Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
அத்தியாயம்- 12
இருவரின் இதழ்களும் ஒன்றாய் இணைந்து இருக்க, வர்மன் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவன், கைகளை ஊன்றி மேலே எழுந்து,"சாரி!" என்றப்படி வேகமாகச் சமையலறையிலிருந்து வெளியேறி இருந்தான்.
நொடி பொழுதில் நடந்த எதிர்பாராத நிகழ்வால் மகதிக்கு கண்களில் கண்ணீர் அலை கடலாகப் பொங்கியது.
சற்று முன் நடந்தை எண்ணி பார்த்த மகதிக்கு தன் மொத்த கோவமும் வர்மன் மீது திரும்பியது.
பெருகி வரும் கண்ணீரை துடைத்துக் கொண்ட மகதி, அதே ஆத்திரத்துடன் வர்மனின் அறைக்குள் செல்ல, அங்கே அவனோ கட்டிலில் அமர்ந்து இருந்தவன், தன் தலையை இருக்கரகளால் அழுத்திப் பிடித்தபடி கவலையில் முழுகி இருந்தான்.
மகதி வர்மனின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்தவள்,
"உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா! இப்படி தான் ஒரு பொம்பளைக்கிட்ட கேவலமா நடந்துப்பீங்களா!
எவ்ளோ தைரியம் இருந்தா!
என் சம்மதம் இல்லாமல்,
எனக்கு முத்தம் கொடுத்து இருப்பிங்க" என்று காட்டுக்கத்தல் கத்தியவளின் கோவத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து வர்மன் அமைதியாக இருந்தான்.
"ஹலோ உங்ககிட்ட தானே பேசுறேன்! நான் பேசுறது உங்க காதுல கேக்கலையா" என்று மகதி மீண்டும் சத்தமிட,
"உஷ்...கத்தாத!அது ஏதோ தெரியாம நடந்து போச்சு, அதான் நான் சாரி கேட்டேனே" என்று வர்மன் பொறுமையாகப் பதில் சொன்னான்.
"ஆமா ஆமா... பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு சாரி பூரின்னு சொன்னா! எல்லாம் சரியாகிடுமா!?" என்று மீண்டும் சண்டைக்கு வந்தாள் மகதி.
இத்தனை நேரம் வர்மன் அமைதியாக எடுத்துச் சொல்லியும் மகதி அவன் பேச்சைக் கேட்காமல் இருக்க, "ப்ச்... இப்போ என்ன தான் டி பண்ண சொல்லுற!" என்று பொறுமையாக இழந்தவனாகக் கர்ஜித்தான்.
"என்ன!? டி யா!?,
எவ்ளோ திமிர் இருந்தால் என்னை டி போட்டுப் பேசுவீங்க" என்று மகதி தன் கண் பார்வையால் வர்மனை எரிக்க,
வர்மனோ மேல் இருந்து கீழ் வரை அவன் கண்களால் மகதியை அளவேடுத்தவன், "ஏன்!? நீ டி தானே!?" என்றவனின் இதழ் ஓரத்தில் குறும்பு புன்னகை மலர்ந்தது.
வர்மனின் பார்வையும் அவனின் பேச்சும் மகதியின் கோவத்தை மேலும் தூண்டி விட,
"இங்க பாருங்க வர்மன், இனிமே என்கிட்ட இப்படியெல்லாம் அட்வாண்டேஜ் எடுத்துக்க ட்ரை பண்ணாதீங்க, நான் ஒரு நேரம்போல மறு நேரம் இருக்க மாட்டேன்" என்ற மகதி தன் ஆள் காட்டி விரலை வர்மனின் முகத்திற்கு முன்னே நீட்டி அவனை நேருக்கு நேர் பார்த்துத் தைரியமாக எச்சரித்தாள்.
ஆரம்பத்தில் இருந்தே வர்மன் செய்யாத தவறுக்கு மகதி அவனையே குற்றவாளியாகக் குறை சாட்டுவதை பிடிக்காத வர்மனுக்கு, இப்போது மகதி நடந்துக் கொண்ட விதம் அவனின் ஈகோவை தூண்டிவிட்டது.
வாய்க்கு வந்ததை எல்லாம் வர்மனை பற்றிப் பேசிய மகதி அந்த அறையிலிருந்து வெளியே செல்ல முயன்றவளின் கரங்களைப் பிடித்துத் தன் வசம் வர்மன் இழுக்க, மகதி அட்டை பூச்சியைப் போல வர்மனின் இதயத்தில் ஒட்டிக்கொண்டாள்.
