Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
அத்தியாயம்- 13
காலை மணி ஒன்பதை நெருங்கி இருக்கும், மாயன் அவனின் வீட்டுக்குள் நுழைந்தவன்,"உள்ள வா ஷீலா"
என்று அழைக்க, மாடர்ன் ட்ரெஸில் முப்பது வயதுடைய பெண் மாயனின் வீட்டுக்குள் வந்தார்.
"என்னடா மாயா நீ! ஏன் நைட் வீட்டிக்கு வரல?" என்ற கீதா, "யாருடா இந்தப் பொண்ணு?" என்று வினாவினார்.
"அம்மா... இவங்க ஷீலா" என்று மாயன் சொன்னதும்,"வணக்கம் அத்தை" என்று சிரித்த முகத்துடன் கீதாவை வணங்கினாள் ஷீலா.
இரவெல்லாம் வீட்டிற்க்கு வராமல், பகலில் ஒரு பெண்ணோடு வந்து இருக்கும் மாயனை தன் அறையிலிருந்து ஆராட்சியாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள் நந்தினி.
"உக்காரு ஷீலா. அம்மா டிபன் ரெடியா இருக்கா?" என்று மாயன் கேட்க,
"நந்தினி இட்லி ஊத்தி தக்காளி சட்னி வச்சி இருக்காள்" என்ற கீதாவின் பார்வை ஷீலாவிடமிருந்து நகராமல் இருந்தது.
"இட்லியா! ஆனா ஷீலாவுக்கு இட்லி பிடிக்காதே! சரி மாவு இருக்கா?" என்று மாயன் கேட்க, "ம்..." என்று தலையசைத்தார் கீதா.
"சூப்பர்! ஷீலா நீ அம்மாகிட்ட பேசிகிட்டு இரு. நான் உனக்குத் தோசை ரெடி பண்ணுறேன்" என்று புன்னகை வாடாத முகத்துடன் மாயன் சொல்ல,
"நீங்கப் பேசிகிட்டு இருங்க. நானே போய்த் தோசை ரெடி பண்ணுறேன்" என்ற கீதா, மாயனை ஒரு மார்க்கமாகப் பார்த்துக்கொண்டே சமையல் அறைக்குச் சென்றார்.
கீதா சென்றதும் மாயன் ஷீலாவின் பக்கம் அமர்ந்தவன், "ரொம்ப வெக்கையா இருக்கா? ஏசி ஆன் பண்ணவா?" என்று கேட்க,
"நீங்கக் கூட இருந்தா எனக்கு எப்பவும் வெக்கையாவே இருக்காது மாயா" என்ற ஷீலாவின் சிரிப்புச் சத்தம் நந்தினி காதில் நாராசமாக ஒலித்தது.
"அப்புறம் மாயா! இந்த வீடு ரொம்ப சின்னதா இருக்குற மாதிரி இருக்கே! இங்க உங்களுக்கு வசதியா இருக்கா?" என்று ஷீலா கேட்க,
"அடுத்த மாசம் நானும் என் அம்மாவும் இந்த வீட்டுல இருந்து வேற வீட்டுக்குப் போயிடுவோம்" என்ற மாயனின் வார்த்தையைக் கேட்டு, அறையினுள் இருந்தப்படியே புருவம் உயர்த்தினாள் நந்தினி.
"என்ன மாயா சொல்லுற! நம்ம இந்த வீட்டை விட்டுப் போகப் போறோமா!? அதுவும் நீயும் நானும் மட்டுமா!?" என்று கீதா கேட்க, "ம்..." என்று தலையசைத்தான் மாயன்.
"மாயா நீ என்ன பேசுற!? எனக்கு ஒண்ணுமே புரியல"என்று கீதா கேட்க,
"அம்மா... நான் நந்தினிக்கு டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன், இந்த வீட்டைக் கூட நந்தினியே எடுத்துக்கட்டும். நம்ம வேற எங்காவது போய்த் தங்கிக்கலாம்" என்று மாயன் சொன்னதும், கீதாவின் கண்களில் கண்ணீர் தான் வந்தது.
