• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
42
அத்தியாயம்- 16

மயில் வர்மனின் மரண செய்தி, அவன் சகோதரன் அருள்மொழி வர்மனை நடைப்பினமாக மாற்றியது.

தன் அண்ணன் குழந்தையைக் கையில் ஏந்தி இருந்த வர்மனுக்கு, எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் மாயன் தவித்து இருந்தான்.

'மயிலுக்கு என்னாச்சு மேடம்?' என்று கனமான இதயத்துடன் மாயன் கேட்டதும்,

'சாப்பாட்டு தட்டில் கழுத்தை அறுத்துக்கிட்டு தற்கொலை பண்ணி இருக்காரு' என்ற சைத்ராவின் வார்த்தை, வர்மனின் மனதை மேலும் ரணமாக்கியது.

வர்மனின் கையில் இருந்த பச்சிளம் பிள்ளை பசியில் அழுதுக்கொண்டு இருக்க,
'வர்மா...குழந்தையை அவங்க அம்மாகிட்ட கொடுதுட்டு வா, நம்ம உடனே ஜெயிலுக்கு போகலாம்'என்ற மாயன் குழந்தையைத் தூக்க முயன்றான்.

"அது முடியாது மாயன்"என்ற சைத்ரா மருத்துவ மனையில் இருந்த சிசிடிவி காட்சியைக் காட்ட, அதில் ரம்யா தன் ஆண் நண்பன் சரணுடன் மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது.

"இவ பொம்பளையே இல்ல வர்மா. ஹாஸ்பிடல்ல ஒரு லேடி பிறந்த பிள்ளையை அப்படியே போட்டுட்டு, இங்க இருந்து வெளிய போயிட்டாங்கன்னு எங்களுக்குக் கம்பளைண்ட் வர,
அந்தக் கேசை விசாரிக்கும்போது தான் அந்த லேடியே ரம்யான்னு எனக்குத் தெரிய வந்துச்சு" என்று கோவமாகச் சொன்னாள் சைத்ரா.

தன் அண்ணனை இழந்த சோகம் ஒரு பக்கம். பிறந்து ஒரு நாள் கூட முடியாத நிலையில் தன் பெற்றோரை இழந்த பிள்ளையின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறதோ என்ற பயம் மறுபக்கம் என்று வர்மனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

பசியால் அழுதுக்கொண்டு இருந்த பிள்ளையை வர்மனிடமிருந்து வாங்கிய சைத்ரா, செவிலியரிடம் கொடுத்துப் பாட்டில் பாலை புகட்டச் சொன்னாள்.

தன் சகோதரனின் இழப்பைத் தன் தந்தை எங்கனம் தாங்கிக்கொள்ள போகிறார் என்று அஞ்சிய வர்மன் அப்படியே இருக்கையில் சோர்ந்துப்போய் அமர்ந்தான்.

நீண்ட நொடி யோசனைக்குப் பிறகு இனி அழுது எந்தப் பயனும் இல்லை என்ற நிதர்சனத்தை புரிந்துக்கொண்ட வர்மன்,
இப்போதைக்கு மயில் வர்மனின் மரணத்தைப் பற்றி ராஜனிடம் சொல்லப்போவதில்லை என்று முடிவெடுத்தான்.

"சைத்ரா... எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா" என்று வர்மன் கேட்க,

"கண்டிப்பா வர்மா... என்ன பண்ணனும் சொல்லுங்க"என்ற சைத்ரா அவளுடைய அதிகாரத்தை வைத்து வர்மனுக்கு உதவிசெய்ய முடிவு செய்தாள்.

"மயிலும் நானும் எங்க இருபது வயதிலேயே எங்களின் உடல் உறுப்புகளைத் தானம் கொடுக்க பதிவு செய்து இருக்கிறோம்.
அதனால உங்க ஃபார்முலிட்டிஸ் முடிந்த பிறகு நீங்கத் தான் எப்படியாவது என் அண்ணனோட உடல் உறுப்புக்களை தானம் கொடுக்க ஏற்பாடு பண்ணனும்" என்று வர்மன் தாழ்மையுடன் கேட்டான்.

"வர்மா... உங்க அண்ணன் தற்கொலை பண்ணி இறந்தது தெரிந்தும் நீங்க இந்த நேரத்துல அவரோட உடல் உறுப்புகளைத் தானம் கொடுக்க நினைக்கிறது பெரிய விஷயம் வர்மா" என்று சைத்ரா வர்மனை பாராட்டினாள்.