வர்மனின் இத்தகைய செயலைச் சற்றும் எதிரிபார்க்காத மகதி, கோவமாக அவனை அடிப்பதற்காகக் கை ஓங்க! அவள் கையைப் பிடித்து லாவகமாகப் பற்றி அவளின் இடையில் தன் கைக்கொண்டு அவளை வளைத்து இழுத்து பிடித்து மீண்டும் தன் இதயத்தோடு ஒட்ட வைத்துக் கொண்டான் நடன இயக்குனரான அருள்மொழி வர்மன்.
இதுவரை பெண்களின் கண்களை மட்டுமே பார்த்துப் பேசும் வர்மனுக்குள் இப்படியொரு பரிமானம் இருக்கிறதா என்று மகதி யூகிக்கும் முன்னே வர்மன் இவர்கள் இருக்கும் அறையின் கதவை அடித்துச் சாற்றி இருந்தான்.
"என்ன பண்ணுறிங்க, கதவைத் திறங்க!" என்று மகதி வர்மனின் கைபிடியில் சிக்கிக்கொண்டு கத்த முயன்றவளின் இதழ்களில் தன் விரல் கொண்டு வருடினான் வர்மன்.
"ச்சீ கையை எடுங்க!" என்று மீண்டும் மகதி திமிறி எழுந்தவளை சட்டென்று வர்மனின் பிடியிலிருந்து விடுவித்தவன் அவளை அழுத்தமாகப் பார்த்து மெலிதாகச் சிரிக்க, "நீங்க இவ்ளோ கேவலமான ஆளா?" என்று ஆதங்கத்துடன் கத்தினாள் மகதி.
"ம்... ஆமா! நான் கேவலமான ஆள் தான், இந்தக் கேவலமான ஆளு இப்போ உன்னை என்ன பண்ண போறேன் தெரியுமா!?" என்று கேட்டுக்கொண்டே வர்மன் அடிமேல் அடி வைத்து மகதியை நெருங்கிச் செல்ல, அவளோ உண்மைக்கே வர்மனின் செயலில் பயந்து தான் போனாள்.
"ஆமா! நீ என்ன சொன்ன! உன் விருப்பம் இல்லாமல் இனிமே உனக்கு நான் முத்தம் தரக்கூடாதுன்னு தானே சொன்ன!!" என்று வர்மன் கேட்க,
"நா... நான் எப்போ அப்படி சொன்னேன்!?" என்ற மகதியின் குரலில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.
"இல்ல இல்ல!! நீ அப்படி தான் சொன்ன, உனக்கு நான் முத்தம் கொடுத்தது தப்பா தெரியல, ஆனா உன் சம்மதம் இல்லாம உனக்கு நான் முத்தம் தந்தது தான் உன்னோட கோவத்துக்கு காரணம்" என்றான் வர்மன்.
"உளராதீங்க, நான் அந்த அர்த்தத்துல சொல்லல, முதல்ல நீங்க வழியை விடுங்க, நான் வெளியே போகணும்" என்றவள் மீண்டும் அந்த அறையிலிருந்து வெளியே செல்ல எத்தணித்தவளை சுவற்றில் சாய்து தன் இருப்பக்க கைகளைக்கொண்டு மகதியை அங்கும் இங்கும் நகராமல் சிறை பிடித்து இருந்தான் வர்மன்.
"வர்மா... என்ன பண்ணுறீங்க வழியை விடுங்க" என்று மகதி கெஞ்சியதும் அவளின் இதழ்களின் மேலே தன் பார்வையை பதித்ததவன்,
"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா!?" என்று நேராகக் கேட்டதும், மகதி தன் முழு பலம்க்கொண்டு அவன் கையைத் தட்டி விட்டாள்.
"என்ன தைரியம் உங்களுக்கு, மாயன் அண்ணன் சொன்ன ஒரே காரணத்துக்காகத் தான் உங்க குழந்தை உயிரைக் காப்பாற்ற நான் இங்க உங்க பையனுக்கு அம்மாவா நடிக்க வந்து இருக்கேன்,
மற்றபடி உங்கள நான் ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிகிட்டு அருணுக்கு சித்தியா இந்த வீட்டுல உலா வர நான் ஆசைப்பட்டு இங்க வரல" என்ற மகதி அதே கோபத்துடன் வர்மனின் அறையிலிருந்து வெளியேறி இருந்தாள்.
மகதியின் கோவத்திலும் அர்த்தம் இருக்கிறது, ஒரு வேளை அருணை பற்றிய உண்மையை மகதியிடம் வர்மன் சொல்லி இருந்தால் கூட மகதியே வர்மனை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு வர்மனிடம் சரண் அடைந்து இருப்பாள்.
ஆனால் வர்மனோ இந்த நொடிவரை அருண் யார் என்ற உண்மையை மறைத்து இருக்க, மகதிக்கோ தன் மகனைப் பார்த்துக்கொள்வதற்காக வர்மன் தன்னை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் கேக்கிறான் என்று எண்ணிக்கொண்டாள் மகதி.
மகதி வர்மனை மேலும் மேலும் அவமானப் படுத்துவதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத வர்மன்னுக்கு மகதியை சீண்டி பார்ப்பதில் பேரானந்தம் தோன்றியது.
வர்மனின் அறையிலிருந்து கண்ணீரை துடைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்ற மகதியை பார்த்து," என்ன பாப்பா சாப்பிட்டியா!?" என்று கேட்டான் மாயன்.
"ம்... சாப்பிட்டேன் அண்ணா" என்ற மகதி சிறுவனின் அருகே சென்று அமர்ந்தவளின் கண்கள் இரண்டும் ரத்த சிவப்பாக இருந்தது.
"அம்மா... ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு" என்று, தனக்கு பார்வையில்லை என்றாலும் மகதியின் குரலை வைத்தே அவளின் நிலையை அறிந்து சரியாகக் கேட்டான் அருண்.
"அது... அது ஒன்னும் இல்ல அருண்! பிரிட்ஜ்ல ஐஸ் கிரீம் இருந்துச்சு, அதைச் சாப்பிட்டு தொண்டை கட்டிக்கிச்சு" என்று மகதி சூழ்நிலையைச் சமாளித்தாள்.
"ஆமாமா!! உன் அம்மா இன்னைக்கு ஐஸ்கிரீம் தான் சாப்பிட்டு இருக்காங்க அருண்" என்று கிண்டலாகச் சொல்லிக்கொண்டே வர்மன் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர, வர்மனின் பேச்சைக் கேட்டு மகதியின் முகத்தில் மேலும் கோவம் அதிகரித்தது.
"என்ன ஐஸ் கிரீமா!?" என்று மாயன் கேட்க, "ஆமா ஆமா ஐஸ் கிரீம் தான், அதுவும் ஸ்ட்ராபெரி ஃபிளேவர் மச்சான்" என்ற வர்மனின் பார்வை மகதியை விட்டு அகலாமல் இருந்தது.
"என்னது மச்சானா!? என்னடா உறவு முறை எல்லாம் வச்சி புதுசா அழைக்கிற மாதிரி இருக்கு!" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் மாயன்.
"ஏன் மச்சான்!? நான் உன்னை மச்சான்னு கூப்பிடக் கூடாதா?" என்று வர்மன் கேட்க,
"தாராளமா கூப்பிடு வர்மா! என்கிட்ட உனக்கு இல்லாத உரிமையா!" என்ற மாயன் தன் நண்பனின் தோளில் நட்பாகத் தட்டிக்கொடுத்தான்.
"இப்போ எல்லாம் உரிமையை அவங்க கொடுக்கலைன்னா கூட! நம்மளே அந்த உரிமையை எடுத்துக்கணும் மச்சான்" என்ற வர்மனின் வார்த்தையில் உள்ள சூசகத்தை மாயன் அறிந்து கொண்டவன் தன் நண்பனின் நடவடிக்கையை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்து தான் இருந்தான்.
வர்மன் பேசப்பேச மகதியின் முகம் இறுகிக் கொண்டே போக, மகதியின் அருகில் இருந்த சிறுவனோ மகதியை தன் அன்னையாக எண்ணி அவள் கைவிரல்களை அன்பாக வருடினான்
மகதியின் இரு கரங்களையும் பிடித்து அவள் கைகளில் தன் முகத்தைப் புதைத்த சிறுவன் மகதிக்கு முத்தம் கொடுக்க, வர்மனின் பேச்சை எல்லாம் மறந்து அருணின் பாசத்திற்கு மகதி
அடிமையாகி இருந்தாள்.