"மாயா! என்ன நீங்க!? நீங்க ஏன் வேற எங்காவது போகணும், கல்யாணத்துக்கு அப்புறம் ஆன்ட்டியும் நீங்களும் நம்ம வீட்டுல தங்கிக்கோங்க மாயா" என்று ஷீலா சொல்ல,"ம்... இதுவும் நல்லா ஐடியா தான்" என்றான் மாயன்.
மாயனும் ஷீலாவும் பேசப் பேச நந்தினிக்கு கோவம் அதிகரித்தது.
இருப்பினும் மாயனை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணியவளுக்கு, இதையெல்லாம் நினைத்துக் கோவப்பட உரிமை இல்லை என்று நினைத்தவள் தன் அறையில் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
நந்தினி கேட்ட விவகாரத்துக்கு மாயன் சம்மதித்து இருக்கிறான் என்ற உண்மையை அறிந்து கீதாவின் மனம் ரணமாக மாறியது.
"அம்மா... டிபன் எடுத்து வையுங்க.
ஷீலா வா சாப்பிடலாம்" என்ற மாயன் வேறொரு பெண்ணோடு நெருங்கிப் பழகுவதை பார்த்து நந்தினியின் காதுகள் இரண்டும் புகையை வெளியேற்றியது.
சிரிப்பும் கும்மாளுமமாக மாயன் காலை உணவைச் சாப்பிட்டவன், "அம்மா நீங்கச் சாப்பிட்டீங்களா?"என்று விசாரிக்க, "நந்தினி காலையிலேயே எனக்கு டிபனும் மாத்திரையும் கொடுத்துட்டா மாயா" என்றார் கீதா.
"ஏன் மாயா! யாரது நந்தினி?அவங்க என்ன உங்க வீட்டுல வேலை பார்க்குற பொண்ணா?"என்று ஷீலா கேட்க,
பொறுத்து இருந்தது போதும் என்று எண்ணிய நந்தினி,அதித கோபத்துடன் தன் அறையிலிருந்து வெளியே வந்தவள், மாயனின் முன்னே காளி தேவியை போல உக்கரமாக வந்து நின்றாள்.
திடிரென்று தன் முன் வந்து நின்ற நந்தினியை பார்த்த ஷீலா, "மாயா யார் இவங்க?" என்று கேட்க, "இவ தான் என் மருமகள் நந்தினி" என்றார் கீதா.
"மருமகளா! அப்படினா மாயா உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுதா!?" என்று ஷீலா கேட்க,"ம்... ஒரு முறை" என்று அலுப்பாகச் சொன்னான் மாயன்.
வீட்டுக்குள் வந்ததிலிருந்து நந்தினி பக்கமே திரும்பாமல் இருந்த மாயனை கடுப்பாக நந்தினி முறைக்க, "என்ன ஒரு முறையா!? ஏன் மாயா, அப்போ நாங்க மட்டும் என்ன பத்து முறையா கல்யாணம் பண்ணிப்போம்?" என்று கிண்டலாகக் கேட்டாள் ஷீலா.
"மாயா! என்ன இதெல்லாம்!? யாரு இவங்க?" என்று நந்தினி கேட்க,
"யாரா இருந்தால் உங்களுக்கு என்ன மேடம், நீங்க எந்த உரிமையில என்கிட்ட இந்தக் கேள்வியெல்லாம் கேக்குறீங்க?" என்று அவளைச் சீறினான் மாயன்.
"என்ன கேள்வி இது? இந்த நொடிவரை உங்ககிட்ட எனக்குத் தான் எல்லா உரிமையும் இருக்கு"என்று நந்தினி சொல்ல,
"அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை, நேத்து நைட் நீங்கக் கேட்ட டிவோர்ஸ் பேப்பர்ல நான் கையெழுத்து போட்டுக் கொடுத்ததோடு நமக்குள்ள இருந்த எல்லா உரிமையும் முடிஞ்சு போச்சு" என்றான் மாயன்.
"ஓ! அதனாலதான் நான் கொடுத்த டிவோர்ஸ் பேப்பர்ல என்ன ஏதுன்னு
கேள்வி கேட்காமல் கையெழுத்து போட்டுக் கொடுத்தீங்களாக்கும்?" என்று நந்தினி தன் மனதில் இருந்த குமரலை வெளிப்படையாகக் கேட்டாள்.
"உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் நந்தினி. அதனால் தான் நீ கேட்டதும் கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன்" என்று மாயன் அலட்சியமாகப் பதில் அளிப்பதை நந்தினி
எதிர்பார்க்கவில்லை.
"ஏன் அத்த! ஒரு பொண்டாட்டி புருஷன் கிட்ட டிவோர்ஸ் கேட்டா ஏன் எதுக்குன்னு காரணத்தைக் கூட உங்க புள்ள கேட்கமாட்டாரா?" என்று நந்தினி கேட்க, நந்தினி கண் முன்னே தன் விரலைச் சுண்டி அவளை தன் பக்கம் அழைத்தான் மாயன்.
"அங்க என்ன கேள்வி? என் அம்மா கிட்ட உனக்கு எந்தப் பேச்சும் இனி இருக்கக் கூடாது. என் அம்மாவைக் கேட்டா நீ எனக்கு டிவோர்ஸ் பேப்பர் அனுப்புன. இல்ல! வக்கிலை போய்ப் பாக்குறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தையாவது சொன்னியா?" என்று மாயன் கேட்க,
"சரி...உங்க யார்கிட்டயும் நான் சொல்லல தான், ஆனா எதுக்காக உங்ககிட்ட விவாகரத்து கேட்டேன்னு நீங்க யோசிக்க மாட்டீங்களா?" என்று கேட்டாள் நந்தினி.
"உன் மேல எனக்கு எவ்வளவு காதல் இருக்குன்னு, சாரி! எவ்வளவு காதல் இருந்துச்சுன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஏன்! என் அம்மாவும் உன்ன பெத்த பொண்ணு மாதிரி தான் பார்த்துக்கிட்டு இருக்காங்கன்னும் உனக்கு நல்லா தெரியும். அப்படி இருக்கும்போது உனக்கு என்ன பிரச்சனைன்னு நீயே எங்க கிட்ட சொல்லாதபோது! நாங்க ஏன் அதைத் தெரிஞ்சுக்க ஆசை படனும்" என்று கேட்டான் மாயன்.
"இங்க பாருங்க! நான் உங்ககிட்ட விவாகரத்து கேட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு" என்று நந்தினி சொல்ல்,
"அப்படி என்ன தான் காரணம்" என்று கவலையுடன் கேட்டார் கீதா.
"அம்மா... காரணம் என்பது அவங்களுக்கேத்த மாதிரி அவங்களே உருவாக்கிப்பாங்க, அதையெல்லாம் கேட்டு நம்ம நேரத்தை வீணாக்கிக்க வேண்டாம்.
இங்க பாருங்க நந்தினி, உங்களுக்கு நீங்கக் கேட்ட விவாகரத்தை நான் கொடுத்துட்டேன்.
இதுக்கு மேல உங்களுக்கு இஷ்டம் இருந்தால் இந்த வீட்டில் இருங்க. ஜீவனாம்சமா நீங்க என்ன கேக்குறீங்களோ நான் அதைக் கொடுக்குறேன்.
எவ்வளவு சீக்கிரம் நாங்க இந்த வீட்ல இருந்து கிளம்ப முடியுமோ நாங்க கிளம்புறோம். இனியாவது என் மனச புரிஞ்சுகிட்டு எனக்காகக் கவலைப்படுற ஒரு பொண்ணு கூட வாழ நான் ஆசைப்படுறேன்" என்று மாயன் சொன்னதும்,
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நந்தினி சட்டென்று மாயனின் சட்டைக்காலரை கோவமாகப் பற்றிக்கொண்டவள்,
"என்ன!? உங்களுக்காகக் கவலைப்படற பொண்ண பாக்கறீங்களா!?, டேய் மடையா, நீ நல்லா இருக்கணும்னு, உன்ன நெனச்சு கவலைப்பட்டு தாண்டா நான் உன்கிட்ட விவாகரத்து கேட்டேன்" என்று உண்மையைக் கூறினாள் நந்தினி.
