New member
- Joined
- Nov 29, 2024
- Messages
- 8
- Thread Author
- #1
வணக்கம் மக்களே!! நாம கடந்த ரெண்டு வாரமா ரொம்ப சுவாரசியமான விசயத்தை பற்றி பேசிட்டு இருக்கோம். நான் ரொம்ப பேசாம விசயத்துக்கே வரேன் .. இன்னைக்கு ஒரு நியூஸ் நான் பார்த்தேன் அதாவது.,
7வயது சிறுவனை பேய் பிடித்ததாக சொல்லி,அவர்களின் தாய் உட்பட மூன்று பேர் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம். மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க??
" பேய்" இருக்கா? இல்லையா? சில பேர் அதுலாம் வெறும் கட்டு கதைன்னு சொல்றாங்க.. ஆனா இது மாதிரி சம்பவங்களை பார்க்கும் போது பேய் லாம் உண்மையோ அப்படின்னு தோணுது .. இதை பத்தி உங்க கருத்து என்ன?? அப்படி இல்லனா இது மாதிரி நடக்க என்ன காரணம் ?? என்றுர் பேட்டியாளர் கேட்க...
அதை பொறுமையாக கேட்ட ஆதி , சிரித்து விட்டு இப்ப நீங்களும் பேய் இருக்குனு இன்டைரக்ட் டா சொல்ல வரீங்க,அப்படித்தானே? என்று கேட்க,
இல்ல ஆதி சார் .. என்று சொல்ல சரி... மொதல்ல பேய் அப்படிங்கிறது உண்மை இல்ல.
நம்ம சினிமாவும் , பழைய கதைகளும் நம்ம மனசுல பேய் , ஆவி பத்தி அப்படி ஒரு எண்ணத்தை நம் ஆள் மனதில் பதியவச்சுடாங்க அது தான் இப்ப பிரச்சனை..
மெடிக்கல் டேர்ம் ல நாங்க ஆளுமை சிதைவு அப்படின்னு சொல்லுவோம். இது ஒரு மன நலம் சம்பந்தம் பட்டது..
அப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க ஆதி சார் ? அப்ப "பேய்" உண்மை இல்ல வெறும் கற்பனை தான் என்றா?? என பேட்டியாளர் கேட்க..
நாம ஒரு பயந்த மன நிலையில் இருக்கும் போது இருட்டில் ஒரு சாதாரண வெள்ளை துணி காற்றில் பறந்தாலும் அது நமக்கு பேயாக தான நமக்கு தெரியும். அதுமாதிரி தான் என்று ஆதி சொல்ல.. அவனின் அலைபேசி அடித்தது..
சரி.. ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விவாதம் தொடரும் என்று பேட்டியாளர் கூற, ஆதி ஃபோன் கால் ஐ அட்டென்ட் செய்தான்.
என்ன மலர் , நான் தான் மீட்டிங்கில இருக்கேன்ல அப்புறம் எதுக்கு கால் செய்ற ? என்று கேட்டான்
அது ஒன்னும் இல்ல ,இன்னைக்கு நாம ஊருக்கு போகனும் நியாபகம் இருக்கா? எப்படி? என்று மலர் கேட்க
இருக்கு.. இருக்கு... நான் நிகழ்ச்சி முடியவும் அங்க தான் வருவேன் ரெடியா இரு .. என்று ஃபோன் காலை கட் செய்தான்.
மீண்டும் நிகழ்ச்சி தொடங்க,நம்ம நேயகர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலமா என்ன சொல்ல விரும்புறீங்க? என்று கேட்க.
சிம்பிளா சொல்லனும்னா,எனக்கு ஒரு பழமொழி நியாபகம் வருது "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதுளாம் பேய்" என்று சொல்லுவாங்க அதுமாதிரி நம்ம மனசு தான் எல்லாத்துக்கும் காரணம் மற்ற படி பேய்,அமானுஷ்யம்,இதுலாம் உண்மை இல்ல,யாராவது அப்படி ,வழக்கத்துக்கு மாறாக நடந்தாங்கனா மொதல்ல ஒரு நல்ல டாக்டரை பார்க்க தயங்காதிங்க அதை விட்டுட்டு,கோவில், சர்ச் ,மசுதினு போகாதீங்க இது என்னோட தனிப்பட்ட கருத்து தான் என்று ஆதி சொல்லி முடிக்க ,ரொம்ப நன்றி டாக்டர் உங்க கருத்து ரொம்ப உதவிகரமாக இருந்துச்சு.. கண்டிப்பா நீங்க சொன்னபடி நடக்க முயற்சி செய்றோம் என்று சொல்லி விட்டு இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்கிறேன் என்று சொல்ல ஆதி நன்றி சொல்லி அங்கு இருந்து கிளம்பினான்.