மகதியின் வருகையால் நிம்மதி அடைந்த ராஜன்,"மருமகளே! எனக்கு அசதியா இருக்கு. நான் தூங்கப்போகிறேன்" என்றப்படி அவர் அறைக்குச் செல்ல,
"அம்மா அம்மா எனக்கும் தூக்கம் வருது" என்ற சிறுவனை,"வா அருண் நான் உன்ன அழைச்சிட்டு போயி தூங்க வைக்கிறேன்" என்று வர்மன் சொல்ல,
"ஹ்ம் ஹ்ம் அம்மா தான் என் கையைப் பிடிச்சு என்னை நடக்க வச்சு ரூமுக்கு அழைச்சிட்டு போகனும்" என்றான் அருண்.
"அருண்! உங்க அம்மா இன்னும் சாப்பிடல, அவங்க சாப்பிட்ட பிறகு ரூமுக்கு வருவாங்க.நீ வா அதுக்குள்ள நான் உன்னைத் தூங்க வைக்கிறேன்" என்று வர்மன் சொல்ல,"என்ன நீ இன்னும் சாப்பிடலையா பாப்பா!? "என்று கேட்டான் மாயன்.
"எனக்குப் பசிக்கல" என்ற மகதி சிறுவனை வர்மனிடமிருந்து தன் வசம் வாங்கிகொண்டவள்,
"நீ வா அருண் நானே உன்னைத் தூங்க வைக்கிறேன்" என்றவள் சிறுவனைத் தூக்கிச் சென்று வர்மனின் கட்டிலில் அருணை படுக்க வைத்தாள்.
"அம்மா நீங்க என்ன டிரஸ் போட்டு இருக்கீங்க!?" என்று சிறுவன் சம்பந்தமே இல்லாமல் கேள்வியை எழுப்ப,
"நான் சுடிதார் போட்டு இருக்கேன்"
என்று மகதி சொன்னதும், தத்தி தடவி மகதியின் சுடிதார் ஷாலை எடுத்துத் தன் கையில் சுற்றிக் கொண்டான் சிறுவன்.
இருவரின் இதழ்களும் ஒன்றாய் இணைந்து இருக்க, வர்மன் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவன், கைகளை ஊன்றி மேலே எழுந்து,"சாரி!" என்றப்படி வேகமாகச் சமையலறையிலிருந்து வெளியேறி இருந்தான்.
நொடி பொழுதில் நடந்த எதிர்பாராத நிகழ்வால் மகதிக்கு கண்களில் கண்ணீர் அலை கடலாகப் பொங்கியது.
சற்று முன் நடந்தை எண்ணி பார்த்த மகதிக்கு தன் மொத்த கோவமும் வர்மன் மீது திரும்பியது.
பெருகி வரும் கண்ணீரை துடைத்துக் கொண்ட மகதி, அதே ஆத்திரத்துடன் வர்மனின் அறைக்குள் செல்ல, அங்கே அவனோ கட்டிலில் அமர்ந்து இருந்தவன், தன் தலையை இருக்கரகளால் அழுத்திப் பிடித்தபடி கவலையில் முழுகி இருந்தான்.
மகதி வர்மனின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்தவள்,
"உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா! இப்படி தான் ஒரு பொம்பளைக்கிட்ட கேவலமா நடந்துப்பீங்களா!
எவ்ளோ தைரியம் இருந்தா!
என் சம்மதம் இல்லாமல்,
எனக்கு முத்தம் கொடுத்து இருப்பிங்க" என்று காட்டுக்கத்தல் கத்தியவளின் கோவத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து வர்மன் அமைதியாக இருந்தான்.
"ஹலோ உங்ககிட்ட தானே பேசுறேன்! நான் பேசுறது உங்க காதுல கேக்கலையா" என்று மகதி மீண்டும் சத்தமிட,
"உஷ்...கத்தாத!அது ஏதோ தெரியாம நடந்து போச்சு, அதான் நான் சாரி கேட்டேனே" என்று வர்மன் பொறுமையாகப் பதில் சொன்னான்.
"ஆமா ஆமா... பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு சாரி பூரின்னு சொன்னா! எல்லாம் சரியாகிடுமா!?" என்று மீண்டும் சண்டைக்கு வந்தாள் மகதி.