"இது என்ன புது கதை!? நான் நல்லா இருக்கிறதுக்காக நீ விவாகரத்து கேட்டியா? ஏன் இப்ப நான் நல்லா இல்லாம என்ன நாரிக்கிட்டா இருக்கேன்?" என்று மாயன் கடுப்பாகக் கேட்டான்.
"நமக்குக் கல்யாணம் முடிந்து பத்து வருஷம் ஆச்சு! இந்தப் பத்து வருஷத்துல நமக்கு ஒரு குழந்தை இல்லன்னு நம்ம போகாத ஹாஸ்பிடல் இல்ல, ஆனா போன இடத்துல எல்லாமே எனக்குத் தான் குறை இருக்குன்னு தெள்ள தெளிவா சொல்லிட்டாங்க.அப்படி இருக்கும்போது ஏன் என்னால உங்க வாழ்க்கை வீணாகணும்னு தான் நான் உங்கக்கிட்ட விவாகரத்து கேட்டேன்" என்று கண்களில் கண்ணீருடன் சொன்னாள் நந்தினி.
"ஓ! நீ விவாகரத்து கேட்டதுக்கு பின்னாடி உன்னுடைய நல்ல எண்ணம் தான் இருக்கா!? பாத்தியா! அத நான் புரிஞ்சிக்கவே இல்லையே. சரி சரி... எப்படியோ நீயே எனக்கு நல்லது பண்ணனும்னு ஆசைப்படுட்ட.
நீ நெனச்ச மாதிரியே இனி எல்லாமே எனக்கு நல்லதாகவே நடக்கட்டும்.
அம்மா...டிவோர்ஸ் கிடைத்ததும், நந்தினி கிட்ட அவங்க இங்கேயே இருக்க போறாங்களா! இல்ல இங்க இருந்து கிளம்ப போறாங்களான்னு கேட்டுச் சொல்லுங்க. நான் போய் என் டார்லிங் ஷீலாவை டிராப் பண்ணிட்டு வரேன்" என்ற மாயன், அவன் அழைத்து வந்த பெண்ணை அவனுடனேயே அழைத்துச் செல்ல, செய்வதறியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து இருந்தாள்.
காலை மணி ஒன்பதை நெருங்கி இருக்கும், மாயன் அவனின் வீட்டுக்குள் நுழைந்தவன்,"உள்ள வா ஷீலா"
என்று அழைக்க, மாடர்ன் ட்ரெஸில் முப்பது வயதுடைய பெண் மாயனின் வீட்டுக்குள் வந்தார்.
"என்னடா மாயா நீ! ஏன் நைட் வீட்டிக்கு வரல?" என்ற கீதா, "யாருடா இந்தப் பொண்ணு?" என்று வினாவினார்.
"அம்மா... இவங்க ஷீலா" என்று மாயன் சொன்னதும்,"வணக்கம் அத்தை" என்று சிரித்த முகத்துடன் கீதாவை வணங்கினாள் ஷீலா.
இரவெல்லாம் வீட்டிற்க்கு வராமல், பகலில் ஒரு பெண்ணோடு வந்து இருக்கும் மாயனை தன் அறையிலிருந்து ஆராட்சியாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள் நந்தினி.
"உக்காரு ஷீலா. அம்மா டிபன் ரெடியா இருக்கா?" என்று மாயன் கேட்க,
"நந்தினி இட்லி ஊத்தி தக்காளி சட்னி வச்சி இருக்காள்" என்ற கீதாவின் பார்வை ஷீலாவிடமிருந்து நகராமல் இருந்தது.
"இட்லியா! ஆனா ஷீலாவுக்கு இட்லி பிடிக்காதே! சரி மாவு இருக்கா?" என்று மாயன் கேட்க, "ம்..." என்று தலையசைத்தார் கீதா.
"சூப்பர்! ஷீலா நீ அம்மாகிட்ட பேசிகிட்டு இரு. நான் உனக்குத் தோசை ரெடி பண்ணுறேன்" என்று புன்னகை வாடாத முகத்துடன் மாயன் சொல்ல,
"நீங்கப் பேசிகிட்டு இருங்க. நானே போய்த் தோசை ரெடி பண்ணுறேன்" என்ற கீதா, மாயனை ஒரு மார்க்கமாகப் பார்த்துக்கொண்டே சமையல் அறைக்குச் சென்றார்.
