• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
28
அத்தியாயம் - 11


மகதி மாயனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டுக்கொண்டு இருக்க, வர்மனின் பார்வை இம்மி அளவும் அவளிடமிருந்து நகராமல் இருந்தது.

"பாப்பா! அருணுக்கு எப்போ என்ன மருந்து தரணும்னு நானே எல்லா மருந்து டப்பா மேலையும் தெளிவா எழுதித் தரேன்"என்ற மாயன், மகதியை விழிகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்த வர்மனையும் கவனித்தான்.

"சரி அண்ணா! அருண் தூங்கிட்டான், அவனுக்கு என்ன டின்னர் ரெடி பண்ணும்னு சொன்னிங்கனா, நான் அதைப் பண்ணிடுவேன்" என்ற மகதி தன்னையே பார்த்துக்கொண்டு இருக்கும் வர்மனை கோவமாக முறைத்தாள்.

மகதி தன்னை முறைப்பதோ, மாயன் தன்னை பார்ப்பதையோ பெரிதாக எடுத்துக்கொள்ளத வர்மன்,
தன் மீது மகதி கொண்ட காதலை நினைத்து மனதளவில் பெருமிதம் அடைந்தான்.

வர்மனின் இந்தப் பார்வை மகதியின் உள்ளத்தில் மீண்டும் இனம் புரியாத ஈரப்பை உண்டாக்கினாலும்! மகதியை பொறுத்தவரை வர்மன் தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணை மனமுடித்து இருக்கின்றான் என்று நம்பியவள் வர்மனை அருவருப்பாக முறைத்தபடி வீட்டுக்குள் சென்று விட்டாள்.

மகதி சென்றபிறகும் அவள் போன பாதையைப் பார்த்துக்கொண்டு இருந்த வர்மனின் முன்னே தன் கைகளை அசைத்து,"க்கும்" என்று குரலைச் செருமினான் மாயன்.

"என்ன வர்மா! பார்வையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு! என்ன செய்தி!" என்று மாயன் கேட்டதும் வர்மனின் இதழ்களின் நடுவே புன்னகை ஒளிந்துகொண்டது.

பல வருடங்கள் கடந்து மீண்டும் வர்மனின் முகத்தில் தெரிந்த மகிழிச்சியை பார்த்து ஒரு நண்பனாக மாயனும் நெகிழிச்சி அடைந்தான்.

"என்ன வர்மா! ராஜன் சார்க்கிட்ட சொல்லி என் சித்தப்பாகிட்ட பேசச் சொல்லிடவா!" என்று மகதியின் திருமணத்தைப் பற்றி மாயன் கேட்க,

"அவரசப்படாத மாயா! பெரியவுங்ககிட்ட பேசுறதுக்கு முன்னாடி, மகதிகிட்ட நான் ரம்யாவை பற்றிப் பேசணும்" என்றான் வர்மன்.

தன் நண்பன் சொல்வதிலும் அர்த்தம் உள்ளது என்று உணர்ந்த மாயன், "ஆமா டா! நீ சொல்லுறதும் சரிதான், முதல்ல அருணை பற்றி மகதிகிட்ட பேசு"
என்றான்.

"ம்...நாங்க ரெண்டு பேரும் பேசின பிறகு, மகாலிங்கம் மாமாகிட்ட அப்பாவைப் பேசச் சொல்லலாம்" என்று வர்மன் சொல்ல, அதே சமயம் மாயனின் கைபேசி அலறியது.

"வர்மா! அம்மா தான் போன் பண்ணுறாங்க" என்ற மாயன் தன் கைபேசியுடன் தோட்டத்து பக்கம் செல்ல,

மீண்டும் மாயனின் காரில் ஏறி அமர்ந்த வர்மன், மகதி இவனை நினைத்து எழுதிய கைக்குறிப்பு புத்தகத்தை வாசித்தவனின் மனதில் மகதி மீது அவன் கொண்ட மரியாதை பல மடங்காக உயர்ந்தது.

காரில் அமர்ந்து இருந்த வர்மனை தேடி வந்த மாயன், "வர்மா! வீட்டுல ஒரு சின்னப் பிரச்சனை, நான் உடனே கிளம்புறேன்" என்றவனின் முகத்தில் பதற்றம் குடிக்கொண்டு இருந்தது.