இத்தனை நேரம் வர்மன் அமைதியாக எடுத்துச் சொல்லியும் மகதி அவன் பேச்சைக் கேட்காமல் இருக்க, "ப்ச்... இப்போ என்ன தான் டி பண்ண சொல்லுற!" என்று பொறுமையாக இழந்தவனாகக் கர்ஜித்தான்.
"என்ன!? டி யா!?,
எவ்ளோ திமிர் இருந்தால் என்னை டி போட்டுப் பேசுவீங்க" என்று மகதி தன் கண் பார்வையால் வர்மனை எரிக்க,
வர்மனோ மேல் இருந்து கீழ் வரை அவன் கண்களால் மகதியை அளவேடுத்தவன், "ஏன்!? நீ டி தானே!?" என்றவனின் இதழ் ஓரத்தில் குறும்பு புன்னகை மலர்ந்தது.
வர்மனின் பார்வையும் அவனின் பேச்சும் மகதியின் கோவத்தை மேலும் தூண்டி விட,
"இங்க பாருங்க வர்மன், இனிமே என்கிட்ட இப்படியெல்லாம் அட்வாண்டேஜ் எடுத்துக்க ட்ரை பண்ணாதீங்க, நான் ஒரு நேரம்போல மறு நேரம் இருக்க மாட்டேன்" என்ற மகதி தன் ஆள் காட்டி விரலை வர்மனின் முகத்திற்கு முன்னே நீட்டி அவனை நேருக்கு நேர் பார்த்துத் தைரியமாக எச்சரித்தாள்.
ஆரம்பத்தில் இருந்தே வர்மன் செய்யாத தவறுக்கு மகதி அவனையே குற்றவாளியாகக் குறை சாட்டுவதை பிடிக்காத வர்மனுக்கு, இப்போது மகதி நடந்துக் கொண்ட விதம் அவனின் ஈகோவை தூண்டிவிட்டது.
வாய்க்கு வந்ததை எல்லாம் வர்மனை பற்றிப் பேசிய மகதி அந்த அறையிலிருந்து வெளியே செல்ல முயன்றவளின் கரங்களைப் பிடித்துத் தன் வசம் வர்மன் இழுக்க, மகதி அட்டை பூச்சியைப் போல வர்மனின் இதயத்தில் ஒட்டிக்கொண்டாள்.
வர்மனின் இத்தகைய செயலைச் சற்றும் எதிரிபார்க்காத மகதி, கோவமாக அவனை அடிப்பதற்காகக் கை ஓங்க! அவள் கையைப் பிடித்து லாவகமாகப் பற்றி அவளின் இடையில் தன் கைக்கொண்டு அவளை வளைத்து இழுத்து பிடித்து மீண்டும் தன் இதயத்தோடு ஒட்ட வைத்துக் கொண்டான் நடன இயக்குனரான அருள்மொழி வர்மன்.
இதுவரை பெண்களின் கண்களை மட்டுமே பார்த்துப் பேசும் வர்மனுக்குள் இப்படியொரு பரிமானம் இருக்கிறதா என்று மகதி யூகிக்கும் முன்னே வர்மன் இவர்கள் இருக்கும் அறையின் கதவை அடித்துச் சாற்றி இருந்தான்.
"என்ன பண்ணுறிங்க, கதவைத் திறங்க!" என்று மகதி வர்மனின் கைபிடியில் சிக்கிக்கொண்டு கத்த முயன்றவளின் இதழ்களில் தன் விரல் கொண்டு வருடினான் வர்மன்.
"ச்சீ கையை எடுங்க!" என்று மீண்டும் மகதி திமிறி எழுந்தவளை சட்டென்று வர்மனின் பிடியிலிருந்து விடுவித்தவன் அவளை அழுத்தமாகப் பார்த்து மெலிதாகச் சிரிக்க, "நீங்க இவ்ளோ கேவலமான ஆளா?" என்று ஆதங்கத்துடன் கத்தினாள் மகதி.
"ம்... ஆமா! நான் கேவலமான ஆள் தான், இந்தக் கேவலமான ஆளு இப்போ உன்னை என்ன பண்ண போறேன் தெரியுமா!?" என்று கேட்டுக்கொண்டே வர்மன் அடிமேல் அடி வைத்து மகதியை நெருங்கிச் செல்ல, அவளோ உண்மைக்கே வர்மனின் செயலில் பயந்து தான் போனாள்.
