Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
அத்தியாயம் - 17
மகதியின் செயலில்,"அப்பா...அம்மா எங்க போறாங்க?" என்று அருண் பதறியதும்,
"டேய் மாயா... ஏன் டா இப்படி அவசரப்பட்டு எல்லா உண்மையும் சொல்லித் தொலைச்ச!" என்று வர்மன் தன் நண்பனைக் கடிந்துகொண்டான்.
"நீ இரு வர்மா... நான் பாப்பாகிட்ட பேசறேன்" என்ற மாயன் தன் தங்கையைத் தேடி மருத்துவமனை கட்டிடத்தின் வலது ப்பக்கம் அமைந்துள்ள பூங்காவிற்க்கு செல்ல, அங்கே மகதி கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தாள்.
மகதியை பெருமூச்சுடன் கண்ட மாயன்,"பாப்பா..." என்று அழைத்ததும், தன் கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்ட மகதி கோவமாகத் திரும்பிக்கொண்டாள்.
சிறுகுழந்தை போல அவளின் செய்கையில் இதழ் மலர்ந்த மாயன், "என்னமா... அண்ணன் மேல கோவமா?" என்ற கேள்வியோடு மகதியின் அருகே சென்றான்.
"பின்ன... கோவப்படாம என்ன பண்ண சொல்றிங்க, ஏன் அண்ணா இப்படி பண்ணீங்க?"என விம்பலுடன் கேட்டாள் மகதி.
"அந்த வயசுல உனக்கு வந்தது ஏதோ ஒரு இனம் புரியாத தடுமாற்றம் என்று தான் நினைத்தேன் பாப்பா... அதனால தான் உன்னைச் சமாதானம் பண்ண வர்மன் தந்ததா பொய் சொல்லி நானே ஒரு கடிதத்தை உன்னிடம் கொடுத்தேன், நீ என்னை என்ன நினைத்தாலும் பரவாயில்லை. அன்னைக்கு ஒரு அண்ணனா! உனக்கு நான் பண்ணது சரிதானே பாப்பா!?' என்றான் மாயன்.
"ஒரு அண்ணனா எனக்கு நீங்கப் பண்ணது சரிதான்.ஆனா வர்மனும் என்னைக் காதலிச்சாருன்னு நினைத்தேன்.
ஆனா இப்போ நான் வர்மனை நேசித்த விஷயமே அவருக்குத் தெரியாதுன்னு நினைக்கும்போது! என்னால... அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கவே முடியல அண்ணா" என்று கதறி அழுத தன் தங்கையைப் பாவமாகப் பார்த்து இருந்தான் மாயன்.
மகதி சத்தமாக அழுது ஓய்ந்தவள், "அண்ணா... நான் வர்மனை ரொம்ப கேவலமா பேசிட்டேன். நான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடுங்க.அருணை பத்திரமா பார்த்துக்கொங்க. ராஜன் மாமாவையும் பார்த்துக்கொங்க" என்ற மகதி பூங்காவிலிருந்து வெளியேறப் போனவளின் கரங்களைத் தடுத்து நிறுத்தி இருந்தான் மாயன்.
தன் அண்ணனின் முகத்தைக் காணாமல், "அண்ணா... நான் மறுபடியும் சென்னைக்கே போறேன். நான் அப்பாவைப் பார்க்கணும். எனக்கு அப்பா தோளில் சாய்ந்து அழணும்" என்ற மகதியை அங்குள்ள இருக்கையில் அமர வைத்தான் மாயன்.
"இங்க பாரு மகதி! அவசரத்துல எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இப்போ என்ன!? நீ சென்னைக்கு போகணும், அவ்வளவு தானே! சரி... இந்த வாரக் கடைசியில நானே உன்னைச் சென்னைக்கு அழைச்சிட்டு போறேன். இப்போ வா ஹாஸ்பிடல் போகலாம்" என்று மாயன் மகதியை அழைக்க, "நான் வரல" என்று பிடிவாதம் பிடித்தாள் மகதி.
"பாப்பா... அண்ணா சொன்னால் கேக்கணும். பாவம் டா அருண். அந்தப் பிள்ளைக்கு இப்போ தான் பார்வை திரும்பி இருக்கு. இப்போ நீ மட்டும் அவன்கூட இல்லைனா அப்புறம் அவன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி மறுபடியும் பழைய நிலைக்குப் போனா நீ சந்தோஷ படுவியா" என்று மாயன் கேட்க, மகதியின் மனம் லேசாக இளக ஆரம்பித்தது.
சில நொடிகள் யோசித்த மகதி, "சரி...நான் ராஜன் சார் வீட்டுக்கு வரேன்.நானே வர்மனை பார்த்து என்னோட தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்" என்ற மகதி ஒரு முடிவுடன் மருத்துவ மனைக்குள் செல்ல, அவளைப் பின் தொடர்ந்து மாயனும் சென்று இருந்தான்.
மகதியை மீண்டும் பார்த்த அருண், "அம்மா..." என்று ஓடி வந்து கட்டிக்கொள்ள,
"எங்க போன மகதி" என்ற வர்மனின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவன் முன்னே தலை குனிந்து நின்று இருந்தாள் மகதி.
மகதியின் மனநிலையை அறிந்திடாத அருணோ, "அம்மா... உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா! நீங்களும் என்னை விட்டுட்டு போகப் போறிங்களா?" எனப் பாவமாகக் கேட்டதும்,
"அருண்..." என்று கண்கள் கலங்கி சிறுவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள் மகதி.
"வர்மன் மீது எந்தத் தவறும் இல்லை.
நான் தான் முட்டாளா இருந்து இருக்கேன்" என்று எண்ணிய மகதி, அருணுக்காக மட்டுமே மீண்டும் ராஜன் வீட்டிற்க்கு செல்ல முடிவு செய்தாள்.
அன்றைய இரவு முழுதும் வர்மனும், அருணும் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க, ராஜன், மாயன், மகதி என்று மூவருமே மருத்துவ மனையிலேயே தங்கி இருந்தார்கள்.
மறுநாள் காலை மருத்துவரின் அறிவுரைப்படி வர்மன் மற்றும் அருணை மருத்துவ மனையிலிருந்து ராஜன் தன் வீட்டிற்க்கு அழைத்து
செல்ல, காரில் அமர்ந்த தருணம் கூட மகதியின் விழிகள் வர்மனை காணாமல் வேறுபக்கமாகத் திரும்பி இருந்தது.
ராஜனின் பங்காளாவில் உள்ள பார்க்கிங்கில் மாயன் தன் காரை நிறுத்த, அங்கே பெண் பணியாளர்கள் இருவர் திருஷ்டி கழித்த பிறகு அருணும் வர்மனும் வீட்டுக்குள் சென்றவர்களைப் பின் தொடர்ந்து ராஜனுடன் மகதியும் மாயனும் உள்ளே சென்றார்கள்.
"வர்மா... உங்க மாத்திரை மருந்து எல்லாம் ரூம்ல எடுத்து வச்சிட்டேன். நீ நல்லா ரெஸ்ட் எடு. நான் வீடுவரைக்கும் போயிட்டு வரேன்" என்று மாயன் சொன்னதும், "அண்ணா... நானும் வரேன்" என்றாள் மகதி.
"அம்மா... நீங்க எங்க போறீங்க?" என்று அருண் பதறியதும்,
"அருண்... நான் இப்போ போயிட்டு இன்னோரு நாள் கண்டிப்பா வரேன்" என்று மகதி சொல்ல, அருண் முகம் வாடிய நிலையில் தன் தாத்தாவின் அருகே அமர்ந்து கொண்டவனின் முகத்தைப் பார்க்கவே மகதிக்கு பாவமாக இருந்தது.
இருப்பினும்,"மாமா... நான் அண்ணன் கூடக் கிளம்புறேன்" என்ற மகதி, ராஜனின் பதிலுக்காகக் காத்து இல்லாமல் தன் உடமைகளை எடுப்பதற்காக வர்மனின் அறைக்குள் சென்றாள்.
மகதியின் செய்கைக்கு எந்த வித எதிர்வினையும் காட்டிடாத வர்மனை பார்த்து,"அப்பா... அம்மாவைப் போக வேணான்னு சொல்லுங்க" என்று அருண் கெஞ்ச,
"என்ன வர்மா இது! மகதி போறேன்னு சொல்லுறாள், நீ அமைதியா இருக்க?"என்று புரியாமல் கேட்டார் ராஜன்.
வர்மனின் மௌனத்தை உன்னிப்பாக மாயன் கவனிக்க,"மச்சான்... நீ கிளம்பு. இனி உன் தங்கச்சி உன் வீட்டுக்கு வரணும்னா! அது எங்க கல்யாண விருந்துக்காகத் தான் இருக்கும்" என்ற வர்மன்,
யாரும் எதிர்பாராத வண்ணம் தன் அறைக்குள் புகுந்து கதவை அடித்துச் சாத்தியவனின் செயலில் மாயன் சிரித்துக்கொண்டே தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.
மகதி இருக்கும் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த வர்மனை பார்த்து மகதி கையில் பையுடன் திகைத்துப் போய் நின்று இருக்க,
"எங்க கிளம்புற!?" என்று வினாவினான் வர்மன்.
ஒரு கையில் கட்டுடன் நின்று இருந்த வர்மனை கண்ணீர் சிந்தும் விழிகளுடன் பார்த்த மகதி,"என்னை மன்னிச்சிடுங்க வர்மா" என்றவள் தன் பையுடன் அறையின் கதவைத் திறக்கப் போக, வர்மன் தன் ஒரு கையால் சிற்றிடை தேகம் கொண்ட பெண்ணவளின் இடையில் கைகொடுத்து இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
வர்மனின் அணைப்பில் தன்னை மறந்து இருந்த மகதி,
வர்மனின் முகத்தைக் காணவே சங்கோஜப்பட்டு,"நான் கிளம்புறேன் வர்மா" என்றாள்.
"ம்... போகலாம். ஆனா நான் பேச வந்ததை கேட்டுட்டு,அதன் பிறகும் உனக்கு என்னை விட்டுப் போகத் தோணுச்சுனா, நீ போகலாம்" என்ற வர்மனின் வார்த்தையில் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மகதி.
அவள் பார்வையில் உள்ள அர்த்ததை புரிந்து இருந்த வர்மனோ,
"மகதி...உன்கிட்ட என் மனசுல இருக்குற ஆசையெல்லாம் எப்படி சொல்லிப் புரிய வைக்கிறதுன்னு எனக்குத் தெரியல" என்று வர்மன் சொல்ல,
இதுநாள் வரை வர்மனை வார்த்தையால் வதைத்து பேசிய பேச்சுகளை எல்லாம் எண்ணி பார்த்த மகதிக்கு, வர்மனின் தயக்கம் நியாயம் என்று தான் தோன்றியது.
மகதியின் கன்னத்தை தன் ஒற்றை கையில் ஏந்தியவன்,'உனக்கு என் மேல அத்தனை காதலா! எப்படி மகதி! உன்னால மட்டும் தான் டி இப்படியெல்லாம் காதலிக்க முடியும்' என்ற வர்மனின் வார்த்தையைக் கேட்டு மேலும் கண்கள் கலங்கினாள் மகதி.
'அப்போ நான் உங்கள காதலிச்சது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா!?' என்று மகதி கேட்க,
'ரொம்ப முன்னாடி எல்லாம் இல்ல மகதி, இப்போ தான்.அதுவும் உன் அண்ணன் உன்னோட டைரியை என்கிட்ட கொடுத்து வாசிக்கச் சொல்லும்போது தான் தெரிஞ்சிகிட்டேன்' என்ற வர்மனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மகதி.