கீதா சென்றதும் மாயன் ஷீலாவின் பக்கம் அமர்ந்தவன், "ரொம்ப வெக்கையா இருக்கா? ஏசி ஆன் பண்ணவா?" என்று கேட்க,
"நீங்கக் கூட இருந்தா எனக்கு எப்பவும் வெக்கையாவே இருக்காது மாயா" என்ற ஷீலாவின் சிரிப்புச் சத்தம் நந்தினி காதில் நாராசமாக ஒலித்தது.
"அப்புறம் மாயா! இந்த வீடு ரொம்ப சின்னதா இருக்குற மாதிரி இருக்கே! இங்க உங்களுக்கு வசதியா இருக்கா?" என்று ஷீலா கேட்க,
"அடுத்த மாசம் நானும் என் அம்மாவும் இந்த வீட்டுல இருந்து வேற வீட்டுக்குப் போயிடுவோம்" என்ற மாயனின் வார்த்தையைக் கேட்டு, அறையினுள் இருந்தப்படியே புருவம் உயர்த்தினாள் நந்தினி.
"என்ன மாயா சொல்லுற! நம்ம இந்த வீட்டை விட்டுப் போகப் போறோமா!? அதுவும் நீயும் நானும் மட்டுமா!?" என்று கீதா கேட்க, "ம்..." என்று தலையசைத்தான் மாயன்.
"மாயா நீ என்ன பேசுற!? எனக்கு ஒண்ணுமே புரியல"என்று கீதா கேட்க,
"அம்மா... நான் நந்தினிக்கு டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன், இந்த வீட்டைக் கூட நந்தினியே எடுத்துக்கட்டும். நம்ம வேற எங்காவது போய்த் தங்கிக்கலாம்" என்று மாயன் சொன்னதும், கீதாவின் கண்களில் கண்ணீர் தான் வந்தது.
"மாயா! என்ன நீங்க!? நீங்க ஏன் வேற எங்காவது போகணும், கல்யாணத்துக்கு அப்புறம் ஆன்ட்டியும் நீங்களும் நம்ம வீட்டுல தங்கிக்கோங்க மாயா" என்று ஷீலா சொல்ல,"ம்... இதுவும் நல்லா ஐடியா தான்" என்றான் மாயன்.
மாயனும் ஷீலாவும் பேசப் பேச நந்தினிக்கு கோவம் அதிகரித்தது.
இருப்பினும் மாயனை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணியவளுக்கு, இதையெல்லாம் நினைத்துக் கோவப்பட உரிமை இல்லை என்று நினைத்தவள் தன் அறையில் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
நந்தினி கேட்ட விவகாரத்துக்கு மாயன் சம்மதித்து இருக்கிறான் என்ற உண்மையை அறிந்து கீதாவின் மனம் ரணமாக மாறியது.
"அம்மா... டிபன் எடுத்து வையுங்க.
ஷீலா வா சாப்பிடலாம்" என்ற மாயன் வேறொரு பெண்ணோடு நெருங்கிப் பழகுவதை பார்த்து நந்தினியின் காதுகள் இரண்டும் புகையை வெளியேற்றியது.
சிரிப்பும் கும்மாளுமமாக மாயன் காலை உணவைச் சாப்பிட்டவன், "அம்மா நீங்கச் சாப்பிட்டீங்களா?"என்று விசாரிக்க, "நந்தினி காலையிலேயே எனக்கு டிபனும் மாத்திரையும் கொடுத்துட்டா மாயா" என்றார் கீதா.
"ஏன் மாயா! யாரது நந்தினி?அவங்க என்ன உங்க வீட்டுல வேலை பார்க்குற பொண்ணா?"என்று ஷீலா கேட்க,
பொறுத்து இருந்தது போதும் என்று எண்ணிய நந்தினி,அதித கோபத்துடன் தன் அறையிலிருந்து வெளியே வந்தவள், மாயனின் முன்னே காளி தேவியை போல உக்கரமாக வந்து நின்றாள்.