யாருமில்லாமல் அந்த வெற்று சாலையில் தனியாக சென்று கொண்டு இருந்தது அந்த கார் .இந்த மழை வேற இப்படி விடாம பேயுது,
பொழுது விடியுறத்துகுள்ள ஊருக்கு வந்துடுவிங்களா?? என்று மல்லிகா கேட்க
ஆமாமா ! நாங்க வந்துடுவோம் என்று போனை கட் செய்து விட்டு,தன் காரை வேகமாக ஓட்டி கொண்டு சென்றான் ஆதி.
கொஞ்சம் மெதுவாகவே போங்க , எவ்ளோ இருட்டா இருக்கு , எனக்கு பயம்மா இருக்கு
என்று மலர் கூறினாள்.
மலர் ,ஜஸ்ட் சில் நா நார்மல் ஸ்பீட்ல தான் போறேன் .நீ பயப்படாத ,இன்னும் அரை மணி நேரத்தில் நாம அந்த ஊரை ரீச் ஆகிடுவோம் என்று ஆதி இருவரும் பேசி கொண்டு சொல்லும் போதே, வண்டி முன்பு ஏதோ மோத வருவது போல மலருக்கு தோன்ற அவள், ஆதி ... பார்த்து... என்று கத்த, அதனால் சடர்ன் ப்ரேக் போட்டு காரை நிறுத்தினான்.
அ... அங்க... ஏதோ ஒரு வெள்ளை உருவம் தெரிஞ்சுது ஆதி..என்று மலர் சொல்ல
சரி.. நான் என்னானு இறங்கி பாக்குறேன் என்று சொல்லி ஆதி கீழே இறங்க போக ,
வேண்டாம் ... ஆதி, கீழ இறங்க வேண்டாம் ... இந்த இடத்த பார்த்தாவே ரொம்ப பயமா இருக்கு என்று மலர் சொல்ல,
வெயிட், மலர் நான் போய் பார்த்திட்டு வரேன் , என்று கீழே இறங்கி பார்க்க, அங்கு ஒரு சின்ன நாய் குட்டி காரின் முன்பு பயந்து கொண்டு நின்றது.. நீதான் இங்க ஏற்பட்ட கலவரத்துக்கு காரணமா?? என்று கேட்டு கொண்டே ஆதி ,அதை சாலை ஓரம் துறத்த, அதை கண்ட மலர் அது பாக்க ரொம்ப பாவமா இருக்கு சின்ன குட்டி தானே, நாம தூக்கிட்டு போலாம் மழை விட்ட அப்புறம் அதை எங்கேயாவது இறக்கி விடலாம் என்று கூறினாள். சரி என்று அதை மலரிடம் கொடுத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்து வண்டியை அந்த வீரவநல்லூர் நோக்கி செலுத்தினான்.
மின் விளக்குகளாக மின்னல் வெட்ட,
இடியின் கர்ஜனை மனிதனின் மனதை நடுங்க வைக்க, அதனால் ஏற்பட்ட அதிக படியான மழையால் அந்த அப்பகுதி காரிருள் சூழ்ந்து இருந்தது. அந்த ஊரின் மேட்டு பகுதியில் மின்னலின் வெளிச்சத்தில் கம்பீரமாக நின்று கொண்டு இருந்தது ,அந்த பெரிய வீடு.
அந்த பெரிய வீட்டின் முன்பு அந்த கார் சென்று நின்றது.
வீட்டின் அழகை கண்டு மலர் சற்று பிரம்பித்து தான் போனால் ..
ஆதி வீடு ரொம்ப அழகா இருக்கு என்று சொல்லி விட்டு இருவரும் உள்ளே சென்றனர்.
பொண்ணு மாப்பிள்ளை தான் கடைசியா வரீங்க.. எல்லாரும் வந்தாச்சு என்று சக்தி சொல்ல,
சக்தி,உன் அண்ணன் வேலை அப்படி என்று கூறி விட்டு,
அனைவரையும் மலரிடம் அறிமுக படுத்தினாள் மல்லிகா .
அம்மா மலர் , இது ஆதியோட தாத்தா என்று மல்லிகா சொல்ல, மலர் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினாள்.
அவனாவே பொண்ணை பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணி கூடிட்டு வரானே , பொண்ணு எப்படி இருக்குமோன்னு நினைச்சேன். நல்ல மரியாதை தெரிஞ்ச பொண்ணா தான் இருக்கு என்று தாத்தா சொல்ல
டேய், ஆதி அண்ணா " நீ பாஸ் ஆகிட்ட போ". என்று சக்தி சொல்ல,
அனைவரும் சிரித்தனர்.
சரி.. சரி ... ஏற்கனவே ரொம்ப நேரம் ஆகிட்டு ,எல்லாரும் தூங்க போங்க
நாளைக்கு காலைல குல தெய்வத்துக்கு பூசை இருக்கு என்று மல்லிகா சொல்ல,
அனைவரும் அங்கு இருந்து களைந்து சென்றனர்.
நள்ளிரவு ...
ஆதி... ஆதி... என்னை காப்பாத்து.. ஆ....ஆதி... என்று சத்தம் கேட்டு எழுந்த ஆதி, தன் அருகில் மலர் இல்லாததை கண்டு அதிர்ந்தான்.
மலர் ... என்னாச்சு ?? மலர் ..
என்று வேகமாக சென்று பார்க்க பாத்ரூமிற்குள் மலர் மயங்கி கிடந்தாள்.
மலர்..என்னாச்சு?? எழுந்திரு மலர்
என்றபடி அவளை தூக்கி கொண்டு வந்து மெத்தை மீது படுக்க வைத்தான்.
மெதுவாக மயக்கம் தெளிந்த மலர் ..
அ.... அங்க ..யாரோ இருக்காங்க என்னை கொலை செய்ய பாக்குறாங்க .. .. என்று பயத்தில் சொல்ல
சரி, சரி அதுலாம் ஒன்னும் இல்ல , எல்லாத்தையும் காலைல பாத்துக்கலாம் நீ இப்ப
அமைதியா தூங்கு என்று ஆதி கூற
மலர் தூங்கி போனால்...
7வயது சிறுவனை பேய் பிடித்ததாக சொல்லி,அவர்களின் தாய் உட்பட மூன்று பேர் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம். மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க??
" பேய்" இருக்கா? இல்லையா? சில பேர் அதுலாம் வெறும் கட்டு கதைன்னு சொல்றாங்க.. ஆனா இது மாதிரி சம்பவங்களை பார்க்கும் போது பேய் லாம் உண்மையோ அப்படின்னு தோணுது .. இதை பத்தி உங்க கருத்து என்ன?? அப்படி இல்லனா இது மாதிரி நடக்க என்ன காரணம் ?? என்றுர் பேட்டியாளர் கேட்க...
அதை பொறுமையாக கேட்ட ஆதி , சிரித்து விட்டு இப்ப நீங்களும் பேய் இருக்குனு இன்டைரக்ட் டா சொல்ல வரீங்க,அப்படித்தானே? என்று கேட்க,
இல்ல ஆதி சார் .. என்று சொல்ல சரி... மொதல்ல பேய் அப்படிங்கிறது உண்மை இல்ல.
நம்ம சினிமாவும் , பழைய கதைகளும் நம்ம மனசுல பேய் , ஆவி பத்தி அப்படி ஒரு எண்ணத்தை நம் ஆள் மனதில் பதியவச்சுடாங்க அது தான் இப்ப பிரச்சனை..
மெடிக்கல் டேர்ம் ல நாங்க ஆளுமை சிதைவு அப்படின்னு சொல்லுவோம். இது ஒரு மன நலம் சம்பந்தம் பட்டது..
அப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க ஆதி சார் ? அப்ப "பேய்" உண்மை இல்ல வெறும் கற்பனை தான் என்றா?? என பேட்டியாளர் கேட்க..
நாம ஒரு பயந்த மன நிலையில் இருக்கும் போது இருட்டில் ஒரு சாதாரண வெள்ளை துணி காற்றில் பறந்தாலும் அது நமக்கு பேயாக தான நமக்கு தெரியும். அதுமாதிரி தான் என்று ஆதி சொல்ல.. அவனின் அலைபேசி அடித்தது..
சரி.. ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விவாதம் தொடரும் என்று பேட்டியாளர் கூற, ஆதி ஃபோன் கால் ஐ அட்டென்ட் செய்தான்.
என்ன மலர் , நான் தான் மீட்டிங்கில இருக்கேன்ல அப்புறம் எதுக்கு கால் செய்ற ? என்று கேட்டான்
அது ஒன்னும் இல்ல ,இன்னைக்கு நாம ஊருக்கு போகனும் நியாபகம் இருக்கா? எப்படி? என்று மலர் கேட்க
இருக்கு.. இருக்கு... நான் நிகழ்ச்சி முடியவும் அங்க தான் வருவேன் ரெடியா இரு .. என்று ஃபோன் காலை கட் செய்தான்.
மீண்டும் நிகழ்ச்சி தொடங்க,நம்ம நேயகர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலமா என்ன சொல்ல விரும்புறீங்க? என்று கேட்க.
சிம்பிளா சொல்லனும்னா,எனக்கு ஒரு பழமொழி நியாபகம் வருது "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதுளாம் பேய்" என்று சொல்லுவாங்க அதுமாதிரி நம்ம மனசு தான் எல்லாத்துக்கும் காரணம் மற்ற படி பேய்,அமானுஷ்யம்,இதுலாம் உண்மை இல்ல,யாராவது அப்படி ,வழக்கத்துக்கு மாறாக நடந்தாங்கனா மொதல்ல ஒரு நல்ல டாக்டரை பார்க்க தயங்காதிங்க அதை விட்டுட்டு,கோவில், சர்ச் ,மசுதினு போகாதீங்க இது என்னோட தனிப்பட்ட கருத்து தான் என்று ஆதி சொல்லி முடிக்க ,ரொம்ப நன்றி டாக்டர் உங்க கருத்து ரொம்ப உதவிகரமாக இருந்துச்சு.. கண்டிப்பா நீங்க சொன்னபடி நடக்க முயற்சி செய்றோம் என்று சொல்லி விட்டு இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்கிறேன் என்று சொல்ல ஆதி நன்றி சொல்லி அங்கு இருந்து கிளம்பினான்.
யாருமில்லாமல் அந்த வெற்று சாலையில் தனியாக சென்று கொண்டு இருந்தது அந்த கார் .இந்த மழை வேற இப்படி விடாம பேயுது,
பொழுது விடியுறத்துகுள்ள ஊருக்கு வந்துடுவிங்களா?? என்று மல்லிகா கேட்க
ஆமாமா ! நாங்க வந்துடுவோம் என்று போனை கட் செய்து விட்டு,தன் காரை வேகமாக ஓட்டி கொண்டு சென்றான் ஆதி.
கொஞ்சம் மெதுவாகவே போங்க , எவ்ளோ இருட்டா இருக்கு , எனக்கு பயம்மா இருக்கு
என்று மலர் கூறினாள்.
மலர் ,ஜஸ்ட் சில் நா நார்மல் ஸ்பீட்ல தான் போறேன் .நீ பயப்படாத ,இன்னும் அரை மணி நேரத்தில் நாம அந்த ஊரை ரீச் ஆகிடுவோம் என்று ஆதி இருவரும் பேசி கொண்டு சொல்லும் போதே, வண்டி முன்பு ஏதோ மோத வருவது போல மலருக்கு தோன்ற அவள், ஆதி ... பார்த்து... என்று கத்த, அதனால் சடர்ன் ப்ரேக் போட்டு காரை நிறுத்தினான்.
அ... அங்க... ஏதோ ஒரு வெள்ளை உருவம் தெரிஞ்சுது ஆதி..என்று மலர் சொல்ல
சரி.. நான் என்னானு இறங்கி பாக்குறேன் என்று சொல்லி ஆதி கீழே இறங்க போக ,
வேண்டாம் ... ஆதி, கீழ இறங்க வேண்டாம் ... இந்த இடத்த பார்த்தாவே ரொம்ப பயமா இருக்கு என்று மலர் சொல்ல,
வெயிட், மலர் நான் போய் பார்த்திட்டு வரேன் , என்று கீழே இறங்கி பார்க்க, அங்கு ஒரு சின்ன நாய் குட்டி காரின் முன்பு பயந்து கொண்டு நின்றது.. நீதான் இங்க ஏற்பட்ட கலவரத்துக்கு காரணமா?? என்று கேட்டு கொண்டே ஆதி ,அதை சாலை ஓரம் துறத்த, அதை கண்ட மலர் அது பாக்க ரொம்ப பாவமா இருக்கு சின்ன குட்டி தானே, நாம தூக்கிட்டு போலாம் மழை விட்ட அப்புறம் அதை எங்கேயாவது இறக்கி விடலாம் என்று கூறினாள். சரி என்று அதை மலரிடம் கொடுத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்து வண்டியை அந்த வீரவநல்லூர் நோக்கி செலுத்தினான்.
மின் விளக்குகளாக மின்னல் வெட்ட,
இடியின் கர்ஜனை மனிதனின் மனதை நடுங்க வைக்க, அதனால் ஏற்பட்ட அதிக படியான மழையால் அந்த அப்பகுதி காரிருள் சூழ்ந்து இருந்தது. அந்த ஊரின் மேட்டு பகுதியில் மின்னலின் வெளிச்சத்தில் கம்பீரமாக நின்று கொண்டு இருந்தது ,அந்த பெரிய வீடு.
அந்த பெரிய வீட்டின் முன்பு அந்த கார் சென்று நின்றது.
வீட்டின் அழகை கண்டு மலர் சற்று பிரம்பித்து தான் போனால் ..
ஆதி வீடு ரொம்ப அழகா இருக்கு என்று சொல்லி விட்டு இருவரும் உள்ளே சென்றனர்.
பொண்ணு மாப்பிள்ளை தான் கடைசியா வரீங்க.. எல்லாரும் வந்தாச்சு என்று சக்தி சொல்ல,
சக்தி,உன் அண்ணன் வேலை அப்படி என்று கூறி விட்டு,
அனைவரையும் மலரிடம் அறிமுக படுத்தினாள் மல்லிகா .
அம்மா மலர் , இது ஆதியோட தாத்தா என்று மல்லிகா சொல்ல, மலர் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினாள்.
அவனாவே பொண்ணை பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணி கூடிட்டு வரானே , பொண்ணு எப்படி இருக்குமோன்னு நினைச்சேன். நல்ல மரியாதை தெரிஞ்ச பொண்ணா தான் இருக்கு என்று தாத்தா சொல்ல
டேய், ஆதி அண்ணா " நீ பாஸ் ஆகிட்ட போ". என்று சக்தி சொல்ல,
அனைவரும் சிரித்தனர்.
சரி.. சரி ... ஏற்கனவே ரொம்ப நேரம் ஆகிட்டு ,எல்லாரும் தூங்க போங்க
நாளைக்கு காலைல குல தெய்வத்துக்கு பூசை இருக்கு என்று மல்லிகா சொல்ல,
அனைவரும் அங்கு இருந்து களைந்து சென்றனர்.
நள்ளிரவு ...
ஆதி... ஆதி... என்னை காப்பாத்து.. ஆ....ஆதி... என்று சத்தம் கேட்டு எழுந்த ஆதி, தன் அருகில் மலர் இல்லாததை கண்டு அதிர்ந்தான்.
மலர் ... என்னாச்சு ?? மலர் ..
என்று வேகமாக சென்று பார்க்க பாத்ரூமிற்குள் மலர் மயங்கி கிடந்தாள்.
மலர்..என்னாச்சு?? எழுந்திரு மலர்
என்றபடி அவளை தூக்கி கொண்டு வந்து மெத்தை மீது படுக்க வைத்தான்.
மெதுவாக மயக்கம் தெளிந்த மலர் ..
அ.... அங்க ..யாரோ இருக்காங்க என்னை கொலை செய்ய பாக்குறாங்க .. .. என்று பயத்தில் சொல்ல
சரி, சரி அதுலாம் ஒன்னும் இல்ல , எல்லாத்தையும் காலைல பாத்துக்கலாம் நீ இப்ப
அமைதியா தூங்கு என்று ஆதி கூற
மலர் தூங்கி போனால்...