"இனி என்னதான் அழுது புரண்டாலும் போன உயிர் வரப் போறது இல்லை. ஆனால் மயிலோட மறைவுக்கு பிறகும் அவனோட சில உடல் உறுப்புக்களைக் கொண்டு நாலு பேர் சந்தோசமா வாழ்ந்தா எங்களுக்கு அதுவே போதும்"என்ற வர்மனின் கண்களில் கண்ணீரும் வற்றி போனது.

"நீங்கக் கவலை படாதீங்க வர்மா. மயில் ஆசைப்படியே அவரால நாலு பேர் நல்லா வாழ நானும் என்னால முடிந்த உதவியைச் செய்கிறேன்"என்ற சைத்ரா தன் அலைபேசி வாயிலாக மேல் அதிகாரிகளை அழைத்து, மயில்வர்மனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய என்ன விதிமுறை என்று கேட்டுக்கொண்டாள்.

தாயின் கருவில் இருந்தே தன்னோடு ஒன்றாக இருந்த தன் அண்ணனை இனி பார்க்கவே முடியாது என்று உள்ளுக்குள் அழுத வர்மனுக்கு குழந்தையின் அழு குரல் மீண்டும் கேட்க, செவிலியர் குழந்தையைத் தூக்கி வந்து மீண்டும் வர்மனிடம் கொடுத்தார்.

"வர்மா...இந்த ரம்யா மாதிரி ஆளுங்க தான்
பெண் சமுதாயத்திற்கே அசிங்கம். அந்த ரம்யாவால தான் நம்ம மயிலை இழந்து இருக்கோம். அப்படிப்பட்ட ரம்யாவிடம் உன் அண்ணன் குழந்தை வளரக் கூடாதுன்னு தான் உன் அண்ணன் உன்னை இந்தக் குழந்தையை வளர்க்க சொல்லிக் கேட்டு இருக்கான்.

அதனால மயில் ஆசைப்படி இனி நீயே இந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்கி விட்டுடு வர்மா. அந்த ராமயா கையில மட்டும் இந்தக் குழந்தை கிடைச்சா! பணத்துக்காக அவ இந்தக் குழந்தை கதையை முடிக்கக் கூடத் தயங்க மாட்டாள்" என்று மாயன் சொன்ன வார்த்தையைக் கேட்ட வர்மன் ஒரே முடிவாகக் குழந்தையைத் தன்னோடு மும்பைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.

ஒரு காவல் அதிகாரியாக இல்லாமல். மயில் வர்மனுக்கு தோழியாக இருந்து சைத்ராவும் நிறைய உதவிகளைச் செய்துக்கொடுத்தாள்.

மறுநாள் காலை மயில்வர்மனின் உடலைப் போலீசார் அருள் மொழிவர்மனிடம் ஒப்படைத்தார்கள்.

தன் அண்ணனின் குழந்தையைக் கையில் ஏந்தியப்படியே மயில்வர்மனுக்கு இறுதி சடங்கைச் செய்து முடித்தான் வர்மன்.

தன் அண்ணன் மீது இருந்த வருத்தம் வர்மனின் கண்களில் கண்ணீரை கூட உறைய வைத்தது.

எந்தப் பெண்ணுக்காகத் தன் அண்ணன், தன் குடும்பத்தை எதிர்த்து இத்தனை கஷ்டத்தை அனுபவித்தானோ! கடைசி வரை அந்தப் பெண்ணே மயில் வர்மனின் இறுதி சடங்கில் பங்கேற்க வில்லை என்ற ஆதங்கமும் வர்மனின் மனதில் இருந்தது.

மயில்வர்மன் வாழ்ந்த அதே ஊரில் அவரின் சடலத்தை அடக்கம் செய்த வர்மன், மறுநாளே குழந்தையைத் தூக்கிக்கொண்டு மும்பைக்கு பயணித்தவனுக்கு சைத்ரா தான் உதவியாக இருந்தாள்.

கைகுழந்தையுடன் வர்மனை பார்த்த அவனின் தந்தை ராஜனுக்கு புருவங்கள் கேள்வியாக உயர,
"அப்பா...இந்தக் குழந்தை நம்ம மயிலோட குழந்தை" என்ற வர்மனின் வார்த்தையில் ராஜனுக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி எழுந்தது.