"என்னடா என்ன பிரச்சனை! நான் வேணும்னா உன்கூட வரட்டுமா!?" என்று வர்மன் கேட்க,

"வேண்டாம் வர்மா! நான் பார்த்துக்குறேன், நீ அருணை ஜாக்கிரதையா பார்த்துக்கோ, மகதிகிட்ட சொல்லிடு"என்ற மாயன் வேகமாக வர்மனின் வீட்டிலிருந்து தன் காரை எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு பறந்தான்.

மாயன் சென்றதும், வர்மன் அவன் வீட்டுக்குள் நுழைந்தவன் நேராகத் தன் தந்தையின் அறைக்கு அவரைத் தேடி சென்றான்.

"என்ன வர்மா! மாயன் சொன்னதை கேட்டியா" என்று ராஜன் கேட்க, "மகதி என் மேல இவ்வளவு பிரியம் வச்சிருப்பானு நான் நினைத்தே பார்க்கல அப்பா" என்றான் வர்மன்.

"வர்மா... நடக்குறத எல்லாம் வச்சி பார்த்தால், மகதி இங்க வந்ததே உனக்காகவும் அருணுக்காகவும் தான்னு தோணுது" என்ற ராஜனின் மனதில் எப்படியாவது மகதியை வர்மனுக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

"எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல அப்பா! ஆனா நான் மகதிகிட்ட சில விஷயங்கள் வெளிப்படையா பேசணும், நம்ம அருணைப் பற்றி எல்லா உண்மையும் மகதிக்கு தெரிந்த பின்னாடி தான் எங்க கல்யாணத்தை பற்றி நீங்க முடிவெடுக்கணும்"என்ற வர்மனை பார்த்துச் சம்மதமாகத் தலைசைத்தார் ராஜன்.

"அப்பா...அருணுக்கு இப்படி ஆனதுல இருந்தே எனக்குப் பிரஷர் அதிகமாகிடுது, ஆனா இப்போ அருணுக்காக இங்க வந்த மகதியை பற்றித் தெரிந்த பின்னாடி மனசுக்குள்ள ஏதோ இனம்புரியாத இன்பம் பரவுற மாதிரி இருக்கு" என்ற வர்மனின் வார்த்தைகளைக் கேட்டு ராஜனுக்கு சிரிப்பு தான் வந்தது.

"என்ன அப்பா நீங்க! நான் என் மனசுல இருக்குற பீலிங் பற்றிப் பேசினால் நீங்க என்ன இப்படி சிரிக்கிறீங்க!?" என்று வர்மன் கேட்டதும், தன் மகனை நட்போடு கட்டிக்கொண்டார் ராஜன்.

"வர்மா! காதலிப்பதை விடவே காதலிக்கப்படுவது தான் அழகு, அதுவும் மகதிக்கு உன் மீது இருக்குற காதலை நினைத்துப் பார்க்கவே எனக்கு ஆச்சிரியமா இருக்கு வர்மா,

பத்து வருஷம்ன்னா சும்மா இல்லை வர்மா!! அந்தப் பொண்ணோட பள்ளிக் கல்லூரி வாழ்க்கையில கூட அவ உன்னை மட்டுமே நினைத்து வாழ்ந்துட்டு இருந்து இருக்காள், இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் வர்மா" என்ற தன் தந்தையின் சொற்களில் உள்ள உண்மையை வர்மனும் அறிந்து தான் இருந்தான்.

"எப்படியோ வர்மா! நான் மனதார மகதியை மருமகளேன்னு கூப்பிட்ட என் பாசம் இனி பொய்யாகாது என்ற நம்பிக்கை எனக்கும் வந்து விட்டது" என்ற தன் தந்தையை பார்த்துச் சிரித்த வண்ணமாகவே வெளியேறினான் வர்மன்.

மகதியும் அருணும் தன் அறையில் இருப்பதை மறந்து வர்மன் உள்ளே நுழைய, அப்போது தான் மகதி குளியல் அறையிலிருந்து முகத்தைத் துடைத்துக்கொண்டே வெளியே வந்தாள்.

"ஹலோ...ரூம்குள்ள வரும்போது கதவைத் தட்டிட்டு வரணும் என்ற இங்கிதம் கூடவா இல்லை!?" என்ற மகதியின் கோவமான குரலைக் கேட்டபிறகு தான், தன் அறையில் மகதி இருப்பதே வர்மனுக்கு நினைவு வந்தது.