திடிரென்று தன் முன் வந்து நின்ற நந்தினியை பார்த்த ஷீலா, "மாயா யார் இவங்க?" என்று கேட்க, "இவ தான் என் மருமகள் நந்தினி" என்றார் கீதா.
"மருமகளா! அப்படினா மாயா உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுதா!?" என்று ஷீலா கேட்க,"ம்... ஒரு முறை" என்று அலுப்பாகச் சொன்னான் மாயன்.
வீட்டுக்குள் வந்ததிலிருந்து நந்தினி பக்கமே திரும்பாமல் இருந்த மாயனை கடுப்பாக நந்தினி முறைக்க, "என்ன ஒரு முறையா!? ஏன் மாயா, அப்போ நாங்க மட்டும் என்ன பத்து முறையா கல்யாணம் பண்ணிப்போம்?" என்று கிண்டலாகக் கேட்டாள் ஷீலா.
"மாயா! என்ன இதெல்லாம்!? யாரு இவங்க?" என்று நந்தினி கேட்க,
"யாரா இருந்தால் உங்களுக்கு என்ன மேடம், நீங்க எந்த உரிமையில என்கிட்ட இந்தக் கேள்வியெல்லாம் கேக்குறீங்க?" என்று அவளைச் சீறினான் மாயன்.
"என்ன கேள்வி இது? இந்த நொடிவரை உங்ககிட்ட எனக்குத் தான் எல்லா உரிமையும் இருக்கு"என்று நந்தினி சொல்ல,
"அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை, நேத்து நைட் நீங்கக் கேட்ட டிவோர்ஸ் பேப்பர்ல நான் கையெழுத்து போட்டுக் கொடுத்ததோடு நமக்குள்ள இருந்த எல்லா உரிமையும் முடிஞ்சு போச்சு" என்றான் மாயன்.
"ஓ! அதனாலதான் நான் கொடுத்த டிவோர்ஸ் பேப்பர்ல என்ன ஏதுன்னு
கேள்வி கேட்காமல் கையெழுத்து போட்டுக் கொடுத்தீங்களாக்கும்?" என்று நந்தினி தன் மனதில் இருந்த குமரலை வெளிப்படையாகக் கேட்டாள்.
"உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் நந்தினி. அதனால் தான் நீ கேட்டதும் கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன்" என்று மாயன் அலட்சியமாகப் பதில் அளிப்பதை நந்தினி
எதிர்பார்க்கவில்லை.
"ஏன் அத்த! ஒரு பொண்டாட்டி புருஷன் கிட்ட டிவோர்ஸ் கேட்டா ஏன் எதுக்குன்னு காரணத்தைக் கூட உங்க புள்ள கேட்கமாட்டாரா?" என்று நந்தினி கேட்க, நந்தினி கண் முன்னே தன் விரலைச் சுண்டி அவளை தன் பக்கம் அழைத்தான் மாயன்.
"அங்க என்ன கேள்வி? என் அம்மா கிட்ட உனக்கு எந்தப் பேச்சும் இனி இருக்கக் கூடாது. என் அம்மாவைக் கேட்டா நீ எனக்கு டிவோர்ஸ் பேப்பர் அனுப்புன. இல்ல! வக்கிலை போய்ப் பாக்குறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தையாவது சொன்னியா?" என்று மாயன் கேட்க,
"சரி...உங்க யார்கிட்டயும் நான் சொல்லல தான், ஆனா எதுக்காக உங்ககிட்ட விவாகரத்து கேட்டேன்னு நீங்க யோசிக்க மாட்டீங்களா?" என்று கேட்டாள் நந்தினி.
"உன் மேல எனக்கு எவ்வளவு காதல் இருக்குன்னு, சாரி! எவ்வளவு காதல் இருந்துச்சுன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஏன்! என் அம்மாவும் உன்ன பெத்த பொண்ணு மாதிரி தான் பார்த்துக்கிட்டு இருக்காங்கன்னும் உனக்கு நல்லா தெரியும். அப்படி இருக்கும்போது உனக்கு என்ன பிரச்சனைன்னு நீயே எங்க கிட்ட சொல்லாதபோது! நாங்க ஏன் அதைத் தெரிஞ்சுக்க ஆசை படனும்" என்று கேட்டான் மாயன்.