"என்னப்பா சொல்லுற! உன் அண்ணன் மயிலோட குழந்தையா! நம்ம வீட்டு வரிசா!?" என்ற ராஜன்,நிறைந்த மனதோடு கையில் குழந்தையை ஏந்தி பிள்ளையின் பாதத்தில் இதழ் பதித்தார்.

சில நொடிகள் ஆசை தீரக் குழந்தையைக் கொஞ்சிய ராஜன், "ஆமா மயிலும் அவன் பொஞ்சாதியும் எங்க? ஏன் உள்ள வந்தா நான் திட்டப் போறேன்னு துரை வெளியவே நிக்கிறாரா?"
என்று ராஜன் கேட்டதும், வர்மன் தன் தந்தையை கட்டிக்கொண்டு ஓ... என்று சத்தம் போட்டு அழுதான்.

தன் மகனின் கண்ணீரை பார்த்து ஒன்றும் புரியாமல் ராஜன் குழம்பி போக,
"இனி மயிலை நம்ம பார்க்க முடியாது அப்பா... அவன் நம்மள விட்டுப் போயிட்டான்" என்ற வர்மனின் வார்த்தையில், ராஜன் உயிர் இருந்தும் பிணமாக உணர்ந்தார்.

மாயன் கண்கள் கலங்கியப்படி மயில்வர்மன் வாழ்வில் நடந்த அசம்பாவிதங்களைச் சொல்லி முடிக்க, கதறி அழுத ராஜனுக்கு
ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லாமல் தவித்துப் போனான் வர்மா.

'வர்மா...ரம்யா பண்ண கேவலத்தால, உங்க அண்ணனுக்கு எப்படியும் ஜாமின் கிடைக்காதுனு அவருக்குத் தெரிஞ்சு இருக்கு. அதனால தான் அவரே அவருக்கான முடிவைத் தேடிகிட்டாரு"என்று மாயன் சொன்னதும்,

"அப்போ அந்த ரம்யா நம்ம மயிலோட குழந்தையைக் கேட்டு இங்கே வருவாளா வர்மா?"என்று கேட்டார் ராஜன்.

"அதுக்கு வாய்ப்பில்லை அப்பா,
அப்படியே ரம்யா வந்தாலும்
குழந்தை பிறந்த அன்னைக்கே இறந்து விட்டதாக தான் ஹாஸ்பிடல்ல சொல்ல சொல்லி இருக்கோம்" என்ற வர்மனுக்கு எந்தச் சூழ்நிலையிலும் குழந்தையை ரம்யாவிடம் கொடுத்து விடக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

இவர்கள் அனைவரும் ஒன்றுக்கூடி ரம்யாவிடம் மயில் வர்மனின் குழந்தை இறந்தாகப் பொய் சொல்லி இருக்க, அந்தப் பொய் உண்மையாக இருந்தால் கூட எனக்கு ஒரு இழப்பும் இல்லை என்ற ரீதியில் தான் வாழ்ந்து வந்தாள் ரம்யா.

தன் கணவன் இறந்ததை கூட நினைத்து வருத்தம் அடையாத ரம்யா, சில காலம் அவள் நண்பன் சரணுடன் சென்று வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கையை வாழ நினைத்தவள், அவ்வப்போது வர்மனிடம் பணம் கேட்டுத் தொல்லை படுத்துவதும் வாடிக்கையாக இருந்தது.

"தன் சகோதரனின் பெயரைச் சொல்லிப் பல கோடிகளைத் தன்னிடமிருந்து பிடுங்கிய ரம்யாவிற்கு, எங்கே மயில்வர்மனின் குழந்தை அருண், உயிரோடு இருப்பது தெரிய வந்தால் பணத்திற்காக அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை ரம்யா கேள்விக்குறியாக்கிடுவாள் என்று பயந்த
வர்மன்,

இதுநாள் வரை சிறுவன் அருண் உயிரோடு இருப்பதை ரம்யாவிடம் சொல்லாமல் பரம ரகசியமாகக் காப்பாற்றி வைத்திருந்தான்" என்ற கதையை இன்று மாயன் கனத்த இதயத்தோடு மகதியிடம் சொல்லி முடித்தான்.