அருண் கட்டிலில் நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருப்பதை பார்த்த வர்மன்,"சாரி...நீ இங்க இருக்குறது என் நினைவுல இல்லை, அதான் கதவைத் தட்டாம உள்ள வந்துட்டேன், ஐயம் சாரி!" என்ற வர்மன், தன் அறையிலிருந்து வெளியே செல்ல முயன்றவனின் வார்த்தையில் மகதிக்கு சட்டென்று
கண்கள் கலங்கியது.

மகதியின் கலங்கிய விழிகளைப் பார்த்தப்படி தன் அறையிலிருந்து வெளியே சென்றவனுக்கு அவளின் கண்ணீருக்கான அர்த்தம் விளங்கவில்லை.

"நான் இருக்குறது உங்க நினைவுலேயே இல்லாம தானே வேற ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி,அவகூட குடும்பம் நடத்தி ஒரு குழந்தையைப் பெத்து எடுத்து இருக்கீங்க வர்மா" என்று மகதி ஆதங்கத்துடன் புலம்பும் குரல் வர்மன் காதிலும் விழுந்தது.

மகதியின் கண்ணீருக்கு வர்மன் தன்னை மறந்து விட்டான் என்பதும், அவள் காதலை ஏமாற்றி இருக்கின்றான் என்ற தவறான புரிதலும் தான் காரணம் என்று அறிந்த வர்மன் முதலில் மகதியுடம் சில உண்மைகளைப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.

இதே சமயம் வர்மன் வீட்டிலிருந்து மாயன் தன் வீட்டுக்குள் நுழைந்தவன் எதிரே அவன் அம்மா கண்ணீருடன் அமர்ந்து இருந்தார்.

"அம்மா என்னாச்சு! இப்போ ஏன் அழறீங்க!" என்று எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் தன்னை சமாதானம் செய்யும் மாயனை பார்த்துக் கீதா மேலும் கண்கள் கலங்கினார்.

"மாயா... நம்ம அவளுக்கு என்னடா குறை வச்சோம்! அவ மனசு கஷ்ட்டப்படுற மாதிரி நான் ஒரு வார்த்தைக்கூட பேச மாட்டேனே! இருந்தும் அவ ஏன் டா இப்படியொரு முடிவு எடுத்து இருக்கிறாள்!?" என்று ஆதங்கத்துடன் கேட்டார் கீதா.

"ப்ச் அம்மா! முதல்ல நீங்க அழறதை நிறுத்துங்க, நந்து வரட்டும்! நான் அவகிட்ட பேசுறேன்" என்ற மாயனின் கையில் நந்தினி அனுப்பிய விவாகரத்து பத்திரத்தைக் கொடுத்தார் கீதா.

"இதுக்கு மேல பேச என்ன இருக்கு மாயா! இவ மட்டும் தனியா போய் வக்கீலைப் பார்த்து உனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கான்னா! அப்போ அவளுக்கு நீ வேண்டாமுன்னு தானே அர்த்தம்!?"
என்ற கீதாவின் கண்களில் கோவத்தை தாண்டிக் கவலை தான் நிறைந்து இருந்தது.

"அம்மா... நான் தான் சொல்லுறேனே, நந்தினி வரட்டும், நான் அவகிட்ட பேசிக்கிறேன். நீங்க இந்த விஷயத்துல தலையிடாதீங்க. முக்கியமா நீங்க எங்கள நினைத்துக் கவலைப்படாதீங்க"
என்ற மாயன் விவாகரத்து பத்திரத்தை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தவனை பாவமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார் கீதா.

அன்றைய தினம் இரவு நேரம் வேலையிலிருந்து தாமதமாகத் தான் நந்தினி வீட்டுக்குள் நுழைந்தாள்.

நந்தினி வரும் முன்னே கீதா அவர் அறைக்கு உறங்கச் சென்று இருக்க,
மாயன் தங்கள் அறையில் கட்டிலில் படுத்து இருப்பதை பார்த்தப்படி நந்தினி உள்ளே நுழைந்தவள், குளியலறை சென்று தன்னை சுத்தம் செய்துகொண்டு வெளியே வந்தாள்.

"நந்தினி! சாப்பிடலாம் வா" என்று மாயன் தன் மனைவியை அழைக்க,
"நான் வெளியே சாப்பிடிட்டேன்" என்றவள், மேசைமேல் இருக்கும் அவள் அனுப்பிய விவாகரத்து பத்திரத்தைப் பார்த்தாள்.

மாயன் இதைப் பற்றித் தான் பேசக் காத்து இருக்கின்றான் என்று நினைத்த நந்தினியிடம் அவனாக விவகாரத்தைப் பற்றி வாயைத் திறக்காமல் இருக்க, "என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?" என்று கேட்டாள் நந்தினி.

தன் மனைவியை அழுத்தமாகப் பார்த்த மாயன், "என்னைக்குமே உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம் நந்தினி, ஆனா இப்போ எல்லாம் உனக்கு என்கூட வாழற வாழ்கை அந்த சந்தோஷத்தை கொடுக்கலைனு! நீ என் மேல காட்டுற வெறுப்புல இருந்தே எனக்கு நல்லா புரியது,

இப்போ என்ன!? உனக்கு டிவோர்ஸ் வேணும் அவ்ளோ தானே! சரி நான் இந்த விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுத் தரேன்" என்ற மாயன்,

மேற்கொண்டு எதுவும் பேசாமல் வேகமாக விவாகரத்து பத்திரத்தில் அவனது கையப்பத்தை போட்டவன், நந்தினி கண் இமைக்கும் நொடியில் அந்த வீட்டிலிருந்து வெளியேறியவனை கண்களில் கண்ணீருடன் பார்த்து இருந்தாள் நந்தினி.








 
Joined
Feb 6, 2025
Messages
28
வர்மனின் வீட்டில்,அன்றைய தினம் இரவு நேர உணவை அருணுக்காகத் தயார் செய்துகொண்டு இருந்தாள் மகதி.

மகதியை தன் அம்மாவாக நினைத்த அருணின் மனதில் எல்லையில்லாத சந்தோஷம் பெருகி இருந்தது.

வீட்டில் உள்ள சாய்வான இருக்கையில் அமர்ந்து இருக்கும் அருணின் தாத்தா ராஜனுடன்,சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்தவனின் கண்ணில் கட்டுக்கட்டப்பட்டு இருந்தது.

"தாத்தா! அம்மா இங்க தானே இருக்காங்க, என்னை மறுபடியும் விட்டுட்டு எங்கேயும் போகமாட்டாங்க தானே!" என்ற அருணின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்துப் போனார் ராஜன்.

"உன் அம்மா இனிமே உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டாங்க" என்ற மாயனின் குரலைக் கேட்டு, "வா மாயா! என்ன பிரச்சனை!? ஏன் அவசரமா வீட்டுக்குப் போன?" என்று கேட்டான் வர்மன்.

"பிரச்சனை எல்லாம் இல்லை வர்மா,
சரி அருண் சாப்பிட்டானா?" என்று மாயன் கேட்க, "உன் தங்கச்சி தான் ரொம்ப நேரமா உள்ள என்னத்தையோ உருட்டிகிட்டு இருக்காள்' என்றான் வர்மன் சலிப்புடனே.

"என்ன!? உருட்டிகிட்டு இருக்கேனா!" என்று வர்மன் பேசியதை கேட்டுப்படி மகதி சமையலறையிலிருந்து வெளியே வந்தவளின் கோவமான முகத்தைப் பார்த்து வர்மன் வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொள்ள, ராஜனுக்கோ தன் பிள்ளையின் நிலைமையை நினைத்துச் சிரிப்பு தான் வந்தது.

"பாப்பா... சமையலறையில் நீ என்ன பண்ற!? உனக்குத் தான் சுடு தண்ணியே ஒழுங்கா வைக்கத் தெரியாதே!"என்று மாயன் சொல்ல, வர்மன் சட்டென்று சத்தமாகச் சிரித்தவனை ஏகத்துக்கும் முறைத்தாள் மகதி.

"மாமா... அம்மா எனக்காக நூடுல்ஸ் பண்ணுறாங்க" என்று அருண் சொல்ல, "என்ன நூடுல்ஸா!நோ நோ... அதெல்லாம் சாப்பிடக் கூடாது" என்ற வர்மனை கடுப்புடன் நெருங்கி வந்தாள் மகதி.

பெண்ணவளின் கோவ விழிகளைப் பார்த்த வர்மன், "அது... அது அருணுக்கு நூடுல்ஸ் எல்லாம் ஒத்துக்காது, அந்தப் பவுடர் அவனுக்குச் செரிமானம் ஆகாது" என்று வர்மன் சொன்னதும்,

"அதெல்லாம் எங்களுக்குத் தெரியும், நான் ஒன்னும் கடையில வாங்கிய நூடுல்ஸை அருணுக்கு செய்து கொடுக்கமாட்டேன், நானே கோதுமை மாவுல நூடுல்ஸ் ரெடி பண்ணி தான் தரப் போறேன்! அதனால உங்க ஒருவருக்கு மட்டும் தான் எல்லோர் மேலையும் அக்கறை இருக்குற மாதிரி நீங்க நடிக்காதீங்க" என்ற மகதி மீண்டும் சமையலறைக்குள் புகுந்துகொண்டாள்.

மகதியின் பேச்சைகேட்டு ராஜன் மற்றும் மாயனுக்கு சங்கடமாக இருந்தாலும், வர்மன் மட்டும் மகதியின் கோவத்தில் அவன்மீது அவள் கொண்ட காதலை மட்டுமே கண்டுகொண்டான்.

"வர்மா... பேசாம மகதிகிட்ட மனசை திறந்து பேசிடு வர்மா!" என்று ராஜன் சொல்ல, "ஆமா வர்மா! அப்பா சொன்னது போல நீ பேசினால் தான் அவளுக்கும் உன் மேல எந்தத் தப்பும் இல்லைன்னு புரிய வரும்" என்றான் மாயன்.

"ம்... சீக்கிரமா நானே எல்லா உண்மையையும் அவகிட்ட சொல்றேன் டா! அதுக்குள்ள நீங்க யாரும் எதுவும் சொல்லிடாதீங்க" என்ற வர்மனுக்கு எங்கே அந்தக் கடிதத்தை மாயன் தான் எழுதினான் என்ற உண்மை தெரிந்தால் மகதி தன்னை இனி காதலிக்க தயங்குவாளோ என்ற பயம் மட்டுமே இருந்தது.

அருண் விரும்பிய உணவான நூடுல்ஸை ஆரோக்கியமான முறையில் செய்துகொடுத்த மகதி, அதை ராஜன் மற்றும் மாயனுக்கும் எடுத்துக்கொடுத்தாள்.

"அம்மா... நூடுல்ஸ் ரொம்ப நல்லா இருக்கு, ஏன் அப்பா! அம்மா பண்ண நூடுல்ஸ் நல்லா தானே இருக்கு!?" என்று சிறுவன் கேட்டதும்,

"உன் அம்மா தான் உன் அப்பாவுக்கு நூடுல்ஸ் தரவே இல்லையே" என்ற மாயன் வர்மனை ஒழுங்கு காட்டியப்படி அவனுக்குக் கொடுத்த நூடுல்ஸை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

"அம்மா... நீங்க ஏன் அப்பாவுக்கு நூடுல்ஸ் கொடுக்கல!?" என்று சிறுவன் கேட்க, வர்மன் பாவமாக மகதியை பார்க்க, மகதியோ அவனைக் கண்டுகொள்ளாமல் சிறுவனுக்கு ஊட்டிக்கொண்டு இருந்தாள்.

"சொல்லுங்க அம்மா... அப்பாவுக்கு ஏன் நூடுல்ஸ் தரல!" என்று சிறுவன் கேட்க, "உங்க அப்பாவுக்குத் தான் பிடிக்காதே" என்று மகதி இரட்டை அர்த்தத்தில் சொன்னவளின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு வர்மன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

"அப்பா... உங்களுக்கு அம்மா பண்ண சாப்பாடு பிடிக்கலையா!?" என்று சிறுவன் கேட்க,

"ரொம்ப பிடிக்கும் அருண்" என்று வர்மனும் இரட்டை அர்த்தத்தில் பதில் தந்தவனின் வார்த்தையைக் கேட்டு இந்த முறை ராஜனும் மாயனும் சிரித்துக்கொண்டார்கள்.

மகதியும் வர்மனும் தன் வார்த்தையால் அவர்களின் உணர்வுகளை மறைமுகமாக வெளிப்படுத்திக்கொண்டு இருக்க, "மாயா...நீ பண்ண வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு, நீ சாப்பிட்டதும் தோட்டத்துக்கு வந்துடு" என்ற ராஜன் இரவு உணவை முடித்துக்கொண்டு தோட்டதுக்கு சென்றவரைப் பின் தொடர்ந்தான் மாயன்.

"என்ன சார்! என்ன வேலை இருக்கு!?" என்று மாயன் கேட்க,
"வேலையெல்லாம் ஒண்ணுமில்லை மாயா! மகதியும் வர்மனும் தனியா இருந்தா அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வரும் தானே! அதுக்காகத் தான் அவங்களுக்கு பிரைவசி கொடுக்கலாமுன்னு எண்ணினேன்" என்று ராஜன் சொல்ல, மாயனும் சம்மதமாகத் தலையசைத்தான்.

அருணுக்கு இரவு உணவை ஊட்டி முடித்த மகதி சிறுவனின் இதழ்களைத் துடைத்து விட்டவள், "கொஞ்ச நேரம் நடந்த பின்னாடி தூங்க போகலாம்" என்று சொல்ல,
"அம்மா! நீங்கச் சாப்பிடலையா?" என்று கேட்டான் சிறுவன்.

"நீ தூங்குன பிறகு நான் சாப்பிடுவேன் அருண்" என்ற மகதி, தன் எதிரே அமர்ந்து தன்னையே விழுங்கும்ப்படி பார்த்து இருந்த வர்மனை பார்த்துப் புருவம் உயர்த்தத்தினாள்.

அவளின் செய்கையில், "என்ன!" என்று வர்மன் கேட்க,"அதையே தான் நானும் கேக்குறேன் என்ன!?" என்று எதிர் கேள்வி கேட்டாள் மகதி.

"பசிக்குது எனக்குச் சாப்பாடு தர மாட்டியா!" என்று வர்மன் கேட்க, மகதி அவன் பேச்சைக் காதில் வாங்காததை போலத் தலையைத் திருப்பிகொண்டாள்.

"அம்மா! அப்பாவுக்குப் பசிக்குதாம், நீங்க ஏன் இன்னும் அப்பாவுக்குச் சாப்பாடு தரவே இல்லை!?" என்று சிறுவன் கேட்க,

"இத்தனை நாள் நான் கொடுத்துத் தான் உன் அப்பா சாப்பிட்டாராக்கும்!?" என்ற மகதியின் பதிலைக் கேட்டு வர்மன் சோகமாக எழுந்து அவன் அறைக்குச் சென்றான்.

என்னதான் இருந்தாலும் சாப்பாட்டு விஷயத்தில் தன் கோவத்தை காட்டிய மகதிக்கு அவளை நினைத்து அவளுக்கே வெறுப்பாக இருந்தது.

"ப்ச்... ஏன் மகதி இப்படி பேசுன! பாவம் வர்மன்" என்று அவளின் ஒரு மூளை அவளைத் திட்டிதீர்க்க, "நான் ஒன்னும் தப்பா பேசலையே! உண்மையைத் தானே சொன்னேன், இதுநாள் வரை நான் தந்து தான் சாப்பிட்டாரா!" என்று தன்னை திட்டும் தன் மூளைக்கு விளக்கம் கொடுத்தாள் மகதி.

"அம்மா... அப்பா பாவம், அவர் இதுவரை பசிக்குதுன்னு சொன்னதே இல்லை" என்று சிறுவன் சோகமாகச் சொல்ல,

"அவருக்குப் பசித்தால் அவரு சாப்பிடுவாரு அருண்! நீ வா அம்மா கொஞ்ச நேரம் உன்னை கார்டன்ல நடக்க வைக்கிறேன்" என்ற மகதி, கைத்தாங்கலாகச் சிறுவனை அழைத்துக்கொண்டு தோட்டத்து பக்கம் சென்றாள்.

தோட்டத்தில் ராஜனும் மாயனும் நடந்துகொண்டு இருக்க, "என்ன மருமகளே! அருண் சாப்பிட்டானா! என்று ராஜன் கேட்க,
"ஹாங் சாப்பிட்டாச்சு மாமா!" என்றாள் மகதி.

"பாப்பா! அருண் எங்ககூட இருக்கட்டும்.
நீ போய்ச் சாப்பிடு" என்ற மாயனின் எண்ணத்தை அறிந்த ராஜனின் இதழ்களில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

மாயனிடம் அருணை இருக்க செய்த மகதி, சமையலறைக்குள் சென்றவளுக்கு வர்மன் பட்டினியாக அவன் அறைக்குச் சென்றதை நினைத்துக் கவலையாக இருந்தது.

வர்மனே உணவருந்தாமல் சென்று இருக்க, தான் மட்டும் ஏன் சாப்பிட வேண்டும் என்று எண்ணிய மகதி, அவளும் சாப்பிட விரும்பாமல் மீதம் இருந்த சாப்பாட்டை எடுத்துக் குளிர் சாதனை பெட்டிக்குள் வைத்த்தாள்.

தன்னால் தான் மகதியும் சாப்பிடவில்லை என்று அறிந்த வர்மன் இந்தக் காட்சியைச் சமையல் அறையின் நுழைவாயிலில் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு குறும்பு பார்வையுடன் வெகு இயல்பாகப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

வர்மனை அங்கே பார்த்த மகதி அவசரமாகச் சமையலறையிலிருந்து வெளியே வர முயன்றவளுக்கு வழிக்கொடுக்காமல் நடுவே நின்று இருந்தான் வர்மன்.

"எனக்காகத் தான் நீயும் சாப்பிடலையா மகதி?" என்று சிரித்துக்கொண்டே வர்மன் கேட்க, எப்படி தன்னை அறிந்து கொண்டான் என்று மகதி ஒருகணம் தடுமாறிப் போனாள்.

வர்மன் அவளையே உறுத்து பார்க்க, உடனே தன்னை சமாளித்துக்கொண்ட மகதி, "ரொம்ப கர்வப்பட்டுக்காதீங்க. உங்களுக்காக நான் ஏன் சாப்பிடாமல் இருக்கணும்!? "என்றாள் அலட்சியமாகப் பேசுவதை போலவே.

"எனக்குத் தெரியும்! எனக்காகத் தான் நீ சாப்பிடாமல் இருக்க!"என்று வர்மன் சொன்னதும், மகதி வேகமாகக் குளிர்சாதன பெட்டியைத் திறந்து அதில் இருந்த சாப்பாட்டை தட்டில் போட்டு வேகமாகச் சாப்பிட்டவளுக்கு விக்கல் எடுக்க,

பதறிப்போய் வர்மன் அருகே இருந்த தண்ணீரை எடுத்து அவள் முன்னே நீட்டியதும் மகதி கோவமாக அவன் கையில் இருந்த நீரை தட்டிவிட்டாள்.

அவள் தட்டிவிட்ட வேகத்தில் தண்ணீர் கீழே சிந்தியதை கவனிக்காமல் மகதி காலை நீரின் மேல் வைக்க,

அவள் கால் வழுக்கிக் கீழே விழப்போனவளின் இடையில் கைகொடுத்து அணைத்து பிடித்த வர்மனின் சட்டை காலரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட மகதியின் செயலில் நிலை தடுமாறி வர்மன் மகதியின் மேலே விழுந்தவனின் அதரங்கள் கச்சிதமாக மகதியின் இதழ்களில் இடம் சேர்ந்தது.
 

sam

New member
Joined
May 5, 2025
Messages
15
அட டா அட டா அடடாடடா!!!! வர்மா உன் பொறுமை 😂ரொம்ப அருமை
 
New member
Joined
May 2, 2025
Messages
12
என் மாறன் பாவம் ஏன் அவரை தனியா ஆக்குறீங்க. ஆனாலும் வர்மனுக்கு தில்லு அதிகம் தான். சீக்கிரம் அருண் யாருன்னு சொல்லிட்டு மொத்தமா மகதியை எடுத்துக்க சொல்லுஙக 😂
 
New member
Joined
May 9, 2025
Messages
19
Author I think you don’t like the name Nandhini.🤪.Maghadhima give punishment to Varma in a different way not by no food. We are all living for choru (food) only.
 
Last edited:
New member
Joined
Feb 8, 2025
Messages
16
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 💖💖💖💖💖💖💖💖💖💖💖
 
New member
Joined
Feb 8, 2025
Messages
16
Super super அழகு கதை மகதி சமாளித்து நின்று வர்மனை அடிக்கப்போறா.❤❤❤❤❤❤❤❤❤❤
 
New member
Joined
May 2, 2025
Messages
13
This chapter is exceptionally touching the mother’s deep affection for her little boy brings great joy to the heart
 
New member
Joined
Feb 8, 2025
Messages
19
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வேற என்ன சொல்றதுனு தெரியல ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதைசூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
 
Top