
13
Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe
 
New member
Joined
May 2, 2025
Messages
6
Kathai miga arumaiyaana pathivu ana niraya kastam sogam kanner . Puriyatha puthiraraga eruku. Different story . Super 💞💞💞
 

sam

New member
Joined
May 5, 2025
Messages
8
அடப்பாவி உன்னையே நினைத்து இவள் வந்தாள் ஆனால் உனக்கு இவள் நினைவே இல்லையா பாவம் பொண்ணு
 
New member
Joined
Mar 30, 2025
Messages
7
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
 
New member
Joined
Feb 8, 2025
Messages
9
அழகான கதை அருமை மகதி மனதில் இருப்பதை வர்மன் கிட்ட எப்படி சொல்ல போறாளோ waiting for next epi🌹🌹🌹
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top