வர்மனின் வாழ்க்கையில் இப்படியொரு சோகம் இருப்பதை அறிந்திடாத மகதிக்கு, இதுநாள் வரை வர்மனை தவறாக நினைத்து அவனைக் காயப்படுத்தியதை எண்ணி தன்னை தானே நொந்துக்கொண்டாள்.

மாயனும் மகதியும் மயில்வர்மனை பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் ராஜன் பதற்றத்துடன் மருத்துவ மனைக்குள் நுழைய, அதே தருணம்,
"அருணோட அம்மாவை டாக்டர் வரச் சொல்லுறாங்க" என்ற செவிலியரின் வார்த்தை முடியும் முன்னே மகதி மருத்துவரின் அறைக்குள் நுழைந்து இருந்தாள்.

கலகத்துடன் மருத்துவரைப் பார்த்த மகதி,
"டாக்டர்... என் குழந்தை எப்படி இருக்கான். அவனுக்குப் பயப்புடும்ப்படி ஏதும் இல்லையே" என்று பதற்றத்துடன்
அருணை பற்றி விசாரித்தாள்.

"பதட்டப்படாதீங்க! கெட்டத்தில் ஒரு நல்லது போல, விபத்தினால் தற்காலியமாகப் பார்வையை இழந்த உங்க பையனுக்கு, இப்போ அதே விபத்தின் காரணத்தால் மீண்டும் பார்வை வந்து இருக்கு" என்ற மருத்துவரின் வார்த்தையில் மாயனுக்கும் மகதிக்கும் நிம்மதி பிறந்தது.
 
Joined
Feb 6, 2025
Messages
42
"நான் கும்பிட்ட கடவுள் என்னைக் கை விடல" என்று ஒரு கணம் கண்கள் மூடிக் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்தாள் மகதி.

"ஒரு மூணு மாசத்துக்கு குழந்தை கண்ணுல கருப்பு கண்ணாடி போட்டு விடுங்க. நான் கொடுக்குற சொட்டு மருந்தைத் தவறாமல் கண்ணுக்குப் போடுங்க, மற்றபடி இப்போ குழந்தை நல்லா இருக்கான்" என்ற மருத்துவரின் முன்னே கைகள் கூப்பி நன்றி சொன்னாள் மகதி.

"டாக்டர் நாங்க குழந்தையைப் பார்க்கலாமா?" என்று மாயன் கேட்க,
"இன்னும் ஒரு மணி நேரம் கடந்து போய்ப் பாருங்க"எனச் சிரித்த முகத்துடனே சொன்னார் மருத்துவர்.

"டாக்டர்... வர்மா எப்படி இருக்காரு, அவருக்கு ஆபரேஷன் நல்ல படியா முடிந்ததா?" என்ற மகதியின் கண்கள் மீண்டும் வர்மனுக்காகக் கலங்கியது.

"அவருடைய தோள்பட்டையில் இருந்த குண்டை நாங்கள் ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவருக்கும் மயக்கம் தெளிந்து விடும்" என்று மருத்துவர் சொல்ல, மகதி மீண்டும் மருத்துவருக்கு நன்றி தெரிவித்தாள்.

"வாப்பாப்பா, இந்த நல்ல செய்தியை உடனே ராஜன் சார்க்கிட்ட சொல்லுவோம்" என்ற மாயன் மகதியை அழைத்துக்கொண்டு மருத்துவரின் அறையிலிருந்து வெளியேறினான்.

வர்மனும் அருணும் நலமாக உள்ளார்கள் என்ற செய்தியைக் கேட்டு ராஜனும் உலகத்தில் உள்ள எல்லா கடவுளுக்கும் நன்றி தெரிவித்தார்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்து மயக்கத்திலிருந்து வர்மன் கண் விழித்தவன்,"அருண்.... அருண்"
என்று தன் அண்ணன் மகனின் பெயரை உச்சரித்தான்.

வர்மனின் பதற்றத்தை பார்த்து,"சார்...உங்களுக்கு ஆப்ரேஷன் பண்ணி இருக்கோம். நீங்க கையை மூவ் பண்ணாதீங்க"என்ற செவிலியர் வர்மனை சமாதானம் செய்தார்.

"நான் என் மகனைப் பாக்கணும். என் மகன் எப்படி இருக்கிறான்" என்று வர்மன் கேட்க,

"அருண் நல்லா இருக்கான் வர்மா. அருணுக்கு பார்வை திரும்பக் கிடைச்சிடுது" என்ற நல்ல செய்தியோடு தன் நண்பனைக் கட்டி அனைத்தான் மாயன்.

"வர்மா...இப்போ எப்படி பா இருக்க" என்ற ராஜனும் தன் மகனைக் கண்ணீருடன் கட்டித் தழுவ,

"நான் நல்லா இருக்கேன் அப்பா,
அருண் நல்லா இருக்கானா?"என்ற வர்மனின் சிந்தை முழுதும் அவன் அண்ணன் மகன் அருண் மட்டுமே நிறைந்திருந்தான்.

"அருண் லேசான மயக்கத்துல தான் இருக்கான். ஆனால் குழந்தை இப்போ நல்லா இருக்கான். அவனுக்குப் பார்வை திரும்பக் கிடைச்சிடுதுன்னு டாக்டர் சொல்லி இருக்காரு" என்று மாயன் சொல்ல,

"ஒரே நாள்ல என்னென்னமோ நடந்து போச்சு" என்ற ராஜனுக்கு இனியும் ரம்யாவால் ஏற்பட்ட மன வேதனை குறையாமல் இருந்தது.

"மாயா... மறுபடியும் ரம்யாவால ஏதாவது பிரச்சனை வருமா?" என்று வர்மன் கேட்க,
"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை வர்மா. இனி உங்க வாழ்க்கையில் ரம்யாவின் அத்தியாயம் முடிவடைந்து விட்டது" என்ற நல்ல செய்தியுடன் இவர்கள் முன்னே வந்த சைத்ராவின் பின்னே மகதியும் வந்திருந்தாள்.

"என்ன மேடம் சொல்றீங்க!? ரம்யாவுக்கு என்ன ஆச்சு?" என்று மாயன் கேட்க,

"நான் தான் சொன்னேனே மாயா, ரம்யா வெளிநாட்டில் தேடப்படுற முக்கிய குற்றவாளி. சோ, நான் அவளை மலேசியா போலீஸ்க்கிட்ட ஒப்படைக்க ஏற்பாடு பண்ணிட்டேன்,
இனிமே ரம்யாவால உங்களுக்கு எந்தவித பிரச்சனையும் வராது" என்ற சைத்ராவின் வார்த்தையில் வர்மனுக்கு நிம்மதி பிறந்தது.

வர்மனின் நிலையை பார்த்து கண்கள் கலங்கிய மகதி,
"வர்மா! என்னை மன்னிச்சிடுங்க, நான் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்தற மாதிரி பேசிட்டேன்" என்றாள்.

மகதி எதற்காகத் தன்னிடம் மன்னிப்பு கேட்கின்றாள் என்று வர்மன் அறிந்து இருந்தாலும், ஒன்றும் தெரியாததை போலவே, "எதுக்காக மன்னிப்பு கேட்கிற?" என்று கேட்டான்.

வர்மனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்,
"அது... நான் வந்து...."என்று மகதி தன் மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தவித்துப் போனாள்.

மகதியின் தயக்கத்தை உள்ளூர ரசித்த வர்மன்,"நீ எதுக்காக என்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்னு தெரியல. ஆனாலும் உன் மன்னிப்பை அவ்வளவு சீக்கிரமா நான் ஏத்துக்க மாட்டேன்" என்றவன் மனதிற்குள் விஷமாகச் சிரித்து கொண்டான்.

வர்மனின் வார்த்தையில் உள்ள மர்மத்தை அறிந்திடாமல் மகதி குழம்பி போக,
"மாயா...நான் அருணை உடனே பாக்கணும்" என்ற வர்மன் படுக்கையிலிருந்து எழுந்து அருண் இருக்கும் சிகிச்சை அறையை நோக்கி நடந்தான்.

ஒரு கையில் கட்டுடன் சோர்வான உடல் நிலையில் அருணை தேடி வர்மன் செல்ல, அங்கே மயக்கம் தெளிந்த நிலையில் கண்கள் மூடிப் படுத்திருந்தான் சிறுவன் அருண்.

சிறுவனைப் பார்த்ததும்,"அருண்..."என ஓடிச் சென்று தன் மகனைக் கட்டி அணைத்து அவன் முகம் முழுதும் வர்மன் முத்தம் மழை பொழிய, "அப்பா... அப்பா உங்களுக்கு ஒன்னும் ஆகலையே! நீங்க நல்லா இருக்கீங்களா?"என்று மழலை மொழி மாறாமல் வர்மனை நலம் விசாரித்தான் அருண்.

"நான் நல்லா இருக்கேன் அருண்.உனக்கு அப்பாவைத் தெரியுதா!? இப்போ உன்க்கு கண்ணு தெரியுதா?" என்று வர்மன் நம்ப முடியாமல் கேட்க,

"நான் நல்லா இருக்கேன் அப்பா.எனக்குக் கண்ணு தெரியுது. நீங்க நல்லா இருக்கீங்க தானே?" என்ற அருணின் விழிகள் யாரையோ தேடித் தவித்திருந்தது .

மீண்டும் பார்வை திரும்பிய அருணுக்கு இது நால்வரை மகதி தான் தனக்கு அம்மாவாக நடித்தாள் என்று தெரிய வந்தால், அவனின் மனநிலை என்னவாக இருக்கும் என்ற தயக்கத்தில் மகதி சிகிச்சை அறைக்குள் வராமல் வாசலிலேயே நின்றிருக்க, "அப்பா...அம்மா எங்கே?" என்று கேட்டான் அருண்.

"அருண்... என்னை மன்னிச்சிடு அருண். உன்னோட அம்மா" என்று வர்மன் பேசும் முன்னே,

"எனக்குத் தெரியும் அப்பா... என்னோட அம்மா பேர் ரம்யா. வீட்ல இத்தனை நாளா எனக்கு அம்மாவா இருந்தவங்க நடிக்கத் தான் வந்தாங்கன்னு எனக்குத் தெரியும் அப்பா" என்ற அருணின் வார்த்தையில் வர்மன், மாயன், ராஜன் என்று மூவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தது.

அருணின் தெளிவான சொற்களை வாசலில் நின்றபடி கேட்டிருந்த மகதிக்கோ, குழந்தையின் மனதை ரம்யா தான் குழப்பி இருப்பாள் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொண்டவளுக்கு இனி அருணை எப்படி பார்ப்பது என்ற தயக்கம் எழுந்தது.

"அருண்...நீ என்ன சொல்ற?"என்று மாயன் புரியாமல் கேட்க,
"மாமா... நீங்க உங்க தங்கச்சியை தான் எனக்கு அம்மாவா நடிக்க அழைச்சிட்டு வந்திருக்கீங்கன்னு அவங்க முதல் முறை என்னிடம் போன்ல பேசும் போதே நான் தெரிஞ்சுக்கிட்டேன் மாமா" என்று அருண் சொன்னதும், மகதியின் கண்கள் அவளை அறியாமல் கலங்கியது.

"என்ன அருண் சொல்ற...என் தங்கச்சி தான் உனக்கு அம்மாவா நடிக்க வந்தான்னு உனக்குத் தெரியுமா?" என்று மாயன் கேட்க,

"தெரியும் மாமா! அவங்க எனக்கு அம்மாவா நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சு தான் நானும் அவங்ககிட்ட பாசமா இருந்தேன்.
ஆனா உண்மையாகவே அவங்க என்கிட்ட நடிக்கல மாமா, அவங்க என்னை அவங்களுடைய சொந்தக் குழந்தை மாதிரி தான் பார்த்துக்கிட்டாங்க.

ஆனா இன்னைக்கு காலைல என்னோட அம்மா ரம்யான்னு ஒரு லேடி வந்தாங்க இல்ல,அவங்க மட்டும் எனக்கு வேண்டாம் மாமா" என்ற அருணின் வார்த்தையைக் கேட்டு மாயனுக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் போனது.

"அப்பா...எனக்கு அம்மா என்றால் அது சித்ரா அம்மாவா தான் இருக்கணும். ப்ளீஸ் அப்பா, சித்ரா அம்மா கிட்ட சொல்லி அவங்க என்னை பெக்கலனாலும் பரவால்ல,ஆனா என்னை அவங்க பிள்ளையா ஏத்துக்க சொல்றீங்களா"
என்று குழந்தை கெஞ்சி கேட்கும் குரலைக் கேட்டு மகதி வேகமாக ஓடிவந்து அருணை கட்டி அணைத்து அவன் முகம் முழுதும் முத்தமழை பொழிந்தாள்.

அருண் மீது மகதிக்கும், மகதியின் மீது அருணுக்கும் இருக்கும் பாசப்பிணைப்பை பார்த்துக் கூடியிருக்கும் அனைவரின் கண்களின் கலங்கியது.

"சரி சரி...இதுவரை நீங்க அழுததெல்லாம் போதும். இனியாவது இந்த வீட்ல நல்ல காரியம் நடக்கட்டும்" என்று சைத்ரா சொன்னதும்,

"அப்போ உடனே மகாலிங்கத்துக்கு போன் பண்ணி மகதிக்கும் வர்மனுக்கும் திருமண ஏற்பாட்டை பண்ண சொல்லலாமா!?" என்று கேட்டார் ராஜன்.

ராஜனின் வார்த்தையைக் கேட்டு மகதியின் முகம் சிவந்து இருக்க,"ஒரு நிமிஷம் சார்! அதுக்கு முன்னாடி நான் என் தங்கச்சி கிட்ட ஒரு சில உண்மையைச் சொல்லணும்" என்றான் மாயன்.

"டேய்....வேணாண்டா, நீ எதையும் சொல்ல வேண்டாம். மகதிக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைனா கூட அவளை நம்ம தொந்தரவு படுத்த வேண்டாம்" என்று வர்மன் சொன்னதும்,

"அப்பா... அப்படியெல்லாம் சொல்லாதீங்க. எனக்குச் சித்ரா அம்மா தான் வேணும். அம்மா நீங்க என் அப்பாவைக் கல்யாணம் பண்ணிட்டு என்கூடயே இருந்துடுங்க.
நான் இனி உங்களை எங்கேயும் போக விடமாட்டேன்" என்ற அருண் மகதியின் கரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.

"குழந்தையும் தெய்வமும் ஒண்ணுனு சொல்லுவாங்க, அப்போ சீக்கிரம் இவங்க ரெண்டு பேருடைய கல்யாணத்தை ஏற்பாடு பண்ணலாம்" என்று மீண்டும் ராஜன் சொல்ல,

"ஆனா அதுக்கு முன்னாடி நான் சொல்ல வந்த உண்மையை சொல்லிடுறேன்" என்ற மாயன்,
"பாப்பா...என்னை மன்னிச்சிடுமா" என்றதும்,மகதியின் புருவம் கேள்வியாக உயர்ந்தது.

"என்ன அண்ணா! என்ன உண்மையைச் சொல்லப் போறீங்க?" என்று மகதி கேட்க,

"பத்து வருஷத்துக்கு முன்னாடி உன்கிட்ட வர்மன் கொடுத்ததா சொன்ன அந்தக் கடிதத்தை எழுதியது நான் தான்.
இன்னும் சொல்ல போனால்!
வர்மனுக்கு நீ அவனை நேசிக்கிற விஷயமே நீ மும்பை வர வரைக்கும் அவனுக்கே தெரியாது" என்று மாயன் ஒரு வழியாக அனைவரின் எதிரிலும் உண்மையை போட்டு உடைத்து இருந்தான்.

அதுவரை தன் காதலை வர்மன் மறந்து தான் இருந்தான் என்று நினைத்திருந்த மகதிக்கு,

இது நாள்வரை மகதி வர்மனை காதலித்த விஷயமே அவனுக்குத் தெரியாது என்ற உண்மையை அறிந்து,
சட்டென்று அருணின் அருகே இருந்து எழுந்தவள், வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தாள்.




 
New member
Joined
Feb 8, 2025
Messages
22
superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr superrrr
 
Member
Joined
May 9, 2025
Messages
44
Venna therandu varumbodhu panaya udachitangha indh author.ippa sollalana Enna Maya why did you do this
 
New member
Joined
May 2, 2025
Messages
19
சூப்பர் சூப்பர் சூப்பர் 😇😇 எல்லா‌ உண்மையும் தெரிந்து விட்டது ஆனா மகதி போயிவிட்டாலே😇😇 என்ன செய்யவது மனசு மாறி வருவாளா
 
New member
Joined
May 2, 2025
Messages
18
அக்கா ஏன் இப்படி பண்றிங்க மாயன் வாய் இருக்கே... குழந்தை பாவம் ரம்யா சண்டாளி. கதை 👌👌👌
 
New member
Joined
Mar 12, 2025
Messages
20
இவ பொம்பளையா மகதி லவ் சூப்பர்
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top