"ஆமா! நீ என்ன சொன்ன! உன் விருப்பம் இல்லாமல் இனிமே உனக்கு நான் முத்தம் தரக்கூடாதுன்னு தானே சொன்ன!!" என்று வர்மன் கேட்க,
"நா... நான் எப்போ அப்படி சொன்னேன்!?" என்ற மகதியின் குரலில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.
"இல்ல இல்ல!! நீ அப்படி தான் சொன்ன, உனக்கு நான் முத்தம் கொடுத்தது தப்பா தெரியல, ஆனா உன் சம்மதம் இல்லாம உனக்கு நான் முத்தம் தந்தது தான் உன்னோட கோவத்துக்கு காரணம்" என்றான் வர்மன்.
"உளராதீங்க, நான் அந்த அர்த்தத்துல சொல்லல, முதல்ல நீங்க வழியை விடுங்க, நான் வெளியே போகணும்" என்றவள் மீண்டும் அந்த அறையிலிருந்து வெளியே செல்ல எத்தணித்தவளை சுவற்றில் சாய்து தன் இருப்பக்க கைகளைக்கொண்டு மகதியை அங்கும் இங்கும் நகராமல் சிறை பிடித்து இருந்தான் வர்மன்.
"வர்மா... என்ன பண்ணுறீங்க வழியை விடுங்க" என்று மகதி கெஞ்சியதும் அவளின் இதழ்களின் மேலே தன் பார்வையை பதித்ததவன்,
"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா!?" என்று நேராகக் கேட்டதும், மகதி தன் முழு பலம்க்கொண்டு அவன் கையைத் தட்டி விட்டாள்.
"என்ன தைரியம் உங்களுக்கு, மாயன் அண்ணன் சொன்ன ஒரே காரணத்துக்காகத் தான் உங்க குழந்தை உயிரைக் காப்பாற்ற நான் இங்க உங்க பையனுக்கு அம்மாவா நடிக்க வந்து இருக்கேன்,
மற்றபடி உங்கள நான் ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிகிட்டு அருணுக்கு சித்தியா இந்த வீட்டுல உலா வர நான் ஆசைப்பட்டு இங்க வரல" என்ற மகதி அதே கோபத்துடன் வர்மனின் அறையிலிருந்து வெளியேறி இருந்தாள்.
மகதியின் கோவத்திலும் அர்த்தம் இருக்கிறது, ஒரு வேளை அருணை பற்றிய உண்மையை மகதியிடம் வர்மன் சொல்லி இருந்தால் கூட மகதியே வர்மனை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு வர்மனிடம் சரண் அடைந்து இருப்பாள்.
ஆனால் வர்மனோ இந்த நொடிவரை அருண் யார் என்ற உண்மையை மறைத்து இருக்க, மகதிக்கோ தன் மகனைப் பார்த்துக்கொள்வதற்காக வர்மன் தன்னை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் கேக்கிறான் என்று எண்ணிக்கொண்டாள் மகதி.
மகதி வர்மனை மேலும் மேலும் அவமானப் படுத்துவதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத வர்மன்னுக்கு மகதியை சீண்டி பார்ப்பதில் பேரானந்தம் தோன்றியது.
வர்மனின் அறையிலிருந்து கண்ணீரை துடைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்ற மகதியை பார்த்து," என்ன பாப்பா சாப்பிட்டியா!?" என்று கேட்டான் மாயன்.
"ம்... சாப்பிட்டேன் அண்ணா" என்ற மகதி சிறுவனின் அருகே சென்று அமர்ந்தவளின் கண்கள் இரண்டும் ரத்த சிவப்பாக இருந்தது.
"அம்மா... ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு" என்று, தனக்கு பார்வையில்லை என்றாலும் மகதியின் குரலை வைத்தே அவளின் நிலையை அறிந்து சரியாகக் கேட்டான் அருண்.
"அது... அது ஒன்னும் இல்ல அருண்! பிரிட்ஜ்ல ஐஸ் கிரீம் இருந்துச்சு, அதைச் சாப்பிட்டு தொண்டை கட்டிக்கிச்சு" என்று மகதி சூழ்நிலையைச் சமாளித்தாள்.
"ஆமாமா!! உன் அம்மா இன்னைக்கு ஐஸ்கிரீம் தான் சாப்பிட்டு இருக்காங்க அருண்" என்று கிண்டலாகச் சொல்லிக்கொண்டே வர்மன் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர, வர்மனின் பேச்சைக் கேட்டு மகதியின் முகத்தில் மேலும் கோவம் அதிகரித்தது.
"என்ன ஐஸ் கிரீமா!?" என்று மாயன் கேட்க, "ஆமா ஆமா ஐஸ் கிரீம் தான், அதுவும் ஸ்ட்ராபெரி ஃபிளேவர் மச்சான்" என்ற வர்மனின் பார்வை மகதியை விட்டு அகலாமல் இருந்தது.
"என்னது மச்சானா!? என்னடா உறவு முறை எல்லாம் வச்சி புதுசா அழைக்கிற மாதிரி இருக்கு!" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் மாயன்.
"ஏன் மச்சான்!? நான் உன்னை மச்சான்னு கூப்பிடக் கூடாதா?" என்று வர்மன் கேட்க,
"தாராளமா கூப்பிடு வர்மா! என்கிட்ட உனக்கு இல்லாத உரிமையா!" என்ற மாயன் தன் நண்பனின் தோளில் நட்பாகத் தட்டிக்கொடுத்தான்.
"இப்போ எல்லாம் உரிமையை அவங்க கொடுக்கலைன்னா கூட! நம்மளே அந்த உரிமையை எடுத்துக்கணும் மச்சான்" என்ற வர்மனின் வார்த்தையில் உள்ள சூசகத்தை மாயன் அறிந்து கொண்டவன் தன் நண்பனின் நடவடிக்கையை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்து தான் இருந்தான்.
வர்மன் பேசப்பேச மகதியின் முகம் இறுகிக் கொண்டே போக, மகதியின் அருகில் இருந்த சிறுவனோ மகதியை தன் அன்னையாக எண்ணி அவள் கைவிரல்களை அன்பாக வருடினான்
மகதியின் இரு கரங்களையும் பிடித்து அவள் கைகளில் தன் முகத்தைப் புதைத்த சிறுவன் மகதிக்கு முத்தம் கொடுக்க, வர்மனின் பேச்சை எல்லாம் மறந்து அருணின் பாசத்திற்கு மகதி
அடிமையாகி இருந்தாள்.
மகதியின் வருகையால் நிம்மதி அடைந்த ராஜன்,"மருமகளே! எனக்கு அசதியா இருக்கு. நான் தூங்கப்போகிறேன்" என்றப்படி அவர் அறைக்குச் செல்ல,
"அம்மா அம்மா எனக்கும் தூக்கம் வருது" என்ற சிறுவனை,"வா அருண் நான் உன்ன அழைச்சிட்டு போயி தூங்க வைக்கிறேன்" என்று வர்மன் சொல்ல,
"ஹ்ம் ஹ்ம் அம்மா தான் என் கையைப் பிடிச்சு என்னை நடக்க வச்சு ரூமுக்கு அழைச்சிட்டு போகனும்" என்றான் அருண்.
"அருண்! உங்க அம்மா இன்னும் சாப்பிடல, அவங்க சாப்பிட்ட பிறகு ரூமுக்கு வருவாங்க.நீ வா அதுக்குள்ள நான் உன்னைத் தூங்க வைக்கிறேன்" என்று வர்மன் சொல்ல,"என்ன நீ இன்னும் சாப்பிடலையா பாப்பா!? "என்று கேட்டான் மாயன்.
"எனக்குப் பசிக்கல" என்ற மகதி சிறுவனை வர்மனிடமிருந்து தன் வசம் வாங்கிகொண்டவள்,
"நீ வா அருண் நானே உன்னைத் தூங்க வைக்கிறேன்" என்றவள் சிறுவனைத் தூக்கிச் சென்று வர்மனின் கட்டிலில் அருணை படுக்க வைத்தாள்.
"அம்மா நீங்க என்ன டிரஸ் போட்டு இருக்கீங்க!?" என்று சிறுவன் சம்பந்தமே இல்லாமல் கேள்வியை எழுப்ப,
"நான் சுடிதார் போட்டு இருக்கேன்"
என்று மகதி சொன்னதும், தத்தி தடவி மகதியின் சுடிதார் ஷாலை எடுத்துத் தன் கையில் சுற்றிக் கொண்டான் சிறுவன்.