"இங்க பாருங்க! நான் உங்ககிட்ட விவாகரத்து கேட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு" என்று நந்தினி சொல்ல்,
"அப்படி என்ன தான் காரணம்" என்று கவலையுடன் கேட்டார் கீதா.
"அம்மா... காரணம் என்பது அவங்களுக்கேத்த மாதிரி அவங்களே உருவாக்கிப்பாங்க, அதையெல்லாம் கேட்டு நம்ம நேரத்தை வீணாக்கிக்க வேண்டாம்.
இங்க பாருங்க நந்தினி, உங்களுக்கு நீங்கக் கேட்ட விவாகரத்தை நான் கொடுத்துட்டேன்.
இதுக்கு மேல உங்களுக்கு இஷ்டம் இருந்தால் இந்த வீட்டில் இருங்க. ஜீவனாம்சமா நீங்க என்ன கேக்குறீங்களோ நான் அதைக் கொடுக்குறேன்.
எவ்வளவு சீக்கிரம் நாங்க இந்த வீட்ல இருந்து கிளம்ப முடியுமோ நாங்க கிளம்புறோம். இனியாவது என் மனச புரிஞ்சுகிட்டு எனக்காகக் கவலைப்படுற ஒரு பொண்ணு கூட வாழ நான் ஆசைப்படுறேன்" என்று மாயன் சொன்னதும்,
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நந்தினி சட்டென்று மாயனின் சட்டைக்காலரை கோவமாகப் பற்றிக்கொண்டவள்,
"என்ன!? உங்களுக்காகக் கவலைப்படற பொண்ண பாக்கறீங்களா!?, டேய் மடையா, நீ நல்லா இருக்கணும்னு, உன்ன நெனச்சு கவலைப்பட்டு தாண்டா நான் உன்கிட்ட விவாகரத்து கேட்டேன்" என்று உண்மையைக் கூறினாள் நந்தினி.
"இது என்ன புது கதை!? நான் நல்லா இருக்கிறதுக்காக நீ விவாகரத்து கேட்டியா? ஏன் இப்ப நான் நல்லா இல்லாம என்ன நாரிக்கிட்டா இருக்கேன்?" என்று மாயன் கடுப்பாகக் கேட்டான்.
"நமக்குக் கல்யாணம் முடிந்து பத்து வருஷம் ஆச்சு! இந்தப் பத்து வருஷத்துல நமக்கு ஒரு குழந்தை இல்லன்னு நம்ம போகாத ஹாஸ்பிடல் இல்ல, ஆனா போன இடத்துல எல்லாமே எனக்குத் தான் குறை இருக்குன்னு தெள்ள தெளிவா சொல்லிட்டாங்க.அப்படி இருக்கும்போது ஏன் என்னால உங்க வாழ்க்கை வீணாகணும்னு தான் நான் உங்கக்கிட்ட விவாகரத்து கேட்டேன்" என்று கண்களில் கண்ணீருடன் சொன்னாள் நந்தினி.
"ஓ! நீ விவாகரத்து கேட்டதுக்கு பின்னாடி உன்னுடைய நல்ல எண்ணம் தான் இருக்கா!? பாத்தியா! அத நான் புரிஞ்சிக்கவே இல்லையே. சரி சரி... எப்படியோ நீயே எனக்கு நல்லது பண்ணனும்னு ஆசைப்படுட்ட.
நீ நெனச்ச மாதிரியே இனி எல்லாமே எனக்கு நல்லதாகவே நடக்கட்டும்.
அம்மா...டிவோர்ஸ் கிடைத்ததும், நந்தினி கிட்ட அவங்க இங்கேயே இருக்க போறாங்களா! இல்ல இங்க இருந்து கிளம்ப போறாங்களான்னு கேட்டுச் சொல்லுங்க. நான் போய் என் டார்லிங் ஷீலாவை டிராப் பண்ணிட்டு வரேன்" என்ற மாயன், அவன் அழைத்து வந்த பெண்ணை அவனுடனேயே அழைத்துச் செல்ல, செய்வதறியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து இருந்தாள்.
Last edited: