Active member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 28
- Thread Author
- #1
அத்தியாயம் - 11
மகதி மாயனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டுக்கொண்டு இருக்க, வர்மனின் பார்வை இம்மி அளவும் அவளிடமிருந்து நகராமல் இருந்தது.
"பாப்பா! அருணுக்கு எப்போ என்ன மருந்து தரணும்னு நானே எல்லா மருந்து டப்பா மேலையும் தெளிவா எழுதித் தரேன்"என்ற மாயன், மகதியை விழிகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்த வர்மனையும் கவனித்தான்.
"சரி அண்ணா! அருண் தூங்கிட்டான், அவனுக்கு என்ன டின்னர் ரெடி பண்ணும்னு சொன்னிங்கனா, நான் அதைப் பண்ணிடுவேன்" என்ற மகதி தன்னையே பார்த்துக்கொண்டு இருக்கும் வர்மனை கோவமாக முறைத்தாள்.
மகதி தன்னை முறைப்பதோ, மாயன் தன்னை பார்ப்பதையோ பெரிதாக எடுத்துக்கொள்ளத வர்மன்,
தன் மீது மகதி கொண்ட காதலை நினைத்து மனதளவில் பெருமிதம் அடைந்தான்.
வர்மனின் இந்தப் பார்வை மகதியின் உள்ளத்தில் மீண்டும் இனம் புரியாத ஈரப்பை உண்டாக்கினாலும்! மகதியை பொறுத்தவரை வர்மன் தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணை மனமுடித்து இருக்கின்றான் என்று நம்பியவள் வர்மனை அருவருப்பாக முறைத்தபடி வீட்டுக்குள் சென்று விட்டாள்.
மகதி சென்றபிறகும் அவள் போன பாதையைப் பார்த்துக்கொண்டு இருந்த வர்மனின் முன்னே தன் கைகளை அசைத்து,"க்கும்" என்று குரலைச் செருமினான் மாயன்.
"என்ன வர்மா! பார்வையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு! என்ன செய்தி!" என்று மாயன் கேட்டதும் வர்மனின் இதழ்களின் நடுவே புன்னகை ஒளிந்துகொண்டது.
பல வருடங்கள் கடந்து மீண்டும் வர்மனின் முகத்தில் தெரிந்த மகிழிச்சியை பார்த்து ஒரு நண்பனாக மாயனும் நெகிழிச்சி அடைந்தான்.
"என்ன வர்மா! ராஜன் சார்க்கிட்ட சொல்லி என் சித்தப்பாகிட்ட பேசச் சொல்லிடவா!" என்று மகதியின் திருமணத்தைப் பற்றி மாயன் கேட்க,
"அவரசப்படாத மாயா! பெரியவுங்ககிட்ட பேசுறதுக்கு முன்னாடி, மகதிகிட்ட நான் ரம்யாவை பற்றிப் பேசணும்" என்றான் வர்மன்.
தன் நண்பன் சொல்வதிலும் அர்த்தம் உள்ளது என்று உணர்ந்த மாயன், "ஆமா டா! நீ சொல்லுறதும் சரிதான், முதல்ல அருணை பற்றி மகதிகிட்ட பேசு"
என்றான்.
"ம்...நாங்க ரெண்டு பேரும் பேசின பிறகு, மகாலிங்கம் மாமாகிட்ட அப்பாவைப் பேசச் சொல்லலாம்" என்று வர்மன் சொல்ல, அதே சமயம் மாயனின் கைபேசி அலறியது.
"வர்மா! அம்மா தான் போன் பண்ணுறாங்க" என்ற மாயன் தன் கைபேசியுடன் தோட்டத்து பக்கம் செல்ல,
மீண்டும் மாயனின் காரில் ஏறி அமர்ந்த வர்மன், மகதி இவனை நினைத்து எழுதிய கைக்குறிப்பு புத்தகத்தை வாசித்தவனின் மனதில் மகதி மீது அவன் கொண்ட மரியாதை பல மடங்காக உயர்ந்தது.
காரில் அமர்ந்து இருந்த வர்மனை தேடி வந்த மாயன், "வர்மா! வீட்டுல ஒரு சின்னப் பிரச்சனை, நான் உடனே கிளம்புறேன்" என்றவனின் முகத்தில் பதற்றம் குடிக்கொண்டு இருந்தது.
"என்னடா என்ன பிரச்சனை! நான் வேணும்னா உன்கூட வரட்டுமா!?" என்று வர்மன் கேட்க,
"வேண்டாம் வர்மா! நான் பார்த்துக்குறேன், நீ அருணை ஜாக்கிரதையா பார்த்துக்கோ, மகதிகிட்ட சொல்லிடு"என்ற மாயன் வேகமாக வர்மனின் வீட்டிலிருந்து தன் காரை எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு பறந்தான்.
மாயன் சென்றதும், வர்மன் அவன் வீட்டுக்குள் நுழைந்தவன் நேராகத் தன் தந்தையின் அறைக்கு அவரைத் தேடி சென்றான்.
"என்ன வர்மா! மாயன் சொன்னதை கேட்டியா" என்று ராஜன் கேட்க, "மகதி என் மேல இவ்வளவு பிரியம் வச்சிருப்பானு நான் நினைத்தே பார்க்கல அப்பா" என்றான் வர்மன்.
"வர்மா... நடக்குறத எல்லாம் வச்சி பார்த்தால், மகதி இங்க வந்ததே உனக்காகவும் அருணுக்காகவும் தான்னு தோணுது" என்ற ராஜனின் மனதில் எப்படியாவது மகதியை வர்மனுக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
"எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல அப்பா! ஆனா நான் மகதிகிட்ட சில விஷயங்கள் வெளிப்படையா பேசணும், நம்ம அருணைப் பற்றி எல்லா உண்மையும் மகதிக்கு தெரிந்த பின்னாடி தான் எங்க கல்யாணத்தை பற்றி நீங்க முடிவெடுக்கணும்"என்ற வர்மனை பார்த்துச் சம்மதமாகத் தலைசைத்தார் ராஜன்.
"அப்பா...அருணுக்கு இப்படி ஆனதுல இருந்தே எனக்குப் பிரஷர் அதிகமாகிடுது, ஆனா இப்போ அருணுக்காக இங்க வந்த மகதியை பற்றித் தெரிந்த பின்னாடி மனசுக்குள்ள ஏதோ இனம்புரியாத இன்பம் பரவுற மாதிரி இருக்கு" என்ற வர்மனின் வார்த்தைகளைக் கேட்டு ராஜனுக்கு சிரிப்பு தான் வந்தது.
"என்ன அப்பா நீங்க! நான் என் மனசுல இருக்குற பீலிங் பற்றிப் பேசினால் நீங்க என்ன இப்படி சிரிக்கிறீங்க!?" என்று வர்மன் கேட்டதும், தன் மகனை நட்போடு கட்டிக்கொண்டார் ராஜன்.
"வர்மா! காதலிப்பதை விடவே காதலிக்கப்படுவது தான் அழகு, அதுவும் மகதிக்கு உன் மீது இருக்குற காதலை நினைத்துப் பார்க்கவே எனக்கு ஆச்சிரியமா இருக்கு வர்மா,
பத்து வருஷம்ன்னா சும்மா இல்லை வர்மா!! அந்தப் பொண்ணோட பள்ளிக் கல்லூரி வாழ்க்கையில கூட அவ உன்னை மட்டுமே நினைத்து வாழ்ந்துட்டு இருந்து இருக்காள், இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் வர்மா" என்ற தன் தந்தையின் சொற்களில் உள்ள உண்மையை வர்மனும் அறிந்து தான் இருந்தான்.
"எப்படியோ வர்மா! நான் மனதார மகதியை மருமகளேன்னு கூப்பிட்ட என் பாசம் இனி பொய்யாகாது என்ற நம்பிக்கை எனக்கும் வந்து விட்டது" என்ற தன் தந்தையை பார்த்துச் சிரித்த வண்ணமாகவே வெளியேறினான் வர்மன்.
மகதியும் அருணும் தன் அறையில் இருப்பதை மறந்து வர்மன் உள்ளே நுழைய, அப்போது தான் மகதி குளியல் அறையிலிருந்து முகத்தைத் துடைத்துக்கொண்டே வெளியே வந்தாள்.
"ஹலோ...ரூம்குள்ள வரும்போது கதவைத் தட்டிட்டு வரணும் என்ற இங்கிதம் கூடவா இல்லை!?" என்ற மகதியின் கோவமான குரலைக் கேட்டபிறகு தான், தன் அறையில் மகதி இருப்பதே வர்மனுக்கு நினைவு வந்தது.
அருண் கட்டிலில் நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருப்பதை பார்த்த வர்மன்,"சாரி...நீ இங்க இருக்குறது என் நினைவுல இல்லை, அதான் கதவைத் தட்டாம உள்ள வந்துட்டேன், ஐயம் சாரி!" என்ற வர்மன், தன் அறையிலிருந்து வெளியே செல்ல முயன்றவனின் வார்த்தையில் மகதிக்கு சட்டென்று
கண்கள் கலங்கியது.
மகதியின் கலங்கிய விழிகளைப் பார்த்தப்படி தன் அறையிலிருந்து வெளியே சென்றவனுக்கு அவளின் கண்ணீருக்கான அர்த்தம் விளங்கவில்லை.
"நான் இருக்குறது உங்க நினைவுலேயே இல்லாம தானே வேற ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி,அவகூட குடும்பம் நடத்தி ஒரு குழந்தையைப் பெத்து எடுத்து இருக்கீங்க வர்மா" என்று மகதி ஆதங்கத்துடன் புலம்பும் குரல் வர்மன் காதிலும் விழுந்தது.
மகதியின் கண்ணீருக்கு வர்மன் தன்னை மறந்து விட்டான் என்பதும், அவள் காதலை ஏமாற்றி இருக்கின்றான் என்ற தவறான புரிதலும் தான் காரணம் என்று அறிந்த வர்மன் முதலில் மகதியுடம் சில உண்மைகளைப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.
இதே சமயம் வர்மன் வீட்டிலிருந்து மாயன் தன் வீட்டுக்குள் நுழைந்தவன் எதிரே அவன் அம்மா கண்ணீருடன் அமர்ந்து இருந்தார்.
"அம்மா என்னாச்சு! இப்போ ஏன் அழறீங்க!" என்று எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் தன்னை சமாதானம் செய்யும் மாயனை பார்த்துக் கீதா மேலும் கண்கள் கலங்கினார்.
"மாயா... நம்ம அவளுக்கு என்னடா குறை வச்சோம்! அவ மனசு கஷ்ட்டப்படுற மாதிரி நான் ஒரு வார்த்தைக்கூட பேச மாட்டேனே! இருந்தும் அவ ஏன் டா இப்படியொரு முடிவு எடுத்து இருக்கிறாள்!?" என்று ஆதங்கத்துடன் கேட்டார் கீதா.
"ப்ச் அம்மா! முதல்ல நீங்க அழறதை நிறுத்துங்க, நந்து வரட்டும்! நான் அவகிட்ட பேசுறேன்" என்ற மாயனின் கையில் நந்தினி அனுப்பிய விவாகரத்து பத்திரத்தைக் கொடுத்தார் கீதா.
"இதுக்கு மேல பேச என்ன இருக்கு மாயா! இவ மட்டும் தனியா போய் வக்கீலைப் பார்த்து உனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கான்னா! அப்போ அவளுக்கு நீ வேண்டாமுன்னு தானே அர்த்தம்!?"
என்ற கீதாவின் கண்களில் கோவத்தை தாண்டிக் கவலை தான் நிறைந்து இருந்தது.
"அம்மா... நான் தான் சொல்லுறேனே, நந்தினி வரட்டும், நான் அவகிட்ட பேசிக்கிறேன். நீங்க இந்த விஷயத்துல தலையிடாதீங்க. முக்கியமா நீங்க எங்கள நினைத்துக் கவலைப்படாதீங்க"
என்ற மாயன் விவாகரத்து பத்திரத்தை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தவனை பாவமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார் கீதா.
அன்றைய தினம் இரவு நேரம் வேலையிலிருந்து தாமதமாகத் தான் நந்தினி வீட்டுக்குள் நுழைந்தாள்.
நந்தினி வரும் முன்னே கீதா அவர் அறைக்கு உறங்கச் சென்று இருக்க,
மாயன் தங்கள் அறையில் கட்டிலில் படுத்து இருப்பதை பார்த்தப்படி நந்தினி உள்ளே நுழைந்தவள், குளியலறை சென்று தன்னை சுத்தம் செய்துகொண்டு வெளியே வந்தாள்.
"நந்தினி! சாப்பிடலாம் வா" என்று மாயன் தன் மனைவியை அழைக்க,
"நான் வெளியே சாப்பிடிட்டேன்" என்றவள், மேசைமேல் இருக்கும் அவள் அனுப்பிய விவாகரத்து பத்திரத்தைப் பார்த்தாள்.
மாயன் இதைப் பற்றித் தான் பேசக் காத்து இருக்கின்றான் என்று நினைத்த நந்தினியிடம் அவனாக விவகாரத்தைப் பற்றி வாயைத் திறக்காமல் இருக்க, "என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?" என்று கேட்டாள் நந்தினி.
தன் மனைவியை அழுத்தமாகப் பார்த்த மாயன், "என்னைக்குமே உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம் நந்தினி, ஆனா இப்போ எல்லாம் உனக்கு என்கூட வாழற வாழ்கை அந்த சந்தோஷத்தை கொடுக்கலைனு! நீ என் மேல காட்டுற வெறுப்புல இருந்தே எனக்கு நல்லா புரியது,
இப்போ என்ன!? உனக்கு டிவோர்ஸ் வேணும் அவ்ளோ தானே! சரி நான் இந்த விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுத் தரேன்" என்ற மாயன்,
மேற்கொண்டு எதுவும் பேசாமல் வேகமாக விவாகரத்து பத்திரத்தில் அவனது கையப்பத்தை போட்டவன், நந்தினி கண் இமைக்கும் நொடியில் அந்த வீட்டிலிருந்து வெளியேறியவனை கண்களில் கண்ணீருடன் பார்த்து இருந்தாள் நந்தினி.
மகதி மாயனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டுக்கொண்டு இருக்க, வர்மனின் பார்வை இம்மி அளவும் அவளிடமிருந்து நகராமல் இருந்தது.
"பாப்பா! அருணுக்கு எப்போ என்ன மருந்து தரணும்னு நானே எல்லா மருந்து டப்பா மேலையும் தெளிவா எழுதித் தரேன்"என்ற மாயன், மகதியை விழிகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்த வர்மனையும் கவனித்தான்.
"சரி அண்ணா! அருண் தூங்கிட்டான், அவனுக்கு என்ன டின்னர் ரெடி பண்ணும்னு சொன்னிங்கனா, நான் அதைப் பண்ணிடுவேன்" என்ற மகதி தன்னையே பார்த்துக்கொண்டு இருக்கும் வர்மனை கோவமாக முறைத்தாள்.
மகதி தன்னை முறைப்பதோ, மாயன் தன்னை பார்ப்பதையோ பெரிதாக எடுத்துக்கொள்ளத வர்மன்,
தன் மீது மகதி கொண்ட காதலை நினைத்து மனதளவில் பெருமிதம் அடைந்தான்.
வர்மனின் இந்தப் பார்வை மகதியின் உள்ளத்தில் மீண்டும் இனம் புரியாத ஈரப்பை உண்டாக்கினாலும்! மகதியை பொறுத்தவரை வர்மன் தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணை மனமுடித்து இருக்கின்றான் என்று நம்பியவள் வர்மனை அருவருப்பாக முறைத்தபடி வீட்டுக்குள் சென்று விட்டாள்.
மகதி சென்றபிறகும் அவள் போன பாதையைப் பார்த்துக்கொண்டு இருந்த வர்மனின் முன்னே தன் கைகளை அசைத்து,"க்கும்" என்று குரலைச் செருமினான் மாயன்.
"என்ன வர்மா! பார்வையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு! என்ன செய்தி!" என்று மாயன் கேட்டதும் வர்மனின் இதழ்களின் நடுவே புன்னகை ஒளிந்துகொண்டது.
பல வருடங்கள் கடந்து மீண்டும் வர்மனின் முகத்தில் தெரிந்த மகிழிச்சியை பார்த்து ஒரு நண்பனாக மாயனும் நெகிழிச்சி அடைந்தான்.
"என்ன வர்மா! ராஜன் சார்க்கிட்ட சொல்லி என் சித்தப்பாகிட்ட பேசச் சொல்லிடவா!" என்று மகதியின் திருமணத்தைப் பற்றி மாயன் கேட்க,
"அவரசப்படாத மாயா! பெரியவுங்ககிட்ட பேசுறதுக்கு முன்னாடி, மகதிகிட்ட நான் ரம்யாவை பற்றிப் பேசணும்" என்றான் வர்மன்.
தன் நண்பன் சொல்வதிலும் அர்த்தம் உள்ளது என்று உணர்ந்த மாயன், "ஆமா டா! நீ சொல்லுறதும் சரிதான், முதல்ல அருணை பற்றி மகதிகிட்ட பேசு"
என்றான்.
"ம்...நாங்க ரெண்டு பேரும் பேசின பிறகு, மகாலிங்கம் மாமாகிட்ட அப்பாவைப் பேசச் சொல்லலாம்" என்று வர்மன் சொல்ல, அதே சமயம் மாயனின் கைபேசி அலறியது.
"வர்மா! அம்மா தான் போன் பண்ணுறாங்க" என்ற மாயன் தன் கைபேசியுடன் தோட்டத்து பக்கம் செல்ல,
மீண்டும் மாயனின் காரில் ஏறி அமர்ந்த வர்மன், மகதி இவனை நினைத்து எழுதிய கைக்குறிப்பு புத்தகத்தை வாசித்தவனின் மனதில் மகதி மீது அவன் கொண்ட மரியாதை பல மடங்காக உயர்ந்தது.
காரில் அமர்ந்து இருந்த வர்மனை தேடி வந்த மாயன், "வர்மா! வீட்டுல ஒரு சின்னப் பிரச்சனை, நான் உடனே கிளம்புறேன்" என்றவனின் முகத்தில் பதற்றம் குடிக்கொண்டு இருந்தது.
"என்னடா என்ன பிரச்சனை! நான் வேணும்னா உன்கூட வரட்டுமா!?" என்று வர்மன் கேட்க,
"வேண்டாம் வர்மா! நான் பார்த்துக்குறேன், நீ அருணை ஜாக்கிரதையா பார்த்துக்கோ, மகதிகிட்ட சொல்லிடு"என்ற மாயன் வேகமாக வர்மனின் வீட்டிலிருந்து தன் காரை எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு பறந்தான்.
மாயன் சென்றதும், வர்மன் அவன் வீட்டுக்குள் நுழைந்தவன் நேராகத் தன் தந்தையின் அறைக்கு அவரைத் தேடி சென்றான்.
"என்ன வர்மா! மாயன் சொன்னதை கேட்டியா" என்று ராஜன் கேட்க, "மகதி என் மேல இவ்வளவு பிரியம் வச்சிருப்பானு நான் நினைத்தே பார்க்கல அப்பா" என்றான் வர்மன்.
"வர்மா... நடக்குறத எல்லாம் வச்சி பார்த்தால், மகதி இங்க வந்ததே உனக்காகவும் அருணுக்காகவும் தான்னு தோணுது" என்ற ராஜனின் மனதில் எப்படியாவது மகதியை வர்மனுக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
"எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல அப்பா! ஆனா நான் மகதிகிட்ட சில விஷயங்கள் வெளிப்படையா பேசணும், நம்ம அருணைப் பற்றி எல்லா உண்மையும் மகதிக்கு தெரிந்த பின்னாடி தான் எங்க கல்யாணத்தை பற்றி நீங்க முடிவெடுக்கணும்"என்ற வர்மனை பார்த்துச் சம்மதமாகத் தலைசைத்தார் ராஜன்.
"அப்பா...அருணுக்கு இப்படி ஆனதுல இருந்தே எனக்குப் பிரஷர் அதிகமாகிடுது, ஆனா இப்போ அருணுக்காக இங்க வந்த மகதியை பற்றித் தெரிந்த பின்னாடி மனசுக்குள்ள ஏதோ இனம்புரியாத இன்பம் பரவுற மாதிரி இருக்கு" என்ற வர்மனின் வார்த்தைகளைக் கேட்டு ராஜனுக்கு சிரிப்பு தான் வந்தது.
"என்ன அப்பா நீங்க! நான் என் மனசுல இருக்குற பீலிங் பற்றிப் பேசினால் நீங்க என்ன இப்படி சிரிக்கிறீங்க!?" என்று வர்மன் கேட்டதும், தன் மகனை நட்போடு கட்டிக்கொண்டார் ராஜன்.
"வர்மா! காதலிப்பதை விடவே காதலிக்கப்படுவது தான் அழகு, அதுவும் மகதிக்கு உன் மீது இருக்குற காதலை நினைத்துப் பார்க்கவே எனக்கு ஆச்சிரியமா இருக்கு வர்மா,
பத்து வருஷம்ன்னா சும்மா இல்லை வர்மா!! அந்தப் பொண்ணோட பள்ளிக் கல்லூரி வாழ்க்கையில கூட அவ உன்னை மட்டுமே நினைத்து வாழ்ந்துட்டு இருந்து இருக்காள், இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் வர்மா" என்ற தன் தந்தையின் சொற்களில் உள்ள உண்மையை வர்மனும் அறிந்து தான் இருந்தான்.
"எப்படியோ வர்மா! நான் மனதார மகதியை மருமகளேன்னு கூப்பிட்ட என் பாசம் இனி பொய்யாகாது என்ற நம்பிக்கை எனக்கும் வந்து விட்டது" என்ற தன் தந்தையை பார்த்துச் சிரித்த வண்ணமாகவே வெளியேறினான் வர்மன்.
மகதியும் அருணும் தன் அறையில் இருப்பதை மறந்து வர்மன் உள்ளே நுழைய, அப்போது தான் மகதி குளியல் அறையிலிருந்து முகத்தைத் துடைத்துக்கொண்டே வெளியே வந்தாள்.
"ஹலோ...ரூம்குள்ள வரும்போது கதவைத் தட்டிட்டு வரணும் என்ற இங்கிதம் கூடவா இல்லை!?" என்ற மகதியின் கோவமான குரலைக் கேட்டபிறகு தான், தன் அறையில் மகதி இருப்பதே வர்மனுக்கு நினைவு வந்தது.
அருண் கட்டிலில் நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருப்பதை பார்த்த வர்மன்,"சாரி...நீ இங்க இருக்குறது என் நினைவுல இல்லை, அதான் கதவைத் தட்டாம உள்ள வந்துட்டேன், ஐயம் சாரி!" என்ற வர்மன், தன் அறையிலிருந்து வெளியே செல்ல முயன்றவனின் வார்த்தையில் மகதிக்கு சட்டென்று
கண்கள் கலங்கியது.
மகதியின் கலங்கிய விழிகளைப் பார்த்தப்படி தன் அறையிலிருந்து வெளியே சென்றவனுக்கு அவளின் கண்ணீருக்கான அர்த்தம் விளங்கவில்லை.
"நான் இருக்குறது உங்க நினைவுலேயே இல்லாம தானே வேற ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி,அவகூட குடும்பம் நடத்தி ஒரு குழந்தையைப் பெத்து எடுத்து இருக்கீங்க வர்மா" என்று மகதி ஆதங்கத்துடன் புலம்பும் குரல் வர்மன் காதிலும் விழுந்தது.
மகதியின் கண்ணீருக்கு வர்மன் தன்னை மறந்து விட்டான் என்பதும், அவள் காதலை ஏமாற்றி இருக்கின்றான் என்ற தவறான புரிதலும் தான் காரணம் என்று அறிந்த வர்மன் முதலில் மகதியுடம் சில உண்மைகளைப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.
இதே சமயம் வர்மன் வீட்டிலிருந்து மாயன் தன் வீட்டுக்குள் நுழைந்தவன் எதிரே அவன் அம்மா கண்ணீருடன் அமர்ந்து இருந்தார்.
"அம்மா என்னாச்சு! இப்போ ஏன் அழறீங்க!" என்று எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் தன்னை சமாதானம் செய்யும் மாயனை பார்த்துக் கீதா மேலும் கண்கள் கலங்கினார்.
"மாயா... நம்ம அவளுக்கு என்னடா குறை வச்சோம்! அவ மனசு கஷ்ட்டப்படுற மாதிரி நான் ஒரு வார்த்தைக்கூட பேச மாட்டேனே! இருந்தும் அவ ஏன் டா இப்படியொரு முடிவு எடுத்து இருக்கிறாள்!?" என்று ஆதங்கத்துடன் கேட்டார் கீதா.
"ப்ச் அம்மா! முதல்ல நீங்க அழறதை நிறுத்துங்க, நந்து வரட்டும்! நான் அவகிட்ட பேசுறேன்" என்ற மாயனின் கையில் நந்தினி அனுப்பிய விவாகரத்து பத்திரத்தைக் கொடுத்தார் கீதா.
"இதுக்கு மேல பேச என்ன இருக்கு மாயா! இவ மட்டும் தனியா போய் வக்கீலைப் பார்த்து உனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கான்னா! அப்போ அவளுக்கு நீ வேண்டாமுன்னு தானே அர்த்தம்!?"
என்ற கீதாவின் கண்களில் கோவத்தை தாண்டிக் கவலை தான் நிறைந்து இருந்தது.
"அம்மா... நான் தான் சொல்லுறேனே, நந்தினி வரட்டும், நான் அவகிட்ட பேசிக்கிறேன். நீங்க இந்த விஷயத்துல தலையிடாதீங்க. முக்கியமா நீங்க எங்கள நினைத்துக் கவலைப்படாதீங்க"
என்ற மாயன் விவாகரத்து பத்திரத்தை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தவனை பாவமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார் கீதா.
அன்றைய தினம் இரவு நேரம் வேலையிலிருந்து தாமதமாகத் தான் நந்தினி வீட்டுக்குள் நுழைந்தாள்.
நந்தினி வரும் முன்னே கீதா அவர் அறைக்கு உறங்கச் சென்று இருக்க,
மாயன் தங்கள் அறையில் கட்டிலில் படுத்து இருப்பதை பார்த்தப்படி நந்தினி உள்ளே நுழைந்தவள், குளியலறை சென்று தன்னை சுத்தம் செய்துகொண்டு வெளியே வந்தாள்.
"நந்தினி! சாப்பிடலாம் வா" என்று மாயன் தன் மனைவியை அழைக்க,
"நான் வெளியே சாப்பிடிட்டேன்" என்றவள், மேசைமேல் இருக்கும் அவள் அனுப்பிய விவாகரத்து பத்திரத்தைப் பார்த்தாள்.
மாயன் இதைப் பற்றித் தான் பேசக் காத்து இருக்கின்றான் என்று நினைத்த நந்தினியிடம் அவனாக விவகாரத்தைப் பற்றி வாயைத் திறக்காமல் இருக்க, "என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?" என்று கேட்டாள் நந்தினி.
தன் மனைவியை அழுத்தமாகப் பார்த்த மாயன், "என்னைக்குமே உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம் நந்தினி, ஆனா இப்போ எல்லாம் உனக்கு என்கூட வாழற வாழ்கை அந்த சந்தோஷத்தை கொடுக்கலைனு! நீ என் மேல காட்டுற வெறுப்புல இருந்தே எனக்கு நல்லா புரியது,
இப்போ என்ன!? உனக்கு டிவோர்ஸ் வேணும் அவ்ளோ தானே! சரி நான் இந்த விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுத் தரேன்" என்ற மாயன்,
மேற்கொண்டு எதுவும் பேசாமல் வேகமாக விவாகரத்து பத்திரத்தில் அவனது கையப்பத்தை போட்டவன், நந்தினி கண் இமைக்கும் நொடியில் அந்த வீட்டிலிருந்து வெளியேறியவனை கண்களில் கண்ணீருடன் பார்த்து இருந்தாள் நந்தினி.