மகதியின் செயலில்,"அப்பா...அம்மா எங்க போறாங்க?" என்று அருண் பதறியதும்,
"டேய் மாயா... ஏன் டா இப்படி அவசரப்பட்டு எல்லா உண்மையும் சொல்லித் தொலைச்ச!" என்று வர்மன் தன் நண்பனைக் கடிந்துகொண்டான்.
"நீ இரு வர்மா... நான் பாப்பாகிட்ட பேசறேன்" என்ற மாயன் தன் தங்கையைத் தேடி மருத்துவமனை கட்டிடத்தின் வலது ப்பக்கம் அமைந்துள்ள பூங்காவிற்க்கு செல்ல, அங்கே மகதி கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தாள்.
மகதியை பெருமூச்சுடன் கண்ட மாயன்,"பாப்பா..." என்று அழைத்ததும், தன் கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்ட மகதி கோவமாகத் திரும்பிக்கொண்டாள்.
சிறுகுழந்தை போல அவளின் செய்கையில் இதழ் மலர்ந்த மாயன், "என்னமா... அண்ணன் மேல கோவமா?" என்ற கேள்வியோடு மகதியின் அருகே சென்றான்.
"பின்ன... கோவப்படாம என்ன பண்ண சொல்றிங்க, ஏன் அண்ணா இப்படி பண்ணீங்க?"என விம்பலுடன் கேட்டாள் மகதி.
"அந்த வயசுல உனக்கு வந்தது ஏதோ ஒரு இனம் புரியாத தடுமாற்றம் என்று தான் நினைத்தேன் பாப்பா... அதனால தான் உன்னைச் சமாதானம் பண்ண வர்மன் தந்ததா பொய் சொல்லி நானே ஒரு கடிதத்தை உன்னிடம் கொடுத்தேன், நீ என்னை என்ன நினைத்தாலும் பரவாயில்லை. அன்னைக்கு ஒரு அண்ணனா! உனக்கு நான் பண்ணது சரிதானே பாப்பா!?' என்றான் மாயன்.
"ஒரு அண்ணனா எனக்கு நீங்கப் பண்ணது சரிதான்.ஆனா வர்மனும் என்னைக் காதலிச்சாருன்னு நினைத்தேன்.
ஆனா இப்போ நான் வர்மனை நேசித்த விஷயமே அவருக்குத் தெரியாதுன்னு நினைக்கும்போது! என்னால... அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கவே முடியல அண்ணா" என்று கதறி அழுத தன் தங்கையைப் பாவமாகப் பார்த்து இருந்தான் மாயன்.
மகதி சத்தமாக அழுது ஓய்ந்தவள், "அண்ணா... நான் வர்மனை ரொம்ப கேவலமா பேசிட்டேன். நான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடுங்க.அருணை பத்திரமா பார்த்துக்கொங்க. ராஜன் மாமாவையும் பார்த்துக்கொங்க" என்ற மகதி பூங்காவிலிருந்து வெளியேறப் போனவளின் கரங்களைத் தடுத்து நிறுத்தி இருந்தான் மாயன்.
தன் அண்ணனின் முகத்தைக் காணாமல், "அண்ணா... நான் மறுபடியும் சென்னைக்கே போறேன். நான் அப்பாவைப் பார்க்கணும். எனக்கு அப்பா தோளில் சாய்ந்து அழணும்" என்ற மகதியை அங்குள்ள இருக்கையில் அமர வைத்தான் மாயன்.
"இங்க பாரு மகதி! அவசரத்துல எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இப்போ என்ன!? நீ சென்னைக்கு போகணும், அவ்வளவு தானே! சரி... இந்த வாரக் கடைசியில நானே உன்னைச் சென்னைக்கு அழைச்சிட்டு போறேன். இப்போ வா ஹாஸ்பிடல் போகலாம்" என்று மாயன் மகதியை அழைக்க, "நான் வரல" என்று பிடிவாதம் பிடித்தாள் மகதி.
"பாப்பா... அண்ணா சொன்னால் கேக்கணும். பாவம் டா அருண். அந்தப் பிள்ளைக்கு இப்போ தான் பார்வை திரும்பி இருக்கு. இப்போ நீ மட்டும் அவன்கூட இல்லைனா அப்புறம் அவன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி மறுபடியும் பழைய நிலைக்குப் போனா நீ சந்தோஷ படுவியா" என்று மாயன் கேட்க, மகதியின் மனம் லேசாக இளக ஆரம்பித்தது.
சில நொடிகள் யோசித்த மகதி, "சரி...நான் ராஜன் சார் வீட்டுக்கு வரேன்.நானே வர்மனை பார்த்து என்னோட தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்" என்ற மகதி ஒரு முடிவுடன் மருத்துவ மனைக்குள் செல்ல, அவளைப் பின் தொடர்ந்து மாயனும் சென்று இருந்தான்.
மகதியை மீண்டும் பார்த்த அருண், "அம்மா..." என்று ஓடி வந்து கட்டிக்கொள்ள,
"எங்க போன மகதி" என்ற வர்மனின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவன் முன்னே தலை குனிந்து நின்று இருந்தாள் மகதி.
மகதியின் மனநிலையை அறிந்திடாத அருணோ, "அம்மா... உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா! நீங்களும் என்னை விட்டுட்டு போகப் போறிங்களா?" எனப் பாவமாகக் கேட்டதும்,
"அருண்..." என்று கண்கள் கலங்கி சிறுவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள் மகதி.
"வர்மன் மீது எந்தத் தவறும் இல்லை.
நான் தான் முட்டாளா இருந்து இருக்கேன்" என்று எண்ணிய மகதி, அருணுக்காக மட்டுமே மீண்டும் ராஜன் வீட்டிற்க்கு செல்ல முடிவு செய்தாள்.
அன்றைய இரவு முழுதும் வர்மனும், அருணும் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க, ராஜன், மாயன், மகதி என்று மூவருமே மருத்துவ மனையிலேயே தங்கி இருந்தார்கள்.
மறுநாள் காலை மருத்துவரின் அறிவுரைப்படி வர்மன் மற்றும் அருணை மருத்துவ மனையிலிருந்து ராஜன் தன் வீட்டிற்க்கு அழைத்து
செல்ல, காரில் அமர்ந்த தருணம் கூட மகதியின் விழிகள் வர்மனை காணாமல் வேறுபக்கமாகத் திரும்பி இருந்தது.
ராஜனின் பங்காளாவில் உள்ள பார்க்கிங்கில் மாயன் தன் காரை நிறுத்த, அங்கே பெண் பணியாளர்கள் இருவர் திருஷ்டி கழித்த பிறகு அருணும் வர்மனும் வீட்டுக்குள் சென்றவர்களைப் பின் தொடர்ந்து ராஜனுடன் மகதியும் மாயனும் உள்ளே சென்றார்கள்.
"வர்மா... உங்க மாத்திரை மருந்து எல்லாம் ரூம்ல எடுத்து வச்சிட்டேன். நீ நல்லா ரெஸ்ட் எடு. நான் வீடுவரைக்கும் போயிட்டு வரேன்" என்று மாயன் சொன்னதும், "அண்ணா... நானும் வரேன்" என்றாள் மகதி.
"அம்மா... நீங்க எங்க போறீங்க?" என்று அருண் பதறியதும்,
"அருண்... நான் இப்போ போயிட்டு இன்னோரு நாள் கண்டிப்பா வரேன்" என்று மகதி சொல்ல, அருண் முகம் வாடிய நிலையில் தன் தாத்தாவின் அருகே அமர்ந்து கொண்டவனின் முகத்தைப் பார்க்கவே மகதிக்கு பாவமாக இருந்தது.
இருப்பினும்,"மாமா... நான் அண்ணன் கூடக் கிளம்புறேன்" என்ற மகதி, ராஜனின் பதிலுக்காகக் காத்து இல்லாமல் தன் உடமைகளை எடுப்பதற்காக வர்மனின் அறைக்குள் சென்றாள்.
மகதியின் செய்கைக்கு எந்த வித எதிர்வினையும் காட்டிடாத வர்மனை பார்த்து,"அப்பா... அம்மாவைப் போக வேணான்னு சொல்லுங்க" என்று அருண் கெஞ்ச,
"என்ன வர்மா இது! மகதி போறேன்னு சொல்லுறாள், நீ அமைதியா இருக்க?"என்று புரியாமல் கேட்டார் ராஜன்.
வர்மனின் மௌனத்தை உன்னிப்பாக மாயன் கவனிக்க,"மச்சான்... நீ கிளம்பு. இனி உன் தங்கச்சி உன் வீட்டுக்கு வரணும்னா! அது எங்க கல்யாண விருந்துக்காகத் தான் இருக்கும்" என்ற வர்மன்,
யாரும் எதிர்பாராத வண்ணம் தன் அறைக்குள் புகுந்து கதவை அடித்துச் சாத்தியவனின் செயலில் மாயன் சிரித்துக்கொண்டே தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.
மகதி இருக்கும் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த வர்மனை பார்த்து மகதி கையில் பையுடன் திகைத்துப் போய் நின்று இருக்க,
"எங்க கிளம்புற!?" என்று வினாவினான் வர்மன்.
ஒரு கையில் கட்டுடன் நின்று இருந்த வர்மனை கண்ணீர் சிந்தும் விழிகளுடன் பார்த்த மகதி,"என்னை மன்னிச்சிடுங்க வர்மா" என்றவள் தன் பையுடன் அறையின் கதவைத் திறக்கப் போக, வர்மன் தன் ஒரு கையால் சிற்றிடை தேகம் கொண்ட பெண்ணவளின் இடையில் கைகொடுத்து இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
வர்மனின் அணைப்பில் தன்னை மறந்து இருந்த மகதி,
வர்மனின் முகத்தைக் காணவே சங்கோஜப்பட்டு,"நான் கிளம்புறேன் வர்மா" என்றாள்.
"ம்... போகலாம். ஆனா நான் பேச வந்ததை கேட்டுட்டு,அதன் பிறகும் உனக்கு என்னை விட்டுப் போகத் தோணுச்சுனா, நீ போகலாம்" என்ற வர்மனின் வார்த்தையில் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மகதி.
அவள் பார்வையில் உள்ள அர்த்ததை புரிந்து இருந்த வர்மனோ,
"மகதி...உன்கிட்ட என் மனசுல இருக்குற ஆசையெல்லாம் எப்படி சொல்லிப் புரிய வைக்கிறதுன்னு எனக்குத் தெரியல" என்று வர்மன் சொல்ல,
இதுநாள் வரை வர்மனை வார்த்தையால் வதைத்து பேசிய பேச்சுகளை எல்லாம் எண்ணி பார்த்த மகதிக்கு, வர்மனின் தயக்கம் நியாயம் என்று தான் தோன்றியது.
மகதியின் கன்னத்தை தன் ஒற்றை கையில் ஏந்தியவன்,'உனக்கு என் மேல அத்தனை காதலா! எப்படி மகதி! உன்னால மட்டும் தான் டி இப்படியெல்லாம் காதலிக்க முடியும்' என்ற வர்மனின் வார்த்தையைக் கேட்டு மேலும் கண்கள் கலங்கினாள் மகதி.
'அப்போ நான் உங்கள காதலிச்சது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா!?' என்று மகதி கேட்க,
'ரொம்ப முன்னாடி எல்லாம் இல்ல மகதி, இப்போ தான்.அதுவும் உன் அண்ணன் உன்னோட டைரியை என்கிட்ட கொடுத்து வாசிக்கச் சொல்லும்போது தான் தெரிஞ்சிகிட்டேன்' என்ற வர்மனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மகதி.